Jump to content

கணணிகளை பதம் பார்க்கும் 'செக்ஸ்' வைரஸ்


Recommended Posts

"செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்" என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ் சாப்ட்வேரால், கம்ப்யூட்டர் உலகம் கதிகலங்கி நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற பெயரில் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்தது.

அதே பாணியில் தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன், அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் புரோக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன.

virus_100921.jpg

செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் சாப்ட்வேருக்கு "ட்ரோஜான்" என பெயரிடப்பட்டுள்ளது.இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள ட்ரோஜான் வைரசை கிளிக் செய்தவுடன் கம்ப்யூட்டருக்குள் புகுந்து,சேமிப்பு கலன்களுக்குள் பல்கி பெருகும்.பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பைல்களை அழித்துவிடும்.மேலும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு இது கட்டுப்படாது.

இதேபோன்று செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன்"ஜஸ்ட் பார் யூ"என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள வைரஸ் சாப்ட்வேரும், கம்ப்யூட்டர்களை தாக்கி வருவதாக பிரபல ஆண்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மெக்ஃபி எச்சரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவை தலையிடமாக கொண்ட காஸ்பெர்க்ஸ்கி ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர் ராம் ஹெர்க்கநாயுடு கூறியதாவது: "ட்ரோஜான் வைரஸ் சாப்ட்வேர்,ஏற்கனவே வந்த ஐ லவ் யூ வைரசை ஒத்துள்ளது.புதிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக,அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.

இதில் ஆச்சரியமான விஷயம்,ட்ரோஜான் வைரஸ் பழைய தொழில்நுட்ப அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டருக்குள் புகும் ட்ரோஜன் சாப்ட்வேரின் ஒரு பிரதி,பின் பல்வேறு பிரதிகளாக பல்கி பெருகுகிறது.எனவே, இது பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது தெரிகிறது.எனவே, செக்ஸ் காட்சிகளை இணையதளங்களிலிருந்து டவுண்லோடு செய்யும்போது எச்சரிக்கை தேவை". இவ்வாறு ராம் ஹெர்க்கநாயுடு கூறினார்.

http://www.tamilcnn.net/detailnews.php?id=264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனவே, செக்ஸ் காட்சிகளை இணையதளங்களிலிருந்து டவுண்லோடு செய்யும்போது எச்சரிக்கை தேவை". இவ்வாறு ராம் ஹெர்க்கநாயுடு கூறினார்
14.gifஅவளைத் தொடுவானேன்........ அவதிப்படுவானேன்?15.gif

.

Link to comment
Share on other sites

14.gifஅவளைத் தொடுவானேன்........ அவதிப்படுவானேன்?15.gif

.

ஆசை யாரை விட்டது?????????? :)^_^:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரை விட்டது?????????? :)^_^:)

ஆசை விடாதுதான் தங்கா.... என்ன செய்யிறது...... பின் விளைவுகளை நினைச்சு பல்லை கடிச்சுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்...... :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14.gifஅவளைத் தொடுவானேன்........ அவதிப்படுவானேன்?15.gif

.

தொடாவிட்டாலும்..... அவதியாகத்தானே இருக்கு?

அவதிபடுவதுதான் திண்ணம் என்றால் தொட்டுவிட்டுவது என்பது தொடாது படுவதிலும் பரவாயில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடாவிட்டாலும்..... அவதியாகத்தானே இருக்கு?

அவதிபடுவதுதான் திண்ணம் என்றால் தொட்டுவிட்டுவது என்பது தொடாது படுவதிலும் பரவாயில்லையே?

என்னவோ.... மருதங்கேணி, நீங்கள் ரிஸ்க் எடுக்கிறதென்றே முடிவு கட்டிவிட்டீர்கள்........ ^_^:)

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஒரு பிரச்சனையா? ஒரு கணனியில் இரண்டு இயங்குதளம் (Operating system / Hard டிஸ்க்) பாவிக்கலாமே. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.