Jump to content

ஈழத்தவரின் மண்! திரைப்படம்!


Shan

Recommended Posts

மண் திரைப்படத்தை நானும் பார்த்தேன். சேயோன் சொன்ன மாதிரி படத்தில வாற BBQ பார்ட்டில. பொன்ராசுவின் மகனும் மகனுடைய நண்பனும் அவரைக் கொல்ல பிளான் பண்ணியிருக்கினம்.பார்டிக்கு வந்து நோரமலா ஆடிப்பாடினாத்தானே சந்தேகம் வராது.பொன்ராசுவின் தோழன் ஒருவர் வந்துவிட்டுச் செல்கிறார்.இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் பொன்ராசுவின் நண்பன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவரல்ல.முன்னர் ஒரு காட்டிசியில் நண்பர்கள் பேசிக்கொள்ளும்போது சொல்வார்கள் "அவனென்ன வெளில சொல்லக்கூடிய மாதிரி எல்லாரும் போற இயக்கத்துக்கே போயிருக்கிறான்" என்று.

இனப்பெருக்கத்தொகுதி பற்றி படிப்பிக்கிற ஆசிரியர்களில் அநேகமானோர் இரட்டை அர்த்த வசனம்தான் பேசுவினம்.இது அம்மாவை படிக்கிற காலத்திலயும் சரி நாங்கள் படிச்ச காலத்திலயும் சரி இப்படித்தான்.பள்ளிக்கூடம் போகும்போது பியர் குடித்துவிட்டுப் போற மாதிரி ஒரு காட்சியை நான் பார்க்கவில்லையே??? மிஸ் பண்ணிட்டன் போல.ஆனால்ப் பள்ளிக்கூடம் போய் வந்து அங்க இருக்கிற ஆக்கள் கள்ளடிக்கிறேல்ல என்றா சொல்றீங்கள்??? வன்னில இருந்திட்டு வந்தாக்களை கேளுங்கோ.

என்னைப் பொறுத்தவரைக்கும் எம்மவர் இயக்கத்தில் வந்த இந்த மண் திரைப்படம் நல்லதோர் திரைப்படம். நல்ல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.மலைநாட்டு மக்களுடன் சில வருடங்கள் பழகியுள்ளேன்.படத்தில வந்த மாதிரி அவ்வளவு பாரபட்சம் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை.ஒரு சில பணக்காரர்களிடம் அந்தக்குணம் இருக்கிறதுதான் ஆனால் படத்தில் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.

18 வருசத்துக்கு முதல் வன்னில ஒரு சப்பாத்து என்ன விலையிருக்கும்? தெரிஞ்சாக்கள் சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • Replies 82
  • Created
  • Last Reply

இலங்கையில் தயாராகும் தமிழ் படம் :மண்

இலங்கை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 25 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் படம் மண். இப்படத்தை சினி ரேஞ்ச் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ராஸ்கஸேந்திரா மிகுந்த செலவில் தயாரிக்கிறார்.

இலங்கை போர் ஏற்பட்ட பிறகு அங்கு தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படவில்லை. சர்மிளாவின் இதய ராகம் என்ற படமே கடைசியாக இலங்கையில் தயாரான தமிழ்ப்படம். இதுவரை அங்கு உருவான தமிழ்ப்படங்கள் இலங்கை மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெளியாகியிருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் படம் என்பதால் உலகத்தரமான தொழில் நுட்பத்துடன் உருவாகுவதோடு உலகெங்கும் முதன் முறையாக வெளியிடப்படுகிறது இந்த மண் திரைப்படம்.

இந்தப் படத்தில் லண்டன் வாழ் தமிழர் வி|pத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ப்ளஸ்டூ மாணவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

300 படங்களுக்கு மேல் நடித்து தேசிய விருது பெற்றிருக்கும் வாகை சந்திரசேகர் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல் சுகுமார் வித்தியாசமான குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் இலங்கை நடிகர்களும் நடிகைகளும் நடிக்கின்றனர்.

சி.ஸே. ராஸகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பல விருதுகளை வென்ற ஆயிஷா கனவு மெய்ப்பட வேண்டும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார். எஸ.எல்.பாலா|p நடனம் அமைக்கிறார். பல உலக இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ள ஜெர்மன் விஜய் இசையமைக்கிறார்.

இலங்கையில் வன்னி பகுதியில் உள்ள கனகராயன்குளம் என்ற தமிழ் கிராமத்தில் நடக்கும் காதல் கதை இது. மண்ணின் மனதோடும் யதார்த்த பின்னனியோடும் உருவாகும் இப்படத்தில் காதலும் அரசியலே! வாழ்வும் அரசியலே! என்ற கருத்து அபத்தமாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க இலங்கையிலுள்ள தமிழ் கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

எப்படி மண்ணானது நாம் பிறக்கிறபோது .... தவழ்ந்து நடக்கிறபோது.... உழுது விதைக்கிற போது....அழுது அணைக்கிற போது.... காதலித்து கட்டிப் புரளுகிறபோது..... மரணித்து ஆத்மா அடங்குகிற போது நம்மைச் சுமக்கின்றதோ அதே போல இந்த மண் திரைக்காவியம் கூட உங்களை ஒரு அழகான தமிழ் கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கே வாழவிட்டு...... அழவிட்டு....... சிரிக்க விட்டு..... சிந்திக்க விட்டு.... உணர்ச்சி ததும்ப விட்டு .... படமாக இல்லாமல் உங்கள் வாழ்வின் பகுதியாக எண்ணவிட்டு திரையரங்கிலிருந்து வீட்டுக்கு செல்ல வைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் புதியவன்.ஆர்.

http://www.tamilr.com/

Link to comment
Share on other sites

இந்த செய்தியை ஏன் விளையாட்டு பகுதியில் இணைத்துள்ளீர்கள்????

:huh:

Link to comment
Share on other sites

மண் படம் பற்றி ஏற்கனவே களத்தில் வந்திருக்கின்றதே

ஆமாம் தவறுதான். சிறிய கவலையீனம் பிழையை ஏற்படுத்திவிட்டது. மன்னிக்கவும்

ப்டம் வந்து 6மாதமும் ஆச்சு இறைவன் :angry:

ஆமாம் தவறுதான். சிறிய கவலையீனம் பிழையை ஏற்படுத்திவிட்டது. மன்னிக்கவும்

இந்த செய்தியை ஏன் விளையாட்டு பகுதியில் இணைத்துள்ளீர்கள்????

:rolleyes:

ஆமாம் தவறுதான். சிறிய கவலையீனம் பிழையை ஏற்படுத்திவிட்டது. மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனே இது பெரிய பிரச்சனையே இல்லை. களப்பொறுப்பாளர் மாற்றி விடுவார்

Link to comment
Share on other sites

இறைவனே இது பெரிய பிரச்சனையே இல்லை. களப்பொறுப்பாளர் மாற்றி விடுவார்

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.