Jump to content

கருவாட்டுக் குழம்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

கருவாட்டுக் குழம்பு.

p_dry-fish2.jpgSDC11275.JPG

தேவையான பொருட்கள்:

சதையுள்ள கருவாடு 700 கிராம்,

கத்தரிக்காய் 300 கிராம்,

பச்சை மிளகாய் 6,

வெங்காயம் 2,

கடுகு 1 தேக்கரண்டி,

பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி,

வெந்தயம் 1 தேக்கரண்டி,

மிளகாய்த் தூள் 2 - 3 மேசைக்கரண்டி,

தாழிக்க எண்ணை,

பழப்புளி கொஞ்சம்,

விரும்பினால் தக்காளிப் பழம் போடலாம்.

செய்முறை:

கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி, ஒரு மணித்தியாலம் ஊற விடவும். பின் அதன் தோலை நீக்கி வடிவாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவினால் அதில் உள்ள உப்பு போய் விடும்.

கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும்.

இனி.... நீளமாக அரிந்த வெங்காயத்தை பாத்திரத்தில் இட்டு சிறிது வதக்கவும்.

வதக்கும் போது... கடுகு, பெருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றையும் போட்டு தாழிக்கவும்.

இப்போ இரண்டரை கப் தண்ணீர் விட்டு...... கருவாடு, கத்தரிக்காய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்த கருவாட்டுக் குழம்பில் உப்பின் ருசி பார்க்கவும். உப்பு காணாமல் இருந்தால் போடவும்.

உப்பு கூடியிருந்தால் இரண்டு உருளைக்கிழங்கை போடவும்.

இப்போ.... சுவையான கருவாட்டுக் குழம்பு தயார்.

இந்தக்குழம்பு சோறு, புட்டு, இடியப்பம் எல்லாவற்றுடனும் கலந்து சாப்பிட தோதாக இருக்கும்.

கருவாடு சமைத்த பின் வீட்டின் ஜன்னல்களை அகலாமாக திறந்து விடவும்.

.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

பிடித்தமான உணவு ஸ்ரீ. நான் சிலவேளை மரவள்ளி கிழங்கும் போடுவேன்.

கொட் கருவாடு (Salt Cod Fish) ஐ 1 -2 நாள் குளிர்ந்த நீரில் ஊறப்போட்டு (அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்-போர்த்துகீசிய முறை)) கருவாட்டுக் குழம்பு செய்து பாருங்கள் மிகவும் சுவையாயிருக்கும். ஒரு காய் தக்காளியும் போட்டால் இன்னும் சுவை. <_<

Link to comment
Share on other sites

சிறி அண்ணை! கருவாடும் கத்தரிக்காயும் சேர்த்துச் சமைச்சால்.... அதோட ருசியே தனிதான். :)

அதுவும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தீயாப்பாரக் கருவாடு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்!

நினைக்கவே வாய் ஊறுது! <_<

பசியை கிளப்பீட்டீங்களே அண்ணை! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி உங்கட வீட்டில நவராத்திரிக்கு வைவம் ஆக இருக்க இல்லையோ <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமான உணவு ஸ்ரீ. நான் சிலவேளை மரவள்ளி கிழங்கும் போடுவேன்.

கொட் கருவாடு (Salt Cod Fish) ஐ 1 -2 நாள் குளிர்ந்த நீரில் ஊறப்போட்டு (அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்-போர்த்துகீசிய முறை)) கருவாட்டுக் குழம்பு செய்து பாருங்கள் மிகவும் சுவையாயிருக்கும். ஒரு காய் தக்காளியும் போட்டால் இன்னும் சுவை. <_<

bacalao.jpg

இந்தக் கருவாட்டைத் தானே... சொல்கிறீர்கள் தப்பிலி. நான் இதனை ஸ்பெயின் கடையில் வாங்கி சமைத்துள்ளேன் நன்றாக இருக்கும். :)

நீங்கள் சொன்ன மாதிரி சரியான உப்பு, கன நேரம் ஊற விட வேணும். கருவாடு சமைக்கும் போது மரவள்ளிக்கிழங்கும், தக்காளிக்காயும் போட்டு சமைத்துப் பார்க்கவில்லை. அடுத்த முறை உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும். :lol:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை! கருவாடும் கத்தரிக்காயும் சேர்த்துச் சமைச்சால்.... அதோட ருசியே தனிதான். :)

அதுவும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தீயாப்பாரக் கருவாடு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்!

நினைக்கவே வாய் ஊறுது! <_<

பசியை கிளப்பீட்டீங்களே அண்ணை! :lol:

பார்த்தீபன் நீங்கள் சொல்லும் "தீயாப்பாரை கருவாடு" பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன் இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை.

சிலவேளை... தமிழ்க் கடைகளில் இருக்குமோ.... தெரியவில்லை. நவராத்திரி பூசை முடிய கருவாடு செய்து சாப்பிடுங்களேன். அதற்கு முன்னம் செய்தால்.... எனக்குத் தான் பாவம் கிடைக்கும். :lol:

தமிழ்சிறி உங்கட வீட்டில நவராத்திரிக்கு வைவம் ஆக இருக்க இல்லையோ :)

ரதி, நவராத்திரி பூசை தொடங்கி விட்டதா?

இந்த முறை தமிழ் கடையில் கலன்டர் தராத படியால்...... எல்லா நாளும் ஒரு மாதிரி கிடக்குது. :lol:

சரி..... தெரியாமல் செய்தால் குற்றம் இல்லை. :lol:

நாளையிலேயிருந்து விரதம் பிடிக்க வேணும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்திலி மீன் கருவாடு சுவையாக இருக்கும்...நல்ல பதிவு தோழர் தமிழ்சிறி <_<

Link to comment
Share on other sites

bacalao.jpg

இந்தக் கருவாட்டைத் தானே... சொல்கிறீர்கள் தப்பிலி. நான் இதனை ஸ்பெயின் கடையில் வாங்கி சமைத்துள்ளேன் நன்றாக இருக்கும். <_<

நீங்கள் சொன்ன மாதிரி சரியான உப்பு, கன நேரம் ஊற விட வேணும். கருவாடு சமைக்கும் போது மரவள்ளிக்கிழங்கும், தக்காளிக்காயும் போட்டு சமைத்துப் பார்க்கவில்லை. அடுத்த முறை உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும். :)

.

இருக்கலாம். சரியாய ஊகிக்க முடியவில்லை. பெரிய மீன். நிறைய சதை பிடிப்புள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bacalao.jpg

இந்தக் கருவாட்டைத் தானே... சொல்கிறீர்கள் தப்பிலி. நான் இதனை ஸ்பெயின் கடையில் வாங்கி சமைத்துள்ளேன் நன்றாக இருக்கும். <_<

நீங்கள் சொன்ன மாதிரி சரியான உப்பு, கன நேரம் ஊற விட வேணும். கருவாடு சமைக்கும் போது மரவள்ளிக்கிழங்கும், தக்காளிக்காயும் போட்டு சமைத்துப் பார்க்கவில்லை. அடுத்த முறை உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும். :)

.

தமிழ்சிறி அண்ணா உந்த கருவாடு ஜேர்மனியிலுள்ள மீன் விக்கும் அத்தனை கடையளிலையும் இருக்கு. ஹொலண்ட் ல இருந்து வாங்குறது நல்ல மலிவும் அண்ணா. தமிழ்கடையிலை கிலோ 5.90€விக்கினம்.

Link to comment
Share on other sites

நன்றி சிறி அண்ணா, எழும்பின உடனேயே பார்த்தேன்... ஒரு பெருமூச்சோடு போய் விட்டேன். கருவாட்டுக் குழம்பு சமைச்சு வருசக் கணக்காகி விட்டது. செய்முறை சூப்பர் ஆக இருக்கிறது. அடுத்த வார விடுமுறைக்கு சமைக்கிறதா முடிவு எடுத்துவிட்டேன். <_< எனது சார்பாக green-plus.jpg

அது சரி எங்க தேன்மொழியை வெட்டிப் போட்டீங்கள்? :lol:

புரட்சி தோழரே, நெத்தலி கருவாடு பழைய சோறோடு, புட்டோடு சாப்பிட்டால் நல்ல இருக்கும். :)

இந்தக் கொடியில காயிறதில ஏதாவது ஒன்று எடுத்து குழம்பு வையுங்கோ... :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்திலி மீன் கருவாடு சுவையாக இருக்கும்...நல்ல பதிவு தோழர் தமிழ்சிறி :D

DSC01730.JPG

புரட்சி, நெத்தலி மீன் கருவாட்டுப் பொரியல் சாப்பிடிருக்கிறீர்களா? மிகவும் சுவையாக இருக்கும். :)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா உந்த கருவாடு ஜேர்மனியிலுள்ள மீன் விக்கும் அத்தனை கடையளிலையும் இருக்கு. ஹொலண்ட் ல இருந்து வாங்குறது நல்ல மலிவும் அண்ணா. தமிழ்கடையிலை கிலோ 5.90€விக்கினம்.

ஜீவா, தமிழ் கடையில் இந்தக் கருவாட்டை இன்னும் காணவில்லை. சிலவேளை மணம் வெளியே வராமல் வடிவாக சுத்தி வைத்திருக்கிறார்களோ தெரியாது. அடுத்த முறை தமிழ்க் கடைக்குப் போகும் போது கேட்டுப் பார்க்க வேணும். இந்தக் கருவாட்டை ஸ்பெயின் கடையிலை உள்ள பொம்பிளை கிலோ 9 € விற்கிறா. இது தான் தப்பிலி சொன்ன கருவாடு என்று நினைக்கின்றேன். ஜீவா, உங்கள் பக்கம் உள்ள தமிழ் கடையில்..... சனிக்கிழமை பங்கு ஆட்டிறைச்சி விற்கிறார்களா? இங்கு ஒரு பங்கு ஆட்டிறைச்சி 10 €. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ வரும். லக் இருந்தால் கனக்க இறைச்சி வரும். லக் இல்லாவிட்டால் எலும்பு தான் கனக்க வரும். :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி அண்ணா, எழும்பின உடனேயே பார்த்தேன்... ஒரு பெருமூச்சோடு போய் விட்டேன். கருவாட்டுக் குழம்பு சமைச்சு வருசக் கணக்காகி விட்டது. செய்முறை சூப்பர் ஆக இருக்கிறது. அடுத்த வார விடுமுறைக்கு சமைக்கிறதா முடிவு எடுத்துவிட்டேன். :D எனது சார்பாக green-plus.jpg

அது சரி எங்க தேன்மொழியை வெட்டிப் போட்டீங்கள்? :)

--------

குட்டி, இந்தக் கருவாட்டுக் குழம்பை வார விடுமுறையில் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள். குழம்பு திக்காக வர..... வேறை ஏதாவது அயிற்றம் சேர்க்க வேணும் என்றால், மறக்காமல் குறிப்பிடுங்கள். :)

ஓம்.... குட்டி, முதலில் கருவாட்டு குழம்புக்கு தேன் மொழியின் பாட்டு இணைத்திருந்தேன்.....

ஆக்கள் தேன் மொழியை பார்த்திட்டு.... கருவாட்டு குழம்பை கவனிக்காமல் விட்டு, விடுவார்களோ என்று நீக்கி விட்டேன். :)

நீங்கள் இரண்டையும் பார்த்திருக்கிறீர்கள். குட்டிக்காக பாடல் மீண்டும் இணைக்கப் படுகின்றது...... :)

http://www.youtube.com/watch?v=iD_20oB8Xv0&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல இருக்கிறதால நல்ல மீன்கள் கிடைக்கின்றன கருவாடும் போட்டு வைத்திருக்கிறோம் வேண்டுமானவர்கள் தொடர்பு கொள்ளவும் தமிழ் சிறி அண்ணா நல்ல கீரி கருவாடு இருக்கு குழம்பு தூக்கிவிடுகிறது :D:)

Link to comment
Share on other sites

இந்தக் கருவாட்டை ஸ்பெயின் கடையிலை உள்ள பொம்பிளை கிலோ 9 € விற்கிறா.

ஸ்பெயினில இந்த கருவாட்டின் விலை 2 € தான். நீங்க விட்ட லுக்குக்கு எக்ஸ்ராவா 7 € எடுத்திருக்கிறாள். :D

Link to comment
Share on other sites

மீனை குளிர்பதனப் படுத்தாட்டில் கெட்ட ஸ்மெல் வருமே..! :D உதை எப்பிடிச் சமைச்சுச் சாப்பிடுறதாம்? :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் நிலையில் வாங்காமல் " கருவாட்டு நிலையில் " ஆக்க பட்ட் பின் வாங்கவும். :D வாசம் தவிர்க்கமுடியாதது.

Link to comment
Share on other sites

குட்டி, இந்தக் கருவாட்டுக் குழம்பை வார விடுமுறையில் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள். குழம்பு திக்காக வர..... வேறை ஏதாவது அயிற்றம் சேர்க்க வேணும் என்றால், மறக்காமல் குறிப்பிடுங்கள். :)

ஓம்.... குட்டி, முதலில் கருவாட்டு குழம்புக்கு தேன் மொழியின் பாட்டு இணைத்திருந்தேன்.....

ஆக்கள் தேன் மொழியை பார்த்திட்டு.... கருவாட்டு குழம்பை கவனிக்காமல் விட்டு, விடுவார்களோ என்று நீக்கி விட்டேன். :)

நீங்கள் இரண்டையும் பார்த்திருக்கிறீர்கள். குட்டிக்காக பாடல் மீண்டும் இணைக்கப் படுகின்றது...... :D

...

நேற்று காலை மேலோட்டமாக பார்த்துவிட்டு போய்விட்டேன், திரும்பி வந்து பார்த்த போது ஏதோ மிஸ்ஸிங் என்று தெரிஞ்சது அது தான் கேட்டேன். :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, தமிழ் கடையில் இந்தக் கருவாட்டை இன்னும் காணவில்லை. சிலவேளை மணம் வெளியே வராமல் வடிவாக சுத்தி வைத்திருக்கிறார்களோ தெரியாது. அடுத்த முறை தமிழ்க் கடைக்குப் போகும் போது கேட்டுப் பார்க்க வேணும். இந்தக் கருவாட்டை ஸ்பெயின் கடையிலை உள்ள பொம்பிளை கிலோ 9 € விற்கிறா. இது தான் தப்பிலி சொன்ன கருவாடு என்று நினைக்கின்றேன். ஜீவா, உங்கள் பக்கம் உள்ள தமிழ் கடையில்..... சனிக்கிழமை பங்கு ஆட்டிறைச்சி விற்கிறார்களா? இங்கு ஒரு பங்கு ஆட்டிறைச்சி 10 €. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ வரும். லக் இருந்தால் கனக்க இறைச்சி வரும். லக் இல்லாவிட்டால் எலும்பு தான் கனக்க வரும். :D:)

சிறி அண்ணா நான் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு தமிழ்க்கடையில் வேலைசெய்கிறேன் அங்கு இந்த கருவாடு இருக்குது அண்ணா கிலோ 5.90€ தான் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் தெரியாது ஆனால் NRW பக்கம் அல்லது Dortmund போனால் அனேகமான எல்லா தமிழ்க்கடைகளிலும் வாங்கலாம் அண்ணா.

அப்புறம் நான் இருக்கிற இடத்திலை இருந்து Kempen பக்கத்திலை தான் அங்கை போனால் ஆடு நல்ல மலிவா வாங்கலாம் அண்ணா 15_20கிலோ இருக்க கூடிய நல்ல ஆடு 60_70€க்கு வாங்கலாம் நாங்கள் நிக்கவே ஒரு சூடு ஆடு மண்டைய போட உரிச்சு தருவான். பிறகு நாங்கள் பங்குபோடவேண்டியது தான். :D

மீனை குளிர்பதனப் படுத்தாட்டில் கெட்ட ஸ்மெல் வருமே..! :) உதை எப்பிடிச் சமைச்சுச் சாப்பிடுறதாம்? :(:)

மாமோய்..

உதுக்கு தான் என்னை மாதிரி மீனே சாப்பிடக்கூடாது. :D

Link to comment
Share on other sites

கருவாட்டுக்கறிக்கு நன்றி சிறி. உப்புக்கு நன்றாக சுடுதண்ணியில் ஊறவிட்டால் போகுமா?

Link to comment
Share on other sites

அப்புறம் நான் இருக்கிற இடத்திலை இருந்து Kempen பக்கத்திலை தான் அங்கை போனால் ஆடு நல்ல மலிவா வாங்கலாம் அண்ணா 15_20கிலோ இருக்க கூடிய நல்ல ஆடு 60_70€க்கு வாங்கலாம்

ஜீவா

ஜேர்மனியில் இறைச்சி வகை சுவை கூடியதாக இருக்கும் என அங்கிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்துள்ள நண்பன் கூறினான். ஒரு முறை அங்கு வந்த போது நண்டும் மாட்டு இறைச்சியும் சாப்பிடிருக்கிறேன். நன்றாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல இருக்கிறதால நல்ல மீன்கள் கிடைக்கின்றன கருவாடும் போட்டு வைத்திருக்கிறோம் வேண்டுமானவர்கள் தொடர்பு கொள்ளவும் தமிழ் சிறி அண்ணா நல்ல கீரி கருவாடு இருக்கு குழம்பு தூக்கிவிடுகிறது :(:D

முனிவர், கீரியிலும் கருவாடு செய்வார்களா? :):):)

pine_marten_lge.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினில இந்த கருவாட்டின் விலை 2 € தான். நீங்க விட்ட லுக்குக்கு எக்ஸ்ராவா 7 € எடுத்திருக்கிறாள். :)

சும்மா..... மேலாலை பாத்ததுக்கு 7 € ரொம்ப அநியாயமாயிருக்கே.... தப்பிலி.

இதுக்குத் தான் கருவாட்டுக் கடையிலை, வடிவான பொம்பிளையளை வேலைக்கு வைத்திருக்கிறார்கள் போலை... :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனை குளிர்பதனப் படுத்தாட்டில் கெட்ட ஸ்மெல் வருமே..! :) உதை எப்பிடிச் சமைச்சுச் சாப்பிடுறதாம்? :D:)

மீன் நிலையில் வாங்காமல் " கருவாட்டு நிலையில் " ஆக்க பட்ட் பின் வாங்கவும். :D வாசம் தவிர்க்கமுடியாதது.

கருவாட்டை.... கெட்ட ஸ்மெல் என்று சொன்ன இசைக்கலைஞனை வன்மையாக கண்டிக்கின்றேன். :)

நிலாமதி அக்கா சொன்னமாதிரி வாசம். :D

வாசத்துக்கும், கெட்ட ஸ்மெலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத இசைக்கு...... மூக்கிலை பிரச்சினை போலை.... :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நான் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு தமிழ்க்கடையில் வேலைசெய்கிறேன் அங்கு இந்த கருவாடு இருக்குது அண்ணா கிலோ 5.90€ தான் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் தெரியாது ஆனால் NRW பக்கம் அல்லது Dortmund போனால் அனேகமான எல்லா தமிழ்க்கடைகளிலும் வாங்கலாம் அண்ணா.

அப்புறம் நான் இருக்கிற இடத்திலை இருந்து Kempen பக்கத்திலை தான் அங்கை போனால் ஆடு நல்ல மலிவா வாங்கலாம் அண்ணா 15_20கிலோ இருக்க கூடிய நல்ல ஆடு 60_70€க்கு வாங்கலாம் நாங்கள் நிக்கவே ஒரு சூடு ஆடு மண்டைய போட உரிச்சு தருவான். பிறகு நாங்கள் பங்குபோடவேண்டியது தான். :)

-------

ஜீவா, NRW ல் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்க்கடை திறப்பார்களா? நான் இருப்பது BW பக்கம். இங்கு ஒரு ஜேர்மன் ஆட்டுப் பண்ணையில் நல்ல ஆட்டுத்துடை வாங்கலாம். ஒரு துடை 3 - 4 கிலோ இருக்கும். கிலோ 5 € தான். ஆனால் அது செம்மறி ஆடு. சிலர் ஊர் ஆடு வாங்க வேறு இடங்களுக்கு செல்வார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து போனால்.... கெட்டுப் போய் விடுவேன் என்று...... மனிசி என்னை போக விடுவதில்லை. :):(

கருவாட்டுக்கறிக்கு நன்றி சிறி. உப்புக்கு நன்றாக சுடுதண்ணியில் ஊறவிட்டால் போகுமா?

நுணா, கருவாட்டை சுடுதண்ணீரில் போட்டால்... அதன் தோல் இலகுவாக கழரும். கருவாட்டை தோலுடன் சமைத்தால் ஒரு மாதிரி இருக்கும். மற்றும் படி உப்பு போகவேணுமென்றால் பல முறை குளிர்ந்த நீரில் சிறிது ஊறவிட்டு கழுவ வேண்டும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.