Jump to content

பெளத்தமும் சிங்களமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இது. 2000 ஆண்டு நோர்வேயின் சமரச முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன்பு சமாதானத்திற்கு எதிராக சிங்களப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புத்தன் எங்கே! சிங்களப் பிக்குகள் எங்கே! என மனத்தில் ஏற்பட்ட கேள்வியைத் தொடர்ந்து எழுதிய ஒன்று இது. தற்போது ஈழத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் விடுதலைப் போரைச் சிதைத்திருந்தாலும் பெளத்தமும் சிங்களமும் அப்படியேதான் இருக்கின்றன.)

கி.மு 260, மௌரியப் பேரரசின் மூன்றாவது அரசன் மாமன்னன் அசோகன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்தான். கலிங்க நாடு (தற்போதைய ஒரிசா மானிலம்) மிகப் பெரிய நிலப்பரப்பையும் படைபலத்தையும் கொண்ட நாடு கலிங்கத்தின் வெற்றி அசோகனின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. தன் கனவை நனவாக்கும் பொருட்டு தன் பாரிய படையுடன் கலிங்கத்திற்குள் புகுந்தான் அசோகன். பெரும்போர் மூண்டது பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர் குருதி ஆறாக ஓடியது ஈற்றில் கலிங்கம் அசோகனிடம் வீழ்ந்தது. வெற்றிக்களிப்பில் மிதந்தவன் அன்று மாலை போர்க்களத்தைப் பார்வையிடச் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சிகள் அவனை நிலைகுலையச் செய்தன, அறுபட்ட தலைகளையும், வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் உடலுறுப்புக்களையும், உயிரற்ற உடல்களையும் அவைமீது அழுது ஆராற்றும் தாய்மார்களையும்; பெண்களையும் கண்டான். போர் எவ்வளவு கொடியது என்பதை அவன் கண்ட காட்சிகள் அவனக்கு உணர்த்தின. இவ்வளவு பெரிய அழிவுக்குத் தான் காரணமாகிவிட்டேனே என மனம் வருந்தினான் அன்றிலிருந்து அவனால் ஒரு கணம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை ஓடிச்சென்று புத்த துறவி ஒருவரின் பாதங்களில் அடைக்கலம் புகுந்தான். அவருடைய போதனைகளை ஏற்று அவரின் மார்க்கத்தைத் தழுவிக்கொண்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகியது போரை வெறுத்தான் சமாதானத்தை விரும்பினான் நாடுகளுக்கிடையே அன்பும் நட்புறவும் பேணப்பட வேண்டுமேயன்றி போரும் பகையும் கூடாதென்று தீர்மானித்தான் அது மட்டுமல்ல தான் செய்த தவறை வேறு எவரும் செய்யக் கூடாதெனும் முடிவுக்கு வந்தான், நாடுகளுக்கிடையே அன்பையும் அறத்தையும் தழைக்கச் செய்யும் நோக்கோடு தான் தழுவிய அப்புதிய மார்க்கத்தை பாரெங்கும் பரப்பத் தொடங்கினான் அசோகன். புத்தரால் தோற்றுவிக்கப்பட்டு அசோகனால் பரப்பப்பட்ட உயரிய மார்க்கம்தான் பௌத்தம். ஆம் பௌத்தம் மதமல்ல அது ஒரு மார்க்கம் அன்பின்மீதும் அறத்தின்மீதும் கட்டியமைக்கப்பட்ட மார்க்கம் மதமென்றால் கடவுளைப் பற்றி சொல்லியிருக்கவேண்டும் கடவுளையே காட்டாத பௌத்தம் எவ்வாறு மதமாகயிருக்க முடியும்?

பௌத்தத்தை ஆய்வு செய்து பின்னாளில் அம் மார்க்கத்தைத் தழுவிக்கொண்ட அண்ணல் அம்பேத்கர் கூறுகையில் புத்தரின் போதனைகளும் மார்க்கமும் தவறாக பல நாட்டவர்களால் கடைப்பிடிக்கப் பட்டுவிட்டதென்றும், கடவுளை மறுத்த புத்தரை கடவுள் அவதாரமாகவே கருதிவிட்டார்கள் என்கிறார்.

பௌத்தம் ஒரு மார்க்கம்தான், என்றாலும் மக்களின் மன எண்ணப்படி மதமாக எடுத்துக் கொண்டாலும,; தமிழர்களைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல் பௌத்தமும் தமிழர்களுக்கு அந்நிய மதம்தான். பண்டைய தமிழர்களின் வழிபாடு இயற்கையோடு இணைந்திருந்ததேயன்றி மதப்பேதங்கள் இருக்கவில்லை என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. அதிலும் குறிப்பாக போரில் வீரமரணம் அடைந்தவர்களையோ அல்லது

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

எனும் வள்ளுவரின் வாக்குப் படி நல்ல முறையில் வாழ்ந்து மடிந்த தம் முன்னோர்களை வணங்கும் நடுகல் முறையே பரவலாகக் கணப்பட்டது. அதேசமயம் பௌத்தத்தின் எழுச்சி எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதையும் பௌத்தம் தமிழர்களால் எவ்வாறு கையாளப் பட்டது என்பதையும் அதே பௌத்தம் சிங்கள இனவாதிகளால் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

பௌத்தத்திற்கு முன் கி.மு. 15 ஆம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஹைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் பண்பாட்டு படை எடுப்பாளர்களான ஆரியர்கள். இவர்களின் வருகையால் ஏற்கனவே சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்து மேம்பாட்டுடன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் சிதைவுற்றது. ஆரியர்களின் வரவுக்குப் பின் அவர்களின் வேதமதமாகிய ஆரிய மதம் பரவத் தொடங்கியது. பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளையும் யாகமெனும் பெயரில் உயிர்க்கொலைகளையும் நியாயப் படுத்திய இம்மதம் திராவிட மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஆரிய திராவிட மோதல்கள் அக்காலத்தில் ஏராளமாக நடந்திருக்கின்றன. தமிழுலகத்தை எடுத்துக்கொண்டால் பண்டைய தமிழிலக்கியங்களில் ஆரிய எதிர்ப்புக்கள் கணிசமாகவே காணப் படுகின்றன. இவ்வேளையில் மனிதநேயமே சிறந்தது, உயிர்க் கொலை கூடாது, மனிதரில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிப்பது கயமைத்தனம் போன்ற உயரிய கோட்பாடுகளுடன் உருவாகிய பௌத்தம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பௌத்தத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் திராவிட இனத்தில் தோன்றிய ஓர் ஆரிய எதிர்ப்பாளரே, இவர் தமிழ் படித்தார் என்பதை வடமொழி நூலான 'லலித விஸ்தரம்' கூறுகிறது. வடநாட்டில் செல்வாக்குப் பெற்ற பௌத்தம் தென்னாட்டிலும் பரவியது ஏற்கனவே வைதீகப் புரட்டல்களால் வெறுப்புற்றிருந்த தமிழர்களை பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது. பெருவாரியான தமிழர்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்கள். சங்க காலத்திற்குப் பின் தமிழில் தோன்றிய பெருவாரியான இலக்கியங்களான ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றில் சமணத் துறவிகளுக்கு அடுத்து பௌத்தர்களின் பங்கே காணப்படுகின்றது.

இவற்றுள் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை முழுக்க முழுக்க பௌத்த நெறிகளை உள்ளடக்கிய ஒன்றாகவே அமைந்துள்ளது. மணிமேகலை எனும் இளம் பெண்துறவியின் வாழ்க்கையை வைத்தே இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளது. மனிதனால் எதைத் தாங்கினாலும் பசியைத் தாங்கமுடியாது அதனால்தான் பண்டைய தமிழர்கள் பசியைப் பிணி என்று அழைத்தனர் அவ்வகையில் இளம் வயதில் துறவறம் மேற்கொண்ட மணிமேகலை, மக்களின் பசிப் பிணியைப் போக்கி சென்ற இடமெல்லாம் அன்பையும் அறத்தையும் போதித்து இறுதியில் பௌத்த நெறிப் படி மடிகிறாள். மதுரையைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார் எனும் தமிழ்ப்புலவரால் இயற்றப்பட்ட, தமிழர்களின் கலை பண்பாட்டுக் கருவூலமான இக்காப்பியத்திற்கு நிகரான ஒரு பௌத்த நெறிக் காப்பியம் உலகில் வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் போன்று ஈழத்திலும் ஏராளமான தமிழர்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்கள் அதனால்தான் தமிழீழ மண்ணில் பல பௌத்த சின்னங்களும் விகாரைகளும் இருக்கின்றன இந்த உண்மை தெரியாமல் பௌத்த சின்னங்களும் விகாரைகளும் இருப்பதால் ஒட்டு மொத்த இலங்கையும் தங்களுக்குத்தான் சொந்தம் என்கிறது சிங்களம். ஆனால் உண்மை என்ன? இலங்கைத் தீவானது ஒரு காலத்தில் தமிழர்களுக்குத்தான் சொந்தமாய் இருந்தது என்பதுதான் வரலாறு.

சிங்களவர்களே இலங்கையின் தொன் குடிகள், தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்த அந்நியர்கள், வந்தேறு குடிகளான தமிழர்களுக்கு தனி நாடு எதற்கு என்று இலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளும் ஊடகங்களும் ஆண்டாண்டு காலமாகக் கருத்து தெரிவித்து வருகின்றன. எது நடந்ததோ அதுதான் வரலாறு. தன்னை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றைத் திரித்து வருகிறது சிங்களம். இலங்கையின் தொன் குடிகள், யார்? ஏன்ற வினாவுக்கு வரலாறு என்ன விடையளிக்கிறது என்று பார்ப்போம்.

கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்து நாட்டின் ரோயல் சொசைட்டி உறுப்பினராக இருந்த பி.எல். ஸ்கிலேட்டர் என்ற உயிரியல் அறிஞர் கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது என்றும் அதற்கு லெமூரியா என்றும் பெயர் சூட்டினார். இக்கூற்று பல வரலாற்று அறிஞர்களால் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை உற்று நோக்கையில் லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகத் தெரிகிறது. இதில் வரும் குமரிக் கண்டத்தில்; ஈழமும் தமிழகமும் ஒரே நிலப்பரப்பைக் கொண்டு இருந்தன. பின்னாள்களில் ஏற்பட்ட கடல்கோள்களினால் இரண்டும் தனித்தனியே பிரிந்தன. பல வரலாற்று ஆசிரியர்களால் ஆய்வு செய்து கூறப்பட்ட இவ்வுண்மை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை யாண்ட தென்னவன் வாழி!'

ஈழத்தோடு இணைந்திருந்த தென்பாண்டி நாடு தமிழ் பேசும் மக்களைக் கொண்ட நாடு, ஈழத்தின் ஆதி குடிகளான வேடர், நாகர், இயக்கர் ஆகியோர் பேசிய மொழி தமிழ்தான் என்றும் கூறப்படுகிறது அதன் பின் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழித்து கி.மு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய இளவரசன் விசயனின் வருகையிலிருந்தே சிங்களவரின் வரலாறு தொடங்குகிறது, சிங்களவர்கள் வந்தேறு குடிகள்தான் என்பதை சிங்களவர்களாலே போற்றிக் கொண்டாடப்படும் மகாவம்சமே பின் வருமாறு கூறுகிறது.

'வங்க நாட்டு இளவரசியான சுபதேவி ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியேறி லாலா எனும் நாட்டை அடைந்தபோது அங்கு மனிதர்களைக் கொன்று தின்னும் சிங்கன் என்பவன் அவளைக் கடத்திக் கொண்டு போய் குகை ஒன்றில் அடைத்து வைத்தான் பகலில் வெளியில் போய் மனிதர்களை வேட்டை ஆடுவதும் இரவில் குகைக்குள் வந்து சுபதேவியுடன் காலம் கழிப்பதுமாய் இருந்து வந்தான், நாளடைவில் இருவருக்கும் சிங்கபாகு சிங்கவல்லி என ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாய் இரு குழந்தைகள் பிறந்தன. சிங்கபாகு வளர்ந்து பெரியவனானதும் தன் தந்தையைக் கொன்று விட்டு தாயையும் தங்கையையும் கூட்டிக்கொண்டு தன் பாட்டனின் நாடான வங்கத்திற்குச் சென்று அங்கு தன் தங்கை சிங்கவல்லியையே பட்டத்து அரசி ஆக்கி நாட்டை ஆண்டு வந்தான் அவர்களுக்கு 32 பிள்ளைகள் பிறந்தன அவர்களுள் மூத்தவனான விசயனை இளவரசனாக்கினர். விசயன் பெரியவனானதும் பல தீய செயல்களில் ஈடுபட்டதால் அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் அவனது தந்தை சிங்கபாகு நாடு கடத்தினான். விசயனும் அவனது தோழர்களுடன் பல நாள்கள் கடலில் அலைந்து இறுதியில் இலங்கைத் தீவை வந்தடைந்தான், அங்கு இயக்க இனத்தைச் சேர்ந்த இளவரசி குவேனியை மணம் முடித்தான் அவனது தோழர்களும் இயக்க இனத்தைச் சேர்ந்த பெண்களை மணம் முடித்தனர்'

இவ்வாறே இலங்கையில் சிங்களவர்; குடியேறினர். ஆரியர்கள் எந்த நாட்டில் குடியேறுகிறாகளோ அந்த நாட்டு மண்ணின் மக்களை சூழ்ச்சியால் வென்று தங்கள் வழி இன மொழிப் பண்பாட்டைத் திணிப்பது வழக்கம் ஈழத்திலும் அவ்வாறே நடந்தது அதற்குப் பின்பும் பெருவாரியான ஆரியக் கூட்டங்கள் ஈழத்தில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. விசயனின் வருகைக்கு முன் ஒட்டு மொத்த இலங்கையும் ஒரு காலத்தில் தமிழர்களுக்குத்தான் சொந்தமாய் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சிங்கள அரசு ஒரு முத்திரையை வெளியிட்டது. விசயன் கப்பலில் இருந்து இறங்குவது போலவும் இளவரசி குவேனி அவனை வரவேற்பது போலவும் அம்முத்திரை சித்தரிக்கப்பட்டிருந்தது. தன்னையும் அறியாமல் உண்மையைக் கக்கிவிட்ட சிங்கள அரசு அவசர அவசரமாக முத்திரையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

விசயன் ஈழத்தில் நிலையான சிங்கள ஆட்சியை ஏற்படுத்தி அமைதியக வாழ்ந்த தமிழர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினான் இருந்தபோதிலும் தமிழ் சிங்கள மோதல்கள் அப்போது இருந்ததற்கான சான்றுகள் இல்லை. கி.மு 2 ஆம் நூற்றாண்டில் தமிழ் அரசன் எல்லாளனுக்கும் சிங்கள அரசன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர்களில் இருந்தே சிங்கள இனவாதம் தமிழர்கள் மேல் வளர்க்கப்பட்டு இருத்தல் வேண்டும் அதுமட்டுமல்லாது இப்போர்களில் பௌத்தமும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போர்கள் கூடது என்பதற்காக அசோகனால் பரப்பப்பட்ட பௌத்தம் தமிழர்களுக்கெதிரான போரில் துட்ட காமினியால் பயன்படுத்தப்பட்டது. இன்றும் சிங்கள பிக்குகள் துட்டகாமினியை தங்கள் வரலாற்று நாயகனாகக் காண்பதுடன் பெரும்பாலான சிங்களவர்களுக்கு காமினி என்ற பெயர் இருப்பதன் வழியாக இந்த உண்மையத் தெரிந்து கொள்ளலாம். இலங்கை வரலாற்றில் எல்லாளன் - துட்டகாமினி போர் மிக முக்கிய ஒன்றாகக் கருதப் படுகிறது. கி. மு 205 முதல் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தமிழ் வேந்தன் எல்லாளன். இலங்கைத் தீவை நீதி நெறி தவறாமல் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன்பின் கி. மு 161 இல் துட்ட காமினியால் தந்திரமாகக் கொல்லப் பட்டு வீரமரணம் எய்தினான், அப்போது எல்லளனுக்கு வயது அறுபதைத் தாண்டி விட்டதென்பதும் துட்டகாமினி முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மன்னன் ஒருவனை தந்திரத்தால் வெற்றி கண்ட இப் போரை சிங்கள வரலாற்றாசிரியர்கள் புனிதப் போர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களால் வெற்றி கொள்ளப் பட்ட எல்லாளன் பௌத்தத்தையும் போற்றி மதித்த பெருமகன் என்பதை மகாவம்சமும் குறிப்பிடத்தவறவில்லை. அதன்பின், தமிழ் அரசர்களுக்கும் சிங்களஅரசர்களுக்கும் தொடர்ந்து போர்கள் நடந்த வண்ணம் இருந்தன, தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்கள் சிங்களஅரசர்களை அடக்கியாண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. அப்போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பௌத்தத்தையே தழுவியிருந்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் இந்திய முழுவதும் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தம் பின்னாள்களில் மாபெரும் வீழ்ச்சி கண்டது, இதன் விழ்ச்சிக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன பௌத்தத்தின் பிராமண எதிர்ப்புக் கொள்கைகளும், சாதியத்திற்கு எதிரான சமரசப் போக்கும் வேத மதத்தையும் அதன் வைதீகப் புரட்டல்களையும் ஆட்டம் காணச் செய்தது. இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் பௌத்ததுக்குள் புகுந்து அங்கேயும் தங்கள் வர்ணாசிரமக் கொள்கைகளைப் பரப்பி புத்தரும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று என்பது போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி இறுதியில் பௌத்தத்தை இந்தியாவை விட்டே துரத்தி விட்டார்கள் இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியவில் இல்லாமல் ஏனைய ஆசிய நாடுகள் முழுவதிலும் இருப்பதற்கு இதுவே காரணமாகக் கருதப் படுகிறது.

7 ஆம் நூற்றாண்டில் நாயன்மார் காலத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் தோன்றியபோது சைவம் மாபெரும் எழுச்சியுற்றது. சைவத்தின் எழுச்சி தமிழர்களை சைவத்தின்பால் கொண்டு சென்றது. ஈழத்தில் சிங்களத்தின் பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட மொழி இனம் சார்ந்த கருத்து வேறுபாடுகளும் பௌத்தத்தைச் சிங்களம் பயன்படுத்திய விதமும் தமிழர்களுக்கு பௌத்தத்தின் மேல் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நாளடைவில் பௌத்தம் தமிழர்களை விட்டுச் சென்று விட்டது. இன்று பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் சைவத்தையே தங்கள் சமயமாகக் கொண்டிருக்கிறார்கள் அதே சமயம் பௌத்தம் சிங்கள இனத்தை ஆட்கொண்டது.

அடுத்து சிங்களவர்களால் கற்பிக்கப்படும் மற்றுமொரு வரலாற்றுப் பொய் கௌதம புத்தர் இலங்கைக்குச் சென்று சிங்களவர்களுக்கு தேரவாத பௌத்தத்தைப் போதித்தார் என்பதாகும். புத்தர் இலங்கைக்குச் சென்றதற்கு எந்த விதமான வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஒருவேளை அப்படி அவர் சென்றிருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் சிங்கள இனம் தோன்றியிருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கௌதம புத்தர் கி.மு. 563 இல் பிறந்து கி.மு. 483 இல் தனது 80 வது வயதில் இறந்தார் என்று வரலாறு கூறுகிறது. கி.மு. 260 இல் நடந்த கலிங்கப் போருக்குப்பின், அப்போருக்குக் காரணமாக இருந்த மாமன்னன் அசோகனே பௌத்தம் உலகெங்கும் பரவுவதற்கு காரணமாக இருந்தான். கி.மு. 247 இல் தேவநம்பிய திசனின் ஆட்சிக்காலத்தில் அசோகனின் மகன் மகிந்தனால் பௌத்தம் முதன் முதலாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கையின் புராதன வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகிறது. அதாவது புத்தர் இறந்து 236 ஆண்டுகளுக்குப் பிறகே பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. வரலாற்றுச் சான்றுகள் இவ்வாறு இருக்கும்போது புத்தார் தங்களுக்கு பௌத்தத்தை நேரடியாகவே கற்பித்தார் என்று கூறுவது வரலாற்றைத் திரிக்கும் முயற்சியே.

அசோகப் பேரரசின் காலத்தில் இலங்கைத் தீவில் வடமொழி, பாளிமொழி, கலிங்கமொழி, தமிழ் மொழி அனைத்தையும் கலந்த ஒரு புதிய மொழி உருப்பெற்று வளரத் தொடங்கியது அந்தப் புதிய மொழியையே பிற்காலத்தில் இளவரசன் விசயனோடு இணைத்து சிங்கள மொழி என அழைத்தனர். ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளனர்.

1833 ஆம் ஆண்டு தனித்தனியாக இருந்த தமிழ் அரசையும் சிங்கள அரசையும் கோல்புறூக்-கமரோன் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி ஆங்கிலேயர்கள் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். அப்போது மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பில் தமிழர்கள் இலங்கைத் தீவின் 35 விழுக்காடு நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருந்தனர். 1995 இல் வெறும் 17 விழுக்காடு நிலப்பரப்பே தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது. 1833 இற்கும் 1995 இற்கும் இடைப் பட்ட நூற்றி அறுபத்து ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் 50 விழுக்காடு நிலப் பகுதியை சிங்களவர் கைப்பற்றி உள்ளனர். ஓட்டு மொத்த இலங்கையையும் சிங்களவருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற நோக்கோடு கடந்த 50 ஆண்டுகளாக இன அழிப்பை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது சிங்களம்.

உயிர் வாழ விரும்பினால் தமிழா! உனக்காக ஒரு நாட்டை உருவாக்கிடு என்று உறைப்பாக உணர்த்தியதே சிங்கள அரசுதான். ஓவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமான எதிர்த்தாக்கம் இருக்கும் என்றார் நியுட்டன். ஆம், ஜார் மன்னனின் அடக்குமுறை ரஷ்யாவில் வர்க்கப் போராட்டத்திற்கு வித்திட்டது. சிங்கள அரசின் அடக்குமுறை ஈழப் போராட்டத்திற்கு வித்திட்டது.

1948 இல் ஆங்கிலேயேரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றவுடன் இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுவதும் சிங்களவர் கைக்குச் சென்றது, இதன் காரணமாக தமிழர்களுக்கெதிரான சிங்கள பௌத்த பேரினவாதம் பல மடங்கு தீவிரமடைந்தது. புத்தரின் போதனைப்படி உள்ளத்தில் அன்பையும் பார்வையில் அருளையும் நடத்தையில் கண்ணியத்தையும் கொண்டவர்களைப் பௌத்த பீடங்களில் சேர்க்காமல் கொலை வெறி கொண்டு கத்தி, கடப்பாரையோடு அலையும் சிங்களக் காடையர்களும் குண்டர்களும் பௌத்த பீடங்களில் பிக்குகளாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தம் சரணம் கச்சாமி தானம் சரணம் கச்சாமி என்று கூறுவதற்குப் பதிலாக யுத்தம் சரணம் கச்சாமி இரத்தம் சரணம் கச்சாமி எனக் கூறி தமிழர்களை வேட்டையாட அலைந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் இவர்களுக்கு இருந்த செல்வாக்கும் அதிகாரமும் இலங்கை அரசியலையே தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள அனுமதித்தது.

1957 ஆம் ஆண்டு இலங்கைத் தலமை அமைச்சர் பண்டாரநாயக்காவிற்கும் தந்தை செல்வாவிற்கும்மிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிவிடும் என அறிந்து ஏராளமான பிக்குகள் பண்டாரநாயக்காவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர் அதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு சோமராமதேரோ என்ற பிக்குவால் பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப் பட்டார். மற்றும் 1958 1983 களில் நடைபெற்ற தமிமினப் படுகொலைகளையும் திட்டமிட்டு நிறைவேற்றியது சிங்கள அரசு, அதன் தூண்டு கோலாக பௌத்த பீடங்களே துணை நின்றன. இன்று நோர்வே நாட்டின் உதவியுடன் ஏற்படும் சமாதான முயற்சிகளுக்கு சிங்கள பௌத்த பீடங்களே மாபெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசு தன் சமாதான முயற்சியைத் தொடங்கியபோது நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் தமிழ் விரோதப் போக்கைக் காட்டிக் கொண்டர்கள் சிங்களப் பிக்குகள். சமாதானத்திற்காகவும், போரின்றி மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் மார்க்கம் கண்ட புத்தபிரானின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் இன்று சமாதனத்திற்கு எதிரியாகப் போர்க் கொடி தூக்கி நிற்கிறார்கள்.

பொதுவாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது மதங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றன அவற்றைப் புரிந்து கொள்ளாத மக்களின் மனம்தான் வெறித்தனமான வன்முறைகளில் ஈடுபட வைக்கிறது என்று. இக்கருத்தை முழுவதுமாக நிராகரித்துவிடவும் முடியாது அதேசமயம் முழுவதுமாக ஏற்றுக் கொண்டுவிடவும் முடியாது ஏனெனில் புனித நூல்கள் என்று கூறப்படும் மத நூல்களில் கூறப்பட்டுள்ள விடயங்களைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் அப்படியே பின்பற்றுவதாலே மதப் பூசல்கள் ஏற்படுகின்றன. உண்மையில் மதங்களில் திருத்தம் செய்வதற்கு ஏராளமான விடயங்களும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செய்திகளும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் இப்படி ஒரு குற்றச்சாட்டைப் பௌத்தத்தின் மேல் சுமத்த முடியாது. பகுத்தறிவுக்குப் புறம்பான எந்தக் கருத்தையும் புத்தர் கூறவில்லை, மற்ற மதங்கள் எல்லாம் மனிதனுக்குக் கடவுளைக் காட்ட முயற்சித்த போது புத்தர் மட்டுமே மனிதனுக்கு மனிதத்தைக் காட்ட முயற்சித்தார் பௌத்தத்தில் கடவுளும் இல்லை ஆன்மாவும் இல்லை சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லை புத்தர் தன்னைக் கடவுள் அவதாரமாகவோ அல்லது கடவுளின் தூதராகவோ காட்டிக் கொள்ளவில்லை தன்னுடைய ஞானத்தைத் அவர் தன்னிடம் இருந்தே பெற்றார் அவருக்கு கடவுளோ அல்லது வேறு ஆவிகளோ வந்து ஞானம் கொடுக்கவில்லை அவர் தன் வாழ்நாளில் அற்புதம் என்று சொல்லி எந்த ஒரு செயலையும் செய்துகாட்டவில்லை. அப்படியானால் பௌத்தம் எதைத்தான் கூறுகிறது ? பகுத்தறிவு, இன்னா செய்யாமை, வாய்மை, கொல்லாமை, ஒழுக்கம், நல்லூக்கம், நல்லுறுதி போன்றவற்யையே புத்தர் அதிகமாக போதித்தார் அன்பின் ஆணிவேரையே தொட்டவர் புத்தர் ஆறறிவுள்ள மனிதனில் தொடங்கி புழு, பூச்சி போன்றவற்றின் உயிரையும் தன்னுயிரினும் மேலாக மதித்தவர். அவரது அருள் ததும்பும் பார்வையும் புன்னகை பூத்த முகமும் இனிமை கொண்ட பேச்சுக்களும் மானுடத்தின் மீது அவர் காட்டிய மாறாப் பற்றும் கல்நெஞ்சர்களையும் கண்ணீர் விடவைத்தது போர் வெறியர்களையம் சமாதான விரும்பிகளாக மாற்றியது புல்லரையும் நல்லோராக்கியது புத்தரின் மார்க்கத்தில் சாதிகளுக்கு இடமில்லை குலப் பேதங்களுக்கு இடமில்லை அதனால்தான் தாழ்த்தப்பட்ட இந்துவாகப் பிறந்து சொல்லணாத் துன்பங்களுக்கு ஆளான அண்ணல் அம்பேத்கர் தன் சமுகத்தைச் சேர்ந்த 54 ஆயிரம் தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் இந்து மதத்தை விட்டு விலகி பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். பௌத்தத்தில் அன்பே கடவுள் அதுவே உயிர், அதுவே வாழ்க்கை, அதுவே மூச்சு, அதுவே முக்தி. பௌத்த மதம் என்று சொல்வதைக் காட்டிலும் பௌத்த நெறி அல்லது மார்க்கம் என்று சொல்வதே சாலப் பொருந்தும் மனிதராகப் பிறந்த புத்தர் மனிதராகவே மறைந்தார் இதுவே பௌத்தத்தின் சிறப்பு. அப்பேர்ப் பட்ட பௌத்தத்தைக் கடைப் பிடிப்பவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இலங்கையில் நடத்திய ஓர் இனப் படுகொலை போல் வேறு எவரும் நடத்தியதில்லை, தமிழனின் கண்ணைத் தோண்டி எடுத்து கீழே போட்டு காலால் நசுக்கிய வரலாறும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளிருந்த சிசுவை வெளியில் தூக்கிப் போட்ட வரலாறும், பெண்களின் மார்பகங்களை அறுத்து வீதியில் போட்ட வரலாறும் இலங்கையைத் தவிர வேறு எங்கும் நடக்கவில்லை. ஆரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அல்லல் பட்ட ஈழத்தமிழர்களைக்கு விடிவேதும் வந்துவிடக் கூடது என்பதற்காக சிங்கள பௌத்த பீடங்களும் பேரினவாத சக்திகளும் சிங்கள அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன.

இன்று தங்களைவிட்டால் பௌத்தத்தைக் காக்க வேறுயாருமில்லை என்று கூறித்திரியும் சிங்கள பௌத்த பீடங்கள் பௌத்தத்தைக் காக்க சிங்களத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பது போலவும் சிங்களத்தைக் காக்க பௌத்தத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பது போலவும் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரவாதத்தை வளர்த்து புத்தர் காட்டிய மனிதநேயத்தையும் அன்பையும் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர். ஆனால் பௌத்தம் சன்மார்க்கம் மிக்க மார்க்கம் அது தமிழர்களாலும் போற்றிவளர்க்கப் பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆனால் பௌத்தம் சன்மார்க்கம் மிக்க மார்க்கம் அது தமிழர்களாலும் போற்றிவளர்க்கப் பட்டிருக்கிறது.

இந்த உண்மையை தமிழ் புத்திஜீவிகள் கூட மக்களுக்கு எடுத்து கூற முன்வருவதில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.