Jump to content

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்


Recommended Posts

நான் என உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும்பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெளவேண்டும். அங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். - ஈகைச்சுடர் திலீபன்.

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனுக்கு வணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் - தமிழீழ விடுதலைப் புலிகள்

உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையாளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

26/09/2010

தமிழீழம்

எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் வழியில் தொடர்ந்து போராடுவோம்

இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்பு தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகக் காலி முகத் திடலில் நடந்த சத்தியாகத்துடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் ஆரம்பிக்கிறது. காடையர்களின் தாக்குதலில் அன்று தமிழன் சிந்திய குருதி இன்று கண்ணீராகப் பாய்கிறது.

திலீபன் என்பது காலம் காலமாக இடைவெளியின்றித் தொடரும் போர்முறை. இதனால் எமது விடுதலைப் போர் தடங்கலின்றித் தொடரும் ஈழத்தமிழர் வாழ்விலும் உணர்விலும் தடுமாற்றமும் தளம்பலும் நிலவுகின்றன. எதிர்காலம் பற்றிய திகைப்பும் அச்சமும் எம்மைப் பீடித்துள்ளன சொந்த மண்ணை இழந்து எதிலிகளாக நாடு கடந்து நாடு தாவி அலைகிறோம்.

உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையா ளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக் கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும்.

போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் எமது விடுதலைத் தாகம் எமக்குத் துணை நிற்கும் சவால்கள் நிறைந்த காலகட்டம் என்பது உண்மை சாவல்களைச் சமாளிக்கும் வலுவாய்ந்த ஆற்றல் எமக்கு இருப்பது அதினிலும் உண்மை.

எமது குரல் வலுவடைய வேண்டும் எமது கவன ஈர்ப்புப் போராட்டங்கள், பிரசார உத்திகள், கருத்துப் போர்கள், எமது இனக் கோரிக்கையை வலுப்படுத்தும் வழித் தடங்கள் கூர்மை பெற வேண்டும் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் பெயரால் நாம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் நிட்சயம் வெற்றி ஈட்டித்தரும்.

திலீபன் ஈழத்தமிழர்களின் போர் முறை பொது மானுடத்திற்கும் பொருத்தமான விடுதலை வழிகாட்டியாக அது இடம்பெறுகிறது. திலீபன் ஒரு சொல் மாத்திரமல்ல அது நலிவுற்ற இனங்களின் ஒட்டுறவாலும் இன்ப துன்பங்களாலும் உருவாக்கப்பட்ட உறுதியான விடுதலை பாதை.

சத்திய விரதம் மேற்கொண்டு வீர வரலாறாகிய தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் எமது மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://www.pathivu.com/news/13370/57//d,article_full.aspx

thilipan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் மட்டுமே இழந்த எமது உரிமைகளை மீட்டுத் தரும்

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் வழியில் தொடர்ந்து போராடுவோம்

வாத்தியார்

**********

  • Like 1
Link to comment
Share on other sites

தன் இனம் வாழ தன்னை மெழுகாய் உருக்கி (தீ) தியாகம் புரிந்த தியாக தீபத்துக்கு என் வீர வணக்கங்கள்....///

Link to comment
Share on other sites

http://video.google.com/videoplay?docid=4973319842600269537#

இந்த மாவீரன் ஒரு காந்தீய, இல்லை அகிம்சை போராளி. குழந்தைகள் முதல் முதியோர் வரை எதிரி முதல் பகைவர் வரை நேசித்த மதித்த ஒரு உன்னத ஒப்பற்ற மாவீரன் !

http://www.tamilcanadian.com/page.php?cat=120&id=5963

வீர வணக்கங்கள் !!!

Edited by akootha
Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப்போராளி திலீபன் நினைவு நாள்

விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்க அஞ்சலி

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.09.2010) ஞாயிறு காலை 10.30 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை, வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி திலீபன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். நிறைவாக தொல்.திருமாவளவன் திலீபன் குறித்த நிறைவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தனிச்செயலாளர் பாவலன், சேகுவேரா, வெளியீட்டு மைய மாநில துணைச் செயலாளர் நீல.தமிழேந்தி உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திலீபன் நினைவு நாளையொட்டி, தென் சென்னை மாவட்ட மருத்துவர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாமையும் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை மாவட்டச் செயலாளர் மருத்துவர் செ.முரளிதரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

http://www.thiruma.in/2010/09/blog-post_26.html#more

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4208116526_eb9d9fb58d_m.jpg

அகிம்சை போராட்டம் கூட.... இந்தியாவிடம் எடுபடாது, என்பதை நிரூபித்த மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animated_candle1.gif

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • 11 months later...

"செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கோ

திலீபனின் பசி அடங்கும்"

என்ற பாடலின் உட்புக முடியா உணர்வுக் குவியலில் மீண்டும் சிக்கிக் கொள்ளும் ஒரு நினைவு நாள்

எனக்கு அப்போது 13 வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். பசி என்றால் என்ன என்று தெரியாமல் என் அப்பன் என்னை வளர்க்கும் போது ஒரு யுகத்தின் பசி உணர்வை தன் இரைப்பையுள் கொண்டு எமக்குள்ளும் விடுதலை பசியை ஊட்டியவன் திலீபன்

அவனது சாவு ஏற்படுத்திய மரண வலி இன்றும் என்னுள் உணர முடிகின்றது

******************

இன்று செந்தமிழ் ஈழத்தின் அனைத்து கதவுகளிலும் எதிரியின் துவக்கு நுனி எட்டிப் பார்க்கின்றது

திலீபன் அண்ணா ஒவ்வொரு வீதி தோறும்

ஒவ்வொரு படலை தோறும்

ஒவ்வொரு வாசல் தோறும்

அகோரமாய் பசிக்கும் தன் வயிறு தாங்கி

வந்து போகின்றான்

உங்களுக்கு அவனை அடையாளம்

தெரிகின்றதா

ஒற்றுக் கோவணம் கூட இன்றி

ஆன்மா எல்லாம்

காயங்கள் சுமந்து

அகோரப் பசியில்

வந்து நிற்கின்றான்

சொல்லுங்கள் மக்களே

சொல்லுங்கள்

அவன் கனவின்

ஒவ்வொரு மூலையிலும்

நாம் தீப்பிடிக்க மறுத்து

கருக்கிய சம்பவங்களை சொல்லுங்கள்

அவனது அகோரப் பசிக்கும்

தகிக்கும் தாகத்துக்கும்

பெறுமதி இன்றி

எதிரியின் காலை நாம்

தொழும் சோகத்தையேனும்

சொல்லுங்கள்

அவனது நினைவு தினம்

கூட நினைவை விட்டு

அகன்ற தினமாய்

போன் வாழ்வின் இருப்பை

சொல்லுங்கள்

*************

"செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கோ

திலீபனின் பசி அடங்கும்"

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணா மரணத்தை வென்ற ஒருவர் என்பதுக்கும் மேலாக

அந்த மரணத்தையே ஒவ்வொரு அணுவிலும்

உணர்ந்த பேரியக்கத்தின் பேர் சொல்லும் ஒற்றை நாடி அவன்

***********

அவன் சுவாசித்த காற்றின் எச்சத்தை சுவாசித்த பெருமை கொண்ட சந்ததி நான் என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை சந்தோசம் எனக்கு!!

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கினையடைய நேர்மை மட்டுமே உதவாது என உணர்த்திய நாள்.

எனது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thelipa.jpg

வீர வணக்கங்கள்

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா திலீபா ...

முள்ளிவாய்காலின் பின்னான உன் நினைவு தினங்களில்

என் நெஞ்சிலெழும் வலியெல்லாம்

நீ கண்ட கனவுகள், உனது இலட்சியம்,

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் - சுதந்திர தமிழீழம் மலரட்டும்

என்ற அந்த உன்னத வேண்டுகோள்

இவையனைத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு

இன்று சோரம் போன மனிதர்களாக வாழ்கிறோம் என்பது தான் :(

Edited by காட்டாறு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதமுடியவில்லை ஜயா

என்னவென்று எழுத

எதைத்தருவேன் என்று உறுதிகூற......

உங்கள் தியாகங்கள் வீண்போகாது

அதை நாம் மறவோம்

உங்கள் கனவு பலிக்கும்வரை நாம் அதற்காக உழைப்போம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.