Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மசால் வடை

IMG_2466.JPG

மசால் வடை இது பெரும்பாலும் காலை உணவுகளான பொங்கல்... பூரி ...இட்லி..... வகைகளோடு இணைத்து வழங்கபடுவது....

தேவையானப் பொருட்கள்:

கடலைப்பருப்பு -‍‍ 2 கப்

பெரிய‌ வெங்காய‌ம் ‍‍‍- 1

ப‌ச்சைமிள‌காய் - 2 அல்ல‌து 3

காய்ந்த‌ மிள‌காய் - 1

இஞ்சி - ஒரு சிறுத்துண்டு

க‌றிவேப்பிலை - சிறிது

தேங்காய்த்துருவ‌ல் - ஒரு டேபிள்ஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

எண்ணை - பொரிப்பத‌ற்கு

செய்முறை:

கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து விடவும். அதிலிருந்து ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மீதி பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து ச‌ற்று கொர‌கொர‌ப்பாக‌ அரைத்துக் கொள்ள‌வும். அரைக்கும் பொழுது த‌ண்ணீர் சேர்க்க‌ தேவையில்லை.

வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை பொடியாக‌ ந‌றுக்கிக் கொள்ள‌வும். இவை எல்லாவ‌ற்றையும் அரைத்த‌ ப‌ருப்புட‌ன் சேர்க்க‌வும். அத்துட‌ன் தேங்காய்த்துருவ‌லையும் சேர்த்து பிசைந்துக் கொள்ள‌வும்.

ஒரு வாண‌லியில் எண்ணையைக் காய‌ வைக்க‌வும். எண்ணை காய்ந்த‌ பின், எலுமிச்ச‌ம் ப‌ழ‌ அள‌வு மாவை எடுத்து உருட்டி, இட‌து உள்ள‌ங்கையில் வைத்து அத‌ன் மேல் வ‌ல‌து உள்ள‌ங்கையால் லேசாக‌ அழுத்த‌வும். அதை எடுத்து காய்ந்த‌ எண்ணையில் போட்டு பொன்னிற‌மாக‌ பொரித்தெடுக்க‌வும்.

க‌வ‌னிக்க‌: சோம்பு வாச‌னை பிடிக்க‌வில்லை என்றால், அதை த‌விர்த்து விட்டு, அத‌ற்குப் ப‌தில் சிறிது பெருங்காய‌த்தூளைச் சேர்த்து செய்ய‌லாம். விருப்ப‌மில்லையென்றால், தேங்காயையும் த‌விர்த்து விட‌லாம்.

http://adupankarai.kamalascorner.com/2008/03/blog-post_18.html

------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி: உளுந்து வடையில் மட்டும் தான் ஒட்ட போடுவாங்க...

http://www.youtube.com/watch?v=mNBNoUBF0f8

இது மசால் வடைப்ரியர் தோழர் தமிழ் சிறி அவர்களுக்கு சமர்ப்பணம்..

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசால்வடை பதிவுக்கு நன்றி புரட்சி. இதனை நாங்கள் கடலை வடை என்று சொல்வோம். இஞ்சியும், சோம்பும் போடாமல் தான் இந்தவடை செய்வோம். மாலை நேரங்களில் வெறும் தேத்தண்ணியுடன் (பால் விடாத தேநீர்) சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.25_smiley.gif:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோம்பு வாசைனையும் பிடிப்பதில்லை அதை விட பெருங்காய‌த்தூள் வாச‌னை பிடிக்கவே பிடிக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலை வடைக்கு காரமான தக்காளி சாசும் , வெறும் தேநீரும் சூப்பராய் இருக்கும் PTT! :o

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சோம்பு வாசைனையும் பிடிப்பதில்லை அதை விட பெருங்காய‌த்தூள் வாச‌னை பிடிக்கவே பிடிக்காது

அனைத்து பாத்திரத்தினையும் ஓட்டல் வழக்கப்படி சபீனா போன்ற பவுடர்களை போட்டு சுத்தமாக கழுவி செய்தால் எந்த வாசமும் வராது தோழர் ரதி .... :D அல்லது சோப்பு ஆயில் எனபடும் திரவியத்தினையும் உபயோகிக்கலாம்.... :D

Link to comment
Share on other sites

  • 7 years later...

மசால் வடை


தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப்,
துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்,
பொடியாக நறுக்கிய புதினா - மல்லித்தழை - கால் கப்,
எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு. அரைத்துக் கொள்ள:
பூண்டு - 4 பல்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2, பட்டை,
லவங்கம்,
ஏலக்காய் - தலா 1.

செய்முறை:
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊறிய கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலைப்பருப்புடன் துவரம்பருப்பை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொருட்களை ஓன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் மெல்லிய வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பி நன்கு வேக விட்டு எடுக்கவும்.

 
Bild könnte enthalten: Essen
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.