Jump to content

எனது புதிய நூல் “நேற்றுப் போல இருக்கிறது” | கே. எஸ். பாலச்சந்திரன்


Recommended Posts

இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன?

எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக “ஒரு பேப்பர்’ பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அளவு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் ” நேற்றுப்போல இருக்கிறது” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இதுவும் எனது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவலைப் போலவே வடலி வெளியீடாக வருகிறது.

ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்..

விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓடி, முழங்காற் சில்லை பெயர்க்கும் வகையில் கல் றோட்டில் விழுந்து எழும்பியும் சளைக்காமல் -

கடைசி, கடைசியாக ஒரு நாள் -

எப்படியோ சீற்றின் முன் நுனியில்; ஏறிக்குந்திக் கொண்டு கருமமே கண்ணாக சைக்கிள் ஓட, சீற்றின் பின்புறத்தில் பிடித்துக் கொண்டு; நாரியை வளையாதை.. ஹாண்டிலை நேராய் பிடியடா..; என்று சொல்லிக் கொண்டே கூட ஓடி வந்த நண்பனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தொலைவில் கேட்பது எதையோ உணர்த்த -

திரும்பிப் பார்க்கும் சாத்தியமும், துணிவும் இல்லாமல், -

அதை சித்தரிக்கும் ரமணியின் படம் இது.. இப்படி 36 படங்கள்..

book.jpg

பாலு மகேந்திராவின் “அழியாத கோலங்கள்” திரைப்படம் மாதிரி, சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” சிறுகதைத் தொகுதி மாதிரி எங்கள் சின்ன வயசு காலத்து அனுபவங்கள் இத்தொடரில் வருகின்றன.

வாசிக்கும் எவரும் அந்தக்கால நினைவுகளில் தோய்ந்து இன்புறுவார்கள் என நம்புகிறேன். 

- கே. எஸ். பாலச்சந்திரன்

தகவல் மூலம்: சொல் புதிது... சுவை புதிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு அதன் நோக்கத்தை யடைய என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.உங்ளின் 'நேற்றுப் போல இருக்கிறது" புத்தக வெளியீட்டு விழா இனிதே வெற்றி பெற என்னுடைய நல் வாழ்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தினை பார்த்தால் எனக்கும் சைக்கிளில் நானும் என் நண்பனும் அரைபெடல் அடித்த நினைவுக்கு வருது... :rolleyes: வெளியிட்டு விழா வெற்றிபெறவாழ்த்துக்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு அதே வேகத்துடன் இன்னொரு வீதிக்குள் திருப்பும் போது காலால் உடன் பிறேக் அடித்தால் எப்படி இருக்கும். :rolleyes:

நூல் வெளியீடு இனிதே அமைய வாழ்த்துக்கள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரப்போகும் என் புதிய நூலுக்கான கட்டியம் கூறி யாழ்களத்தில் இடுகை செய்த கரும்புவுக்கும், வாழ்த்துக்கள் சொன்ன நிலாமதி, ரதி, யாயினி, புரட்சிகர தமிழ்தேசியன், வாத்தியார் ஆகியோருக்கும் நன்றிகள்.

இலங்கையைச் சேர்ந்த பாலு மகேந்திரா தனது இளமைக்கால அனுபவங்களை பதிவுசெய்யும் ஆசையுடன் "அழியாத கோலங்கள்' திரைப்படத்தை உருவாக்கினார். எழுத்தாளர் சுஜாதா தனது இளமைக்கால நினைவுகளை ஸ்ரீரங்கத்து தேவதைகள்'" என்ற பெயரில் தொடராக எழுதினர். பின்னர் அதுவே "ஸ்ரீரங்கத்து கதைகள்' என்ற்தொகுப்பாகவும் வெளிவந்தது. நான் இத்தொடரின் முதலாவது கட்டுரையை 1971ல் சிரித்திரன் சஞ்சிகையில் எழுதினேன். தொடர்ந்து 'உலகததமிழோசை, ஒருபேப்பர் ஆகியவற்றில் எழுதி முடித்தேன்.

எங்கள் காலத்தவரான் பலர் மறந்துவிட்ட எங்கள் கால நினைவுகளை மீட்டுக்கொள்ளவும் பிந்தியகாலத்து இளஞ்சந்ததியினர் , "ஆகா.. எங்களுக்கு முந்தியகாலத்தவர் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா?" என்று அறிந்துகொள்ளவும் முடியும் என்று நினைத்தேன். அந்த எண்ணம்தான் இந்தநூல் உருவாவதற்கு காரணம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு அதே வேகத்துடன் இன்னொரு வீதிக்குள் திருப்பும் போது காலால் உடன் பிறேக் அடித்தால் எப்படி இருக்கும். :D

நூல் வெளியீடு இனிதே அமைய வாழ்த்துக்கள்

வாத்தியார்

*********

அந்த மாதிரித்தான் இருக்கும். :(

அதுவும் ஊரி றோட்டிலை அடிச்சால் சொல்லி வேலை இல்லை. நான் சயிக்கிள் ஓட பழகும் போது பார் க்கு கீழாலை தான் ஓடுவேன் எங்கடை ஊருக்கு றோட் போட்ட புதிசு தார் ஊத்தி ஊரி போட்டிருந்திச்சுது ஒரு முடக்கிலை கால்பிறேக் பிடிச்சு விழுந்து காயம் வந்தது, என் இடது முழங்காலிகை இப்பவும் பெரிய அடையாளம் இருக்கு. :)

கே. எஸ். பாலச்சந்திரன் அண்ணா,

உங்கள்

நூல் வெளியீடு இனிதே அமைய வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே.எஸ்.பாலச்சந்திரன் ஐயாவிற்கு! நன்றிகள்

உங்களுக்கு வரவேற்புகழும் வாழ்த்துக்களும் சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை.

இருந்தாலும்

இந்த சிறியவனின் வாழ்த்துக்களும் உற்சாகவரவேற்புகழும் உங்களை சேரட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.