Jump to content

பிரிவு என்றும் பிளவு அல்ல


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது தொலைபேசியில் அழைத்து பேசுவான். தான் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது மிக மிக அவசரமென்றால் மட்டும் அவளை அவனுக்கு அழைக்க சொல்வான். மற்றும் படி அவனே அழைத்துபேசுவான்.சில நாட்களில் பணியின் ஈடுபாட்டில் அழைக்க மறந்து விடுவான். மாலையில் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்பான்.

இப்படியாக் இவர்கள் வாழ்வு சென்று கொண்டிருந் போது ..வாழ்க்கை செலவும் சற்று அதிகரித்தது . இதனால் வார விடுமுறைகளில் தனியார் நிறுவனக்களுக்கு கணனி திருத்தும் பணிக்கும் செல்வான். இதனால் வாசுகிக்கு சற்று மனக்கசப்பு எல்லா நாளும் வேலை . வார இறுதியிலும் செல்கிறாரே என்று. குழந்தைகளும் அவளை சமைக்கக் விடாது சிரமம் கொடுத்தனர். சில சமயம் வேலைக் களையால் வந்து .. சாப்பாட்டு மேசையில் பேச்சு வாக்கில் இருவர் குரலும் ஓங்கி ஒலித்ததும் உண்டு . இவர்கள் சத்தமிடுவதை குழந்தைகள் கண்டு தூங்க சென்று விடுவார்கள். வருடங்கள் ஓடி ஐந்து வருடங்களாகி விட்டது குடும்ப் த்துகாக் நேரம் ஒதுக்குவதில்லை . என்று வாசுகி குறைபட்டுக் கொள்வாள் . தன் வீட்டு நிலைமையை புரியவில்லை .என்று பாஸ்கரன் கடிந்து கொள்வான். எல்லோருடைய வீடுகளிலும் கோப தாபங்கள் மனஸ்தாபங்கள் இருக்கும் ஆனால் அவை சீர் செய்ய பட்டுவிடும். பிரச்சினைகள் நீடித்தால் பிரிவுக்கு வழி வகுக்கும். இன்றைய இளைய சமுதாயத்திடம் ஆண் களாய்இருந்தாலும் சரி பெண்களிடம் சரி சகிப்புத்தன்மை குறைந்து தான் விட்டது. சற்று மனஸ்தாபம் வந்ததும் மதுவிடம் தஞ்சமடைகின்றனர் .பாஸ்கரனும் விதி விலக்கின்றி மது வகை பழகிக் கொண்டான். இரவில் சாப்பிடாமலும் படுத்தான். அவன் உடல் நிலை சற்று நோய் கண்டது . ஒரு நாள் அவனது பல பள்ளி நண்பன் ஒருவன் கடைத்தொகுதியில் சந்தித்தான். அவனுக்கு இவர்களை ஊரிலே தெரிந்தது இருந்தது. இவனது கதை கேட்டு கவலை கொண்டான். அவன் மூலம் வாசுகியின் (ஐரோப்பிய நாடில் உள்ள )ச்கோத்தரனுக்கு கதை காற்றாய் பறந்தது. இப்போது மூத்த வள கஜானி முதலாம் வகுப்பிலும் இரண்டாவது மகள் கேசவி பாலர் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வருட விடுமுறையின் போது லண்டனில் உள்ள மாமா வீடுக்கு சென்றவர்கள் விடுமுறை முடிந்தும் வரவே இல்லை. பாஸ்கரன் தான் அவர்களைக் கொண்டு சென்று விடான். ஆனாலும் வாசுகி வர மறுத்து விட்டாள். . அங்கு குழந்தைகளை படிப்பிக்க போவதாக் கூறிவிட்டாள் . . பாஸ்கரனும் பல முறை அழைத்துப் பார்த்தான் . அவர்கள் வரவில்லை வாசுகியும் பிடிவாதமாய் இருந்தாள். . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலைக்கும் சேர்ந்து கொண்டாள்.

வாசுகியின் மன மாற்றத்தை எண்ணி சகோதரன் கவலைப்பட்டான் . புத்தி சொல்லி பார்த்தான். கேட்கவில்லை ..பாஸ்கரனும் குழந்தைகளுக்கு வேண்டும் பணம் அனுப்பினான். தான் இருந்த வீட்டை வீட்டை விட்டு விலகி ... உணவுடன் தனி அறை பார்த்துக் கொண்டான். வருடம் இரண்டு உருண்டோடியது .தங்கள் பிறந்த நாளில் குழந்தைகள் தந்தையுடன் செலவிடுவார்கள். இரண்டு வருட பிரிவு நால்வரையும் பாதித்தது பாஸ்கரனை இன்னும் பாதித்தது .வேலை விட்டு வந்தால் வீடில் வெறுமை . குடி தான் தஞ்சம் மயக்கத்தில் உறங்கி விடுவான்............ஒரு நாள் ..மைத்துனனிடம் இருந்து ,ஒரு தொலைபேசி அழைப்பு ......... மூத்தவள் கஜானி பெரிய பெண்ணாகி விடாள் என்றும் ஊரில் இருந்து அத்தையும் அப்பம்மாவும் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். . பாஸ்கரனுக்கு மகிழ்ச்சி . என்ன மனஸ்தாபம் இருந்தாலும் அவர்களிடம் போவது என்று வேலை தளத்தில் தெரிவித்து இருவார அனுமதி பெற்றுக் கொண்டான். வாசுகியும் தனிமையை உணர்ந்திருந்தாலும் அவளது பிடிவாதம் இடங்க்கொடுக்க் வில்லை . அந்த நாளும் வந்தது அங்கு சென்ற பாஸ்கரனுக்கு வீடு விழாக் கோலமாய் இருந்தது . மூத்த பெண அலங்காரம் செய்து தேவதை போன்று இருந்தாள். ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினான்.

உறவினர் எல்லாரும் சென்ற பின். குடும்பத்தார் ஒன்றிணைந்து வாசுகிக்கு புத்தி மதி சொன்னார்கள். அவளும் தான் தவறு உணர்ந்தாள். .உண்மையான் குடும்ப் அன்பு உள்ளவர்கள் ஒரு நாளும் பிரிவதி ல்லை எத்தனை மனத்தாங்கல் வந்தாலும் பிரச்சினைகள் வந்தாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ஆரோக்கியமானது. குடும்பம் ஒரு அன்பால் செய்த மாளிகை . கணவன் மனைவி குழந்தைகள் தான் அதன் ஆரோக்கியமான் தூண்கள். நல்ல ஒரு குடும்பம் கோவில் போன்றது . சகல் செல்வங்களும் உள்ள ஆரோக்கியமான் கோவில்.

பிரிவு என்பது தன்னிலை ஆராச்சி செய்து முடிவு எடுக்கும் ஒரு இடைவெளி . பிரிவு என்றும் பிளவு அல்ல

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது. இதில் வருவது மாதிரி புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் புற அழுத்தங்களால் ஏற்படும் மண முறிவுகள் அதிகம்.

எத்தனை மனத்தாங்கல் வந்தாலும் பிரச்சினைகள் வந்தாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ஆரோக்கியமானது. குடும்பம் ஒரு அன்பால் செய்த மாளிகை . கணவன் மனைவி குழந்தைகள் தான் அதன் ஆரோக்கியமான் தூண்கள். நல்ல ஒரு குடும்பம் கோவில் போன்றது . சகல் செல்வங்களும் உள்ள ஆரோக்கியமான் கோவில்.

இல்லற வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.