Jump to content

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்


Recommended Posts

யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன்.

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி)

மறைவு : 18 ஒக்ரோபர் 2010

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும்,

நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

பாலகுமார்(கனடா), சுமித்திரா(இலங்கை), சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

கதிர், கார்த்திகா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

வைஷ்னவி(இலங்கை), நிருபன், நிதர்சனா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

http://www.lankasrinotice.com/ta/obituary.php?20101018201371

கருத்தாளர் வசம்புவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா?...ஏன் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தாரா?...அன்னாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். :icon_idea:

Link to comment
Share on other sites

குடும்பதார்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :icon_idea:

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

Link to comment
Share on other sites

மறைந்த யாழ் சக கருத்தாளர் வசம்புவுக்கு கண்ணீர் வணக்கங்கள்..! அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு ரகுமானின் தீவிர ரசிகர்...நான் யாழுக்கு வந்த புதிதில் ரகுமான் தொடர்பாக எனக்கும் அவருக்கும் பெரிய சண்டையே போனது...நல்ல கருத்தாளார் ஆனால் ஏனோ தெரியவில்லை அண்மையில் எழுதாமல் விட்டு விட்டார்...அவருக்காக ரகுமானின் சோக கீதம் ஏதாவது இருந்தால் இணைத்து விடவும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள், இதய அஞ்சலிகள். யாழ் இணையத்தில் வசம்பு அண்ணா அவர்களுடனான பற்றி பல்வேறு நினைவுகள் சுழன்று அடிக்கின்றன. அவரது முகத்தை மரண அறிவித்தலில் முதன்முறையாக வேண்டியுள்ளது துர்ப்பாக்கியமே. குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.

imagephptd.jpg

புகைப்படம்: லங்காசிறீ இணையம், நன்றி

Link to comment
Share on other sites

அஞ்சலிகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

அன்னாரது புகைப்படத்தைப்பார்க்க

http://www.tamilmemorials.com/view-details?id=19102010408#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kerze.gif

தோழர் வசம்புவுக்கு கண்ணீர் அஞ்சலிகள் ....

Link to comment
Share on other sites

மிக மிக துயரமான செய்தி. வசம்புடன் பல தடவை யாழ் களத்தினூடாக கருத்துகள் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன். தான் சரி என நினைத்ததை எவருக்கும் அஞ்சாமல் சொல்லும் துணிவு கொண்ட சிறந்த கருத்தாளர். அரசியல் தவிர்ந்த வேறு பல விடயங்களில் அவரது ரசனையும் எனது ரசனையும் ஒத்துப் போயிருந்தது

ஒரு சிறந்த தோழனை இழந்த உணர்வு வருகின்றது

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள். வசம்பு அண்ணா அவர்கள் யாழில் பங்குபற்றிய இறுதிக்கருத்தாடல்:

vasampujpg.png

:icon_idea:தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்பதையே அறிய முடியாத நிலையிலுள்ளவரின் பெயரில் இப்படியொரு கடிதம் வெளிவந்திருப்பதை அறிய முடியுமா என்ன?? :D

உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் ஆதங்கம் தான் ஏன் என்று புரியவில்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுயநினைவும் இழந்து தவிக்கும் ஒரு மூதாட்டியை சிலர் தமது சுயநல அரசியலுக்கு பகடைக்காயாக பாவிப்பது தங்களுக்கு சரியாகப்படுகின்றதா?? இன்றைய நிலையில் அவருக்குத் தேவை ஒழுங்கான வைத்தியமும் பெற்ற பிள்ளைகளின் பராமரிப்புமே. ஆனால் இங்கு பெற்ற பிள்ளைகளை விட வேறு சிலர் அவரைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்தியதாலேயே இவ்வளவும் நடந்துள்ளது.

பலர் இங்கு கதையளப்பதிலேயே காலம் கடத்துகின்றார்கள். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் அவரைத் தம்முடன் எடுப்பதற்கு பல வருடங்கள் எடுக்குமாம். ஆனால் மதிவதனியின் தாயார் மட்டும் உடன் போய் பிள்ளைகளுடன் இணைந்து விட்டார். தமிழக முதல்வர் கருணாநிதியை மட்டும் குறை கூறச் சிலர் விளைகின்றனர். ஆனால் 2003 இல் ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதமெழுதிய போது வைகோ என்ன செய்தார்?? அன்று ஜெயலலிதாவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த வைகோ, ஏன் அதைத் தடுக்க முன்வரவில்லை?? சரி அன்று செய்யாதவர் தற்போது சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாவது, பழைய தடையால் ஏதாவது பிரைச்சினைகள் ஏற்படலாமென்பதை உணர்ந்து தமிழகச் சட்டமன்றம் மூலம் விவாதித்து அந்தத் தடையை நீக்க வைத்திருக்கலாம். திருப்பியனுப்பிய பின் எடுத்த நடவடிக்கைகளை முதலிலேயே எடுத்திருந்தால், இவ்வளவு பிரைச்சினைகளும் வந்திருக்காது. ஆனால் வைகோவும் நெடுமாறனும் தாம் மத்திய அரசின் கண்ணிலும், தமிழக அரசின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு தாம் நினைத்ததைச் சாதித்து விடடோமென்று தம்பட்டம் அடிக்கவே, இதனைப் பாவிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போனபின் இன்று எத்தனையோ கதையளக்கின்றார்கள். இவர்கள் இப்படியெல்லாம் அவரை வைத்து அரசியல் செய்வது தங்களுக்கு ஏற்புடையதா??

போதாக்குறைக்கு நம்மவர்களும் அவரை வைத்து கடித அரசியல் செய்ய நினைக்கின்றார்கள். இங்கும் சிலர் இந்தியாவைக் கேவலமாக எழுதுவதும் தேவை ஏற்பட்டால் இந்தியாவின் காலில் விழுவதும் கைவந்த கலைபோல கருத்தெழுதுகின்றார்கள். இதில் தங்களுக்கும் உடன்பாடா??

ஆனால் உங்களால் கேடுகெட்ட அரசியல்வாதிகளாகக் குறிப்பிடப்படுவர்களுக்கு பார்வதியம்மா எழுதியது போல கையேந்தி கடிதமெழுதுவது மட்டும் இனிக்கிறது. இதிலேயே முன்னுக்குப்பின் முரண்படுகின்றீர்களே?? வைகோவோ, நெடுமாறனோ முன்பே நீதிமன்றம் சென்று பயணத்தடை சட்டபடி நீக்கிவிட்டு, சிகிச்சைக்காக பார்வதியம்மாவை அழைத்ததிருந்தால் இவ்வளவும் நடந்திருக்குமா?? அல்லது இப்படிக் கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?? முன்பும் ஒருமுறை வைகோ தமிழகம் சென்ற கூட்டடைமப்பினரை, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காமல் தடுத்து, தானே பிரதமர் மன்மோகன்சிங்குடன் சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்து டெல்லி அழைத்துச் சென்றார். ஆனால் மூக்குடைபட்டது தான் மிச்சம். மூக்குடைபட்ட கூட்டமைப்பினர் பின்பு தமிழக முதலமைச்சர் மூலமாகவே மன்மோகன்சிங்கை சந்திக்க முடிந்தது. இன்று பார்வதியம்மாவிற்கும் நடந்தது இதுதான். பார்வதியம்மாவிற்குத் தேவை எதுவோ அதைவிடுத்து அனைத்தையும் செய்து அரசியலாக்குகின்றார்கள் சிலர். இது நடக்கும்வரை இந்த அவலமும் தொடரும்.

:)அதைத் தானே கடிதம் சுட்டி நிற்கின்றது. இதைப் புரிந்து கொள்ள தங்களுக்கு 2 பக்கக் கருத்துகள் தேவைப்பட்டுள்ளது. :):lol:

ஏதோ செய்திகளை நீங்கள் மட்டும் தான் பார்ப்பது போல் கதையளக்கின்றீர்கள். பார்வதியம்மா விடயமாக கருப்பன் என்ற வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு முதலிலேயே தமிழ்நாடு சட்டசபையில் இவ்விவ்காரம் எழுப்பப்பட்டு அப்போதே முதல்வர் கருணாநிதி பார்வதியம்மா விரும்பினால் தமிழஇநாடு வந்து சிகிச்சை பெற வேண்டிய நடவடிக்கைகளை தான் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு செய்யத் தயார் என்று அறிவித்து விட்டார். எனவே வைகோ போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் முதல்வரை வாய் திறக்க வைத்தது என்பன போன்றன தங்களின் அபத்தமான கற்பனை. அதுபோல் நீதிமன்றம் பார்வதியம்மா விடயமாக மத்திய மாநில அரசுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு மட்டுமே பணித்திருந்தது. எந்த இடத்திலும் பார்வதியம்மாவை தமிழக அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடிதம் ஏழுதுமாறு தங்கள் கற்பனை போல் கூறவில்லை.

அதுபோல் பார்வதியம்மா தமிழகம் வருவதற்கு சில தினங்கள் முன்பு தான் உரிய கடவுச்சீட்டு (அதுவும் விஐபி கடவுச்சீட்டு) விசா போன்றன இருந்தும் சிவாஜிலிங்கம் விமானநிலையித்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டார். பார்வதியம்மாவிற்கு இந்தியா வர தடையிருப்பது வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா அழைத்துச் சென்று முயற்சித்தார். ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய போது அவருடனேயே வைகோ கூட்ட வைத்திருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தான் வைகோ மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்திருந்தார். அதுபோல் திருமாவளவன் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை விட்டதாகவும் கதையளந்துள்ளீர்கள். திருமாவளவனும் . ஜெயலலிதாவையும் மத்திய அரசையும் கண்டித்தே அறிக்கை விட்டிருந்தார். அது தங்கள் கண்ணுக்கு தமிழக அரசைக் கண்டித்ததாக தெரிகின்றது போலும்.

அதுபோல் முதலவர் கருணாநிதி எந்த இடத்திலும் பார்வதியம்மா தமிழகம் வர தன்னிடம் அனுமதி பெறிவல்லையெனக் கூறவுமில்லை. எல்லா இடத்திலும் தங்கள் கற்பனை நன்றாகத் தான் புகுந்து விளையாடுகின்றது. வைகோ நெடுமாறன் போன்றவர்களின் நடவடிக்கைகளை சுபவீரபாண்டியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் கூடக் கண்டித்திருந்தது தங்கள் கண்ணிற்கு படவில்லைப் போலும். பார்வதியம்மாவின் வருகையை ஏனையவர்களுக்கும் தெரிவித்திருந்தால் எத்தனையோ விடயங்கள் நடைபெறாது தடுத்திருக்க முடியும். ஆனால் வைகோவும் நெடுமாறனும் ஏதோ இலங்கைத் தமிழரின் விடயங்களை தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்தது போல் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இதிலிருந்தே தெரியவில்லையா இங்கு பார்வதியம்மாவை வைத்து யார் அரசியல் செய்கின்றார்களென்று?? அதனால் தன் பங்கிற்கு முதல்வர் கருணாநிதியும் அரசியல் காய் நகர்த்துகின்றார். இதற்கு உதாரணமாகத் தான் முன்பு வைகோ கூட்டமைப்பையும் மூக்குடைபட வைத்த சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றித் தாங்களும் வசதியாக வாயே திறக்கவில்லை.

முதல்வர் கருணாநிதியுடன் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவுமேயில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட இவர் பறுவாயில்லை என்பதே எனது நிலை. அதற்கு தாங்கள் வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக கற்பனையில் கதையளப்பது போல் நான் செய்யவில்லையே??

அது என்ன வசதியாக முக்கியமானவற்றை மறைத்துவிட்டு கதையளக்கின்றீர்கள். ஏற்கனவே சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா சென்று முயற்சித்தனர். இது கூட தவறான முயற்சி என்பது தங்களுக்கு தெரியாதா?? இவ்விடயம் கூட வைகோவிற்கோ, நெடுமாறனுககோ தெரியாதென்று கதையளக்க வேண்டாம். முதலில் வைகோ ஜெயலலிதாவோடு 2003இல் கூட்டில்லையென்று கதையளந்தீர்கள். இப்போ வைகோ தமிழக ஆட்சியில் இருந்தவரில்லையென அடுத்த கதையளப்பு. அவரின் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று இருந்தது தங்களுக்கு இலகுவாக மறந்து விட்டது போலும். தமிழக அரசு ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதென்றால் அதனைச் சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் எடுத்தபின் தான் அதனை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்தத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதிக்கும் போது மதிமுக உறுப்பினர்கள் ஒருவேளை தூக்கத்தில் இருந்தினமோ?? இன்றுவரை இந்த விடயம் தமக்குத் தெரியாதென்று வைகோவோ,நெடுமாறனோ புலம்பவில்லை. ஆனால் தாங்கள் தான் தங்கள் பங்கிற்கு புகுந்து விளையாடுகின்றீர்கள்.

நான் ஆரம்பத்திலேயே இதுதான் விடயமென போட்டுடைத்து விட்டேன். ஆனால் 2 பக்கங்களை தாண்டியும், தங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லையென்பது இப்போது புரிகின்றது.

ஒரு நீதிமன்றம் தனது தீர்ப்பில் இரண்டு விதமாக தீர்ப்பு வழங்கியது இது தான் உலகிலேயே முதல் முறை. ஒரு நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்ய முடியுமே தவிர அதனைச் செய் என்று ஆணையிட முடியாது. அது என்னவோ தங்களைப் போல் நக்கீரனும் கதையளப்பில் கில்லாடி தான். தாங்கள் இணைத்ததை தாங்களே ஒருமுறை படித்துப் பார்ப்பது உத்தமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அதிர்ச்சியான செய்தி.

முகம் தெரியாத போதும் கருத்தால் உறவாடிய ஒரு அன்பான கருத்தாளனை இழந்திருப்பது மிக மிக வேதனைக்குரியதாக இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் கருத்தால் வேறுபட்டு நின்றாலும் கூட பண்பை இழக்காத ஒரு உயர்ந்த உள்ளம் வசம்பண்ணனிடம் இருந்தது. அது இந்தக் களத்துக்கு மட்டுமன்றி எல்லா மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று. அதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அழுதிட்டன் வசம்பண்ணா.. கண்ணீர் விட்டு அழுதிட்டன்..! இதை விட என்ன செய்ய..! :icon_idea::):D

Link to comment
Share on other sites

யாழ் இணையக் கருத்தாளர் வசம்பு அண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! அவரின் பிரிவினால் அதிர்ச்சியிலும் , ஆழ்ந்த துயரத்திலும் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் இந்த நேரத்தில் மனவலிமையைக் கொடுக்கவும் பிராத்திக்கிறேன். (May his soul rest in peace!!)

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.