Jump to content

நண்டுக்கறி


Recommended Posts

தேவையான பொருட்கள்

சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம்

வெட்டிய வெங்காயம் - 100 கிராம்

வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம்

கருவேப்பிலை - தேவையான அளவு

சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு

வெந்தயம் - தேவையான அளவு

தேங்காய்ப் பால் - தேவையான அளவு

பழப்புளி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1. தாச்சியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சிறிதாக வெட்டிய உள்ளி, வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

2. தாளிதம் பொன்னிறமாக வரும்போது அதில் சுத்தப்படுத்திய நண்டை சேர்த்து வதங்க விடுங்கள்.

3. பின்னர்தேங்காய்ப் பால், பழப்புளி, யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.

4. பதமான பதத்தில் இறக்கிப் பரிமாறுங்கள்.

இந்நண்டுக் கறிக்கு யாழ்ப்பாணத்து மக்கள் முருங்கை இலை சேர்ப்பது அவர்களின் தனித்துவமான உணவுப் பாணியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா படமும் போட்டிருந்தால் அந்த மாதிரி இருந்திருக்கும். :( இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலக்கால் நண்டு என்றால் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலக்கால் நண்டு என்றால் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்! :rolleyes:

nandu+1.jpg

அமாவாசையில பிடிச்ச நீலக்கால் , நண்டு இன்னும் சுவையாக இருக்கும். :wub:

நண்டுக்கறிக்கு கட்டாயம் இஞ்சி போடவேணும்.

.

Link to comment
Share on other sites

நண்டின் காலை ஒருபக்கமாக மெதுவாகக் கடித்து மற்றப் பக்கத்தால் உள்ளிருக்கும் குழம்பை உறிஞ்சுவதே தனி ருசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா படமும் போட்டிருந்தால் அந்த மாதிரி இருந்திருக்கும். :rolleyes: இணைப்புக்கு நன்றி.

இப்பவெல்லாம் எங்கடை சனங்களுக்கு எதையெடுத்தாலும் படத்தோடை விண்ணாணம் பாக்கோணும் போலை கிடக்கு :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா படமும் போட்டிருந்தால் அந்த மாதிரி இருந்திருக்கும். :rolleyes: இணைப்புக்கு நன்றி.

DSC03606_thumb4.jpg?imgmax=800:wub:

Link to comment
Share on other sites

நண்டுக்கறியை இறக்கும் பொது கொஞ்சம் அரிசி, பெருஞ்சீரகம் , மிளகு வறுத்து மாவாக அரைத்துப் போட்டால் நன்றாக இருக்கும். முகத்துவாரங்களில் (ஆறும் கடலும் சந்திக்குமிடம்) நண்டுகள் (கொஞ்சம் செம் மஞ்சள் நிறம் கலந்திருக்கும்) மிக ருசியானவை. நண்டுக்கறியை அடுத்த நாள் தேங்காய் பூ கலந்த புட்டுடன் சாப்பிட ஊறி அந்த மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

:huh: :huh: :o:D ஓய் தானா சீனா என்ன காச்சினதில 3 நண்டுக்காலை இங்காலை எறியிறது கவ்விக்கொண்டு ஓடமாட்டமே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSC03606_thumb4.jpg?imgmax=800:lol:

நன்றி சிறி.இதைப்பாத்துக்கொன்டே ஒன்டை முழசா உள்ளுக்கு அனுப்பலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

இதில கறிவச்சால் எப்பிடி இருக்கும்?? :D

king-crab.jpg

Link to comment
Share on other sites

இப்பிடித்தான் இருக்கும்..! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.