Jump to content

தாயக கோட்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாராவது எழுதுங்கள் தாயக கோட்பாடு என்டால் என்ன?...மாற்று கருத்துக்காரர் ஆகிய என்னிடம் புலி எதிர்ப்பை தவிர வேறு திட்டம் இல்லை...ஆனால் தற்போது புலிகள் ஈழத்தில் செயற்படவில்லை...புலி ஆதரவாளர்கள் என எழுதுபவர்களிடம் தற்போது என்ன கொள்கைகள்,செயற் திட்டங்கள் உள்ளன...அது எந்த வகையில் ஈழத்தில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் உள்ளன...மீள் குடியேற்றம் அது,இது காசு கொடுக்கிறோம் என எழுத வேண்டாம் அதை மாற்று கருத்தாளார்களும் தான் செய்கிறார்கள்...சும்மா இணையத்தில் வந்து நான் புலிக்கு ஆதரவாய் எழுதுகிற படியால் தேசியத்திற்கு ஆதரவு என்டும் எதாவது நடு நிலையாய் கதைத்தால் தேசியத்திற்கு எந்த வகையிலும் ஆதரவு இல்லை என்டும் எதை வைத்துக் கூற முடியும்...புலிகள் கடவுள் இல்லை அந்த கடவுளே பிழை விட்டாலும் நாங்கள் விமர்சிப்போம்...முருகன் மட்டும் வள்ளியை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்யலாமா என நாத்திகர்கள் கேட்கிறார்கள்...அப்படி இருக்கையில் எதாவது நடு நிலையாய் புலிகள் விட்ட பிழையை விமர்சிக்கையில் ஏன் மனம் ஏற்க மறுக்கிறது?

தயவு செய்து இதில் ஆரோக்கியமான விவாதத்தை முன் வையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியாததா ரதி? இப்ப இல்லாத புலியை விமர்சிக்கிறது தான் புது fபஷன். அதுவும் தேம்ஸ் நதிக்கரையில இருந்து செய்யேக்க அதுக்குத் தனி மரியாதையே இருக்கு. அது சரி புலி விமர்சனத்துக்கும் தாயகக் கோட்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எனக்குத் தெரிஞ்ச வரலாற்றின் படி தாயகக் கோட்பாட்டைப் புலியள் கொண்டு வரேல்ல, மித வாத தமிழ் தலைவர்கள் தான் முதலில முன் மொழிஞ்சவை. இதுக்கும் இல்லாமல் போன புலியளுக்கும் என்ன சம்பந்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் நான் எழுதுவதற்கு முன் இங்கு ஒருவர் எழுதியுள்ளார் பார்க்கவில்லையா?...நானே என்னை மாற்றுக் கருத்தாளார் என ஏற்கனவே எழுதி விட்டேனே உங்களுக்கு சிரமம் இல்லாமல் பிறகேன் நீங்கள் திரும்பவும் வந்து சிரமப்பட்டு அதை எழுதுகிறீர்கள்...புலி ஆதாரவாளர் ஆகிய தங்களிடம் கேட்கிறேன் தற்போதைய உங்கள் செயற் திட்டம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியாததா ரதி? இப்ப இல்லாத புலியை விமர்சிக்கிறது தான் புது fபஷன். அதுவும் தேம்ஸ் நதிக்கரையில இருந்து செய்யேக்க அதுக்குத் தனி மரியாதையே இருக்கு. அது சரி புலி விமர்சனத்துக்கும் தாயகக் கோட்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எனக்குத் தெரிஞ்ச வரலாற்றின் படி தாயகக் கோட்பாட்டைப் புலியள் கொண்டு வரேல்ல, மித வாத தமிழ் தலைவர்கள் தான் முதலில முன் மொழிஞ்சவை. இதுக்கும் இல்லாமல் போன புலியளுக்கும் என்ன சம்பந்தம்?

தாயகக்கோட்பாடு என்றால் என்ன?

அதில் புலிகளின் பங்கு என்ன?

புலிகள் தாயகத்தில் இருக்கிறார்களா இல்லையா?

என்று தெரியாத ஒருவர்

எப்படி மாத்துக்கருத்தாளராக முடியும்.....?

எனது கணப்பின்படி சம்பந்தப்பட்டவர்

முரளியின் பிரிவுக்கு பின் அவரது நிர்வாகத்தின் கீழிலிருந்த ஏதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கவேண்டும்

அதாவது இவருக்கு 5 வயது இருக்கலாம்

அதற்கு மேற்பட்ட எந்த குழந்தைக்கு கூட

இவற்றுக்கான பதில் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியை விமர்சனம் செய்வது தவறில்லை அது ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச்செல்லுமாய் இருந்தால் தாராளமாக விமர்சிக்கலாம். அதை விடுத்து மாதவிடாய் வராமல் விட்டால் அதுக்கும் காரணம் புலி என்று சொல்வதைத்தான் ஏற்கமுடியாது.

புலி ஆதரவாளன் என்று சொல்லவில்லை சாதாரண தமிழ்மகனாய் என்னோடை கருத்து என்னவென்றால் தமிழருக்கு என்று ஒரு தனி தாயகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இது அசைக்க முடியாத ஆணித்தரமான நம்பிக்கை. புலிகள் இருக்கும் வரை அவர்களின் செய்ற்பாடுகளில் உந்தப்பட்டு அவர்களுக்கு ஆதரவாய் இருந்தோம் இன்று அந்த நிலை மாறி விட்டதால் தமிழர் தரப்பில் சில குழறுபடிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இது என்றோ ஒரு நாள் முடிவடைய ஏதோ ஒரு தலைமை வரும் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் இல்லை எனில் எங்களில் இருந்தே ஒரு தலைமை கூட வரலாம் அதை தீர்மானிக்கப் போவது காலம் தான் அன்று ஆயுதம் தூக்க வேண்டும் எனில் தூக்கலாம் இல்லை அரசியல் மூலம் தீர்க்கலாம் என்றால் தீர்க்கலாம் அது காலத்தின் கட்டாயம். இன்றைய அதி நவீன தகவல் தொழில் நுட்ப உலகில் முப்பது வருடங்களில் செய்த சாதனைகளை மூன்றே வருடத்தில் செய்ய கூடும் அந்தளவுக்கு சகல துறைகளிலும் தமிழர்கள் முன்னேறியுள்ளார்கள்.

ஆனால் இன்னொரு பிரபாகரனையோ இன்னொரு விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ உருவாக்குவதல்ல, ஏனென்றால் இது என் தனிப்பட்ட கருத்து இன்னும் இன்னும் எம்மக்கள் சிங்களவன் தொல்லையால் வாழமுடியாது என்று எல்லாரும் உணரும் போது நிச்சயம் விடுதலைப் புலிகளை விட பலமான ஒரு அமைப்பு உருவாகும் ஆனால் அதற்கு முன் விடுதலைப்புலிகள் போல அழிந்து போவதற்கான எந்த அமைப்பும் உருவாகப்போவதில்லை கடைநிலை தமிழனும் போராடினால் தான் தீர்வு என்று உணரும் போது அன்றைய காலம் எதை தீர்மானிக்கிறதோ அந்த வழியில் போராடுவோம்.

அதுவரைக்கும் காத்திருந்து தான் ஆகவேண்டும் ஏனெனில் வரலாறு மிகப் பெரிய பாடத்தை எமக்கு கற்றுத்தந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலியை விமர்சனம் செய்வது தவறில்லை அது ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச்செல்லுமாய் இருந்தால் தாராளமாக விமர்சிக்கலாம். அதை விடுத்து மாதவிடாய் வராமல் விட்டால் அதுக்கும் காரணம் புலி என்று சொல்வதைத்தான் ஏற்கமுடியாது.

புலி ஆதரவாளன் என்று சொல்லவில்லை சாதாரண தமிழ்மகனாய் என்னோடை கருத்து என்னவென்றால் தமிழருக்கு என்று ஒரு தனி தாயகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இது அசைக்க முடியாத ஆணித்தரமான நம்பிக்கை. புலிகள் இருக்கும் வரை அவர்களின் செய்ற்பாடுகளில் உந்தப்பட்டு அவர்களுக்கு ஆதரவாய் இருந்தோம் இன்று அந்த நிலை மாறி விட்டதால் தமிழர் தரப்பில் சில குழறுபடிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இது என்றோ ஒரு நாள் முடிவடைய ஏதோ ஒரு தலைமை வரும் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் இல்லை எனில் எங்களில் இருந்தே ஒரு தலைமை கூட வரலாம் அதை தீர்மானிக்கப் போவது காலம் தான் அன்று ஆயுதம் தூக்க வேண்டும் எனில் தூக்கலாம் இல்லை அரசியல் மூலம் தீர்க்கலாம் என்றால் தீர்க்கலாம் அது காலத்தின் கட்டாயம். இன்றைய அதி நவீன தகவல் தொழில் நுட்ப உலகில் முப்பது வருடங்களில் செய்த சாதனைகளை மூன்றே வருடத்தில் செய்ய கூடும் அந்தளவுக்கு சகல துறைகளிலும் தமிழர்கள் முன்னேறியுள்ளார்கள்.

ஆனால் இன்னொரு பிரபாகரனையோ இன்னொரு விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ உருவாக்குவதல்ல, ஏனென்றால் இது என் தனிப்பட்ட கருத்து இன்னும் இன்னும் எம்மக்கள் சிங்களவன் தொல்லையால் வாழமுடியாது என்று எல்லாரும் உணரும் போது நிச்சயம் விடுதலைப் புலிகளை விட பலமான ஒரு அமைப்பு உருவாகும் ஆனால் அதற்கு முன் விடுதலைப்புலிகள் போல அழிந்து போவதற்கான எந்த அமைப்பும் உருவாகப்போவதில்லை கடைநிலை தமிழனும் போராடினால் தான் தீர்வு என்று உணரும் போது அன்றைய காலம் எதை தீர்மானிக்கிறதோ அந்த வழியில் போராடுவோம்.

அதுவரைக்கும் காத்திருந்து தான் ஆகவேண்டும் ஏனெனில் வரலாறு மிகப் பெரிய பாடத்தை எமக்கு கற்றுத்தந்துள்ளது.

இதை ஒரு நல்ல மாற்றுக்கருத்தாக நான் ஏற்கின்றேன்.

இதைத்தான் நான் வரவேற்கின்றேன்

நடந்தவைகளை ஏற்றுக்கொண்டு.......

இன்றைய நிலையை ஆராயமுடியுமே தவிர

நடந்தது எல்லாமே தப்பு என்று ஒருவர் மீது பழி போட்டுவிட்டு...........

செய்யும் எந்த காரியமும் நிற்காது நிலைக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் நான் எழுதுவதற்கு முன் இங்கு ஒருவர் எழுதியுள்ளார் பார்க்கவில்லையா?...நானே என்னை மாற்றுக் கருத்தாளார் என ஏற்கனவே எழுதி விட்டேனே உங்களுக்கு சிரமம் இல்லாமல் பிறகேன் நீங்கள் திரும்பவும் வந்து சிரமப்பட்டு அதை எழுதுகிறீர்கள்...புலி ஆதாரவாளர் ஆகிய தங்களிடம் கேட்கிறேன் தற்போதைய உங்கள் செயற் திட்டம் என்ன?

ரதி, உங்களை மாற்றுக்கருத்தாளர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அழிந்து போய் ஒரு வருடத்திற்கு மேலாகி விட்ட புலிகள் அமைப்பைப் பற்றி புலத்திலிருந்து இன்னும் விமர்சனம் செய்து தங்கள் சொந்த வாழ்க்கைக்கு இலாபம் தேடிக் கொள்ளும் தற்போதைய நிலையைச் சொன்னேன். புலிகள் இருக்கும் போது "போட்டுத் தள்ளி" விடுவார்கள் என்ற பயத்தில் மா,கள், சொல்லற்று செயலற்று இருந்தார்களாம் (இது அவர்களே சொல்வது, நான் சொல்வது அல்ல!). இப்ப புலிகள் இல்லாத இந்தப் பொழுதில் ஏன் சொல்லோடும் (அல்லது உங்களைப் போல வெறும் கோட்பாட்டு ரீதியான கேள்விகளோடும்!) விமர்சனத்தோடும் நிற்கிறீர்கள், போய் வெட்டிப் புடுங்குங்கோவன் எண்டால் மௌனம் தான் பதிலாகக் கிடைக்கிறது. இந்த மா.களின் மௌனமே அவர்களின் மாற்றுக் கருத்தின் ஊற்றிடம் குறித்து விளாவாரியாக விளங்கிக் கொள்ள உதவுகிறது என நான் நினைக்கிறேன். உதாரணத்திற்கு, மேலே விசுகு எழுதியது ஒரு பாரதூரமான உண்மை: "கருத்து" என்னவென்று தெரியாத நீங்கள் எப்படி "மாற்றுக் கருத்து" கண்டு கொண்டீர்கள், அது பற்றிப் பேசுகிறீர்கள்?

ஆனாலும் உங்கள் கேள்விகளுக்கு என் பதில் இது தான்:

வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம், அங்கே ஒரு தனி தேசமாக நாங்கள் உருவாக வேண்டிய தேவை சிங்களவர்களால், இந்தியர்களால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கு. இது இப்போதைக்கும், இனி வரும் காலத்திற்கும் பொருந்தக் கூடிய, நான் விளங்கிக் கொண்ட "தாயகக் கோட்பாடு"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா நானும் ஒரு சாதரண மனுசியாய் இருந்து கொண்டு தான் நினைவு தெரிந்த நாளில் இருந்து புலிக்கு என் ஆதரவைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்...புலியை ஆதரிப்பதால் புலி செய்யும் பிழைகளை எழுதக் கூடாது என்டு இல்லை....புலியை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்டால் யாருக்கு அந்த தகுதி இருக்குது எனச் சொல்ல முடியுமா?...மற்றும் படி நீங்கள் சொன்ன அனைத்துக் கருத்தும் உண்மை..ஆனால் அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்...எல்லோரையும் மாற்றுக் கருத்துக்காரன்,துரோகி என்டால் எப்படி எல்லோரையும் ஒன்றாக ஒருங்கிணைப்பீர்கள்...எல்லோரையும் ஒருங்கிணைக்காமல் திரும்பவும் போராட்டம் வெற்றி பெறும் என நினைக்கிறீர்களா...புலியை விமர்சிப்பதே திரும்பவும் எமது போராட்டம் தோற்று விடக் கூடாது என்பதற்காகத் தான் அதற்காக புலிகள் மீது முழுப் பழியையும் போட்டு விட்டு நழுவுகிற ஆள் நான் இல்லை...எல்லோரும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி,எல்லோரையும் அரவணைத்து சென்றால் எமது போராட்டம் தோற்காது என்பது என் கருத்து...மற்றும் படி நீங்கள் எழுதின மாதிரி மாத விடாய் வராததிற்கு காரணம் புலிகள் என்டு சொல்றது எல்லாம் சின்ன வயதிலே போராட்டத்தில் கலந்து கொள்ள பயந்து நாட்டை விட்டு ஓடி வந்த உங்களைப் போல ஆட்களாய் தான் இருக்கும்...நான் எப்போதாவது,எந்த திரியிலாவது எல்லாவற்றிக்கும் காரணம் புலிகள் என எழுதினேனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மாற்றுக் கருத்தாளார் என நீங்கள் சொல்லவில்லை ஆனால் சொன்னவர் இங்கு தான் நிற்கிறார்...எங்களால் புடுங்க முடியாது எனத் தெரியும் தானே அது தான் நீங்கள் என்ன செய்யப் போறீங்கள் எனக் கேட்கிறேன் அதற்கு உங்களிடம் பதில் இல்லை...நான் இத் திரியில் புலிகளை எங்கே இழுத்தேன் என எழுதுவீர்களா?...புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்த நிலையில் நீங்கள் இன்னும்,இன்னும் துரோகிப் பட்டம் கொடுப்பதை விட தமிழருக்கு எதாவது உருப்படியாய் செய்தீர்களா?...எல்லோரும் ஒன்றினையாமல் தமிழருக்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை அது இன்னும் இங்கு உள்ள தாங்கள் புலி ஆதரவாளார்கள் என சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு புரியாது இருப்பது தான் வேதனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கோட்பாடு என்பது தமிழர்கள் தமது பூர்வீக நிலத்தில் சுதந்திரமான வாழும் உரிமையை வலியுறுத்துவது. புலிகள் இடையில் ஓடும் அஞ்சல் ஓட்டக்காரன் போன்று வேகமாக ஓடினார்கள். எனினும் இறுதியாய் ஓடுவதற்கு வலுவான ஆட்கள் இல்லாததால் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இறுதி இலக்கை எட்டமுன்னரே தோல்வி என்று ஒப்புக்கொண்டு ஒதுங்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மாற்றுக் கருத்தாளார் என நீங்கள் சொல்லவில்லை ஆனால் சொன்னவர் இங்கு தான் நிற்கிறார்...எங்களால் புடுங்க முடியாது எனத் தெரியும் தானே அது தான் நீங்கள் என்ன செய்யப் போறீங்கள் எனக் கேட்கிறேன் அதற்கு உங்களிடம் பதில் இல்லை...நான் இத் திரியில் புலிகளை எங்கே இழுத்தேன் என எழுதுவீர்களா?...புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்த நிலையில் நீங்கள் இன்னும்,இன்னும் துரோகிப் பட்டம் கொடுப்பதை விட தமிழருக்கு எதாவது உருப்படியாய் செய்தீர்களா?...எல்லோரும் ஒன்றினையாமல் தமிழருக்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை அது இன்னும் இங்கு உள்ள தாங்கள் புலி ஆதரவாளார்கள் என சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு புரியாது இருப்பது தான் வேதனை

மன்னிக்க வேணும் ரதி, நீங்கள் "புலி எதிர்ப்பு" என்று கூறிய போது நான் விடுதலைப் புலிகளைப் பற்றியாக்கும் என தவறாக விளங்கிக் கொண்டிட்டன். இப்ப தான் அது வங்காளப் புலி எதிர்ப்பு என விளங்குது. மன்னிக்கவேணும். உங்களால புடுங்க முடியா விட்டால் மூடிக் கொண்டு போகலாமே? பிறகேன் ஆதரிக்கிறவன் என்ன செய்வான், அந்தரிக்கிறவன் என்ன செய்வான் எண்டு குழம்புவான்? அல்லது "தாயகக் கோட்பாட்டைத்" தவற விட்ட மாதிரி விடாமல் தவறாமல் செய்தி படியுங்கோ, நடக்கிற முயற்சிகள் என்ன, தோற்ற முயற்சிகள் என்ன எண்டு விளங்கும்.இதுக்கெல்லாம் இங்க இருக்கிறவங்கள் ஏன் நேரத்த வீணாக்குவான்?

Link to comment
Share on other sites

எனது கணப்பின்படி சம்பந்தப்பட்டவர்

முரளியின் பிரிவுக்கு பின் அவரது நிர்வாகத்தின் கீழிலிருந்த ஏதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கவேண்டும்

நான் குறிப்பிடுவது தலைப்புடன் பொருந்தவில்லையாயினும், இன்னொரு தலைப்பில் விகுசு அவர்கள் 'முரளி' என்று குறிப்பிட்டது நான் உட்பட பலரைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. அது முரளிதரன் தான் என்பது இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவை உண்டாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேணும் ரதி, நீங்கள் "புலி எதிர்ப்பு" என்று கூறிய போது நான் விடுதலைப் புலிகளைப் பற்றியாக்கும் என தவறாக விளங்கிக் கொண்டிட்டன். இப்ப தான் அது வங்காளப் புலி எதிர்ப்பு என விளங்குது. மன்னிக்கவேணும். உங்களால புடுங்க முடியா விட்டால் மூடிக் கொண்டு போகலாமே? பிறகேன் ஆதரிக்கிறவன் என்ன செய்வான், அந்தரிக்கிறவன் என்ன செய்வான் எண்டு குழம்புவான்? அல்லது "தாயகக் கோட்பாட்டைத்" தவற விட்ட மாதிரி விடாமல் தவறாமல் செய்தி படியுங்கோ, நடக்கிற முயற்சிகள் என்ன, தோற்ற முயற்சிகள் என்ன எண்டு விளங்கும்.இதுக்கெல்லாம் இங்க இருக்கிறவங்கள் ஏன் நேரத்த வீணாக்குவான்?

இதெல்லாம் சாதாரணம் ஐயா

புலிகளை ஒரு பகுதிக்கான ஆட்கள் என்று அவர் விபரிக்க வெளிக்கிட்டுத்தான் அவரை நான் புரிந்து கொண்டேன்

அதைவிட திரு. முரளிதரன் அவர்கள்

இன்றும் அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தால்

இன்றும் அவர்தான் தனது தலைவர் என்றும் இங்கு எழுதியிருந்தார்.

அதனால்தான் தாயகக்கோட்பாட்டை இங்கு முன் வைத்தேன்.

ஏனெனில் திரு. முரளிதரன் அவர்கள்

தமிழருக்கான சகல நடைமுறைகளையும் தற்போது மறுத்துவருகிறார்.

பின் குறிப்பு :- திரு. முரளிதரன் அவர்களை மிக மரியாதையாக எழுதியுள்ளேன்

ஏனெனில் மாற்றுக்கருத்து மாணிக்கங்களையும் மதிக்கவேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலியை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்டால் யாருக்கு அந்த தகுதி இருக்குது எனச் சொல்ல முடியுமா?...

வேலைக்கு போனசமயத்தில கயானீஸ்காரன் வந்து எனக்கு புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறான். வைத்தியரிட்ட போனால் வைத்தியசாலையில புலியைப்பற்றி விமர்சனம் செய்யுறாங்கள். யார் யாரோ எந்த எந்த மொழி பேசுகிறவன் எல்லாம் புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறாங்கள். நல்லமாதிரி விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை.. ஏதோ நாங்கள்தான் இயக்கம் நடத்துறமாதிரி கேள்விகள் கேட்டு கொல்லுறாங்கள். ஆனால்.. தமிழ்பேசும் உங்களுக்கு புலியை விமர்சிக்கக்கூடிய அந்தத்தகுதி இல்லை என்று சொல்லப்படுகிது. :rolleyes:

அதை விடுத்து மாதவிடாய் வராமல் விட்டால் அதுக்கும் காரணம் புலி என்று சொல்வதைத்தான் ஏற்கமுடியாது.

யோவ் மாப்பு, கொஞ்சம் பார்த்தப்பு.. தாய்க்குலத்திட்ட நல்லாய் முறிவாங்கப்போகிறீர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு போனசமயத்தில கயானீஸ்காரன் வந்து எனக்கு புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறான். வைத்தியரிட்ட போனால் வைத்தியசாலையில புலியைப்பற்றி விமர்சனம் செய்யுறாங்கள். யார் யாரோ எந்த எந்த மொழி பேசுகிறவன் எல்லாம் புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறாங்கள். நல்லமாதிரி விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை.. ஏதோ நாங்கள்தான் இயக்கம் நடத்துறமாதிரி கேள்விகள் கேட்டு கொல்லுறாங்கள். ஆனால்.. தமிழ்பேசும் உங்களுக்கு புலியை விமர்சிக்கக்கூடிய அந்தத்தகுதி இல்லை என்று சொல்லப்படுகிது. :)

quote]

கயனீஸ் காரனும் கனேடியனும் புலிகள் யாரெண்டே தெரியாத பார்வையாளர்கள். புலம் பெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் அல்லது அவர்களின் தாயக உறவுகள் பின் பொட்டுக்கால ஆமியிட்ட இருந்து தப்பியோடி வரும் போது, அவர்களுடைய முன் வீட்டு வாசலிலயும் ஒழுங்கை மூட்டிலயும் இன்றைக்கு விமர்சனப் பொருளாக இருக்கும் புலிகள் இயக்கக் காரன் ஒருவனாவது செத்து விழுந்திருப்பான். அப்பிடி ஒருத்தன் செத்திருக்காட்டி நாங்கள் இண்டைக்கு அவங்கள் குடுத்த உயிர வைச்சுக் கொண்டு இப்பிடி திடீர் மனிதாபிமானிகளாவும், இராணுவ ஆய்வாளர்களாகவும் உலா வர ஏலாது தானே? அந்த உயிருக்காவது நன்றியுணர்வை மனத்தின்ர ஒரு மூலையில வைச்சுக் கொண்டு விமர்சனத்தைச் செய்யுங்கோ எண்டு மட்டும் தான் நாங்க கேக்கிறம்.

Link to comment
Share on other sites

பொட்டுக்கால தப்பி ஓடும்போது உடல்சிதறி ஆயிரம் ஆயிரம் சனம் செத்தது. ஆயிரம் ஆயிரம் சனம் நிரந்தர அங்கவீனர்களானது. ஆயிரம் ஆயிரம் சனம் அகதிகளானது. ஆயிரம் ஆயிரம் சனம் வாழ்க்கையை இழந்தது. ஆயிரம் ஆயிரம் சனம் உளநிலை பாதிக்கப்பட்டது. இதிலை தப்பினதுகளிலை கொஞ்சம் வெளிநாட்டுக்கு வந்து தங்கடை வாழ்க்கையை தங்களுக்கு நடந்த சம்பவங்களை திரும்பிப்பார்க்கிதுகள். தங்கடை வாழ்க்கையை பற்றி சிந்திக்கிதுகள், கதைக்கிதுகள். அதுகளுக்கு ஒரு சிலர் எட்டப்பர் என்று பெயர் வைக்க... இன்னொரு சிலர் துரோகிகள் என்று பெயர் வைக்க.. இன்னும் சிலர் இப்ப மனிதாபிமானிகள்.. இராணுவ ஆய்வாளர்கள் என்றும் பெயர் வைக்கிறீனம். :D

சனங்களுக்கு என்று போராட வெளிக்கிட்ட அனைவரும் இங்கு அடிப்படையில் பின்னூட்டல் விமர்சனம் என்பதே தவறு எனும் வகையில் காலங்காலமாக சனங்களுக்கு ஓர் பயத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆளையாள் மண்டையில் போட்டு உருவாக்கப்பட்ட போராட்டத்தில்.. தமக்கும் மண்டையில் விழும் எனும் காரணத்தினால் எல்லோரும் பொத்திக்கொண்டார்கள். மண்டையில் போட வாறவன் புலியோ ஈப்பியோ ஈபீடீபியோ சூப்பியோ அல்லது புளட்டோ அல்லது ரெலோவோ என்ன இழவோ என்று ஒரு கோதாரியும் தெரியாது வாயை வாயை பொத்திப் பழக்கப்பட்ட சனங்கள் தொடர்ந்தும் பொத்திக்கொண்டு வாழவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தாயக கோட்பாடு என்பதற்கும் மண்டையில்போடும் கோட்பாடு என்பதற்கும் நிறைய சம்மந்தங்கள் உள்ளன போலும்.

புலிகளில் மாத்திரமல்ல.. வேறு இயக்கங்களிலும் உண்மையாக போராடிய போராளிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான தியாகங்கள் செய்தார்கள். எனது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என்று கூட்டிப்பார்த்தால் ஆக புலிப்போராளிகளாக இருந்து உயிர்நீத்தவர்களே சுமார் நூற்று ஐம்பதுக்கு மேல் வரும். இங்கு விமர்சனம் என்றால்.. இவர்களை போட்டுத்தாக்குவது என்பது அல்ல அர்த்தம். ஆனால் இங்கு பிரச்சனை என்ன என்றால் சில வால்பிடிகள் அரைகுறைகள் புலிகளை விமர்சனம் செய்யக்கூடாது என்று பூச்சாண்டி காட்டுவதுதான். :)

தலைவர் வன்னியில் இறந்துவிட்டாராம் என்று மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் பேசிய ஓர் கரும்புலியின் சகோதரனைக்கூட நான் பார்த்து இருக்கின்றேன். அவனது வீட்டில் இரண்டு மாவீரர்கள். இன்னொரு நண்பன் எனக்கு சொன்னான் என்ன மச்சான் இவன் இப்பிடி கதைக்கிறான் தூசணத்தால் ரெண்டு குடுக்கவேணும் போல இருக்கிது எண்டு. நான் நன்றியுணர்வுடன் இருப்பது என்று மேலே ஏதோ சொல்லப்பட்டதற்காக இந்தக்கதையை கூறுகின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா நானும் ஒரு சாதரண மனுசியாய் இருந்து கொண்டு தான் நினைவு தெரிந்த நாளில் இருந்து புலிக்கு என் ஆதரவைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்...புலியை ஆதரிப்பதால் புலி செய்யும் பிழைகளை எழுதக் கூடாது என்டு இல்லை....புலியை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்டால் யாருக்கு அந்த தகுதி இருக்குது எனச் சொல்ல முடியுமா?...மற்றும் படி நீங்கள் சொன்ன அனைத்துக் கருத்தும் உண்மை..ஆனால் அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்...எல்லோரையும் மாற்றுக் கருத்துக்காரன்,துரோகி என்டால் எப்படி எல்லோரையும் ஒன்றாக ஒருங்கிணைப்பீர்கள்...எல்லோரையும் ஒருங்கிணைக்காமல் திரும்பவும் போராட்டம் வெற்றி பெறும் என நினைக்கிறீர்களா...புலியை விமர்சிப்பதே திரும்பவும் எமது போராட்டம் தோற்று விடக் கூடாது என்பதற்காகத் தான் அதற்காக புலிகள் மீது முழுப் பழியையும் போட்டு விட்டு நழுவுகிற ஆள் நான் இல்லை...எல்லோரும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி,எல்லோரையும் அரவணைத்து சென்றால் எமது போராட்டம் தோற்காது என்பது என் கருத்து.

ரதி அக்கா,

மீண்டும் ஒருமுறை நான் எழுதியதை வாசியுங்கள் எங்காவது புலிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேனா? இல்லை புலிகளை விமர்சிக்க ஏதும் தகுதி வேண்டும் என்று சொல்லி இருக்கிறேனா? எதுக்கு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறிங்கள்?

இத்தனை அக்கறை எடுத்து புலிகளை விமர்சிக்கும் பலர் என்றாவது மாற்று இயக்கங்களால் படுகொலை செய்யப்பட்ட புலிகள்,புலிஆதரவாளர்கள்,மக்களைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறீர்களா? இன்று புலிகளை அழித்து ஒருவருடத்திற்கும் மேலாகிவிட்ட பின்னரும் கூட தமிழர்தாயகத்திலும் கொழும்பிலும் நடந்த கடத்தல்,காணாமல் போதலுக்கு ஒரு கண்டனமாவது தெரிவித்தீர்களா?? புலிகள் இருக்கும் வரை புலிகள் தான் காரணம் என்றீர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்? தவிர அவரவர் அவர்சார்ந்த,பிடித்த‌ அமைப்புக்காய் வக்காளத்து வாங்குகிறோமே தவிர நடுநிலையாய் இருப்பர்வர்கள் குறைவு தான். புலிகள் இல்லை என்றவுடன் புலிகளை விமர்சிக்கும் உங்களால் ஈபிடிபி யோ புளட்டோ மாற்றுக்கட்சிகளை உங்களால் விமர்சிக்க முடியுமா?? ஏனெனில் அவர்களிடம் இன்றும் ஆயுதம் இருக்கிறது அதனால் முடியுது. அவர்களுக்கு எதிராக கருத்துச்சொன்னால் ஊருக்கு போகமுடியாது இல்லை ஊரில் உள்ள உறவுகள் உயிருடன் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது புலிகளை மட்டும் எப்படி உங்களால் விமர்சனம் செய்யமுடியும்?? ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்ற மாதிரிக்கு புலிகள் இல்லை என்றவுடன் தேசியவாதிகளாக,ஜனநாயக வாதிகளாக காட்ட முனைகிறீர்கள் அவ்வளவும் தானே?

அடுத்து துரோகி பட்டம் குடுப்பதென்பது தன்னுடைய தவறை மற்றவன் மீது சுமத்த அல்லது தன் தப்பை மறைத்து தான் தப்பிக்கொள்வதற்காக சிலர் துரோகி என்கிறார்கள் சிலர் உண்மையிலேயே துரோகி ஆக இருக்கிறார்கள். ஒரு இனத்தின் இருப்பையே எதிரிக்கு காட்டிக்கொடுப்பவனை என்ன என்று சொல்வது? இதற்கு ஒரே வழி துரோகி பட்டம் வழங்குவதை விடுத்து அவர்களை விலக்கி விடுதலே நன்று இப்படியானவர்களுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் விட்டாலே நம்மில் பாதிப்பிரச்சனை குறைந்தது போல ஆகிவிடும். அதே போல நீங்கள் சொல்வது போல எல்லாரையும் இணைத்து செயற்படுவது என்பதும் முடியாத காரியம் இது எமது இனத்திற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை இனக்குழுமங்களிலும் உள்ள ஒரு விசயம் தான்.

பலமான எதிர்க்கட்சிகள் அவசியம் தான் ஆனால் எதிராக செயற்படுகிறோம் என்று எதிரிக்கு துணைபோகும் செயற்பாடுகள் தான் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாத விடாய் வராததிற்கு காரணம் புலிகள் என்டு சொல்றது எல்லாம் சின்ன வயதிலே போராட்டத்தில் கலந்து கொள்ள பயந்து நாட்டை விட்டு ஓடி வந்த உங்களைப் போல ஆட்களாய் தான் இருக்கும்...நான் எப்போதாவது,எந்த திரியிலாவது எல்லாவற்றிக்கும் காரணம் புலிகள் என எழுதினேனா?

ரதி அக்கா. இதுக்கு உண்மைலேயே ஒரு புலிப்போராளி கேட்டால் பதில் சொல்கிறேன். இல்லை ஊரில் உள்ள என் உறவுகளின் உயிருக்கு இங்கே யாராவது உத்தரவாதம் தந்தால் நான் பதில் சொல்கிறேன்.

வேலைக்கு போனசமயத்தில கயானீஸ்காரன் வந்து எனக்கு புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறான். வைத்தியரிட்ட போனால் வைத்தியசாலையில புலியைப்பற்றி விமர்சனம் செய்யுறாங்கள். யார் யாரோ எந்த எந்த மொழி பேசுகிறவன் எல்லாம் புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறாங்கள். நல்லமாதிரி விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை.. ஏதோ நாங்கள்தான் இயக்கம் நடத்துறமாதிரி கேள்விகள் கேட்டு கொல்லுறாங்கள். ஆனால்.. தமிழ்பேசும் உங்களுக்கு புலியை விமர்சிக்கக்கூடிய அந்தத்தகுதி இல்லை என்று சொல்லப்படுகிது. :)

கரும்பு அண்ணா,

உங்களுக்கு உரிய பதிலும் ரதி அக்கா கு எழுதியதில் இருக்கு.

யோவ் மாப்பு, கொஞ்சம் பார்த்தப்பு.. தாய்க்குலத்திட்ட நல்லாய் முறிவாங்கப்போகிறீர். :D

:D:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் வயதில் பெரியவர் ஒரு தலைப்பில் கருத்துகளை எழுதும் போது வடிவாய் வாசித்து விட்டு எழுதினால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...அடுத்தது தலைப்பு சம்மந்தமாக கருத்துகளை எழுதவும் இணையவனை பார்த்தீர்கள் என்டால் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் சம்மந்தம் இல்லாத செய்தியைப் பதிந்தார்...அடுத்தது நான் கருணாவின் விடயத்தில் எழுதியது கருணா இயக்கத்தை விட்டு வந்து அரசுக்கு எதிராகப் போராடி இருந்தால் நான் எனது ஆதரவை அவருக்கு கொடுத்திருப்பேன் அத்துடன் எப்படியாவது அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்திருப்பேன் என்டு தான் நான் எழுதி இருந்தேன்...கருணா தற்போது அரசுடன் இருக்கிறார் அவர் திரும்பவும் வந்து போராடுறது நடக்கிற காரியம் இல்லை...நான் கடந்த காலத்தை பற்றியே எழுதினேன் எதிர் காலத்தைப் பற்றி இல்லை

ஜீவா நானும் புலிகளோடு சம்மந்தப்பட்டு தான் இருக்கிறேன்...என் தாய்,சகோதரங்களும் ஊரில் தான் இருக்கிறார்கள்...நானும் யாழில் முள்ளிவாய்க்காலுக்கு முன்பாக மாற்றுக் கருத்துக்காரரை பலமாக விமர்சித்தவள் தான் வேண்டுமானால் கருத்துக்களத்தில் உள்ள பழைய பதிவுகளை பார்க்கவும்... ஆனால் எப்ப கைது செய்யப்பட்ட,காயப்பட்ட போராளிகளை விடுவிக்க டக்லஸ் போன்றவர்களின் உதவி தேவைப்பட்டதோ,என்னும் தேவைப்படுதோ அப் போதில் இருந்து அடக்கி வாசிக்கிறேன்...அவர்கள் அரசுடன் சேர்ந்து இருந்த படியால் தான் இலகுவாக எமக்காகப் பாடுபட்ட கொஞ்சப் போராளிகளையாவது விடுவிக்க முடிந்தது...இங்கே நாங்கள் தப்பி வந்து கொண்டு டக்லஸ் கூடாவன்,கருணா துரோகி என எழுதலாம் ஆனால் கடைசி நேரத்தில் கஸ்டப்பட்ட போராளிகளுக்கு தான் உண்மை தெரியும் அதற்காக நான் இவர்களை தியாகி என சொல்லவில்லை.

இன்னும் சில காலங்களின் பின் பெரிய ஒரு போராட்டம் எல்லோரும் சேர்ந்து தொடங்குவார்களாயின் அதில் கட்டாயம் கருணா தொடக்கம் டக்லஸ்சின் பங்கு வரை இருக்க வேண்டும்...எல்லோரையும் நாம் மீண்டும்,மீண்டும் உதாசீனப்படுத்தினால் எமது போராட்டம் மீண்டும் தோற்கும் ...அத்தோடு வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்டு ஆகி விடும்...நீங்கள் நினைக்கிறீங்கள் நான் கருணாவை ஆதரித்து எழுதி புலிகளை தாழ்த்தி எழுதுகிறேன் என்டு உண்மை அது இல்லை...நான் உண்மையாக நடந்ததை தான் எழுதினேன்...எமது போராட்டம் மீண்டும் தோற்க கூடாது என்பதற்காகத் தான் எழுதினேன்...யாழில் வந்து முகமூடி போட்டுக் கொண்டு நான் மற்றவர்களை மாதிரி உசுப்பேற்றும் கருத்துகளை எழுதிப் போட்டு 5,6 பச்சைகளை வாங்கிக் கொண்டு பேசாமல் இருக்கலாம் ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை...உண்மையாக கடைசி வரைக்கும் நின்று போராடின போராளிகள்,அவர்கள் உறவினர்கள்,அங்கு கடைசி வரைக்கும் இருந்த பொது மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது,புரியாது,புரிந்து கொள்ளவும் மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

பின் குறிப்பு :- திரு. முரளிதரன் அவர்களை மிக மரியாதையாக எழுதியுள்ளேன்

ஏனெனில் மாற்றுக்கருத்து மாணிக்கங்களையும் மதிக்கவேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசுகு நீங்கள் இணையவன் எழுதியதை தவறாக விளங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

தாயக கோட்பாடு தமிழர்கள் தங்கள் பூர்வீக நிலங்களில் சுதந்திரமாக வாழ்வது.

ஆனால் ஒவ்வொரு சிங்கள அரசும் மிகவும் கெட்டித்தனமாக திட்டமிட்டு பூர்வீக நிலங்களை சுவீகரித்து வருகிறார்கள். சுதந்திரந்தின் பின் டி எஸ் சேனநாயகா கெட்டித்தனமாக கல்லோயா, பட்டிப்பளை குடியேற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் பறி போய்விட்டன. கண்மூடித் திறப்பதற்குள் நான் அறிய தனியே தமிழர்கள் வாழ்ந்த யாழ்ப்பாணமும் பறி போய்க் கொண்டிருக்கிறது.

நான் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவன். பூர்வீக பூமி பறிபோதலின் வலி தெரியும். தங்கள் இனத்த்தின் விடிவுக்காய் இத்தனை போராளிக்கும் செத்து மடிந்தார்கள். சிங்களவன் இன்னும் மகாவம்சதிலிருந்தே சரித்திரத்தை தொடர்கிறான். இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. மாற்றுக் கருத்து இணையங்களை திறந்து பார்ப்பேன். சிங்களவர்களும் முஸ்லிகளும் படும் கஷ்டங்களை எண்ணி கண்ணீர் விடுவார்கள். யாழில் முஸ்லிம்கள் துரத்தப் பட்டதும், காத்தான்குடியில் முஸ்லிம்கள் படு கொலை செய்யப்பட்ட செய்திகளும் ஒவ்வொரு வருடமும் தங்களை தூசி தட்டி புதிதாய் திறக்கப்படும். இந்த மார்க்சிச, பூர்சுவா மக்குரோனி ஜனநாயகவாதிகளுக்கு தங்கள் சொந்த சகோதரர்கள் துரத்தியடிக்கப்பட்டதை பற்றி கவலை இல்லை. உண்மையில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. புலி அழிக்கபட்டு ஒன்றரை வருடங்கள். எந்த தடையும் இல்லை. புலி அழிந்தால் தீர்வு வரும் என்று சொன்னவர்கள் எந்த தீர்வை தந்துள்ளார்கள்.

எங்கள் சொத்தி அரசியல்வாதிகளுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. சரித்திரமும் தெரியவில்லை. பாவம் தமிழன்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

எம் இனத்தின் இருப்பிற்கு, பாதுகாப்பிற்கு தாய கோட்பாடு அவசியம். தமிழ் இனம் சுய நிர்ணைய அடிப்படையில் தம் தலைவிதியினை தீர்மானிப்பதற்கு வரலாற்று ரீதியாக வாழ்ந்த வாழும் நிலப்பகுதியும் மொழியும் தான் ஆதாரமாக உள்ளது.

வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை.

இந்த அடிப்படையில் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் வரலாற்று பூமி அங்கு நாம் காலங்காலமாக தனித்துவமான அடையாளங்களுடன் , தனி ஆட்சி புரிந்து வந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு எம் தாயகமாகும். தனித்துவ அடையாளங்கள் என்பது வரலாறு, பண்பாடு, அரசியல் , பொருளாதாரம் , மொழி ஆகியவற்றின் பின்பற்றுதல்களையும் வெளிப்பாடுகளையும் உள்ளடக்குகின்றது.

எம் தாயக கோட்பாட்டை நிறுவ நாம் தான் இலங்கைக்கு முன் வந்துள்ளோம் என்று கூறுதனைவிட அன்னிய ஆட்சிக்கு முன்பாகவும் அதன் பின்னரும் இருந்த நிர்வாக முறைமைகளை வைத்தே நிரூபிக்க முடியும்.

எம் தாயகம் எந்தக்காலத்திலும் ( வடக்கு கிழக்கு) பிரிக்கப்படாத தமிழர் இராட்சியமாக இருந்தது. இஃபையிடையே சில நிர்வாக ஒழுங்குகளுக்காக பலாத்காரமாக இணைக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் சட்ட ரீதியாக அப்படி எப்போதும் நிகழவில்லை ( 2002 இற்கு முன்னர்)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

புலியை விமர்சனம் செய்வது தவறில்லை அது ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச்செல்லுமாய் இருந்தால் தாராளமாக விமர்சிக்கலாம். அதை விடுத்து மாதவிடாய் வராமல் விட்டால் அதுக்கும் காரணம் புலி என்று சொல்வதைத்தான் ஏற்கமுடியாது.

புலி ஆதரவாளன் என்று சொல்லவில்லை சாதாரண தமிழ்மகனாய் என்னோடை கருத்து என்னவென்றால் தமிழருக்கு என்று ஒரு தனி தாயகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இது அசைக்க முடியாத ஆணித்தரமான நம்பிக்கை.

இன்றைய அதி நவீன தகவல் தொழில் நுட்ப உலகில் முப்பது வருடங்களில் செய்த சாதனைகளை மூன்றே வருடத்தில் செய்ய கூடும் அந்தளவுக்கு சகல துறைகளிலும் தமிழர்கள் முன்னேறியுள்ளார்கள்.

எம்மக்கள் சிங்களவன் தொல்லையால் வாழமுடியாது என்று எல்லாரும் உணரும் போது நிச்சயம் விடுதலைப் புலிகளை விட பலமான ஒரு அமைப்பு உருவாகும் ஆனால் அதற்கு முன் விடுதலைப்புலிகள் போல அழிந்து போவதற்கான எந்த அமைப்பும் உருவாகப்போவதில்லை கடைநிலை தமிழனும் போராடினால் தான் தீர்வு என்று உணரும் போது அன்றைய காலம் எதை தீர்மானிக்கிறதோ அந்த வழியில் போராடுவோம்.

அதுவரைக்கும் காத்திருந்து தான் ஆகவேண்டும் ஏனெனில் வரலாறு மிகப் பெரிய பாடத்தை எமக்கு கற்றுத்தந்துள்ளது.

ஜீவாவுக்கு ஒரு பச்சை.

அந்தக் காலம்வரை எம்மால் முடிந்த தொண்டுகளை, தமிழுக்கும், தாயக உறவுகளுக்கும் செய்வதே சாலச் சிறந்தது.

Link to comment
Share on other sites

இன்னும் சில காலங்களின் பின் பெரிய ஒரு போராட்டம் எல்லோரும் சேர்ந்து தொடங்குவார்களாயின் அதில் கட்டாயம் கருணா தொடக்கம் டக்லஸ்சின் பங்கு வரை இருக்க வேண்டும்...எல்லோரையும் நாம் மீண்டும்,மீண்டும் உதாசீனப்படுத்தினால் எமது போராட்டம் மீண்டும் தோற்கும் ...அத்தோடு வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்டு ஆகி விடும்...நீங்கள் நினைக்கிறீங்கள் நான் கருணாவை ஆதரித்து எழுதி புலிகளை தாழ்த்தி எழுதுகிறேன் என்டு உண்மை அது இல்லை...

அதே போல் அவர்களும்(மாற்று கருத்து வேறு.....தமிழனை அழிக்க வேண்டும் என்ற கருத்து வேறு)புலிகளையும் எம்மையும் உள் வாங்கவேண்டும் தமிழன் என்ற உணர்வோடு மட்டும்.....சிங்களவனுடம் கூட்டிக்கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் அல்ல :D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.