Jump to content

எனக்கு பிடித்த எழுத்தாளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் வேண்டாம் எண்டிட்டு சும்மாயிருக்கிறன் ஆளால் பேந்தும் பேந்தும் வம்புக்கிழுக்கிறதெண்டே அடம் பிடிக்கிறீங்களே ??அதுவும் இந்த நேரத்திலை :D:(அவலத்தாலை பாதிக்கப்பட்ட பலபேர் இன்னமும் இங்கை உலாவினம் எதுக்கு அவங்களை கடுப்பேத்துவான் அதுதான் :(:lol:

ஒரு நாட்டிலை பாராளுமன்றம் எண்டு ஒண்டிருந்தால் எதிர்க்கட்சிகள் பலகோணத்திலைதான் இருக்கும் அதுக்காக வாயைபொத்திக்கொண்டிருந்தால்

நேற்று பெய்த மழைக்கு இன்றைக்கு முளைத்த காளான்களின் அழகுதனியாக அமர்க்களமாக தெரியும் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

இன்னும் அழைப்பு அனுப்பல்லையே.. :)

அழையா விருந்தாளியாக போயிட்டு பிறகு சொல்ல வேண்டியதுதானே மகிந்தாவின் ஸ்பேசல் இன்விட்டேசனில போயிட்டு வந்தனான் என்று :wub:

Link to comment
Share on other sites

எழுதுற ஆக்கள்ளை எங்கடை சாத்திரியாரையும் எனக்கு பிடிக்கும்.

ஐரோப்பிய அவலத்தை ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ :D

உந்தச்சாத்திரியின்ரை அவலத்தை நாடகமாக்கினதாலை இன்னும் நினைச்சு நினைச்சு அடிக்கிற மனிசர்கள் இன்னும் கனபேர் :rolleyes::lol: :lol: :D இதுக்கை சாத்திரியை திரும்பி கூப்பிட்டு ஏன் குமாரசாமி திரும்பவும் :(

சாத்திரி இப்ப தனது பொன்னான நேரங்களை நேசக்கரத்துக்காக அர்ப்பணிப்பதாக வாக்குறுதி தந்துள்ளார். வாக்குறுதியலை மண்ணைப்போடாதையுங்கோ :D

இன்னும் அழைப்பு அனுப்பல்லையே.. :)

முதுகில எண்ணை பூசீட்டு காத்துக்கொண்டிருக்கிறமாதிரி தெரியுது சயந்தன் சரியோ ? :D

Link to comment
Share on other sites

கிட்டத்தட்ட அனைத்து நாவல்களையும் நான் படித்திருக்கிறேன் என நினைக்கிறேன்..மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. தமிழில் சுசிலா கனகதுர்க்கா மொழிபெயர்த்து வந்தார். மற்றும் தமிழ்வாணன்..கல்கி..சாண்டில்யன்..என பல எழுத்தாளர்களும் என்னைக் கவர்ந்தவர்கள்.ஆனால் கிட்டத்தட்ட வெளிநாட்டுக்கு வந்தபின் நாவல் வாசிப்பது இல்லை என்றே கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முந்தி கன எழுத்தாளர்களை பிடிக்கும். வாசிப்பேன்.

ஒரு, கட்டத்தில் இது, ஒரு விசர்கதை எழுதுறான். என்று வாசிப்பையே நிறுத்தி விட்டேன்.

இப்ப..... சின்ன, ஒரு பக்க கதை படிப்பேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த எழுத்தாளர் ஈழ எழுத்தாளர் கவிஞ்சர் தமிழ்நதி...

n727685833_1499279_5395.jpg

மற்றும் தமிழகத்தில்.. தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி இதழ் ஆசிரியர் ..மற்றும் இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர்

p5.JPG

தோழர் க.அருணபாரதி...

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் தகழி சங்கரம்பிள்ளை[மலையாளம்] எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழி பெயர்த்த செம்மீன் என்ட நூல் வாசித்தேன்...இந்த நூலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததாம்...யாராவது இந் நூலை வாசித்து உள்ளீர்களா? வித்தியாசமான மீனவ வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதை ஆனால் எனக்கு முடிவு பிடிக்கவில்லை...இந்த கதையைப் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

Link to comment
Share on other sites

நான் வாசித்த நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது செம்மீன் தான் என்று முன்பே எழுதியிருந்தேன்.மொழிபெயர்ப்பு நாவல் போல் ஒரு உணர்வு ஏற்படாவண்ணம் அமைந்தது பெரும் பாக்கியம்.இதைவிட வேறுவிதமாக முடிவு அமைந்திருக்கமுடியாது என்றுதான் என் எண்ணம்.பரீக்குட்டியின் கதாபாத்திரம் என்னை மிகவும் பாதிததது.செம்மீன் படமாக வந்தது.கதைக்கு நிகராக படமும் பாட்டுகளும் இருந்தது.மறக்கமுடியாத் ஒரு படம்..பல பாடல்கள் ஜேசுதாஸ் பாடியவை.காலத்தால் அழியாத காவியம்.

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும்,கருவாச்சிக் காவியமும் வாசிக்கவும்.கள்ளிக் காட்டு இதிகாசம் மிகமிக நல்ல கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.

Link to comment
Share on other sites

நான் அண்மையில் தகழி சங்கரம்பிள்ளை[மலையாளம்] எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழி பெயர்த்த செம்மீன் என்ட நூல் வாசித்தேன்...இந்த நூலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததாம்...யாராவது இந் நூலை வாசித்து உள்ளீர்களா? வித்தியாசமான மீனவ வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதை ஆனால் எனக்கு முடிவு பிடிக்கவில்லை...இந்த கதையைப் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

நானும் சில வருடங்களுக்கு முன்பு செம்மீன் வாசித்தனான். முடிவு இயல்பானதாக இருந்தது. தகழி இந்தக் நாவலை எழுதும் காலத்தில் மீனவர்கள் சமூகம் எவராலும் மதிக்கப்படாத சமூகமாக இருந்தது என்றும், அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி மற்ற சமூகத்துக்கு பெரியளவில் அக்கறை இருந்ததில்லை என்றும் அறிந்தன். கடலில் மீனவர் நிற்கையில் அவர்களின் உயிர் மனைவியின் கற்பில் தான் தங்கி இருக்குது போன்ற அவர்களின் நம்பிக்கைகள் ஆச்சரியம் அளித்தன. வாசிக்கும் பொது உப்புக்காற்றும் மீன்களின் வாசமும் எமக்குள் எழுவதை போன்ற ஒரு உணர்வும் வரும்

புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியில் செம்மீன் படத்தை ஒளிபரப்பி இருந்தார்கள். அப்ப சின்ன வயது என்பதால் பார்க்க விரும்பவில்லை (சண்டைப் படங்கள் மட்டுமே பிடிக்கும் வயது அது)

=========

போன கிழமை, லா.சா.ரா வின் சிறுகதைத் தொகுப்பில் இருந்த (தொகுப்பின் பெயர் "ஜனனி") "புற்று" என்ற சிறுகதையை படித்து அதிர்ந்து போனன். எப்படி இவர்களால் இப்படி எழுத முடிகின்றது என்று ஆச்சரியமாக இருந்தது. முடிந்தால் அக் கதையை தேடிப் படிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் பெரிய பெரிய நாவல்கள் வாசித்துள்ளேன். கல்கி, சாண்டில்யன் போன்றோரின் நாவல்கள் பிடிக்கும். காவியங்கள் இலக்கியங்களைக் கடந்து சமூக நாவல்கள் என்றுபார்த்தால் ஜெயக்காந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு, சில நேரங்களில் சில மனிதர்கள், எஸ்போவின் சடங்கு, மற்றும் இன்னொரு ஈழத்து எழுத்தாளரின் நிலக்கிளி இவையெல்லாம் பிடிக்கும். இவையெல்லாம் பன்னிரண்டு வயதிற்கு முன்பு வாசித்தவை பின்னாட்களில் சிறுகதைகள் மட்டுமே வாசிக்கும் பழக்கும். நிறைய சிறுகதைகளை வாசிப்பதால் எழுத்தாளர்களை நினைவில் வைக்க முடிவதில்லை.

இங்கு இன்னொரு விடயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கல்கி எனக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படைப்பாளி. எழுத்துத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்" நாவல். இன்றைய காலத்தில் எனது எழுத்தில் 'வேங்கையன் பூங்கொடி" உருவாக ஆரம்பித்திருப்பது பொன்னியின் செல்வனின் தாக்கமே.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் சமீபத்தில் காணல் வரி என்னும் நாவல் வாசித்தேன்...மிகவும் அற்புதமாய் எழுதியுள்ளார் எழுத்தாளார்...இது தான் நான் வாசிக்கும் அவரது முதலாவது நாவல்...எழுதியுள்ளவர் ஒரு பெண் அதுவும் ஈழத்தை சேர்ந்த பெண்... விசுகு அண்ணா போன்றவர்கள் இவரது நாவல்களை வாசிக்க வேண்டும் அதுக்குப் பிறகாகவது புரியும் ஈழத்தை சேர்ந்த பெண்கள் தற்போது என்ன மாதிரி எழுதுகிறார்கள் என!.. அந்த என்னைக் கவர்ந்த பெருமைக்குரிய எழுத்தாளார் தமிழ்நதி.

Link to comment
Share on other sites

The Motorcycle Diaries என்னும் ஆங்கில நூல் வாசித்தேன்.

ஒரு 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவன் தனது 29 வயது நண்பனுடன் தென் அமெரிக்காவில் 8000 கிலோ மீற்றர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்கள், அந்தப் பயணத்தில் அவர்கள் அடைந்த அனுபவங்களை விபரித்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதால், வாசிக்கும் போது பொறுமையாக புலன்களை புத்தகத்தில் முழுதாக செலுத்தி வாசிக்க நேரம் இருக்கவில்லை. ஆனால் அடிப்படைக் கரு புரிந்தது.

அதை வைத்து 2004ஆம் ஆண்டு திரைப்படமும் வெளிவெளிவந்ததென்று கேள்விப்பட்டு ஒரு dvd வாங்கி அண்மையில் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. :) பார்த்த பின்பு, இவ்வளவு நாளும் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று ஒரு பீலிங் ^_^

பெரும்பாலானோர் பாத்திருப்பீர்கள். அப்படிப் பார்க்காதவர்கள்/ பார்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் நேரம் இருக்கும் போது பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

The Motorcycle Diaries (book)

The Motorcycle Diaries (film)

The Motorcycle Diaries Film Review

Book

DVD

Trailer

Link to comment
Share on other sites

!.. அந்த என்னைக் கவர்ந்த பெருமைக்குரிய எழுத்தாளார் தமிழ்நதி.

தமிழ்நதி முன்பு யாழில் எழுதுபவர் என நினைக்கிறேன்.

The Motorcycle Diaries என்னும் ஆங்கில நூல் வாசித்தேன்.

ஒரு 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவன் தனது 29 வயது நண்பனுடன் தென் அமெரிக்காவில் 8000 கிலோ மீற்றர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்கள், அந்தப் பயணத்தில் அவர்கள் அடைந்த அனுபவங்களை விபரித்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதால், வாசிக்கும் போது பொறுமையாக புலன்களை புத்தகத்தில் முழுதாக செலுத்தி வாசிக்க நேரம் இருக்கவில்லை. ஆனால் அடிப்படைக் கரு புரிந்தது.

அதை வைத்து 2004ஆம் ஆண்டு திரைப்படமும் வெளிவெளிவந்ததென்று கேள்விப்பட்டு ஒரு dvd வாங்கி அண்மையில் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. :) பார்த்த பின்பு, இவ்வளவு நாளும் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று ஒரு பீலிங் ^_^

பெரும்பாலானோர் பாத்திருப்பீர்கள். அப்படிப் பார்க்காதவர்கள்/ பார்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் நேரம் இருக்கும் போது பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

The Motorcycle Diaries (book)

The Motorcycle Diaries (film)

The Motorcycle Diaries Film Review

Book

DVD

Trailer

குட்டி இந்த கதை சேகுவேராவின் கதையை போன்றது என எங்கோ வாசித்த ஞாபகம்.

Link to comment
Share on other sites

விருந்து போன்ற புத்தகங்கள்தான் எனக்குத்தெரியும் மற்றது எதுவும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதி முன்பு யாழில் எழுதுபவர் என நினைக்கிறேன்.

குட்டி இந்த கதை சேகுவேராவின் கதையை போன்றது என எங்கோ வாசித்த ஞாபகம்.

தப்பிலிக்கு பழைய விபரம் எல்லாம் தெரிந்து இருக்குது :unsure:

இந்த சேகுவாராவின் கதை தமிழில் மொழி பெயர்த்து தினமுரசில் வந்தது என நினைக்கிறேன்...சின்னனில் வாசித்தது சரியாய் ஞாபகம் இல்லை

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் பெரிய பெரிய நாவல்கள் வாசித்துள்ளேன். கல்கி, சாண்டில்யன் போன்றோரின் நாவல்கள் பிடிக்கும். காவியங்கள் இலக்கியங்களைக் கடந்து சமூக நாவல்கள் என்றுபார்த்தால் ஜெயக்காந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு, சில நேரங்களில் சில மனிதர்கள், எஸ்போவின் சடங்கு, மற்றும் இன்னொரு ஈழத்து எழுத்தாளரின் நிலக்கிளி இவையெல்லாம் பிடிக்கும். இவையெல்லாம் பன்னிரண்டு வயதிற்கு முன்பு வாசித்தவை பின்னாட்களில் சிறுகதைகள் மட்டுமே வாசிக்கும் பழக்கும். நிறைய சிறுகதைகளை வாசிப்பதால் எழுத்தாளர்களை நினைவில் வைக்க முடிவதில்லை.

இங்கு இன்னொரு விடயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கல்கி எனக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படைப்பாளி. எழுத்துத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்" நாவல். இன்றைய காலத்தில் எனது எழுத்தில் 'வேங்கையன் பூங்கொடி" உருவாக ஆரம்பித்திருப்பது பொன்னியின் செல்வனின் தாக்கமே.

25912122411346095193410.jpg

Link to comment
Share on other sites

1225240_Rs.55.jpgwriters12.jpg

... வாசிப்புக்கும் எனக்கும் வெகுதூரம்... ஆனால் என் பொறுமையையும் மீறி சில புத்தகங்கள் ... கண்ணதாஸனின் அர்த்தமுள்ள இந்துமத தொடர்கள், புஸ்பா தங்கத்துரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, இப்படி சில ... அதில் ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ... இன்றும் மனத்திரையில் ... ஓர்ர் ஆபாச எழுத்தாளர் என பெயர் எடுத்த புஸ்பா தங்கத்துரை ... இதனையும் என்னால் முடியும் என்று நிரூபித்தவர்!

Link to comment
Share on other sites

நான் சின்னவயசில் இருந்தே விரும்பி படிச்சது ஜி.நேசனின் புத்தகங்கள் குறிப்பாக பாலை வனத்து றோஜா... பிறகு சரோஜாதேவி காயத்திரி இதுகள்தான். எப்படியெல்லாம் இவர்களால் இப்படி எழுதமுடிந்தென்று வியந்திருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

நிழலி நீங்கள் கேட்டது மேலே உள்ளது.

நன்றி அர்ஜுன்

Link to comment
Share on other sites

எனக்கு இந்த தலைப்பு உண்மையில் விளக்கம் இல்லாமையும் அதேவளையில் மனக்கவலையையும் கொடுக்கின்ற விடையமாக இருக்கின்றது.வாசிப்பு ஒருவரை முழுமையாக்குகின்றதுதான் ஆனால் எப்படி முழுமையாக்குகின்றது என்பதில்தான் பிரச்சனையே இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் எந்தவிதத்திலும் தமிழக எழுத்தாளரகளுக்கு சளைத்ததும் இல்லை அத்துடன் அவர்களுடைய படைப்புகளைவிட உயிர்புடன் கூடி எம்வாழ்வுடன் அன்றாடங்கலந்தவை. ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை குடுக்காத எங்களை என்ன சொல்ல. எனது தெரிவு எப்பொழுதும் செங்கைஆழியான் செம்பியன்செல்வன் செ.யோகநாதன் தான். மற்றும் பாலமனோகரன் தாமரைச்செல்வி ஆகியோரது கதைகளையும் வாசிப்பேன்.செங்கையாழியானின் "கடல்கோட்டை" "ஆச்சி கொழும்புக்குப் போறா" "முற்றத்து ஒற்றைப்பனை" "கொத்தியின்காதல்" பாலமனோகரனின் "வட்டப்பூ" என்பனவற்றை பலமுறை வாசித்துள்ளேன். டானியல் அகத்தியர் ஆகியோரது படப்புகளும் விருப்புத் தேர்வு அதிலும் டானியலின் "கோவிந்தன்" அகத்தியரின் "பஞ்சமர்" ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. கவிஞர்களில் இ.முருகையனையும் சேரனையும் வா.செ.ஐ. ஜெயபாலனையும் பிடிக்கும். என்னை பொறுத்தவரையில் தமிழக எழுத்தாளரகளது எழுத்துக்களில் பார்பானியப் புகுத்தலும் பிற்போக்குத்தனமான செய்திகளும் உ+ம் பாலகுமாரன், லட்சுமி, ரமணிச்சந்திரன் கொஞ்சம் தூக்கலாகவே காணப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் எந்தவிதத்திலும் தமிழக எழுத்தாளரகளுக்கு சளைத்ததும் இல்லை அத்துடன் அவர்களுடைய படைப்புகளைவிட உயிர்புடன் கூடி எம்வாழ்வுடன் அன்றாடங்கலந்தவை. ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை குடுக்காத எங்களை என்ன சொல்ல.

நானும் பலதடவைகள் யோசிப்பதுண்டு. இதற்கு என்ன காரணம் என்று. அவர்களின் எழுத்து நடையா அல்லது எழுத்தாளர்கள் அங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறார்களா

Link to comment
Share on other sites

நானும் பலதடவைகள் யோசிப்பதுண்டு. இதற்கு என்ன காரணம் என்று. அவர்களின் எழுத்து நடையா அல்லது எழுத்தாளர்கள் அங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறார்களா

விடை சுலபம் கறுப்பி. ஈழத்து எழுத்தாளர்கள் சினிமாத்தனம் இல்லாதவர்கள்.அண்மையில் மறைந்த சிரித்திரன் சுந்தர் கார்ட்டூன் என்றால் என்ன நகச்சுவை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்குக் காட்டியவர். ஆனால் தமிழகத்து காரடூனிஸ்ற் மதனை தெரிந்த எத்தனை பேரிற்கு சுந்தரை தெரியும் இவரின் மிஸ்ரர் & மிஸிஸ் டாமோடிரன் தெரியுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த தலைப்பு உண்மையில் விளக்கம் இல்லாமையும் அதேவளையில் மனக்கவலையையும் கொடுக்கின்ற விடையமாக இருக்கின்றது.வாசிப்பு ஒருவரை முழுமையாக்குகின்றதுதான் ஆனால் எப்படி முழுமையாக்குகின்றது என்பதில்தான் பிரச்சனையே இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் எந்தவிதத்திலும் தமிழக எழுத்தாளரகளுக்கு சளைத்ததும் இல்லை அத்துடன் அவர்களுடைய படைப்புகளைவிட உயிர்புடன் கூடி எம்வாழ்வுடன் அன்றாடங்கலந்தவை. ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை குடுக்காத எங்களை என்ன சொல்ல. எனது தெரிவு எப்பொழுதும் செங்கைஆழியான் செம்பியன்செல்வன் செ.யோகநாதன் தான். மற்றும் பாலமனோகரன் தாமரைச்செல்வி ஆகியோரது கதைகளையும் வாசிப்பேன்.செங்கையாழியானின் "கடல்கோட்டை" "ஆச்சி கொழும்புக்குப் போறா" "முற்றத்து ஒற்றைப்பனை" "கொத்தியின்காதல்" பாலமனோகரனின் "வட்டப்பூ" என்பனவற்றை பலமுறை வாசித்துள்ளேன். டானியல் அகத்தியர் ஆகியோரது படப்புகளும் விருப்புத் தேர்வு அதிலும் டானியலின் "கோவிந்தன்" அகத்தியரின் "பஞ்சமர்" ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. கவிஞர்களில் இ.முருகையனையும் சேரனையும் வா.செ.ஐ. ஜெயபாலனையும் பிடிக்கும். என்னை பொறுத்தவரையில் தமிழக எழுத்தாளரகளது எழுத்துக்களில் பார்பானியப் புகுத்தலும் பிற்போக்குத்தனமான செய்திகளும் உ+ம் பாலகுமாரன், லட்சுமி, ரமணிச்சந்திரன் கொஞ்சம் தூக்கலாகவே காணப்படுகின்றன.

கோமகன் எல்லோரும் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் ஆனால் அதை வாசித்து விட்டு அந்த எழுத்தாளர்களை அப்படியே தொட‌ர‌ வேண்டும் என்று இல்லை...ஒவ்வொருவருக்கும் ர‌ச‌னை வேறுபடும் எனக்குப் பிடித்த எழுத்தாளாரை உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று இல்லை...இந்த பதிவின் மூலம் இந்தியா எழுத்தாளார் தான் சிறந்தவர் என்டோ ஈழத்து எழுத்தாளார்கள் தாழ்ந்தவர்கள் என யாரும் கூற வர‌வில்லை...எல்லோரும் எல்லா எழுத்தாளார்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ட‌ நோக்கத்தில் தான் இந்தப் பதிவை ஆர‌ம்பித்தேன்...உங்களுக்கு தெரிந்த எங்களுக்கு தெரியாத ஈழத்து எழுத்தாளார்கள் இருந்தால் அவர்களையும்,அவர்கள் நாவல்கள் பற்றியும் இந்தப் பதிவில் வந்து எழுதுங்கள் நாங்களும் அறிந்து கொள்வோம் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.