Jump to content

பிரிவு


Recommended Posts

இருக்கும் போது தொலைந்தால் காணும் என நினைத்த எனது மனைவி கப்பலேறி 4 நாட்கள்தான் .நாலு நாளும் டேக் எவெய் சாப்பாடு வேலையால் வந்து ஒரு வொட்காவையோ,விஸ்கியையோ முழுங்கிவிட்டு அதே உடுப்புடன் பேஸ்மென்றுக்குள் போய் நித்திரை.கிடைக்குக் இடைவெளியெல்லாம் யாழும் ,பேஸ்புக்கும் தான்

இன்னமும் 3 கிழமைக்கு கிட்ட கிடக்கு பயமா வேறு கிடக்கு.

கலியாணம் செய்ததிலிருந்து 3 முறை நான் தான் தனியாக 2 தரம் லண்டனுக்கும் 1 முறை வோர்ல்ட் கப் பார்க வெஸ்ட் இன்டீசுக்கும் போனேன்.மனுசி என்னை விட்டு போனது இதுதான் முதல் தரம் நானும்போவம் என என நினைத்த பயணம் எனது வேலையால் நிறைவேறவில்லை.

இவ்வளவிற்கும் சட்டதிட்டமும் ஞாயம் நீதியும் என்று என்னை அலைத்து போடும் ஒரு பிரகிருதி என்ரை மனுசி..அவனவனென்னமோ எல்லாம் செய்கின்றான் உமக்கு எந்த நேரமும் உந்த பாழாய் போன நாட்டுப் பிரச்சனை தான் என்று எந்த நேரமும் சத்தம்.

அங்கை வந்த படியால் தானே உம்மை கண்டனான் என்றால் அதுதான் விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே பிறகு ஏன் அதை பற்றி அக்கறை என்று பொய்யாக ஒரு கோவம்

உங்களில் யாருக்கும் இந்த நிலை வந்ததா? எல்லோருடனும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ...............ரொம்பவும் கவலைப்படுற மாதிரி தெரியுது. இன்னும் மூன்று கிழமை தானே ஓடிடும்.

பிரிவு என்று ஒன்று இருந்தால் தான் உறவின் அருமை தெரியும்.

பிரிவு நிறையவே அனுபவித்திருக்றேன். சொல்லில் அடங்கா வேதனையுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :wub::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் எனது மனைவி ஒரு மரணச்சடங்கில் கலந்து கொள்ள விமானம் ஏற்றி விட்டேன்......

வீட்டிற்கு வந்த பின் தான்.... ஏன் அனுப்பினேன் என்று இருந்தது

எனது வேலை ஒரு பக்கம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய ஆயத்தம் ஒரு பக்கம், வேலையால் வந்து உணவு தயாரிப்பது,

பிள்ளைகளின் உடுப்பு அயர்ன் பண்ணுவது, வீட்டுப் பாடங்களை கவனிப்பது என்று இரண்டு கிழமை ஒய்வில்லாத வேலை.

பிள்ளைகளின் பொருட்கள் சிலவற்றைத்தேடி.... கிடைக்காமால் புதிது வாங்கியதும் உண்டு.

அப்போது தான் நினைத்தேன்.... எங்களுக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும்..... அவர்கள் எங்களை விட அதிக கஷ்டப் படுகின்றார்கள் என்று.

இனி மேல் இப்படியான சந்தர்ப்பங்களில் எங்காவது செல்வதானால், எல்லோரும் செல்வது என்று முடிவெடுத்தேன்.

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :) :)

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=1tvwJd7bWH8&feature=channel

அர்ஜுன் sorry

என்னை தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்

என்னால் உங்கள் கவலையை உணர முடியுது

இது நகைச்சுவைக்காக மட்டும் டேக் இட் ஈஸி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது என்ற நிலை. self - dependant ஆக இருந்து குழந்தைகளையும் கவனித்து வீடு வேலை கவனித்து வாழுற பல தகப்பனார்களைக் கண்டிருக்கிறேன். அப்படியான அப்பாக்களுக்கு இதெல்லாம் பெரிய கஸ்டமாக இருக்காது.

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :wub::)

நான் இதுக்கு கருத்து எழுதவிரும்பல

எவனாவது பொல்லைக்கொடுத்து அடி வாங்குவானா...??? :):o:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரிவென்பது நிரந்தரமானது இல்லையே.

கணவன் மனைவிக்கிடையில் இப்படியான பிரிவுகள் இருப்பது ஒரு புரிந்துணர்விற்கு வழி சமைக்கும்.

இந்தப் பிரிவின் பின்னரான சந்திப்பில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனித் தன்மையானது.

அதையும் அனுபவியுங்கள் அர்ஜுன். :huh:

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவில் தெரியும் அருமை. உங்கள் சமநிலை குழம்பி இருக்கிறது. சகித்து கொள்ளுங்க . இன்னும் இரண்டுவாரம் மட்டும். என்று மனதை அமைதி படுத்துங்கள். நிறைய வாசியுங்க. வெளியில் சென்று ..நேரத்தை கடத்துங்கள். நல்லவற்றை பாருங்க. (சினிமா). தனிமை கொடியது. குடும்பதின் அருமையை அதன் வலிமையை உணரவைக்கும் ஒரு தருணம். படிக்க வேண்டிய பாடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் இந்தப் பிரிவு ஏக்கமாயும், உங்கள் நினைவாக்கவுமே இருக்கும். அத்துடன் சமைத்தாரோ, ஒழுங்காய் சாப்பிட்டாரோ என்ற கவலையும் இருக்கும்!

அதனால் இந்த இடைப் பட்ட காலத்தில் நன்றாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.பொழுதும் போகும், சுவாரசியமாயும் இருக்கும்!! :)

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஒரு பிரிவா? :) இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரிய இல்லையா?? :D

சரி சரி உண்மையில் உங்கள் மனைவியின் மூன்று வாரப் பிரிவு உங்களுக்குப் பாதிப்பாக இருந்தால், அதேயே நினைத்து மெண்டல் ஆகாமல் பிரயோசனமாக ஏதாவது செய்யப் பாருங்கள். (அதுக்காகக் புதுசா ஏதும் களவாணிப் பழக்கங்களை பழகி மூன்று வாரம் கழித்து வரும் மனைவி நேரத்துக்கு வந்து உங்கள் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போடாமல் :lol: )...

உங்கள் மனைவிக்குப் ஏதாவது பிடித்து இருக்கும், இந்த வருடம் அதை செய்ய யோசித்து இருப்பார்... அப்படியானவைக்களை ஞாபகப் படுத்தி செய்து வைக்கலாம்... உங்களுக்கும் நேரம் போனது மாதிரி இருக்கும், அதே நேரம் மனைவியையும் சந்தோஷப் படுத்தியது போல இருக்கும்... உதாரணத்திற்கு பிள்ளைகளின் அறைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த கலரில் அல்லது உங்கள் மனைவிக்கு பிடித்த கலரில் பெயிண்ட் அடிக்கலாம். பூக்கள், பூமரங்களை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள், அதனால் உங்கள் மனைவிக்குப் பிடித்த பூமரங்கள் சிலவற்றை வாங்கி (தோட்டம் இருப்பின் வெளியிலோ/ வரவேற்பறையிலோ) வைக்கலாம். அல்லது புதிதாக ஒரு பாசை படிக்கலாம் அல்லது சுவி குறிப்பிட்டது போல சமையல் கற்றுக் கொள்ளுங்கள் இணையத்தில் தான் இப்போ எல்லா வசதிகளும் இருக்கே... நல்லவைகளை தெரிந்து எடுத்து மூளைக்கு வேலையைக் கொடுங்கள் நேரம் போவது தெரியாது... All the best. :lol:

Link to comment
Share on other sites

குட்டி சொல்வது சரிதான் அதற்கு நெடுக்ஸ் சொன்ன காரணம்தான் தான் உண்மை.

22 வயதில நாட்டைவிட்டு தனிய வெளிக்கிட்டு பின்னர் சுத்தாத இடமெல்லாம் சுத்தி இப்ப அதுவும் சொந்த வீட்டில் அதுவும் ஒரு 25 நாட்கள் தனிய இருக்க கஸ்டமாக இருக்கென்றால் கொஞ்சம் ஓவர்தான்.அந்த ஒரு நிலைக்கு நான் என்னை உருவாக்கிவிட்டேன் போலுள்ளது.எனக்கு அப்பா,அம்மா அதைவிட 6 சகோதரங்கள் இங்கு இருக்கின்றார்கள்.இருந்தும் வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி தெரியும் தானே.

அப்ப ஏன் பிரிவு கொஞ்சம் கஸ்டப் படுத்துகின்றது என்றால் அந்த நிலைக்கு நான் என்னை இப்போ கொண்டுவந்துவிட்டேன் போலுள்ளது.அதனால் தான் உங்களுடனும் இதை நான் பகிரலாம் என எண்ணுகின்றேன்.

1.குடி

2.அரசியல்.

3.கிரிகெட்(இப்ப இல்லை)

லண்டன் வரும்போது எதுவே தெரியாமல் எனது தயவிலே எல்லாவற்றிற்கும் தங்கியிருந்த மனைவி இந்த 20 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எனது குடும்ப வாழ்க்கை பற்றிய சீரியஸ் இல்லாத தன்மையால் தானே ஓரளவிற்கு எல்லாம் செய்ய வெளிக்கிட்டு இப்போ எல்லா அவாதான் என்ற நிலமை ஓரளவு உருவாகிவிட்டது போல் உணருகின்றேன்

இந்த 4,5 நாட்களும் அது முற்றிலும் உண்மை என்று எனக்கு சொல்லுது.

நான் பெரிய குடிகாரனில்லை ஆனால் சந்தர்ப்பம் வரும் போது அதை விட முடியாதவனாக இருக்கின்றேன்.அரசியல் அது பெரு மோசம் எல்லாருடைய கூட்டங்களுக்கும் அதிகமாக போவேன் அதைவிட புத்தக வெளியீட்டு விழா,குறும்படவிழா என்று கனடாவில் விழாவுகளுக்கா பஞ்சமில்லை.எனது குடும்பதை கவனிக்கும் பெரும் பொறுப்பை மனைவி கையில் விட்டு விட்டேன் போலுள்ளது.

மனைவி திரும்பி வர வாழ்க்கையின் பாதையை கொஞ்சம் மாத்துவம் என யோசிக்கின்றேன்.

என்னை போல் யாரும் இருந்தால் அவர்களுக்கும் இது உதவட்டும் என எழுதுகின்றேன்.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

பிடிச்சிருக்கு

Link to comment
Share on other sites

இப்போது கோடை காலம். தோட்ட வேலை செய்வது மனதுக்கு புத்துணர்வை தரும். வீட்டை ஒழுங்கு படுத்தி துப்பரவாக்கினால் நேரம் போவதே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :D:unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..! ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :):unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..!

ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

நெடுக்ஸ் எழுதிய 2 விடயமும் சரிதான்

முதலாவதற்கு என்னிடமும் மருந்து உண்டு

எப்போவாவது வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் மனைவியிடம் கேட்பேன் ஏதாவது உதவி தேவையென்றால் சொல்லுமப்பா

அவர் தேவையில்லை என்பார்

எனது மக்கள் சொல்வார்கள் இது எமது தாய்க்கு ஒரு வருடத்துக்கு காணும் என்று.

மற்றது குசினிக்குள் போவதில்லை

எனக்கு எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம்

எனது மனைவி அதற்கு நேர் எதிர்22 வருடமாக திருத்தமுடியாத ஒரேஓரு விடயம் இதுதான்...

அவரவர் குடும்பவாழ்க்கையும் வீட்டு காரியங்களும் வித்தியாசமானவை

அர்ஜீன் தங்கள் இருவரது வேலைகளையோ அல்லது வேலை நேரங்களையோ எழுதவில்லை

அவரது மனைவி வீட்டில் இருக்கும் ஆகக்கூட இருக்கலாம்

எனவே வெளியிலிருந்து கருத்து சொல்லவது சுலபமல்ல

நான் 7 நாளும்வேலை செய்பவன்

ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்கள் குறைந்தது உழைப்பவன்

நானும் உணர்ந்தேன் ஒருநாள்

ஒரு ஆபரேசன் செய்து வைத்தியசாலையில் படுத்திருந்தேன்

நோவுக்கான மருந்துடன் நித்திரை செய்யவும் மருந்து தந்திருந்தும்

முழுமையான நித்திரை வரவில்லை

நானும்திரும்பித்திரும்பி படுத்துப்பார்த்தேன்

முடியவில்லை

சில மணித்தியாலங்களின்பின் எனது வலது கை வலிப்பதைக்கண்டேன்

அது சிறிய கட்டில் ஆகையால்

நான் எந்தப்பக்கம் திரும்பிப்படுத்திருந்தாலும் மீண்டும் நான் கண் விழிக்கும்நேரம் எனது வலது கை வெளியில் போயிருப்பதையும்

கண்டேன்

ஏன் என்று யோசித்தபோதுதான் தெரிந்தது

அது எனது மனைவி 22 வருடமாக படுக்கும் கை அது.

அதற்கு மேல்தான் அவர் படுப்பார்

அந்த பழக்கத்தில்தான் இப்படி என்று தெரிந்தது.

இடது பக்கம்படுத்தால் தனது மூச்சு எனது நெஞ்சில் படும்

அது எனக்கு ஆகாது என்று வலது பக்கத்தில்தான்படுப்பார்

இதுவும் ஏதாவது சட்டச்சிக்கலுக்க வருகுதா என்று பார்த்துச்சொல்லுங்களப்பா...

ஏனென்றால் அது தொடர்கிறது.

Link to comment
Share on other sites

...

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:unsure:

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நெடுக்ஸ்... வார விடுமுறையில் எனக்கு நேரம் போகாட்டி நான் இப்படித் தான் ஏதாவது ஒரு வேலையைத் தொடங்கி நேரத்தைப் போக்காட்டுவேன் அவ்வளவு தான்... மனம் கொஞ்சம் பாரமாக இருக்கும் நேரங்களில் (காலநிலையும் சாதகமாக இருப்பின்) தோட்டப் பக்கமாக புல்லு வெட்டி, துப்பரவாக்கி நேரத்தை போக்காட்டுவேன்... காலநிலை சாதகமாக இல்லாவிடின் வீடுக்குள் என்னத்தை மாற்றலாம் என்று யோசிப்பேன்... போகன்வில்லா, அந்தூரியம், வாழை, லக்கி பம்பூ உட்பட இன்னும் பலவிதமான மரங்கள் வாங்கி வீடுக்குள்ளும் வைத்து வளர்த்து வருகிறேன்... நேரம் போனது போலவும் இருக்கும், ஏதோ ஓரளவுக்கு பிரயோசனமாக செய்த திருப்த்தியும் இருக்கும்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :unsure: வாழத்தெரிந்த மனிதர்.

Link to comment
Share on other sites

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

Link to comment
Share on other sites

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :) வாழத்தெரிந்த மனிதர்.

நன்றி நிலாமதி அக்கா, இருப்பினும் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றது போல ஒன்றைத் தெரிந்து எடுத்து நேரத்தை பிரயோசனப் படுத்துகிறார்கள், யாழுக்கு வந்து ஆக்க பூர்வமான எழுத்துகளை, இணைப்புகளை எல்லாம் கள உறவுகளால் முன்வைக்கப் படுகிறது. அதுவும் நேரத்தைப் பிரயோசனப் படுத்தும் ஒரு முறை தானே? இங்கே எழுதிய பல உறவுகளுக்கும் இந்த பாராடுக்கள் போய்ச் சேரும், அது தான் நியாயமானது... :unsure:

Link to comment
Share on other sites

... பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) ...

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

இது டூ... டூ... டூ... டூ... மச் :D:) இப்படி இருந்தால் மிஸ் பண்ணாமல் எப்பிடி இருப்பீங்கள்? :D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

kumarasamyy-3.gif

அப்புறம் சொல்லுங்கோ

:unsure:

Link to comment
Share on other sites

படம் கொஞ்சம் சென்டிமென்டாகத்தான் ஆகிவிட்டது நாங்கள் சிறீதர்,பாலசந்தர் காலத்து ஆட்கள்தானே.

சங்கர்,கவுதம் மேனன் காலத்து நண்பர்கள் மன்னிக்கவும்.கலரில படங் காட்ட கஸ்டமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

அர்ஜுன் நன்றாக எழுதுகிறீர்கள். கிட்டத்தட்ட உங்களை ஒரு குழந்தை மாதிரிதான் பராமரித்துள்ளார். கூடுதலாக கடைச் சாப்பாடு என்றால் உடம்புக்கு நல்லதில்லையே. சில வேலை கனடா கடைச் சாப்பாடு நல்லமோ தெரியாது. ஜிம்முக்கு போவதில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.