Jump to content

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கரும்பு நான் மட்டும் தானா உங்கள் எழுத்துகளை வாசித்துக் கருத்துக் கூறுகினனான்...மற்றவர்கள் கூறுவதில்லையா?...இதை வாசிப்பவர்கள் நினைப்பார்கள் நான் உங்களை பிடித்த கருத்தாளார் என எழுதின படியால் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளீர்கள் போல கிடக்குது <_<

வாதவூரான் என்னுடைய எழுத்தில் அவ்வளவு கோபம் வெளிப்படுகிறதா?

ஏன் அப்பிடி சொல்லுறீங்கள்?நான் எழுதியவர்களில் கனபேர் ஆஸ்ரேலியாவிலயிருந்து வந்திட்டினமோ?ஆனால் நான் லண்டன் தான் அண்ணா.

பையன் நினைச்சிருப்பான் நீங்கள் ஜம்மு பேபியின் மறு அவதாரம் என :)

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

எனக்கும் யாழ் களத்தில் பலரது கருத்துக்கள் பிடிக்கும். தொடர்ந்து யாழ் களம் வருவதற்கு கருத்தாளர்களே உந்துதலாக இருக்கிறார்கள்.

சட்டென்று பத்துப்பேரைக் கூறுவதால் மற்றையவர்களைப் பிடிக்காது என்பதல்ல, பின்வருவோர் உடனடியாய் ஞாபகத்திற்கு வந்த் பெயர்கள் (வரிசைப் படுத்தவில்லை)

கிருபன், சுகன், பூனைக்குட்டி, சினேகிதி, கலைஞன், நிழலி, ரதி, இசைக்கலைஞன், சாணக்கியன், தமிழிச்சி இப்போதைக்கு உடனே நினைவில் வந்தவர்கள்.

இசைக்கலைஞனோடு நேரடியாக விவாதங்களில் ஈடுபட்ட ஞாபகம் இல்லை, ஆனால் அவரது நகைச்சுவை உணர்வு பல இடங்களில் மிகவும் இரசிக்கும் படி இருக்கும். எனது ஞாபகம் சரி எனின் முன்னர் இசைக்கலைஞனின் கையொப்பத்தில் பின்வரும் வாசகம் இருந்தது: “டைகரோட எயிமு டமில் ஈழம் ஸ்டேட்டு”. பலருடன் இதைப் பகிர்ந்து சிரித்துள்ளேன்.

கிருபன் -- கருத்துக்களில் எப்போதும் ஒரு நிதானம், அதாவது கருத்துக் கூறுவதற்கு முன்னர், கூறப்பட்ட விடயத்தைக் கிரகித்துக்கொண்ட நிதானம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பேசுவதற்கு முன்னர் கேட்பது அவசியம். கிருபனிற்கு இப்பக்குவம் நிறைய உள்ளது. மற்றும் வாசிப்பனுபவம் நிறையவே தென்படுகிறது.

சுகன்: சிந்தனைத் தெளிவும் வாசைன அனுபவமும் கிருபனை ஒத்த நிதானமும் கருத்துக்களில் ஒரு உண்மையும் இருப்பது சிறப்பு.

நிழலி மற்றும் கலைஞன்: நான் பார்த்தவரை தம்மை அறிந்தவர்களாக இவர்கள் வெளிப்படுகிறார்கள். எனக்கு இது பிடிக்கும், எனக்கு இது பிடிக்கும் என்று கூறுவதில் எனக்குச் சங்கடம் ஏதுமில்லை என்ற சிந்தனை உடையோர். மற்றும் ஒரு பிரச்சினை ஏற்படுகையில் துவண்டு விடாது அதை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்களாக பிரச்சினையை கிரமமாக எதிர்கொள்பவர்களாக இவர்களது கருத்து வெளிப்படுகின்றது. மற்றும் இவர்களது இரசிப்புத் தன்மை மற்றையவர்களில் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பெரும் இரசிகர்கள்.

பூனைக்குட்டி மற்றும் சினேகிதி: எனக்கு உளவியல் மற்றும் தத்துவார்த்த விசாரணைகளக் பிடிக்கும். இவர்களிற்கும் இம்முனை பிடித்த முனையாய் எனது பார்வையில் தென்படுகிறது. இருவரோடும் விவாதங்களில் ஈடுபட்டமை நினைவில் உண்டு. இவர்களோடு விவாதிக்கையில் எமக்குள் சிந்தனை அதிகம் தேவைப்படுவது மகிழ்ச்சியான அனுபவம்.

சுhணக்கியன்: சாணக்கியனோடு விவாதிப்பது எனது பார்வையில்; அரசியல் மற்றும் கொள்கை நிலைகளிற்கு அப்பால் சுவாரசியமானது. சொல்கின்ற கருத்தை உள்வாங்கி விவாதிக்கும் பக்குவம் சுhணக்கியனிற்கும் உள்ளது, மற்றும் தனது கருத்துநிலை ஒரு விவாதத்தில் தற்காலிகமாகவேனும் வெல்லத் தவறுகிறது என்கையில் அவ்விவதாத்தைப் பொறுத்தவரை ஏனும் தனது கருத்துநிலையைத் தன்னால் அடித்துக்கூறமுடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வித்தகத்தனமும் சாணக்கியனிடம் உள்ளது.

ரதி: ரதி இயல்பாக நட்பான சுபாவம் உடையவராய்த் தெரிகிறார். கொஞ்சம் இன்னசென்ஸ், கொஞ்சம் பயம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வெளிப்படை மொத்தத்தில் எனது பார்வையில் ரதி ஒரு girl next door போன்றுவர்.

தமிழச்சி: தாயகம் தொடர்பான கனேடிய தமிழர் செயற்பாடுகளில் எனக்கும் பலவருட நேரடி பட்டனுபவம் உள்ளது. தமிழச்சியின் கருத்துக்களை வாசிக்கையில் இத்தகைய அனுபவம் அவரிற்கும் (அதுகும் ஓரே காலகட்டத்தில்) இம்முனையில இருப்பதோடு பல விடயங்களில் இம்முனை தொடர்பில் நான் பெற்றுக் கொண்ட அதே பட்டறிவு அல்லது முடிவுகைளையே தமிழச்சியும் பெற்றுள்ளதாய்த் தோன்றுகின்றது. மேலும் உளவியல் தத்துவம் என்ற முனைகளிலும் தமிழச்சிக்கும் நாட்டமுள்ளமையும் அவரது கருத்துக்களில் வெளிப்படுகிறது.

மேற்படி பத்துப் பேரில் எவரையும் நேரடியாக எனக்குத் தெரியாது. இது இந்த அவதாரங்கள் பற்றிய எனது அவதாரத்தின் எண்ணம் மட்டுமே.

Link to comment
Share on other sites

ஏன் கரும்பு நான் மட்டும் தானா உங்கள் எழுத்துகளை வாசித்துக் கருத்துக் கூறுகினனான்...மற்றவர்கள் கூறுவதில்லையா?...இதை வாசிப்பவர்கள் நினைப்பார்கள் நான் உங்களை பிடித்த கருத்தாளார் என எழுதின படியால் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளீர்கள் போல கிடக்குது <_<

இல்லை. நீங்கள் என்னை பிடித்துள்ளது என்பதற்காக நான் உங்களை பிடித்துள்ளது என்று எழுதவேணும் என்று இல்லை. உங்களுக்கு நினைவுள்ளதோ தெரியாது.. நான் இணைத்தபாடல்கள் நெடுக்காலபோவான் எழுதி நான் பாடியது, மற்றது எனது மருமகனிற்கு செய்த பிறந்தநாள் பாடல் இவற்றின் ஒலிப்பதிவு தரத்தில் உள்ள குறைபாடுகளை நீங்கள் சுட்டிக்காட்டியதால் நான் மீண்டும் அவற்றை முடியுமான அளவு மட்டுபடுத்தப்பட்ட வசதிகளுடன் சற்று உயர்வான தரத்திற்கு மீளவும் மாற்றமுடிந்தது. அதன்பின்னர் அவற்றை கேட்டபோது முன்பைவிட நன்றாக காணப்பட்டது. இவ்வாறே நான் எழுதிக்கொண்டுள்ள நூல்... இதற்கு இப்போதைக்கு என்னால் வாசிக்ககூடியவர்களுக்கு நூலில் உள்ள விடயங்கள் பற்றி ஏற்படக்கூடிய பல்வேறு வினாக்களிற்கு விடை அளிக்க முடியாதாயினும்... காரணம் முதலில் நூலை முழுவதுமாக பூர்த்தி செய்யவேண்டும்... இந்த காரணத்தினால் உண்மையில் இங்கு பின்னூட்டங்களை பெரிதாக நான் எதிர்பார்க்கவில்லையெனினும் நீங்கள் ஆர்வத்துடன் அவற்றை வாசிப்பது, வாசித்துவிட்டு பின்னூட்டம்போடுவது இவை எல்லாம்கூட எனக்கு பிடித்த சககருத்தாளர் என்கின்ற வரிசையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று எழுத காரணமாக அமைந்தது.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞனோடு நேரடியாக விவாதங்களில் ஈடுபட்ட ஞாபகம் இல்லை, ஆனால் அவரது நகைச்சுவை உணர்வு பல இடங்களில் மிகவும் இரசிக்கும் படி இருக்கும். எனது ஞாபகம் சரி எனின் முன்னர் இசைக்கலைஞனின் கையொப்பத்தில் பின்வரும் வாசகம் இருந்தது: “டைகரோட எயிமு டமில் ஈழம் ஸ்டேட்டு”. பலருடன் இதைப் பகிர்ந்து சிரித்துள்ளேன்.

நானே மறந்துவிட்டேன்..! <_< ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் இன்னுமொருவன்..! :)

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது அனைத்துமே மிகவும் சரி இன்னுமொருவன். நீங்கள் சிந்திக்கும் அதே கோணத்தில்தான் நானும் சிந்திக்கிறேன் என்பதை உங்கள் கட்டுரைகள் மூலம் அறிந்து கொண்டேன். என்னால் அவற்றை எழுத்தில் கொண்டுவருவது இப்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதனால்தான் நான் எதனையும் இங்கு அதிகம் எழுதுவதில்லை. உளவியலில் நாட்டம் மட்டுமல்ல, எனது படிப்பும் அதுதான். எழுதுவதுற்கு நிறைய இருக்கிறது. காலம் வரும்போது நிச்சயமாக அவற்றை எல்லாம் எழுதுவேன்.

Link to comment
Share on other sites

நிழலி மற்றும் கலைஞன்: நான் பார்த்தவரை தம்மை அறிந்தவர்களாக இவர்கள் வெளிப்படுகிறார்கள். எனக்கு இது பிடிக்கும், எனக்கு இது பிடிக்கும் என்று கூறுவதில் எனக்குச் சங்கடம் ஏதுமில்லை என்ற சிந்தனை உடையோர். மற்றும் ஒரு பிரச்சினை ஏற்படுகையில் துவண்டு விடாது அதை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்களாக பிரச்சினையை கிரமமாக எதிர்கொள்பவர்களாக இவர்களது கருத்து வெளிப்படுகின்றது. மற்றும் இவர்களது இரசிப்புத் தன்மை மற்றையவர்களில் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பெரும் இரசிகர்கள்.

நன்றி இன்னுமொருவன்

இங்கு அநேகமாக அனைவரும் என் பெயரையும் போட்டு இருப்பது சந்தோசமாக இருக்கு. ஒரு விதத்தில் யாழில் எழுதுவதற்கும் ஊக்கமாகவும் இருக்கு இது

அதோட இன்னொரு உண்மையும் இருக்கு... இதே போல பிடிக்காத முதல் 10 பேரை...இல்லை இல்லை முதல் 3 பேரை வரிசைப் படுத்த சொன்னாலும், அதிலும் என் பெயரை பலர் போடுவினம் என்பதும் தெரியும் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பத்துப்பேரை சொல்வதென்பது முடியாது காரணம் நான் பழகிய சிலரை சொன்னால் அது முகஸ்துதி பாடுவது போலாகிவிடும் அதை விடுத்து ஒருசிலரை மிகவும் பிடிக்கும் அதில் இன்னுமொருவன் அண்ணா,சுகன் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா,குட்டி அண்ணா மற்றும் எல்லாரையும் பிடிக்கும் ஆனால் வரிசைப்படுத்தவில்லை. நான் ஒற்றை மரம் எனும் தலைப்பில் ஒரு கவிதை மாதிரி எழுதமுயன்றேன் அதுக்கு காரணம் சுகன்,இன்னுமொருவன் அண்ணா அவர்களின் எழுத்துக்களின் தாக்கம் தான். வித்தியாசமாக என்னை எழுததூண்டியவர்கள் அவர்களே. நான் இன்னுமின்னும் கத்துக்குட்டி தான் ஆனால் அவர்களின் எழுத்துக்கள் மட்டும் ஆழ்மனத்தில் எதையோ எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கும். அடுத்து நெடுக்ஸ் அண்ணா பாவம் மனுசன் பந்தி பந்தியா எழுத எனக்கு ஆச்சரியம் தான் வரும் எப்படியப்பா இந்த மனுசனாலை முடியுது? ஆதாரபூர்வமான கருத்துக்கள் நெடுக்கிடம் எனக்கு பிடிக்கும். நெடுக்ஸ் அண்ணாவுடன் கோபமாகவும் ஒருசில கருத்துக்கள் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் நெடுக்ஸ் அண்ணாவிடம் பிடிக்காதது அசைலம் அடிச்சிட்டு வந்து என்று தொடங்கினவுடனை மட்டும் கடுப்பு வருது. <_<

அடுத்து குட்டி அண்ணா. இவரோடை கருத்துக்களில் நிறைய அனுபவம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன் மற்றும் இன்னுமொருவன்...இனி மேல் யாழில் ரதியைப் பிடிக்க முடியாது <_< ...

ஜீவா குட்டியைப் பிடிக்கும் என எழுதினாலும்,நெடுக்ஸ்சைப் பிடிக்கும் என எழுதினாலும் இரண்டும் ஒன்று தான் :) ...இருவரும் ஒரு ஆள் என நிருபீக்காமல் நான் யாழை விட்டு போக போவதில்லை :) .

நன்றி இன்னுமொருவன்

இங்கு அநேகமாக அனைவரும் என் பெயரையும் போட்டு இருப்பது சந்தோசமாக இருக்கு. ஒரு விதத்தில் யாழில் எழுதுவதற்கும் ஊக்கமாகவும் இருக்கு இது

அதோட இன்னொரு உண்மையும் இருக்கு... இதே போல பிடிக்காத முதல் 10 பேரை...இல்லை இல்லை முதல் 3 பேரை வரிசைப் படுத்த சொன்னாலும், அதிலும் என் பெயரை பலர் போடுவினம் என்பதும் தெரியும் :lol:

நீங்கள் வேற நிழலி அப்படி வரிசைப்படுத்தினால் நான் தான் முதலாவதாக இருப்பேன்..2)அர்ஜீன் 3)நெல்லையன் 4)கரும்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாதவூரான்

ச்சா கடைசியில சப்பண்டு போய்ட்டது :D:) :)

Link to comment
Share on other sites

எங்களுக்கு விருப்பமான கருத்தாளர்கள் யாழின் டாப்10 கருத்தாளர்கள் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை. என்றாலும்.. டாப்10 என்று போடும்போது அதிலும் சில சுவாரசியங்கள் உள்ளன. இதனால் நானும் ஓர் பட்டியலை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தன். சிலர் டாப் 10 ஐ போடுவதற்கு நாங்கள் பயப்படுறமோ என்கின்ற மாதிரியும் சொல்லுறீனம். இதனால இது ஓர் முயற்சிதான். எனக்கு இன்றைக்கு பிடித்த டாப்10 :D

அர்ஜுன் - துணிவாக தனது கருத்தை கூறுவதால்

பையன் - ரெண்டுபேரும் கீரிக்கட்டு ஸ்கோர் பார்த்து சுவாரசியமான தகவல்களை பரிமாறிக்கொள்ளுவோம்.

ரதி - எனது எழுத்துக்களை, படைப்புக்களை அக்கறையாக வாசித்து கருத்து கூறுவதால்.

சுஜி - ஓர் பெண் கருத்தாளர் என்பதால்.. :) மற்றும்.. ஆரம்பத்தில குரங்கு, விலங்குகள் பற்றி எழுதிய விடயங்கள்.. மற்றும் பகிர்ந்துகொள்கிற பாட்டுக்கள்.

நெடுக்கு - கருத்துமுரண்பாடுகளில் வட, தென் முனைவுகளில இருந்தாலும்.. ஒற்றுமையான பல விடயங்கள் உள்ளதால.

புத்தன் - நீண்டகால கருத்துக்கள உறவு. வேறு அவதாரங்கள் பற்றி தெரியாது. ஆனால்.. இந்த அவதாரத்தில் புத்தனுடனான கருத்தாடல் சுவாரசியமாய் இருக்கும்.

குமாரசாமி - எழுதும் எல்லாம் பிடிக்கும் என்று சொல்லிறதுக்கு இல்லை. ஆனால் அவற்றில் பிடிக்கும் பல விசயங்களும் உள்ளது. குறிப்பாக பகிடிகள்.

நிழலி - எழுதும் எல்லாம் பிடிக்கும் என்று சொல்லிறதுக்கு இல்லை. ஆனால் அவற்றில் பிடிக்கும் பல விசயங்களும் உள்ளது. குறிப்பாக பகிடிகள். அண்மையில நிழலி எழுதின ஏதோ ஓர் பகிடியை வாசிச்சு சிரிச்சன், தற்சமயம் நினைவில் இல்லை.

ஆர்.ராஜா - இசை ஆர்வம், ஆங்கிலப்பாடல்கள்

கிருபன் - கிருபன் எழுதும் ஓரிரு கருத்துக்களில் சில பிடிக்கும், பல பிடிக்கும் :)

10 பேரின் பட்டியல் வந்துள்ளது.

முரளி,

என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

எமது அன்புக்கு இனிய உறவு புரட்சிகரதமிழ்த்தேசியன் பாணியில் டிஸ்கி.

Link to comment
Share on other sites

நன்றி ராஜா அண்ணை, இன்னுமொருவன், கிருபன் மற்றும் நமது கருத்துக்கள் பிடிக்கும் என்று கூறிய, கூறாவிட்டாலும் விரும்பி வாசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும். ரதி கூறியதுபோல் யாழில் உங்களுக்கு பிடிக்காத டாப்10 யார் என்று கருத்தாளர்களிடம் கேட்டு ஓர் திரி தொடங்கினால் அதில் முதல் மூன்றினுள் நான் நிச்சயம் இடம்பெறுவேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி பாணியை பின்பற்றும் தோழர் ராஜா மற்றும் இந்த எளியவனை பாராட்டிய தோழர் வாதவூரான் ஆகியோருக்கு நன்றிகள் :D

Link to comment
Share on other sites

ஜீவாவுக்கும், மற்றும் எனது பெயரைக் குறிப்பிட்ட கள உறவுகளுக்கும் நன்றி.

...

ஜீவா குட்டியைப் பிடிக்கும் என எழுதினாலும்,நெடுக்ஸ்சைப் பிடிக்கும் என எழுதினாலும் இரண்டும் ஒன்று தான் :) ...இருவரும் ஒரு ஆள் என நிருபீக்காமல் நான் யாழை விட்டு போக போவதில்லை :) .

....

வீணாக வார்த்தைகளை சிதற விடவேண்டாம். உங்கள் யோசனைககள் தவறானது என்று உணர்ந்து கொள்ளுவீர்கள் ரதி! திரும்பவும் இங்கு குறிப்பிடுகிறேன் குட்டி என்ற பெயரைத் தவிர வேறு பெயரில் நான் எழுதுவதில்லை!!! :D

Link to comment
Share on other sites

அப்பாடா கடைசியாக யாழிலயுமா? நான் உண்மையிலேயே யாழில் இணைய காரணமானது யாழில் கருத்தாடும் உறவுகளின் ஆக்கங்களால் கவரப்பட்டு தான்.நானும் எத்தனையோ ஆக்கங்கள் எழுத வேணும் என்று நினைப்பேன் ஆனால் நேரமும் மனநிலையும் சரிப்பட்டு வருவதில்லை.எல்லாரும் எழுதுகினம் எண்டு போட்டு நானும் எழுதிறன் குறை நினைக்ககூடாது சொல்லிப்போட்டன்.எனக்கு எல்லோருடைய கருத்துக்களும் ஓரளவு பிடித்தாலும் நிலாமதி அக்காவின் அனுபவ கதைகளும் இளங்கவி அண்ணா(அக்கா)வின் கவிதைகளும் நெடுக்ஸ் இன் விளக்கங்களும் தமிழ்சிறி அண்ணா, குமாரசாமி தாத்தாவின் நகைச்சுவையும் இளையபிள்ளை (அக்காவோ அண்ணாவோ தாத்தாவோ )யின் மருத்துவ குறிப்புகளும் பையனின் (26)மட்டயடியும் ராஜா அண்ணா புரட்சி அண்ணா ஆகியோரின் சுகமான கீதங்களும் ரதி அக்காவின் கோபமும் சுஜி அக்காவின் ஆர்வமும் (தமிழ் ) முனிவரின் லொள்ளும் நிழலி அண்ணாவின் ஜொள்ளும் ஜம்மு பேபியின் பஞ்சும், அப்பா களைச்சுப்போனன்......தயவு செய்து மிச்சத்தை ஆராவது முடியுங்கோவன்!!!!!!!!!!

வாதவூரான்,

என்னையும் நினைவில் நிறுத்தியமைக்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் -- கருத்துக்களில் எப்போதும் ஒரு நிதானம், அதாவது கருத்துக் கூறுவதற்கு முன்னர், கூறப்பட்ட விடயத்தைக் கிரகித்துக்கொண்ட நிதானம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பேசுவதற்கு முன்னர் கேட்பது அவசியம். கிருபனிற்கு இப்பக்குவம் நிறைய உள்ளது. மற்றும் வாசிப்பனுபவம் நிறையவே தென்படுகிறது.

எனக்கு நிதானம் இருக்கின்றதா? :lol:

கருத்துக்களை வாசிக்காமல் பதில் வைப்பதில்லை என்பது உண்மைதான். எனினும் சிலவற்றை மூளை வடிகட்டிவிடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3)புத்தன் யாழில் இவர் எழுதும் கதைகளை அடிப்பதற்கு ஆளே இல்லை.

கதைப்பகுதியில் உள்ள கிறுக்கல் என்று சொல்லுங்கோ...உண்மையான எழுத்தாளர்கள் பார்த்தால் என்னை செருப்பால அடிப்பார்கள்....நன்றிகள்

(ஒரு மாதிரி சுழிச்சிட்டட்டா... நிலைமையை..! நான் தான் புத்தனுக்கே பாடம் எடுத்த சுழியன்..! (இதையும் நம்பிடுவாங்களோ... நம்பினால் நம்பட்டும்.. நஸ்ரமா.. இல்லைத் தானே..! )

ஒறிஜினல் புத்தனை தானே சொல்லுறீயள் :lol:

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

ஜில்

புத்தன்

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

நன்றிகள் விசுகு

எங்களுக்கு விருப்பமான கருத்தாளர்கள் யாழின் டாப்10 கருத்தாளர்கள் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை. என்றாலும்.. டாப்10 என்று போடும்போது அதிலும் சில சுவாரசியங்கள் உள்ளன. இதனால் நானும் ஓர் பட்டியலை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தன். சிலர் டாப் 10 ஐ போடுவதற்கு நாங்கள் பயப்படுறமோ என்கின்ற மாதிரியும் சொல்லுறீனம். இதனால இது ஓர் முயற்சிதான். எனக்கு இன்றைக்கு பிடித்த டாப்10 :lol:

.

புத்தன் - நீண்டகால கருத்துக்கள உறவு. வேறு அவதாரங்கள் பற்றி தெரியாது. ஆனால்.. இந்த அவதாரத்தில் புத்தனுடனான கருத்தாடல் சுவாரசியமாய் இருக்கும்.

இன்றைய டாப் டென் நாளைய லாஸ்ட் டேன் ஆகவும் மாறும் ...அதுதான் வாழ்க்கை....

இன்றைய போராளிகள் சிலர் நாளைய துரோகிகள் ஆனது போல்

நன்றிகள் கறும்ஸ்

உங்களுடன் உங்கள் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோரையும் பிடிக்கும்

அப்ப என்னையும் பிடிக்கும் என்று அவர் பட்டியல்ஊடாக சொல்லுறீயள் ...நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபியின் பஞ்சும், அப்பா களைச்சுப்போனன்......தயவு செய்து மிச்சத்தை ஆராவது முடியுங்கோவன்!!!!!!!!!!

கண்ணா தொடங்குவது முக்கியமில்லை தொடங்கினதை. முடிக்கவேண்டும் ...அ[ப்ப நானும் வரட்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஆஸ்ரேலியாவோ :lol:

அப்ப நான் வரட்டா

சீ சீ......... அண்ணை கனடா போல கிடக்குது.....சிட்னிகாரர் ஒருத்தரின் பெயரையும் காணவில்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி எல்லாரையும் குழப்பீட்டம் அல்லே அங்கை தான் நிற்கிறான் இந்த வாதவூரான் .என்ன ரொம்ப என்னை நானே புகழுறனோ?.சரி சரி கனபேர் உங்கை குழம்பிறது தெரியுது .நான் மிச்சத்தையும் தொடருவம் .கரும்பு (மச்சான் ,மாப்பு,முரளி,கலைஞன் )வின் குரல் வளமும் ஆங்கிலப்புலமையும் (மற்ற ஆங்கில புலமையுடைய ஆக்கள் குழம்பகூடாது நான் யாழ் களத்தில் பார்த்ததை மட்டும் பார்த்து சொல்லுறன்), சகாரா அக்காவின் கந்தக புகையும், புத்து மாமாவின் அறிவுரையும்(ஆனா எனக்கு ஜில்லை பிடிக்காது ) சின்னப்பு தாத்தாவின் கள்ளுகொட்டிலும் தூயா அக்காவின் சமையல் குறிப்புகளும் குருவிகளின் வாதத்திறமையும்,சாத்திரி அண்ணாவின் உரையாடல் நாடகமும்,விசுகு அண்ணாவின் முயற்சியும்,குட்டியின் கருவாடும் ,இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்.கடைசியாக எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய உதவிய ஈழமகள் அக்கா (இவவை இப்ப களப்பக்கம் காண முடியவில்லை )இவர்கள் பிரதானமாக யாழ் களம் எண்டவுடனை ஞாபகத்துக்கு வாறவை.மற்றும்படி மற்றாக்களையும் பிடிக்கும்.ஆறாவது தவறியிருந்தால் குறை நினைக்கபடாது சொல்லிப்போட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ......... அண்ணை கனடா போல கிடக்குது.....சிட்னிகாரர் ஒருத்தரின் பெயரையும் காணவில்லை :)

அப்ப அவன் இப்ப கனடாவிலை செற்றிலாகிட்டானே ஆஃஆ

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

இவ்விணைப்பில் ஓர் கருத்தாளனாக என்னையும் தேர்ந்தமைக்கு நன்றி.நான் யாரையும் வரிசைப்படுத்த விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • 9 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2010 at 6:55 AM, தமிழ் சிறி said:

ஆரும் பலூன் ஊதினாலும் சுத்தி நின்று பார்க்கின்றது எமது குணம்.

இந்தப் பரவணிக்குணம் மாறாது😂🤣

எதையோ தேட இந்தத் திரி தட்டுப்பட்டுது.😆

இந்தத் திரியை தொடங்கின சுஜியும் இல்லை. திரியில் சொல்லப்பட்ட பலரும் இப்போது யாழில் இல்லை!

 

 

On 10/3/2010 at 5:21 PM, சுஜி said:

நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள்

இப்போது இந்தத் திரிக்கு எப்படி கருத்து வைக்கலாம்?😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தப் பரவணிக்குணம் மாறாது😂🤣

எதையோ தேட இந்தத் திரி தட்டுப்பட்டுது.😆

இந்தத் திரியை தொடங்கின சுஜியும் இல்லை. திரியில் சொல்லப்பட்ட பலரும் இப்போது யாழில் இல்லை!

 

 

இப்போது இந்தத் திரிக்கு எப்படி கருத்து வைக்கலாம்?😬

யாழ் களத்தின் ரொப் ரென் கடுப்பாளர்கள் ?😀

Link to comment
Share on other sites

  • 11 months later...

 

On 27/12/2019 at 18:38, கிருபன் said:

எதையோ தேட இந்தத் திரி தட்டுப்பட்டுது.😆

இந்தத் திரியை தொடங்கின சுஜியும் இல்லை. திரியில் சொல்லப்பட்ட பலரும் இப்போது யாழில் இல்லை!

2013 ற்கு முதல் நானுமில்லை. அப்போது நான் ஒரு யாழ்கள வாசகன்.

 download.jpeg?w=179&h=281&crop=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.