Jump to content

ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாக இறங்குமாம்: 1. உச்சந்தலை 2. நெற்றிப்பொட்டு 3. கால் கட்டைவிரல்கள்


Recommended Posts

ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாக இறங்குமாம்: 1. உச்சந்தலை 2. நெற்றிப்பொட்டு 3. கால் கட்டைவிரல்கள்

கனடாவில் $ 9.95 மாதக்கட்டணத்துடன் பார்க்கக்கூடியதும், பல சுவாரசிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுமான தொலைக்காட்சி விஜய். மற்றைய தமிழ் தொலைக் காட்சிகளுக்கான மாதக்கட்டணங்கள் அதிகம்: தமிழ்வண், ஏரீஎன் தமிழ் / ஜெயா, சன் ஆகியவற்றுக்கான மாதக்கட்டணம் $ 14.95 ( நமக்கு முதுகு சொறிவதற்கு ஐந்து பைசா விட்டுக் கொடுக்கின்றார்களாம் ), தமிழ்விசன் மாதக்கட்டணம் $19.45.

கடந்தகிழமை தொலைக்காட்சி முன்னால் குந்தியபோது, விஜய் தொலைக்காட்சியில் ‘வாங்க பேசலாம் வாங்க’ எனும் நிகழ்ச்சி சென்றது. வழமைபோலவே தலை ஆட்டலும், நெளிப்புக்களும், மேளமும், தாளமும் என நிகழ்ச்சி போயிருக்க வேண்டும். ஆனால், நான் பார்க்கத்தொடங்கிய சமயத்தில் நிகழ்ச்சி விருந்தினராக வருகைதந்த காட்டு மரக்குற்றி போன்ற ஒருவர் இவ்வாறு கூறினார்:

“நான் எங்கள் மக்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாகவே இறங்கும்: 1. உச்சந்தலை, 2. நெற்றிப்பொட்டு, 3. கால் கட்டைவிரல்கள். நீங்கள் பயப்படும் போதுதான் பேய் உங்களினுள் இறங்குகின்றது. அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தியபடி இப்படிச் செய்யும்போது ( கழுத்தை திருப்பி பரதநாட்டியம் ஆடும்போது பிடிக்கப்படுவது போன்ற அபிநயம் ஏதோ காட்டுகின்றார் ) பேய் உங்களினுள் இறங்காது”.

தொடர்ந்து பேசினார்: “தமிழ்சினிமாவில் பேய்கள் பற்றி மிகைப்படுத்திக் காட்டப்படுவதனால் உண்மையான பேய்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாமல் போகின்றது”. மேடையில் அவர் முன்னாள் உட்கார்ந்திருந்த கலைஞர் ஒருவர் “கால் கட்டை விரல்களுக்கு பிளாஸ்டர் ஒட்டினால் பேய் உடம்பினுள் உள்நுழைவதை தவிர்க்கமுடியாதா” என கேட்கின்றார்.. நெளிப்புக்களும், கதைகளுமாக வாங்க பேசலாம் வாங்க தொடர்கின்றது.

‘போடா லூசு’ என நினைத்துவிட்டு நான் மேல்மாடி அறைக்கு சென்றேன், பின்னர் கீழே வந்தேன். அன்று இரவு அனைவரும் உறங்கிய பின்னர் கணணியை பாவித்துவிட்டு ‘மூத்தா’ அடிப்பதற்காக மேல்மாடி மலசல கூடத்திற்கு சென்றேன், பின்னர் மீண்டும் கீழே இறங்கி வந்தேன். எங்கும் இருளாக காணப்பட்டது, ஓர் குத்து மதிப்பிற்கு கைப்பிடிகளை பற்றியபடி நடந்து சென்றேன், நடக்கும்போது சக், சிக், டக், டிக், கிரீச், உச்.. என பல விநோதமான ஓசைகள் கேட்டன. வாங்க பேசலாம் வாங்கவில் தோன்றிய மரக்குற்றி நினைவில் வந்தது… மூன்று இடங்களூடு பேய் இறங்குமாம்.

என்ன செய்யலாம்? ஒளிவிளக்கை போடலாமா? அல்லது ஐயோ என்று கூக்குரல் இடலாமா? அசரீரி போல் நான் நடக்கும்போது பல்வேறு ஓசைகள் என்னை பின் தொடர்கின்றன. இப்போது நான் என்ன செய்யலாம்? நான் பயப்படக்கூடாது… நான் தைரியமாய் இருக்கவேணும்… மரக்குற்றி சொன்னதுபோல் கழுத்தை 90 பாகை என்ன 360 பாகையுக்கே சக்கரமாக சுழற்றி நான் அபிநயம் பிடிக்க வேண்டும். நம்மட உடலுக்கை பேய் குடித்தனம் நடத்த நாம என்ன சத்திரமா நடத்துறம்? ம்ஹ்ம்.. விடப்படாது… பேயை உள்நுழைய விடவே மாட்டன்…

கனடாவில நாசமாப்போவார் கட்டிற வீடுகளில பல்வேறு கோளாறுகள் உள்ளன. இரண்டாம் மாடியில இலையான் நொய்ங்க் நொய்ங்க் என்று சத்தம் இட்டால் காற்றுக் குழாய்களூடாக அந்தச்சத்தம் கீழ்த்தட்டு வரை கேட்கும். மாடிப்படிகளில் ஓர் பலகையில் சிறிய தட்டு தட்டினால் முழுவீட்டிலும் உள்ள பலகைகள் குலுங்கிக் குலுங்கி ஆரவாரம் செய்யும். விநோதமான ஓசைக்கான காரணம் இவைதான்.

எமது ஐம்புலன்களின் மட்டுப்படுத்தல்கள் ( Limitations ), சூழ்நிலைகள், மற்றும் எம்முள் பதிந்துள்ள பல்வேறு விடயங்களே பேயையும், பிசாசையும், பீதியையும் கிளப்புகின்றன. எனது வினா யாதெனில் பேய் உடம்பை விட்டு வெளியேறும் பகுதிகள் எவை? கீழ்வரும் மூன்று இடங்களை இதற்காக பிரேரணை செய்கின்றேன். 1. சிறுநீர்த் துவாரம், 2. ஆசனவாயில் ( கு.துவாரம் ), 3. Underarm ( க.கட்டு )

- கலைஞன்

தகவல் மூலம்: http://karumpu.com/archives/657

Link to comment
Share on other sites

எனது வினா யாதெனில் பேய் உடம்பை விட்டு வெளியேறும் பகுதிகள் எவை? கீழ்வரும் மூன்று இடங்களை இதற்காக பிரேரணை செய்கின்றேன். 1. சிறுநீர்த் துவாரம், 2. ஆசனவாயில் ( கு.துவாரம் ), 3. Underarm ( க.கட்டு )

பேய் வந்தால் போகமாட்டுது ...கரும்பு..... :lol::lol:

மனிசனுக்கு 9 வாசல்(ஒட்டை வீடு ஒன்பது வாசல்) வாசலாலும் போக சந்தர்ப்பமுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக உலகில் மக்களை சிந்திக்க விடமால் செய்யும் 3 முக்கிய விடயங்கள்.

1. வாக்குச் சீட்டு.

2. சினிமாவும் காதலும் கலியாணமும்.

3. பேய் பிசாசு.

இவை மூன்றும் இல்லையேல் ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு கூட்டம் மனிதர்கள் பிற மனிதர்களின் சிந்திக்கும் ஆற்றலை கட்டிப்போட்டு ஆட்சி செய்வது நடக்காத காரியம்.

இன்றைய சூழலில் தமிழர்களுக்கு முக்கியமா இவற்றை ஆழமாக கற்றுக் கொடுப்பது தமிழர்கள் ஜனநாயகத்தில் ஊறித்திழைத்து சுயசிந்தனையற்ற முட்டாள்களாக இன்னும் இன்னும் வளர உதவி செய்யும்.

நல்ல சமூகப் பணி. :lol: :lol:

Link to comment
Share on other sites

கரும்பு,

பெண் மோகினிப் பேய் எதுக்குள்ளாள உடம்புக்குள் இறங்கும்? பிழையா நினைக்க வேண்டாம். அந்த இடத்தை திறந்து வைக்கலாம் என்றுதான் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகினிப் பேய் ஆண்களைத் தான் பிடிக்குமாம் அதுவும் குறிப்பாய் பெண்களே வேண்டாம் பெண்கள் கூடாது சொல்பவர்களையும்,பெண்களை வெறுப்பவர்களையும் தான் அதிகம் பிடிக்குமாம்...எந்த வழியால இறங்கும் என்டால் அது வாயால தான் இறங்கும் :lol::D:lol:

Link to comment
Share on other sites

மோகினிப் பேய் ஆண்களைத் தான் பிடிக்குமாம் அதுவும் குறிப்பாய் பெண்களே வேண்டாம் பெண்கள் கூடாது சொல்பவர்களையும்,பெண்களை வெறுப்பவர்களையும் தான் அதிகம் பிடிக்குமாம்...எந்த வழியால இறங்கும் என்டால் அது வாயால தான் இறங்கும் :lol::D:lol:

அப்ப தம்பி கொடுத்துவச்சவர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே சனம் உளைக்கிற காசு எல்லாம் இந்த தெரு வளிய இருந்து கண்டதையும் சொல்லிக் குளப்பும் கள்ள சாத்திரி மாரிட்டக் கொட்டிக் கொண்டு இருக்குதுகள்..இப்படியான பரப்புரைகளைப் பார்த்தால் கேட்டால் போச்சு..நல்ல பணி மச்சான். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கரும்பு.............கண்ட கண்ட காட்சிகளை பார்க்க வேண்டாம் பார்த்தமா சிரிச்சமா என இரு இருக்கவும். அதையே கற்பனை பண்ணிக் கொண்டு இருக்க வேண்டாம். டி வீ யை விட வேறு உபயோகமான் வேலைபார்க்கவும் டி வீ ஒருபொளுதுபோக்கு........பேய் பிசாசு எல்லாம் இல்லை. ஒவ்வொருவரின் மன ஓட்டம் ..மூத்தவர்களின் கற்பனைக்கதை இது உண்மையில் மனோ தத்துவம் சார்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் :lol:

நீங்க நல்லாகத்தான் பேய் க் காட்டுகின்றீர்கள் :lol:

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

கனடாவில் இந்திய தொ(ல்)லை காட்சி மட்டுமல்ல கடைகளுக்கு முன்னாலும் சாத்திரிமார்கள் காவி உடையுடன் அலைகிறார்கள்.Tim Horton ல் இரண்டு வெள்ளைகள் காவியுடை தரித்த சாமியார் காப்பி வாங்க வரும் போது இவர் என்ன மக்கியில் விழுந்து விட்டார் போல என சொல்லி தங்களுக்குள் சிரிக்கிறார்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இந்திய தொ(ல்)லை காட்சி மட்டுமல்ல கடைகளுக்கு முன்னாலும் சாத்திரிமார்கள் காவி உடையுடன் அலைகிறார்கள்.Tim Horton ல் இரண்டு வெள்ளைகள் காவியுடை தரித்த சாமியார் காப்பி வாங்க வரும் போது இவர் என்ன மக்கியில் விழுந்து விட்டார் போல என சொல்லி தங்களுக்குள் சிரிக்கிறார்கள். :lol::lol:

அய்யோ நுணா அண்ணா..இந்த சாத்திரி மாரின் மனைவிமார் செய்யிற அனியாயம் சொல்லி மாளாது..நான் ஒரு நாள் ஒரு மோலுக்கை பாத்தேன்..எனக்குத் தெரியாது அவர்கள் இந்த சாத்திரி மாரின் மனைவிமார் எண்டு..நல்ல வடிவாக சாறி எல்லாம் உடுத்து எங்கயோ கலியாண வீட்டுக்கு போற மாதிரி வந்து மோலுக்கை ஏன் இருக்கிதுகள் எண்டு திரும்பி பார்த்துட்டன்..உடன் என் பின்னால் வர தொடங்கீட்டுதுகள்..அப்புறம் தான் எனது சிறிய தாயார் சொன்னா சாத்திரம் சொல்கிறவையளின்ட மனைவிமாராம்..மோலுக்கை வந்து இருந்து ஆக்கள் சேர்த்துக் குடுக்கிறவையாம்.இந்தக் குளப்படிக்கு பிறகு நான் எங்காவது போனால் அங்காலை இங்காலை திரும்பிப் பாக்கிறது இல்லை.. :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! இது நல்ல ஆராச்சி , முன்பு ஐங்கரன் தொலைக்காட்சியிலும் இது சம்பந்தமாய் ஒரு நிகழ்சிப் போட்டியே நடந்தது, ஒரு அரவாணிப் பெண்மணி இதை நடத்தினார்.இடையில் நிப்பாட்டி விட்டார்கள் . முடிவு தெரியாது. பிறகு நடத்தினார்களோ அதுவும் தெரியாது. மொத்தத்தில் பேய்க்காட்டிப் போட்டார்கள்! :D

Link to comment
Share on other sites

யாரது போகிற போக்கில் எங்கட சாத்திரியையும் இழுப்பது ?

[

எனது வினா யாதெனில் பேய் உடம்பை விட்டு வெளியேறும் பகுதிகள் எவை?

- கலைஞன்

தகவல் மூலம்: http://karumpu.com/archives/657

எனக்குத் தெரிந்து கொட்டாவியும் குசுவும் தான் எம்மிடம் இருந்து வெளியேறும் ஆவிகள் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.