Jump to content

ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)


Recommended Posts

பாகம் எட்டு

விடியற்காலையே சேகர் அண்ணா அந்த மருத்துவபாசறைக்கு வந்திருந்தார்.

ராணிமைந்தனின் உடல்நிலையை அன்போடு விசாரித்துவிட்டு, " தம்பி உங்களுக்கு, இப்போதைய கள நிலைமை விளங்கும் தானே..உங்கட தேவை அங்கெ உடனடியாக தேவைபடுகிறது. ஒரு நாள் விடுமுறையை குறைத்துகொண்டு இண்டைக்கு பின்னேரமே களத்துக்கு போடாப்பா " என்றார்.

சேகர் அண்ணாவை காணும் போது இருந்த மகிழ்ச்சி இப்போ ராணிமைந்தனின் முகத்தில் இல்லை.

வேறு வழி இல்லாமல், கடவுளையும் திட்டி கொண்டு "சரி அண்ணே " என்றான்.

சேகர் அண்ணா, "சரிடாப்பா அப்ப நான் வாறன்" என்று புறப்படும் போது.

" அண்ணே ஒரு நிமிஷம்", ராணிமைந்தன் கொஞ்சம் உரத்து கூப்பிட்டான்.

"அண்ணே நான் இயக்கத்துக்கு வந்ததுக்கு ஒரு நாள் கூட எங்கட அம்மாவை பார்க்கவில்லை, இப்போ எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியாது. இண்டைக்கு ஒரு நாள் அனுமதி தருவீங்களா அம்மாவை தேடி பார்க்க"

கொஞ்ச நேரம் யோசிச்ச சேகர் அண்ணா, "சரி நான் புதுக்குடியிருப்பு சர்வதேச தொலைதொடர்பு நிலையம் போறேன். என் கூட வா. அங்கெ ரமணனுடன் சேர்த்து விடுகிறேன். அவனுடன் போய் தேடிப்பார். அது சரி அவை இருக்கிற இடம் உனக்கு தெரியுமா ?"

"இல்லை அண்ணா, ஆனால் எங்கட சித்தப்பா உடையார்கட்டிலே ஒரு கடை வைச்சிருக்கிறார் அங்கெ போய் கேட்டால் தெரியும் அண்ணே" என்றான் முகத்தில் ஒரு மகிழ்ச்சியுடன்.

"சரி வெளிக்கிடு" என்னுடன் என்றார் சேகர் அண்ணா அவருக்கே உரித்தான புன்னைகையுடன்.

நானும் ரமணன் அண்ணாவும் உடையார்கட்டை அடையும்போது காலை பதினோரு மணி இருக்கும். தெருவெங்கும் மக்கள் முகங்களிலே பீதியுடன், அடுத்த நிலை தெரியாது அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

post-7556-085545400 1287941941_thumb.jpg

உழவு இயந்திரங்களிலும், லான்ட் மாஸ்டர்களிலும் எந்த இடம் பாதுகாப்பானது என்று தெரியாமல் பரபரப்பாக மாறி மாறி ஓடி கொண்டிருந்தார்கள். அதில் தலைகீழாக தொங்கும் கோழிகளின் நிலையும் எம் மக்களின் நிலையும் ஒன்று போல தோன்றியது எனக்கு.

இவற்றுக்கு மத்தியிலும், அம்மாவை பார்க்க போகிறேன் என்ற சந்தோசம் என் முகத்திலே தாண்டவமாடியது. சனம் எல்லாம் என்னை வித்தியாசமாக பார்ப்பது போலவே எனக்கு தோன்றியது.

ரமணன் அண்ணா தனது மூடி தலைகவசத்தை அணிந்து ஈருளியை ஓட்டும் வேகமே தனி, அவரை கட்டி அணைத்து என் மகிழ்ச்சியை சொன்னபோது, "யோசிக்காதே எப்படியும் உன் அம்மாவை கண்டு பிடித்திடலாம்" என்று ஆறுதல் வார்த்தை சொன்னார்.

நான் அவருக்கு சண்டையில் நடந்ததையும் என் பயத்தையும் மறைக்காமல் சொன்னபோது, "சரி ஒண்டு செய்வம், உன்னுடைய அம்மாவை கண்டு பிடிச்சால், உன்னை அவர்களிடம் விட்டுவிட்டு, நான் தனிய திரும்ப போகிறேன். எனக்கு என்ன தண்டனை வழங்கினாலும் பரவாயில்லை" என்றார்.

ரமணன் அண்ணா, சேகர் அண்ணாவுக்கு அடுத்த நிலை தளபதி. நடிகர் மதன்பாபு போல சிரிக்க தொடங்கினால் குலுங்க குலுங்க சிரிப்பார். மனசிலே எதையுமே வைச்சிருகாதவர். அவரை பார்த்தல் ஏதோ வெளிநாட்டு மாப்பிளை போல தான் இருப்பார். அவரின் இந்த உருவம், கொழும்பிலே மறைமுக வேலைகளுக்கு பெரிதும் உதவியதாக அடிகடி கூறுவார். கொழும்பிலே வேலை செய்யும்போது அங்கேயே ஒரு பெண்ணை காதலிச்சு, அவரை சமாதான காலத்தில் கைபிடித்து, இப்போ ஒரு குட்டி ரமணனுக்கு அப்பா.

அவர் அடிகடி என்னிடம் கூறும் வசனம் ஒன்று. "டேய் ராணி, நீயும் எனக்கு ஒரு தம்பி மாதிரி தான்" என்று. அதை இன்றைக்கு உண்மையாகவே மெய்பித்து இருக்கிறார்.

நல்லவேளையாக சித்தப்பா கடையிலையே இருந்தார்.

"தம்பி, உங்கட அம்மா ஆட்கள், பிரமந்தனாறு பள்ளிகூடத்துக்கு கிட்டவா தான் இருக்கிறதாக ஒரு முறை தெருவிலே கண்டபோது சொன்னா..ஆனால் இண்டைக்கு அந்த இடத்து ஆட்கள் எல்லாம் எழும்பி இஞ்சாலை போகுதுகள். ஒரே செல்லடியாம்..எதுக்கும் அங்கனேக்கை போய் கேட்டு பார்" என்று ஒரு ஆறுதல் குறிப்பு தந்தார்.

கணநேரம் கூட தாமதிக்காது நாங்கள் தேராவில்லை அடைஞ்ச போது, எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம். கடந்த வாரமாக பெய்த கடும் மழையாலே தேராவில் குளம் நிரம்பி, விசுவமடுவுகான தொடர்பு பாதை துண்டிக்கபடிருந்தது. ஒரு மாற்று வழிப்பாதை மண்ணால் அமைக்கபட்டிருந்தது . அது சேறும் சகதியுமாக, இடம்பெயர்ந்து வரும் மக்களை தாங்க கூடிய வல்லமை அற்றதாகவே இருந்தது.

post-7556-061959500 1287942021_thumb.jpg

அங்கால பக்கம் இருந்து வந்த ஒருவர் சொன்னார். தம்பி இதை கடக்க மட்டும் இரண்டு மணித்தியாலம் எண்டாலும் தேவை என்று.

அது எவ்வளவு பெரிய உண்மை என்று அதை கடக்கும் போது உணர்ந்து கொண்டோம். அது ஒரு ஒருவழிப்பாதை. காட்டை வெட்டி அமைத்திருந்தார்கள் . ஒரு முன்னால் போகும் வாகனம் புதைஞ்சாலோ அல்லது பழுதுபட்டாலோ பின்னால் வரும் வாகனம் அனைத்தும் மணிகணக்கில் காத்திருக்க வேண்டி இருந்தது. நாங்கள் ஈருளி என்றமையால் காட்டுக்காலே வெட்டி வெட்டி போய் சேர்ந்தோம்.

இயற்கை கூட எங்கள் மக்களை வதைத்து கொண்டிருந்தது. அந்த சன நெரிசலுக்குள்ளும் இராணுவம் தன்னுடைய நரவேட்டையை விடவே இல்லை. எறிகணைகளை மக்கள் நெரிசலுக்குள் ஏவி கொண்டே இருந்தது.காயபட்டவர்களை உடையார்கட்டு மருத்தவமனைக்கு கொண்டுவருவதற்கு கூட வேற வழி இருக்கவில்லை. மக்களின் ஓலங்களும், காயபட்டவர்களை முன்னகர்த்த காவல்துறையினரின் கட்டளைகளும் தான் மாறி மாறி ஒலித்து கொண்டிருந்தன.

ஒருவாறு கண்ணகிபுரம் வந்து, அதனூடு பிரமந்தனாறு போகும்போது வழி நெடுகிலும் மக்கள் எங்களை எச்சரித்தனர். "தம்பிமார் அங்காலே போகாதீங்க. அவன் கண்டபாடுக்கு செல்லடிச்சு கொண்டிருக்கிறான். அங்காலே இருக்கிற ஆக்கள் கூட எல்லாம் எழும்பி வந்து கொண்டிருக்குதுகள்" என்று எங்கள் மேலிருந்த அக்கறையை ,பாசத்தை சொற்களில் காட்டினார்கள்.

அண்ணே, இண்டைக்கு மட்டும் தான் இருக்கு. எப்படி எண்டாலும் ஒருக்கா அங்கெ போய் அம்மா இருக்கிறாவா என்று பார்த்திட்டு போவோம்" என்று நான் சொல்ல,

"தம்பி நீ சொன்னாலும் சொல்லவிடாலும் நான் போய் உங்கட அம்மாவை உனக்கு காட்டாமல் போக போறதில்லை என்ற முடிவோட தான் வந்திருக்கிறேன்" என்று ரமணன் அண்ணா தன் பாசத்தை வெளிபடுத்தினார் வார்த்தைகளாக.

நாங்கள் அந்த பள்ளிகூடத்தடியை அடைந்தபோது பிற்பகல் இரண்டு மணிக்கு மேலே இருக்கும். மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது அந்த ஊர். மக்கள் வாழ்ந்துவிட்டு சென்றதுகான அடையாளங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது. கடும் செல்லடி கேட்டுகொண்டே இருந்தது. எங்களுக்கு பழகி போனதால் சட்டை செய்யாமல், அந்த பள்ளிகூட சுற்றயலை வலம் வந்து கொண்டிருந்தோம்.

செல் சத்தம் கொஞ்சம் குறையும் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள், அகபட்ட தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு ஓடி கொண்டிருந்தார்கள்.நாங்கள் விசாரிக்க கூட நின்று பதில் சொல்லும் நிலையில் மக்கள் இல்லை.

எனது அம்மா கனவு கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டிருந்தது மேலழுந்த செல் புகை போல.

எங்களை போலவே,வீதிகளிலே மக்களை தேடி அலைந்தன அவர்களின் வீட்டு வளர்ப்பு நாய்கள். போக்கிடம் தெரியாமல், யாரிடம் கேட்பது என்று கூட தெரியாமல், அவைகளின் முகத்தில் எங்களை விட கலவரம் கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தன.

இவை எல்லாம் ஏன் எங்களுக்கு நடக்கவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று எங்களை பார்த்து கேட்பது போல இருந்தது.

தூரத்தில் ஒரு வீட்டில் இருந்து சமையல் புகை வந்து கொண்டிருந்தது. அது என் கனவில் ஒரு பாலை வார்த்தது போல இருந்தது. அந்த வீடுக்கு வெளியிலே ஈருளியை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றோம்.

ஒரு ஐயா பிளாஸ்டிக் கதிரையில் இருந்து பழைய பேப்பரை படித்து கொண்டிருந்தார், உள்ளே நாப்பது வயசு மதிக்கத்தக்க இரண்டு அம்மாக்கள் இருந்து சமைச்சு கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கூட எங்கோ புறப்படுவதற்காக எல்லா சாமான்களையும் கட்டி வைத்துவிட்டு சமைச்சு கொண்டிருந்தார்கள்.

"ஐயா, இங்கே வட்டக்கச்சி ஆட்கள் ஆரும் பக்கத்திலே இருந்தவையோ?"

"தம்பி, இப்போ இரண்டு நாளைக்கு முதல் இந்த பள்ளிகூடத்தை சுத்தி நிறைய வட்டக்கச்சி ஆட்கள் தான் இருந்தவை. அவன் நேற்றில் இருந்து தொடர்ச்சியாக செல் அடிச்சு கொண்டிருக்கிறான். சனம் எல்லாம் இங்கை இருந்து உடையார்கட்டு, மயில்வாகனபுரம் பக்கம் போகுதுகள். கொஞ்ச சனம் திரும்ப வந்து விட்ட சாமான்களை எடுத்து கொண்டு போகுதுகள்" என்றார்.

என் நம்பிக்கை முற்றாக உடைஞ்சு போச்சு. என் முகத்தில் தெரிஞ்ச மாற்றத்தை பார்த்தோ என்னவோ உள்ளே இருந்து வந்த அம்மா கேட்டார்.

" யாரை தேடுறீங்க தம்பி"

"அம்மா!.. நான் என் அம்மாவை தேடுறேன். எனக்கு இயக்கத்திலே இண்டைக்கு மட்டும் தான் லீவு விட்டிருகிறாங்கள். இண்டைகிடையில் பார்க்காவிட்டால் இனி எப்போ பார்க்கமுடியுமோ " என்று என் இயலாமையை சொன்னேன்.

"தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்றார் அந்த அம்மா தாய்மைக்கே உரிய பாணியில்.

எனக்கு என் அம்மாவே நேரிலே வந்து கேட்பது போல தான் இருந்தது.

" சரி அம்மா போகும்போது வாறோம்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

இந்த அம்மாவை கூட இன்னும் கண நேரத்தில் பிரியபோவது தெரியாமல்...

(தொடரும்)

பாகம் ஒன்பது இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடர் தோழர் அபிராம் :D

Link to comment
Share on other sites

பாகம் ஒன்பது

வாசலை தாண்டி வந்து விட்டோம்.

வீதியோரம் இருந்த ஈருளியை நிமிர்த்தி சூப்பி போத்தலுக்குள் இருந்த பெற்றோலை கொஞ்சம் குழாயினுள் ஊற்றி, வாயை வைத்து ஊதினார் ரமணன் அண்ணா.

மிதியை இரண்டு மூன்று தடவை உதைத்தும் இயங்கவில்லை. மீண்டும் ஒருமுறை குழாயினுள் வாயை வைத்து ஊதினார்.

ஊ..ஊ..ஊ...

கூவிக்கொண்டு வரும் சத்தம் மட்டும் தான் கேட்டது என்னை விழுந்து படுக்க சொல்லி உதைந்துவிட்டு, அப்படியே குனிந்துவிட்டார் ரமணன் அண்ணா.

டொமம்ம்ம்ம் ...டொம்ம்மம்ம்மார்...

எங்களுக்குக்கு மிக அருகிலேயே வெடித்தன. காதை செவிடாக்கும் சத்தங்கள்.

இரும்பு துண்டுகளும் பிளாஸ்டிக் துண்டுகளும் சிதறிப்பறந்தன.

நாங்கள் போய்வந்த வீடுக்குள் இருந்து புகை மண்டலம் மேலெழுந்தது.

அம்மா..யாரவது காப்பாத்துங்க...என்ற கூக்குரல் விட்டு விட்டு கேட்டு கொண்டிருந்தது.

அந்த குரல் வந்த வீட்டை நோக்கி ஓடிய என்னை, பிடித்து இழுத்து மீண்டும் படுக்க சொன்னார் ரமணன் அண்ணா. அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை என்றாலும், ஒரு நிமிடதிலையே எனக்கு புரிந்துவிட்டது.

ஆம்.. எங்கே காயபட்டவர்களை காப்பாத்த யாரும் வருவாங்களோ என்று, சிங்கள கொலைவெறி ராணுவம், மீண்டும் அதே இடத்துக்கு ஐந்துக்கும் மேற்பட்ட செல்களை ஏவினார்கள்.

மீண்டும் பெரும் இடிச்சத்தங்கள்..

கூக்குரல் அடங்கி முனகல்களாயின..

இரண்டு நிமிட இடைவேளைக்கு பிறகு நாங்கள் இருவரும் அந்த வீட்டை நோக்கி ஓடினோம்.

இரத்தமும் சதைகளும்..ஆடை துண்டுகளும்..கைகள் கால்கள் வேறு வேறாக..தலைமுடிகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. சற்று முன்னர் பார்த்த அந்த அழகான குடும்பம் அங்கெ இல்லை.

ஐயா இருந்த பிளாஸ்டிக் கதிரை மட்டும் அல்ல..ஐயாவும் உருத்தெரியாமல் சிதறியிருந்தார். அவர் இருந்த இடத்தில் ஒரு கந்தக நெடியுடன் கருமையான குழி மட்டும் தான் இருந்தது.

அவர்கள் சமைத்த குழம்புடன், அவர்களின் இரத்தமும் கலந்து அங்கெ வடிந்து ஓடிக்கொண்டிருந்தது.

தம்பீ....மிகவும் மெல்லிதாக அந்த முனகல் கேட்டது.

ஓடிப்போனேன்..மரங்களுக்கும் உடைந்த சீட்டுகளுக்கும் நடுவில் அந்த அம்மா.ஒரு கால் சிதறி போய் முழங்காலுக்கு கீழே ஒன்றுமில்லை.

"தம்பி என்னை காப்பாத்துங்க.."

மரங்களை தூக்கி அவவை வெளியிலே எடுத்தோம். நான் தூக்கி கொண்டு ஓடிவர, ரமணன் அண்ணா ஈருளியை கஷ்டபட்டு உதைத்து கொண்டிருந்தார்.

எங்கள் அவசரம் அதுக்கு கூட புரியாமல் இருந்தது. அம்மாவின் கால்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என் மேலங்கியை கழட்டி அதை சுத்தி கட்டினேன். அதற்கிடையில் புகையை கக்கியபடி ஈருளி இயங்க தொடங்கியது.

அந்த அம்மாவை நடுவிலே கிடத்தி நான் பின்னால் அமர்ந்தவாறு அவவை விழுந்து விடாமல் பிடிக்க, ரமணன் அண்ணா அந்த மழையால் சேறாகி வழுக்கும் வீதியில் தான்னால் இயன்ற அளவுக்கு வேகமாக ஓடினார்.

ஈருளியும் எங்கள் அவசரத்தை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. குளத்தடியால் சுத்திவாறது என்றால் அதிக நேரம் எடுக்கும் என்று, ஒரு குறுக்கு வழியால் வந்தோம். அங்கேயும் எங்களுக்கு விதி காத்திருந்தது.

வெள்ளம் இருந்த அந்த பள்ளத்தில், வேகமாக வந்த நாங்கள் தாண்டிடலாம் என்று நினைத்த போது, ஈருளி சறுக்கி நான், அந்த அம்மா, ரமணன் அண்ணா மூவருமே வெள்ளத்தில் விழுந்தோம்.

எழும்பிய ரமணன் அண்ணா, ஈருளியை உதைத்து இயங்க வைக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாவின் கால்களில் இருந்து குருதி வெள்ளத்துடன் கலந்து கொண்டிருந்தது. எனக்கோ என்ன செய்வது என்றே தோன்றவில்லை. என்னை பெத்த அம்மாவே என் கைகளில் இருபதாகவே உணர்ந்தேன்.

அண்ணே ..நீங்கள் இயக்கி கொண்டு வாருங்கள் நான் கொண்டு ஓடுறேன் என்று அம்மாவை தூக்கி கொண்டு, என்னால் இயன்றவரை ஓடினேன்.

தம்பி என்னை எப்படியும் காப்பாத்துப்பா..எனக்கு ரொம்ப வலிக்குதுப்பா ..என்று முனகி கொண்டிருந்தார்.

என்னுடைய அம்மாவே என்னை பார்த்து கெஞ்சுவது மாதிரியே இருந்தது.

அம்மா ஒண்டுக்கும் யோசிகாதீங்கள். உங்கள் மகன் நான் இருக்கிறேன் உங்களை எப்படியும் காப்பாத்துவேன். என்னால் இந்த வாய் ஆறுதலை தவிர எதையுமே செய்ய கூடிய நிலையில் நான் இல்லை.

ஓடினேன் ..ஓடினேன்..என்னால் முடியும் வரை ஓடினேன் ..யாரையும் கூட அந்த தெருவிலே காணவில்லை.

ஒரு இருநூறு மீற்றர் ஓடி இருப்பேன். இப்போ முனகல் சத்தம் கேட்கவில்லை. அந்த தெருவிலே அப்படியே உட்கார்ந்து, அந்த அம்மாவை என் மடியிலே கிடத்தி, மூச்சுக்கு பக்கத்தில் கையை வைச்சு பார்த்தேன். எதுவுமே இல்லை. கையை பிடித்து பார்த்தேன் நாடித்துடிப்பும் இல்லை.

கத்தி அழவேணும் போல இருந்திச்சு. அம்மா.. அம்மா.. என்று வாய் ஓயாமல் கூப்பிடும் எனக்கு கூட, சொல்லாமல் செத்து போனாவே, என்று கத்தி அழணும் போல இருந்திச்சு..

கொஞ்ச நேரத்துக்கு முதல் "தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்று சொன்ன அம்மா, இப்போ உயிரோட இல்லை. என்னை பெத்த அம்மாவின் கையால் சாப்பிடும் பாக்கியம் தான் எனக்கு இல்லை என்றால், இந்த அம்மா கையால் கூட சாப்பிடாமல் பண்ணிய விதியை என்ன செய்வது.

என் கோபம் எல்லாம் அந்த சிங்கள இன வெறியன் மேல் திரும்பியது. இந்த அம்மா அவனுக்கு என்ன பாவம் பண்ணினா ..?

சொல்லுங்கள் உறவுகளே..எதுக்காக எங்களுக்கு மட்டும் இந்த நிலை.இந்த கட்டத்தில் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும்.

சொல்லுங்கள் வாய் விட்டு சொல்லுங்கள். இந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள். அதை தான் நானும் எடுத்தேன்.

இது தப்பா ..?? நான் செய்கிறது தவறா ..?? என்னையும் கொச்சை படுத்தி தான் பேச போறீங்களா..?? எனக்கும் வாழ தெரியாது..யதார்த்தம் புரியாது என்று தான் பேச போறீங்களா ..?? பேசுங்கள் ..நன்றாக பேசுங்கள் ..எனக்கு எந்த கவலையுமே இல்லை.

ஒரு மனுசனா ஒருத்தனுக்கு என்ன கோபம் வருமோ அது தான் எனக்கும் வருகிறது. ஒரு மகனாக அந்த அம்மாவுக்கு என்ன செய்யணுமோ அதை தான் நான் செய்ய போறேன்.

ரமணன் அண்ணா, வேகமாக ஓடிவந்தார் ஈருளியுடன். ராணி ஏறுடா, அந்த அம்மாவை தூக்குடா என்று கத்தினார்.

இல்லை அண்ணா, அம்மா செத்துட்டா..

நாங்கள் போவம் அண்ணா. இனி எனக்கு என்னுடைய அம்மாவும் வேண்டாம். சண்டையை முடிச்சு, எதிரியை எங்கட எல்லையில் இருந்து கலைச்சிட்டு வந்து பார்கிறேன். இது தான் நான் இந்த அம்மாவுக்கு செய்யும் கடன் அண்ணா.

இந்த அம்மாவின் கதி இனி எந்த அம்மாவுக்கும் வரகூடாது அண்ணா..கடைசி மட்டும் வாழவேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டா அண்ணா .

கண்கள் கலங்கின.

நாங்கள் போவம் அண்ணா ..

தூரத்தில் புள்ளியாக நம் அம்மாவின் உடல்..

நடுத்தெருவில் அனாதையாக ....

(தொடரும்)

பாகம் பத்து இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

அருமையான உங்கள் தொடரைத் தவறாமல் படித்துவருகிறேன். கள நிலையை உள்ளிருந்து நேரில் பார்த்த அனுபவங்கள் அதிகம் எழுத்தில் வெளிப் படுகிறது. எழுத்தாற்றலை ஒரு வரமாகப் பெற்று இருக்கிறீர்கள் அபிராம் தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி சொல்வது உண்மை தான்.

Link to comment
Share on other sites

பாகம் பத்து

புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி

அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் .

இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள்.

கடுமையான சண்டை.

நெருப்பு சுவர்களாக புலிகள்.

சுடுகாடாக புதுக்குடியிருப்பு.

புதுக்குடியிருப்பு....

அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்தி.

கடைதொகுதிகளும், கதிரவன், மதி தேநீர்க்கடைகளில் ஒலிக்கும் புரட்சி பாடல்களும், அழகாக அடுக்கிவைக்கபடிருக்கும் மண்ணெண்ணெய் போத்தில்களும், மாவீரர் மண்டபம் அதை ஒட்டி நிற்கும் பெரிய நிழல் தரு மரம்,

பாண்டியன் உணவகம், பேரூந்து நிலையம் அதற்கு முன்னால் அழகான புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் எல்லாம் அந்த நகருக்கு மிடுக்கை கொடுத்திருந்தன.

மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த எப்போதுமே அந்த நகரின் சந்தியில் காவல் துறையினர் காத்திருப்பர்.

இன்று ...

கட்டடங்கள் தொடர்ச்சியான கொத்து குண்டுகளாலும், இடைவிடாத கிபிர் தாக்குதல்களாலும் அழிதொழிக்கபடிருந்தன.

நாச்சந்தி எது என்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இந்த மூலையில் இருந்து பார்த்தால் அந்த மூலை தெரியுமளவுக்கு தரைமட்டமாகபடிருந்தது.

அழகான அந்த நகரம் அலங்கோலமாக..

இருந்தும் புலிகளின் அந்த மனித வேலி, ராணுவ அரக்கனை உள்ளே விடாமல் தடுத்து வைத்துகொண்டிருந்தது.

மக்கள் புகலிடம் தேடி இரணைபாலை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் நோக்கி போய்விட்டார்கள்.

காகங்களும் நாய்களும் மட்டுமே நகருக்கு சொந்தம் கொண்டாடின.

ராணிமைந்தன் அந்த புலிகளின் மனித வேலியின் ஒரு பகுதிக்கு (கொம்பனிக்கு) பொறுப்பாக இருந்தான். அவனது தீரமிகு சண்டைகள் அவனை அந்த நிலைக்கு கொண்டுவந்திருந்தது.

எதிரின் கனரக ஆயுதங்களுக்கும், கொத்து குண்டுகளுக்கும், விமான குண்டுவீச்சுகளுக்கும் நடுவில் சாதாரண ஆயுதங்களையும் மனவலிமையையும் வைத்து போராட போராளிகள் பழகிவிட்டார்கள்.

அன்று அதிகாலை சேகர் அண்ணா, ராணிமைந்தனின் அரணுக்கு வந்திருந்தார். அவனது கடந்த கால செயற்பாட்டுகளை பாராட்டிய அவர், புலிகளின் செய்மதி தொலைதொடர்பு மையத்தில் ஒரு கருவியினை பழுதுபார்க்க அவனை அழைத்து செல்ல வந்திருந்தார்.

புலிகள் அப்படிதான். நேற்றுவரை ஆயுதத்துடன் எதிரியுடன் போராடுவார்கள் , திடீர் என்று களம் மாறி இலத்திரனியல் கருவிகளுடன் போராடுவார்கள். அவர்களின் சிந்தனை மாறுதிறன் அந்நியன் படத்தை தான் நினைவூட்டும்.

அதற்கு ராணிமைந்தனும் விதி விலக்கல்ல.

தனது கள பொறுப்புகளை துணை பகுதிப் பொறுப்பாளனிடம் ஒப்படைத்துவிட்டு சேகர் அண்ணாவுடன் புறப்பட தயாரானான்.

ஆனந்தபுரத்தின் மைய்யபகுதியில் அமைந்திருந்தது அந்த செய்மதி தொடர்பு மையம். புலிகளின், மக்களின் பெரும்பாலான வெளிநாட்டு தொடர்புகள் அந்த மையதினூடாகவே நெறிபடுத்தபட்டன.

நன்றாக உருமறைக்கபட்டு மரங்களூடு செய்மதி கட்டுப்பாட்டு அலைகளை பெறுவதற்காக, மிகவும் சிரமபட்டு ஒழுங்கமைதிருந்தார்கள்.

வன்னி மக்களின் வெளிநாடுக்கான தொடர்பு, பண பரிமாற்றங்கள் (உண்டியல்) எல்லாமே சேகர் அண்ணாவின் கட்டுப்பாடில் இயங்கும் சர்வதேச தொலைதொடர்பு பிரிவினாலே நடாத்தபட்டன. மொத்தத்தில் சேகர் அண்ணா, வன்னிமக்களுக்கு ஒரு கண்காணா தெய்வமாக விளங்கினார் என்று சொன்னால் மிகையாகாது.

என் காதுபடவே மக்கள் பேசியதை கேட்டிருக்கிறேன். "இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் " என்று சேகர் அண்ணாவை தெரியாத சனம் கூட பேசி இருக்கு.

ஒரு செய்மதி அலைவாங்கியில் (Receiver ) பிரச்சனை. நாங்கள் இனி புதிதாக வெளிநாட்டில் கொள்வனவு செய்தாலும் கூட நாங்கள் எல்லாம் செத்தாப்பிறகு தான் வந்து சேரும். பழைய பழுதாகிப்போன அலைவாங்கியில் இருந்து ஏதாவது பகுதிகளை (Parts ) எடுத்து ஒட்டி செய்யவேண்டும்.நிறைய கணித சமன்பாடுகள். நிறைய இலத்திரனியல் நுண்ணறிவுகள் வேண்டும்.

வெளிநாடுகளில் கூட இப்படி செய்திருக்கவே மாட்டார்கள், ஆனால் புலிகள் செய்திருந்தார்கள். அவர்களின் ஆராய்ச்சி திறனுக்கு இரண்டு மூன்று கலாநிதி பட்டங்கள் கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்பவர்கள் அடுத்த சண்டையில் சிலவேளைகளில் மக்களுக்காக வீரச்சாவு அடைந்துவிடுவார்கள். அதோடு அவர்களின் திறனும் வீரச்சாவு அடைந்துவிடும்.

புலிகளின் திறன் கண்டு, செய்மதி அலைவரிசை வழங்குனரே மெச்சியிருகிறான். சண்டை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு வந்து தங்கள் கூட பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு கூட விடுதிருகிறான்.

அந்த முகாமுக்கு அருகில் இருந்த பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கும் வேலையும் சேகர் அண்ணாவுக்கு இருந்தது. தன்னை அந்த பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு என்னை தொடர்பு மையத்துக்கு போக சொன்னார் சேகர் அண்ணா.

பயிற்சி முகாம்கள் பொதுவாக மக்கள் வாழ்விடங்கள் குறைந்த காட்டுபகுதியில் தான் வைத்திருப்பது வழக்கம். ஆனாலும் எதிரி எங்களை ஒரு குறுகிய நிலபரப்பில் ஒடுக்கி இருந்தமையால், எங்கள் பயிற்சி முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை அண்டித்தான் அமைக்க வேண்டிய சூழ்நிலை. இருந்தும் நாங்கள் மக்களை விமான தாக்குதல் இலக்கு, செல் இலக்கு குறித்து எச்சரித்து அந்த இடங்களில் இருந்து தள்ளி வாழும்படி கேட்டுகொள்வோம்.ஆனால் மக்களும் தான் எங்கு போவார்கள். அவ்வளவு மக்களையும் தாங்க கூடிய நிலமாக இடமாக அந்த இடங்கள் இருக்கவில்லை. அவர்களும் எங்கள் முகாம்களுக்கு அருகிலேயே வாழ்ந்தும் பழகிவிட்டார்கள்.

நான் சேகர் அண்ணாவை அந்த பயிற்சி முகாமில் விட போகும்போது, காலையில் பின்களபணிக்கு ஆண்களை அனுப்பிவிட்டு (அன்றைக்கு இருந்த ஒரே வருவாய் தரும் தொழில்) வாசலில் காத்திருந்தார்கள் பெரும்பாலான பெண்கள்.

பின்களபணி மரம் தறித்தல், பதுங்குகுழி அமைத்தல், அரண் அமைத்தல் என்று வேறு வேறு பணிகள். எதிரியில் எல்லை கோட்டை வைத்து தான் சம்பளபட்டியல். எல்லைகோட்டில் இருந்து இருநூறு மீற்றருக்குள் ஒரு சம்பளம், இருநூறு மீற்றர் தொடக்கம் ஐநூறு மீற்றர் வரை ஒரு சம்பளம், அதற்கு அப்பால் ஒரு சம்பளம் என்று மாறிக்கொண்டே போகும்.

உங்களுக்கு புரியுதோ இல்லையோ உயிரின் விலை அது.

ஆண்களுக்கும் வேற வழி இல்லை. புலம்பெயர் தொடர்பில்லாத மக்கள் தான் வன்னியில் பெரும்பாலானவர்கள். வயல்களையும் கடலையும் நம்பி வாழ்ந்தவர்கள். பிச்சை எடுத்து பழக்கமில்லாதவர்கள். தன்மானம் காப்பவர்கள்.உதவி நிறுவனங்கள் கூட அங்கெ இல்லை. உயிரை மூலதனமாக்கி உழைத்தார்கள்.

இது உங்களால் முடியுமா உறவுகளே.. இண்டைக்கு திரும்ப வந்து அம்மாவின், மனைவியின், குழந்தையின் முகத்தை பார்ப்போமா என்று கூட தெரியாமல் வேலைக்கு போக உங்களால் முடியுமா.?

அவர்கள் போனார்கள், எல்லாம் கால் வயிற்று கஞ்சிக்காக.

அவர்கள் வரும்வரை, அந்த பெண்கள், அம்மாக்கள், சகோதரிகள், மனைவிகள் வாசலில் காத்திருந்தார்கள். பசியால் அழுதுகொண்டிருந்த பிள்ளைகளுக்கு மாவை தண்ணியில் கரைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். எங்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் பார்த்து முகங்களில் புன்னைகை தவள விடை கொடுத்தார்கள்.மனசுக்குள்ளே எங்களுக்கான மதிப்பு இன்னும் இருக்கு என்று காட்டும் புன்னைகைகள் அவை.

சேகர் அண்ணாவை, பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு விடைபெறும்போது,

"ராணி திருத்தி முடிய தொடர்பெடு, நான் அல்பா 1 அலைபேசி எண்ணில் தான் நிற்பேன். மறந்து போய் விட்டுவிட்டு போயிடாதே" என்றார் சேகர் அண்ணா.

இன்னும் சில கணங்களில் எந்த அலைவரிசையிலும் தொடர்பே எடுக்கமுடியாத இடத்துக்கு, எங்களையும் எங்கள் மக்களையும் தவிக்க விட்டு போக போவது தெரியாமல் ...

(தொடரும்)

பாகம் பதினொன்று இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

பாகம் பத்து

...

புலிகள் அப்படிதான். நேற்றுவரை ஆயுதத்துடன் எதிரியுடன் போராடுவார்கள் , திடீர் என்று களம் மாறி இலத்திரனியல் கருவிகளுடன் போராடுவார்கள். அவர்களின் சிந்தனை மாறுதிறன் அந்நியன் படத்தை தான் நினைவூட்டும்.

...

கேட்கிறேன் என்று குறை நினைக்கக் கூடாது, இலத்திரனியல் என்றால் என்ன?

...

வெளிநாடுகளில் கூட இப்படி செய்திருக்கவே மாட்டார்கள், ஆனால் புலிகள் செய்திருந்தார்கள். அவர்களின் ஆராய்ச்சி திறனுக்கு இரண்டு மூன்று கலாநிதி பட்டங்கள் கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்பவர்கள் அடுத்த சண்டையில் சிலவேளைகளில் மக்களுக்காக வீரச்சாவு அடைந்துவிடுவார்கள். அதோடு அவர்களின் திறனும் வீரச்சாவு அடைந்துவிடும்.

புலிகளின் திறன் கண்டு, செய்மதி அலைவரிசை வழங்குனரே மெச்சியிருகிறான். சண்டை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு வந்து தங்கள் கூட பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு கூட விடுதிருகிறான்.

...

:lol: இது யாராலும் எப்பவும் மறுக்க முடியாத உண்மை!

தொடருங்கள் அபிராம்

Link to comment
Share on other sites

கேட்கிறேன் என்று குறை நினைக்கக் கூடாது, இலத்திரனியல் என்றால் என்ன?

கேள்விகள் கேட்பதில் குறை ஒன்றும் இல்லையே குட்டி.

இலத்திரனியல் என்றால் Electronics.

Link to comment
Share on other sites

கேள்விகள் கேட்பதில் குறை ஒன்றும் இல்லையே குட்டி.

இலத்திரனியல் என்றால் Electronics.

அறியத்தந்தமைக்கு நன்றி அபிராம் :D

Link to comment
Share on other sites

பாகம் பதினொன்று

திடீரென ஆனந்தபுரம் வான்பரப்பில் நுழைந்தன கிபிர் விமானங்கள்.

அவை கொடிய சிறிலங்கா விமானபடைக்கு சொந்தமானவை.

என்னையும் இழுத்துக்கொண்டு பதுங்கு குழிக்குள் ஓடினார்கள் அந்த சர்வதேச தொலைத்தொடர்பு பிரிவை சேர்ந்த நண்பர்கள்.

பதுங்கு குழி வாசலுக்கு கூட சென்றிருக்க மாட்டேன்.

நெருப்பு பிழம்புகள், மின்னலென தெறிக்க டம்மம்மமார் டமம்ம்ம்மாமமார் என்ற காதை பிளக்கும் சத்தங்கள் மிக அருகிலேயே கேட்டன. என்னை ஒரு கை பதுங்கு குழிக்குள் இழுத்து போட்டது.

மீண்டும் கிபிர் இரைந்து கொண்டு கீழிறங்க விடுதலைபுலிகளின் விமான எதிர்ப்பு பிரங்கிகள் முழங்கின.

தாறுமாறாக குண்டுகளை வீசி விட்டு சென்றான்.

"ராணி அண்ணா, சேகர் அண்ணா போன பக்கம் தான் அடிக்கிறான் போல " என்று நண்பன் ஒருவன் சத்தத்தை வைத்து சொன்ன போது தான், எனக்கு மனசு பக் என்றது.

அவருக்கு தொடர்பு எடுத்து பார்க்க வேணும் என்று உள்மனசு சொன்னாலும்,விமான தாக்குதல் நேரம், ஆகாயத்தில் வட்டமிடும் வேவு விமானங்களுக்காக தொலைதொடர்பு எடுக்க கூடாது என்ற கட்டளை என்னை தடுத்தது.

வானத்தில் வெடிக்கும் குண்டுகள் (ஆட்களை கொல்வதற்காக) , கட்டடங்களை அழிக்கும் குண்டுகள், நிலத்துக்கு கீழே போய்

வெடிக்கும் குண்டுகள் என்று மாறி மாறி மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் பன்னிரண்டு தடவைக்கு மேல் குண்டு வீசியாச்சு. ஒரே புகைமண்டலமும் கந்தக நெடியும் தான். எங்கள் பதுங்கு குழியே பலதடவை அதிர்ந்து உள்ளே மண் சரிய தொடங்கிவிட்டது.

விமானங்களின் இரைச்சல் கரைய தொடங்க, நாங்கள் குண்டு விழுந்த இடத்தை நோக்கி ஓட தொடங்கினோம்.

பொதுவாக விமானங்கள் போனாலும் உடனே போக கூடாது என்று சொல்லுவார்கள். அவன் போற மாதிரி போயிற்று மறுபடியும் வந்து அடிப்பான் மற்றும் விமான குண்டுவீச்சு நடந்த இடத்துக்கு காயபட்ட ஆட்களை தூக்க விடாமல் செல்லாலை அடிப்பான் .

இருந்தும் சேகர் அண்ணாவின் நிலையை அறியவும் காயபட்ட ஆட்களை தூக்கவும் நாங்கள் உடனடியாகவே அந்த இடத்துக்கு விரைந்தோம் சேகர் அண்ணாவை அலைபேசியில் கூப்பிட்டபடி.

"சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்"

"சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்"

என்று எங்கள் அலைபேசியில் கத்தியபடியே ஓடினோம். எந்த பதிலும் வரவில்லை.

சற்று முன்னர் அழகாக தெரிந்த அந்த குடிசைகளும் தென்னை மரங்களும் பிய்த்து போடபட்டிருந்தது. கொலை வெறியாடபட்ட கிராமம் போல காட்சி தந்தது.

அழுகையின் ஓலங்களும், கண்களில் தெரிந்த மரண பீதிகளும், ரத்தம் சொட்ட சொட்ட தலை தெறிக்க ஓடிவரும் ஆட்களும் மனசுக்குள்ளே வெறுமையை தோற்றுவித்தன.

"அண்ணா என்னை காப்பாத்துங்கோ அண்ணா என்னை காப்பாத்துங்கோ" என்று சட்டை எல்லாம் கிழிந்தபடி இரத்தம் சொட்ட சொட்ட ஓடிவந்த பெண்ணொருத்தி, அவளை தாங்கி பிடிக்க நான் ஓடும்போது, எனக்கு ஒரு பத்து மீற்றருக்கு முன்னால் தலைகுப்பற விழுந்தாள்.

ஓடி வந்து மூச்சில் கைவைத்து நாடி துடிப்பை பார்க்கும் போது அவள் இறந்துவிட்டிருந்தாள். பின் தலையில் சிறுபகுதி இல்லை அதன் வழியாக இரத்தம் அவளை மட்டும் அல்ல எங்கள் மண்ணையும் நனைத்து கொண்டிருந்தது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறீலங்கா கொலைவெறி இராணுவம் விமானத்தாக்குதல் நடந்த இடத்துக்கு கொத்து குண்டு தாக்குதலை தொடக்கி இருந்தான். காயபட்டவர்களை தூக்க கூட மக்கள் வர தயங்கினார்கள். காயப்பட்டவர்களை ஏற்றி செல்ல வந்த உழவு இயந்திரங்கள் கூட எட்டியே நின்றன.

தாக்குதல் நடந்த இடத்தை நான் வாழ்கையில் திரும்ப எப்பவுமே பார்க்க கூடாது. எங்குமே இரத்தமும் சதைகளும், கைகளும், தலை முடிகளும், பாதி தலைகளும், கிழிந்த சட்டைகள் உள்ளாடைகள் சிதறி போய் இருந்தன.

"அண்ணா எங்களை காப்பாத்துங்க, எங்களை காப்பாத்துங்க" என்ற ஓலம் எல்லா பக்கத்திலும் இருந்து வந்து காதிலே எதிரொலித்தன.

யாரை முதலில் காப்பாத்திறது..நீங்களே சொல்லுங்க ..யாரை காப்பாத்திறது..அந்த செல் மழைக்கு நடுவிலும் நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். சிறு காயங்களுக்கு உட்பட்டவர்களை மட்டும் முதலில் ஏத்துவம். வயிற்று காயம், தலை காயம் எல்லாம் கடைசியா ஏத்துவோம். ஏன் என்றால் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு போனாலும் மருத்துவம் செய்ய மாட்டார்கள்.

புழுபிடிச்சு சாகும்வரை அப்படியே விட்டுவிடுவார்கள். அது அவர்களின் பிழை இல்லை. அவ்வளவு மருந்து தட்டுப்பாடும், அவ்வளவு காயகாரர்களும். இவர்களுக்கு செலவிடும் நேரத்தை வேறு பத்து காயகாரர்களுக்கு செலவிடலாம் என்பது அவர்களின் கருத்து.

இது தான் உயிரின் பெறுமதி அங்கு. உங்களுக்கு கொஞ்சமாவது புரிகிறதா உறவுகளே..

கிபிரின் குண்டுகள் பெரும்பாலானவை பயிற்சி முகாமின் பெண்கள் பகுதிக்குள்ளேயே விழுந்திருந்தன. அந்த பெண்கள் கூட சில நாட்களுக்கு முன்னர் தான் விரும்பியோ விரும்பாமலோ இயக்கத்தில் இணைக்கபட்டவர்கள்.

கிபிர் குண்டுகளின் தாக்கத்தை உங்களுக்கு எழுத்தில் விபரிக்க முடியாது. அவை அனுபவப்பட்டால் மட்டும் தெரிந்து கொள்ள கூடிய உணர்வுகள். குண்டுவீச்சின் தாகத்தினால் பெரும்பாலான காயபட்ட பெண்களின் உடலில் ஒட்டு துணிகூட இல்லை. காயத்தின் வேதனைகளும், நிர்வாணமாக அங்கெ கிடக்கும் கோலங்களும் அந்த பெண்களின் மனசை எப்படி வாட்டி இருக்கும் என்பதை இதை வாசிக்கும் பெண் உறவுகள் நிச்சயாமாக அறிவீங்கள்.

எங்கள் போராளிகளுக்கு அவர்கள் எல்லாம் சொந்த சகோதரிகள் போலவே தெரிந்தார்கள். எதை பற்றியும் கூட யோசிக்காமல் அவர்களை அப்படியே வாரி அள்ளி தோள்களில் போட்டு கொண்டு ஓடி போய் உழவு இயந்திரங்களில் ஏற்றினார்கள்.

முறிந்து போன கால்களை உடையவர்களை, கிழிந்த சேலைகளில் அள்ளி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் ஒரு இரண்டு மூன்று பேரை தூக்கி கொண்டு போய் உழவு இயந்திரத்தில் போட்டு விட்டு, ஓடிவரும்போது " அண்ணா என்னை தூக்குங்கோ என்னை தூக்குங்கோ" என்று கத்திய பெண்ணை நோக்கி ஓடினேன்.

ஒரு கை, என்காலை இறுக்க பிடித்தது. என்னால் அசைய முடியவில்லை. குனிந்து பார்த்தேன், பதுங்கு குழிக்கு போடபடிருந்த தென்னங்குத்திகளுக்கு நடுவில் அகபட்டபடி ஒரு பதின்ம வயது பெண். சரியாக அவதானித்தேன். இடுப்புக்கு கீழே அவளுக்கு இரண்டு கால்களும் இல்லை. இடுப்புடன் சதைகள் மட்டும் தொங்கி கொண்டிருந்தன. அவற்றை அவளால் அவதானிக்க முடியாதபடி தென்னங்குற்றிகள் அவளுக்கு மறைத்தன.

"அண்ணா என்னை காபாத்தண்ணா" அவளின் குரல்கள் என்னை கெஞ்சின. இவளை காப்பாற்றியும் இவள் பிழைக்க போவதில்லை என்றது என் உள்மனம். இவளுக்கு பதிலாக இன்னும் இரண்டு காயபட்டவர்களை தூக்கி ஏற்றினாலாவது அவர்களை காப்பாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு அவளை உதறிவிட்டு எழ முயன்றபோது,

மீண்டும் "அண்ணா தயவு செய்து என்னை காபாத்தண்ணா" உயிர் வலியின் கெஞ்சல்கள் அவை. உங்களுக்கு புரியுமா உறவுகளே..இதை உங்களுக்கு சொல்லும்போதே எனக்கு கண்ணீர் வருகிறது. வாசிக்கும் உங்களுக்கும் வரும் தானே உறவுகளே...

"தங்கச்சி, இந்த மரங்கள் எல்லாம் தூக்கி உங்களை வெளியில எடுக்க வேணும் என்றால் இரண்டு மூன்று பேர் வேணும், அதோ அங்கெ கத்தி கொண்டிருக்கிற தங்கச்சியை தூக்கிவிட்டு உங்களை வந்து தூக்குகிறேன்" என்று சமாளிச்சேன்.

"அண்ணா, நான் உன்ட சொந்த தங்கச்சி என்றால் என்னை இப்படிதான் விட்டுவிட்டு போவாயா" என்று சாதரணமாக தான் கேட்டாள்.அப்போ அந்த தங்கச்சி கேட்ட கேள்வி என் உயிரையே பிசைந்தது. என் சொந்த தங்கச்சியே கேட்பது போல இருந்தது.

எனக்கு பதில் தெரியவில்லை உறவுகளே.. உங்களுக்கு தெரியுமா..இந்த வலியை என்றைகாவது அனுபவிச்சு இருகிறீங்களா.

எனக்கு அந்த கட்டத்தில் அவளை விட்டு நகர மனம் இடம் கொடுக்கவில்லை. அவள் கால்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. "தங்கச்சி உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீ தப்பிவிடுவாய்" என்ற ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. என் தங்கச்சிக்கு கொடுக்க..

"அண்ணா இடுப்புக்கு கீழே சரியா வலிக்குதண்ணா"

"ஒண்டும் இல்லை மரம் இருக்கிறதால தான் வலிக்குது கொஞ்சம் பொறுங்க ஆக்கள் வரட்டும் தூக்க சரியாயிடும்"

"அண்ணா நான் இயக்கத்துக்கு வந்தது அம்மா அப்பாவுக்கு தெரியாது, கண்டால் சொல்லிவிடுவீங்களா நான் காயபட்டுவிட்டேன் என்று" திக்கி திக்கி பேசினாள்.

"நிச்சயமாக.. எங்கே இருக்கிறார்கள்"

"வலைஞர்மடம் பொது கிணத்தடிக்கு கிட்டே, ராசாத்தி என்று விசாரியுங்கள்"

"கட்டாயம் சொல்லிவிடுறேன்"

"அண்ணா, எனக்கு வாழணும் என்று ஆசையா இருக்கு அண்ணா. என்னை எப்படியும் காப்பாத்திவிடு......" அந்த சொல்லை முடிக்க கூட இல்லை அவள் செத்து விட்டாள். மன்னிக்கவும் வீரச்சாவு.என் சில நிமிட தங்கை என் கண் முன்னாலே வீரச்சாவு.

எல்லாம் உங்களுக்காக தான் உறவுகளே.. இப்போவாவது உங்களுக்கு புரிகிறதா ஏன் எங்களுக்கு விடுதலை வேண்டுமென்று..

இவளை மாதிரி செத்த என் தங்கைகளுக்காக எனக்கு என் நாடு வேணும். உங்களுக்கும் வேணும் என்று தோன்றினால் இந்த தங்கைக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள் அது போதும்.

என் தலை எல்லாம் விறைத்தது. கண்ணீர் வரவில்லை. நெஞ்சை யாரோ சுத்தியலால் அறைவது மாதிரி இருந்தது. என் காலை பிடித்த அவளின் கைகள் இன்னும் விடுபடவே இல்லை. அப்படியே இறுக்கமாக சொந்த அண்ணன் எப்படியும் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை அந்த பிடியில் அப்பட்டமாக தெரிந்தது.

சற்றும் முன்னே பேசிய அந்த வாய்கள் திறந்த படி, வாழும் ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தபடி, அப்படியே எந்த மண்ணுக்காக வந்தாளோ அந்த மண்ணில் தலை சாய்ந்த படி, என் தங்கை மீளா துயிலில்.

எனக்காக அவளுக்கு ஒரு முறை..ஒரே ஒரு முறை நீங்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவீங்களா..

"ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்"

"ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்"

அலைபேசி என்னை உயிர்ப்பித்தது.

"சொல்லுங்கோ அல்பா வண்"

"நிலைமை என்ன மாதிரி"

"சரியான சிக்கல் அல்பா வண். நிறைய சங்கர்.."

(இறந்த ஒருவரை வைத்து இறப்புகளை சொல்லும் சங்கேத மொழி)

"விளங்குது ..சேரா த்ரீயை பார்த்தீங்களா "

"இல்லை அல்பா வண். தேடி கொண்டிருக்கிறேன். சந்திச்சதும் தொடர்பெடுக்கிறேன்"

"சரி நன்றி அவுட்"

"நன்றி"

அந்த தங்கச்சியின் கைகளை எடுத்துவிட்டு சேகர் அண்ணாவை தேடி அலைந்தேன்.

சிதறிய உடல்களுக்கும், சதை பிண்டங்களுக்கும் நடுவில், குப்புற படுத்தபடி சுருள் தலையுடன் ஒரு உடல். நடுங்கியபடியே அந்த உடலை திருப்பினேன், கருகிய முகத்துக்கும் நடுவில் மாறாத புன்னகையுடன், லெப்.கேணல் சேகர் அண்ணா இந்த மண்ணுக்காக சாவை தழுவி இருந்தார்.

நிதி துறையில் இருந்த அவரின் மனைவியை , ராகவன் என்னும் சார்லஸ் அன்ரனி சிறப்பு தளபதி பெயர் தாங்கிய அவரின் மகனை மட்டுமல்ல,அவர் நேசித்த மக்களையும் விட்டு வெகு தூரம் போயிருந்தார்.

பல போராளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த, மக்களுக்காக தன் வாழ்வையே கழித்த மாவீரனாக லெப். கேணல் சேகர் அண்ணா தான் நேசித்த மண்ணை முத்தமிட்டபடி வீரச்சாவை தழுவி இருந்தார்.

"இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் "

எனக்கு என் சொந்த அண்ணனையும், சொந்த தங்கச்சியையும் ஒரே நேரத்தில் இழந்த துயரம்..உங்களுக்கு ...?????

(தொடரும்)

பாகம் பன்னிரண்டு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்க.... தோழர் அபிராமு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் பதினொன்று

திடீரென ஆனந்தபுரம் வான்பரப்பில் நுழைந்தன கிபிர் விமானங்கள்.

அவை கொடிய சிறிலங்கா விமானபடைக்கு சொந்தமானவை.

என்னையும் இழுத்துக்கொண்டு பதுங்கு குழிக்குள் ஓடினார்கள் அந்த சர்வதேச தொலைத்தொடர்பு பிரிவை சேர்ந்த நண்பர்கள்.

பதுங்கு குழி வாசலுக்கு கூட சென்றிருக்க மாட்டேன்.

நெருப்பு பிழம்புகள், மின்னலென தெறிக்க டம்மம்மமார் டமம்ம்ம்மாமமார் என்ற காதை பிளக்கும் சத்தங்கள் மிக அருகிலேயே கேட்டன. என்னை ஒரு கை பதுங்கு குழிக்குள் இழுத்து போட்டது.

மீண்டும் கிபிர் இரைந்து கொண்டு கீழிறங்க விடுதலைபுலிகளின் விமான எதிர்ப்பு பிரங்கிகள் முழங்கின.

தாறுமாறாக குண்டுகளை வீசி விட்டு சென்றான்.

"ராணி அண்ணா, சேகர் அண்ணா போன பக்கம் தான் அடிக்கிறான் போல " என்று நண்பன் ஒருவன் சத்தத்தை வைத்து சொன்ன போது தான், எனக்கு மனசு பக் என்றது.

அவருக்கு தொடர்பு எடுத்து பார்க்க வேணும் என்று உள்மனசு சொன்னாலும்,விமான தாக்குதல் நேரம், ஆகாயத்தில் வட்டமிடும் வேவு விமானங்களுக்காக தொலைதொடர்பு எடுக்க கூடாது என்ற கட்டளை என்னை தடுத்தது.

வானத்தில் வெடிக்கும் குண்டுகள் (ஆட்களை கொல்வதற்காக) , கட்டடங்களை அழிக்கும் குண்டுகள், நிலத்துக்கு கீழே போய்

வெடிக்கும் குண்டுகள் என்று மாறி மாறி மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் பன்னிரண்டு தடவைக்கு மேல் குண்டு வீசியாச்சு. ஒரே புகைமண்டலமும் கந்தக நெடியும் தான். எங்கள் பதுங்கு குழியே பலதடவை அதிர்ந்து உள்ளே மண் சரிய தொடங்கிவிட்டது.

விமானங்களின் இரைச்சல் கரைய தொடங்க, நாங்கள் குண்டு விழுந்த இடத்தை நோக்கி ஓட தொடங்கினோம்.

பொதுவாக விமானங்கள் போனாலும் உடனே போக கூடாது என்று சொல்லுவார்கள். அவன் போற மாதிரி போயிற்று மறுபடியும் வந்து அடிப்பான் மற்றும் விமான குண்டுவீச்சு நடந்த இடத்துக்கு காயபட்ட ஆட்களை தூக்க விடாமல் செல்லாலை அடிப்பான் .

இருந்தும் சேகர் அண்ணாவின் நிலையை அறியவும் காயபட்ட ஆட்களை தூக்கவும் நாங்கள் உடனடியாகவே அந்த இடத்துக்கு விரைந்தோம் சேகர் அண்ணாவை அலைபேசியில் கூப்பிட்டபடி.

"சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்"

"சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்"

என்று எங்கள் அலைபேசியில் கத்தியபடியே ஓடினோம். எந்த பதிலும் வரவில்லை.

சற்று முன்னர் அழகாக தெரிந்த அந்த குடிசைகளும் தென்னை மரங்களும் பிய்த்து போடபட்டிருந்தது. கொலை வெறியாடபட்ட கிராமம் போல காட்சி தந்தது.

அழுகையின் ஓலங்களும், கண்களில் தெரிந்த மரண பீதிகளும், ரத்தம் சொட்ட சொட்ட தலை தெறிக்க ஓடிவரும் ஆட்களும் மனசுக்குள்ளே வெறுமையை தோற்றுவித்தன.

"அண்ணா என்னை காப்பாத்துங்கோ அண்ணா என்னை காப்பாத்துங்கோ" என்று சட்டை எல்லாம் கிழிந்தபடி இரத்தம் சொட்ட சொட்ட ஓடிவந்த பெண்ணொருத்தி, அவளை தாங்கி பிடிக்க நான் ஓடும்போது, எனக்கு ஒரு பத்து மீற்றருக்கு முன்னால் தலைகுப்பற விழுந்தாள்.

ஓடி வந்து மூச்சில் கைவைத்து நாடி துடிப்பை பார்க்கும் போது அவள் இறந்துவிட்டிருந்தாள். பின் தலையில் சிறுபகுதி இல்லை அதன் வழியாக இரத்தம் அவளை மட்டும் அல்ல எங்கள் மண்ணையும் நனைத்து கொண்டிருந்தது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறீலங்கா கொலைவெறி இராணுவம் விமானத்தாக்குதல் நடந்த இடத்துக்கு கொத்து குண்டு தாக்குதலை தொடக்கி இருந்தான். காயபட்டவர்களை தூக்க கூட மக்கள் வர தயங்கினார்கள். காயப்பட்டவர்களை ஏற்றி செல்ல வந்த உழவு இயந்திரங்கள் கூட எட்டியே நின்றன.

தாக்குதல் நடந்த இடத்தை நான் வாழ்கையில் திரும்ப எப்பவுமே பார்க்க கூடாது. எங்குமே இரத்தமும் சதைகளும், கைகளும், தலை முடிகளும், பாதி தலைகளும், கிழிந்த சட்டைகள் உள்ளாடைகள் சிதறி போய் இருந்தன.

"அண்ணா எங்களை காப்பாத்துங்க, எங்களை காப்பாத்துங்க" என்ற ஓலம் எல்லா பக்கத்திலும் இருந்து வந்து காதிலே எதிரொலித்தன.

யாரை முதலில் காப்பாத்திறது..நீங்களே சொல்லுங்க ..யாரை காப்பாத்திறது..அந்த செல் மழைக்கு நடுவிலும் நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். சிறு காயங்களுக்கு உட்பட்டவர்களை மட்டும் முதலில் ஏத்துவம். வயிற்று காயம், தலை காயம் எல்லாம் கடைசியா ஏத்துவோம். ஏன் என்றால் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு போனாலும் மருத்துவம் செய்ய மாட்டார்கள்.

புழுபிடிச்சு சாகும்வரை அப்படியே விட்டுவிடுவார்கள். அது அவர்களின் பிழை இல்லை. அவ்வளவு மருந்து தட்டுப்பாடும், அவ்வளவு காயகாரர்களும். இவர்களுக்கு செலவிடும் நேரத்தை வேறு பத்து காயகாரர்களுக்கு செலவிடலாம் என்பது அவர்களின் கருத்து.

இது தான் உயிரின் பெறுமதி அங்கு. உங்களுக்கு கொஞ்சமாவது புரிகிறதா உறவுகளே..

கிபிரின் குண்டுகள் பெரும்பாலானவை பயிற்சி முகாமின் பெண்கள் பகுதிக்குள்ளேயே விழுந்திருந்தன. அந்த பெண்கள் கூட சில நாட்களுக்கு முன்னர் தான் விரும்பியோ விரும்பாமலோ இயக்கத்தில் இணைக்கபட்டவர்கள்.

கிபிர் குண்டுகளின் தாக்கத்தை உங்களுக்கு எழுத்தில் விபரிக்க முடியாது. அவை அனுபவப்பட்டால் மட்டும் தெரிந்து கொள்ள கூடிய உணர்வுகள். குண்டுவீச்சின் தாகத்தினால் பெரும்பாலான காயபட்ட பெண்களின் உடலில் ஒட்டு துணிகூட இல்லை. காயத்தின் வேதனைகளும், நிர்வாணமாக அங்கெ கிடக்கும் கோலங்களும் அந்த பெண்களின் மனசை எப்படி வாட்டி இருக்கும் என்பதை இதை வாசிக்கும் பெண் உறவுகள் நிச்சயாமாக அறிவீங்கள்.

எங்கள் போராளிகளுக்கு அவர்கள் எல்லாம் சொந்த சகோதரிகள் போலவே தெரிந்தார்கள். எதை பற்றியும் கூட யோசிக்காமல் அவர்களை அப்படியே வாரி அள்ளி தோள்களில் போட்டு கொண்டு ஓடி போய் உழவு இயந்திரங்களில் ஏற்றினார்கள்.

முறிந்து போன கால்களை உடையவர்களை, கிழிந்த சேலைகளில் அள்ளி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் ஒரு இரண்டு மூன்று பேரை தூக்கி கொண்டு போய் உழவு இயந்திரத்தில் போட்டு விட்டு, ஓடிவரும்போது " அண்ணா என்னை தூக்குங்கோ என்னை தூக்குங்கோ" என்று கத்திய பெண்ணை நோக்கி ஓடினேன்.

ஒரு கை, என்காலை இறுக்க பிடித்தது. என்னால் அசைய முடியவில்லை. குனிந்து பார்த்தேன், பதுங்கு குழிக்கு போடபடிருந்த தென்னங்குத்திகளுக்கு நடுவில் அகபட்டபடி ஒரு பதின்ம வயது பெண். சரியாக அவதானித்தேன். இடுப்புக்கு கீழே அவளுக்கு இரண்டு கால்களும் இல்லை. இடுப்புடன் சதைகள் மட்டும் தொங்கி கொண்டிருந்தன. அவற்றை அவளால் அவதானிக்க முடியாதபடி தென்னங்குற்றிகள் அவளுக்கு மறைத்தன.

"அண்ணா என்னை காபாத்தண்ணா" அவளின் குரல்கள் என்னை கெஞ்சின. இவளை காப்பாற்றியும் இவள் பிழைக்க போவதில்லை என்றது என் உள்மனம். இவளுக்கு பதிலாக இன்னும் இரண்டு காயபட்டவர்களை தூக்கி ஏற்றினாலாவது அவர்களை காப்பாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு அவளை உதறிவிட்டு எழ முயன்றபோது,

மீண்டும் "அண்ணா தயவு செய்து என்னை காபாத்தண்ணா" உயிர் வலியின் கெஞ்சல்கள் அவை. உங்களுக்கு புரியுமா உறவுகளே..இதை உங்களுக்கு சொல்லும்போதே எனக்கு கண்ணீர் வருகிறது. வாசிக்கும் உங்களுக்கும் வரும் தானே உறவுகளே...

"தங்கச்சி, இந்த மரங்கள் எல்லாம் தூக்கி உங்களை வெளியில எடுக்க வேணும் என்றால் இரண்டு மூன்று பேர் வேணும், அதோ அங்கெ கத்தி கொண்டிருக்கிற தங்கச்சியை தூக்கிவிட்டு உங்களை வந்து தூக்குகிறேன்" என்று சமாளிச்சேன்.

"அண்ணா, நான் உன்ட சொந்த தங்கச்சி என்றால் என்னை இப்படிதான் விட்டுவிட்டு போவாயா" என்று சாதரணமாக தான் கேட்டாள்.அப்போ அந்த தங்கச்சி கேட்ட கேள்வி என் உயிரையே பிசைந்தது. என் சொந்த தங்கச்சியே கேட்பது போல இருந்தது.

எனக்கு பதில் தெரியவில்லை உறவுகளே.. உங்களுக்கு தெரியுமா..இந்த வலியை என்றைகாவது அனுபவிச்சு இருகிறீங்களா.

எனக்கு அந்த கட்டத்தில் அவளை விட்டு நகர மனம் இடம் கொடுக்கவில்லை. அவள் கால்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. "தங்கச்சி உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீ தப்பிவிடுவாய்" என்ற ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. என் தங்கச்சிக்கு கொடுக்க..

"அண்ணா இடுப்புக்கு கீழே சரியா வலிக்குதண்ணா"

"ஒண்டும் இல்லை மரம் இருக்கிறதால தான் வலிக்குது கொஞ்சம் பொறுங்க ஆக்கள் வரட்டும் தூக்க சரியாயிடும்"

"அண்ணா நான் இயக்கத்துக்கு வந்தது அம்மா அப்பாவுக்கு தெரியாது, கண்டால் சொல்லிவிடுவீங்களா நான் காயபட்டுவிட்டேன் என்று" திக்கி திக்கி பேசினாள்.

"நிச்சயமாக.. எங்கே இருக்கிறார்கள்"

"வலைஞர்மடம் பொது கிணத்தடிக்கு கிட்டே, ராசாத்தி என்று விசாரியுங்கள்"

"கட்டாயம் சொல்லிவிடுறேன்"

"அண்ணா, எனக்கு வாழணும் என்று ஆசையா இருக்கு அண்ணா. என்னை எப்படியும் காப்பாத்திவிடு......" அந்த சொல்லை முடிக்க கூட இல்லை அவள் செத்து விட்டாள். மன்னிக்கவும் வீரச்சாவு.என் சில நிமிட தங்கை என் கண் முன்னாலே வீரச்சாவு.

எல்லாம் உங்களுக்காக தான் உறவுகளே.. இப்போவாவது உங்களுக்கு புரிகிறதா ஏன் எங்களுக்கு விடுதலை வேண்டுமென்று..

இவளை மாதிரி செத்த என் தங்கைகளுக்காக எனக்கு என் நாடு வேணும். உங்களுக்கும் வேணும் என்று தோன்றினால் இந்த தங்கைக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள் அது போதும்.

என் தலை எல்லாம் விறைத்தது. கண்ணீர் வரவில்லை. நெஞ்சை யாரோ சுத்தியலால் அறைவது மாதிரி இருந்தது. என் காலை பிடித்த அவளின் கைகள் இன்னும் விடுபடவே இல்லை. அப்படியே இறுக்கமாக சொந்த அண்ணன் எப்படியும் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை அந்த பிடியில் அப்பட்டமாக தெரிந்தது.

சற்றும் முன்னே பேசிய அந்த வாய்கள் திறந்த படி, வாழும் ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தபடி, அப்படியே எந்த மண்ணுக்காக வந்தாளோ அந்த மண்ணில் தலை சாய்ந்த படி, என் தங்கை மீளா துயிலில்.

எனக்காக அவளுக்கு ஒரு முறை..ஒரே ஒரு முறை நீங்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவீங்களா..

"ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்"

"ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்"

அலைபேசி என்னை உயிர்ப்பித்தது.

"சொல்லுங்கோ அல்பா வண்"

"நிலைமை என்ன மாதிரி"

"சரியான சிக்கல் அல்பா வண். நிறைய சங்கர்.."

(இறந்த ஒருவரை வைத்து இறப்புகளை சொல்லும் சங்கேத மொழி)

"விளங்குது ..சேரா த்ரீயை பார்த்தீங்களா "

"இல்லை அல்பா வண். தேடி கொண்டிருக்கிறேன். சந்திச்சதும் தொடர்பெடுக்கிறேன்"

"சரி நன்றி அவுட்"

"நன்றி"

அந்த தங்கச்சியின் கைகளை எடுத்துவிட்டு சேகர் அண்ணாவை தேடி அலைந்தேன்.

சிதறிய உடல்களுக்கும், சதை பிண்டங்களுக்கும் நடுவில், குப்புற படுத்தபடி சுருள் தலையுடன் ஒரு உடல். நடுங்கியபடியே அந்த உடலை திருப்பினேன், கருகிய முகத்துக்கும் நடுவில் மாறாத புன்னகையுடன், லெப்.கேணல் சேகர் அண்ணா இந்த மண்ணுக்காக சாவை தழுவி இருந்தார்.

நிதி துறையில் இருந்த அவரின் மனைவியை , ராகவன் என்னும் சார்லஸ் அன்ரனி சிறப்பு தளபதி பெயர் தாங்கிய அவரின் மகனை மட்டுமல்ல,அவர் நேசித்த மக்களையும் விட்டு வெகு தூரம் போயிருந்தார்.

பல போராளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த, மக்களுக்காக தன் வாழ்வையே கழித்த மாவீரனாக லெப். கேணல் சேகர் அண்ணா தான் நேசித்த மண்ணை முத்தமிட்டபடி வீரச்சாவை தழுவி இருந்தார்.

"இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் "

[b]எனக்கு என் சொந்த அண்ணனையும், சொந்த தங்கச்சியையும் ஒரே நேரத்தில் இழந்த துயரம்..உங்களுக்கு ...?????

(தொடரும்)

எனக்கு கவலை அப் போராளிகளதும்,பொது மக்களது தியாகமும் வீணாக போய் விட்டது என்பது தான்.

Link to comment
Share on other sites

எனக்கு கவலை அப் போராளிகளதும்,பொது மக்களது தியாகமும் வீணாக போய் விட்டது என்பது தான்.

அவர்களின் இழப்பும் தியாகமும் ஒரு போதும் வீணாகாது. இவற்றுக்கான பதிலை காலம் தான் சொல்லும்.

அதுவரை காத்திருப்போம்.

Link to comment
Share on other sites

பாகம் பதினொன்று

...

எனக்கு என் சொந்த அண்ணனையும், சொந்த தங்கச்சியையும் ஒரே நேரத்தில் இழந்த துயரம்..உங்களுக்கு ...?????

(தொடரும்)

மண்ணின் விடுதலைக்காக தம்மை மெழுகாக உருக்கி அவர்கள் விட்டுச் சென்ற ஒளியை மட்டும் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்... :lol:

Link to comment
Share on other sites

பாகம் பன்னிரண்டு

கோம்பாவில் குளத்தடியால் வந்த ராணுவத்தையும் தேவிபுரம் காட்டுப்பகுதியால் வந்த ராணுவத்தையும் இரணைப்பாலை வடக்கு பகுதியில் மறித்து உக்கிர சமர் நடத்தினர் புலிகள்.

கடும் சமர்க்களம் அது.

தளபதி லோரன்ஸ், தளபதி தீபன் வழி நடத்தலில் புலிகள் தீரமாக சண்டை போட்டனர்.

அந்த களமுனையின் காவலரணில் ஒரு தொகுதி தலைவனாக என்னை நியமித்து இருந்தனர்.

ஒரு நாள் மாலை பொழுதில் அவள் வந்தாள்.

பின்னால் இருந்து ஒரு பழக்கமான குரலில் அண்ணா என்று கூப்பிட்ட போது, திரும்பிய என்னை அவளின் அழகான புன்னகை மூலம் அன்பை காட்டினாள்.

அவள் வேறு யாருமில்லை என் உடன் பிறவா கள தங்கை கலையரசி தான்.

கேப்பாபுலவு களமுனைக்கு பிறகு இப்போ தான் சந்திக்கிறேன். ஒரு நாற்பது நாள் இடைவெளி. எவ்வளவு மாற்றம் காலங்களில்.

எதிரி புதுக்குடியிருப்பை பிடித்து இரணைப்பாலை வரை வந்துவிட்டான். மறுபக்கத்தாலே விசுவமடுவில் இருந்த இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் பிடித்து இரணைப்பாலை வடக்கு வரை வந்துவிட்டான்.

மக்கள் புதிய பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மட பகுதிகள் நோக்கி நகர்ந்துவிட்டார்கள்.

இடைவிடாத செல் மழை, கிபிர் குண்டுவீச்சுகள், பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகளுக்கு நடுவில் மக்களுக்காக மறவர்கள் தீராத மனவுறுதியுடன் போராடினார்கள்.

இவற்றுக்கும் மத்தியிலும், போராளிகளின் மனவுறுதியை குலைப்பதற்காக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வரும், வழங்கல் (உணவு) தொகுதிக்கும் அடிக்கடி குறி சூட்டு (சினைப்பர்) தாக்குதல் மூலம் தடுத்து நிறுத்தினான் சிங்கள ராணுவம்.

சிலவேளைகளில் ஐந்து நாட்களுக்கு கூட சாப்பாடு இல்லாமல் சண்டை போட்டார்கள் போராளிகள். அது அவர்கள் மக்கள் மேல் வைத்த பாசத்தின் வெளிப்பாடு.

ஒரு நேர சாப்பாடு தராவிட்டாலும் அம்மாவுடன் சண்டைபோட்ட நாங்கள், ஐந்து நாட்கள் சாப்பாடு வராவிட்டாலும் யாரையும் நோகாமல எதிரியுடன் சண்டை போட மக்கள் மீது எவ்வளவு பாசம் வேண்டும்.

அது சில வேளைகளில் அவர்களின் அம்மா மீது இருந்த பாசத்தை போல பல மடங்காக கூட இருக்கலாம் இல்லையா.?

பட்டினிக்கும் மனவுறுதிக்குமான போராட்டத்தில் மனவுறுதி வென்றாலும், சில வேளைகளில் வயிற்றுபசி எங்களுக்கு சில நோய்களையும்,எரிச்சலையும், சிந்தனை குலைவையும் ஏற்படுத்துவதுண்டு.

வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பால் படும் வேதனையை தவிர்க்க, தென்னங்குருத்துகளையும், புளியம் இலைகளையும் ஏன் சில வேளைகளில் பூவரசமிலைகளையும் சாப்பிட்டு அந்த வயிற்று எரிவை குறைத்து இருக்கிறோம்.

ஏறத்தாழ ஆடுமாடுகள் போல எம்மை மாற்றி கொண்டோம். எல்லாம் எம் மக்களுக்காக என்ற உணர்வு, எங்களை இந்த இலைகுழைகளை கூட அமிர்தமாக உண்ண வைத்தது. இதை கூட என்னால் வார்த்தைகளால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. எல்லாம் உணர்வு.

அன்றும் அப்படி தான்.

எனக்கு இரண்டு மூன்று நாளாக காய்ச்சல்.

பட்டினி, உடலில் சத்தின்மை, அசுத்த நீர் இதில் ஏதாவது ஒன்றினால் தான் அந்த காய்ச்சல். இருந்தும் களத்தை விட்டு நகரமுடியாத நிலை. எனக்கு ஆறுதலாக இருந்தவள் கலையரசி தான்.

எதிரிக்கு தெரியாமல் அடுப்பு மூட்டி, கொதிநீர் வைத்து தருவாள். குடிக்கவும் ஒத்தணம் பிடிக்கவும். என் கூட பிறந்த தங்கை அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாளோ அதை விட அதிகமாக செய்தால் என் அன்பு தங்கை கலை.

இரண்டு நாளாக சாப்பாடும் இல்லை. வாயெல்லாம் கசத்தது. ஏதாவது புளிப்பாக சாப்பிட வேண்டும் போல இருந்தது. கலையிடம் கெஞ்சினேன். "அண்ணா உனக்கில்லாததா.. இரு இப்பவே கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டு போனவள் தான்.

ஒரு படீர் என்ற வெடிச்சத்தம். அதை தொடர்ந்து "அண்ணா....." என்ற அலறல் என்னை திடுக்கிட்டு எழும்ப வைத்தது. காய்ச்சலுடன் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன் கையில் என் ஆயுதத்தையும் எடுத்து கொண்டு.

அங்கெ எங்களுக்கும் எதிரிக்குமிடைப்பட்ட பகுதியில் இருந்த புளியமரத்துக்கு கீழே, கையில் கொத்தாக புளியமிலையுடன், என் தங்கை உயிரை விட்டிருந்தாள். நெத்தியில் இருந்து வந்த அவளின் குருதி மண்ணை நனைத்திருந்தது.

இந்த பாழாய் போன அண்ணனுக்காக, காய்ச்சலுடன் நான் கேட்டேன் என்ற கடமைக்காக, ஒரு கொத்து புளியமிலைக்காக, இந்த மண்ணுக்காக என் தங்கை, இந்த மண்ணிலே வீழ்ந்து கிடக்கிறாள்.

எனக்கே களம் என்றும் பாராமல் ஓஒ ... என்று கத்தி அழனும் போல இருக்கு..உங்களுக்கு அப்படி இல்லையா உறவுகளே..

போராளிகள் என்றால் கல் மனம் படைத்தவர்கள் அல்ல. அவர்களும் உங்களை போல தான். அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். சாவுகள், இரத்தம், சதைகள் என அவர்களின் மனசை இறுக்கி இருந்தாலும் சில வேளைகளில் அவற்றையும் மீறி உணர்வுகள் வெளிபடுவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.

ஏன் என்றால் நாங்களும் மனுஷர் தானே உறவுகளே..எங்களுக்கு மட்டும் கடவுள் மனசை கல்லாக படைக்கவில்லை தானே ..

அங்கெ நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. கலை கொஞ்சம் உயரம் குறைவானவள். அதுவே அவளுக்கு எமனாகவும் வரும் என்று எள்ளளவும் யோசித்தும் இருக்கமாட்டாள். எங்கள் நிலைகளுக்கு பின்னால் இருந்த புளியமரத்தில் தாழ்வாக இருந்த இலைகள் எல்லாம் கடந்த ஒன்பது பத்து நாட்களாக போராளிகளின் வயிற்றுபசிக்காக பிடுங்கபட்டு மொட்டையாக இருந்தது. உயரத்தில் இருந்தவை அவளுக்கு எட்ட வாய்ப்பில்லை. ஏறி தான் பிடுங்கவேண்டும்.

ஏறி பிடுங்கும் போது குறி சூட்டு தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற நிலையில், எங்கள் அரணுக்கு முன்னால் இருந்த மரத்தில் தாழ்வாக இருந்த இலைகளை பறித்து கொண்டு ஓடிவந்திடலாம் என்று முடிவெடுத்து அதனை செயற்படுத்திய போது தான் அவள் கொடிய எதிரியின் குறி சூட்டுக்கு இலக்காகி இருக்கிறாள்.

என்னால் என் தங்கையின் உயிரை தான் காப்பற்ற முடியவில்லை. அவளின் புகழுடலையாவது எதிரியின் கைகளில் சிக்காமல் எடுத்து அவளின் குடும்பத்தினரின் கைகளில் சேர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஒரு அண்ணனாக நான் இதைக்கூட செய்யணும் இல்லையா என் உறவுகளே..?

பதுங்கி நிலையெடுத்து, ஊர்ந்தபடி அவளின் புகழுடல் இருந்த இடத்தை அண்மித்துவிட்டேன்.

மீண்டும் படீர் என்ற சத்தம்.

என் காலை பதம் பார்த்தது கொடிய சிங்கள எதிரியின் குறி சூட்டு சன்னம் ஒன்று. என் தொடைகளை ஊடுருவி மறுபக்கத்தால் சென்று இருந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த என் சக போராளிகளை சைகை மூலம் நிறுத்திவிட்டு, அந்த புளியமரத்தின் வேர்களுக்குள் உருண்டு மறைந்து கொண்டேன்.

உடலை தூக்க வரும் போராளிகளுக்காக வெறியுடன் காத்திருந்தான் அந்த கொடிய குறி சூட்டாளன். மறைந்திருந்தவாறே என் ஆயுதத்தை நிமிர்த்தி, எதிரிகளின் நிலைகளை நோக்கி எழுந்தமானத்துக்கு சுட்டு என் கோபத்தை காட்டினேன்.

கால் விறைத்து, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கள மருத்துவ இறுக்கி துணியை (பில்ட் கொம்பிரசறை) எடுத்து என் காலை சுற்றி கட்டினேன். என்ன விலை கொடுத்தாவது என் தங்கையின் உடலை எடுத்தே தீருவது என்ற மன வைராக்கியத்தை என்னுள் வளர்த்து கொண்டேன்.

இந்த வைராக்கியம் இதை கேட்கும் உங்களுக்கு வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை உறவுகளே. ஏன் என்றால் அங்கெ விழுந்திருப்பது என் தங்கை மட்டும் இல்லை. உங்கள் தங்கையும் கூட.

என்னில் இருந்து ஒரு நான்கு அல்லது ஐந்தடி தள்ளி தான் அவள் உடல் இருந்தது. தனது ஆசை அண்ணனுக்கு பிடுங்கிய புளியமிலை கொத்தை விடாமல் பிடித்திருந்தாள். இந்த இலைகளை எப்படியும் அண்ணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவள் முகத்தில் தெரிந்தது. அந்த கனவுடனே மண்ணில் கிடந்தாள், என் மன்னிக்கவும் எங்கள் தங்கை கலையரசி.

அருகில் இருந்த ஒரு மொத்த தடியினை எடுத்து அதன் கிளையினை என் தங்கையின் தலை முடியினுள் செருகி, அதனை சுற்றி சிக்கு பட வைத்தேன். பின்னர் என் பலம் கொண்ட மட்டும் இழுத்தேன். என் தங்கை என்னை நோக்கி அசைய தொடங்கினாள். இடையில் அந்த சிக்கு கழன்று தடி விடுபட்டது. ஆனால் நான் என் முயற்சியை விடவில்லை. மறுபடியும் முயன்றேன் என் கை எட்டும் அளவுக்கு வந்து விட்டாள் என் தங்கை.

கையால் எட்டி அவள் தலை முடியை பிடித்து எனக்கு அருகில் அவளை , அவளின் உடலை எடுத்து விட்டேன்.

கட்டி அழனும் போல இருக்கு. உங்களுக்கு இல்லையா ..??

அவளின் கைகளுக்கு நடுவில் இருந்த புளியம் இலைகளை, கண்ணீருடன் சாப்பிட்டேன்.

இது என் வயிற்றுப்பசிக்காக அல்ல உறவுகளே.

இது அவளின் கடைசி ஆசைக்காக..

(தொடரும்)

பாகம் பதின்மூன்று இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அழுவதைத் தவிர வேற வழி தெரியவில்லை.[அவர்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதைத் தவிர.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அழுவதைத் தவிர வேற வழி தெரியவில்லை.[அவர்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதைத் தவிர.]

எனக்கும் தான்..

Link to comment
Share on other sites

பாகம் பன்னிரண்டு

...

பட்டினிக்கும் மனவுறுதிக்குமான போராட்டத்தில் மனவுறுதி வென்றாலும், சில வேளைகளில் வயிற்றுபசி எங்களுக்கு சில நோய்களையும்,எரிச்சலையும், சிந்தனை குலைவையும் ஏற்படுத்துவதுண்டு.

வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பால் படும் வேதனையை தவிர்க்க, தென்னங்குருத்துகளையும், புளியம் இலைகளையும் ஏன் சில வேளைகளில் பூவரசமிலைகளையும் சாப்பிட்டு அந்த வயிற்று எரிவை குறைத்து இருக்கிறோம்.

ஏறத்தாழ ஆடுமாடுகள் போல எம்மை மாற்றி கொண்டோம். எல்லாம் எம் மக்களுக்காக என்ற உணர்வு, எங்களை இந்த இலைகுழைகளை கூட அமிர்தமாக உண்ண வைத்தது. இதை கூட என்னால் வார்த்தைகளால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. எல்லாம் உணர்வு.

....

இதனை அறிந்தது இருக்கிறேன்.

...

அவளின் கைகளுக்கு நடுவில் இருந்த புளியம் இலைகளை, கண்ணீருடன் சாப்பிட்டேன்.

இது என் வயிற்றுப்பசிக்காக அல்ல உறவுகளே.

இது அவளின் கடைசி ஆசைக்காக..

(தொடரும்)

உடன் பிறவா சகோதரி கலையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ராணிமைந்தன் திறமையான போராளியாக மட்டும் இங்கே காட்டப் படாமல் ஒரு பாசமான அண்ணனாகவும் சித்திரிக்கப் பட்டமை எத்தனையோ போராளிகளின் இழப்பை நினைத்து வாடும் அவர்களது உறவினர் மட்டும் அல்ல ஏனையோரது மனதையும் கரைய வைத்துள்ளது... :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாகம் பதின்மூன்று

அம்பலவன்-பொக்கணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பக்கத்தில் தான் எங்களின் மருத்துவ முகாம்.

நான் அந்த முகாமுக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன.

இராணுவ முன்னேற்றமும், எங்கள் தோழர்களின் இழப்பும், மக்களின் தொடர்ச்சியான இடபெயர்வுகளும் செய்திகளாக காதை அடையும்போதும், காயபட்ட ஏனைய போராளிகளின் அவல குரல்களும், எங்கள் மருத்துவ முகாமின் நிலையும்..ஏனடா காயபட்டோம் என்று இருக்கிறது.

அப்படி இருந்தது.. எங்கள் மருத்துவ முகாம்.

காயபட்ட போராளிகளை கவனிக்க சொற்ப மருந்துகளுடனும், மிக சொற்ப ஆட்களுடனும் போராடி கொண்டிருந்தது விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவு.

எங்கு பார்த்தாலும் ஒரே அவல குரல்களும், நோ தாங்க முடியாத வலிகளின் கதறல்களும் எதிரொலித்து கொண்டிருந்தன.

எங்கும் இரத்த வாடையும், சொட்டிய இரத்தத்தை மொய்க்கும் இலையான்களும் அந்த இடத்தை நரகமாக்கி காட்சி அளித்தது.

காயங்களில் மொய்க்கும் இலையான்களை கூட துரத்த முடியாத நிலையில்... மக்களுக்காக போராடிய போராளிகள்..

படுக்கை புண்களும், காயங்களில் நெளியும் புழுக்களும், சிறு சிறு காயங்களுக்கே மருந்து இல்லாமல் கால்கள், கைகள் எடுக்கபட்ட நிலையிலும் அவர்கள் மக்கள் மீது கொண்ட பாசம் மட்டும் மாறவே இல்லை.

சொல்லுங்கள் உறவுகளே ..கனவிலே கூட எழும்பி அவங்களை உள்ளே விடக்கூடாது என்றும் கத்தும் போராளிகள் உங்கள் இனத்தை தவிர வேற இனத்தில் பிறந்திருகிறார்களா..??

ஒரு கை, ஒரு காலை இழந்து, கண்களிலே கட்டு போட்ட நிலையிலும் என்னை கெதியாக குணபடுத்துங்கள் சண்டைக்கு போகவேண்டும் என்ற போராளிகள்..உங்கள் சகோதரங்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா..??

காயங்கள் என்பது போராட்டத்தில் சாதாரணமானது தான்..ஆனால் எங்களிடம் எந்த வித மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் காயபடுவது என்பது நரகத்துக்கு சமன்.

புளியமரங்களிலே தொங்கும் சேலன் குழாய்களும், வெறும் மண்ணிலே தலைவைத்து அண்ணாந்து பார்த்தபடி, கொட்டும் மழையிலும், வடியும் சீழ்களுக்கும் மத்தியில், இரண்டு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிட்டு கொண்டு , தங்கள் வலியை கூட மறந்து மக்களை நினைக்க வேறு யாரால் முடியும்..

அந்த மருத்துவ முகாமுக்கு வந்த ஒவ்வொரு போராளியும் ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப சொல்லுவார்கள்.

"மச்சான் அடுத்த முறை காயபட்டால் அங்கேயே சைனயிட் அடிச்சிடனும்"..

இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் அந்த முகாமின் நிலைமை.

என்னை கடைசியாக வந்து பார்த்த அந்த மருத்துவ போராளி, இனிமையான அந்த செய்தியை சொல்லிட்டு போனான்.

"ராணி இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் இங்கிருந்து போயிடலாம்"

நான் அந்த முகாமில் இருந்து புறப்படுவதற்கு முதல் நாள்.

அதிகாலை நேரம்.

எங்கள் முகாமுக்கு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றார்கள்.

கைகளிலே தங்கள் குழந்தைகளுடன் தாய்மார்கள் தான் அந்த வரிசையில் மிக அதிகம்.

விசாரித்த போது இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அங்கர் 1 + பால்மாவுக்கான வரிசை தான் அது.

பசியாலும், அந்த அதிகாலை குளிராலும் பெரும்பாலான குழந்தைகள் வீரிட்டு கத்தியபடியே இருந்தன.

மெலிந்த தேகமும், பால் வற்றி போன தாய்மார்களும், குழந்தையின் பசியை அடக்கமுடியாத கையாலான நிலையை உணர்ந்து வேதனையுடன் சுகாதார நிலைய வாசலையே பார்த்து கொண்டிருந்தனர்.

குழந்தைகளுக்கான பால்மாவை கூட புலிகள் குடித்து விடுவார்கள் என்று அந்த பச்சிளம் குழந்தைகளை பட்டினி போட்ட சிங்கள அரசிடம் கெஞ்சி மூன்று மாதங்களுக்கு பிறகு ஒரு சொற்ப பால்மாக்களை பெற்றிருந்தார் அந்த மேலதிக அரச அதிபர்.

காலை எட்டு மணிக்கு தான் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தும், எங்கே தங்களுக்கு கிடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் காலை நான்கு மணிக்கே குழந்தைகளுடன் வந்து வீதியில் படுத்திருந்த அந்த தாய்மார்களின் வரிசை தான் அது.

பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள். அவர்கள் சாப்பிட்டால் தானே குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும். அவர்களே சாப்பிட்டு எத்தனை நாட்களோ..இதுக்கு எல்லாம் எப்ப தான் விடிவோ..?

அந்த குழந்தைகளின் பசி குரல் என் நெஞ்சுக்குள் பிசைந்தது. இந்த மக்களை காக்க வேண்டிய நாங்கள் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறோம்.

இல்லை ..இல்லை விட கூடாது இண்டைக்கே களத்துக்கு போய்விட வேண்டும். என்னுள் உறுதி எடுத்து கொண்டேன்.

காலை ஏழரை மணி இருக்கும், கொடிய சிங்கள இராணுவம் ஏவிய ஐந்துக்கும் மேற்பட்ட ஐஞ்சிஞ்சி மோட்டர்கள் அந்த தாய்மார்களின் வரிசையை தாக்கியது.

கையிலே குழந்தைகளுடன் எங்கே ஓடுவது என்று தெரியாமல், விழுந்து படுக்க கூட முடியாமல் தவித்த அந்த அம்மாக்களின் மன நிலையை கொஞ்சமாவது உணர்ந்து பாருங்கள் உறவுகளே.

ஒரு நிமிட நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

இப்போதும் குழந்தைகள் ஓலங்கள்..

இது பசி அழுகை இல்லை..மரண ஓலங்கள்..

காயபட்டவர்களை தூக்க எங்கள் முகாமில் இருந்து நாங்களும் ஓடினோம்.

பிஞ்சு குழந்தைகள் சிதறி கிடந்தன.

குழந்தைகளை காப்பாற்ற தங்கள் உயிர்களை பலி கொடுத்திருந்தார்கள் பாச அம்மாக்கள்..

இரத்தமும்,சிதறிய உடற்பாகங்களும்,ஓலங்களும் அம்மா இறந்து விட்டா என்று தெரியாமல் தாயின் முகத்திலே அடித்து அழும் குழந்தைகளும், அந்த இடத்தை பார்த்த எந்த ஒரு மனிதனாலும் வாழ் நாள் முழுவதும் நித்திரை கொள்ள முடியாது.

அங்கெ ஒரு ஓரத்தில்..தலையில் இருந்து இரத்தம் வடிந்தபடி இறந்து கிடந்த தாயின் முலைகளை சப்பியபடி ஒரு குழந்தை..

(தொடரும்)

பாகம் பதினான்கு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

பாகம் பதினான்கு

அந்த கடல்நீரேரியின் மறுபுறத்தில் அமைக்கபட்டிருந்த கிடுகு வேலியையே பார்த்து கொண்டிருந்தேன்.

புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்தது ஒரு முந்நூறு மீற்றர் தொலைவில்..

ஒரு இடிந்த கல் வீட்டுக்கு நடுவில்..

பச்சை குழைகளால் உருமறைப்பு செய்தபடி எங்கள் நிலை இருந்தது.

ஆனந்தபுரம் வரலாற்று சமருக்கு பின்னர், எங்கள் தானை தளபதிகளை எதிர்கொள்ள திராணியற்று இரசாயன ஆயுதங்கள் கொண்டு அழித்து, கடல் நீரேரியின் மறுபுறத்தை கைப்பற்றியிருந்தான் எதிரி.

அங்கிருந்து கொண்டு மக்கள் வாழிடங்களை நோக்கி சரமாரியான எறிகணை,குறிசூட்டு,விமான தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தான்.

கடல்நீரேரியை கடக்க விடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

மருத்துவ ஓய்வு காலபகுதியில் வழங்கபட்ட குறிசூட்டு பயிற்சியின் பின்னர், ஒரு குறிசூட்டு (சினைப்பர்) ஆயுதத்துடன் நான் காத்திருந்தேன் எதிரின் வரவுக்காக.

ஒவ்வொரு நாள் அதிகாலை வேளையிலும் ஒரு இருபது முப்பது பொதுமக்கள் நீரேரியை கடந்து இராணுவத்திடம் செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அதை தடுத்து நிறுத்த சொல்லி கட்டளை இருந்தாலும், அவர்களின் நிலையை பார்த்து நான் போக அனுமதிப்பதுண்டு.

அங்கிருந்த எல்லா மக்களுக்கும் புலிகளும் அவர்களின் நடவடிக்கைகளும் பிடித்திருக்கவோ அல்லது புரிந்து கொண்டிருக்கவோ அவசியம் இல்லைதானே.

அதைவிடவும் எவ்வளவோ மக்கள் புலிகளுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கும்போது, ஒரு பத்திருபது மக்கள் இராணுவத்திடம் ஓடுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் எங்கட பக்கம் இருப்பதை விட இராணுவத்தின் பக்கம் இருப்பது தான் சிறந்தது என்று எண்ணி, அவர்களை நான் கண்டும் காணாமலும் ஓட விடுவதுண்டு.

இரவிரவாக கழுத்தளவு தண்ணீரில் எங்கள் நிலை கடந்து எதிரியிடம் போன மக்களை விடியும் வரை தண்ணீரிலேயே நிறுத்தி வைத்திருப்பான் எதிரி.

நன்றாக விடிந்தபின்னர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அனைத்து ஆடைகளையும் களைந்து தான் தனது நிலைக்குள் எடுப்பான். இதெல்லாம் மக்கள் சொல்லி தான் கேள்விபடிருந்தேன்.

ஆனால் அன்று அதிகாலை என் குறிசூடு கருவியின் தொலைநோக்கியூடாக பார்த்த போது தான், எங்கள் மக்கள் எதிரியிடம் படும் அவலத்தை நேரடியாக கண்டேன்.

தந்தைக்கு முன்னால் வயது வந்த மகளின் உடையெல்லாம் களைந்து நிர்வாணமாக, கணவனுக்கு முன்னால் மனைவியின் உடைகளைந்து நிர்வாணமாக , எங்கள் மக்கள் எதிரியிடம் சரணடைவதை நேரிலே கண்டேன். கட்டிய கணவனுக்கு முன்னால் கூட உடை மாற்றாத இனத்தில் பிறந்து, கண்டவனுக்கு முன்னால் நிர்வாணமாக எங்கள் மக்கள் நிற்பதை பார்க்க எல்லாரையும் சுட்டு கொன்றுவிடலாம் என்று கூட தோணியது.

எங்கே ஒரு இராணுவ வீரன் தலை காட்டி இருந்தாலும் என் ஆத்திரம் அவன் தலையில் தெரிந்திருக்கும். என்ன செய்வது எல்லாம் எங்கள் மக்கள் என்று, ஆயுதத்தை மடித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன்.

இதை போய் எங்கள் மக்களிடம் சொன்னாலும் சிலர் நம்ப மாட்டார்கள். எங்களை இராணுவத்திடம் போகவிடாமல் தடுப்பதற்கான ஒரு யுக்தி என்றே சொல்லுவார்கள்.

வேண்டாம்..என் சகோதரியின் நிர்வாண உடலை பார்த்ததை ஊரெல்லாம் சொல்லி, அவளை மேலும் நிர்வாணமாக்க நான் விரும்பவில்லை.

உயிரை விட மானம் தான் பெரிது என்று வாழ்ந்தவர்கள் எங்கட பக்கம் இருக்க , மானம் என்ன மானம் இண்டைக்கு வரும் நாளைக்கு போகும் என்று, உயிரை காக்க எதிரியின் பக்கம் போனவர்களை , தனது காமபசிக்கும், கூலி வேலைகளுக்கும் பயன்படுத்தினான் எதிரி.

அன்றும் அப்படிதான்...

பொக்கணையை அண்டிய நீரேரிபகுதியில்..

அதிகாலையில் பசியாலும், இரண்டு மூன்று நாள் இடைவிடாமல் கண்விழித்து காவல் இருந்ததாலும் சற்று கண்ணயர்ந்த போராளிகளின் நிலையை உளவு பார்த்து ஒரு மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சென்றடைந்தது.

அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை.ஒரு இராணுவ அணி அவர்களை வந்த பாதையை காட்டுவதற்காக கூட்டிவந்திருந்தது . பாதை காட்ட மறுத்த மக்களை சுட்டு அடிபணிய வைத்தது . வந்த எதிரி அணி அந்த நிலையில் கண்ணயர்ந்திருந்த போராளிகளை கழுத்தை வெட்டி கொன்றுவிட்டு, எங்கள் நிலைகளை ஊடறுத்து ஒரு பெரிய படை நடவடிக்கையை செய்தான்.

வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதியும், சாலை பொக்கணை மாத்தளன் பகுதியும் துண்டாடப்பட்டது. அம்பலவன் பொக்கணை ஊடக இராணுவம் கடற்கரை வரை சென்று மக்களை துண்டாடியது.

தொடர்பு அறுபட்ட நிலையிலும் போராளிகள் தீரமாக போராடினார்கள். இராணுவம் இடைவிடாத செல் மழை பொழிந்தது. ஒரு கோர தாண்டவமாடியது. இராணுவம் வந்துவிட்டதை உணர்த்த மக்கள் புலிகளின் பகுதிக்கு ஓட முற்படுவதை தடுக்க இரசாயன ஆயுதங்கள், கொத்து குண்டுகள் கொண்டு மக்களை கொன்று குவித்தது ராணுவம்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை விடிருந்தார்கள். தெருவெங்கும் பிணக்கோலங்கள். உடம்பில் பட்ட இரசாயன (பொஸ்பரஸ்) குண்டின் எரிவு தாங்காமல் கடலுக்கு ஓடி வந்து பாய்ந்தார்கள். முகங்கள் எரிந்த நிலையில் வழி தெரியாமல் பிஞ்சு குழந்தைகள், கடற்கரை மண்ணில் முகம் புதைச்சு தேய்த்தார்கள்.

எங்கும் மரண ஓலமும், புகை மூட்டங்களும், காணமல் போன தங்கள் உறவுகளின் பெயரை கூவி கத்தியபடி பித்து பிடித்தது போல மக்கள், அங்கும் இங்கும் அலைந்து ஓடினார்கள்.

நாங்களும் எங்கள் நிலையும் பிரதான எங்கள் தளத்திலிருந்து துண்டாடப்பட்டிருந்தது. தரைவழி தொடர்பறுந்த நிலையில் நாங்கள் மாத்தளன் துண்டுக்குள் மாட்டுபட்டிருந்தோம்.

எங்களுக்கான கட்டளைகள் தொடர்ந்து கிடைத்து கொண்டிருந்தது. தப்பிபோக வழி இல்லாமல் ராணுவத்திடம் சரணடையும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி நிலைமை சொல்லி, கடல் வழியாக அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுப்புமாறு பணிக்கபடிருந்தோம்.

சாரை சாரையாக ராணுவத்திடம் சென்று கொண்டிருந்த மக்களிடம் ஒரு சொற்ப போராளிகளுடன் நானும் கெஞ்சி கொண்டிருந்தேன்.

"அண்ணே நில்லுங்கோ போகாதேங்கோ.."

"அக்கா.. அக்கா.. தயவு செய்து நில்லுங்கோ ஆமியிடம் போகாதேங்கோ..."

"பொறுமையா இருங்கள்..இன்னும் கொஞ்ச நாளில் எங்களுக்கு விடிவு கிடைச்சிடும்.."

என்று ஆண் பெண் போராளிகள் பேதமின்றி மக்களின் கால்களை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தார்கள்.

அனைவரும் முடிவு செய்து கைகோர்த்து மக்களை மறித்தோம். எங்களை தள்ளி விழுத்தி எங்களுக்கு மேலால் மக்கள் ஏறி சென்றார்கள்.

நான் ஒரு ஐயாவை மறித்தேன். இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு வந்திருந்தார்.

பசியால் மெலிந்து எலும்புகள் தெரிந்த இரண்டு குழந்தைகள்..

தலை எல்லாம் நரைத்து எலும்பு கூடாக அந்த ஐயா..

"ஐயா தயவு செய்து போகாதீங்கள்.."

"நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக புலிகளின் பக்கம் நின்றால் தான் உலகம் எங்களுக்கு ஒரு தீர்வை தரும்"

"தம்பி என்னடா விசர் கதை கதைக்கிறாய்..இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்தால் நாங்கள் சாப்பாடு இல்லாமலே செத்து போயிடுவம், அதுக்கு பிறகு உங்கட தீர்வை கொண்டே என்ன செய்ய போறீங்கள்"

"அப்படி இல்லை ஐயா, உங்களுக்காக தானே நாங்கள் வீட்டை எல்லாம் விட்டிட்டு போராட வந்தனாங்கள், நீங்கள் போய்விட்டால் இவ்வளவும் தான் மக்கள் என்று, எங்களோட இருக்கிற மக்கள் எல்லாரையும் புலி என்று அழிச்சிடுவான், இது நீங்கள் மிச்ச மக்களுக்கு செய்கிற துரோகம் இல்லையா"

"தம்பி எனக்கு துரோகமா இல்லையா என்று வாதிட கூட தெம்பு இல்லை. இந்த பிள்ளைகளின்ட அம்மா, அப்பா எல்லாரும் செத்து போட்டினம், என்ர மனுசி கூட நேற்று தான் செல்லடியிலே செத்தவ..செல்லுக்கு கூட தாக்கு பிடிக்கலாம்.. சாப்பிடாமல் பசிக்கு தாக்குபிடிக்க முடியலை தம்பி"

"தம்பி எனக்கு நல்லா தெரியும்.நீங்கள் எங்களுக்காக தான் போராடுறீங்கள். சிங்களவன் கெட்டவன் என்றும் தெரியும். ஆனால் இப்போ பசிக்கு, உயிரை காப்பாத்த வேற வழி தெரியலை தம்பி."

"தம்பி எனக்கும் தமிழீழம் வேண்டும். நீங்கள் போராடி வெல்ல வேண்டும். நான் கடவுளை ஒவ்வொருநாளும் கும்பிடுறேன். நீங்கள் நாளைக்கு ஆமிக்கு ஓடி எங்கள் வீட்டுக்கு வந்தால் ஒளிச்சு வைச்சு சாப்பாடு குடுக்கிறேன். எனக்கு இந்த மண் மீது இப்பவும் பற்று இருக்கு.. என்னை போக விடு தம்பி. மூன்று உயிரை காப்பாத்தின புண்ணியமாவது உனக்கு கிடைக்கும்" என்று என் காலில் விழுந்து அழுதார்.

சொல்லுங்கள் உறவுகளே..இராணுவத்திடம் ஓடிய மக்கள் எல்லாரும் எங்களை வெறுத்த மக்களா..? எங்களை வேண்டாம் என்று ஓடிய மக்களா..??

எங்களை உயிராய் நேசிச்ச மக்கள் தான்..பசியாலும் பட்டினியாலும் சிங்கள் கொலைவெறி அரக்கனின் கோர தாண்டவத்தாலும் உயிரை காப்பாற்ற தான் எதிரியிடம் ஓடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.

அவர்கள் எதிரியிடம் விரும்பி ஓடனும் என்றால் மன்னாரில் சண்டை தொடங்கும்போதே ஓடி இருப்பார்களே. இவ்வளவு காலம் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு எங்களுடனே வரவேண்டிய தேவை என்ன..??

"ஐயா ..எழும்புங்கோ ..நீங்க போயிற்று வாங்கோ..நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் அப்போ திரும்பி வாங்கோ .."

அவர் கண்ணில் மட்டுமல்ல என் கண்ணிலிருந்தும் ஒரு துளி கண்ணீர் அந்த மண்ணை நனைத்தது..

(தொடரும்)

பாகம் பதினைந்து இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

பாகம் பதினைந்து

மக்கள் அலையலையாக சென்று கொண்டிருந்தார்கள்.

தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், வயதானவர்கள் காயமடைந்தவர்களை, துணிகளில் கட்டி தூக்கியபடியும், ஒடுங்கிய பாதையூடாகவும், கடல்நீரேரியூடகவும் மக்கள் ராணுவத்திடம் சென்ற வண்ணம் இருந்தார்கள்.

நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.

"கடவுளே என் அம்மா அப்பா, என் குடும்பம் இப்படி இராணுவத்திடம் போக கூடாது" என்று.

மனசை எதுவோ பிசைந்தது. எங்களின் இயலாமை அதில் தெளிவாக தெரிந்தது.

கொள்கைக்கும் உயிராசைக்கும் இடையில் போட்டி நடந்தது.

மானத்துக்கும் மனசுக்கும் போராட்டம் நடந்தது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மனசில், கொண்ட கொள்கையை விட, தமிழனின் மானத்தை விட, உயிர் மேல் இருந்த ஆசை பெருசாகபட்டது.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. நாங்கள் யாருக்காக போரடினமோ அந்த மக்கள் கூட்டத்தில் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்து என்னை அதிர வைத்த சம்பவம் அது.

ஆமாம். மக்களை போகவேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்போராளிகளை ஒரு மக்கள் (??) கும்பல், கதற கதற தூக்கி சென்று ராணுவத்திடம் ஒப்படைத்தது. அந்த கொலைவெறி பிடித்த ராணுவ அதிகாரி, அந்த மக்களுக்கு முன்னாலேயே இரு பெண் போராளிகளையும் தலையில் சுட்டு கொன்றான்.

மக்களுக்காக தங்கள் உயிரையும் மதிக்காது போராடிய அந்த போராளிகள், தங்கள் சொந்த மக்களாலேயே தூக்கி சென்று கொடுத்த போதே பாதி உயிரை விட்டிருப்பார்கள். அந்த துப்பாக்கி சன்னங்கள் அவர்களின் மீதி உயிரையும் எடுத்து, எங்கள் தாய் மண்ணில், ஈரமும் உப்பும் நிறைந்த அந்த வெளியில் அவர்கள் உடலை சாய்த்தது.

தூக்கி சென்று கொடுத்த மக்கள் கும்பலுக்கு ஒரு ஆத்ம திருப்தி. ஒரு பழிக்கு பழி வாங்கிய மகிழ்ச்சி. யாருடைய கோபத்தை வேறு ஒருவரிடம் காட்டிய சந்தோசம்.

ராணுவத்திடம் பாராட்டு வாங்கி மென்பானம் வாங்கி குடித்தார்கள்.

மக்களுக்காக போராடியதை தவிர, எதுவுமே அறியாத அந்த இளம் பெண் போராளிகளின் உடல்கள், உள்ளே வந்த மக்களின் பார்வைக்காக போடப்பட்டிருந்தது.

நெஞ்சையே கொதிக்க வைக்கும் இந்த சம்பத்தை சிலர் மனம் பதைபதைக்க, சிலர் இவங்களுக்கு வேண்டும் என்று சொல்ல, சிலர் கண்டும் காணததுமாக போக, சிலர் வழி தெரியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு போனார்கள்.

அந்த மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக எதிரியிடம் சரணடைந்த போராளிகள் கூட எதுவுமே நடக்காதது போல வாழாவிருந்தார்கள்.

சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்கள் சகோதரிக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்...? உங்களுகாக தங்கள் ஆசைகள், உறவுகளை விட்டுவிட்டு போராட வந்ததுக்கு இது தான் கைமாறா ..??

அந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்..மனம் திறந்து சொல்லுங்கள்.

மக்களிடம் கொக்கரித்து கொண்டிருந்த சிங்கள வெறியன்களுக்கு பாடம் படிப்பிக்க விடுதலை புலிகளின் கரும்புலி அணி தீர்மானித்தது.

சாதாரண பெண்கள் போல சட்டை அணிந்து, உடுப்பு பைகளுடன் இரண்டு பெண் கரும்புலிகள் ராணுவத்திடம் சரணடைய சென்றனர். தங்களை முன்னாள் போராளிகள் என்று இராணுவத்திடம் அறிமுகப்படுத்த அவர்களை தனியே கூட்டிகொண்டு, ராணுவ சகாக்கள் மத்தியில் விடும்போது, அந்த வீர தமிழிச்சிகள், தங்களை வெடிக்க வைத்து சிங்களவனுக்கு மானம் என்றால் என்ன, கொள்கை என்றால் என்ன என்று காட்டினார்கள்.

அந்த இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட சிங்கள இனவெறியன்களும் சிதறிப்போய் இருந்தார்கள்.அந்த இரு இளம் பெண் போராளிகளை கதற கதற சுட்ட அதிகாரிகள் உட்பட.

கொலைவெறி கொண்ட சிங்கள ராணுவம் எழுந்தமானதுக்கு மக்களை நோக்கி சுட தொடங்கியது. இனி தப்பி விட்டோம், இனி சாகமாட்டோம் என்று நினைத்த நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே உயிரை விட்டார்கள்.

விடுதலைப்போராட்டம் என்பது தனியே உயிர் சம்பந்தபட்ட விடயம் அல்ல. அது மானம் கொள்கை சம்பந்தபட்டது.

சிங்களத்தின் தலைப்பு செய்தி : -

மக்களோடு மக்களாக வந்து புலிகள், தப்பியோடும் மக்களை தாக்கியதில் நாற்பது பொதுமக்கள் பலி.

எங்களை ஏற்றி செல்லவந்த படகுகளில் ஏறி நாங்கள் வலைஞர்மடத்தை அடைந்தபோது மணி பன்னிரண்டை தாண்டி இருந்தது.

அங்கும் மக்கள் பதட்டமாக கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு கடற்கரை வழியாக முள்ளிவாக்கால் நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள்.

இராணுவத்தின் செல்களும், துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு வந்த சன்னங்களும் மக்கள் உயிர்களை குடித்து கொண்டிருந்தது.

என் தோளில் துப்பாக்கியை சுமந்தபடி, வலைஞர்மட வைத்தியாலைக்கு முன்னால் இருந்த மண் பாதை வழியாக, இராணுவம் வலைஞர்மடத்தை நோக்கி முன்னேறுவதை தடுக்க பயணித்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு கர்ப்பிணிதாயை ஏற்றி கொண்டு, முகப்பு ஒளியை பாய்ச்சிய வண்ணம், ஒலி எழுப்பியபடி ஒரு நடுத்தர வயது கணவன், பிரசவ வலிதாங்காத தன் மனைவியை உந்துருளியில் ஏற்றிய வண்ணம் கத்தி வழி கேட்டபடி வந்து கொண்டிருந்தான்.

எங்கிருந்தோ வந்த சன்னம் ஒன்று அவன் தாடையை கிழித்து கொண்டு போனது. மனைவியுடன் வீதியில் விழுந்தான். வாய்க்குள் இருந்து தண்ணீர் குழாயில் வருவது போல குருதி கொப்பளித்து பாய்ந்து கொண்டிருந்தது. மூக்கின் கீழ்பகுதி தாடையுடன் இல்லை.

ஓஒ என்று கத்தி அலறிய அந்த கர்ப்பிணி மனைவி, தன் பிரசவ வலியால் ஒரு கையை தன் வயிற்றிலும், மறுகையை தன் கணவனின் வாயிலும் வைத்தபடி கத்தி அழுதாள்.

"அண்ணே யாராவது ஓடி வாங்கோ, ஆராவது வந்து காப்பாத்துங்கோ" என்று தன் பிரசவ வலிக்கும் மத்தியில் பலமாக கத்தினாள்.

தொடர்ந்து வந்து கொண்டிருந்த சன்னகளுக்கு மத்தியில், யாருமே அவர்களுக்கு கிட்டே போகவில்லை.

நான் அந்த இடத்துக்கு விரைந்தேன். வாய் பிளந்து குருதி வருவதால் என்னால் கட்டுப்போட முடியவில்லை. இன்னும் ஒரு மூன்னூறு மீட்டரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டும்.

அவரது உந்துருளியை நிமிர்த்தி அவரை உட்கார வைத்து நான் முன்னால் ஏறி கொண்டேன். இப்போ இன்னொருவர் பின்னால் இருந்து அவரை பிடிக்கவேண்டும். அந்த கர்ப்பிணி தாயால் இரண்டு பக்கமும் காலை போட்டு இருக்க முடியாது. அருகில் இருந்தவர்களை கெஞ்சினேன். யாருமே உதவிக்கு வரவில்லை.

எனக்கு ஒரு கயிறு அல்லது துணி வேண்டும் என்று கேட்டேன். அந்த கர்ப்பிணித்தாய் ஓடி சென்று, ஒரு தரப்பாள் கூடாரத்தில் இருந்த சேலையை உருவி வந்து என்னுடன் தன் கணவரை சேர்த்து கட்டினாள். நான் வைத்தியசாலைக்கு அவரை கொண்டு வர அந்த பெண் கத்தியபடியே பின்னால் ஓடி வந்தாள்.

அவரை கொண்டு போய் நான் வைத்தியரிடம் ஒப்படைத்த போது, அந்த கணவனின் உயிர் பிரிந்திருந்தது.

அந்த கர்ப்பிணி மனைவியை எதிர்கொள்ள மன தைரியமற்ற நான் ஒரு ஒரமாக வெளியேறினேன்.

என் உடலெங்கும் அப்பி இருந்த அவரின் இரத்ததை, ஒரு தொகுதி இலையான்கள் மொய்த்து கொண்டிருந்தன.

(தொடரும்)

பாகம் பதினாறு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அபிராம் உண்மையிலேயே பொது மக்கள் இரு பெண் போராளிகளை பிடித்து ஆமியிடம் கொடுத்தார்களா? அல்லது உங்கள் கற்பனையா?...உண்மையாயின் அதற்குப் பழி வாங்கவா இரு கரும்புலி போராளிகளை அனுப்பி ஆமியுடன் சேர்த்து வேறு அப்பாவி பொது மக்களை கொண்டீர்கள் இது நியாயமா?

Link to comment
Share on other sites

சில கேள்விகளுக்கு சில வேளைகளில் பதிலளிக்க முடியாது.

இன்றைய நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.