Jump to content

யாழ்நிலவனின் மீள்வருகை...


Recommended Posts

:blink:

வல்வைசகாரா... உன் கவிதைகள் படித்திருக்கின்றேன்... உன் எழுத்தா என்று கூடத்தெரியாது ஆனாலும் மென்றிருக்கின்றேன்... கருப்பட்டி எடுத்து, கடலைமாவிற் குழைத்து உருண்டையாக்கி உண்டசுகமெனக்கு உன் கவி படிக்கையிலே. திக்கற்றிருக்கும் திருமொழியன் அவர்கட்கு, திக்கெற்றிலும் திக்கற்றிருக்கும் தமிழனுக்கு உன்வரியில் உவமை பல இட்டு, உருப்படியாய் இருவரியில் கவிதன்னும் இப்போ வரைவதற்கு மனமா வரவில்லை? உன் மானம் போகிறதே, இதற்குப்பின் எதற்குனக்குச் சேலை? கவி என்ற சேலை கட்டி நீயிருக்கிறாய், உன் கவிச்சேலை மேலேயும் மானம் பறக்கிறதே? திருடென திடீரென உணராதவன், உன் கவிவரியால் உடனடியாய் மாற்று. உத்தமனாய் உன்னால் செய்வதற்கு முடியும் என்பது எனக்குத் தெரிகிறது. உன்னால் முடியாது என்று ஏன் சோம்பிப் போயிருக்கின்றாய்? இது எமது உரிமைப்போர். இது எங்கள் நாடி நரம்புகளில் புடைக்கவேண்டிய இரத்தம். தொடரட்டும் உன்பணி, பெருகட்டும் உன் வரி. தட்டிக்கொடுப்பேன் உன் தோள்களில் நானிருக்கும் வரைக்கும். விடுதலைக்காய் எழுதினால்... எட்டி மிதிப்பேன் உன் மார்பிலே திசைகெட்டு ஓடினால்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

அன்பகலா என் உறவுகள் அனைவருக்கும் சிர்ந்தாழ்த்தி வணக்கம், உங்களிடம் ஓர் கருணை வேண்டுகோள். யாழ் நிலவன் என்றும் ஒரே கொள்கை, ஒரே வழியில் எழுதுபவன். தயவுசெய்து என்னைத் துரோகிப்பட்டம் கட்டி ஒதுக்காதிருங்கள். வெட்டுவது வாளாயினும் வெட்டுபவனும் இருக்கவேண்டுமே... சரிதான். வெட்டும் வாளாக எழுதுவதற்காகக் காத்திருக்கிறேன்... வெட்டுபவனாக இருந்திடாதீர்கள். அதற்காக துரோகிகள் பட்டமோ, பக்கம் மாறியவர்கள் என்ற பக்கமோ சாராமல் என் எழுத்து என்றென்றும் தமிழ், தமிழ் ஈழம், எம் தேசம், விடுதலை என்ற ஓரச்சில் மட்டுமே என் சக்கரம் சுழலும். யார் பெயரொ... யார் ஊரோ அடங்காது எழுத ஆவலுடன் இருக்கின்றேன்... எம் உறவுகள் எனக்குறுதுணைவேண்டும் என்று மன்றாடி நிற்கின்றேன். தாங்கும் சக்தியற்றிருக்கும் எனக்கோ இப் பூமித்தாய் என்னைத் தாங்கும் வரைக்கும் தமிழ் எழுத ஆவலுடன் இருக்கின்றேன். என்றென்றும் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் உங்கள் யாழ் உறவு யாழ் நிலவன்

Link to comment
Share on other sites

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

வடக்கிலேயிருந்தும் தெற்கிலே இருந்தும் எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்பின் இரத்தச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் எம்மிடம் ஒற்றுமை இல்லையே... அவ்வொற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். எழுத்தாளர்களால் பூமியைப் பிளந்தும் புதுயுகம் படைக்கலாம். நான் சொன்ன வார்த்தைகளை ஒரு நிமிடம் மீண்டும் நினைக்கின்றேன் .

களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்

பேனாகூட பெருந்திசை மாற்றும்

நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல

துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்....

(http://yarlnilavan.wordpress.com/2009/03/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa/)

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்.......

(http://yarlnilavan.wordpress.com/2009/03/06/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf/)

தமிழ் வரிகள் கூட வாழ்க்கையை எழுது... வரலாறூ எழுத தமிழ் மொழியுமே போதும்... நான் மட்டுமுரைத்தால் நா மட்டும் தழுதழுக்கும் நாம் ஒன்றாய் உரைத்தால் ஐ. நாவுமே தழுதழுக்கும்....

Link to comment
Share on other sites

... நிலவு எப்பவும் பவுர்ணமிக்கு முகம் காட்டுவது போல் யாழிலும் .... <_<

Link to comment
Share on other sites

வாங்கோ அண்ணை :D

வருகின்றேன்... என்னவோ வசந்தமாம், உதயமாம், ஒண்டுமே விளங்கேல்ல... நன்றி வரவேற்பிற்கு

... நிலவு எப்பவும் பவுர்ணமிக்கு முகம் காட்டுவது போல் யாழிலும் .... <_<

நிலவு பௌர்ணமிக்கு முகம் காட்டும் என்கின்றீர்களே. தினம் உதிக்கும் சூரியனுக்கோ இரு வாழ்வு, உதயம், மறைவு, ஆனால் தினம் தேய்ந்து தினம் வளரும் சந்திரனுக்கோ பல வாழ்வு, பௌர்ணமி, அமாவாசை, பஞ்சமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி ஏன்? தினமும் நானுதித்தால் இப்பெயர்தான் கிடைத்திருமா என்ன? இருந்து எப்போதாவது வந்தாற்கூட உங்கள் அனைவரையும் உள்ளத்திலே சுமந்திருக்கின்றேன். :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைசகாரா... உன் கவிதைகள் படித்திருக்கின்றேன்... உன் எழுத்தா என்று கூடத்தெரியாது ஆனாலும் மென்றிருக்கின்றேன்... கருப்பட்டி எடுத்து, கடலைமாவிற் குழைத்து உருண்டையாக்கி உண்டசுகமெனக்கு உன் கவி படிக்கையிலே. திக்கற்றிருக்கும் திருமொழியன் அவர்கட்கு, திக்கெற்றிலும் திக்கற்றிருக்கும் தமிழனுக்கு உன்வரியில் உவமை பல இட்டு, உருப்படியாய் இருவரியில் கவிதன்னும் இப்போ வரைவதற்கு மனமா வரவில்லை? உன் மானம் போகிறதே, இதற்குப்பின் எதற்குனக்குச் சேலை? கவி என்ற சேலை கட்டி நீயிருக்கிறாய், உன் கவிச்சேலை மேலேயும் மானம் பறக்கிறதே? திருடென திடீரென உணராதவன், உன் கவிவரியால் உடனடியாய் மாற்று. உத்தமனாய் உன்னால் செய்வதற்கு முடியும் என்பது எனக்குத் தெரிகிறது. உன்னால் முடியாது என்று ஏன் சோம்பிப் போயிருக்கின்றாய்? இது எமது உரிமைப்போர். இது எங்கள் நாடி நரம்புகளில் புடைக்கவேண்டிய இரத்தம். தொடரட்டும் உன்பணி, பெருகட்டும் உன் வரி. தட்டிக்கொடுப்பேன் உன் தோள்களில் நானிருக்கும் வரைக்கும். விடுதலைக்காய் எழுதினால்... எட்டி மிதிப்பேன் உன் மார்பிலே திசைகெட்டு ஓடினால்.

யாழ் நிலவன்,

இப்போது கவிதையில் சேலை நெய்து அம்மணத்தைக்காட்டுவதிலும் நிதானத்தில் நெய்யும் சேலை நிச்சயம் மானம் காக்கும்.

Link to comment
Share on other sites

யாழ் நிலவன்,

இப்போது கவிதையில் சேலை நெய்து அம்மணத்தைக்காட்டுவதிலும் நிதானத்தில் நெய்யும் சேலை நிச்சயம் மானம் காக்கும்.

நெய்யும் வரை பொறுத்திருப்பதா? நெய்யும் வரை மானத்தை மறைத்திருப்பதா மேல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... நிலவன், வவை சகாரா, .... போன்றவர்கள் தொடர்ந்து கவிதை எழுத வேண்டும், பல தடவை யாழ்களத்தில் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன். நான் வல்வை சகாராவின் விசிறி.

Link to comment
Share on other sites

... நிலவன், வவை சகாரா, .... போன்றவர்கள் தொடர்ந்து கவிதை எழுத வேண்டும், பல தடவை யாழ்களத்தில் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன். நான் வல்வை சகாராவின் விசிறி.

வணக்கம் ராஜ் மோகன்,

வல்வை சகாரா தமிழிலே பலம் பொருந்தியவர். அவர் இன்னமும் பல படைப்புக்களைப் படைக்கவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. அதுவும் இப்போது அவர் வேலைப்பழுவின்றி இருக்கின்றார். காலத்தின் கடமையாக எண்ணி அவர் இன்னமும் படைப்புக்களைப் படைப்பார் உங்களைப்போலவே நானும் எதிர்பார்க்கின்றேன். அத்தோடு தங்களின் பதிலுக்கு என் மனங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ நிலவன் நலமா?.

வணக்கம் காரணிகன்,

நான் நலமே, தாங்களும் நலனுடன் வாழ வாழ்த்துகின்றேன். தங்கள் பெயர் என்னவோ உண்மையானதோ அல்லது புனை பெயரோ யானறியேன். இருப்பினும் சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். தங்களின் பெயர் பல அர்த்தம் நிரம்பிய பெயர். தாங்கள் என்ன கருத்தில் அதனைப் பாவிக்கின்றீர்களோ தெரியவில்லை, இருப்பினும் கார் + அணிகன் = காரணிகன். அதாவது கார் என்பது கருமை என்பதையும், அணிகன் என்பது ஆண்பால் விகுதியேற்ற அணிந்திருப்போன் என்பது. எனவே இப்பெயரினை பண்டைய தமிழ் இலக்கியத்தில் உவமையாகப் பாவித்திருக்கின்றார்கள். இதிலே பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இவை பற்றி மேலும் விளக்குகின்றேன். எனினும் தங்கள் அடிக்குறிப்பு என் மனதை வாட்டிவிட்டது. பணம் பதவி வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உன் பிறப்பின் அடையாளம். இன்று உன் அடையாளம் எவ்வாறிருக்கின்றது? எவ்வுலகில் வாழினும், எவ்வாறு வாழினும், உனதாயினும், உன் சந்ததியின் அடையாளம் என்றுமே, தமிழன், தமிழீழத்தவன் என்பது அழியப்போவதில்லை. மானிட வர்க்கம் பல பரிணாம வளர்ச்சியினூடே வளர்ந்தது. என்றென்றும் உன் வம்சமானாலும், உனதானாலும் உன்னுடைய DNA என்று அழைக்கப்படும் "இனக்கீற்று" நீ திராவிடன் என்பதையே உரைத்து நிற்கும். உன் வாழ்வியலமைப்பு எவ்வாறு மாறினும், இனக்கீற்றில் உன் மொழி, தேசியம், உன் வாழ்வாதாரம் என்பன என்றுமே அழிக்கப்படப்போவதில்லை. மொழியும், தேசியமுமே உனக்கான அடையாளம். பணமோ பதவியோ உன் அடையாளத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை. தமிழனாக வாழ், ஈழத்தவனாக இரு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜ் மோகன்,

வல்வை சகாரா தமிழிலே பலம் பொருந்தியவர். அவர் இன்னமும் பல படைப்புக்களைப் படைக்கவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. அதுவும் இப்போது அவர் வேலைப்பழுவின்றி இருக்கின்றார். காலத்தின் கடமையாக எண்ணி அவர் இன்னமும் படைப்புக்களைப் படைப்பார் உங்களைப்போலவே நானும் எதிர்பார்க்கின்றேன்.

வணக்கம் யாழ்நிலவன் ,

நெஞ்சில் எப்போதுமே கனமான வலிகளும் சுமைகளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கின்றன. வாய் திறந்து, எனை வெளிக்காட்டி அழுது தீர்க்க முடியாத வலிகள் அவை. எப்போதாவதுதான் கண்மடல்கள் கனத்து ஈரலிப்பை வெளிப்படுத்தும். இப்போது இந்த விசைப்பலகையில் உட்கார்ந்து எழுதும்போது விசைப்பலகையில் விழிநீர் சொரிந்து விரல்களைப் பிசுபிசுக்க வைக்கிறது. அகமும், புறமுமாக வேதனைகளும் பாரிய ஏமாற்றங்களையும் தேக்கிக் கொண்டு திணறுகிறது வாழ்க்கை. விடுதலையின் வாழ்வை யாசித்தவர்கள் விடை தெரியாத விடுகதைகளாக.... பேச முடியவில்லை. எவரையும் சேர்க்கமுடியவில்லை. புலம்பெயர் சமூகத்திடம் பகுதிபகுதியாகச் சகதி பாய்ந்து விட்டது. தெரிந்து கொண்டே தவறிழைக்கிறார்கள், புரிந்துகொண்டே பொல்லாங்கு சொல்கிறார்கள். எம்மினத்தை ஒடுக்கும், சிதைக்கும் பொது எதிரியை விட்டுவிட்டு எமக்குள் வைரிகளாக மூர்க்கடைந்து மீளாநிலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவரை நோவது? விடுதலை நோக்கிய பயணத்திற்கு எல்லோரும் வேண்டும். என்னால் முடியுமா?.... இப்போதே பாதி செத்துவிட்டேன். என்னினத்தை நான் முழுமையாக வெறுக்கும்போது உயிரோடு இருக்கமாட்டேன். இன்றைய நாட்களில் புலத்துக்குழப்பங்களால் இடிந்துபோயிருப்பது என் இனம் மட்டுமல்ல என் தமிழுந்தான் யாழ்நிலவன்.

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்நிலவன் ,

நெஞ்சில் எப்போதுமே கனமான வலிகளும் சுமைகளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கின்றன. வாய் திறந்து, எனை வெளிக்காட்டி அழுது தீர்க்க முடியாத வலிகள் அவை. எப்போதாவதுதான் கண்மடல்கள் கனத்து ஈரலிப்பை வெளிப்படுத்தும். இப்போது இந்த விசைப்பலகையில் உட்கார்ந்து எழுதும்போது விசைப்பலகையில் விழிநீர் சொரிந்து விரல்களைப் பிசுபிசுக்க வைக்கிறது. அகமும், புறமுமாக வேதனைகளும் பாரிய ஏமாற்றங்களையும் தேக்கிக் கொண்டு திணறுகிறது வாழ்க்கை. விடுதலையின் வாழ்வை யாசித்தவர்கள் விடை தெரியாத விடுகதைகளாக.... பேச முடியவில்லை. எவரையும் சேர்க்கமுடியவில்லை. புலம்பெயர் சமூகத்திடம் பகுதிபகுதியாகச் சகதி பாய்ந்து விட்டது. தெரிந்து கொண்டே தவறிழைக்கிறார்கள், புரிந்துகொண்டே பொல்லாங்கு சொல்கிறார்கள். எம்மினத்தை ஒடுக்கும், சிதைக்கும் பொது எதிரியை விட்டுவிட்டு எமக்குள் வைரிகளாக மூர்க்கடைந்து மீளாநிலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவரை நோவது? விடுதலை நோக்கிய பயணத்திற்கு எல்லோரும் வேண்டும். என்னால் முடியுமா?.... இப்போதே பாதி செத்துவிட்டேன். என்னினத்தை நான் முழுமையாக வெறுக்கும்போது உயிரோடு இருக்கமாட்டேன். இன்றைய நாட்களில் புலத்துக்குழப்பங்களால் இடிந்துபோயிருப்பது என் இனம் மட்டுமல்ல என் தமிழுந்தான் யாழ்நிலவன்.

அன்பகலா வல்வைசகாரா,

ஓர் எழுத்தாளன் என்பவன் எவ்வலி வேதனை இருந்தாலும், அதனையும் பொறுத்து எழுதுபவனே சிறந்த எழுத்தாளன். அடக்கு முறைக்கும், கவலைக்கும், எதிர்ப்புக்களுக்கும் அடிபணியாது எவனொருவன் எழுதுகின்றானோ அங்கேதான் நீதியும், உண்மையும் பொதிந்து கிடக்கிடக்கும். அதேபோன்று ஓர் திறமையான கவிஞனும் அப்படித்தான். பெயர் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் ஒரு பிரபலமான தற்போதைய பாடலாசிரியர் தனது பாடல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும்போது, அவருடைய மனைவியால் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் சிறிது குழம்பினார், ஆனால் அவர் குறிக்கோளோ அந்தக் கவிதையிலேயே இருந்தது. மனைவியின் திட்டுக்களுக்கும் ஏச்சுக்களுக்கும் காது கொடுக்காமல் எழுதினார். அவர் வறுமையில் இருந்தார் அப்போது, மனைவியிடம் ஏற்பட்ட தகராறும் அவரது வறுமை சம்பந்தமானதாகவே, அன்று சமையலுக்கு கூட ஏதுமில்லை என்கின்ற நிலையிலேயே ஏற்பட்டது. அவர் புலன்களைச் சிதறவிடாமல் எழுதி எப்பாடு பட்டோ அந்தக் கவிதையை ஓர் இயக்குனர் கையில் கிடைக்கும்படி கொடுத்தனுப்புகின்றார். இயக்குனர் பார்த்ததும் அக்கவிதை மிகச்சிறந்தது என்று சொல்லி பெருமளவு பணத்தைக் கொடுக்கின்றார். அதிலே பல கைமாறி சிறிதளவு பணம் இரண்டு தினங்களில் அவர் கைகளுக்கு கிடைக்கின்றது. இரண்டு தினங்களாக நா நனைத்துக் காத்திருந்த அவருக்கு அப்பணமோ பெரும் பணமாக தோன்ற மேலும் எழுதினார். அவருடைய இரண்டு பாடல்கள் ஒரே திரைப்படத்தில் இடம்பெற்றது. இரண்டுமே பிரசித்தி பெற, இன்று அவர் ஓர் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் இருந்து வருகின்றார்.

இது ஓர் உண்மைச் சம்பவம். அது போன்றுதான், எம் மன வலிகளும் வேதனைகளுமே எமது கவிதைகளுக்கான உரம். எமது எழுத்துக்களுக்கான அடித்தளம். வலிகளையும், வேதனைகளையும் மனத்திலே சுமக்கும்போதுதான் வரிகளும் கனமாக இருக்கும். சிந்தனையை ஒருங்கிணைத்து எம் இனத்தை, எம்மினத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கும் கவிதைகளை, எம் உணர்ச்சிகளை என்றுமே குன்றவிடாது தமிழனாக ஒருங்கிணைத்து வைத்திருக்க தங்கள் ஆக்கங்களும் தேவை. தங்களால் முடியாது என்று எதுவுமே இல்லை. மாபெரும் வீரன் அலெக்ஸாண்டரின் அகராதியில் முடியாது என்று ஒன்று இல்லை என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம், அதுபோன்று உங்களாலும் முடியாதது என்று எதுவுமில்லை. முடியும். நிச்சயம் முடியும், ஓர் சிறு குறிப்பு, யாரையும் தாக்கி எழுதும் போதுதான் அல்லது யாரையும் சார்ந்து எழுதும் போதுதான் விமர்சனங்கள் எழும். ஒரே குறிக்கோளை மனதிலே வைத்து எழுதினால் உங்கள் எழுத்துக்கள் கூடப் பேசும். எம் தமிழன் என்கின்ற உணர்ச்சி... தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்து எம் தேசத்தை வென்றெடுக்க வேண்டும் என்கின்ற ஓர் குறிக்கோள் மட்டுமே. வல்வை உங்களால் முடியும். எம் மக்களின் உணர்ச்சிகளை, எம் மக்களின் ஒருங்கிணைப்பிற்கு தங்கள் ஆக்கங்களால் சாதிக்க முடியும். தங்கள் கவிதைகளை நான் பலமுறை படித்திருக்கின்றேன்.

எழுதுங்கள், உங்கள் பேனா முனை மழுங்கும் வரை, உங்கள் உயிர் தமிழ் என்னும் ஒன்றைத் தாங்கி வரும் வரையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன்,

மகிழ்ச்சியளிக்கின்றது தங்களின் மீள் வருகை

வருக,வருகவென வரவேற்க விரிகிறதென் இருகை!!

வாழ்த்துக்கள்!!! :D

Link to comment
Share on other sites

name='யாழ்நிலவன்' timestamp='1294414927' post='631949']

வணக்கம் காரணிகன்,

நான் நலமே, தாங்களும் நலனுடன் வாழ வாழ்த்துகின்றேன். தங்கள் பெயர் என்னவோ உண்மையானதோ அல்லது புனை பெயரோ யானறியேன். இருப்பினும் சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். தங்களின் பெயர் பல அர்த்தம் நிரம்பிய பெயர். தாங்கள் என்ன கருத்தில் அதனைப் பாவிக்கின்றீர்களோ தெரியவில்லை, இருப்பினும் கார் + அணிகன் = காரணிகன். அதாவது கார் என்பது கருமை என்பதையும், அணிகன் என்பது ஆண்பால் விகுதியேற்ற அணிந்திருப்போன் என்பது. எனவே இப்பெயரினை பண்டைய தமிழ் இலக்கியத்தில் உவமையாகப் பாவித்திருக்கின்றார்கள். இதிலே பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இவை பற்றி மேலும் விளக்குகின்றேன். எனினும் தங்கள் அடிக்குறிப்பு என் மனதை வாட்டிவிட்டது. பணம் பதவி வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உன் பிறப்பின் அடையாளம். இன்று உன் அடையாளம் எவ்வாறிருக்கின்றது? எவ்வுலகில் வாழினும், எவ்வாறு வாழினும், உனதாயினும், உன் சந்ததியின் அடையாளம் என்றுமே, தமிழன், தமிழீழத்தவன் என்பது அழியப்போவதில்லை. மானிட வர்க்கம் பல பரிணாம வளர்ச்சியினூடே வளர்ந்தது. என்றென்றும் உன் வம்சமானாலும், உனதானாலும் உன்னுடைய DNA என்று அழைக்கப்படும் "இனக்கீற்று" நீ திராவிடன் என்பதையே உரைத்து நிற்கும். உன் வாழ்வியலமைப்பு எவ்வாறு மாறினும், இனக்கீற்றில் உன் மொழி, தேசியம், உன் வாழ்வாதாரம் என்பன என்றுமே அழிக்கப்படப்போவதில்லை. மொழியும், தேசியமுமே உனக்கான அடையாளம். பணமோ பதவியோ உன் அடையாளத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை. தமிழனாக வாழ், ஈழத்தவனாக இரு...

வணக்கம் அண்ணா

காரணிகன் புனைப்பெயர்தான் முன்னர் சொந்தப் பெயரில்தான் எழுதிவந்தேன்

பின்னர்தான் காரணிகன் என்ற புனைப் பெயருக்குள் புகுந்துகொண்டேன்

காரணிகன் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டதுபோலும் பொருள்படலாம்

தமிழில் சில சொற்களுக்கு பல அர்த்தங்கள் உண்டு

நான் தெரிவு செய்த காரணிகன் என்ற பெயரின் அர்த்தம்

நடுவர் மத்தியஸ்த்தர்என்பதை குறிக்கிறது

ஆங்கிலத்தில் arbitrator என்று சொல்லப்படுகிறது

எனது அடிக்குறப்பிலுள்ள வாக்கியம் தங்கள் மனதை வாட்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள்

அதனை நான் எதிர்மறையாகத்தான் எழுதியுள்ளேன்

பணத்தாசை பதவி ஆசை கொண்டு நம் இனத்துக்கு எதிராக குழிபறிக்கும்நம்இனத்தை சேர்ந்தவர்களே

பணம் பதவிக்காக தமிழ் இனத்தை விற்று பிழைக்கிறார்களே அந்த ஆதங்கத்தில் இடப்பட்டதுதான்

இந்த அடிக்குறிப்பு

நான் என்றும் தமிழனாகவே வாழ்கின்றேன் ஈழத்தவனாகவே இருக்கின்றேன்

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் நிலவன்,

மகிழ்ச்சியளிக்கின்றது தங்களின் மீள் வருகை

வருக,வருகவென வரவேற்க விரிகிறதென் இருகை!!

வாழ்த்துக்கள்!!! :D

வணக்கம், தங்களின் வரவேற்பிற்கு அகமகிழ்கின்றேன்.

கொல்லைக்குள்ளேயே நின்றால் எப்படி ? :D வாருங்கோ யாழ்நிலவன்.

வணக்கம் இணையவன்,

கொல்லைக்குள்ளையே நிக்க வைச்சிடுறாங்கள். என்னத்தைச் செய்யுறது? நானும் வெளியில வந்து எழுதுவம் எண்டு யோசிச்சா, பெரும் பாணம் ஒன்று வைத்திருக்குறாங்கள், "துரோகி". எங்க எய்து விடுவார்களோ என்று பயம் வேறு, அம்பெய்தால் என்ன என்று எழுதினால் வரும் கருத்தூட்டங்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனவே கொஞ்சம் தாமதமெடுத்து வருகின்றேன். நிச்சயம் எழுதுவேன்.

Link to comment
Share on other sites

எனது அடிக்குறப்பிலுள்ள வாக்கியம் தங்கள் மனதை வாட்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள்

அதனை நான் எதிர்மறையாகத்தான் எழுதியுள்ளேன்

பணத்தாசை பதவி ஆசை கொண்டு நம் இனத்துக்கு எதிராக குழிபறிக்கும்நம்இனத்தை சேர்ந்தவர்களே

பணம் பதவிக்காக தமிழ் இனத்தை விற்று பிழைக்கிறார்களே அந்த ஆதங்கத்தில் இடப்பட்டதுதான்

இந்த அடிக்குறிப்பு

நான் என்றும் தமிழனாகவே வாழ்கின்றேன் ஈழத்தவனாகவே இருக்கின்றேன்

வணக்கம் காரணிகன்,

தங்கள் அடிக்குறிப்புப் பற்றி சொல்லவேண்டும். அடிக்குறிப்பு என்பது, சில முக்கிய தகவல்களையோ அல்லது நற் செய்திகளையோ தாங்கி வருவதாக இருப்பதே சிறந்தது எனக்கூறுவார்கள். காரணம், தங்கள் ஒவ்வொரு மடலிலும் அது இடம்பெறப்போகின்றது. பார்ப்பவர்கள், மனதில் திரும்பத்திரும்ப பதியப்படும்போது அது அவர்கள் மனதுக்குள் மனப்பாடமாகிவிடும். அத்தோடு அது அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விடும். அவர்கள் வாழ்வும் அவ்வாறே மாறும். எனவேதான் அதிற் சிறிது கவனத்தைச் செலுத்தினேன். இளம் சமுதாயம் முதல் முது சமுதாயம் வரை உலவும் இவ் இணையத்தில், தங்கள் கருத்தினைப் பார்க்கும் ஓர் இளம் சமுதாயப் பிள்ளை மனதில் இவ் எண்ண ஓட்டம் ஓட ஆரம்பிக்குமானால், தேசியம் என்பதுவும், தன்னாட்சி என்பதுவும், விடுதலை என்பதுவும் பின்னர் அடுத்த சமுதாயத்தின் மனக்கண்ணில் ஓர் கேலிக்கூத்தான விடயமாக மாற்றப்பட்டுவிடும்.

எனவேதான், நான் அதில் சிரத்தை எடுத்தமைக்கான காரணம்.

Link to comment
Share on other sites

வணக்கம் காரணிகன்,

தங்கள் அடிக்குறிப்புப் பற்றி சொல்லவேண்டும். அடிக்குறிப்பு என்பது, சில முக்கிய தகவல்களையோ அல்லது நற் செய்திகளையோ தாங்கி வருவதாக இருப்பதே சிறந்தது எனக்கூறுவார்கள். காரணம், தங்கள் ஒவ்வொரு மடலிலும் அது இடம்பெறப்போகின்றது. பார்ப்பவர்கள், மனதில் திரும்பத்திரும்ப பதியப்படும்போது அது அவர்கள் மனதுக்குள் மனப்பாடமாகிவிடும். அத்தோடு அது அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விடும். அவர்கள் வாழ்வும் அவ்வாறே மாறும். எனவேதான் அதிற் சிறிது கவனத்தைச் செலுத்தினேன். இளம் சமுதாயம் முதல் முது சமுதாயம் வரை உலவும் இவ் இணையத்தில், தங்கள் கருத்தினைப் பார்க்கும் ஓர் இளம் சமுதாயப் பிள்ளை மனதில் இவ் எண்ண ஓட்டம் ஓட ஆரம்பிக்குமானால், தேசியம் என்பதுவும், தன்னாட்சி என்பதுவும், விடுதலை என்பதுவும் பின்னர் அடுத்த சமுதாயத்தின் மனக்கண்ணில் ஓர் கேலிக்கூத்தான விடயமாக மாற்றப்பட்டுவிடும்.

எனவேதான், நான் அதில் சிரத்தை எடுத்தமைக்கான காரணம்.

வணக்கம் அண்ணா

தங்கள் அறிவுரைக்கு நன்றி

தங்களின் எண்ணக்கருவின்படி எனது கையெழுத்தை மாற்றிவிட்டேன்

மீண்டும் நன்றி

Link to comment
Share on other sites

வடக்கிலேயிருந்தும் தெற்கிலே இருந்தும் எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்பின் இரத்தச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் எம்மிடம் ஒற்றுமை இல்லையே... அவ்வொற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். எழுத்தாளர்களால் பூமியைப் பிளந்தும் புதுயுகம் படைக்கலாம். நான் சொன்ன வார்த்தைகளை ஒரு நிமிடம் மீண்டும் நினைக்கின்றேன் .

களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்

பேனாகூட பெருந்திசை மாற்றும்

நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல

துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்....

(http://yarlnilavan.wordpress.com/2009/03/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa/)

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்.......

(http://yarlnilavan.wordpress.com/2009/03/06/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf/)

தமிழ் வரிகள் கூட வாழ்க்கையை எழுது... வரலாறூ எழுத தமிழ் மொழியுமே போதும்... நான் மட்டுமுரைத்தால் நா மட்டும் தழுதழுக்கும் நாம் ஒன்றாய் உரைத்தால் ஐ. நாவுமே தழுதழுக்கும்....

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம் அண்ணா

தங்கள் அறிவுரைக்கு நன்றி

தங்களின் எண்ணக்கருவின்படி எனது கையெழுத்தை மாற்றிவிட்டேன்

மீண்டும் நன்றி

அன்பகலா பெருமதிப்புக்குரிய காரணிகன்,

நான் கூறிய கருத்துக்களை உள்வாங்கி அதற்காகக் கோபம் அடையாது தாங்கள் மாற்றத்தினை ஏற்படுத்தியமைக்காக என்றென்றும் சிரந்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நான் தமிழ் மீது கருணை காட்டுவதற்குக் காரணம் யாதெனில் இன்னமும் 250 வருடங்களில் தமிழ் மொழி சிதைவடைந்து விடும் என்றும் 1000 வருடங்களுக்குள் தமிழ் மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்று ஓர் கணிப்புக் கூறி இருக்கின்றது. தமிழ் மொழியின் அழிவை நாம் தடுக்க வேண்டுமானால் எமக்கென ஒரு நாடு வேண்டும் இல்லையேல் அது 500 வருடங்களில் கூட முற்றாக அழிந்துவிடும் என்று கூறப்படுகின்றது. இதனை நாம் தடுக்க வேண்டுமானல் நாம் தனிநாடு ஒன்றை அமைக்க வேண்டும், அல்லது அடுத்து வரும் எம் சமுதாயங்களுக்காவது எமது செம்மொழியை எடுத்துச் செல்லவேண்டும். இதனால் நாம் அதன் அழிவின் காலத்தை ஓரளவு தக்கவைக்க முடியும். நாம் எம் நாடு ஒன்றினை அமைக்கும்வரை எமக்கான தமிழ் மொழியின் பணி என்பது எம்மிடமே உள்ளது.

என்றென்றும் என் நெஞ்சிலிருந்து ஆயிரமாயிரம் நன்றிகளை உங்களுக்காக உதிர்க்கின்றேன்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

தங்கள் நன்றிகளுக்காக உவகை கொள்ளுகின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.