Jump to content

பொருத்தம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னூர் எனும் அந்த அழகிய சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள தான். நிதி என்னும் சிறுமியும் மதியழகன் எனும் சிறுவனும். எல்லோராலும் அழகன் அழைக்க பட்டவன். குடும்பத்தில் இவனுடன் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை ஒரு கிராம சபை கந்தோரில் செய்யலாளராக் இருந்தார். இவனது பெற்றோருக்கு

பெண குழநதையில்லையே என்னும் கவலை. துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் மாறி உயர் கல்லூரி சென்றான் அழகன்.

நிதி எனும் தயாநிதி குடும்பத்துக்கு ஒரே ஒரு பெண குழந்தை . வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏனோ அவளுக்கு சக உறவுகளுக்கான பலன் இருக்கவில்லை. சிறு வயது முதல் சக மாணவனான அழகனுடனும் அவனது நட்பு களுடனும் விளையாடி வருவாள். காலபோக்கில் அவள் பருவ வயது அடைந்ததும் விளையாட்டுக்கள் எல்லாம் நி ன்று போய் விட்டது . ஏன் அவனை பார்ப்பதும் அனுமதிக்க் படவில்லை. காலம்தான் தன் பாட்டுக்கு சுழன்று கொண்டே இருந்தது. அவள் கல்லூரி வாழ்வு முடிந்ததும் அவளுக்கு நோர்வே நாட்டில் உள்ள மண மகனுக்கு திருமணம் பேசி கோலாகலமான திருமண விழாமுடிந்து ஆறு மாதங்களில் நோர்வே சென்று விடாள். நாட்கள் செல்ல செல்ல அவனது குடிப்பழக்கத்தால் தம்பதியரிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவளது பெற்றவர்களுக்கும் பெரும் சோகம். அவனது துன்புறுத்தல் களுக்கும் ஆளானாள். காலம் செல்ல அவனிடம் இருந்து விவாகாரத்து பெற்று விட்டாள் .பின்பு அவள்படித்த காலத்தில் கற்றுக் கொண்ட தையல் கலை அவளுக்கு வாழ்வு கொடுத்த்து. மனத்தளவில் சந்தோஷமாக இல்லாவிடாலும் தனிமையில் வேதனைகள் இன்றி வாழ்ந்தாள்.

மதியழகனும் மேற்படிப்பு படித்து ஒரு பெரும் நிறுவனத்தில் பணியில் இருந்தான். காலத்தின் கோலம் , தாயகத்தில் போராட்டம் காரணமாக் உயிருக்கு பயந்து ஜெர்மன் நாட்டுக்கு பயணமானான் . அங்கு அவன் திறமைக்கு ஏற்ப வேலை கிடைக்காவிடாலும் அவன் வாழ்வை கொண்டு நடத்த போதிய வருமானம் கிடைத்தது. திருமண வயதும் வயதும் வரவே பெற்றார்களால் ஒழுங்கு செய்ய பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு மாலை சூட்டினான். அவள் பட்டணத்தில் படித்த பெண. மூன்று அண்ணாமாருக்கு ஒரே தங்கை .வேண்டியதெல்லாம் கிடைக்க பெற்றவள். அவளுக்கு வெளிநாட்டு வாழ்வு பிடிக்க வில்லை.எடுத்துக் கெல்லாம் நான் அப்படி வாழ்ந்தேன் எனக்கு எல்லாவ ற்றுக்கும் பணியாட்கள் இருந்தார்கள் என பிறந்த வீட்டுப்பெருமை பேசினாள். அவர்களது மண வாழ்வும் நிலைக்கவில்லை. மனசு ஒத்துபோகவில்லை. பலவாறு சிந்தனையால் மதி யழகன், நிலை குலைந்து போனான். வீட்டுக்கு ஒழுங்காக் செல்வதில்லை. இப்படியே இருந்தவர்கள் வாழ்வு பெரும் போராட்டம் மானது . ஒரு நாள் தன் தாய் தந்தையரைபார்க்க் என்று தாயகம் சென்று விடாள். மாதங்கள் பலவாகியதும்..அன்றைய தபாலில் மதியழகன் பேருக்கு ஒரு மடல் வந்தது. அவள் விவாகரத்துக்கு விண்ணபித்து இருந் தாள் . அவனதும் சம்மதம் கொடுத்து மடல் அனுப்பினான். மேலும் பல ஒழுங்குகளை செய்து அவர்கள் விவாகரத்தின் படி அவர்களது திருமணம் ரத்து ஆனது.

துன்ப படுபவர்களுக்கு கடவுள் ஒரு கட்டத்தில் ஆறுதல் படுத்துவார். நோர்வேயில் தாயாநிதியுடன் படித்த் ஒரு பள்ளித்தோழியை அங்குள்ள் கடை தொகுதியொன்றில் சந்தித்தாள் .அவளும் ஊர்க் கதைகள் பேசிய போது மதியழகனின் நிலை பற்றியும் சொன்னாள் . அவனது தொலைபேசி இலக்கமும் எடுத்து தருவதாக் விடை பெற்றனர்.

சில மாதங்களின் பின் தயா நிதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. தொலைபேசி மூலம். மதியழகன் அவளை அழைத்துப் பேசினான். இருவரது வாழ்க்கைகளும் திசை மாறி சென்றதையிட்டு அலசி ஆராய்ந்தனர். மீண்டும் ஒருநாள் அவளது தோழி தொலை பேசியில் அழைத்தாள். தன் வீடுக்கு வரும்படியும் ஒரு உறவினர் வந்திருப்பதாகவும்.கூறினாள் . அங்கு சென்றவளுக்கு ஒரு பேரதிர்ச்சி . அங்கு அவன் மதியழகன். ஊர்க்கதைகள் பள்ளி வாழ்க்கை திருமணம் என்று எல்லாம் பேசியவர்கள் இறுதியில் அவர்கள் இருவரும் இணைத்து கொள்ள முடிவெடுத்தனர் . இதற்கிடையில் கனடா நாடுக்கு அவன் விண்ணபித்து இருந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவே . அவர்கள் இருவரும் கனடா நாடில் குடி பெயர்ந்து இணைந்து கொண்டனர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் வயது சற்று கடந்து விட்ட போதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.

அண்மையில் நான் சந்தித்த உண்மைக் கதை .பல் பொருத்தங்கள் இருந்தாலும் உள்ளங்களின் மனப் பொருத்தம் ஏனோ முக்கியமாக் கவனிக்க் படுவதில்லை. வேறு பொருத்தங் கள் அதி மீறி விடுகின்றன . உண்மையில் தேவை மனப்பொருத்தம். புரிந்துணர்வு. கடவுள் துணையால் தம்பதியர் நீடூழி வாழணும். உங்கள் வாழ்த்துக்களும் அவர்களை சேரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னூர் எனும் அந்த அழகிய சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள தான். நிதி என்னும் சிறுமியும் மதியழகன் எனும் சிறுவனும். எல்லோராலும் அழகன் அழைக்க பட்டவன். குடும்பத்தில் இவனுடன் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை ஒரு கிராம சபை கந்தோரில் செய்யலாளராக் இருந்தார். இவனது பெற்றோருக்கு

பெண குழநதையில்லையே என்னும் கவலை. துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் மாறி உயர் கல்லூரி சென்றான் அழகன்.

நிதி எனும் தயாநிதி குடும்பத்துக்கு ஒரே ஒரு பெண குழந்தை . வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏனோ அவளுக்கு சக உறவுகளுக்கான பலன் இருக்கவில்லை. சிறு வயது முதல் சக மாணவனான அழகனுடனும் அவனது நட்பு களுடனும் விளையாடி வருவாள். காலபோக்கில் அவள் பருவ வயது அடைந்ததும் விளையாட்டுக்கள் எல்லாம் நி ன்று போய் விட்டது . ஏன் அவனை பார்ப்பதும் அனுமதிக்க் படவில்லை. காலம்தான் தன் பாட்டுக்கு சுழன்று கொண்டே இருந்தது. அவள் கல்லூரி வாழ்வு முடிந்ததும் அவளுக்கு நோர்வே நாட்டில் உள்ள மண மகனுக்கு திருமணம் பேசி கோலாகலமான திருமண விழாமுடிந்து ஆறு மாதங்களில் நோர்வே சென்று விடாள். நாட்கள் செல்ல செல்ல அவனது குடிப்பழக்கத்தால் தம்பதியரிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவளது பெற்றவர்களுக்கும் பெரும் சோகம். அவனது துன்புறுத்தல் களுக்கும் ஆளானாள். காலம் செல்ல அவனிடம் இருந்து விவாகாரத்து பெற்று விட்டாள் .பின்பு அவள்படித்த காலத்தில் கற்றுக் கொண்ட தையல் கலை அவளுக்கு வாழ்வு கொடுத்த்து. மனத்தளவில் சந்தோஷமாக இல்லாவிடாலும் தனிமையில் வேதனைகள் இன்றி வாழ்ந்தாள்.

மதியழகனும் மேற்படிப்பு படித்து ஒரு பெரும் நிறுவனத்தில் பணியில் இருந்தான். காலத்தின் கோலம் , தாயகத்தில் போராட்டம் காரணமாக் உயிருக்கு பயந்து ஜெர்மன் நாட்டுக்கு பயணமானான் . அங்கு அவன் திறமைக்கு ஏற்ப வேலை கிடைக்காவிடாலும் அவன் வாழ்வை கொண்டு நடத்த போதிய வருமானம் கிடைத்தது. திருமண வயதும் வயதும் வரவே பெற்றார்களால் ஒழுங்கு செய்ய பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு மாலை சூட்டினான். அவள் பட்டணத்தில் படித்த பெண. மூன்று அண்ணாமாருக்கு ஒரே தங்கை .வேண்டியதெல்லாம் கிடைக்க பெற்றவள். அவளுக்கு வெளிநாட்டு வாழ்வு பிடிக்க வில்லை.எடுத்துக் கெல்லாம் நான் அப்படி வாழ்ந்தேன் எனக்கு எல்லாவ ற்றுக்கும் பணியாட்கள் இருந்தார்கள் என பிறந்த வீட்டுப்பெருமை பேசினாள். அவர்களது மண வாழ்வும் நிலைக்கவில்லை. மனசு ஒத்துபோகவில்லை. பலவாறு சிந்தனையால் மதி யழகன், நிலை குலைந்து போனான். வீட்டுக்கு ஒழுங்காக் செல்வதில்லை. இப்படியே இருந்தவர்கள் வாழ்வு பெரும் போராட்டம் மானது . ஒரு நாள் தன் தாய் தந்தையரைபார்க்க் என்று தாயகம் சென்று விடாள். மாதங்கள் பலவாகியதும்..அன்றைய தபாலில் மதியழகன் பேருக்கு ஒரு மடல் வந்தது. அவள் விவாகரத்துக்கு விண்ணபித்து இருந் தாள் . அவனதும் சம்மதம் கொடுத்து மடல் அனுப்பினான். மேலும் பல ஒழுங்குகளை செய்து அவர்கள் விவாகரத்தின் படி அவர்களது திருமணம் ரத்து ஆனது.

துன்ப படுபவர்களுக்கு கடவுள் ஒரு கட்டத்தில் ஆறுதல் படுத்துவார். நோர்வேயில் தாயாநிதியுடன் படித்த் ஒரு பள்ளித்தோழியை அங்குள்ள் கடை தொகுதியொன்றில் சந்தித்தாள் .அவளும் ஊர்க் கதைகள் பேசிய போது மதியழகனின் நிலை பற்றியும் சொன்னாள் . அவனது தொலைபேசி இலக்கமும் எடுத்து தருவதாக் விடை பெற்றனர்.

சில மாதங்களின் பின் தயா நிதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. தொலைபேசி மூலம். மதியழகன் அவளை அழைத்துப் பேசினான். இருவரது வாழ்க்கைகளும் திசை மாறி சென்றதையிட்டு அலசி ஆராய்ந்தனர். மீண்டும் ஒருநாள் அவளது தோழி தொலை பேசியில் அழைத்தாள். தன் வீடுக்கு வரும்படியும் ஒரு உறவினர் வந்திருப்பதாகவும்.கூறினாள் . அங்கு சென்றவளுக்கு ஒரு பேரதிர்ச்சி . அங்கு அவன் மதியழகன். ஊர்க்கதைகள் பள்ளி வாழ்க்கை திருமணம் என்று எல்லாம் பேசியவர்கள் இறுதியில் அவர்கள் இருவரும் இணைத்து கொள்ள முடிவெடுத்தனர் . இதற்கிடையில் கனடா நாடுக்கு அவன் விண்ணபித்து இருந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவே . அவர்கள் இருவரும் கனடா நாடில் குடி பெயர்ந்து இணைந்து கொண்டனர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் வயது சற்று கடந்து விட்ட போதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.

அண்மையில் நான் சந்தித்த உண்மைக் கதை .பல் பொருத்தங்கள் இருந்தாலும் உள்ளங்களின் மனப் பொருத்தம் ஏனோ முக்கியமாக் கவனிக்க் படுவதில்லை. வேறு பொருத்தங் கள் அதி மீறி விடுகின்றன . உண்மையில் தேவை மனப்பொருத்தம். புரிந்துணர்வு. கடவுள் துணையால் தம்பதியர் நீடூழி வாழணும். உங்கள் வாழ்த்துக்களும் அவர்களை சேரட்டும்.

இந்த ஆக்கம் நன்றாக உள்ளது சகோதரி... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிக்காலத்திலாவது படித்த வாழ்க்கை வாழ வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறிந்து போன வாழ்க்கையை எண்ணி மனம் தளராமல் மீண்டும் ஒருமுறை வாழ நினைக்கும் இந்த உறவுகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி நிலாமதி அக்கா

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் எல்லாப் பொருத்தமும் பார்ப்பார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்காததால் தான் பிரச்சனை...காலம் கடந்த பிறகாவது தங்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களே...அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க எனது வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தம் எனும் கதைப் பதிவுக்கு கருத்துப் பகிர்ந்த புரட்சி .....ரதி..சஜீவன் வாத்தியார் ஆகியோருக்கும .

...இன்னும் படிக்க இருபவர்களுக்கும் என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மனப் பொருத்தமே சிறந்தது என்பதை விளக்கும் கதை. இது தெரியாமல் வேறு பொருத்தம் பார்த்து வீட்டில் எத்தனையோ குடும்பங்களில் ஒருவர் மற்றவரினால் அடிவாங்கப்படுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் அழகான கதை.

நிலாமதிக்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

தோழர் நிலாமதி இந்தக்கருப்பொருளை வைத்து நீங்கள் நாவல் எழுத எத்தனிக்கலாம். எங்கள் சமூகத்தில் இன்றைய நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரிய மாற்றங்களை உள்ளடக்கியது. இது பல கருப்பொருட்களை தனக்குள் சுமக்கும் பெருங்கதை. சிறுகதைக்குள் முடக்கப்படும்போது மொட்டை மரம்போன்று தென்படுகிறது. கிளைகளையும் இலைகளையும் வரையம்போதுதான் மரமும் முழுமைபெறும். ஆதி வைக்கும் கருத்தை வளர்ச்சிக்காக என்று மட்டும் மனதில் கொண்டு உங்கள் அடுத்த முயற்சியை இன்னொரு படிக்கு முன்னேற்றுங்கள். தொடர்ந்து எழுதும் போது ஆதி கூறியதையும் கவனத்தில் எடுத்து கொள்ளவும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு .கறுப்பி ..ஆதி வாசி ...........உங்கள் வருகைக்கும் கருத்துபகிர்வுக்கும் நன்றி ........

அடுத்தட தடவை என்னை .மெருகூட்ட முனைகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி ... அட சொந்தமாக ஆக்கம் எழுதுபவர்களில் சகோதரியும் ஒருவர் ... ஊக்குவியுங்கள் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.