Jump to content

யாழ்நிலவனின் மீள்வருகை...


Recommended Posts

வணக்கம் உறவுகளே,

மிகவும் நீண்ட ஓர் இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் களத்திலே தவழுகின்றேன்... என்னை முன்னர் அரவணைத்த கரங்களுக்கும், இனி அரவணைக்கப்போகும் கரங்களுக்கும் என் நன்றிகள், அரவணைக்காது அறுக்கப்போகும் கைகளுக்கும் என் ஆதரவுகள், என் உளமார்ந்த நன்றிகள்... சோகம், கவலை, சோம்பேறித்தனம், இவற்றைக்கடந்த அன்பு, ஆதரவு என்பதுதான் யாழ்க்கள உறவுகள் என்று மீண்டும் ஓர்முறை நிரூபியுங்கள். தமிழினம் மீண்டும் உயிர்ப்பெறும்... நாம் மனதுவைத்தால்...

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ...உங்கள் உற்சாகமான கருத்துகளை பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

varuka.gif யாழ் நிலவன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :lol:

.

Link to comment
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி யாழ் நிலவன் :lol:

உங்கள் வாரவேற்பிற்கு மிக்க நன்றி

வணக்கம் வாங்கோ...உங்கள் உற்சாகமான கருத்துகளை பகிருங்கள்.

கண்டிப்பாக ரதி, நான் எனது கருத்துக்களைப் பகிர்வேன்...

.

varuka.gif யாழ் நிலவன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :lol:

.

எனக்குக் கூடத்தான் உங்களை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ உறவே வாங்கோ..மீண்டும் உங்களை யாழிழ் கண்டது சந்தோசம்...நான் தான் குட்டிப்பையன். இப்ப என்ர பெயர் பையன் ஹிஹிஹி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன்

தங்களது மீள்வருகை பெரும் கனதியான செய்தியுடன் தொடங்குகிறது

எழுதுங்கள்

தங்களைப்பாதுகாத்தபடி....

Link to comment
Share on other sites

மீண்டும் நல்வரவு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வருக..!

உங்களின் மீள் உதயம் என்றென்றும் இங்கே உதயமாகவே, வழிகாட்டலாகவே இருக்கட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மீள் வருகை .............இனிய நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி யாழ் நிலவன் :lol:

தங்கள் வரவேற்பிற்கு சிரம் தாழ்த்திய நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன் சுவி!

Link to comment
Share on other sites

வாங்கோ உறவே வாங்கோ..மீண்டும் உங்களை யாழிழ் கண்டது சந்தோசம்...நான் தான் குட்டிப்பையன். இப்ப என்ர பெயர் பையன் ஹிஹிஹி :lol:

ஏண்டாப்பா குட்டிப்பையன் ஏண்டாப்பா குட்டிப்பையன் எண்டா நல்லாத்தானே இருந்திச்சுது, ஏன் எல்லாரும் என்ன இவர் குட்டிப்பையன் இவன்ட கருத்தைக் கேட்கக்கூடாது எண்டு நினைக்குறாங்களோ? சரி சரி இதுவும் நல்லாத்தான் இருக்குது, அதோட அது என்ன " பையன்26" ? சரிசரி இருக்கட்டும்.

நீண்ட நாளைக்குப்பிறகு சந்திக்குறன் எண்டாலும் சந்தோசமாத்தான் இருக்குது

உங்கட வரவேற்பிற்கு மிக்க நன்றி

வணக்கம் யாழ் நிலவன்

தங்களது மீள்வருகை பெரும் கனதியான செய்தியுடன் தொடங்குகிறது

எழுதுங்கள்

தங்களைப்பாதுகாத்தபடி....

கனதி மட்டுமில்ல சொல்லுறதுக்கு கனக்க இருக்குது... கொஞ்சம் கொஞ்சமாச்சொல்லுறன் என்ன?

கண்டிப்பா என்னைப் பாதுகாத்துக்கொண்டுதான் சொல்லுவன். அதோட உங்கட வரவேற்புக்கு மிக்க நன்றி

உங்கள் மீள் வருகை .............இனிய நல்வரவாகட்டும்.

உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் வரை என் வரவு நல்வரவாகும்

வாங்கோ .... மீள்வரவு நல்வரவாகட்டும்!

உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் வரை என் வரவு நல்வரவாகும்

மீண்டும் நல்வரவு..! :lol:

கோடானுகோடி நன்றிகள்

வணக்கம் வாங்கோ .. :lol:

இஞ்சவரைக்கும் வந்திட்டன் இனியும் வருவன்...

வணக்கம், வருக..!

உங்களின் மீள் உதயம் என்றென்றும் இங்கே உதயமாகவே, வழிகாட்டலாகவே இருக்கட்டும்..

கண்டிப்பாக பகிர்வதற்கு நிறைய உண்டு பகிர்ந்துகொள்வேன்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன் சுவி!

இந்தப்பெயர் ஏற்கனவே என்னோட அடிபட்ட பெயர் மாதிரி எல்லோ கிடக்குது எண்டாலும் வந்தோரை வரவேற்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம்

வாருங்கள் உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மிக்கமகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன்.

மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

வாத்தியார் உங்கள் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கவனிப்பார்.

தப்புத்தண்டா பண்ணினா மஞ்சள் சிவப்பு அட்டையுடன் உசார் நிலையில் :rolleyes::unsure::lol:

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ் நிலவன்.

மீண்டும் பிறந்து வந்ததில் எமக்கும் அளாவிலா மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணை. :unsure:

நீங்கள் இஞ்சை அடிக்கடி வாறியளோ இல்லையோ

அப்பப்ப நான் உங்களை நினைக்கிறனான்

கையோடை கையாய் இன்னுமொண்டையும் பரவலாய் சொல்லுறன்

உங்கை கனபேர் ஏதோ தமிழன்ரை அத்தியாயம் முடிஞ்சமாதிரி

இஞ்சை இப்ப வாறதுமில்லை கதைக்கிறதுமில்லை

ஒதுங்கி நிக்கினம் :lol:

எல்லாரும் திரும்பி வரோணும் :rolleyes:

நல்லது கெட்டதை கதைக்கோணும்

எங்களுக்கு..

எங்கடை சனத்துக்கு...

எங்கடை சந்ததிக்கு...

எங்கடை மண்ணுக்கு...

நல்லது நடக்கோணும்.

Link to comment
Share on other sites

:huh: வாங்கோ வாங்கோ உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அது சரி வீட்டில எல்லாரும் சுகம் தானே
Link to comment
Share on other sites

  • 4 months later...

வணக்கம் நிலவன். மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

வந்து திண்ணையிலே, கருத்துக்களத்திலே பேச வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் எப்படிப்பேசினாலும் துரோகி என்று சொல்லுறாங்கள். விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசினாலும் சொல்லுறாங்கள் விடுதலைப்புலி எண்டு நடிக்கியினம் எண்டு. ஆதரிக்காமப் பேசினாச் சொல்லுறாங்கள், இவர் மாறீட்டார் எண்டு. பேசாம இருந்தாச் சொல்லுறாங்கள் இவரும் இப்ப அங்கால நிக்குறார் போல எண்டு. என்னதைப் பேசுறதெண்டே தெரியேல்ல. சரி நடந்ததுதான் நடந்துபோச்சு, ஒரு ஊடகவியலாளன் எண்ட ரீதியில எழுதுறது என் கடமை. சொல்லும் வரை சொல்வேன். முரசு கொட்டும் வரை கொட்டுவேன். கத்தும் வரை கத்தி என் தொண்டை கிழிந்தாலென்ன ஈழம் மண் விடியும் வரை இருப்பேன். என்றென்றும் உங்கள் ஆதரவுகளுக்கு நன்றிகள் கோடி

வணக்கம்

வாருங்கள் உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மிக்கமகிழ்ச்சி.

எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். நன்றி உங்கள் கரிசனைக்கு

வணக்கம் யாழ் நிலவன்.

மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

வாத்தியார் உங்கள் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கவனிப்பார்.

தப்புத்தண்டா பண்ணினா மஞ்சள் சிவப்பு அட்டையுடன் உசார் நிலையில் :rolleyes::unsure::lol:

வாத்தியார்

*********

எங்களுக்கு படிப்பிச்ச வாத்தி மாரில இருந்து உந்த வாத்தியார் வரைக்கும் எல்லாரும் சொல்லுறது ஒண்டுதான். அந்த வாத்தி கம்பால வெளுக்குமாம், உந்த வாத்தி அட்டையைக் காட்டுமாம். பச்சை மட்டை வெட்டி, வாட்டி வந்து அடிச்ச என் தமிழ் வாத்தியிற்கே என் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமர்ப்பணம். தமிழ் மேல் அவா ஏற்படுத்தி இன்று என் வாத்தி போய் 30 வருசம் ஆகுதப்பு. இப்ப இவர் வாத்தியார் பாப்பம். என்னத்தைக் காட்டுறார் எண்டு

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ் நிலவன்.

மீண்டும் பிறந்து வந்ததில் எமக்கும் அளாவிலா மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்.

கறுப்பி கறுப்பி எண்டு எத்தனை தரம் சண்டை பிடிச்சிருப்பன். உங்களோட இல்லையப்பா. என்ர மச்சாள் ஒருத்தி இருந்தவள் கறுப்பி கறுப்பி எண்டு... அவளுக்கும் 2 பிள்ளையள், 6 பேரப்பிள்ளையள், 1 பூட்டப்பிள்ளையோட சந்தோசமா இருந்தவள், முள்ளிவாய்க்காலில மூழ்கிப்போய்விட்டாள். அவளிண்ட பூட்டனும் இல்லை, பேரன் ஒண்டும் பேத்தி ஒண்டும் பிள்ளையிண்ட பெஞ்சாதி தான் இருக்குதுகள் . மிச்சம் எல்லாம் மண்ணோட மண்ணாய் மக்கிப் போச்சுதுகள். தாங்குறது எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகவேணும். உங்கட வரவேற்பினை எண்ணிப் பேருவகையடைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்து திண்ணையிலே, கருத்துக்களத்திலே பேச வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் எப்படிப்பேசினாலும் துரோகி என்று சொல்லுறாங்கள். விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசினாலும் சொல்லுறாங்கள் விடுதலைப்புலி எண்டு நடிக்கியினம் எண்டு. ஆதரிக்காமப் பேசினாச் சொல்லுறாங்கள், இவர் மாறீட்டார் எண்டு. பேசாம இருந்தாச் சொல்லுறாங்கள் இவரும் இப்ப அங்கால நிக்குறார் போல எண்டு. என்னதைப் பேசுறதெண்டே தெரியேல்ல. சரி நடந்ததுதான் நடந்துபோச்சு, ஒரு ஊடகவியலாளன் எண்ட ரீதியில எழுதுறது என் கடமை. சொல்லும் வரை சொல்வேன். முரசு கொட்டும் வரை கொட்டுவேன். கத்தும் வரை கத்தி என் தொண்டை கிழிந்தாலென்ன ஈழம் மண் விடியும் வரை இருப்பேன். என்றென்றும் உங்கள் ஆதரவுகளுக்கு நன்றிகள் கோடி

:blink:

Link to comment
Share on other sites

வணக்கம் அண்ணை. :unsure:

நீங்கள் இஞ்சை அடிக்கடி வாறியளோ இல்லையோ

அப்பப்ப நான் உங்களை நினைக்கிறனான்

கையோடை கையாய் இன்னுமொண்டையும் பரவலாய் சொல்லுறன்

உங்கை கனபேர் ஏதோ தமிழன்ரை அத்தியாயம் முடிஞ்சமாதிரி

இஞ்சை இப்ப வாறதுமில்லை கதைக்கிறதுமில்லை

ஒதுங்கி நிக்கினம் :lol:

எல்லாரும் திரும்பி வரோணும் :rolleyes:

நல்லது கெட்டதை கதைக்கோணும்

எங்களுக்கு..

எங்கடை சனத்துக்கு...

எங்கடை சந்ததிக்கு...

எங்கடை மண்ணுக்கு...

நல்லது நடக்கோணும்.

ஐய்யோ என்ர ராசா... நீ இன்னமும் இருக்குறியேப்பு... உன்னோட சண்டை போட்டதுகளைக்கூட சிலவேளையில எண்ணிப்பாப்பன். சரி யாருது சொன்னது தமிழரிண்ட அத்தியாயம் முடிஞ்சுதெண்டு? கோடி கொட்டி எரியும் எம் இனத்தில் கோழைகள் எதுக்குடா? சொல்பவனிடம் கேள், நீ என்ன தமிழிழா அதையும் சொல்கின்றாயென்று? வெட்கமாயில்லையா தமிழன்ர அத்தியாயம் முடிஞ்சுது எண்டு தமிழிழே சொல்வதற்கு? என்று கேள்! வெட்டிப்புடுங்கினவர்கள் எல்லாம் பேசமாட்டினம், வெட்டிப்புழுகர்கள் கேட்கத்தான் செய்வினம். ஊர் கதைக்கட்டும், எமக்கு அது உரமேற்றட்டும். நாடுகதைச்சு, சந்தி சிரிக்கட்டும், உன் தோளில் உனக்குப் பிடிப்பிருக்கா? உன் கையில் உனக்கு தெம்பிருக்கா? உன் கால்கள் உனக்குத் துணையிருகா? அது போதும் உன்னுரிமையை நீ வென்றெடுப்பதற்கு. அவன் அப்பிடித்தான் சொல்லுவான், சோம்பேறிகளின் உறுமல் கொட்டாவி, சேம்பியவரின் உறுமல் கருங்காலி, தேம்பியவரின் உறுமல் கொடும்பாவி, தமிழ் மூச்சுரைப்பவரின் உறுமல் தமிழ் ஆவி. அவ் ஆவி உன்னிடமிருக்கும் வரை உரத்துப்போரிடு. கண்ணிலே காயமா? வாய் இருக்கிறதுதானே தமிழெனக் கத்த, வாய்க்கட்டா உனக்கு? கையிருக்குத்தானே தமிழென எழுத... கையும் முடமா? காலிருக்குத்தானே தமிழென நடக்க.... காலும் ஊனமா உன் உடலிருக்குத்தானே தமிழன் எனக்காட்ட, உன் உடலும் முடக்கமா? உன் உயிரிருக்குத்தானே தமிழ் உயிரென விடுவதற்கு... பின்னர் எதற்குரைக்கிறாய் தமிழ் முண்டமே... தமிழனிண்ட அத்தியாயம் முடிந்தது என்று சொல்வதற்கு என்று கேட்டுவிட்டு மட்டும் விட்டுவிடாதே. . . எவ்வளவு பணம் போனாலும் பரவாயிலை ஒரு குப்பி விசம் வாங்கிக்கொடு குடிப்பதற்கு... மூடன் பேச்சுக்கேட்டா மூஞ்சூறு உலாப்போகும்? முட்டி மோதிப்பார்த்தால் புரியும் உனக்கு நிலாச்சோறும்...

Link to comment
Share on other sites

:huh: வாங்கோ வாங்கோ உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அது சரி வீட்டில எல்லாரும் சுகம் தானே

வீட்டிலிருந்தாற் சுகந்தான்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.