Jump to content

யாழ்நிலவனின் மீள்வருகை...


Recommended Posts

:blink:

வல்வைசகாரா... உன் கவிதைகள் படித்திருக்கின்றேன்... உன் எழுத்தா என்று கூடத்தெரியாது ஆனாலும் மென்றிருக்கின்றேன்... கருப்பட்டி எடுத்து, கடலைமாவிற் குழைத்து உருண்டையாக்கி உண்டசுகமெனக்கு உன் கவி படிக்கையிலே. திக்கற்றிருக்கும் திருமொழியன் அவர்கட்கு, திக்கெற்றிலும் திக்கற்றிருக்கும் தமிழனுக்கு உன்வரியில் உவமை பல இட்டு, உருப்படியாய் இருவரியில் கவிதன்னும் இப்போ வரைவதற்கு மனமா வரவில்லை? உன் மானம் போகிறதே, இதற்குப்பின் எதற்குனக்குச் சேலை? கவி என்ற சேலை கட்டி நீயிருக்கிறாய், உன் கவிச்சேலை மேலேயும் மானம் பறக்கிறதே? திருடென திடீரென உணராதவன், உன் கவிவரியால் உடனடியாய் மாற்று. உத்தமனாய் உன்னால் செய்வதற்கு முடியும் என்பது எனக்குத் தெரிகிறது. உன்னால் முடியாது என்று ஏன் சோம்பிப் போயிருக்கின்றாய்? இது எமது உரிமைப்போர். இது எங்கள் நாடி நரம்புகளில் புடைக்கவேண்டிய இரத்தம். தொடரட்டும் உன்பணி, பெருகட்டும் உன் வரி. தட்டிக்கொடுப்பேன் உன் தோள்களில் நானிருக்கும் வரைக்கும். விடுதலைக்காய் எழுதினால்... எட்டி மிதிப்பேன் உன் மார்பிலே திசைகெட்டு ஓடினால்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

அன்பகலா என் உறவுகள் அனைவருக்கும் சிர்ந்தாழ்த்தி வணக்கம், உங்களிடம் ஓர் கருணை வேண்டுகோள். யாழ் நிலவன் என்றும் ஒரே கொள்கை, ஒரே வழியில் எழுதுபவன். தயவுசெய்து என்னைத் துரோகிப்பட்டம் கட்டி ஒதுக்காதிருங்கள். வெட்டுவது வாளாயினும் வெட்டுபவனும் இருக்கவேண்டுமே... சரிதான். வெட்டும் வாளாக எழுதுவதற்காகக் காத்திருக்கிறேன்... வெட்டுபவனாக இருந்திடாதீர்கள். அதற்காக துரோகிகள் பட்டமோ, பக்கம் மாறியவர்கள் என்ற பக்கமோ சாராமல் என் எழுத்து என்றென்றும் தமிழ், தமிழ் ஈழம், எம் தேசம், விடுதலை என்ற ஓரச்சில் மட்டுமே என் சக்கரம் சுழலும். யார் பெயரொ... யார் ஊரோ அடங்காது எழுத ஆவலுடன் இருக்கின்றேன்... எம் உறவுகள் எனக்குறுதுணைவேண்டும் என்று மன்றாடி நிற்கின்றேன். தாங்கும் சக்தியற்றிருக்கும் எனக்கோ இப் பூமித்தாய் என்னைத் தாங்கும் வரைக்கும் தமிழ் எழுத ஆவலுடன் இருக்கின்றேன். என்றென்றும் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் உங்கள் யாழ் உறவு யாழ் நிலவன்

Link to comment
Share on other sites

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

வடக்கிலேயிருந்தும் தெற்கிலே இருந்தும் எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்பின் இரத்தச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் எம்மிடம் ஒற்றுமை இல்லையே... அவ்வொற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். எழுத்தாளர்களால் பூமியைப் பிளந்தும் புதுயுகம் படைக்கலாம். நான் சொன்ன வார்த்தைகளை ஒரு நிமிடம் மீண்டும் நினைக்கின்றேன் .

களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்

பேனாகூட பெருந்திசை மாற்றும்

நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல

துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்....

(http://yarlnilavan.wordpress.com/2009/03/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa/)

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்.......

(http://yarlnilavan.wordpress.com/2009/03/06/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf/)

தமிழ் வரிகள் கூட வாழ்க்கையை எழுது... வரலாறூ எழுத தமிழ் மொழியுமே போதும்... நான் மட்டுமுரைத்தால் நா மட்டும் தழுதழுக்கும் நாம் ஒன்றாய் உரைத்தால் ஐ. நாவுமே தழுதழுக்கும்....

Link to comment
Share on other sites

... நிலவு எப்பவும் பவுர்ணமிக்கு முகம் காட்டுவது போல் யாழிலும் .... <_<

Link to comment
Share on other sites

வாங்கோ அண்ணை :D

வருகின்றேன்... என்னவோ வசந்தமாம், உதயமாம், ஒண்டுமே விளங்கேல்ல... நன்றி வரவேற்பிற்கு

... நிலவு எப்பவும் பவுர்ணமிக்கு முகம் காட்டுவது போல் யாழிலும் .... <_<

நிலவு பௌர்ணமிக்கு முகம் காட்டும் என்கின்றீர்களே. தினம் உதிக்கும் சூரியனுக்கோ இரு வாழ்வு, உதயம், மறைவு, ஆனால் தினம் தேய்ந்து தினம் வளரும் சந்திரனுக்கோ பல வாழ்வு, பௌர்ணமி, அமாவாசை, பஞ்சமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி ஏன்? தினமும் நானுதித்தால் இப்பெயர்தான் கிடைத்திருமா என்ன? இருந்து எப்போதாவது வந்தாற்கூட உங்கள் அனைவரையும் உள்ளத்திலே சுமந்திருக்கின்றேன். :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைசகாரா... உன் கவிதைகள் படித்திருக்கின்றேன்... உன் எழுத்தா என்று கூடத்தெரியாது ஆனாலும் மென்றிருக்கின்றேன்... கருப்பட்டி எடுத்து, கடலைமாவிற் குழைத்து உருண்டையாக்கி உண்டசுகமெனக்கு உன் கவி படிக்கையிலே. திக்கற்றிருக்கும் திருமொழியன் அவர்கட்கு, திக்கெற்றிலும் திக்கற்றிருக்கும் தமிழனுக்கு உன்வரியில் உவமை பல இட்டு, உருப்படியாய் இருவரியில் கவிதன்னும் இப்போ வரைவதற்கு மனமா வரவில்லை? உன் மானம் போகிறதே, இதற்குப்பின் எதற்குனக்குச் சேலை? கவி என்ற சேலை கட்டி நீயிருக்கிறாய், உன் கவிச்சேலை மேலேயும் மானம் பறக்கிறதே? திருடென திடீரென உணராதவன், உன் கவிவரியால் உடனடியாய் மாற்று. உத்தமனாய் உன்னால் செய்வதற்கு முடியும் என்பது எனக்குத் தெரிகிறது. உன்னால் முடியாது என்று ஏன் சோம்பிப் போயிருக்கின்றாய்? இது எமது உரிமைப்போர். இது எங்கள் நாடி நரம்புகளில் புடைக்கவேண்டிய இரத்தம். தொடரட்டும் உன்பணி, பெருகட்டும் உன் வரி. தட்டிக்கொடுப்பேன் உன் தோள்களில் நானிருக்கும் வரைக்கும். விடுதலைக்காய் எழுதினால்... எட்டி மிதிப்பேன் உன் மார்பிலே திசைகெட்டு ஓடினால்.

யாழ் நிலவன்,

இப்போது கவிதையில் சேலை நெய்து அம்மணத்தைக்காட்டுவதிலும் நிதானத்தில் நெய்யும் சேலை நிச்சயம் மானம் காக்கும்.

Link to comment
Share on other sites

யாழ் நிலவன்,

இப்போது கவிதையில் சேலை நெய்து அம்மணத்தைக்காட்டுவதிலும் நிதானத்தில் நெய்யும் சேலை நிச்சயம் மானம் காக்கும்.

நெய்யும் வரை பொறுத்திருப்பதா? நெய்யும் வரை மானத்தை மறைத்திருப்பதா மேல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... நிலவன், வவை சகாரா, .... போன்றவர்கள் தொடர்ந்து கவிதை எழுத வேண்டும், பல தடவை யாழ்களத்தில் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன். நான் வல்வை சகாராவின் விசிறி.

Link to comment
Share on other sites

... நிலவன், வவை சகாரா, .... போன்றவர்கள் தொடர்ந்து கவிதை எழுத வேண்டும், பல தடவை யாழ்களத்தில் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன். நான் வல்வை சகாராவின் விசிறி.

வணக்கம் ராஜ் மோகன்,

வல்வை சகாரா தமிழிலே பலம் பொருந்தியவர். அவர் இன்னமும் பல படைப்புக்களைப் படைக்கவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. அதுவும் இப்போது அவர் வேலைப்பழுவின்றி இருக்கின்றார். காலத்தின் கடமையாக எண்ணி அவர் இன்னமும் படைப்புக்களைப் படைப்பார் உங்களைப்போலவே நானும் எதிர்பார்க்கின்றேன். அத்தோடு தங்களின் பதிலுக்கு என் மனங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ நிலவன் நலமா?.

வணக்கம் காரணிகன்,

நான் நலமே, தாங்களும் நலனுடன் வாழ வாழ்த்துகின்றேன். தங்கள் பெயர் என்னவோ உண்மையானதோ அல்லது புனை பெயரோ யானறியேன். இருப்பினும் சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். தங்களின் பெயர் பல அர்த்தம் நிரம்பிய பெயர். தாங்கள் என்ன கருத்தில் அதனைப் பாவிக்கின்றீர்களோ தெரியவில்லை, இருப்பினும் கார் + அணிகன் = காரணிகன். அதாவது கார் என்பது கருமை என்பதையும், அணிகன் என்பது ஆண்பால் விகுதியேற்ற அணிந்திருப்போன் என்பது. எனவே இப்பெயரினை பண்டைய தமிழ் இலக்கியத்தில் உவமையாகப் பாவித்திருக்கின்றார்கள். இதிலே பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இவை பற்றி மேலும் விளக்குகின்றேன். எனினும் தங்கள் அடிக்குறிப்பு என் மனதை வாட்டிவிட்டது. பணம் பதவி வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உன் பிறப்பின் அடையாளம். இன்று உன் அடையாளம் எவ்வாறிருக்கின்றது? எவ்வுலகில் வாழினும், எவ்வாறு வாழினும், உனதாயினும், உன் சந்ததியின் அடையாளம் என்றுமே, தமிழன், தமிழீழத்தவன் என்பது அழியப்போவதில்லை. மானிட வர்க்கம் பல பரிணாம வளர்ச்சியினூடே வளர்ந்தது. என்றென்றும் உன் வம்சமானாலும், உனதானாலும் உன்னுடைய DNA என்று அழைக்கப்படும் "இனக்கீற்று" நீ திராவிடன் என்பதையே உரைத்து நிற்கும். உன் வாழ்வியலமைப்பு எவ்வாறு மாறினும், இனக்கீற்றில் உன் மொழி, தேசியம், உன் வாழ்வாதாரம் என்பன என்றுமே அழிக்கப்படப்போவதில்லை. மொழியும், தேசியமுமே உனக்கான அடையாளம். பணமோ பதவியோ உன் அடையாளத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை. தமிழனாக வாழ், ஈழத்தவனாக இரு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜ் மோகன்,

வல்வை சகாரா தமிழிலே பலம் பொருந்தியவர். அவர் இன்னமும் பல படைப்புக்களைப் படைக்கவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. அதுவும் இப்போது அவர் வேலைப்பழுவின்றி இருக்கின்றார். காலத்தின் கடமையாக எண்ணி அவர் இன்னமும் படைப்புக்களைப் படைப்பார் உங்களைப்போலவே நானும் எதிர்பார்க்கின்றேன்.

வணக்கம் யாழ்நிலவன் ,

நெஞ்சில் எப்போதுமே கனமான வலிகளும் சுமைகளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கின்றன. வாய் திறந்து, எனை வெளிக்காட்டி அழுது தீர்க்க முடியாத வலிகள் அவை. எப்போதாவதுதான் கண்மடல்கள் கனத்து ஈரலிப்பை வெளிப்படுத்தும். இப்போது இந்த விசைப்பலகையில் உட்கார்ந்து எழுதும்போது விசைப்பலகையில் விழிநீர் சொரிந்து விரல்களைப் பிசுபிசுக்க வைக்கிறது. அகமும், புறமுமாக வேதனைகளும் பாரிய ஏமாற்றங்களையும் தேக்கிக் கொண்டு திணறுகிறது வாழ்க்கை. விடுதலையின் வாழ்வை யாசித்தவர்கள் விடை தெரியாத விடுகதைகளாக.... பேச முடியவில்லை. எவரையும் சேர்க்கமுடியவில்லை. புலம்பெயர் சமூகத்திடம் பகுதிபகுதியாகச் சகதி பாய்ந்து விட்டது. தெரிந்து கொண்டே தவறிழைக்கிறார்கள், புரிந்துகொண்டே பொல்லாங்கு சொல்கிறார்கள். எம்மினத்தை ஒடுக்கும், சிதைக்கும் பொது எதிரியை விட்டுவிட்டு எமக்குள் வைரிகளாக மூர்க்கடைந்து மீளாநிலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவரை நோவது? விடுதலை நோக்கிய பயணத்திற்கு எல்லோரும் வேண்டும். என்னால் முடியுமா?.... இப்போதே பாதி செத்துவிட்டேன். என்னினத்தை நான் முழுமையாக வெறுக்கும்போது உயிரோடு இருக்கமாட்டேன். இன்றைய நாட்களில் புலத்துக்குழப்பங்களால் இடிந்துபோயிருப்பது என் இனம் மட்டுமல்ல என் தமிழுந்தான் யாழ்நிலவன்.

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்நிலவன் ,

நெஞ்சில் எப்போதுமே கனமான வலிகளும் சுமைகளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கின்றன. வாய் திறந்து, எனை வெளிக்காட்டி அழுது தீர்க்க முடியாத வலிகள் அவை. எப்போதாவதுதான் கண்மடல்கள் கனத்து ஈரலிப்பை வெளிப்படுத்தும். இப்போது இந்த விசைப்பலகையில் உட்கார்ந்து எழுதும்போது விசைப்பலகையில் விழிநீர் சொரிந்து விரல்களைப் பிசுபிசுக்க வைக்கிறது. அகமும், புறமுமாக வேதனைகளும் பாரிய ஏமாற்றங்களையும் தேக்கிக் கொண்டு திணறுகிறது வாழ்க்கை. விடுதலையின் வாழ்வை யாசித்தவர்கள் விடை தெரியாத விடுகதைகளாக.... பேச முடியவில்லை. எவரையும் சேர்க்கமுடியவில்லை. புலம்பெயர் சமூகத்திடம் பகுதிபகுதியாகச் சகதி பாய்ந்து விட்டது. தெரிந்து கொண்டே தவறிழைக்கிறார்கள், புரிந்துகொண்டே பொல்லாங்கு சொல்கிறார்கள். எம்மினத்தை ஒடுக்கும், சிதைக்கும் பொது எதிரியை விட்டுவிட்டு எமக்குள் வைரிகளாக மூர்க்கடைந்து மீளாநிலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவரை நோவது? விடுதலை நோக்கிய பயணத்திற்கு எல்லோரும் வேண்டும். என்னால் முடியுமா?.... இப்போதே பாதி செத்துவிட்டேன். என்னினத்தை நான் முழுமையாக வெறுக்கும்போது உயிரோடு இருக்கமாட்டேன். இன்றைய நாட்களில் புலத்துக்குழப்பங்களால் இடிந்துபோயிருப்பது என் இனம் மட்டுமல்ல என் தமிழுந்தான் யாழ்நிலவன்.

அன்பகலா வல்வைசகாரா,

ஓர் எழுத்தாளன் என்பவன் எவ்வலி வேதனை இருந்தாலும், அதனையும் பொறுத்து எழுதுபவனே சிறந்த எழுத்தாளன். அடக்கு முறைக்கும், கவலைக்கும், எதிர்ப்புக்களுக்கும் அடிபணியாது எவனொருவன் எழுதுகின்றானோ அங்கேதான் நீதியும், உண்மையும் பொதிந்து கிடக்கிடக்கும். அதேபோன்று ஓர் திறமையான கவிஞனும் அப்படித்தான். பெயர் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் ஒரு பிரபலமான தற்போதைய பாடலாசிரியர் தனது பாடல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும்போது, அவருடைய மனைவியால் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் சிறிது குழம்பினார், ஆனால் அவர் குறிக்கோளோ அந்தக் கவிதையிலேயே இருந்தது. மனைவியின் திட்டுக்களுக்கும் ஏச்சுக்களுக்கும் காது கொடுக்காமல் எழுதினார். அவர் வறுமையில் இருந்தார் அப்போது, மனைவியிடம் ஏற்பட்ட தகராறும் அவரது வறுமை சம்பந்தமானதாகவே, அன்று சமையலுக்கு கூட ஏதுமில்லை என்கின்ற நிலையிலேயே ஏற்பட்டது. அவர் புலன்களைச் சிதறவிடாமல் எழுதி எப்பாடு பட்டோ அந்தக் கவிதையை ஓர் இயக்குனர் கையில் கிடைக்கும்படி கொடுத்தனுப்புகின்றார். இயக்குனர் பார்த்ததும் அக்கவிதை மிகச்சிறந்தது என்று சொல்லி பெருமளவு பணத்தைக் கொடுக்கின்றார். அதிலே பல கைமாறி சிறிதளவு பணம் இரண்டு தினங்களில் அவர் கைகளுக்கு கிடைக்கின்றது. இரண்டு தினங்களாக நா நனைத்துக் காத்திருந்த அவருக்கு அப்பணமோ பெரும் பணமாக தோன்ற மேலும் எழுதினார். அவருடைய இரண்டு பாடல்கள் ஒரே திரைப்படத்தில் இடம்பெற்றது. இரண்டுமே பிரசித்தி பெற, இன்று அவர் ஓர் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் இருந்து வருகின்றார்.

இது ஓர் உண்மைச் சம்பவம். அது போன்றுதான், எம் மன வலிகளும் வேதனைகளுமே எமது கவிதைகளுக்கான உரம். எமது எழுத்துக்களுக்கான அடித்தளம். வலிகளையும், வேதனைகளையும் மனத்திலே சுமக்கும்போதுதான் வரிகளும் கனமாக இருக்கும். சிந்தனையை ஒருங்கிணைத்து எம் இனத்தை, எம்மினத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கும் கவிதைகளை, எம் உணர்ச்சிகளை என்றுமே குன்றவிடாது தமிழனாக ஒருங்கிணைத்து வைத்திருக்க தங்கள் ஆக்கங்களும் தேவை. தங்களால் முடியாது என்று எதுவுமே இல்லை. மாபெரும் வீரன் அலெக்ஸாண்டரின் அகராதியில் முடியாது என்று ஒன்று இல்லை என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம், அதுபோன்று உங்களாலும் முடியாதது என்று எதுவுமில்லை. முடியும். நிச்சயம் முடியும், ஓர் சிறு குறிப்பு, யாரையும் தாக்கி எழுதும் போதுதான் அல்லது யாரையும் சார்ந்து எழுதும் போதுதான் விமர்சனங்கள் எழும். ஒரே குறிக்கோளை மனதிலே வைத்து எழுதினால் உங்கள் எழுத்துக்கள் கூடப் பேசும். எம் தமிழன் என்கின்ற உணர்ச்சி... தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்து எம் தேசத்தை வென்றெடுக்க வேண்டும் என்கின்ற ஓர் குறிக்கோள் மட்டுமே. வல்வை உங்களால் முடியும். எம் மக்களின் உணர்ச்சிகளை, எம் மக்களின் ஒருங்கிணைப்பிற்கு தங்கள் ஆக்கங்களால் சாதிக்க முடியும். தங்கள் கவிதைகளை நான் பலமுறை படித்திருக்கின்றேன்.

எழுதுங்கள், உங்கள் பேனா முனை மழுங்கும் வரை, உங்கள் உயிர் தமிழ் என்னும் ஒன்றைத் தாங்கி வரும் வரையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன்,

மகிழ்ச்சியளிக்கின்றது தங்களின் மீள் வருகை

வருக,வருகவென வரவேற்க விரிகிறதென் இருகை!!

வாழ்த்துக்கள்!!! :D

Link to comment
Share on other sites

name='யாழ்நிலவன்' timestamp='1294414927' post='631949']

வணக்கம் காரணிகன்,

நான் நலமே, தாங்களும் நலனுடன் வாழ வாழ்த்துகின்றேன். தங்கள் பெயர் என்னவோ உண்மையானதோ அல்லது புனை பெயரோ யானறியேன். இருப்பினும் சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். தங்களின் பெயர் பல அர்த்தம் நிரம்பிய பெயர். தாங்கள் என்ன கருத்தில் அதனைப் பாவிக்கின்றீர்களோ தெரியவில்லை, இருப்பினும் கார் + அணிகன் = காரணிகன். அதாவது கார் என்பது கருமை என்பதையும், அணிகன் என்பது ஆண்பால் விகுதியேற்ற அணிந்திருப்போன் என்பது. எனவே இப்பெயரினை பண்டைய தமிழ் இலக்கியத்தில் உவமையாகப் பாவித்திருக்கின்றார்கள். இதிலே பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இவை பற்றி மேலும் விளக்குகின்றேன். எனினும் தங்கள் அடிக்குறிப்பு என் மனதை வாட்டிவிட்டது. பணம் பதவி வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உன் பிறப்பின் அடையாளம். இன்று உன் அடையாளம் எவ்வாறிருக்கின்றது? எவ்வுலகில் வாழினும், எவ்வாறு வாழினும், உனதாயினும், உன் சந்ததியின் அடையாளம் என்றுமே, தமிழன், தமிழீழத்தவன் என்பது அழியப்போவதில்லை. மானிட வர்க்கம் பல பரிணாம வளர்ச்சியினூடே வளர்ந்தது. என்றென்றும் உன் வம்சமானாலும், உனதானாலும் உன்னுடைய DNA என்று அழைக்கப்படும் "இனக்கீற்று" நீ திராவிடன் என்பதையே உரைத்து நிற்கும். உன் வாழ்வியலமைப்பு எவ்வாறு மாறினும், இனக்கீற்றில் உன் மொழி, தேசியம், உன் வாழ்வாதாரம் என்பன என்றுமே அழிக்கப்படப்போவதில்லை. மொழியும், தேசியமுமே உனக்கான அடையாளம். பணமோ பதவியோ உன் அடையாளத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை. தமிழனாக வாழ், ஈழத்தவனாக இரு...

வணக்கம் அண்ணா

காரணிகன் புனைப்பெயர்தான் முன்னர் சொந்தப் பெயரில்தான் எழுதிவந்தேன்

பின்னர்தான் காரணிகன் என்ற புனைப் பெயருக்குள் புகுந்துகொண்டேன்

காரணிகன் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டதுபோலும் பொருள்படலாம்

தமிழில் சில சொற்களுக்கு பல அர்த்தங்கள் உண்டு

நான் தெரிவு செய்த காரணிகன் என்ற பெயரின் அர்த்தம்

நடுவர் மத்தியஸ்த்தர்என்பதை குறிக்கிறது

ஆங்கிலத்தில் arbitrator என்று சொல்லப்படுகிறது

எனது அடிக்குறப்பிலுள்ள வாக்கியம் தங்கள் மனதை வாட்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள்

அதனை நான் எதிர்மறையாகத்தான் எழுதியுள்ளேன்

பணத்தாசை பதவி ஆசை கொண்டு நம் இனத்துக்கு எதிராக குழிபறிக்கும்நம்இனத்தை சேர்ந்தவர்களே

பணம் பதவிக்காக தமிழ் இனத்தை விற்று பிழைக்கிறார்களே அந்த ஆதங்கத்தில் இடப்பட்டதுதான்

இந்த அடிக்குறிப்பு

நான் என்றும் தமிழனாகவே வாழ்கின்றேன் ஈழத்தவனாகவே இருக்கின்றேன்

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் நிலவன்,

மகிழ்ச்சியளிக்கின்றது தங்களின் மீள் வருகை

வருக,வருகவென வரவேற்க விரிகிறதென் இருகை!!

வாழ்த்துக்கள்!!! :D

வணக்கம், தங்களின் வரவேற்பிற்கு அகமகிழ்கின்றேன்.

கொல்லைக்குள்ளேயே நின்றால் எப்படி ? :D வாருங்கோ யாழ்நிலவன்.

வணக்கம் இணையவன்,

கொல்லைக்குள்ளையே நிக்க வைச்சிடுறாங்கள். என்னத்தைச் செய்யுறது? நானும் வெளியில வந்து எழுதுவம் எண்டு யோசிச்சா, பெரும் பாணம் ஒன்று வைத்திருக்குறாங்கள், "துரோகி". எங்க எய்து விடுவார்களோ என்று பயம் வேறு, அம்பெய்தால் என்ன என்று எழுதினால் வரும் கருத்தூட்டங்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனவே கொஞ்சம் தாமதமெடுத்து வருகின்றேன். நிச்சயம் எழுதுவேன்.

Link to comment
Share on other sites

எனது அடிக்குறப்பிலுள்ள வாக்கியம் தங்கள் மனதை வாட்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள்

அதனை நான் எதிர்மறையாகத்தான் எழுதியுள்ளேன்

பணத்தாசை பதவி ஆசை கொண்டு நம் இனத்துக்கு எதிராக குழிபறிக்கும்நம்இனத்தை சேர்ந்தவர்களே

பணம் பதவிக்காக தமிழ் இனத்தை விற்று பிழைக்கிறார்களே அந்த ஆதங்கத்தில் இடப்பட்டதுதான்

இந்த அடிக்குறிப்பு

நான் என்றும் தமிழனாகவே வாழ்கின்றேன் ஈழத்தவனாகவே இருக்கின்றேன்

வணக்கம் காரணிகன்,

தங்கள் அடிக்குறிப்புப் பற்றி சொல்லவேண்டும். அடிக்குறிப்பு என்பது, சில முக்கிய தகவல்களையோ அல்லது நற் செய்திகளையோ தாங்கி வருவதாக இருப்பதே சிறந்தது எனக்கூறுவார்கள். காரணம், தங்கள் ஒவ்வொரு மடலிலும் அது இடம்பெறப்போகின்றது. பார்ப்பவர்கள், மனதில் திரும்பத்திரும்ப பதியப்படும்போது அது அவர்கள் மனதுக்குள் மனப்பாடமாகிவிடும். அத்தோடு அது அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விடும். அவர்கள் வாழ்வும் அவ்வாறே மாறும். எனவேதான் அதிற் சிறிது கவனத்தைச் செலுத்தினேன். இளம் சமுதாயம் முதல் முது சமுதாயம் வரை உலவும் இவ் இணையத்தில், தங்கள் கருத்தினைப் பார்க்கும் ஓர் இளம் சமுதாயப் பிள்ளை மனதில் இவ் எண்ண ஓட்டம் ஓட ஆரம்பிக்குமானால், தேசியம் என்பதுவும், தன்னாட்சி என்பதுவும், விடுதலை என்பதுவும் பின்னர் அடுத்த சமுதாயத்தின் மனக்கண்ணில் ஓர் கேலிக்கூத்தான விடயமாக மாற்றப்பட்டுவிடும்.

எனவேதான், நான் அதில் சிரத்தை எடுத்தமைக்கான காரணம்.

Link to comment
Share on other sites

வணக்கம் காரணிகன்,

தங்கள் அடிக்குறிப்புப் பற்றி சொல்லவேண்டும். அடிக்குறிப்பு என்பது, சில முக்கிய தகவல்களையோ அல்லது நற் செய்திகளையோ தாங்கி வருவதாக இருப்பதே சிறந்தது எனக்கூறுவார்கள். காரணம், தங்கள் ஒவ்வொரு மடலிலும் அது இடம்பெறப்போகின்றது. பார்ப்பவர்கள், மனதில் திரும்பத்திரும்ப பதியப்படும்போது அது அவர்கள் மனதுக்குள் மனப்பாடமாகிவிடும். அத்தோடு அது அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விடும். அவர்கள் வாழ்வும் அவ்வாறே மாறும். எனவேதான் அதிற் சிறிது கவனத்தைச் செலுத்தினேன். இளம் சமுதாயம் முதல் முது சமுதாயம் வரை உலவும் இவ் இணையத்தில், தங்கள் கருத்தினைப் பார்க்கும் ஓர் இளம் சமுதாயப் பிள்ளை மனதில் இவ் எண்ண ஓட்டம் ஓட ஆரம்பிக்குமானால், தேசியம் என்பதுவும், தன்னாட்சி என்பதுவும், விடுதலை என்பதுவும் பின்னர் அடுத்த சமுதாயத்தின் மனக்கண்ணில் ஓர் கேலிக்கூத்தான விடயமாக மாற்றப்பட்டுவிடும்.

எனவேதான், நான் அதில் சிரத்தை எடுத்தமைக்கான காரணம்.

வணக்கம் அண்ணா

தங்கள் அறிவுரைக்கு நன்றி

தங்களின் எண்ணக்கருவின்படி எனது கையெழுத்தை மாற்றிவிட்டேன்

மீண்டும் நன்றி

Link to comment
Share on other sites

வடக்கிலேயிருந்தும் தெற்கிலே இருந்தும் எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்பின் இரத்தச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் எம்மிடம் ஒற்றுமை இல்லையே... அவ்வொற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். எழுத்தாளர்களால் பூமியைப் பிளந்தும் புதுயுகம் படைக்கலாம். நான் சொன்ன வார்த்தைகளை ஒரு நிமிடம் மீண்டும் நினைக்கின்றேன் .

களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்

பேனாகூட பெருந்திசை மாற்றும்

நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல

துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்....

(http://yarlnilavan.wordpress.com/2009/03/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa/)

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்.......

(http://yarlnilavan.wordpress.com/2009/03/06/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf/)

தமிழ் வரிகள் கூட வாழ்க்கையை எழுது... வரலாறூ எழுத தமிழ் மொழியுமே போதும்... நான் மட்டுமுரைத்தால் நா மட்டும் தழுதழுக்கும் நாம் ஒன்றாய் உரைத்தால் ஐ. நாவுமே தழுதழுக்கும்....

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம் அண்ணா

தங்கள் அறிவுரைக்கு நன்றி

தங்களின் எண்ணக்கருவின்படி எனது கையெழுத்தை மாற்றிவிட்டேன்

மீண்டும் நன்றி

அன்பகலா பெருமதிப்புக்குரிய காரணிகன்,

நான் கூறிய கருத்துக்களை உள்வாங்கி அதற்காகக் கோபம் அடையாது தாங்கள் மாற்றத்தினை ஏற்படுத்தியமைக்காக என்றென்றும் சிரந்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நான் தமிழ் மீது கருணை காட்டுவதற்குக் காரணம் யாதெனில் இன்னமும் 250 வருடங்களில் தமிழ் மொழி சிதைவடைந்து விடும் என்றும் 1000 வருடங்களுக்குள் தமிழ் மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்று ஓர் கணிப்புக் கூறி இருக்கின்றது. தமிழ் மொழியின் அழிவை நாம் தடுக்க வேண்டுமானால் எமக்கென ஒரு நாடு வேண்டும் இல்லையேல் அது 500 வருடங்களில் கூட முற்றாக அழிந்துவிடும் என்று கூறப்படுகின்றது. இதனை நாம் தடுக்க வேண்டுமானல் நாம் தனிநாடு ஒன்றை அமைக்க வேண்டும், அல்லது அடுத்து வரும் எம் சமுதாயங்களுக்காவது எமது செம்மொழியை எடுத்துச் செல்லவேண்டும். இதனால் நாம் அதன் அழிவின் காலத்தை ஓரளவு தக்கவைக்க முடியும். நாம் எம் நாடு ஒன்றினை அமைக்கும்வரை எமக்கான தமிழ் மொழியின் பணி என்பது எம்மிடமே உள்ளது.

என்றென்றும் என் நெஞ்சிலிருந்து ஆயிரமாயிரம் நன்றிகளை உங்களுக்காக உதிர்க்கின்றேன்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

தங்கள் நன்றிகளுக்காக உவகை கொள்ளுகின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.