Jump to content

பிரிவு


Recommended Posts

இருக்கும் போது தொலைந்தால் காணும் என நினைத்த எனது மனைவி கப்பலேறி 4 நாட்கள்தான் .நாலு நாளும் டேக் எவெய் சாப்பாடு வேலையால் வந்து ஒரு வொட்காவையோ,விஸ்கியையோ முழுங்கிவிட்டு அதே உடுப்புடன் பேஸ்மென்றுக்குள் போய் நித்திரை.கிடைக்குக் இடைவெளியெல்லாம் யாழும் ,பேஸ்புக்கும் தான்

இன்னமும் 3 கிழமைக்கு கிட்ட கிடக்கு பயமா வேறு கிடக்கு.

கலியாணம் செய்ததிலிருந்து 3 முறை நான் தான் தனியாக 2 தரம் லண்டனுக்கும் 1 முறை வோர்ல்ட் கப் பார்க வெஸ்ட் இன்டீசுக்கும் போனேன்.மனுசி என்னை விட்டு போனது இதுதான் முதல் தரம் நானும்போவம் என என நினைத்த பயணம் எனது வேலையால் நிறைவேறவில்லை.

இவ்வளவிற்கும் சட்டதிட்டமும் ஞாயம் நீதியும் என்று என்னை அலைத்து போடும் ஒரு பிரகிருதி என்ரை மனுசி..அவனவனென்னமோ எல்லாம் செய்கின்றான் உமக்கு எந்த நேரமும் உந்த பாழாய் போன நாட்டுப் பிரச்சனை தான் என்று எந்த நேரமும் சத்தம்.

அங்கை வந்த படியால் தானே உம்மை கண்டனான் என்றால் அதுதான் விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே பிறகு ஏன் அதை பற்றி அக்கறை என்று பொய்யாக ஒரு கோவம்

உங்களில் யாருக்கும் இந்த நிலை வந்ததா? எல்லோருடனும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ...............ரொம்பவும் கவலைப்படுற மாதிரி தெரியுது. இன்னும் மூன்று கிழமை தானே ஓடிடும்.

பிரிவு என்று ஒன்று இருந்தால் தான் உறவின் அருமை தெரியும்.

பிரிவு நிறையவே அனுபவித்திருக்றேன். சொல்லில் அடங்கா வேதனையுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :wub::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் எனது மனைவி ஒரு மரணச்சடங்கில் கலந்து கொள்ள விமானம் ஏற்றி விட்டேன்......

வீட்டிற்கு வந்த பின் தான்.... ஏன் அனுப்பினேன் என்று இருந்தது

எனது வேலை ஒரு பக்கம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய ஆயத்தம் ஒரு பக்கம், வேலையால் வந்து உணவு தயாரிப்பது,

பிள்ளைகளின் உடுப்பு அயர்ன் பண்ணுவது, வீட்டுப் பாடங்களை கவனிப்பது என்று இரண்டு கிழமை ஒய்வில்லாத வேலை.

பிள்ளைகளின் பொருட்கள் சிலவற்றைத்தேடி.... கிடைக்காமால் புதிது வாங்கியதும் உண்டு.

அப்போது தான் நினைத்தேன்.... எங்களுக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும்..... அவர்கள் எங்களை விட அதிக கஷ்டப் படுகின்றார்கள் என்று.

இனி மேல் இப்படியான சந்தர்ப்பங்களில் எங்காவது செல்வதானால், எல்லோரும் செல்வது என்று முடிவெடுத்தேன்.

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :) :)

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=1tvwJd7bWH8&feature=channel

அர்ஜுன் sorry

என்னை தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்

என்னால் உங்கள் கவலையை உணர முடியுது

இது நகைச்சுவைக்காக மட்டும் டேக் இட் ஈஸி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது என்ற நிலை. self - dependant ஆக இருந்து குழந்தைகளையும் கவனித்து வீடு வேலை கவனித்து வாழுற பல தகப்பனார்களைக் கண்டிருக்கிறேன். அப்படியான அப்பாக்களுக்கு இதெல்லாம் பெரிய கஸ்டமாக இருக்காது.

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :wub::)

நான் இதுக்கு கருத்து எழுதவிரும்பல

எவனாவது பொல்லைக்கொடுத்து அடி வாங்குவானா...??? :):o:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரிவென்பது நிரந்தரமானது இல்லையே.

கணவன் மனைவிக்கிடையில் இப்படியான பிரிவுகள் இருப்பது ஒரு புரிந்துணர்விற்கு வழி சமைக்கும்.

இந்தப் பிரிவின் பின்னரான சந்திப்பில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனித் தன்மையானது.

அதையும் அனுபவியுங்கள் அர்ஜுன். :huh:

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவில் தெரியும் அருமை. உங்கள் சமநிலை குழம்பி இருக்கிறது. சகித்து கொள்ளுங்க . இன்னும் இரண்டுவாரம் மட்டும். என்று மனதை அமைதி படுத்துங்கள். நிறைய வாசியுங்க. வெளியில் சென்று ..நேரத்தை கடத்துங்கள். நல்லவற்றை பாருங்க. (சினிமா). தனிமை கொடியது. குடும்பதின் அருமையை அதன் வலிமையை உணரவைக்கும் ஒரு தருணம். படிக்க வேண்டிய பாடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் இந்தப் பிரிவு ஏக்கமாயும், உங்கள் நினைவாக்கவுமே இருக்கும். அத்துடன் சமைத்தாரோ, ஒழுங்காய் சாப்பிட்டாரோ என்ற கவலையும் இருக்கும்!

அதனால் இந்த இடைப் பட்ட காலத்தில் நன்றாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.பொழுதும் போகும், சுவாரசியமாயும் இருக்கும்!! :)

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஒரு பிரிவா? :) இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரிய இல்லையா?? :D

சரி சரி உண்மையில் உங்கள் மனைவியின் மூன்று வாரப் பிரிவு உங்களுக்குப் பாதிப்பாக இருந்தால், அதேயே நினைத்து மெண்டல் ஆகாமல் பிரயோசனமாக ஏதாவது செய்யப் பாருங்கள். (அதுக்காகக் புதுசா ஏதும் களவாணிப் பழக்கங்களை பழகி மூன்று வாரம் கழித்து வரும் மனைவி நேரத்துக்கு வந்து உங்கள் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போடாமல் :lol: )...

உங்கள் மனைவிக்குப் ஏதாவது பிடித்து இருக்கும், இந்த வருடம் அதை செய்ய யோசித்து இருப்பார்... அப்படியானவைக்களை ஞாபகப் படுத்தி செய்து வைக்கலாம்... உங்களுக்கும் நேரம் போனது மாதிரி இருக்கும், அதே நேரம் மனைவியையும் சந்தோஷப் படுத்தியது போல இருக்கும்... உதாரணத்திற்கு பிள்ளைகளின் அறைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த கலரில் அல்லது உங்கள் மனைவிக்கு பிடித்த கலரில் பெயிண்ட் அடிக்கலாம். பூக்கள், பூமரங்களை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள், அதனால் உங்கள் மனைவிக்குப் பிடித்த பூமரங்கள் சிலவற்றை வாங்கி (தோட்டம் இருப்பின் வெளியிலோ/ வரவேற்பறையிலோ) வைக்கலாம். அல்லது புதிதாக ஒரு பாசை படிக்கலாம் அல்லது சுவி குறிப்பிட்டது போல சமையல் கற்றுக் கொள்ளுங்கள் இணையத்தில் தான் இப்போ எல்லா வசதிகளும் இருக்கே... நல்லவைகளை தெரிந்து எடுத்து மூளைக்கு வேலையைக் கொடுங்கள் நேரம் போவது தெரியாது... All the best. :lol:

Link to comment
Share on other sites

குட்டி சொல்வது சரிதான் அதற்கு நெடுக்ஸ் சொன்ன காரணம்தான் தான் உண்மை.

22 வயதில நாட்டைவிட்டு தனிய வெளிக்கிட்டு பின்னர் சுத்தாத இடமெல்லாம் சுத்தி இப்ப அதுவும் சொந்த வீட்டில் அதுவும் ஒரு 25 நாட்கள் தனிய இருக்க கஸ்டமாக இருக்கென்றால் கொஞ்சம் ஓவர்தான்.அந்த ஒரு நிலைக்கு நான் என்னை உருவாக்கிவிட்டேன் போலுள்ளது.எனக்கு அப்பா,அம்மா அதைவிட 6 சகோதரங்கள் இங்கு இருக்கின்றார்கள்.இருந்தும் வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி தெரியும் தானே.

அப்ப ஏன் பிரிவு கொஞ்சம் கஸ்டப் படுத்துகின்றது என்றால் அந்த நிலைக்கு நான் என்னை இப்போ கொண்டுவந்துவிட்டேன் போலுள்ளது.அதனால் தான் உங்களுடனும் இதை நான் பகிரலாம் என எண்ணுகின்றேன்.

1.குடி

2.அரசியல்.

3.கிரிகெட்(இப்ப இல்லை)

லண்டன் வரும்போது எதுவே தெரியாமல் எனது தயவிலே எல்லாவற்றிற்கும் தங்கியிருந்த மனைவி இந்த 20 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எனது குடும்ப வாழ்க்கை பற்றிய சீரியஸ் இல்லாத தன்மையால் தானே ஓரளவிற்கு எல்லாம் செய்ய வெளிக்கிட்டு இப்போ எல்லா அவாதான் என்ற நிலமை ஓரளவு உருவாகிவிட்டது போல் உணருகின்றேன்

இந்த 4,5 நாட்களும் அது முற்றிலும் உண்மை என்று எனக்கு சொல்லுது.

நான் பெரிய குடிகாரனில்லை ஆனால் சந்தர்ப்பம் வரும் போது அதை விட முடியாதவனாக இருக்கின்றேன்.அரசியல் அது பெரு மோசம் எல்லாருடைய கூட்டங்களுக்கும் அதிகமாக போவேன் அதைவிட புத்தக வெளியீட்டு விழா,குறும்படவிழா என்று கனடாவில் விழாவுகளுக்கா பஞ்சமில்லை.எனது குடும்பதை கவனிக்கும் பெரும் பொறுப்பை மனைவி கையில் விட்டு விட்டேன் போலுள்ளது.

மனைவி திரும்பி வர வாழ்க்கையின் பாதையை கொஞ்சம் மாத்துவம் என யோசிக்கின்றேன்.

என்னை போல் யாரும் இருந்தால் அவர்களுக்கும் இது உதவட்டும் என எழுதுகின்றேன்.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

பிடிச்சிருக்கு

Link to comment
Share on other sites

இப்போது கோடை காலம். தோட்ட வேலை செய்வது மனதுக்கு புத்துணர்வை தரும். வீட்டை ஒழுங்கு படுத்தி துப்பரவாக்கினால் நேரம் போவதே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :D:unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..! ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :):unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..!

ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

நெடுக்ஸ் எழுதிய 2 விடயமும் சரிதான்

முதலாவதற்கு என்னிடமும் மருந்து உண்டு

எப்போவாவது வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் மனைவியிடம் கேட்பேன் ஏதாவது உதவி தேவையென்றால் சொல்லுமப்பா

அவர் தேவையில்லை என்பார்

எனது மக்கள் சொல்வார்கள் இது எமது தாய்க்கு ஒரு வருடத்துக்கு காணும் என்று.

மற்றது குசினிக்குள் போவதில்லை

எனக்கு எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம்

எனது மனைவி அதற்கு நேர் எதிர்22 வருடமாக திருத்தமுடியாத ஒரேஓரு விடயம் இதுதான்...

அவரவர் குடும்பவாழ்க்கையும் வீட்டு காரியங்களும் வித்தியாசமானவை

அர்ஜீன் தங்கள் இருவரது வேலைகளையோ அல்லது வேலை நேரங்களையோ எழுதவில்லை

அவரது மனைவி வீட்டில் இருக்கும் ஆகக்கூட இருக்கலாம்

எனவே வெளியிலிருந்து கருத்து சொல்லவது சுலபமல்ல

நான் 7 நாளும்வேலை செய்பவன்

ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்கள் குறைந்தது உழைப்பவன்

நானும் உணர்ந்தேன் ஒருநாள்

ஒரு ஆபரேசன் செய்து வைத்தியசாலையில் படுத்திருந்தேன்

நோவுக்கான மருந்துடன் நித்திரை செய்யவும் மருந்து தந்திருந்தும்

முழுமையான நித்திரை வரவில்லை

நானும்திரும்பித்திரும்பி படுத்துப்பார்த்தேன்

முடியவில்லை

சில மணித்தியாலங்களின்பின் எனது வலது கை வலிப்பதைக்கண்டேன்

அது சிறிய கட்டில் ஆகையால்

நான் எந்தப்பக்கம் திரும்பிப்படுத்திருந்தாலும் மீண்டும் நான் கண் விழிக்கும்நேரம் எனது வலது கை வெளியில் போயிருப்பதையும்

கண்டேன்

ஏன் என்று யோசித்தபோதுதான் தெரிந்தது

அது எனது மனைவி 22 வருடமாக படுக்கும் கை அது.

அதற்கு மேல்தான் அவர் படுப்பார்

அந்த பழக்கத்தில்தான் இப்படி என்று தெரிந்தது.

இடது பக்கம்படுத்தால் தனது மூச்சு எனது நெஞ்சில் படும்

அது எனக்கு ஆகாது என்று வலது பக்கத்தில்தான்படுப்பார்

இதுவும் ஏதாவது சட்டச்சிக்கலுக்க வருகுதா என்று பார்த்துச்சொல்லுங்களப்பா...

ஏனென்றால் அது தொடர்கிறது.

Link to comment
Share on other sites

...

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:unsure:

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நெடுக்ஸ்... வார விடுமுறையில் எனக்கு நேரம் போகாட்டி நான் இப்படித் தான் ஏதாவது ஒரு வேலையைத் தொடங்கி நேரத்தைப் போக்காட்டுவேன் அவ்வளவு தான்... மனம் கொஞ்சம் பாரமாக இருக்கும் நேரங்களில் (காலநிலையும் சாதகமாக இருப்பின்) தோட்டப் பக்கமாக புல்லு வெட்டி, துப்பரவாக்கி நேரத்தை போக்காட்டுவேன்... காலநிலை சாதகமாக இல்லாவிடின் வீடுக்குள் என்னத்தை மாற்றலாம் என்று யோசிப்பேன்... போகன்வில்லா, அந்தூரியம், வாழை, லக்கி பம்பூ உட்பட இன்னும் பலவிதமான மரங்கள் வாங்கி வீடுக்குள்ளும் வைத்து வளர்த்து வருகிறேன்... நேரம் போனது போலவும் இருக்கும், ஏதோ ஓரளவுக்கு பிரயோசனமாக செய்த திருப்த்தியும் இருக்கும்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :unsure: வாழத்தெரிந்த மனிதர்.

Link to comment
Share on other sites

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

Link to comment
Share on other sites

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :) வாழத்தெரிந்த மனிதர்.

நன்றி நிலாமதி அக்கா, இருப்பினும் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றது போல ஒன்றைத் தெரிந்து எடுத்து நேரத்தை பிரயோசனப் படுத்துகிறார்கள், யாழுக்கு வந்து ஆக்க பூர்வமான எழுத்துகளை, இணைப்புகளை எல்லாம் கள உறவுகளால் முன்வைக்கப் படுகிறது. அதுவும் நேரத்தைப் பிரயோசனப் படுத்தும் ஒரு முறை தானே? இங்கே எழுதிய பல உறவுகளுக்கும் இந்த பாராடுக்கள் போய்ச் சேரும், அது தான் நியாயமானது... :unsure:

Link to comment
Share on other sites

... பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) ...

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

இது டூ... டூ... டூ... டூ... மச் :D:) இப்படி இருந்தால் மிஸ் பண்ணாமல் எப்பிடி இருப்பீங்கள்? :D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

kumarasamyy-3.gif

அப்புறம் சொல்லுங்கோ

:unsure:

Link to comment
Share on other sites

படம் கொஞ்சம் சென்டிமென்டாகத்தான் ஆகிவிட்டது நாங்கள் சிறீதர்,பாலசந்தர் காலத்து ஆட்கள்தானே.

சங்கர்,கவுதம் மேனன் காலத்து நண்பர்கள் மன்னிக்கவும்.கலரில படங் காட்ட கஸ்டமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

அர்ஜுன் நன்றாக எழுதுகிறீர்கள். கிட்டத்தட்ட உங்களை ஒரு குழந்தை மாதிரிதான் பராமரித்துள்ளார். கூடுதலாக கடைச் சாப்பாடு என்றால் உடம்புக்கு நல்லதில்லையே. சில வேலை கனடா கடைச் சாப்பாடு நல்லமோ தெரியாது. ஜிம்முக்கு போவதில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.