Jump to content

விண்ணியல் விநோதங்கள்...


Recommended Posts

வேற்றுக் கிரகம் ஒன்றில் வாழும் வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பியதாக சந்தேகித்தக்க மின்னலைகளை தாங்கள் உணர்ந்திருப்பதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் நியுசயன்ரிஸ்ட் விஞ்ஞான சஞ்சிக்கைக்கு விஞ்ஞானிகள் தெரித்துள்ளனர்...! இருப்பினும் இது அறுதியும் இறுதியுமாக வேற்றுக்கிரவாசிகள் அனுப்பிய மின்னலை அறிவிப்புக்கள் தான் என்று தீர்க்கமாக தீர்மானிக்க முடியவில்லை என்றும் செய்திகள் மேலும் சொல்கின்றன...!

________________

Could Space Signal Be Alien Contact?

Science - Reuters to My Yahoo!

An unexplained radio signal from deep space could -- just might be -- contact from an alien civilization, New Scientist magazine reported on Thursday.

The signal, coming from a point between the Pisces and Aries constellations, has been picked up three times by a telescope in Puerto Rico.

New Scientist

But the mystery beam has excited astronomers across the world....

"If they can see it four, five or six times it really begins to get exciting," Jocelyn Bell Burnell of the University of Bath in western England told the magazine.

It was broadcast on the main frequency at which the universe's most common element, hydrogen, absorbs and emits energy, and which astronomers say is the most likely means by which aliens would advertise their presence.

The potentially extraterrestrial signals were picked up through the SETI@home project, which uses programs running as screensavers on millions of personal computers worldwide to sift through the huge amount of data picked up by the telescope.

Link to comment
Share on other sites

  • Replies 419
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் மனிதனை மாதிரி தானா அவர்களும் இருப்பார்கள் தந்திர புத்தியுடன் என்ன..?? :lol:

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி குருவி.

பூமி போல இன்னொரு கிரகம் இருக்கலாம் யார் கண்டது அவர்களும் அங்கிருந்து ஏதாவது கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்று ஆராய்சி செய்கிறார்களோ? :roll:

இங்கு வந்தார்களோ தொலைந்தார்கள் அவர்கள். :P :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளிக் கிரகத்தால் சூரிய கிரகணம்

index.1.jpg

.

சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமி வரும்பொழுது சந்திர கிரகணமும் ஏற்படுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஆனால் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வேறு கிரகங்கள் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. கடந்த 122 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வெள்ளிக் கிரகம் அதாவது வீனஸ் தனது சுழற்சிப் பாதையில் செல்லும்போது சூரியன், பூமி மற்றும் வெள்ளி கிரகங்கள் என்பன ஒரே நேர்காட்டில் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் எதிர்வரும் ஜுன் மாதம் எட்டாம் திகதி மட்டக்களப்பு நேரப்படி சரியாக காலை 11மணி 15நிமிடம் 01வினாடி தொடக்கம் நடைபெற இருக்கின்றது. இது ஏறக்குறைய 6 மணித்தியாலங்கள்வரை நீடிக்கும். வெள்ளிக் கிரகத்தினால் ஏற்படும் கிரகணம் ஜுன் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ மட்டும்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம். இக்கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தில் சூரியனின் மையத்திலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கு 4றேடியன் என்னும் வேகத்தில் கடக்கவுள்ளது. கிரகணம் ஆரம்பமாகும்போது மட்டக்களப்பில் சூரியன் மேற்குத்திசையில் 64பாகை உயரத்தில் தென்படும். மட்டக்களப்பில் அன்றைய தினம் சூரியன் பிற்பகல் 5மணி 57 நிமிடம் அளவில் மறையும். எனவே முழுக் கிரகணத்தையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இதேவேளை வட அமேரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியல் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே சூரியன் உதிக்கின்றது. ஆதனால் கிரகணத்தின் கடைசி ஓரிரு மணித்தியாலங்களையே அங்குள்ளவர்களால் பார்க்க முடியும். அவுஸ்திரேலியாவின் கிழக்குப்பகுதி, தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளில் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே சூரியன் மறைந்து விடுகின்றது. எனவே அங்குள்ளவர்களால் முதல் இரண்டு நிமிடங்களை மாத்திரமே காண முடியும். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் எம்மைப்போல் இக்கிரகணத்தை முழுமையாகக் காணலாம். எனினும் நிய10சிலாந்து, ஆஜன்டீனா மற்றும் ஹவாய் தீவுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு கிரகணம் நடைபெறும் தருணம் இரவு நேரமாகையால் அவர்களுக்கு இதனைக் காணும் வாய்ப்பு கிடைக்காது.

1608ஆம் ஆண்டு தொலைநோக்கி கருவி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 1631, 1639, 1761, 1769, 1874 மற்றும் 1882 ஆகிய ஆண்டுகளில் மாத்திரமே ஆராய்ச்சியாளர்களால் இக்கிரகணம் பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. வெள்ளிக்கிரகத்தினால் ஏற்படும் சூரிய கிரகணம் நிகழும் காலம் ஓர் முறையான சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. முதலாவது கிரகணம் நடைபெற்று 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றும், அடுத்த 105.5 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னொன்றும், அதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றும் அடுத்து 121.5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுமாக இச்சுழற்சி தொடர்கின்றது. இவ்வருடம் ஜுன் மாதம் நடைபெறும் கிரகணத்தைத் தொடர்ந்து அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது. புதன் கிரகமும், வெள்ளிக் கிரகமும் பூமியை விட சூரியனை வேகமாகச் சுற்றுகின்றன. அத்துடன் அவை பலமுறை பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வந்து போகின்றன. வெள்ளிக் கிரகம் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலம் 227.4 நாட்கள்தான். எனினும் நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இவை சூரியன் இருக்கும் நேர்கோட்டிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கின்றன. இதற்குக் காரணம் வெள்ளிக் கிரகம் பூமியின் சுழற்சிப் பாதையிலிருந்து 3.4பாகை விலகிச் செல்வதுதான். எனவேதான் ஒவ்வொரு முறையும் இவற்றால் கிரகணம் ஏற்படுவதில்லை. 2004ஆம் ஆண்டில் நடைபெறும் கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தினு}டே செல்லும் அதேவேளை 2012ஆம் ஆண்டு நடைபெறும் கிரகணத்தின் போது இக்கிரகத்தின் நிழல் சூரியனின் தென்துருவப் பகுதியூடாகச் செல்லும்.

இக்கிரகணத்தைச் தமக்குச் சாதகமாக்கி பல விடயங்களை அறிய முற்பட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். சூரியனுக்கும் பூமிக்குமிடையில் உள்ள து}ரத்தையும், மற்றும் வெள்ளிக் கிரகத்தின் விட்டத்தையும் ஓரளவு துல்லியமாகக் கணிப்பிடவும், எமது சூரிய குடும்பத்தில் மேலும் கண்டறியப்படாத கிரகங்கள் இருக்கின்றனவா என ஆராயவும் இக்கிரகணம் வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கணிசமான அளவு உதவி புரியவுள்ளது. Edmund Halley என்பவர்தான் வெள்ளிக் கிரத்தினால் ஏற்படும் கிரகணத்தின்போது கெப்லரின் மூன்றாவது விதியைப் பயன்படுத்தி சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான தூரத்தைக் கணிக்கலாம் என கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிமுறிவு காரணமாக இம்முறையைக் கொண்டு து}ரத்தைக் கணிப்பது சிரமமாகவே இருந்து வருகின்றது.

இக்கிரகணத்தைப் பார்க்க விரும்புபவர்கள் அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியினூடாக மாத்திரமே பார்த்தல் வேண்டும். சூரியனை வெற்றுக் கண்ணால் பார்ப்பதோ, அல்லது சாதாரண தொலைநோக்கியூடாகப் பார்ப்பதோ கண்களுக்குத் தீங்கை விளைவிக்கலாம். சாதாரண தொலைநோக்கியிலுள்ள குவிவு வில்லைகள் ஒளிக்கிரணங்களின் செறிவை அதிகப்படுத்துவதால், அதன் தாக்கத்தால் கண்கள் பர்வையை இழக்கவேண்டியும் ஏற்படலாம்.

இவ்வருடம் நடைபெறும் இக்கிரகணத்தை முழுமையாக மட்டக்களப்பு நகரில் பார்க்க முடிந்தாலும் 2012 ஆண்டு நடைபெறும் கிரகணத்தை நாம் முழுமையாக மட்டக்களப்பில் பார்க்க இயலாது. கிரகணம் ஆரம்பமாகி ஓரிரு மணித்தியாலங்கள் சென்றிருக்கும் வேளையிலேயே அன்று மட்டக்களப்பில் சூரியன் உதிக்கின்றது. அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ம் திகதி மட்டக்களப்பு நேரப்படி அதிகாலை 04 மணி 12 நிமிடங்கள் 03 விநாடிகள் அளவில் ஆரம்பிக்கும். இதனைக் காண நாம் இன்னும் 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பழைய தகவல் ஆனாலும் அறிய வேண்டியவை என்பதால் இங்கு தருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் கவிதன்.........!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

20_gslv_edusat-rocket.jpg

தொலைத்தொடர்பு, தொலை உணர்தல், வானியல் ஆய்வு ஆகியவற்றிற்கு தனித்தனியாக செயற்கைக்கோள்களை செலுத்தி சாதனை படைத்த இந்தியா, இன்று கல்வி மேம்பாட்டிற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது!

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண் மையத்தில் இருந்து இன்று மாலை 4.01 மணிக்கு புறப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. விண்கலம், 17 நிமிட பயணத்திற்குப் பின் 180 கி.மீ. உயரம் சென்று 1,950 கி.கி. எடையுள்ள எடூசாட் (Education Satellite) செயற்கைக்கோளை புவி சுழற்சிப் பாதையில் துல்லியமாக செலுத்தியது.

49 மீ. நீளமும், 414 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் திட்டமிட்டபடி சரியாக 16.01 மணிக்கு நெருப்பை கக்கிக்கொண்டு விண்ணை நோக்கிப் பறந்தது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணம் மேற்கொண்ட ஜி.எஸ்.எல்.வி., புவியிலிருந்து 180 கி.மீ. தூரத்தை எட்டியதும் அதன் முன்பகுதி திறந்துகொள்ள அங்கிருந்த செயற்கைக்கோள் புவிசுழற்சிப் பாதையில் செலுத்தப்பட்டது.

எடூசாட் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதும் சத்தீஷ்தவான் விண் மையத்தில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவர் மாதவன் நாயர், செயற்கைக்கோள் துல்லியமாக செலுத்தப்பட்டதாக அறிவித்தார்.

இப்பணியில் ஈடுபட்ட பல்வேறு குழுக்களின் தலைமை விஞ்ஞானிகள், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் தனது பணியை சிறப்பாக செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினர்.

எடூசாட் செயற்கைக்கோளில் உள்ள சூரிய சக்தியை வாங்கி செயற்கைக்கோளிற்கு தேவையான சக்தியை அளிக்கும் பேனல்கள் எதிர்பாத்தபடி விரிந்துள்ளதாகவும், செயற்கைக்கோள் நன்றாக இயங்கத் துவங்கியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த ஏவுதலின் வாயிலாக 2 டன் எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்பும் திறனில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதென விஞ்ஞானிகள் கூறினர்.

தற்பொழுது பூமியின் குறைந்தபட்ச சுழற்சிப் பாதையில் (பெரீஜி), அதாவது 180 கி.மீ. தூரத்தில் செலுத்தப்பட்டுள்ள எடூசாட், அடுத்த 3 நாட்களில் அதிலுள்ள பூஸ்டர் இயந்திரம் இயக்கப்பட்டு அதிகபட்ச சுழற்சிப் பாதையான (அப்போஜி) 36,000 கி.மீ. தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிலை நிறுத்தப்படும். அதன்பிறகு அதிலுள்ள டிரான்ஸ்பாண்டர்கள் இயங்கத் துவங்கி கல்வி பணிக்காக பயன்படுத்தப்படும்.

For more details...

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3672608.stm

Thanks webulagam.com & http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் குருவிகளே.. அது சரி நம்ம சிறீலங்கா எப்ப அனுப்பப்போது.. முயற்சியாவது எப்ப தொடங்கும்...??? :D:):D :P

Link to comment
Share on other sites

உங்களைத்தான் எதிர்பார்த்திருக்காம் சிறிலங்கா... கெதியா படிச்சிட்டு போய் அனுப்புங்கோ சிறிலங்காவுக்காக சற்றலைட்...! :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ அங்க ஆக்காள் இல்லாத மாதிரி கதைக்கிறீங்க.... ஆனால் இதுக்கெல்லாம் அவைக்கு எங்க நேரம்....! :D:) P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா.. நல்ல ஒரு தகவல்....

Link to comment
Share on other sites

_39871498_universe2_inf416.jpg

கபிள் விண்ணியல் தொலைக்காட்டி தந்த அகிலம் நோக்கிய ஆழ்ந்த (தொலைதூர) பார்வையின் கீழான ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் அகிலத்தின் (universe) பிரிவுகளும் அவற்றின் வயதும்....!

For more details click here and http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கும் படத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள்.. குருவிகாள்..!

Link to comment
Share on other sites

h_abell754_sima_02.jpg

உடுத்தொகுதிகளின் பகுதிகள் மொத்துகையின் முன் .. கணணி வழி உருவகிக்கப்பட்ட காட்சிகள்...!

h_abell754_simb_02.jpg

உடுத்தொகுதிகளின் பகுதிகள் மொத்துகையின் பின்.. கணணி வழி உருவகிக்கப்பட்ட காட்சிகள்...!

( image from Space.Com )

பூமியில் இருந்து சுமார் 800 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இரண்டு உடுத்தொகுதிகளின் பகுதிகள் (galactic clusters)ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதான அபூர்வ நிகழ்வொன்றை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது...இதேபோல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குருவி அண்ணா

Link to comment
Share on other sites

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! :P :D

என்ன குருவிகளுக்கு களத்தில் இருந்து ஓய்வா..? நாங்கள் கொடுப்பதாக இல்லையே... :wink: ! சரி உங்கள் ஓய்வுகாலம் இனிதாக கழிய வாழ்த்துக்கள் :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! :P :D

குருவிகள் இனிதே ஓய்வு எடுக்க எமது வாழ்த்துக்கள்...! :):D :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்வுக்கு நடுவே இடையு}று வரலாம் இல்லையா..?? அவைகள் இல்லாமல் போக தான் வாழ்த்துக்கள்.. :D :P

Link to comment
Share on other sites

ஓ என்னே உங்கள் பரந்த மனம். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...!

µö׸¡Äõ þÉ¢§¾ «¨Á šúòÐì¸û...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எத்தினை காலம் தான் மாந்தோப்பே தஞ்சம் என்று இருக்கிறது என்று போட்டு குருவிகள் கொஞ்சம் மற்றத் தோப்புகளிலும் தன் உறவுகளோடு கூடிக்களிக்கச் சென்றதுகள்.... சென்ற வழி நல்வழியாக அமைய வாழ்த்திய அன்பு உள்ளங்கள் கவிதன் தம்பி, தமிழினி, சண்முகி அக்காவுக்கு குருவிகளின் நன்றிகள்....! :P

விஞ்ஞானச் செய்திகள் விரைவில் வரும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப போனதுகளும் தோப்புகள் தான்... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.