Jump to content

கணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா...


Recommended Posts

குட்டி எதிப்பார்ப்போட போனால் வாழ முடியாது என சொல்கிறீர்கள் ஆனால் நான் எதிர் பார்க்கா விட்டாலும் இந்த உலகம் எதிர் பார்க்குதே. :)

இளைஞர்கள்,யுவதிகளாய் இருக்கும் போது தனித்து வாழ்வது இலகுவாக இருக்கும் ஆனால் வயது போய் வயோதிபர்களாய் ஆன பிறகு தமக்கு ஒரு கணவனோ அல்லது மனைவியோ இல்லை என ஏங்குவதை விட தமக்கு பிள்ளை இல்லை என ஏங்குவது அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்...தற்போதைய தமிழ் பேப்பர்களை எடுத்துப் பார்த்தால் இளம் பிராயத்தினரையும் பார்க்க 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கு துணை தேடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

உலகத்தைத் திருத்த என்னால ஏலாது... :lol::lol:

நான் நிம்மதியாக இருக்க வேணும் நினைக்கும் போது அதிகம் எதிர் பார்க்க மனம் வராது. (கடந்த காலங்கள் எனக்களித்த பாடங்களாகக் கூட இருக்கலாம்.) சிலருக்கு எதிர் பார்த்ததை விட அதிகம் கிடைத்து சந்தோசமாக இருப்பார்கள்.

ரதி பெற்றால் தான் பிள்ளையா? ஊரில் எத்தனையோ பிஞ்சுகள் ஒரு துளி அன்புக்கு ஏங்குகிறார்கள்... ஒரு நேர உணவும் கல்வியறிவும் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய நிலையில் எத்தனை இளம் தம்பதியினர் இங்கே பிள்ளைகள் இல்லாமல் இருக்கிறார்கள்? வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கும் பலர், ஏன் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு அக்கறை காட்டுவதில்லை?? அதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது உண்மை, ஆனால் குழந்தை இல்லை என்று மனம் ஏங்குவதை விட வரும் சிரமங்களை சந்தித்து தாக்கென ஒரு குழந்தையை தத்தெடுத்து தமது ஏக்கத்தை குறைத்துக் கொள்ளலாமே?

அந்த மன நிலையை இன்னும் பலர் அடையவில்லை என்றே நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுக்க விரும்பாதற்கு காரணம் என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும் அவர்கள் தம் சொந்த இரத்தம் இல்லையே என்ட காரணம் அவர்கள் அடி மனதிலே இருக்கும்...பிறகு அவர்களுக்கு எண்டு குழந்தை பிறந்தால் வளர்த்த குழந்தையை கை விட்டு விடுவோமோ என்பதால் கூட தத்தெடுக்க விரும்புவதில்லை என நினைக்கிறேன்.

நானும் இந்த உலகத்தில் நிறைய அடிபட்டு இருக்கேன் குட்டி...அடி பட்டதால் இப்படியான சமூக கருத்துகளை வைத்தே அதிகம் எழுதுகிறேன் :)

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுக்க விரும்பாதற்கு காரணம் என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும் அவர்கள் தம் சொந்த இரத்தம் இல்லையே என்ட காரணம் அவர்கள் அடி மனதிலே இருக்கும்...பிறகு அவர்களுக்கு எண்டு குழந்தை பிறந்தால் வளர்த்த குழந்தையை கை விட்டு விடுவோமோ என்பதால் கூட தத்தெடுக்க விரும்புவதில்லை என நினைக்கிறேன்.

'தம் சொந்த ரத்தம் இல்லையே' இந்த மனநிலை தான் பலரிடம் உள்ளது... உண்மையை மறைக்காமல், அதே நேரம் பிள்ளைக்கு உள்ளதை விளங்கப் படுத்தி, அவர்கள் நல்லது கெட்டதுகளில் அக்கறை எடுத்து, உண்மையான பாசத்தைக் கொடுப்பார்களானால் பிள்ளைகளைப் பிரியவேண்டிய நிலை ஏற்படாது என்று நினைக்கிறன் மரணத்தில் தவிர... ஒருவேளை பிரியும் போது தாங்கள் காட்டிய உண்மையான அன்பும், கொடுத்த கல்வி அறிவும் அந்தப் பிள்ளைக்கு வாழ்கையில் பயன் படும் என்று ஒரு மன திருப்ப்தியுடன் மீதிக் காலத்தை வாழ்ந்தது விட்டு போகலாமே? ('அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்' என்று சொன்னாலும் ஆச்சரியப் பட இல்லை... என்ர தலைக்கு சரி எனப் பட்டு, என்ர கொள்கைகளுக்குள் உட்பட்டுத்தான் நான் எழுதினேன். இதை எல்லோரும் கடைப் பிடியுங்க என்று நான் சொல்ல இல்லை... :) )

நானும் இந்த உலகத்தில் நிறைய அடிபட்டு இருக்கேன் குட்டி...அடி பட்டதால் இப்படியான சமூக கருத்துகளை வைத்தே அதிகம் எழுதுகிறேன் :lol:

ரதி, சமூகக் கருத்துகளை ஏன் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைத்து இருக்கிறீர்கள்? சிலவற்றை நாங்களே சீரியஸாக எடுக்காத போது சமூகத்தில் உள்ள மற்றவர்கள் எப்படி சீரியஸாக எடுப்பார்கள்??

Link to comment
Share on other sites

ரதி பெற்றால் தான் பிள்ளையா? ஊரில் எத்தனையோ பிஞ்சுகள் ஒரு துளி அன்புக்கு ஏங்குகிறார்கள்... ஒரு நேர உணவும் கல்வியறிவும் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய நிலையில் எத்தனை இளம் தம்பதியினர் இங்கே பிள்ளைகள் இல்லாமல் இருக்கிறார்கள்? வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கும் பலர், ஏன் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு அக்கறை காட்டுவதில்லை?? அதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது உண்மை, ஆனால் குழந்தை இல்லை என்று மனம் ஏங்குவதை விட வரும் சிரமங்களை சந்தித்து தாக்கென ஒரு குழந்தையை தத்தெடுத்து தமது ஏக்கத்தை குறைத்துக் கொள்ளலாமே?

அந்த மன நிலையை இன்னும் பலர் அடையவில்லை என்றே நினைக்கிறன்.

பொதுவாக சர்வதேசம் எங்கும் இருக்கும் சட்ட திட்டங்களின் படி, திருமணமாகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. ஒரு சில நாடுகள் விதிவிலக்காக இருக்கலாம். கனடா, இலங்கை, இந்தியா எங்கும் இந்தச் சட்டம் இருக்கு.

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுக்க விரும்பாதற்கு காரணம் என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும் அவர்கள் தம் சொந்த இரத்தம் இல்லையே என்ட காரணம் அவர்கள் அடி மனதிலே இருக்கும்...

அவையள் தங்கட ரத்த வகையைச் சேர்ந்த பிள்ளையைத் தத்து எடுத்தால் பிறகு தங்கட ரத்தத்தை ஏத்தி சொந்த ரத்தம் ஆக்கலாமே..! :(:lol::):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ..............ஹா.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி என்று நானும் மாலை ஸ்டேசனுக்கு போனேன்.ஒரு பாலகுமாரரனின் கதைப் புத்தகமும் கையில் கொண்டுபோனதாக ஞாபகம்.பெரிதாக ஒன்றும் கதைக்கவில்லை.தாயாருக்கு மாத்திரம் கவனமாகப் போங்கோ என்று நல்ல பிள்ளையாட்டம் சொல்லி வைத்தேன்.ரெயின் வெளிக்கிடும்போது அந்த கதைபுத்தகத்தை அவாவிடம் கொடுத்து விட்டேன்.பின்னர் இயக்கம் எல்லாம் விட்டு லண்டன் வந்து பட்ட கடன் அடைக்க தும்படித்துக்கொண்டிருந்த போது அவனின் கடிதம். தானும் இயக்கம் விட்டு இலங்கை போய் சேர்ந்து யாழ் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகவும் விரும்பினால் அக்காவை இனி கட்டலாம் தானே என்று.

மனதில் சென்னை ரெயின் காட்சி ஓடியது. ஓமென எழுதிவிட்டேன்.புத்தகம் போலெழுதிய கொண்டிசனெல்லாம் எங்கே போனது என தெரியவில்லை. இயக்கத்தை விட்டு வந்து அவ்வளவு குழப்பத்தில் நானிருந்தேன்.பின்ன்ர் அவாவை லண்டன் கூப்பிட்டு ஆச்வே கோவிலில் திருமணமும் நடந்தது.

எதிர்பார்ப்புகள் எல்லாம் திருப்தி.பிடிவாதம் என்று ஒன்று அது என்னிடம் அறவே இல்லாதது அவாவிடம் 100% .

மனமொத்த தம்பதியினராக வாழ ஒரே குணங்கள் தேவையில்லை. அனுசரித்து வாழத் தெரிந்தாலே போதும். என்றும் சந்தோசமாகஇருக்க வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப் பதிவை சமூக சாளரம் பகுதிக்கு மாற்றும் படி நிர்வாகத்தினரை தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

பொதுவாக சர்வதேசம் எங்கும் இருக்கும் சட்ட திட்டங்களின் படி, திருமணமாகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. ஒரு சில நாடுகள் விதிவிலக்காக இருக்கலாம். கனடா, இலங்கை, இந்தியா எங்கும் இந்தச் சட்டம் இருக்கு.

(இது ஒரு உதாரணத்துக்கு மட்டுமே

Unmarried couples are encouraged to apply to adopt. Couples can be straight, lesbian or gay.)

http://www.adoption.org.uk/information/could_I_adopt.html

இலங்கையில் என்ன மாதிரியான சட்டங்களை பின் பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தால் இங்கே இணைத்து விடவும். நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.