Jump to content

மனிதாபிமானம் இல்லாதா மனிதர்கள்


Recommended Posts

கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் லண்டனில் உள்ள லூசியம் பகுதியில் ஒரு உணவு விடுதிக்கு போயிருந்தேன்.

அங்கு நடந்த சம்பவம் என் மனசை பெரிதும் பாதித்திருந்தமையால் நான் எப்படியும் அந்த சம்பவத்தை எழுதி இந்த பகுதியில் இணைக்க வேண்டும் எண்ணி இருந்தேன். நான் பார்த்த சம்பவம் மாதிரி நிச்சயம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும், உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வையுங்கள்... மற்றவர்களுக்கு உதவியாகவே இருக்கும்... வெளி நாட்டில் இருக்கும் சனம் பலர் இப்படி கஸ்ரப்படுகிறார்கள் என்று மற்றவர்களுக்கும் தெரியவேண்டும்...

அறுபது வயசு மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், முப்பத்தைஞ்சு வயசு மதிக்கத்தக்க ஒரு

மனிதனிடம் ( அதாவது அந்தக்கடையின் முதாளியிடம்) கெஞ்சி கொண்டிருந்தார்.

" தம்பி ! நான் பண்ணியது தப்பு தான். தயவு செய்து காசை கொடுங்கள். இனிமேல் நான் இப்படி தப்பு பண்ணமாட்டேன். இந்த முறை மட்டும் மன்னித்துவிடுங்கள்" என்று பெரியவர் கெஞ்ச, "எனக்கு முன்னாலே நிக்காதே. முதல்ல கடையைவிட்டு போய்விடு" என்று மரியாதை இல்லாமல் பேசி கொண்டிருந்தான் அந்த நடுத்தரவயது மனுஷன்.

அந்த பெரியவர் தன்னிலை உணர்ந்து அழுது கொண்டிருக்க, அந்த உணவகத்துக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், "ஏன் அவர் உங்களை இப்படி ஏசுகிறார், நீங்கள் எதற்கு அழுகிறீர்கள், அப்படி என்ன தான் தப்பு செய்தீர்கள்" என்று வினாவ, "அது வந்து...நான் முதலாளிக்கு தெரியாமல், அரசாங்க உதவி பணம் எடுத்தது தான் தப்பு...நான் பண்ணியது தப்புதான். ஆனால் இந்த முதலாளி மணித்தியாலத்துக்கு இரண்டு பவுண்ட் படி தருவதாக தான் என்னிடம் ஒப்பந்தம் செய்து, நான் கிழமைக்கு ஐம்பத்திரண்டு மணித்தியாலம் செய்திருக்கிறேன், அந்த பணத்தை கூட கொடுக்காமல், இந்த தப்பை சொல்லி என்னை போக சொல்லுறார்" என்று விளக்கம் அளித்தார்" அந்த முதியவர்.

"அதையும்விட ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லியும் ஓய்வெடுக்க கூட விடாமல் நாள் முழுக்க நின்றபடியே இந்த தள்ளாத வயதில் வேலை செய்தும்.. அந்த பணத்தை கூட தர மறுத்து என்னை கேவலமாக திட்டுறாரே என் முதலாளி ..எனக்கு இந்த நாட்டில் வதிவிட அனுமதியும் இல்லாமல் வேறு இடங்களில் வேலையும் இல்லாமல் அலையும்..என் நிலையை உணர்ந்து தான் நான் அழுகிறேன்" என்று கூறிய படியே விக்கி விக்கி அழுதார்.

எனக்கு அதற்கு மேல் அந்த கடையில் நிற்க மனம் இல்லாமல் , உணவும் வாங்காமல் திரும்பி விட்டேன். ஒரு சில மணித்துளிகளின் பின் நான் அந்த தெருவில் மீண்டும் அந்த முதியவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலையில்,கையிடுக்கில், மறு கையில் துணி பைகளுடன், ஊரிலே இடம்பெயரும் மக்களை போல அந்த முதியவர் உடமைகளை சுமந்தபடி என்னிடம் புகைவண்டி தரிபிடத்துகான வழி கேட்டார். நான் அவருக்கு வழியை காட்டிவிட்டு மனசிலே வலியுடன் வீடு திரும்பினேன்.

ஆகக்குறைந்தது மனிதாபிமானத்தையும் இழந்தா இருக்கிறோம் எம் இனத்திலே..???

உண்மையிலே கேடு கெட்ட இனம் என்றால் அது நம் இனம்தான்... எழுத்திலும் வாய் சொற்களிலும்தான் நாம் நல்லவர்கள் போல் வாழுகிறோம்.... நம் வாழ்க்கை நம் குடும்பம் என்று வரும்போது எல்லோரும் சுயனலம் பிடித்தவர்களாகவும் மனிதாபிமானம் இல்லாதா மிருங்கள் போல்தான் நடக்கிறோமா என்று எண்ணத்தோன்றுகிறது,,,,

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் முதியவருக்கு காட்டிய பரிவுக்கு நன்றி தோழர் சுஜி... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் இனக் குணம் என்று தான் சொல்ல வேணும். அகதியாய் வந்தவனை சட்டரீதியாய் வந்தவன் குறைத்து மதிப்பிடுவதும், கொஞ்சம் வெளிநாட்டில் படித்தவன் உள்நாட்டில் படித்து விட்டு இங்க வந்து தகுதி குறைந்த வேலை செய்பவனை ஏளனமாய்ப் பார்ப்பதும் எங்கள் "அர்த்த ராத்திரியில் பவுசு" வந்த அற்பத் தமிழர்களிடையே தான் அதிகம். உங்கள் இரக்கம் நல்லது. இதற்கு மேல் போய் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். உணவகத்தில் சுத்தம் சுகாதாரப் பிரச்சினை கொஞ்சமேனும் ஏதாவது இருப்பது போல தெரிந்தால் உரிய திணைக்களத்திற்கு தெரியப் படுத்தி கொஞ்சம் தொல்லை கொடுங்கள். அல்லது கடையின் பெயரை பகிரங்கமாக இங்கே எழுதி விடுங்கள்-எல்லோரும் பார்த்து அவரவர் தீர்ப்பைக் கொடுக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதியவரின் 52 மணித்தியால உழைப்பை குறைந்த சம்பளத்தில் உறிஞ்சி விட்டு...

சட்டம் கதைக்க வந்த கேடு கெட்ட தமிழனை நினைக்க காறித்துப்ப வேணும் போலை கிடக்குது.

அந்த கடைக்காரருக்கு, முதியவரின் 100 பவுண்ஸை கொள்ளையடிப்பதில் என்ன திருப்தியோ.... :D

ஜஸ்ரின் சொன்ன மாதிரி.... அவரின் கடை சுகாதாரக் கேடுகளை, சுகாதார அலுவலகத்துக்கு அறிவித்து விடுவதே நல்ல பாடம். முதிய‌வரை அந்தக்கடைக்காரரும் வேலை வாய்ப்பு அலுவலக்கத்துக்கு அறிவிக்காமல் தான் வேலைக்கு வைத்திருக்கின்றார். இவரைப் போல் வேறு பலரும் அங்கு வேலை செய்யக் கூடும். எதுக்கும் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கும் ஒரு தொலைபேசி எடுத்து சொல்லிவிட்டால் அவர்களும் அந்தக்கடைக்காரரை வடிவாக கவனிப்பார்கள்.

அந்த முதியவரை ஏமாற்றிய 100 பவுண்ஸை விட அதிகமாக தண்டப் பணம் செலுத்தட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக புலம் பெயர் நாடுகளீல் கடை,உணவங்கள் வைத்திருப்போர் இவரைப்[முதலாளியைப்] போல தான் உள்ளனர்....இவர்கள் கடைசி வரைக்கும் திருந்த மாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மனசுக்கு கஸ்ரமாய் இருக்கு :D ...கடைக்கரா முனாவுக்கு இருட்டடி குடுக்கனும்.. :D:)

Link to comment
Share on other sites

மனிதாபிமானம் என்ற சொல் இந்த சம்பவத்திற்கு பொருத்தமில்லை என்பது எனது கருத்து. இவன் பிணந்திண்ணி கழுகு. இப்படிப்பட்ட பிணந்திண்ணி கள்ளக்கூட்டம் எம் சமூகத்தின் ஒவ்வொரு வர்க்கத்திலும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் புரியும் மொழியிலே பாடம் படிப்பிப்பதே சிறந்த வழி. லூவிசியத்தில் உள்ள உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கூறுங்கள்.

http://www.lewisham.gov.uk/Business/TradingStandards/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மனசுக்கு கஸ்ரமாய் இருக்கு ^_^ ...கடைக்கரா முனாவுக்கு இருட்டடி குடுக்கனும்.. :D:)

பாவம் அந்த முதியவர். :D

இப்படித்தான் அவர்கள் முனா என்ற நிலையில் இருக்கின்றார்கள்

பையன் 26 சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பல் இடங்களில் நடக்கின்றன. தெய்வம் எதோ ஒரு வழியில் காட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதே ஊருக்கு வந்த புதிதில்.. ஒரு முக்கியமான.. தொலைப்பேசி அட்டைகள் விற்கும் தமிழர்கள் நடத்தும் கம்பனிக்கு வேலைக்கு ஆட் தேவை என்று போட கொலிடே ரைம் என்பதால் நானும் வேலைக்கு அப்பிளை பண்ணினன். அதன் பின்னர் தொலைபேசி வழி என்னை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்தார்கள். நேர்முகப் பரீட்சைக்குப் போய் 3 மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைக்கப்பட்டேன்.

அங்கே ஒரு நடுத்தர வயது தமிழ் பெண் இருந்தார். அவருக்கு எடுபிடியாக ஒரு தமிழ் ஆண். அந்தப் பெண் விசா இருக்கா.. வேலை செய்ய அனுமதி இருக்கா.. நசனல் இன்ஸூரன்ஸ் நம்பர் இருக்கா என்று கேட்டுக் கொண்டே இருக்க நானும் ஒவ்வொன்றா எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். எடுபிடி அவற்றை போட்டோ கொப்பி பண்ணிக் கொண்டிருந்தார்.

இறுதியில் சொன்னார் எல்லாம் சரி. வேலை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு10 மணிக்கு முடியும். ஞாயிறு தவிர மிச்ச நாள் எல்லாம் வேலை செய்ய வேண்டும் என்று. 30 நிமிசம் மதியம் போய் வரலாம் என்றார்... அதற்கு சம்பளம் தரமாட்டம்.

நான் கேட்டேன் என்ன வேலை.. சம்பளம் எவ்வளவு என்று....

அதற்கு சொன்னார் ஒரு கூடு (கடைகளுக்கு முன்னால் காட் வைச்சு விப்பினம்.. அந்தக் கூடு) காட் தருவம். அதை நீர் நாங்க சொல்லுற இடத்தில வைச்சு விற்க வேணும். ஒரு மாதம் வேலை பழக சும்மா வேலை செய்யும் அதற்குப் பிறகு உம்மால் நாங்க நிர்ணயிக்கிற அளவுக்கு பிசினஸ் செய்ய முடியுதோ என்று பார்த்திட்டு.. வேலையை தருவம்.. மாதம் 900 பவுண்ஸ் தருகிறேன் என்று.

ஒரு நாளைக்கு 13 மணி நேர வேலை. 6 நாள். 78 மணி நேரம் வாரத்துக்கு. மாதத்திற்கு 78x4 = 312 மணித்தியாலங்கள். அதற்கு தரப்படும் பணம்.. 900 பவுன்ஸ். அதாவது 3 பணுக்கும் குறைவு.

நான் சொன்னேன் கொலிடேயில் இந்தளவுக்கு வேலை செய்ய சட்டப்படி அனுமதி இருக்குது. அதே சட்டப்படி ஆகக் குறைந்த அரசின் சம்பள நிர்ணயம்.. மணிக்கு 5.65 பவுண்கள். நீங்கள் 3 பணுக்கு குறைவாத்தானே தாறீங்கள். அதுஎப்படி என்று...??!

நீர் இப்படி சட்டம் கதைச்சீர் என்றால் வேலை கிடைக்காது என்று மிரட்டினார் அந்தப் பெண். நான் சொன்னேன் எனக்கு உங்கட வேலை வேண்டாம்.. எனது பத்திரங்களை போட்டோ கொப்பி பண்ணி வைச்சிருக்கீங்க.. அவை உட்பட எல்லாத்தையும் திருப்பித் தாங்க என்றேன்.

அதற்கு அந்தப் பெண்.. இதுதான் நான் படிச்ச ஆக்களை வேலைக்கு எடுக்கிறதில்ல என்றார். நான் சொன்னேன் அது உங்கட பிரச்சனை. இப்ப நேர்முகப் பரீட்சை முடிஞ்சுது டொக்கிமென்ர தாங்கோ நான் போகனும் என்றேன்.

அவருக்கு கோவம் வர.. அதை எல்லாம் கொடும் என்று எடுபிடிக்கு சொல்ல அவரும் கொண்டு வந்து தந்தார்.

நான் நன்றி சொல்லிட்டு வெளிக்கிட்டு வந்துவிட்டேன்.

பின்னர் சில மாதங்களின் பின் அந்த நிறுவனத்தின் அந்தக் கிளை காட் விற்றதில் மோசடி என்று சொல்லி பூட்டப்பட்டு விட்டது.

அந்தப் பெண் இந்த தமிழ் கோவில்கள் எல்லாம் விழுந்து விழுந்து கும்பிடுற ஒருவர்.

அவர் சட்டத்துக்குப் புறம்பாக இந்திய மற்றும் பிற நாட்டு ஆட்களை குறைந்த விலைக்கு வேலைக்கு எடுத்தும் வந்தவர்.

அதுமட்டுமன்றி சட்டப்படி 8 மணித்தியாலம் வேலை செய்தால் 30 நிமிடம் சம்பளத்துடனான விடுப்பு அளிக்க வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் இன்னொரு 15 நிமிட நேர விடுப்பு அளிக்க வேண்டும்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது ஆயிரம் கேள்வி கேட்பவர்களுக்கு தங்களை சட்டம் எப்படி வரையறுக்கிறது என்பதை கவனிக்கிறதில்ல.

இந்தச் சம்பவத்தின் பின்னர் தமிழ் கடைகளுக்கு வேலை கேட்டு மட்டுமில்ல எதற்கும் போறதில்ல.

பொதுவாக தமிழ் ஆக்களுக்கு (அதற்காக எல்லா தமிழர்களும் அப்படி என்றில்லை. நல்லவங்களும் இருக்காங்க. ஆனால் கண்டுபிடிப்பது அரிது) மனிதாபிமானத்தோடு நடத்தவும் நடக்கவும் தெரிவதில்லை. குறிப்பாக தாழ்மையோடு நடக்கத் தெரியாது. ஒரு வகை மாயை திமிர் அவர்களுக்குள். அதை தமது இனத்தில் பலவீனமானவர்கள் மீது காட்டி தம்மைப் பற்றி தாமே பெரிய விம்பத்தை வளர்த்துக் கொள்வதும் அதில் வெட்டி பந்தா காண்பதும் இவர்களின் பாரம்பரியம்.

இதை தாயகத்தில் இருந்து எல்லா இடமும் காணலாம். வெட்டிப் பந்தாக் கூட்டம். இவர்களிடம் போய் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கிறது நம்ம தப்பு. இவர்களோடு கராரா இருக்கனும். அப்பதான் அடக்கி வாசிப்பினம். :D

Link to comment
Share on other sites

பொதுவாக தமிழ் ஆக்களுக்கு மனிதாபிமானத்தோடு நடத்தவும் நடக்கவும் தெரிவதில்லை. குறிப்பாக தாழ்மையோடு நடக்கத் தெரியாது. ஒரு வகை மாயை திமிர் அவர்களுக்குள். அதை தமது இனத்தில் பலவீனமானவர்கள் மீது காட்டி தம்மைப் பற்றி தாமே பெரிய விம்பத்தை வரைந்து கொள்வது இவர்களின் பாரம்பரியம்.

இதை தாயகத்தில் இருந்து எல்லா இடமும் காணலாம். வெட்டிப் பந்தாக் கூட்டம். இவர்களிடம் போய் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கிறது நம்ம தப்பு. இவர்களோடு கராரா இருக்கனும். அப்பதான் அடக்கி வாசிப்பினம். :D

டமில்சை பற்றிய மிகச் சரியான கணிப்பு.

Link to comment
Share on other sites

நெடுக்குக்கு பச்சை குத்துப் போட்டு தொடருறன்

இது ஒரு தொற்று நோய் போல, இப்படியான வதைகளுக்கு முகம் கொடுத்தவர்கள் கூட எதிர்காலத்தில் தாமும் அப்படியே வதை கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். இப்படியான பணம் தின்னிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வாங்கிக் கொடுப்பதே மிகச் சிறந்த விடயம்

இது எம் இனத்தில் மட்டுமல்ல, இது ஏனைய இனத்தவர்களிடமும் இருக்கு. இங்கு Downtown இல் சீன கடைகளில் சீன முதலாளிகள் புதிதாக வரும் சீனர்களிடம் மிகக் குறைந்த அளவு சம்பளத்தில் (ஒரு மணித்தியாலத்துக்கு 3 டொலர்) 18 மணி நேரம் வேலை வாங்குவதாகவும் ஒய்வு கொடுப்பதில்லை என்றும் அண்மையில் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

Link to comment
Share on other sites

வாசிக்க மனசுக்கு கஸ்ரமாய் இருக்கு ^_^ ...கடைக்கரா முனாவுக்கு இருட்டடி குடுக்கனும்.. :D:D

பல வருடங்களுக்கு முன் இந்தியரின் பெற்றோல் நிலையத்தில் எனது நண்பர் ஒருவர் வேலை காசுக்கு செய்தார்.ஒரு மாத வேலையின் பின் காசு இல்லை என்றும் அது பயிற்சி என்று ஏமாற்றி விட்டார்.நானும் போய் வாதாடி பார்த்தேன்.இனி கதைத்தால் பொலிசில் சொல்வேன் என்று மிரட்டினார். பல மாதங்கள் கடந்த பின் அண்ணைக்கு நல்ல இருட்டடி.காயம் வரும் படி அடிக்கவில்லை.பிறகு ஒரு நாள் அதே பெற்றோல் நிலையத்தினூடாக போகும் போது மண்டையில் கட்டோடு :) சாமான் அடுக்கி கொண்டு நின்றார்.வேலை செய்தவரிடம் என்ன உனது முதலாளிக்கு நடந்தது என்று கேட்க இங்கு வேலை செய்த சீக்குக்கு காசு கொடுக்கவில்லை.நேற்றிரவு யாரோ இரு சீக் பெடியள் வந்து முதலாளிக்கு அடித்து விட்டு காசையும் எடுத்து கொண்டு போய் விட்டார்கள் என்றார். இப்போ அந்த பெற்றோல் நிலையம் வேறு நிர்வாகம் நடாத்துகிறார்கள்.

சுஜியின் உதவி வரவேற்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வெளிநாடு பிடிக்காததுக்கு பல காரணம் அதிலை இதுவும் ஒன்று. மனிதாபிமானம் என்பது யாரிடமும் கிடையாது. எனக்கு இங்கை வந்தவுடனை அண்ணா சொன்ன ஒரே வார்த்தை யார் அடிபட்டுக்கிடந்தாலும் ஒன்றும் செய்யாதே நீ உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போ என்று. பிறகு இதெல்லாம் கொலை கேஸ் என்றேல்லாம் முடிஞ்சிடும் என்று. என்ன உலகமடா சாமி என்று தான் தோன்றிச்சுது. எத்தனை தடவை எனக்கு முன்னாலையே சயிக்கிளில் இருந்து விழ எல்லாம் கை கொடுக்க முடியாமல் போயிருக்கிறேன். சிலவேளைகளில் இப்படியெல்லாமா வாழவேண்டும் என தோன்றும். வெளிநாட்டை பொறுத்தவரை பணம் பணம் இதை விட எதுவுமே இல்லை.

சுஜி உங்கள் ஆக்கத்திற்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதற்கு அழுகிறீர்கள், அப்படி என்ன தான் தப்பு செய்தீர்கள்" என்று வினாவ, "அது வந்து...நான் முதலாளிக்கு தெரியாமல், அரசாங்க உதவி பணம் எடுத்தது தான் தப்பு...நான் பண்ணியது தப்புதான்.

..எனக்கு இந்த நாட்டில் வதிவிட அனுமதியும் இல்லாமல் வேறு இடங்களில் வேலையும் இல்லாமல் அலையும்..என் நிலையை உணர்ந்து தான் நான் அழுகிறேன்" என்று

ஆகக்குறைந்தது மனிதாபிமானத்தையும் இழந்தா இருக்கிறோம் எம் இனத்திலே..???

விசா இல்லாத ஒருவர் எப்படி உதவித்தொகை பெற முடியும்?

அதைவிட ஒரு பக்க விளக்கத்தை மட்டும் கேட்டுவிட்டு

தொழிலுக்கும் மனிதாபிமானத்துக்கும் முடிச்சுப்போடுவது நல்லதல்ல.

தங்களுக்கு வந்த கோபத்துடன் அந்த கடைக்காறரிடம் நீதி கேட்டிருக்கவேண்டும்

எல்லோரும் இப்படித்தான் நமக்கேன் என்று ஒதுங்குகின்றோம்

அதேநேரம் நீதியை வேறு ஒருவர் பெற்றத்தரவேண்டும் என்று அவரைக்கடவுளாக்குகின்றோம்

இங்கு எழுதும் எத்தனைபேருக்கு நீதிகேட்கும் அந்த தெம்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

இருந்தால் அந்த கடையைக்கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெளிநாடு பிடிக்காததுக்கு பல காரணம் அதிலை இதுவும் ஒன்று. மனிதாபிமானம் என்பது யாரிடமும் கிடையாது. எனக்கு இங்கை வந்தவுடனை அண்ணா சொன்ன ஒரே வார்த்தை யார் அடிபட்டுக்கிடந்தாலும் ஒன்றும் செய்யாதே நீ உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போ என்று. பிறகு இதெல்லாம் கொலை கேஸ் என்றேல்லாம் முடிஞ்சிடும் என்று. என்ன உலகமடா சாமி என்று தான் தோன்றிச்சுது. எத்தனை தடவை எனக்கு முன்னாலையே சயிக்கிளில் இருந்து விழ எல்லாம் கை கொடுக்க முடியாமல் போயிருக்கிறேன். சிலவேளைகளில் இப்படியெல்லாமா வாழவேண்டும் என தோன்றும். வெளிநாட்டை பொறுத்தவரை பணம் பணம் இதை விட எதுவுமே இல்லை.

சுஜி உங்கள் ஆக்கத்திற்கு ஒரு பச்சை.

அதுமட்டுமல்ல.. எனக்கு வந்ததும் சொன்ன தகவல்.. சின்னக் குழந்தைகளை தொட்டிடாதேங்கோ.. பிறகு பிடோ என்று உள்ள போட்டிருவாங்கள் என்று. பறவைகள் மிருகங்களை தொட்டிராதேங்கோ.. அப்புறம் பிராணி வதை என்றிடுவாங்கள் என்று. அதற்கு எல்லாம் அப்படியே பழக்கப்பட்டு... இப்போ சின்ன பிள்ளைகள் றோட்டில தடக்கி விழுந்தாலும்... கண்டுக்கிறதே இல்ல. குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்யும் மனிதர்களால்.. குழந்தைகள் மீது அன்பு காட்டுதல் கூட தடை செய்யப்படுகிறது. இப்படித்தான் மனிதன் வாழும் உலகம் உருண்டுக்கிட்டு தான் இருக்கு. :D:)

Link to comment
Share on other sites

விசா இல்லாத ஒருவர் எப்படி உதவித்தொகை பெற முடியும்?

அதைவிட ஒரு பக்க விளக்கத்தை மட்டும் கேட்டுவிட்டு

தொழிலுக்கும் மனிதாபிமானத்துக்கும் முடிச்சுப்போடுவது நல்லதல்ல.

தங்களுக்கு வந்த கோபத்துடன் அந்த கடைக்காறரிடம் நீதி கேட்டிருக்கவேண்டும்

எல்லோரும் இப்படித்தான் நமக்கேன் என்று ஒதுங்குகின்றோம்

அதேநேரம் நீதியை வேறு ஒருவர் பெற்றத்தரவேண்டும் என்று அவரைக்கடவுளாக்குகின்றோம்

இங்கு எழுதும் எத்தனைபேருக்கு நீதிகேட்கும் அந்த தெம்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

இருந்தால் அந்த கடையைக்கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல.

விசுகு அண்ணா இங்கே வந்து இறங்கியது ஒரு காட் குடுப்பார்கள்... அதை வைத்தே ஒரு வரால் உதவி தொகை பெற முடியும்.... அவர் இங்கே இருக்கலாம்.... ஆனால் வேலை செய்ய அனுமதி குடுக்கமாட்டார்கள்... அந்த அயிடியிலே அடித்து இருக்கும் வேலை செய்ய அனுமதியில்லை என்று.... ஆனால் உதவி தொகை பெற முடியும்.... அதைத்தான் அந்தப்பெரியவரும் பண்ணினார்......

இரண்டாவது அந்தக்கடைக்காரரிடம் நான் நீதிகேட்டு இருக்க முடியும்....ஆனால் அவர் நல்லவர் இல்லை.... அப்படி ஒரு வேளை நான் கேட்டு இருந்தால்... அவர் வேறு மாதிரி சமந்தப்படுத்திப்பேசி இருப்பார்....ஏன் என்றால் அவர் போற வாற பெட்டைகளை வேறு கண்ணோட்டத்தோட பார்க்கிறதை நானே பார்த்து இருக்கேன்...

பையன் சொன்ன மாதிரி இருட்டடி குடுக்கலாம் ஆக்களை வைத்து பண்ணலாம்...ஆனால் இப்படி பண்ணுவதால் என்ன பிரயோசனம் ... என்னோட நோக்கம் எல்லாம் கடை இழுத்து மூடவேண்டும்.... இப்படியானவர்கள் நடுத்தெருவுக்கு வரவேண்டும்... கஸ்ரப்படவேண்டும் அப்பதான் மற்றவன் வலி தெரியும்...

நெடுக்கண்ணா சொன்னதுபோல் சட்டம் பேசலாம்..ஆனால் வதிவிட உரிமை இருந்தால் பேசலாம்... இப்படியானவர்கள் எப்படி பேசுவார்கள்...

தனி மனிதன் என்றால் தண்ணியை குடித்துவிட்டும் இருக்கலாம்... ஆனால் எனக்கு அந்தபெரியவரை பார்த்தால் அப்படித்தெரியவில்லை... அவர் உடம்பு சரியில்லாதவர் என்று நினைக்கிறேன்... அவருக்கு பின்னால் அவரை நம்பி பிள்ளைகள் இருக்கலாம் ஒருவேளை ஊரில் இருக்கலாம்... தன் பிள்ளைகள் மனைவிக்காக அவர் அப்படி கஸ்ரப்பட்டு இரண்டு பவுண்ஸ்க்கு வேலை செய்து இருக்கலாம்...

கண்டிப்பாக நான் அந்தக்கடை முதலாளிக்கு ஏதாவது பண்ணுவேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் லா சப்பலுக்கு போயிருந்தபோது...

ஒருவர் என்னிடம் ஒரு விளம்பரத்தை நீட்டினார்

அந்த விளம்பரத்தை ஏற்கனவே நான் பெற்றுக்கொண்டதால்

வேண்டாம் என்று மறுத்தேன்

அவர் என்னிடம் திணிக்க முயன்றார்

தமிழில் சொன்னால் விளங்காதோ என்று பிரெஞ்சில் சொன்னார்

அதுவும்புரியவில்லையோ என்று ஆங்கிலத்தில் சொன்னார்

அதுவும் இல்லையோ என்று சிங்களத்திலிலும் சொன்னார் அந்த விளம்பரம் என்ன வென்று.

நான் சூடாகிவிட்டேன்

அதைக்கண்ட அந்த கடை முதலாளியின் சகோதரன் என் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டுபோய்ச்சொன்னார்

அண்ணா அவனோட கோபிக்காதீர்கள்

அவனைப்பற்றி சொன்னால் நீங்களே இரங்குவீர்கள் என்று.

என்னடாப்பா போறவாறவனையெல்லாம் வம்புக்கிழுக்கிறான்

அவனை வேலைக்கு வைத்திருக்கும்உன்ர அண்ணனுக்கு போடணும் என்று நான்பேச...

அவன் சொன்னான்

அண்ணா குடும்பத்தில் 4 பேர் மாவீரர்

தாய் தகப்பன் எல்லாம் முள்ளிவாய்க்காலில்......???

இவனும் கொழும்பில் உளவுப்போராளியாக இருந்து...

பிடிபட்டு

ஆண்பிள்ளைக்கான எந்த உறுப்பும் இயங்காதநிலையில்........

அந்த ஒரே காரணத்துக்காகத்தான் அவனை குழந்தையைப்போல் அண்ணர் பார்க்கின்றார் என்றான்

அவனது அண்ணனைக்கண்டு கும்பிட்டுவிட்டுவந்தேன்

இப்போ சொல்லுங்கள் முதலாளிகள் எல்லோரும் மனச்சாட்சி இல்லாது காசு பறக்கும் கூட்டமா...???

Link to comment
Share on other sites

சுஜி, நீங்கள் முதலாளிக்கு அல்லது குறிப்பிட்ட கடைக்கு ஏதாவது செய்வதுபற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு.. குறிப்பிட்ட பெரியவரை மீண்டும் கண்டால்… அல்லது அவர் விபரம் பெற்று, அவரது பிரச்சனைகளை அறிந்து அவருக்கு உங்களால் முடியுமான உதவியை செய்தால் அது மெத்தப்பெரிய உபகாரமாய்போகும்.

இங்கு நாங்கள் இருப்பது Downtown. எனக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது எப்போது என்றால் நம்மவர்களான தமிழர்கள் பூங்காக்களில், தெருக்களில் குடித்துவிட்டு, போதை பாவித்துவிட்டு வேற்று இன Homeless people போல ஊத்தை உடுப்புக்களுடன் தெரு ஓரங்களில், பூங்காக்களில் கிடந்தார்கள். இவர்களின் நிலை எவ்வளவோ வசதிகள், வாய்ப்புக்கள் கொண்ட அழகிய கனடா திருநாட்டில் ஏன் இப்படி வந்தது என்பது நீண்ட ஆராய்ச்சிகளுக்குரியது. ஆனால்.. நான் இங்கு கூறவரும் விடயம் என்ன என்றால்.. வெளிநாடுகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் வரலாம். அதற்கு அவர்களால் முகம் கொடுக்க முடியாத நிலையில் நீங்கள் மேலே விபரித்த பெரியவரின் நிலமை போன்றும் ஏற்படலாம்.

எனவே, முடியுமானால் பெரியவரை சந்தித்து அவரது நிலவரம் அறிந்து உதவி செய்யுங்கள். இப்படியான விடயங்களுக்கு நீங்கள் தனியாக போகத்தேவையில்லை. யாராவது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று முயற்சித்து பாருங்கள் உண்மையில் குறிப்பிட்ட நிகழ்வு உங்கள் மனதை தொடர்ந்து உருத்திக்கொள்ளுமானால்…

இவ்வாறான விடயங்களில் நாங்கள் குயிக் judgment செய்யமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சூடாகிவிட்டேன்

அதைக்கண்ட அந்த கடை முதலாளியின் சகோதரன் என் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டுபோய்ச்சொன்னார்

அண்ணா அவனோட கோபிக்காதீர்கள்

அவனைப்பற்றி சொன்னால் நீங்களே இரங்குவீர்கள் என்று.

என்னடாப்பா போறவாறவனையெல்லாம் வம்புக்கிழுக்கிறான்

அவனை வேலைக்கு வைத்திருக்கும்உன்ர அண்ணனுக்கு போடணும் என்று நான்பேச...

அவன் சொன்னான்

அண்ணா குடும்பத்தில் 4 பேர் மாவீரர்

தாய் தகப்பன் எல்லாம் முள்ளிவாய்க்காலில்......???

இவனும் கொழும்பில் உளவுப்போராளியாக இருந்து...

பிடிபட்டு

ஆண்பிள்ளைக்கான எந்த உறுப்பும் இயங்காதநிலையில்........

அந்த ஒரே காரணத்துக்காகத்தான் அவனை குழந்தையைப்போல் அண்ணர் பார்க்கின்றார் என்றான்

அவனது அண்ணனைக்கண்டு கும்பிட்டுவிட்டுவந்தேன்

இப்போ சொல்லுங்கள் முதலாளிகள் எல்லோரும் மனச்சாட்சி இல்லாது காசு பறக்கும் கூட்டமா...???

எல்லோரும் இல்லை ஆனால் அப்படியும் ஆட்க்கள் இருக்கினம்.அவை எல்லாம் உங்கள் உவமைக்கு பின்னால ஒழியாமல் இருக்க நீங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஏனோ தெரிய இல்லை இந்தத் திரியை வாசித்ததில் இருந்து மனம் கொஞ்சம் கனமாக இருக்கிறது. காரணம், இந்த நாட்டிற்கு வந்த புதிதில் எனக்கு அரசாங்க விதி முறைகள் சட்டங்கள் ஏதும் தெரியாது, தெரிந்தவர்களும் அதனைச் சொல்லித் தர விரும்பவில்லை காரணம் தாங்கள் சொல்லிக் குடுப்பதே தங்களுக்கு ஆப்பாக வந்துவிடும் என்று ஏதும் நினைத்தார்களோ தெரியாது.... (விசா, work permit NI no எல்லாமே இருந்தது) வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு இந்தியனின் கடையில் ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து ஐம்பது பவுண்ட்ஸ் பெற்று அதில் ஒரு சிறிய அறை வாடகை, பில்ஸ் போக மீதியை ஊருக்கு அனுப்பினேன். சாப்பாடுச் செலவு இருந்ததில்லை. ஒரு நாளைக்கு 2 mars bars & tap water மட்டும் தான் மிஞ்சி, மிஞ்சி போனால் பாண் அப்போது 9p, குறைந்தது 4 நாட்களுக்குப் போதுமானதாக இருந்தது, ஆறு மாதங்கள் இப்படித் தான் இருந்தேன். அதன் பிறகு கடைக்கு வரும் சிலர் நன்புடன் இந்த நாடு சட்டங்களை அறியத் தன்மையால் நான் அங்கிருந்து வேறு வேலை எடுத்து மாறக் கூடியதாக இருந்தது. பல வருடங்கள் ஆனாலும், பல மாற்றங்கள் ஆனாலும் வந்த பாதையை, வாழ்க்கை தந்த அனுபவத்தை மறக்க முடியாது தானே?

இன்றைய சட்டப் படி, ஒரு முதலாளி அவர் வேலைக்கு அமர்த்துவோருக்கு (NMW) தகுந்த ஊதியம் கொடுக்காமல் விட்டால் அது சட்டப் படி குற்றமாகும். சுஜி, நீங்கள் குறிப்பிட்டது போல அந்த முதலாளி ஒருவரை குறைந்த ஊதியத்திற்கு ஏன் அமர்த்தவேணும்? அந்த முதியவர் அரசாங்க சலுகைகள் எடுக்கிறார் என்று தெரிந்தால் தானே?

முடிந்தால் அந்த பெரியவரே, தன்னை அந்த முதலாளி குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தினார் என்றோ, அல்லது செய்த வேலைக்கு ஊதியம் தர மறுக்கிறார் என்றோ ஒரு முறைப்பாடு செய்யலாம். குற்றத்தை தானே ஒத்துக் கொண்டால் அந்த முதலாளிக்குத் தண்டனையாக பெரிய அபராதம் சட்டப் படி கொடுக்கப்படும்.

இப்படியான முதலாளிமார் வருடாந்த வரிப்பத்திரங்கள் நிரப்பும் போது, தங்களின் வருமானத்தை சரியாகக் காட்ட மாட்டார்கள். இது சட்டப் படி குற்றமாகும்.

கீழுள்ள இணைப்பில் ஒரு இலவச இலக்கம் உள்ளது. அதில் தொடர்பு கொண்டு கதைத்துப் பாருங்கள்.

http://www.direct.gov.uk/en/MoneyTaxAndBenefits/Taxes/ContactOrDealWithHMRC/DG_10010579

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இந்திய முதலாளிகளால் தமிழர்கள் சுரண்டப்பட்டார்கள். தற்போது தமிழர்கள் முதலாளிகளாக இருந்து தமிழர்களையே சுரண்டுகின்றார்கள். நேர்மை, நாணயம், மனிதாபிமானம் உள்ளர்வர்களும் இருக்கின்றார்கள், இல்லாதவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் நம்மவர்களே நம்மைச் சுரண்டும்போது அதிகம் ஆத்திரம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

எனக்கு வெளிநாடு பிடிக்காததுக்கு பல காரணம் அதிலை இதுவும் ஒன்று. மனிதாபிமானம் என்பது யாரிடமும் கிடையாது. எனக்கு இங்கை வந்தவுடனை அண்ணா சொன்ன ஒரே வார்த்தை யார் அடிபட்டுக்கிடந்தாலும் ஒன்றும் செய்யாதே நீ உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போ என்று. பிறகு இதெல்லாம் கொலை கேஸ் என்றேல்லாம் முடிஞ்சிடும் என்று. என்ன உலகமடா சாமி என்று தான் தோன்றிச்சுது. எத்தனை தடவை எனக்கு முன்னாலையே சயிக்கிளில் இருந்து விழ எல்லாம் கை கொடுக்க முடியாமல் போயிருக்கிறேன். சிலவேளைகளில் இப்படியெல்லாமா வாழவேண்டும் என தோன்றும். வெளிநாட்டை பொறுத்தவரை பணம் பணம் இதை விட எதுவுமே இல்லை.

சுஜி உங்கள் ஆக்கத்திற்கு ஒரு பச்சை.

ஜீவா.. உங்களுக்கு யாரோ சட்டத்தைப் பிழை பிழையா சொல்லிக்குடுத்திருக்கினம். :D யாராவது ஆபத்தில் இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது அவசர உதவி இலக்கத்தை அழைத்து தகவலைத் தெரிவிப்பது மட்டுமே.. நீங்கள் பயிற்சிபெற்ற முதலுதவி வல்லுனராகவோ அல்லது மருத்துவராகவோ இருந்தால், முதலுதவிகளும் தரலாம். ஆனால் இதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. மிகுந்த அவதானம் தேவை. ஆகையால் பெருவாரியான சந்தர்ப்பங்களில் அவசர இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துவிட வேண்டும். :D

அவசரத்துக்கு உதவி செய்யாமல் போய், உங்களை அந்த விபத்துதாரி பிறகு அடையாளம் காட்ட்வாரேயாக இருந்தால் உங்கள் மீது Involuntary Manslaughter அடிப்படையில் வழக்குத் தொடரப்பட சந்தர்ப்பம் உண்டு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. உங்களுக்கு யாரோ சட்டத்தைப் பிழை பிழையா சொல்லிக்குடுத்திருக்கினம். :D யாராவது ஆபத்தில் இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது அவசர உதவி இலக்கத்தை அழைத்து தகவலைத் தெரிவிப்பது மட்டுமே.. நீங்கள் பயிற்சிபெற்ற முதலுதவி வல்லுனராகவோ அல்லது மருத்துவராகவோ இருந்தால், முதலுதவிகளும் தரலாம். ஆனால் இதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. மிகுந்த அவதானம் தேவை. ஆகையால் பெருவாரியான சந்தர்ப்பங்களில் அவசர இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துவிட வேண்டும். :D

ஓம் மாமோய். ரொம்ப அவசரம் என்றால் அவசர இலக்கத்துக்கு அழைத்து சொல்லலாம் சின்ன சின்ன விசயதுக்கு ஏன் என்று விட்டிடுவேன். :D

Involuntary Manslaughter அடிப்படையில் வழக்குத் தொடரப்பட சந்தர்ப்பம் உண்டு..! :D

ம்... இது வேறை கொடுமையா???? :D

Link to comment
Share on other sites

ஓம் மாமோய். ரொம்ப அவசரம் என்றால் அவசர இலக்கத்துக்கு அழைத்து சொல்லலாம் சின்ன சின்ன விசயதுக்கு ஏன் என்று விட்டிடுவேன். :D

மாப்பிளை.. சின்ன விசயமா பெரிய விசயமா என்கிறதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது மருத்துவம் சம்பந்தப்பட்ட ஆட்கள் அல்லோ.. :D சைக்கிளால் விழுந்து தலையில் உள்காயம் பட்டு, பிறகு கோமாவுக்குப் போய்ட்டானெண்டால் சிக்கல் தானே.. :D

வட அமெரிக்காவில் தேவையென்றால் நீங்கள் அனானியாக அவசர இலக்கத்தை அழைத்து விடயத்தைத் தெரிவிக்கலாம். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.