Jump to content

தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். - குமரன் பத்மநாதன் (கே.பி.)


Recommended Posts

சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளை நம்பி சரணடைகின்ற அளவிற்கு கேபி ஒன்றும் முட்டாள் இல்லை. உலகின் மிகப் பெரிய விடுதலை இயக்கத்தின் முக்கிய தூணாக இருந்தவர்.

கேபி சரணடைந்தார் என்கின்ற வதந்தியானது கேபியை மட்டும் முட்டாள் என்று சொல்லவில்லை. மிக முக்கிய தருணத்தில் முக்கிய பொறுப்பை அவரிடம் ஒப்படைத்த தேசியத் தலைவரையும் சேர்த்தே அப்படி சொல்கிறது.

கேபி சிறிலங்கா அரசின் முகவராக செயற்பட்டிருந்தால் கேபியை சரணடையச் செய்வதை விட கேபியை வைத்து புலம்பெயர் மக்களை தன்னுடைய விருப்பத்தின்படி ஆட்டி வைப்பதையே சிறிலங்கா அரசு செய்திருக்கும். கேபியின் சரணடைவு அடிப்படையற்ற ஒரு கற்பனை.

கேபி கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது தமிழ் மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவருடைய எதிரிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு சதியே சரணடைவு பற்றிய இட்டுக்கட்டப்பட்ட கதையாகும்.

கேபி சரணடைந்தார் என்கின்ற வதந்தியானது கேபியை மட்டும் முட்டாள் என்று சொல்லவில்லை. மிக முக்கிய தருணத்தில் முக்கிய பொறுப்பை அவரிடம் ஒப்படைத்த தேசியத் தலைவரையும் சேர்த்தே அப்படி சொல்கிறது

மிகமுக்கிய தருணத்தில் முக்கிய பொறுப்பை கே பி யிடம் ஒப்படைத்ததாக கே பி தான் சொன்னாரே தவிர தலைவர் சொன்னதா எங்கும் அறியவில்லை அப்படியே தலைவர் ஒப்படைத்திருந்தாலும் கே பி சரணடைவார் என தலைவர் என்ன சாத்திரமா பார்த்திருக்கமுடியும்

கேபி கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது தமிழ் மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவருடைய எதிரிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு சதியே சரணடைவு பற்றிய இட்டுக்கட்டப்பட்ட கதையாகும்
.

K p கைதுதான் செய்யப்பட்டார் சரணடைவு இட்டுக்கட்டுக் கதை எனில் கே பி யின கூற்றுப்படி அவரை கோத்தபாயாவின் இடத்துக்கு கூட்டிச்சென்றபொழுது ஒரு பயங்கரவாத கைதியை கோத்தபாய எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்ராராமே இது சாத்தியமா? உங்கள்மனதில் இதுபற்றி எதுவத சந்தேகமும் ஏற்படவில்லையா?

யோகி பாலகுமாரன்ஆகியோரும் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கும் செல் போன் வசதியும் தனிவீட்டு வாழ்க்கைவசதியை ஏன் அரசு செய்து கொடுக்கவில்லை? இதுபற்றி உங்கள் மனதில் ஏதாவது சந்தேகமுள்ளதா? மிஸ்டர் சபேசன்

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply

கே பி காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதே உண்மை அவராக சரணடைய முற்பட்டிருந்தால்

வெளியில் இருந்து கொண்டே சுலபமாக அரசோடு இயங்கியிருக்கலாம் அதைத்தான் அரசும் விரும்பியிருக்கும்

கீழே உள்ள கட்டுரையை பாருங்கள் உண்மை புரியும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74343&view=findpost&p=604343

Link to comment
Share on other sites

புலத்தில் கே.பி தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்து இருந்தார்.

அந்தக்கூட்டம் கே.பி யைத் தொடர்ந்தம் தலையில் தூக்கிவைத்து கூத்தாடுகின்றது.

புலத்தில் கே.பி தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்து இருந்தார்.

அந்தக்கூட்டம் கே.பி யைத் தொடர்ந்தம் தலையில் தூக்கிவைத்து கூத்தாடுகின்றது.

Link to comment
Share on other sites

புலத்தில் கே.பி தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்து இருந்தார்.

அந்தக்கூட்டம் கே.பி யைத் தொடர்ந்தம் தலையில் தூக்கிவைத்து கூத்தாடுகின்றது.

முன்னர் அடுச்சாட்டூளியங்களோடை விடுதலைபுலிகளுக்கு உதவிய (ஆதரவாளர்) கூட்டம் ஒண்று இருந்தது.... ( இப்ப ஐரோப்பாவில் புலிகளால் கழட்டி விடப்பட்டு இருக்கின்றது... ) அந்த கூட்டம் இப்பவும் தாங்கள் தான் புலிகள் எண்று சொல்லி கொள்கிறது... அந்த கூட்டத்தை பிடிக்காதவர்களுக்கு KP அண்ணாவை போற்றும் கூட்டமும் , கோசமும் தான் இப்ப வரப்பிரசாதம்...

இதுக்கும் மேலை உண்மை எண்டதை ஆராய முற்படுகிறது எல்லாம் இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளை நம்பி சரணடைகின்ற அளவிற்கு கேபி ஒன்றும் முட்டாள் இல்லை. உலகின் மிகப் பெரிய விடுதலை இயக்கத்தின் முக்கிய தூணாக இருந்தவர்.

கேபி சரணடைந்தார் என்கின்ற வதந்தியானது கேபியை மட்டும் முட்டாள் என்று சொல்லவில்லை. மிக முக்கிய தருணத்தில் முக்கிய பொறுப்பை அவரிடம் ஒப்படைத்த தேசியத் தலைவரையும் சேர்த்தே அப்படி சொல்கிறது.

கேபி சிறிலங்கா அரசின் முகவராக செயற்பட்டிருந்தால் கேபியை சரணடையச் செய்வதை விட கேபியை வைத்து புலம்பெயர் மக்களை தன்னுடைய விருப்பத்தின்படி ஆட்டி வைப்பதையே சிறிலங்கா அரசு செய்திருக்கும். கேபியின் சரணடைவு அடிப்படையற்ற ஒரு கற்பனை.

கேபி கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது தமிழ் மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவருடைய எதிரிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு சதியே சரணடைவு பற்றிய இட்டுக்கட்டப்பட்ட கதையாகும்.

சரணடையவில்லை. கைது செய்யப்பட்டார் என்ற உங்கள் வாதப்படி கேபியின் கைதுக்கு நீங்களும் சிலவேளை காரணகர்த்தாகவாக இருந்திருக்கலாம். அவர் கடைசி நேரத்தில் மக்கள் கருத்துக்களை அறிய இணையத்தில் கட்டுரைகள் பதிந்ததோடு, கருத்துக்களை உள்வாங்கிய சூழ்நிலையும் இருந்தது. அந்த வகையில் தான் நாடுகடந்த அரசுக்குக்கு மாற்றீடான பெயரில் நீங்கள் நாடு கடந்த அரசு தொடர்பான தலைப்பை யாழ்களத்தில் எழுதியிருந்தீர்கள். பிற்பாடு அதுவும் உள்வாங்கப்பட்டிருந்தது போலும்.

மற்றும்படி இணையங்களில் வந்த விமர்சனங்களுக்கு அவரது வலைப்பூவில் பதில் வரையப்பட்டிருந்தது. அது யாழ்களத்தில் வந்த விமர்சனங்களுக்கும். அந்த வகையில் தொலைக்காட்சியில் வந்த பேட்டி ஒன்றில் அவரது முகத்தைக் காட்டமைக்கு, அவர் பயங்கரவாதி போல முகம் மூடிய தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்துவதாக சபேசனும், சுகனும் காரசாரமாக யாழ்களத்தில் எழுதியிருந்தார்கள். அதன் பின்னர் அவரது படமும் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு, 2 ம் நாள் கைது செய்யப்பட்டார். அல்லது சரணடைந்தார்.

சொல்லப் போனால் மேதாவி மாதிரித் தெரிந்தோ, தெரியாமலோ, எழுதிய சில எழுத்துக்கள் பிரச்சனையாக மாற்றத்தைத் தந்திருந்து. கைது செய்யப்பட்டார் என்பதற்கு சிறு பங்களிப்பு உங்களாலும் நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KP இன் பேட்டி பின்வரும் இணைப்பில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74119&view=findpost&p=604476

புலத்துப் பூசாரிகள்தான் முள்ளிவாய்க்கால் அவலத்திற்குக் காரணம் என்று சொல்கின்றார். ஆனால் நாம் இப்பவும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்துகொண்டிருக்கின்றோம் என்று நம்புகின்றோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உங்களால் என்பது யாரைக்குறிக்கிறது...???

விசுகு அண்ணா............ எதைபற்றி பேசுகிறோம் என்பதிலும்விட....

யாரோடு பேசுகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது,

கற்பளிப்பு மிருகங்களுடன் சேர்ந்து கற்புடைய பெண்கள் களகம் அமைப்பது பற்றி பேசாதது குற்றமாய் பொய்விட்டது இந்த உலகில். கருத்து மாற்றுகருத்து இவைகளுக்கு விளக்கம் தெரியது ஒரு மனிதவடிவ மீரகங்கள் அலையும் உலகில் மனிதநேயம் பற்றி பேசுவது என்பது. எமது கண்ணை நாமே குற்றுவதுபோன்றது

Link to comment
Share on other sites

வைரமுத்துவிடம் முள்ளிவாய்கால் அழிவில் கருணாநிதியின் நிலை பற்றி கேட்க பதில் மவுனம் என எழுதியிருந்தார்கள்.வைரமுத்துவிற்கல்ல கருணாநிதி பின் இருக்கும் அத்தனை வாலுகளுக்கும் தெரியும் சினிமா பிரபலங்களுட்பட கருணாநிதி செய்தது துரோகம்,நடிப்பு என்று வாய் விட்டு சொல்ல முடியுமா முடிந்தால் தொடர்ந்து தி.மு.க வில் இருக்க முடியுமா அல்லது சலுகைகள் பெற முடியுமா?

அதுதான் இங்கும் நடக்கின்றது புலி செய்தது பிழை என்றால் புலியில் தொடர்ந்து இருக்க முடியுமா அல்லது சலுகைகள் பெறமுடியுமா?

சாகும்வரை நியாயப்படுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். வைரமுத்து திறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா............ எதைபற்றி பேசுகிறோம் என்பதிலும்விட....

யாரோடு பேசுகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது,

கற்பளிப்பு மிருகங்களுடன் சேர்ந்து கற்புடைய பெண்கள் களகம் அமைப்பது பற்றி பேசாதது குற்றமாய் பொய்விட்டது இந்த உலகில். கருத்து மாற்றுகருத்து இவைகளுக்கு விளக்கம் தெரியது ஒரு மனிதவடிவ மீரகங்கள் அலையும் உலகில் மனிதநேயம் பற்றி பேசுவது என்பது. எமது கண்ணை நாமே குற்றுவதுபோன்றது

மிக்க நன்றீ உங்கள் தமிழ் உணர்வு உள்ள கருத்துக்கு...முதலில் மனிதம் என்டால் என்ன என்பதை உணருங்கள் பிறகு மனிதருக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

பல்வேறு விடயங்கள் குறிப்பாக மே மாதம் நடைபெற்ற நிகழ்வுகள் இந்த நேர்காணலின் இரண்டாம் பாகத்தில் உள்ளது. கேபி தனது தரப்பு நியாயங்களை கூறியுள்ளார். அவற்றில் பல நாம் முன்னர் கேள்வியுற்றதே! குறிப்பாக தலைவரின் குடும்பத்தை பாதுகாக்க கேபி எடுத்த நடவடிக்கையும் அதை வெற்றிகரமாகாது தடுத்த நெடியவனின் செயற்பாடுகளும். ஆங்கிலத்தில் வாசிக்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு விடயங்கள் குறிப்பாக மே மாதம் நடைபெற்ற நிகழ்வுகள் இந்த நேர்காணலின் இரண்டாம் பாகத்தில் உள்ளது. கேபி தனது தரப்பு நியாயங்களை கூறியுள்ளார். அவற்றில் பல நாம் முன்னர் கேள்வியுற்றதே! குறிப்பாக தலைவரின் குடும்பத்தை பாதுகாக்க கேபி எடுத்த நடவடிக்கையும் அதை வெற்றிகரமாகாது தடுத்த நெடியவனின் செயற்பாடுகளும். ஆங்கிலத்தில் வாசிக்க..

பாண்டு அண்ணே..... போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது புலியை திட்டினீர்கள்.

இப்போ..... கே.பி. க்கு பக்க வாத்தியம் வாசிக்கிறீங்கள்.

நீங்கள், எந்த நிகழ்ச்சி நிரலிலை இருக்கிறீர்கள் என்பதை.... சொல்லியா.... தெரிய வேண்டும்.

.

Link to comment
Share on other sites

பல்வேறு விடயங்கள் குறிப்பாக மே மாதம் நடைபெற்ற நிகழ்வுகள் இந்த நேர்காணலின் இரண்டாம் பாகத்தில் உள்ளது. கேபி தனது தரப்பு நியாயங்களை கூறியுள்ளார். அவற்றில் பல நாம் முன்னர் கேள்வியுற்றதே! குறிப்பாக தலைவரின் குடும்பத்தை பாதுகாக்க கேபி எடுத்த நடவடிக்கையும் அதை வெற்றிகரமாகாது தடுத்த நெடியவனின் செயற்பாடுகளும். ஆங்கிலத்தில் வாசிக்க..

அது சரி MR.Bond, பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தில் big mac சாப்பிட்டவரோ இல்லையோ?? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் சிங்களவண்ட.. புளுகு தாங்க முடியல்லடா சாமி.

இவ்வளவு காலமும் இவ்வளவு பெரிய திறமையான.. அதுவும் இஸ்ரேல் ரேஞ்சிலையாமே.. புலனாய்வாளர்களை வைச்சிருந்து என்னத்தை கிழிச்சனீங்கள்.

இப்ப அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தொடக்கி தெற்காசியாவில் அதன் பார்வை மையம் கொண்ட பின்னர் தான் நீங்களும் வீரமா வெளிக்கிட்டனியளோ...!

கே பி ஏற்கனவே அமெரிக்கா இன்ரபோல் என்று எல்லோராலும் கண்காணிக்கப்பட்டவர். அதன் பெயரில் அவர் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டும் விட்டார். கேபியை சர்வதேசத் தொடர்பாளராக இயக்கம் அறிவித்திருந்தாலும் கூட உண்மையில்.. அவருக்கு மட்டும் தானா அந்த பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. அதை எவரும் தெரிஞ்சு கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.. இயக்கத்தைப் பொறுத்தவரை.

நிச்சயம் தலைவர்.. கே பி யை மட்டும் நம்பி இருக்கமாட்டார். தலைவரின் பொறுப்புக்களோடு.. எத்தனையோ பேர் தலை காட்டாமல் இருக்கலாம். நமக்கு அவற்றை வெளிக்கொணர வேண்டிய அவசியம் இல்லை.

சிங்களவன் இஸ்ரேல் ரேஞ்சுக்கு போவான் என்றால்.. புலிகளின் புலனாய்வு.. அதை விஞ்சுப் போகும்.

இஸ்ரேல் ஏத்தியனுப்பின ஆயுதங்களையே பறிச்ச புலிக்கு... இவை புலனாய்வு செய்து காட்டினம். என்னே வேடிக்கை மனிதர்களப்பா. செத்த பாம்பை இரும்புக் கேடர் கொண்டு அடிக்கிறது போல இருக்கு.. இந்தச் சாதனை. :D:lol:

புலிகளை எவரும் அசைக்க முடியாது. வாலுகள் வேணும் என்றால் மோதலாம். கேபி இப்போ கோர் அல்ல.. கிறஸ்ட்..!

போரில் இராணுவத் தோல்வி என்பது புலிகளின் அழிவாக சித்தரிக்கப்படலாம். அப்படியே சித்தரிக்கப்படட்டும். ஆனால் எதிரிகளுக்கு தெரியும்.. புலிகள் எப்பவும் நிமிர்வார்கள் என்று.

இன்று கொட்டகேனவிலும்.. பொலிஸ் பதிவாம். வடக்கு கிழக்கிற்குப் போக.. பாஸாம்... வடக்கிலும் கிழக்கிலும் முழத்துக்கு முழம் இராணுவ முகாமாம். ஏனாம் அழிஞ்சு போன புலி ஆவி வந்து போராடும் என்ற பயத்திலோ...! :rolleyes::unsure::o

நீங்கள் எல்லாம் தலைவரைப் பற்றி போட்டு வைச்சிருக்கும் கணக்கு இந்தளவு தான்.

ஆனால் ஒன்று புலி இப்போதைக்கு பதுங்குவதில் இருந்து பாயும் நிலைக்கு திரும்பாது. அதற்கு பின்னால் பல அரசியல் சமூக சர்வதேசக் காரணிகள் இருக்கின்றன.

கேபி என்ன கருணா என்ன.. சங்கரி என்ன நரிகள் ஊளையிடுவதால்.. புலிகள் அஞ்சப் போவதில்லை. புலி வால் பூனைகள்.. பீதியில் கத்தலாம். அதுதான் இங்கு புலம்பெயர் நாடுகளில் நடக்கிறது.

உண்மையான புலிகள்.. மெளனமாகிவிட்டன...! அவர்கள் அப்படியே இருப்பதே சிறந்தது.

Link to comment
Share on other sites

இவன் சிங்களவண்ட.. புளுகு தாங்க முடியல்லடா சாமி.

இவ்வளவு காலமும் இவ்வளவு பெரிய திறமையான.. அதுவும் இஸ்ரேல் ரேஞ்சிலையாமே.. புலனாய்வாளர்களை வைச்சிருந்து என்னத்தை கிழிச்சனீங்கள்.

இப்ப அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தொடக்கி தெற்காசியாவில் அதன் பார்வை மையம் கொண்ட பின்னர் தான் நீங்களும் வீரமா வெளிக்கிட்டனியளோ...!

கே பி ஏற்கனவே அமெரிக்கா இன்ரபோல் என்று எல்லோராலும் கண்காணிக்கப்பட்டவர். அதன் பெயரில் அவர் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டும் விட்டார். கேபியை சர்வதேசத் தொடர்பாளராக இயக்கம் அறிவித்திருந்தாலும் கூட உண்மையில்.. அவருக்கு மட்டும் தானா அந்த பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. அதை எவரும் தெரிஞ்சு கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.. இயக்கத்தைப் பொறுத்தவரை.

நிச்சயம் தலைவர்.. கே பி யை மட்டும் நம்பி இருக்கமாட்டார். தலைவரின் பொறுப்புக்களோடு.. எத்தனையோ பேர் தலை காட்டாமல் இருக்கலாம். நமக்கு அவற்றை வெளிக்கொணர வேண்டிய அவசியம் இல்லை.

சிங்களவன் இஸ்ரேல் ரேஞ்சுக்கு போவான் என்றால்.. புலிகளின் புலனாய்வு.. அதை விஞ்சுப் போகும்.

இஸ்ரேல் ஏத்தியனுப்பின ஆயுதங்களையே பறிச்ச புலிக்கு... இவை புலனாய்வு செய்து காட்டினம். என்னே வேடிக்கை மனிதர்களப்பா. செத்த பாம்பை இரும்புக் கேடர் கொண்டு அடிக்கிறது போல இருக்கு.. இந்தச் சாதனை. :D:lol:

புலிகளை எவரும் அசைக்க முடியாது. வாலுகள் வேணும் என்றால் மோதலாம். கேபி இப்போ கோர் அல்ல.. கிறஸ்ட்..!

போரில் இராணுவத் தோல்வி என்பது புலிகளின் அழிவாக சித்தரிக்கப்படலாம். அப்படியே சித்தரிக்கப்படட்டும். ஆனால் எதிரிகளுக்கு தெரியும்.. புலிகள் எப்பவும் நிமிர்வார்கள் என்று.

இன்று கொட்டகேனவிலும்.. பொலிஸ் பதிவாம். வடக்கு கிழக்கிற்குப் போக.. பாஸாம்... வடக்கிலும் கிழக்கிலும் முழத்துக்கு முழம் இராணுவ முகாமாம். ஏனாம் அழிஞ்சு போன புலி ஆவி வந்து போராடும் என்ற பயத்திலோ...! :rolleyes::unsure::o

நீங்கள் எல்லாம் தலைவரைப் பற்றி போட்டு வைச்சிருக்கும் கணக்கு இந்தளவு தான்.

ஆனால் ஒன்று புலி இப்போதைக்கு பதுங்குவதில் இருந்து பாயும் நிலைக்கு திரும்பாது. அதற்கு பின்னால் பல அரசியல் சமூக சர்வதேசக் காரணிகள் இருக்கின்றன.

கேபி என்ன கருணா என்ன.. சங்கரி என்ன நரிகள் ஊளையிடுவதால்.. புலிகள் அஞ்சப் போவதில்லை. புலி வால் பூனைகள்.. பீதியில் கத்தலாம். அதுதான் இங்கு புலம்பெயர் நாடுகளில் நடக்கிறது.

உண்மையான புலிகள்.. மெளனமாகிவிட்டன...! அவர்கள் அப்படியே இருப்பதே சிறந்தது.

நெடுக்க்ஸ் இதுக்கேல்லம் காரணம் எம்மவர்கள் பெரும்பாலௌம் சர்வ்தேச அரசியலும், புலநாய்வு அமைப்புக்கள் எப்படி எல்லாம் செயெற்படும் என்று

தெரிவதில்லை, சும்மா இலவச பேப்பர்காரனும், இணையத்தில் பிளாக் வைத்திருப்பவர்கலையும், சும்மா புறக்கணிப்பு அரசியல் செய்பவர்க்ளையும், சோனியா தான் தமிழ் பெண்களின் தாலி அறுத்தால் என்ற சென்டிமன்ட் அரசியலையும் பார்ப்பதே எம்மவர்களுக்குத் தெரியும்.

இதை விடக் கேவலம் என்னவென்றால் நாடு நல்லா இருக்காம் ஏனென்றால் யாழ்ப்பாணத்திற்கு நேரா போகலாமாம் பஸ்சில் !!!!!!!!!!!!! இதுக்காகவா இத்தனை இழப்புக்கள், இத்தனை அழிவுகள் பேசாமல் சிங்களவனிடம் போய் 1970இல் எங்களுக்கு யாழ்ப்பாணம் வசதியாகப் போய் வர வேண்டும் ஒரு மோட்டர்வெய் போட்டு விடு என்று கேட்டல் போட்டிருப்பானே. இப்படியான வங்குரொத்து அரசியல் தான் எமக்குத் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நல்லா இருக்காம் ஏனென்றால் யாழ்ப்பாணத்திற்கு நேரா போகலாமாம் பஸ்சில் !!!!!!!!!!!!! இதுக்காகவா இத்தனை இழப்புக்கள், இத்தனை அழிவுகள் பேசாமல் சிங்களவனிடம் போய் 1970இல் எங்களுக்கு யாழ்ப்பாணம் வசதியாகப் போய் வர வேண்டும் ஒரு மோட்டர்வெய் போட்டு விடு என்று கேட்டல் போட்டிருப்பானே. இப்படியான வங்குரொத்து அரசியல் தான் எமக்குத் தெரியும்.

நாடு நன்றாக இருக்கின்றது யாழிலும் கிழக்கிலும், ஏன் வவுனியாவிலும் உள்ளவர்கள்கூட சொல்லுகின்றார்கள். போர் நடந்த வன்னிப் பகுதி மக்களை எல்லோரும் மறந்துவிட்டார்கள். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் அவர்களைத் தமது சொந்த அரசியலுக்காக பாவிக்காமல் இருந்தால் நல்லது.

இந்தமுறை கோடை விடுமுறைக்குப் பலர் போயிருக்கின்றார்கள். நல்லூர் தேர் முடிந்தபின்னர் திரும்பி வருபவர்களைக் கேட்டால் நாடு எப்படி இருக்கின்றது என்று நமக்கும் தெரிந்துவிட்டுப் போகும்தானே.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை விடக் கேவலம் என்னவென்றால் நாடு நல்லா இருக்காம் ஏனென்றால் யாழ்ப்பாணத்திற்கு நேரா போகலாமாம் பஸ்சில் !!!!!!!!!!!!! இதுக்காகவா இத்தனை இழப்புக்கள், இத்தனை அழிவுகள் பேசாமல் சிங்களவனிடம் போய் 1970இல் எங்களுக்கு யாழ்ப்பாணம் வசதியாகப் போய் வர வேண்டும் ஒரு மோட்டர்வெய் போட்டு விடு என்று கேட்டல் போட்டிருப்பானே. இப்படியான வங்குரொத்து அரசியல் தான் எமக்குத் தெரியும்.

இப்படியானவர்களை அதிகம் பதுக்கி வைத்திருக்கும் இடமாக வெளிநாடுகள்.. அதாவது அகதி அந்தஸ்து வழங்கும் நாடுகள் உள்ளன.

1987 - 90 காலப் பகுதியை மீட்டுப் பார்க்கிறேன்.

அதே நிலையில் எம்மவர்கள்.. மாறவே இல்லை. இதுகளுக்காக எனிப் புலிகள் போராட வேண்டுமோ என்றே சிந்திக்கிறேன்.

சொகுசு இன்ரசிற்றி ரெயினும் விட்டாங்கள் என்று வையுங்கோ.. ஐயோ.. என்ன வடிவா சிங்களவனோட இருக்கலாம். யாழ்ப்பாண பசாரில அலி நானாட்ட.. செருப்பு தைக்க கூடியதா இருக்கு. பண்டா ஐயாட்ட சுருட்டு விக்கக் கூடியதா இருக்கு. ஆமத்துறு பிரித் ஓதிறதுதான் எங்களுக்கு விடிய அலாம் என்று சொல்லி புளுகித் திரியுங்கள்.

வெளிநாட்டில கூலிக்கு உழைக்கிறதை அங்க கொண்டு போய் கொஞ்சம் படம் காட்டிக் கொண்டு திரியும்.

இதுதான் இதுகள் எதிர்பார்க்கிற... விடுதலை.

சங்கரி அம்மானுக்கு ஒரு மாகாண சபை. கருணா அம்மானுக்கு ஒரு மாகாண சபை. கேபிக்கு ஒரு ஆளுநர். சம்பந்தனுக்கு எம் பி பதவி.

இதுதான் இவர்களின் அரசியல் தாகம்.

கேடு கெட்ட இந்த நாய்க் கூட்டத்திற்கு இணக்க அரசியல் வேற வேணுமாம் எல்லோ. இவ்வளவு காலமும் என்ன எதிர்ப்பு அரசியலோ செய்யினம். உதே சம்பந்தன்.. சந்திரிக்காவோடு இழுபட்டு தீர்வுப் பொதியோட தொத்தித் திரிந்த போது செய்த அரசில என்னவோ.. நமக்குப் புரியல்லையப்பா. உவர் டக்கிளசார் 1990 இல இருந்து செய்யுறதுக்கு பெயர் என்னவோ எனக்குப் புரியல்லையப்பா. உவன் சங்கரி.. கொழும்பிலையே கிடந்து செய்யுறதுக்கு பெயர் என்னவோ தெரியல்ல. உவன் கருணா சுதந்திரக் கட்சியில இணைந்து செய்யுறதுக்கு பெயர் என்னவா இருக்கும்.. துரையப்பா அரசியலா இருக்குமோ..??! :rolleyes::lol:

இவங்களும் இவங்கட ராஜதந்திரமும். சோனியாவுக்கு முந்தாணை செருகிறதும் கருணாநிதிக்கு கூலிங் கிளாஸ் துடைக்கிறதும் தான் எங்கட ராஜதந்திரம்..! இதைத்தான் அமிர்தலிங்கமும் செய்தான்.. இவங்களும் இதைத்தான் செய்யுறாங்கள். இதுக்குள்ள ஒரு இணக்க அரசியலாம்... அது என்ன புதுப்பெயரோ.. புறக்கணி சிறீலங்கா போல.. சம்பந்தனும்.. துரையப்பா போல... சுதந்திரக் கட்சியில் சேர்ந்த பின்னர்.. இணக்க அரசியல்.. கலப்பு அரசியல் என்று உச்சரிக்கப்படும் போல..!

போற போக்கைப் பார்த்தா.. இன்ரசிற்றி ரெயினில... புலம்பெயர் நாடுகளில இருந்து தமிழீழத்தை கட்டி அமைத்து.. கொழும்புத் துறைமுகத்துக்குள்ளால.. கட்டி இழுத்து காங்கேசந்துறையில கொண்டு போய் வைப்பாங்க போல இருக்குது. அவ்வளவு விரைவா பச்சோந்திகள் நிறமாறிக் கொண்டிருக்கின்றன. :o:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழரது இன்றைய நிலையை எழுதினாலும்

அங்கு போய்வரும் தமிழர்கள் என்ன தான் சொன்னாலும்

உள் மனதில் குத்துவதையும் சொல்லாமல் இல்லை

அது சிங்கள நாடாகிவிட்டது

எங்கும் சிங்களம் எதிலும் சிங்களம்

இதுதான் எமக்கு வேண்டும்

நான் சொன்னால் இவங்களுக்கு வேறு வேலையில்லை என்பவர் கூட தானே வந்து சொல்லும் நிதர்சனம் இது.

தொடரட்டும் அவன்ஆக்கிரமிப்பு

திருந்தட்டும் தமிழர்

இணையட்டும் ஓரணியில்

Link to comment
Share on other sites

பாண்டு அண்ணே..... போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது புலியை திட்டினீர்கள்.

இப்போ..... கே.பி. க்கு பக்க வாத்தியம் வாசிக்கிறீங்கள்.

நீங்கள், எந்த நிகழ்ச்சி நிரலிலை இருக்கிறீர்கள் என்பதை.... சொல்லியா.... தெரிய வேண்டும்.

.

நாங்கள் எஙகை நிக்கிறம் என்பதை விடுத்து நீங்கள் எங்கை நிக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ! 2002 வரை வெற்றிகரமாக நடைபெற்ற போராட்டம் பின்னர் தேல்வுயுற்றதற்கு கே.பியின் வெளியேற்றமும் ஒரு காரணம் என்பதை தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார். உந்த நிகழச்சி நிரல் கதை தான் இப்ப இந்த முடிவை கொண்டு வந்திருக்கு! உண்மைகள் வெளிவருகையில் அதற்கு தக்க பதில் கூறாது அடுத்தவர் மேல் பழி போடுவைத தவிர வேறு என்ன செய்ய முடியும்!

Link to comment
Share on other sites

இவர்களுக்கு புரியாதது என்னவென்றால் இனி என்ன நடக்கப் போகுது என்பது தான்

இனிமேல் எமது தாயகப் பகுதி எல்லம் சிங்கள்வனின் ஆதிக்கத்தில் தான் இருக்கும், தமிழ் மாணவர்களும் சிங்களப் பள்ளிக்கே செல்ல வேண்டி இருக்கும், சிங்களத்திலேயே கல்வியும் கற்க நேரிடும், பின்னர் வேலை வாய்ப்பெல்லாம் சிங்களம் தெரிந்தவனுக்கே தனியார் துறையில் கூட அந்த நிலை தான் இருக்கும் இப்படியே சில காலத்தில் தமிழ் தெரியாத தமிழர்கள் உருவாவார்கள், அப்படியே த்மிழான் இருந்த அடையாலம் இல்லாமல் போகும் ,இது தான் நீர்கொழும்பு பிரதேசத்தில் நடந்தது, அங்கு இருக்கும் பெரும்பாலான தமிழார்கள் இப்போது சிங்களவர் அந்த யதார்த்தம் பல அறிவாளிகளுக்கு தெரியாது.

எல்லோரும் இப்போதே நல்லா உங்கட ஊருக்குப் போய் கொண்டாடுங்கோ ஏன் என்றால் இன்னும் சில காலத்தில் சிங்களவனாக மாறிய தமிழனும் சேர்ந்து நிண்டு பர தெமலோ என்று அடிப்பான்

Link to comment
Share on other sites

இப்படியானவர்களை அதிகம் பதுக்கி வைத்திருக்கும் இடமாக வெளிநாடுகள்.. அதாவது அகதி அந்தஸ்து வழங்கும் நாடுகள் உள்ளன.

. :unsure::rolleyes:

பேசாமால் ஒண்டு செய்யலாம் வெளி நாட்டுக்காரன் ஒர் சட்டம் கொண்டு வரலாம், அகதி அந்தஸ்த்து யாருக்கு வழங்கப்பட்டதோ அவர்கள் எல்லாம் அங்கே சென்றால் அவர்களது குடியுரிமையும் வதிவிட உரிமையும் ரத்துச் செய்யப்படு என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும், அப்ப தான் இவை எல்லாம் திருந்துவீனம்

Link to comment
Share on other sites

KP இன் பேட்டி பின்வரும் இணைப்பில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74119&view=findpost&p=604476

புலத்துப் பூசாரிகள்தான் முள்ளிவாய்க்கால் அவலத்திற்குக் காரணம் என்று சொல்கின்றார். ஆனால் நாம் இப்பவும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்துகொண்டிருக்கின்றோம் என்று நம்புகின்றோம். :unsure:

யாரிட்டை இருந்தாவது இது வரும் எண்டு நினைச்சன் உங்களிட்டை இருந்து வரும் எண்டு எதிர்ப்பார்க்க இல்லை... :lol:

இலங்கை ஒரு ஊடக சுத்ந்திரம் மறுக்க பட்ட நாடு இதை சொல்வது அனேக சிங்கள ஊடகவியளாளர்கள்... தடை போடுவதும் தணிகை செய்வதும் நேரடியாக சிங்கள உளவுப்பிரிவின் கைகளில் இருக்கிறது...

அப்படி இருக்கும் நாட்டில் இருக்கும் உளவுப்பிரிவின் கைகளில் இருக்கும் ஒருவர் பேட்டி எல்லாம் குடுக்கிறார் அதுக்கு தாராளமாக அனுமதி எல்லாம் இருக்கு ... எந்த தடையும் இல்லை...! சிங்கள உளவுப்பிரிவுக்கு உதவுபவர்கள் , சாதகமானவர்களை எல்லாம் தமிழ் மக்களுக்கு KP தோல் உரிச்சு காட்டுகிறார், தமிழ் மக்களை எச்சரிக்கிறார்.. அதை எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் சிங்களம் பிரசுரிக்க அனுமதிக்கிறதாம் ...

இதை நம்புற உங்கள மாதிரி ஆக்கள் இருக்கும் மட்டும் இன்னும் பல கதைகள் KP க்கள் சொல்வார்கள்...

அது சரி உங்களாலை இண்டைக்கு தமிழ் மக்களின் நலனுக்காக சிங்களத்தை சாடும் DBS J க்கு எப்படி KP யை பேட்டி எடுக்கும் அனுமதி கிடைச்சது எண்டதை ஒருக்கா விளங்கப்படுத்துவியளோ...?? அந்த விளையாட்டையும் தெரிஞ்சு கொள்ளுவம்...? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிட்டை இருந்தாவது இது வரும் எண்டு நினைச்சன் உங்களிட்டை இருந்து வரும் எண்டு எதிர்ப்பார்க்க இல்லை... :rolleyes:

>> புலத்துப் பூசாரிகள்தான் முள்ளிவாய்க்கால் அவலத்திற்குக் காரணம் என்று சொல்கின்றார்.

இது கேபியின் கூற்று. அது சரிதான் என்று நான் ஆமோதித்து எழுதவில்லை :unsure:

>> ஆனால் நாம் இப்பவும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்துகொண்டிருக்கின்றோம் என்று நம்புகின்றோம்.

இது என்னுடைய கூற்று. இப்போதும் நல்லது செய்கின்றோம் என்றுதான் நம்பிச் செய்கின்றோம். ஆனால் உறுதிபடச் சொல்லவில்லை!

மற்றது டி.பி.எஸ். எப்படிப் பேட்டி கண்டார் என்பதை புலனாய்வு செய்யவேண்டிய தேவை இல்லை. ஏனெனில் இலங்கையரசின் ஒத்துழைப்பில்லாமல் அவரால் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கமுடியாது. அதைவிட்டுவிட்டு, இந்தப் பேட்டியில் கேபி சொன்ன விடயங்களை நமது சொந்த அறிவை வைத்துப் பகுத்துணரவேண்டும். அதற்காக அவர் சொல்லுவதையெல்லாம் முழுமையாக ஏற்கவும் முடியாது; நிராகரிக்கவும் முடியாது. பேட்டியை வாசிக்கும்போது கடந்த ஆண்டு நடந்த விடயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். சில விடயங்கள் உண்மை போலத்தான் தெரிகின்றன. எனினும் ஆதாரங்கள் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் இருக்கக் கூடும்.

இன்னுமொரு விடயம். கேபி இலங்கைக்கு வந்ததன் பின்னர் (தானாக வந்தாரா அல்லது சிறைபிடிக்கப் பட்டு வந்தாரா என்பதை துப்பறியும் புலிகள் சொல்லட்டும்), அவரை தமிழர்களின் அரசியல் நலன்களுக்கு சுயமாக உதவுவார் என்று நம்புவதில் எந்த அர்த்தமுமில்லை. சிலவேளை கஷ்டப்படும் மக்களுக்கு உதவுக்கூடும், அல்லது புலத்துப் பூசாரிகளை கழுத்தறுக்கக்கூடும். எனினும் அவரை 2009க்கு முன்னரே சிங்கள அரசோடு சேர்ந்து சதி செய்தார் என்று எந்த ஆதாரமுமில்லாமல் என்று நிறுவி தமது தவறுகளை சிலர் மூடிமறைக்க முயற்சிப்பதாக நம்மைப் போன்ற சாதாரண தமிழர்களுக்கு சந்தேகம் உள்ளது!

Link to comment
Share on other sites

.. கேபியார் எத்தனை பேட்டிகளையாவது கொடுக்கட்டும் ... எத்தனை டிபிஎச்ஸுகளும் பேட்டி எடுக்கட்டும் ... இங்கும் வந்து எத்தனை பேரும் அதை ஒட்டி தொடர்பாக எழுதித்தள்ளுங்கோ! ஆனால் ....

... சற்றுமுன் ஓர் மயிலிட்டியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார் .. "... மே18இற்கு முன்னரே கேபி இங்குள்ல பல உறவினர்களோடு தொடர்பு கொண்டு, நான் மலேசியாவில் நிற்கிறேன், இங்கு நீங்கள் வந்தால் சந்திக்கலாம் ..." ... என்றூ அன்பாக வேண்டினாராம்! இந்த அன்புத்தொல்லை மே18இற்கு பின்னம் அதிகரிக்கத் தொடங்கீட்டுதாம்.

இங்கு புலத்தில் முன்னம் புலிக்கு பின்னுக்கு திரிந்த குஞ்சு குறுமனுகள், புலித்தோல் போர்த்த பூசாரிகள் பலருக்கு அன்புத்தொல்லை நாளுக்கு நாள் கேபியிடம் இருந்து வர, பலர் இங்கிருந்து படையெடெத்து மலேசியா போய் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பொழிந்தனர் என்பது வேறு!

சர்வதேச வல்லரசுகள் உட்பட பல நாட்டு உலவுத்துறைகளினால் தேடப்படும் முக்கிய நபர், அதுவும் மே18இற்குப் பின்னம் சர்வதேசத்தால் ஆபத்தான பயங்கரவாத அமைப்பென்று அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை தலைமை ஏற்கப் போகிறவர், மலேசியா தனக்கு பாதுகாப்பான நாடென்றா, இவர்களை எல்லாம் வரவழைத்து கட்டி அணைத்தவர்??????? அதுவும் உறவினர்கள் கூட????? ... இதென்ன சிறுவர்கள் கள்ளன்/பொலிஸ் விளையாடும் விளையாட்டா????????

அந்த மயிலிட்டி நண்பர் சொன்னார் ... " அவர் இலங்கைக்கு போகப்போவதை முன்கூட்டியே தீர்மாணித்து விட்டார். அதுதான் அவரின் செயற்பாடுகள் இவ்வறாக இருந்தது." ... என்றார்.

... தயவுசெய்து பேயர்கள் ஆக வேண்டாம், சிறுவர்களோ/படிப்பறிவற்ற முட்டாள்களோ அல்ல நாம்!!

Link to comment
Share on other sites

இன்னுமொரு விடயம். கேபி இலங்கைக்கு வந்ததன் பின்னர் (தானாக வந்தாரா அல்லது சிறைபிடிக்கப் பட்டு வந்தாரா என்பதை துப்பறியும் புலிகள் சொல்லட்டும்), அவரை தமிழர்களின் அரசியல் நலன்களுக்கு சுயமாக உதவுவார் என்று நம்புவதில் எந்த அர்த்தமுமில்லை. சிலவேளை கஷ்டப்படும் மக்களுக்கு உதவுக்கூடும், அல்லது புலத்துப் பூசாரிகளை கழுத்தறுக்கக்கூடும். எனினும் அவரை 2009க்கு முன்னரே சிங்கள அரசோடு சேர்ந்து சதி செய்தார் என்று எந்த ஆதாரமுமில்லாமல் என்று நிறுவி தமது தவறுகளை சிலர் மூடிமறைக்க முயற்சிப்பதாக நம்மைப் போன்ற சாதாரண தமிழர்களுக்கு சந்தேகம் உள்ளது!

உண்மையில் புலிகள் எண்று இருப்பவர்களுகளை போல வேடம் போட்டு கொண்டு ஐரோப்பா எங்கும் பரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான்...

ஒரு காலத்தில் கொடுப்பனவுகளை வாங்கிக்கொண்டு புலிகளுக்காக வேலை செய்தவர்கள் தாங்கள் தான் புலிகள் எண்று இப்போதும் சொல்லிக்கொள்வதும் , புலிகள் பெயரில் வரும் அறிக்கைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போல காட்டிக்கொள்வதும் இண்று சாதாரணமான விடயம்...! மக்கள் மத்தியில் புலியாக உலாவியவர்களால் இப்ப அந்த ஆடையையும் தோற்றத்தையும் இழந்து நடக்க கூட முடியாமல் இருக்கலாம்...

அவர்களுக்கை பிழை விட்டவர்களும் இருக்கலாம் பிழை விடாதவர்களும் இருக்கலாம்... அவர்களுக்கும் புலிகளுக்கும் இண்று எந்த தொடர்புகளும் இல்லை... தொடர்பை பேணும் நிலையில் புலிகளும் இல்லை... இவர்களின் எதிப்புக்குள் இருந்தார் என்பதுக்காக KP நல்லவரும் இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.. ... தயவுசெய்து பேயர்கள் ஆக வேண்டாம், சிறுவர்களோ/படிப்பறிவற்ற முட்டாள்களோ அல்ல நாம்!!

போன வருடம் இரண்டுமுறை "ஞானம்" பெற்றீர்கள்.

1) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர்

2) கேபி இலங்கைக்குக் போன பின்னர்

இன்னும் பலதடவை "ஞானம்" கிடைக்கலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.