Jump to content

உறவென்று யாருமில்லாதவன் கழுத்துக்குக் கீழ் உணர்வுகள் அற்ற நிலையில் உதவிக்கும் ஆளின்றித் துடிக்கிறான்


Recommended Posts

audio.gifஉறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் துயரமுறுவதையோ கண்ணீர் விடுவதையோ விரும்பாத இவன் தனக்குள் தினமும் அழுவதை யாருக்கும் வெளிப்படுத்தாது தனக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான். தனது ஒவ்வொரு தேவைகளுக்கும் யாராவது ஒருவர் வந்து நிறைவேற்றினால்தான் எல்லாம் என்ற நிலமையில் இருக்கின்ற எதுவுமே இயலாத தன்னை அழித்துக்கொள்ளவே இயலாத பாவமாகத் தானிருப்பதைச் சொல்லித் துயருறும் இவனோடு பேசுகின்ற ஒவ்வொரு வினாடிகளும் உயிர் வலிக்கிறது. இவன் செய்தது ஒன்றுதான். தனது வாழ்வை எங்களுக்காகத் தரத்துணிந்ததுதான். நாங்கள் கனவுகாண எங்கள் கனவுகளின் வடிவமாகித் தங்களை அழித்துக் கொண்ட இவர்கள் இன்று சாவுகூடத் தங்களை ஏற்காதுள்ளதாகத் துயருறுகிறார்கள். காலம் இவர்களை வஞ்சித்துத் தன் காலடியில் இம் மனங்களை வைத்து மகிழ்கிறது. ஒரு தேசத்தின் விடுதலையை நேசித்தவர்களை இன்று நாங்கள் சாகடித்துக் கொண்டிருக்கின்றோம். உதவுகிறோம் என்று இவர்களின் படங்களை விபரங்களைச் சேர்த்தவர்கள் யாவரும் கைவிட்ட நிலமையில் உதவிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் இழந்து உயிரை மட்டும் வைத்திருக்கும் இளையோர்கள் இவர்கள். இவர்கள் இப்படியாகிப்போக இவர்கள் இப்படித் துயரங்களோடு சாக விரக்தியோடு வாழக் காரணமாகிப்போன எம்மீது கோபம் மட்டுமே வருகிறது. இவர்களுக்கான குறைந்தபட்சம் இவர்கள் வாழும் நாட்கள் வரையிலுமாவது ஏதாவது ஒரு நேரக்கஞ்சியாயினும் கொடுக்க ஒரு வழியைச் செய்ய வேண்டிய மாபெரும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்குமே உள்ளது. மாற்றங்களை விரும்பும் ஒவ்வொருவரும் இவர்களோடு பேசுங்கள். அதன் பின்னால் முடிவெடுங்கள் இப்போதைய தேவையென்ன என்பதை. எங்கள் கனவுகளின் விலாசங்களாகவும் எங்கள் மகிழ்ச்சிகளின் வெற்றியாளர்களாகவும் வாழ்ந்த மனிதக் கடவுளர்கள் இவர்கள். இவர்கள் வாழும் வரையான உதவிகளை நேசக்கரம் ஊடாக வேண்டுகிறோம். மீளவும் மீளவும் உங்களிடமே கையேந்துகிறோம். இதோ பேசக்கூட விரும்பாத கழுத்துக்குக் கீழ் இயக்கம் இல்லாது போன இந்த இளைஞனின் குரலிலிருந்து…..
Link to comment
Share on other sites

நீங்கள் பாவம் மினக்கட்டு பேட்டி கண்டு ஒலிப்பதிவை எல்லாம் இணைக்கிறீங்கள். இதை எத்தனைபேர் ஆர்வத்தோட அக்கறையோட கேட்பீனம் என்று நினைக்கிறீங்கள் சாந்தி அக்கா?

Link to comment
Share on other sites

நீங்கள் பாவம் மினக்கட்டு பேட்டி கண்டு ஒலிப்பதிவை எல்லாம் இணைக்கிறீங்கள். இதை எத்தனைபேர் ஆர்வத்தோட அக்கறையோட கேட்பீனம் என்று நினைக்கிறீங்கள் சாந்தி அக்கா?

விடாமுயற்சி பயன் தருமென்ற நம்பிக்கையில் இத்தகையோரின் குரல்களை அவர்களது துயர்களை எடுத்து வருகிறேன். ஈரமுள்ளோர் கட்டாயமாக இவர்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. பெரும்பாலானோருக்கு உதவிகள் இங்கு இணைத்த குரல்களைக் கேட்டு உதவியிருக்கிறார்கள்.

இந்தக்குரலுக்குரியவனுக்கு இன்னும் எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை. நிச்சயம் இவனுக்காகவும் யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது கரும்பு.

Link to comment
Share on other sites

என்னாலான சிறு தொகை அனுப்பலாம் என உள்ளேன்

தனிமடலில் சில விபரங்கள் கோரியுள்ளேன் விபரம் அனுப்பவும் நன்றி சாந்தி

நீங்கள் பாவம் மினக்கட்டு பேட்டி கண்டு ஒலிப்பதிவை எல்லாம் இணைக்கிறீங்கள். இதை எத்தனைபேர் ஆர்வத்தோட அக்கறையோட கேட்பீனம் என்று நினைக்கிறீங்கள் சாந்தி அக்கா?

தயவு செய்து முயற்சி செய்பவர்களை இடையூசெய்யாதீர்கள்

Link to comment
Share on other sites

தயவு செய்து முயற்சி செய்பவர்களை இடையூசெய்யாதீர்கள்

இடையூறு செய்வதா..? :D ஓர் முன்னாள் அங்கவீனப்பட்ட போராளி... இங்குள்ள பலரின் பாசையின் அடிப்படையில் பார்த்தால் இவர் ஓர் வரலாறு... இதற்கு ஓர் கருத்துதானும் எழுத பலருக்கு இஸ்டமில்லை. கடைசி ஓர் ஆறுதல் வார்த்தைதானும்... :) நான் குத்திக்காட்டவில்லை... ஆனால்.. படத்தை இணைத்து வீரவணக்கம் என்று போட்டிருந்தால்.. வரிசையாக வந்து வீரவணக்கம் கூறிவிட்டு சென்று இருப்பார்கள். நான் எல்லோரையும் கூறவில்லை. பொதுவாக கூறுகின்றேன். சிங்களவன் யாழ்ப்பாணத்திற்கு பன்பல் அடிக்க வருகின்றான் என்று செய்திபோட்டு இருந்தால் கோவணம் கழன்றுவிழும்வரை புடுங்கி எடுத்து இருப்பார்கள். :)

Link to comment
Share on other sites

இடையூறு செய்வதா..? :D ஓர் முன்னாள் அங்கவீனப்பட்ட போராளி... இங்குள்ள பலரின் பாசையின் அடிப்படையில் பார்த்தால் இவர் ஓர் வரலாறு... இதற்கு ஓர் கருத்துதானும் எழுத பலருக்கு இஸ்டமில்லை. கடைசி ஓர் ஆறுதல் வார்த்தைதானும்... :) நான் குத்திக்காட்டவில்லை... ஆனால்.. படத்தை இணைத்து வீரவணக்கம் என்று போட்டிருந்தால்.. வரிசையாக வந்து வீரவணக்கம் கூறிவிட்டு சென்று இருப்பார்கள். நான் எல்லோரையும் கூறவில்லை. பொதுவாக கூறுகின்றேன். சிங்களவன் யாழ்ப்பாணத்திற்கு பன்பல் அடிக்க வருகின்றான் என்று செய்திபோட்டு இருந்தால் கோவணம் கழன்றுவிழும்வரை புடுங்கி எடுத்து இருப்பார்கள். :)

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா?

நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்)

சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?

...சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது...

WELL SAID

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா? என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா?

நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்)

சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

ஆமென்

அதேநேரம் சிலருக்கு குறைமட்டமே சொல்லத்தெரியும்

செய்கை என்பது சிறிதளவும் இல்லை

செய்பவனையும் தொடர்ந்து சுமையை அழுத்தி அழித்து பின்னர்அவனை முட்டாளாக்கி தான் புத்திசாலி என்றபடியால் தப்பினேன் என்று கிண்டலடிக்கும்நோக்கமே தவிர....

சுமையை பங்கிடும் எந்த கருணையுமில்லை

நான் கரும்புவை இங்கு குறிப்பிடவில்லை

Link to comment
Share on other sites

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

சாந்தி அக்கா இணைக்கின்ற இவ்வாறான பதிவுகளிற்கு சென்று பாருங்கள் நான் நேசக்கரத்தை ஊக்குவிக்கும் வகையில் பெரும்பாலும் ஓர் பதிவு இட்டு இருப்பேன். நேசக்கரத்திற்கு சுமார் ஆறு மாதங்களாக ஓர் சிறிய அன்பளிப்பை கொடுத்து எனது ஊக்கத்தையும், ஆதரவையும் கொடுத்து வருகின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் காயங்களுக்கு மருந்து போடுவது பற்றி கருத்தாடல் செய்வதற்கு பலரினால் முடியவில்லை. இதை ஓர் உளவியல் பலவீனமாககூட கொள்ளலாம். ஏன் என்றால் நாம் இப்படிப்பட்டவர்களும் அல்லவா…

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா? நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்) சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

சாந்தி அக்கா குறிப்பிட்ட உறவுபற்றி எழுதிய கவிதையில் ஓர் ஆறுதல் வார்த்தையை முன்பு இங்கு பதிந்தேன். நான் எழுதிய கருத்து சாந்திக்கு அக்காவிற்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று நிச்சயம் நான் நினைக்கவில்லை.

அவனுக்காக.... இது கவிதையில்லை....

... குரைக்கிற நாய்களில், பல கடிக்காது!!!!! .....

உங்களைப்பற்றி கூறியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

ஓர் முன்னாள் அங்கவீனப்பட்ட போராளி... இங்குள்ள பலரின் பாசையின் அடிப்படையில் பார்த்தால் இவர் ஓர் வரலாறு... :D

வரலாறுகளை வாயினால் மட்டுமே பாதுகாப்போம் கரும்பு.

Link to comment
Share on other sites

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா?

நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்)

சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

மன்னிக்கவும் காரணிகன். கரும்பு நேசக்கரத்தோடு தனது ஆதரவுக்கரத்தை எப்போதுமே தந்து கொண்டேயிருக்கிறார். அவரது உதவியால் ஒரு பிள்ளை தனது உயர்கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கிறது. நான் போடுகின்ற இத்தகைய குரல்களுக்கு தனது ஆதரவினையும் ஊக்கத்தினையும் தரும் ஒரு மனிதாபிமானம் மிக்க உள்ளம். கதையைவிட தனது செயலால் தனது உதவிகளை இவ்வருடம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். தனது ஆதரவை என்றுமே எமக்குத் தந்து கொண்டிருக்கும் கரும்பு தனது மன ஆதங்கத்தையே அப்படி வெளிப்படுத்தினார். இந்த விடயங்களை கொண்டு வருவதற்காக நாம் செலவளிக்கும் நேரம் செலவு எல்லாவற்றையும் அறிந்தபடியால்தான் தனது வேதனையை அப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

காரணிகன் ,

மே 2009 மக்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்ட நேரம் இந்தக் களத்தில் அவர்களுக்கான உதவிகளைக் கோரிய நேரம் எனக்கு இந்தக்களத்தில் உள்ள கருத்தாளர்கள் பலர் தந்த பட்டம் நிறைய.அப்போதெல்லாம் தனது ஆதரவைத் தந்த நபர் இந்தக் கரும்பு. பழைய கருத்துக்களை தூசுதட்டினால் நிச்சயம் வெறுப்புத்தான் வரும் அந்தளவுக்கு நேசக்கரம் பற்றி நேசக்கரத்தில் எனது செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் விசனங்களை பல முகங்களின் கோரங்களை என்னால் பார்க்க முடிந்தது.

திண்ணையில் அரட்டையில் கூட நேசக்கரம் பற்றியே அர்ச்சனைகள் நடந்தது. அதையும்விட தனிமடலில் வந்த தூசணம் தேவார திருவாசகங்கள் வரை நிறைய களத்திலுள்ள பல முகங்கள் தந்த தொல்லைகள் அதிகம். இன்று அவர்களெல்லாம் சத்தமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களையும் இன்று கைநீட்டி வரவேற்கிறேன். அந்த நேரத்துக்கு கோபங்களை விட்டு இன்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக எல்லோரும் கைதர வேண்டுமென்ற விருப்பம் ஆனால் வெற்றி அரிதாகத்தானிருக்கிறது.

ஆரம்பத்தில் நீங்கள் எழுதியிருப்பது போல மனச்சோர்வு ஏன் இந்தத் தேவையில்லாத வேலையென்றெல்லாம் நினைத்து இதை நிறுத்திவிடவும் யோசித்ததுண்டு. ஆனால் அப்போது செய்த சிறு உதவிகளால் பயன்பெற்றோர் தந்த ஆறுதல் இன்றுவரை நின்று பிடிக்க வைத்துள்ளது. கடைசிமூச்சு உள்ள மட்டும் அவலப்பட்ட அவர்களுக்காக இயன்றதை உங்கள் போன்ற உதவும் உள்ளங்களின் ஆதரவோடு கொண்டு செல்வேன். இனி சோர்வு இடையூறு வராதென நம்புகிறேன்.

உங்களை வெளிப்படுத்தாமல் நீங்கள் ஏற்கனவே செய்த உதவி காமினி மகாவித்தியாலயத்தின் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு உதவியது. தற்போது இந்த உறவுக்காக உங்கள் ஆதரவினை நீட்டியுள்ளீர்கள். உங்கள் ஆதரவுக்கு கோடி நன்றிகள் காரணிகன். உங்கள் போல கரும்பு விசுகு ஜீவா இசைக்கலைஞன் இளைஞன் கஜந்தி சுவி கந்தப்பு வலைஞன் சுஜி என இப்படிப் பல உறவுகளின் ஆதரவு மேலும் மேலும் அவர்களுக்கான ஆதரவுக்கரங்களாக நீண்டு கொண்டேயிருக்கிறது. நிச்சயம் இன்னும் பலர் இணைவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா இணைக்கின்ற இவ்வாறான பதிவுகளிற்கு சென்று பாருங்கள் நான் நேசக்கரத்தை ஊக்குவிக்கும் வகையில் பெரும்பாலும் ஓர் பதிவு இட்டு இருப்பேன். நேசக்கரத்திற்கு சுமார் ஆறு மாதங்களாக ஓர் சிறிய அன்பளிப்பை கொடுத்து எனது ஊக்கத்தையும், ஆதரவையும் கொடுத்து வருகின்றேன்.

உங்கள் மாதாந்த உதவியால் ஒரு உயர்தர மாணவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார். உங்கள் ஆதரவு நேசக்கரத்தின் வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கிறது கரும்பு. என்றென்றும் எங்களது நன்றிகள் உங்களுக்கு.

Link to comment
Share on other sites

சாந்தி தனிமடலில் தங்களுக்கு அறிவித்த பிரச்சினை தற்பொழுதுதான் சரிசெய்யப்பட்டது

பணம் அனுப்பியுள்ளேன் கிடைத்ததும் தெரிவிக்கவும்

Link to comment
Share on other sites

சாந்தி கரும்பை புண்படுத்த அதனை நான் எழுதவில்லை எனது வார்த்தை பிரயோகத்திலிருந்து

அதனை நீங்கள் புரிந்துகொள்ளலாம்

வேடிக்கை மட்டும் பார்ப்பவர்களக்கு அது உந்துதலாக அமைந்துவிடும்

எனவேதான் அதனை குறிப்பிட்டேன்

கரும்பு நேசக்கரத்திற்கு தொடர்ந்து உதவி செய்வதை நான் அறிவேன்

Link to comment
Share on other sites

தகவல்களிற்கு நன்றி சாந்தி அக்கா. வசதிகிடைக்கும்போது தொடர்ந்து என்னால் முடிந்த ஆதரவை தருகின்றேன். காரணிகன் உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது, மிக்க நன்றி. நான் உங்களுக்கு அனுப்பிய பதில்மடல் போகவில்லை, திரும்பிவந்துவிட்டது. உங்கள் தபால்பெட்டி நிரம்பியுள்ளதோ தெரியாது. செக்பண்ணி பாருங்கள். அவலப்பட்டவர்கள் மீதான உங்கள் ஆதரவுக்கரத்திற்கும் மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

சாந்தி தனிமடலில் தங்களுக்கு அறிவித்த பிரச்சினை தற்பொழுதுதான் சரிசெய்யப்பட்டது

பணம் அனுப்பியுள்ளேன் கிடைத்ததும் தெரிவிக்கவும்

காரணிகன்,

நீங்கள் அனுப்பி வைத்த 75€ கிடைத்தது. மிகவும் நன்றி.

சாந்தி கரும்பை புண்படுத்த அதனை நான் எழுதவில்லை எனது வார்த்தை பிரயோகத்திலிருந்து

அதனை நீங்கள் புரிந்துகொள்ளலாம்

வேடிக்கை மட்டும் பார்ப்பவர்களக்கு அது உந்துதலாக அமைந்துவிடும்

எனவேதான் அதனை குறிப்பிட்டேன்

கரும்பு நேசக்கரத்திற்கு தொடர்ந்து உதவி செய்வதை நான் அறிவேன்

உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது காரணிகன்.

வேடிக்கையாளர்கள் எப்போதும் அப்படியே தானிருப்பார்கள். அவர்களை விடுவோம். நாங்கள் தொடர்ந்து எங்கள் ஆதரவுக்கரத்தினை அவலப்பட்டவர்களுக்கு நீட்டுவோம்.

Link to comment
Share on other sites

சாந்தி,

உங்களுக்கு எனது சார்பாய் அனுப்பட்ட பணத்தை இவருக்கு அனுப்புங்கள்.

Link to comment
Share on other sites

இந்த உறவுக்கு உதவியோர் விபரம்

காரணிகன் - 75,00€

ராஜா - 100,00€

ஜீவா - 100,00€

மொத்தம் - 275,00€இத்திரியில் உதவி கோரிய உறவுக்காக இதுவரை கிடைத்துள்ளது. அடுத்த வாரம் இந்த உதவி இவரது மருத்துவப் பொருட்கள் மற்றும் இதர சில பொருட்களும் வாங்கிக் கொடுக்கப்படும். உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

கரும்பு உங்கள் பிரார்த்தனை வீண்போகவில்லை. இந்த உறவுக்கு வாழ்வு முழுவதும் அவன் வாழும்வரையும் மாதாந்தம் அவனது தேவைகளுக்காக 15ஆயிரம் ரூபா தருவதற்கு முன்வந்துள்ளார் றோஷன் என்ற அன்பு உள்ளம். அந்த அன்பு உள்ளத்தின் மின்னஞ்சலில் ஒரு பகுதியை கீழே இணைக்கிறேன்.

அன்பின் சாந்தி

இந்த உறவை நான் எனது தம்பியாக ஏற்றுக்கொள்கிறேன். என் தம்பியை பராமரிக்க மாதமொன்றுக்கு தேவையான 15,000/- ரூபாவை ஒவ்வொருமாதமும் அனுப்புவேன்.

எனக்கு நீங்கள் ஒரு உத்தரவாதம் தரவேண்டும். இனி இவனைப்பராமரிப்பவர்கள் இவனோடு மிகுந்த அன்பாகவும் பாசமாகவும் சகிப்புணர்வோடும் பராமரிக்க வேண்டும்.

நீங்களும் அவனோடு அடிக்கடி தொடர்பில் இருந்து அவனுக்கு வாழவேண்டுமென்ற ஆசையை ஊட்டவேண்டும். இவனைப்பற்றி அடிக்கடி எனக்கு தெரியப்படுத்துங்கள்.

நான் பணம் தருவதால் இதைச் சொல்லவில்லை. இனிவரும் நாளில் அவன் மன ஆறுதலோடும், மகிழ்சியுடனும் இருக்கவேண்டும் என்ற துடிப்புடன் தான் கூறுகின்றேன்.

அவனிடம் கூறுங்கள் அவன் ஒற்றைக்கு இல்லையென்று. அவனுக்கு அக்கா(நீங்கள்), அண்ணா, இன்னும் அவனை அன்போடு பராமரிக்க ஏற்றுக்கொண்ட உறவுகள் என அவனைச் சுற்றி பல பேர் உண்டு என்று.

வாழ்க வளமுடன்

றோசன்

கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஒருவனை வாழ வைக்க கடவுள் போலொரு உறவு வந்திருக்கிறார். சகோதரர் றோசன் அவர்களை வணங்குகிறேன். இப்படியொரு உதவி கிடைக்குமா என்பதில் நம்பிக்கையற்றுப் போனபோது கடவுளாக வந்து இவ்வுதவியை வழங்க முன்வந்த சகோதரர் றோசன் அவர்கள் போல ஒவ்வொருவரும் முன்வந்தால் இன்னும் ஆயிரம் பேரை நிம்மதியாக வாழ வைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தினூடாக ஈழத்து எம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய காரணிகன், ஜீவா, ராஜா அண்ணா அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்னால் முடியவில்லை எனும் போது வேறு கருத்துக்களை எழுத முடியவில்லை.

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு உங்கள் பிரார்த்தனை வீண்போகவில்லை. இந்த உறவுக்கு வாழ்வு முழுவதும் அவன் வாழும்வரையும் மாதாந்தம் அவனது தேவைகளுக்காக 15ஆயிரம் ரூபா தருவதற்கு முன்வந்துள்ளார் றோஷன் என்ற அன்பு உள்ளம். அந்த அன்பு உள்ளத்தின் மின்னஞ்சலில் ஒரு பகுதியை கீழே இணைக்கிறேன்.

கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஒருவனை வாழ வைக்க கடவுள் போலொரு உறவு வந்திருக்கிறார். சகோதரர் றோசன் அவர்களை வணங்குகிறேன். இப்படியொரு உதவி கிடைக்குமா என்பதில் நம்பிக்கையற்றுப் போனபோது கடவுளாக வந்து இவ்வுதவியை வழங்க முன்வந்த சகோதரர் றோசன் அவர்கள் போல ஒவ்வொருவரும் முன்வந்தால் இன்னும் ஆயிரம் பேரை நிம்மதியாக வாழ வைக்கலாம்.

தமிழினம் இதிலிருந்தும் மீளும்

நம்பிக்கை தருகிறார்கள் எம் இளையோர்

நன்றி ஐயா

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆயிரம் பேர் இல்லை சாந்தி அக்கா, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்கும் கைகொடுத்து அவர்கள் வாழ வழி செய்வோம்.

Link to comment
Share on other sites

ஆயிரம் பேர் இல்லை சாந்தி அக்கா, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்கும் கைகொடுத்து அவர்கள் வாழ வழி செய்வோம்.

ஏராளனுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.