Jump to content

குற்றமில்லாது குடிப்பெருமை காத்த குமார்


Newsbot

Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்குமிடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து, பல்வேறுபட்ட நிகழ்வுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர் வாழ்வில் ஏற்பட்டு போய்விட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நன்மைகளிலொன்றாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மறைந்த தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தினக்கூட்டம் யாழ்ப்பாணம், வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ள சமயம் இந்நினைவுரையை வெளிப்படுத்துகின்றேன்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த வேளையில் இருந்திருந்தால் இன்னும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தொடர்ந்தும் அங்கே அடைபட்டுக் கொண்டிருக்க அனுமதித்திருக்க மாட்டார்.

சிறைப்பட்ட இளைஞர்களுக்குத் தான் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நேரடியான சேவையை அனுபவிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கிடைத்தது.

நானும் சிறையில் வாடி, வதங்கி வாழ்வே வெறுமையாகிப் போன ஒரு பொழுதுகளில் அந்த மாமனிதர் அவர்களுடாகவே விடுதலை பெற்று வெளியே வந்த சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முயன்றேன். முடியவில்லை. தப்பியோடி இந்த சுவிஸ் தேசம் வந்து தஞ்சம் பெற்றேன்.

"அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டாம். ஒரேயொரு கருணைப் பார்வை பார்த்தாலே போதும். நொறுங்கிக் கிடந்த இதயத் துண்டங்கள் தானாகச் சேர்ந்து போகும்" இந்த நிலையில்தான் சிறைக் கம்பிகளுக்குப் பின்னே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களில் ஒருவனாக நானும் கிடந்தேன்.

உலகிலேயே மிக அரிதாக மட்டுமே ஒரு சில நாடுகளில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் எனும் சட்டத்தின்கீழ் எனக்கெதிராகவும் அரசு குற்றம்சாட்டியிருந்தது. ஒருவர் விடுதலை இயக்கமொன்றில் இருக்கின்றாரென்னு தொ¢ந்திருந்தும் காட்டிக் கொடுக்கத் தவறினால், அவருக்கெதிராகக் குற்றம்சாட்டக்கூடியதாகவே இந்தச் சட்டம் அமைந்திருக்கிறது.

இப்படி நிர்க்கதியாகி, வாழ்விழந்து, படிப்பிழந்து, பாதையிழந்து, வாழ்வே இருளுக்குள் மூழ்கிப் போன எமக்காக, இலங்கையிலே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரும் மிகப்பெரிய பரிஸ்டருமான குமார் பொன்னம்பலம் இலவசமாக நீதிமன்றத்தில் ஆஜராக வருகின்றார் என்றால் அந்த நிலையில் எமக்கு அவா¢ன் சேவை எத்தனை மன அமைதியை, எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்திருக்கும் என்பதனை நினைத்துப் பாருங்கள்.

நீதிமன்றம் மிகவும் அமைதியாக இருக்கும், அப்பொழுது எனது பெயர் அழைக்கப்படும். நான் எழுந்து நிற்பேன். உடனே சட்டத்தரணிகள் வரிசையிலிருந்து மிகவும் கம்பீரமாக குமார் பொன்னம்பலம் எழுந்து நிற்பார். அப்படி அவர் எழுந்து நிற்கும்போது அந்த நீதிமன்றத்திற்கே ஒரு அழகு தோன்றி விடுவதுபோல் இருக்கும். மீண்டுமொரு தவணை தரப்படும். இப்படிப் படி மாதங்களாகப் பல தவணைகளுக்கு மாமனிதர் அவர்கள் எனக்காக அந்தக் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்கள். மன்னிக்கவும் எனக்காக அல்ல, எமது தமிழ் இனத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

என்னைப்போல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்காக, வழக்காடிக் கொண்டிருப்பவரை நேரிலே பார்த்துக் கதைப்பது அப்பொழுது எமக்குக் கடினமான விடயமாக இருந்தது. அதனால் சற்று வேதனையுடன், நானும் எனது சிறை நண்பனொருவரும் உருக்கமான கடிதமொன்றை குமாருக்கு எழுதினோம். என்ன ஆச்சரியம் கடிதம் கிடைக்கப் பெற்ற அதே தினமே வெலிக்கடை மகசீன் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எங்கள் இருவரையும் சந்திக்கச் சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் வந்திருந்தார்.

சிறைக் காவலர்கள் எங்கள் இருவரையும் அழைத்துச் சென்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் முன் அமர வைத்துவிட்டு அகன்றார்கள். எமது நலத்தைக் கேட்டுக் கொண்ட அவர், நாங்கள் எழுதிய கடிதம், தனது மனதை வேதனையடைய வைத்ததாகவும், அதனால்தான் கடிதம் கிடைத்ததும் ஓடோடி வந்ததாகவும் கூறினார்.

எமக்கு அந்த மாமனிதரைக் குறித்து, அந்தக் கணங்களில் எம்முடன் அவர் கதைத்தது குறித்து, என்றும் ஒரு கருத்து இருந்தது. அது ஒரு மனிதன் எந்த உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் எவரையும் மதிக்கும் பண்பும், மரியாதை செலுத்தும் பாங்கும் இந்த மனிதரிடமே கற்றுக்கொள்ள வேண்டுமென்றிருந்தது.

குமார் பொன்னம்பலம் வெலிக்கடை மகசீன் சிறைக்கு வருகை தந்து என்னையும் எனது சிறை நண்பன் சண்முகவடிவேல் என்பவரையும் சந்தித்த இந்தச் சம்பவம் 1987ஆம் ஆண்டு வைகாசி மாதப் பகுதியில் நடைபெற்றது.

அந்த வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எமக்கெதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் பத்திரிகைகளின் போட்டோப் பிரதிகளையும் எங்களிடம் கையறித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

இதன் பின்னர் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட இருப்பதாகச் செய்திகள் வந்தன.

19.09.1989 ஆம் ஆண்டு அன்று சிறைக் காவலர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். இது ஏற்கனவே எனக்கு வழங்கப்பட்டிருந்த தவணைத் திகதி. என்னை விடுதலை செய்வார்களென்னும் நம்பிக்கையில் நான் அன்று நீதிமன்றம் சென்றேன். விடுதலையடைந்ததும் என்னை அழைத்துச் செல்லவென எனது தந்தை வந்திருந்தார்.

நீதிமன்றம் தொடங்கியது. பல வழக்குகள் நடைபெற்றன. சரியாக 33 மாதங்களின் பின்னர் சிறையை விட்டு வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கப் போகின்றேன் எனும் கட்டுக்கடங்கா ஆவலுடன் எனது பெயரை எப்போது அழைப்பார்களென்று நெஞ்சம் திக்திக்கென அடிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனது பெயரை அழைத்தார்கள். உடனே மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் எழுந்து ஏதோ நீதிபதியுடன் கதைத்தார்கள். நீதிபதியும் ஏதோ கூறினார். எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னை அமரச் சொல்லிவிட்டார்கள். வேறு வழக்குகள் நடைபெற்றன. நீதிமன்றம் கலைந்தது. நீதிபதியும் சென்றுவிட்டார். என்னைத்தான் விடுதலை செய்யவில்லை. அந்தக் கணங்கள் இருக்கின்றதே! விடுதலையை எதிர்பார்த்துக் கிடைக்காமல் ஏங்கிப்போகும் அந்தப்பொழுது இருக்கிறதே! பழுக்கக் காய்ச்சிய இரும்பை உடலில் வைப்பதைவிடக் கொடுமையானது. இப்படி நான் வேதனைப்படுவேனென்று தெரிந்திருக்கலாம் அந்த மாமனிதருக்கு. உடனே என் அருகே ஓடிவந்து "பயப்பட வேண்டாம், உங்களை விடுதலை செய்வார்கள். உங்களுடைய விசாரணை நீதிபதியின் தனியறையில் நடைபெறவுள்ளது" என்று கூறினார்.

அதேபோல் என்னை "சேம்பர்" என அழைக்கப்படும் நீதிபதியின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். நீதிபதியுடன் குமார் பொன்னம்பலம் அவர்கள் நீண்ட நேரம் கதைத்தார். அப்பொழுது அதிஷ்டவசமாக எனக்குக் கிடைத்த நீதிபதியும் தமிழரான சுந்தரலிங்கம் என்பதனால் ஏற்கனவே நான் சிறை நிருவாகத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் உரையாற்றியிருந்தேன் என்பதனாலும் எனது பாதுகாப்பை முன்னிட்டு என்னை தனியாக விடுதலை செய்ய நீதிபதி விரும்பவில்லையென்று தெரிவித்து என்னை அழைத்துச் செல்ல யாராவது வந்துள்ளார்களா? என்று மாமனிதர், என்னை வினாவிய போது நான் ஆம், எனது தந்தையார் வந்து காத்து நிற்கிறார் என்று சொன்னேன்.

அப்பொழுது அந்த அற்புத மனிதரின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி இருக்கிறதே சிறைப்பட்ட ஒரு தமிழ் இளைஞனை விடுதலையடைய வைக்க வேண்டும் என்று அந்த மாமனிதர் ஓடிய ஓட்டம் இருக்கிறதே! அது இன்னும் எனது கண்களுக்குள் நிற்கின்றது. ஓடிய மாமனிதர் எனது தந்தையையும் அழைத்துக் கொண்டு சேம்பருக்கும் வந்தார். அதன்பின்னர் இப்பொழுது இளைஞர்களெல்லாம் மட்டக்களப்புப் பகுதிகளிலும் கொலை செய்யப்படுகின்றார்கள். எனவே உங்களின் மகனை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எனும் அன்பு வேண்டுகோளுடன் எனது தந்தையிடம் என்னை நீதிமன்றமும் மாமனிதரும் ஒப்படைத்தார்கள்.

-சுவிஸிலிருந்து கல்லாறு சதீஷ்

(நினைவுரையிலிருந்து)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை உருக வைக்கும் நிகழ்வுகள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மக்களுக்காவே வாழ்ந்தவர்.

அவரின் இழப்பு ஈழ மக்களுக்கு ஓர் பேரிழப்பு.

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.