Jump to content

பிரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் நீங்கள் திருமணம் செய்து கிட்டதட்ட 20 ஆண்டுகளூக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்...இன்னும் உங்களூக்கு உங்கள் மனைவி தேவையாய் இருக்கிறா என நினைக்கும் போது வியப்பாய் இருக்கிறது...ஆனாலும் சந்தோசமாய் இருக்கிறது.

நன்றி நிலாமதி அக்கா, இருப்பினும் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றது போல ஒன்றைத் தெரிந்து எடுத்து நேரத்தை பிரயோசனப் படுத்துகிறார்கள், யாழுக்கு வந்து ஆக்க பூர்வமான எழுத்துகளை, இணைப்புகளை எல்லாம் கள உறவுகளால் முன்வைக்கப் படுகிறது. அதுவும் நேரத்தைப் பிரயோசனப் படுத்தும் ஒரு முறை தானே? இங்கே எழுதிய பல உறவுகளுக்கும் இந்த பாராடுக்கள் போய்ச் சேரும், அது தான் நியாயமானது... :o

எனக்கு குட்டி பெண் குட்டியாய் இருப்பாரோ என சந்தேகம்

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி.

நல்ல விடயமென்றபடியால் இன்னொன்றயும் உங்களுக்கு எழுதுகின்றேன்.எனது வீட்டில் சொfற் டிரிங் வாங்குவதே இல்லையெனலாம்.பிட்சா,கென்ரக்கி ஏது சாப்பிடால் ஒழிய நாங்கள் குடிப்பது தண்ணீரும் கோம்மேட் யூஸும் தான்.மனுசி ஒவ்வொரு ஞயிற்றுக்கிழமையும் எதை மறக்கின்றாரோ யூஸ் செய்வதை மறப்பதில்லை.மூன்று விதமான யூஸ்செய்வா

1.மரக்கறி யூஸ்.- கரட்,செலறி,கொஞ்ச பீற்றூட்,தக்காளி

2.பழ யூஸ் - அப்பிள்,பியர்ஸ்,கிவி,முந்திரிகை

3.பழ யூஸ்- தோடம் பழம்,அன்னாசி பழம் .

யூஸ்மெசினில் இவைகளை போட்டு அடிக்க சக்கை ஒருபக்கமாகவும்,யூஸ் ஒரு பக்கமாகவும் வெளிவரும் யூஸை பின்னர் சிறிய போத்தல்களில் விட்டு(ஸ்டார் பக்ஸ் போத்தில்) பிரீசரில் தள்ளிவிடுவா.காலையில் எழுந்து கொஞ்சத்தை எடுத்து வெளியில் வைத்தால் விரும்பிய நேரம் குடிக்கலாம்.மரக்கறி யூஸ் குடிக்கும் போது கசந்தால் கொஞ்சம் உப்பும்,மிளகு தூளும் சேர்க்காலாம் . செய்வது கஸ்டமில்லை எல்லாத்தையும் கழுவி அடுக்குவதுதான் கஸ்டம் என்பா.

நன்றி..................மிகவும் ஆரோக்கியமான் விடயம்.

Link to comment
Share on other sites

...

எனக்கு குட்டி பெண் குட்டியாய் இருப்பாரோ என சந்தேகம்

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆண்மையும், பெண்மையும் கலந்தே இருக்கிறது... அதனால், நீங்கள் பெண் குட்டியாக நினைப்பதும் ஆண் குட்டியாக நினைப்பதும் இல்லை ஆட்டுக் குட்டியாக நினைப்பதும் உங்கள் சுதந்திரம் ரதி... :lol:

நான் பொதுவாகத் யாழில் எழுதும் கருத்துக்களைத் தான் சொன்னேன், இந்தத் திரியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் அர்ஜுன் தனது நேரத்தை யாழில் பயன்படுத்தியதால் தானே அதற்குப் பதில் எழுத மற்றைய உறவுகளுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து அவர்கள் தமது நேரத்தை இங்கே பயன்படுத்தி உள்ளார்கள்... பத்துப் பேர் கருத்து எழுதியிருக்கும் இடத்தில் தனி ஒருவருக்கு மட்டும் வாழ்த்துத் தெரிவிப்பது நல்லதாகவா இருக்கு? :o அதனால் தான் எல்லோருக்கும் அந்த வாழ்த்துக்கள் போய்ச் சேரும் என்று குறிப்பிட்டு இருந்தேன். நேரம் மினக்கடுபவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு கொடுப்பது நல்லது தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆண்மையும், பெண்மையும் கலந்தே இருக்கிறது...

குட்டி நீங்கள் எங்கேயொ போயிட்டீங்க!

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆண்மையும், பெண்மையும் கலந்தே இருக்கிறது... அதனால், நீங்கள் பெண் குட்டியாக நினைப்பதும் ஆண் குட்டியாக நினைப்பதும் இல்லை ஆட்டுக் குட்டியாக நினைப்பதும் உங்கள் சுதந்திரம் ரதி... :lol:

நான் பொதுவாகத் யாழில் எழுதும் கருத்துக்களைத் தான் சொன்னேன், இந்தத் திரியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் அர்ஜுன் தனது நேரத்தை யாழில் பயன்படுத்தியதால் தானே அதற்குப் பதில் எழுத மற்றைய உறவுகளுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து அவர்கள் தமது நேரத்தை இங்கே பயன்படுத்தி உள்ளார்கள்... பத்துப் பேர் கருத்து எழுதியிருக்கும் இடத்தில் தனி ஒருவருக்கு மட்டும் வாழ்த்துத் தெரிவிப்பது நல்லதாகவா இருக்கு? :lol: அதனால் தான் எல்லோருக்கும் அந்த வாழ்த்துக்கள் போய்ச் சேரும் என்று குறிப்பிட்டு இருந்தேன். நேரம் மினக்கடுபவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு கொடுப்பது நல்லது தானே??

மன்னிக்கவும் குட்டி நான் நீங்கள் எழுதிய அக் கருத்தை மட்டும் வைத்து நீங்கள் பெண் என தீர்மானிக்கவில்லை...பொதுவான உங்கள் எழுத்தை வைத்தே நான் நீங்கள் பெண்ணாக இருப்பீர்கள் என நினைத்திருந்தேன் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் குட்டி நான் நீங்கள் எழுதிய அக் கருத்தை மட்டும் வைத்து நீங்கள் பெண் என தீர்மானிக்கவில்லை...பொதுவான உங்கள் எழுத்தை வைத்தே நான் நீங்கள் பெண்ணாக இருப்பீர்கள் என நினைத்திருந்தேன் மன்னிக்கவும்.

எப்படி நெடுக்கும், இளைய பிள்ளையும் ஒருவராக இருக்கலாம் என்ற மாதிரியா? :lol:

சமூகச் சாளரம் பகுதியில் வாழ்கையின் அடிப்படையில் சில யதார்த்தமான கருத்துக்கள் எழுதி இருக்கிறேன். ஒரு சில நேரம் வீட்டில், வேற்று இன நண்பர்களுடன் இங்கே பதியப் படும் தலைப்புகளை மேலோட்டமாக விவாதிப்பேன், அவர்கள் சமூகத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவேன். சிலநேரங்களில் எனது கருத்தை என்னைச் சார்ந்தவர்களே ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவதனால் என்ன பிரியோசனம்?

சிந்திப்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்... உங்களுக்கு ஏற்றது போல நீங்கள் நினைத்தீர்கள். மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை ரதி. :lol:

Link to comment
Share on other sites

ஏன் குட்டி.. உங்களைப் பெண் எண்டு சொன்னால் அப்பிடியே ஆமாஞ்சாமி போட்டுட்டிட்டு தனிமடல் போட்டு பிக்கப் பண்ணிட்டுப் போய்ட்டே இருக்கவேண்டியதுதானே..! ஏன் இப்பிடி அடம்பிடிக்கிறீங்கள்? :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்கட இசை இதைத்தானே செய்கிறார்

ஆண்களுக்கு.....??? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

இப்ப எங்கட இசை இதைத்தானே செய்கிறார்

ஆண்களுக்கு.....??? :lol::lol::lol:

ஆண்களுக்கா??? :lol: வாள்ச்சண்டைக்கும் எனக்கும் வெகுதூரம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்டது நீங்கள் பெண்

ஆண் பெயரில் வந்துள்ளீர்கள் என்று.

தொடர வேண்டாம்

திரி நாறிவிடும்

Link to comment
Share on other sites

நான் குறிப்பிட்டது நீங்கள் பெண்

ஆண் பெயரில் வந்துள்ளீர்கள் என்று.

தொடர வேண்டாம்

திரி நாறிவிடும்

ஓ.. சரி.. சரி.. நாற்றத்தை நிறுத்துவோம்..!! :lol::lol:

Link to comment
Share on other sites

ஏன் குட்டி.. உங்களைப் பெண் எண்டு சொன்னால் அப்பிடியே ஆமாஞ்சாமி போட்டுட்டிட்டு தனிமடல் போட்டு பிக்கப் பண்ணிட்டுப் போய்ட்டே இருக்கவேண்டியதுதானே..! ஏன் இப்பிடி அடம்பிடிக்கிறீங்கள்? :lol: :lol: :lol:

சொந்தச் செலவில் சூனியம் வைப்பது என்பது போய் இது என்ன செலவில்லாமல் சூனியம் வைக்கிற கதையா இருக்கு... :D:lol:

ஏன் இசைக்கலைஞன், நானொன்று என்ர சோலி உண்டென இருக்கிறது பிடிக்க இலையா? :lol: யாழில லூட்டி அடிக்கிறேன் என்று தெரிஞ்சுது அவ்வளவு தான்... தாட்டுப் போட்டு மிரிக்கிறதுக்கு ஐஞ்சு நிமிசத்தில ஆள் நிக்கும்.... :D:lol: என் வழி தனி வழி ^_^:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தச் செலவில் சூனியம் வைப்பது என்பது போய் இது என்ன செலவில்லாமல் சூனியம் வைக்கிற கதையா இருக்கு... ^_^:lol:

ஏன் இசைக்கலைஞன், நானொன்று என்ர சோலி உண்டென இருக்கிறது பிடிக்க இலையா? :lol: யாழில லூட்டி அடிக்கிறேன் என்று தெரிஞ்சுது அவ்வளவு தான்... தாட்டுப் போட்டு மிரிக்கிறதுக்கு ஐஞ்சு நிமிசத்தில ஆள் நிக்கும்.... :D:lol: என் வழி தனி வழி :lol::lol:

என்ன..... எங்கடை குட்டி.... சரியாய் பயப்பிடுறார்(ள்), 84.gif

நாங்க, மிதிக்கிற ஆட்களை நாங்கள் கவனிக்கிறம் குட்டி. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தச் செலவில் சூனியம் வைப்பது என்பது போய் இது என்ன செலவில்லாமல் சூனியம் வைக்கிற கதையா இருக்கு... :D:lol:

ஏன் இசைக்கலைஞன், நானொன்று என்ர சோலி உண்டென இருக்கிறது பிடிக்க இலையா? :lol: யாழில லூட்டி அடிக்கிறேன் என்று தெரிஞ்சுது அவ்வளவு தான்... தாட்டுப் போட்டு மிரிக்கிறதுக்கு ஐஞ்சு நிமிசத்தில ஆள் நிக்கும்.... :D:lol: என் வழி தனி வழி :lol::lol:

அய்யய்யோ தாட்டுப் போட்டு தரவும் உங்கள் வீட்டில் வேறு ஆண்கள் இருக்கீனமா? :lol:^_^

Link to comment
Share on other sites

என்ன..... எங்கடை குட்டி.... சரியாய் பயப்பிடுறார்(ள்), 84.gif

நாங்க, மிதிக்கிற ஆட்களை நாங்கள் கவனிக்கிறம் குட்டி. :D:unsure:

சிறி அண்ணா என்னை வைச்சு காமடி கிமடி ஒன்றும் பண்ண இல்லையே???? :lol:

அய்யய்யோ தாட்டுப் போட்டு தரவும் உங்கள் வீட்டில் வேறு ஆண்கள் இருக்கீனமா? :o:D

'ஆள்' என்று தானே குறிப்பிட்டு இருந்தேன்... ஆண்கள் என்று இங்கே குறிப்பிட்டேனா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா என்னை வைச்சு காமடி கிமடி ஒன்றும் பண்ண இல்லையே???? :rolleyes:

----

குட்டி, உங்களைப் பற்றி தெரியும் தானே..... :o

ரதி கேட்டவுடன்... உண்மையாய் எனக்கும் சந்தேகமாய் இருக்குது. :lol:

(இதனை தான் சொல்வது கடுப்பேற்றுவது) :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா ? எங்க குட்டிக்கு கடுப்பேத்துவது? அந்த ஆள் தானும் தன் பாடும் என்று

பதிவு போட்டுக்கொண் டு இருப்பவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா ? எங்க குட்டிக்கு கடுப்பேத்துவது? அந்த ஆள் தானும் தன் பாடும் என்று

பதிவு போட்டுக்கொண் டு இருப்பவர்

சும்மா... பகிடிக்குத்தானே.... நிலா அக்கா.

எனக்கு வேறை ஆர் இருக்கினம் , கடுப்பேத்த..... ஒன்லி குட்டி தான்.... :unsure::rolleyes:

.

Link to comment
Share on other sites

பொய்யா மெய்யா எதை எழுதுவதென்றே தெரியவில்லை.2 கிழமைகள் ஆகிவிட்டது யாழில் பல நண்பர்களின் புத்திமதியடன் சிற்றிங் ரூமிற்கு காட்வூட்டும் அடித்து பெயின்ரையும் மாத்திவிட்டேன்.தோட்டத்தில் இருக்கும் முந்திரிகை பந்தலுக்கு புது மரமும் போட்டுவிட்டேன்.முடிந்த அளவுக்கு மாற்றங்கள்செய்துகொண்டுதானிருக்கின்றேன்

இருந்தும் என்னால் மனைவியின் பிரிவை ஒரு கணமும் தாங்க முடியவில்லை என்னில் ஏதும் பிழையா அல்லது எனது மனைவி என்னை அப்படி வைத்துவிட்டாரா?

Link to comment
Share on other sites

தோட்டத்தில் இருக்கும் முந்திரிகை பந்தலுக்கு புது மரமும் போட்டுவிட்டேன்.

அர்ஜுன்

சிரமமில்லையானால் முந்திரி பந்தலை புகைப் படம் எடுத்து இணைக்க முடியுமா? நானும் இரு முந்திரி வைத்துள்ளேன். நன்றாக காய்க்கிறது. வேலியில் படர விட்ட படியால் அலங்கோலமாக இருக்கிறது. எப்படி பந்தல் போட்டுள்ளீர்கள் என பார்ப்பதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்

சிரமமில்லையானால் முந்திரி பந்தலை புகைப் படம் எடுத்து இணைக்க முடியுமா? நானும் இரு முந்திரி வைத்துள்ளேன். நன்றாக காய்க்கிறது. வேலியில் படர விட்ட படியால் அலங்கோலமாக இருக்கிறது. எப்படி பந்தல் போட்டுள்ளீர்கள் என பார்ப்பதற்கு.

தப்பிலி,

அவர் உண்மையாய் தான் முந்திரிகை பந்தல் போட்டவரா, சும்மா றீல் விடுறாரா என்று பார்க்க படம் கேட்கவில்லை தானே..... :lol:

எனக்கும் அர்ஜுன்ரை பந்தலை பார்க்க ஆசையாய் இருக்குது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி,

அவர் உண்மையாய் தான் முந்திரிகை பந்தல் போட்டவரா, சும்மா றீல் விடுறாரா என்று பார்க்க படம் கேட்கவில்லை தானே..... :lol:

எனக்கும் அர்ஜுன்ரை பந்தலை பார்க்க ஆசையாய் இருக்குது. :D

அவர் படம் போட்டதும்

இது தங்கள் வீட்டில் எடுத்ததுதானே என்ற அடுத்தகேள்வியும் இப்பவே தயார்தானே :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் படம் போட்டதும்

இது தங்கள் வீட்டில் எடுத்ததுதானே என்ற அடுத்தகேள்வியும் இப்பவே தயார்தானே :D:D:lol:

எதுக்கும் முதல்ல அவர் படம் போடட்டும், விசுகு. :D:D

Link to comment
Share on other sites

பாவிங்களா. படம் போட்டாலும் எடக்கு மடக்கா கேள்வி கேட்டே அறுக்கப் போகிறார்கள் என்று அந்தாள் யோசிக்கப்போகுது. :lol:

Link to comment
Share on other sites

திருமணம் முடித்தவுடன் மனைவி கணவனுக்குச் சில பணிவிடைகளை செய்ய ஆரம்பிப்பார். தேனீர் பரிமாறுதல், குளிக்கும்போது துவாய் எடுத்துக் கொடுத்தல், உணவுபரிமாறுதல் என்று தொடங்கும். பின்னர் கணவன் திருமணத்திற்கு முன்ன தானாகச் செய்துகொண்டிருந்த பல கருமங்களை மனைவியே செய்ய வேண்டி வரும். வயது போகப் போக மனைவிக்கு அப் பணிவிடைகள் கடினமாக இருந்தாலும் பழகி விட்டதால் செய்தே ஆகவேண்டிய நிலைக்கு வந்து விடுவார். கணவனும் மனைவி இன்றி வீட்டில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது பழக்கப்பட்டு விடுவார்.

வயதானவர்களைக் கூடப் பார்த்திருக்கிறேன். இருந்த இருப்பில் அந்தக் கண்ணாடியை எடு. பத்திரிகையை எடு. தேத்தண்ணி கொண்டுவா. என்று அதட்டிக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் பிரியும்போது இருவருக்குமே கடினமாக இருக்கும். கணவன் நான் இல்லாமல் தனியாக எப்படி எல்லாவற்றையும் செய்கிறாரோ என்று மனைவியும், மனைவி இல்லாமல் எதையும் சரியாகச் செய்ய முடியாது கணவனும் தவிப்பார்கள்.

இதைத்தான் அன்பு என்கிறோம். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.