Jump to content

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்


Recommended Posts

யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன்.

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி)

மறைவு : 18 ஒக்ரோபர் 2010

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும்,

நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

பாலகுமார்(கனடா), சுமித்திரா(இலங்கை), சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

கதிர், கார்த்திகா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

வைஷ்னவி(இலங்கை), நிருபன், நிதர்சனா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

http://www.lankasrinotice.com/ta/obituary.php?20101018201371

கருத்தாளர் வசம்புவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா?...ஏன் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தாரா?...அன்னாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். :icon_idea:

Link to comment
Share on other sites

குடும்பதார்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :icon_idea:

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

Link to comment
Share on other sites

மறைந்த யாழ் சக கருத்தாளர் வசம்புவுக்கு கண்ணீர் வணக்கங்கள்..! அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு ரகுமானின் தீவிர ரசிகர்...நான் யாழுக்கு வந்த புதிதில் ரகுமான் தொடர்பாக எனக்கும் அவருக்கும் பெரிய சண்டையே போனது...நல்ல கருத்தாளார் ஆனால் ஏனோ தெரியவில்லை அண்மையில் எழுதாமல் விட்டு விட்டார்...அவருக்காக ரகுமானின் சோக கீதம் ஏதாவது இருந்தால் இணைத்து விடவும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள், இதய அஞ்சலிகள். யாழ் இணையத்தில் வசம்பு அண்ணா அவர்களுடனான பற்றி பல்வேறு நினைவுகள் சுழன்று அடிக்கின்றன. அவரது முகத்தை மரண அறிவித்தலில் முதன்முறையாக வேண்டியுள்ளது துர்ப்பாக்கியமே. குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.

imagephptd.jpg

புகைப்படம்: லங்காசிறீ இணையம், நன்றி

Link to comment
Share on other sites

அஞ்சலிகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

அன்னாரது புகைப்படத்தைப்பார்க்க

http://www.tamilmemorials.com/view-details?id=19102010408#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kerze.gif

தோழர் வசம்புவுக்கு கண்ணீர் அஞ்சலிகள் ....

Link to comment
Share on other sites

மிக மிக துயரமான செய்தி. வசம்புடன் பல தடவை யாழ் களத்தினூடாக கருத்துகள் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன். தான் சரி என நினைத்ததை எவருக்கும் அஞ்சாமல் சொல்லும் துணிவு கொண்ட சிறந்த கருத்தாளர். அரசியல் தவிர்ந்த வேறு பல விடயங்களில் அவரது ரசனையும் எனது ரசனையும் ஒத்துப் போயிருந்தது

ஒரு சிறந்த தோழனை இழந்த உணர்வு வருகின்றது

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள். வசம்பு அண்ணா அவர்கள் யாழில் பங்குபற்றிய இறுதிக்கருத்தாடல்:

vasampujpg.png

:icon_idea:தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்பதையே அறிய முடியாத நிலையிலுள்ளவரின் பெயரில் இப்படியொரு கடிதம் வெளிவந்திருப்பதை அறிய முடியுமா என்ன?? :D

உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் ஆதங்கம் தான் ஏன் என்று புரியவில்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுயநினைவும் இழந்து தவிக்கும் ஒரு மூதாட்டியை சிலர் தமது சுயநல அரசியலுக்கு பகடைக்காயாக பாவிப்பது தங்களுக்கு சரியாகப்படுகின்றதா?? இன்றைய நிலையில் அவருக்குத் தேவை ஒழுங்கான வைத்தியமும் பெற்ற பிள்ளைகளின் பராமரிப்புமே. ஆனால் இங்கு பெற்ற பிள்ளைகளை விட வேறு சிலர் அவரைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்தியதாலேயே இவ்வளவும் நடந்துள்ளது.

பலர் இங்கு கதையளப்பதிலேயே காலம் கடத்துகின்றார்கள். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் அவரைத் தம்முடன் எடுப்பதற்கு பல வருடங்கள் எடுக்குமாம். ஆனால் மதிவதனியின் தாயார் மட்டும் உடன் போய் பிள்ளைகளுடன் இணைந்து விட்டார். தமிழக முதல்வர் கருணாநிதியை மட்டும் குறை கூறச் சிலர் விளைகின்றனர். ஆனால் 2003 இல் ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதமெழுதிய போது வைகோ என்ன செய்தார்?? அன்று ஜெயலலிதாவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த வைகோ, ஏன் அதைத் தடுக்க முன்வரவில்லை?? சரி அன்று செய்யாதவர் தற்போது சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாவது, பழைய தடையால் ஏதாவது பிரைச்சினைகள் ஏற்படலாமென்பதை உணர்ந்து தமிழகச் சட்டமன்றம் மூலம் விவாதித்து அந்தத் தடையை நீக்க வைத்திருக்கலாம். திருப்பியனுப்பிய பின் எடுத்த நடவடிக்கைகளை முதலிலேயே எடுத்திருந்தால், இவ்வளவு பிரைச்சினைகளும் வந்திருக்காது. ஆனால் வைகோவும் நெடுமாறனும் தாம் மத்திய அரசின் கண்ணிலும், தமிழக அரசின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு தாம் நினைத்ததைச் சாதித்து விடடோமென்று தம்பட்டம் அடிக்கவே, இதனைப் பாவிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போனபின் இன்று எத்தனையோ கதையளக்கின்றார்கள். இவர்கள் இப்படியெல்லாம் அவரை வைத்து அரசியல் செய்வது தங்களுக்கு ஏற்புடையதா??

போதாக்குறைக்கு நம்மவர்களும் அவரை வைத்து கடித அரசியல் செய்ய நினைக்கின்றார்கள். இங்கும் சிலர் இந்தியாவைக் கேவலமாக எழுதுவதும் தேவை ஏற்பட்டால் இந்தியாவின் காலில் விழுவதும் கைவந்த கலைபோல கருத்தெழுதுகின்றார்கள். இதில் தங்களுக்கும் உடன்பாடா??

ஆனால் உங்களால் கேடுகெட்ட அரசியல்வாதிகளாகக் குறிப்பிடப்படுவர்களுக்கு பார்வதியம்மா எழுதியது போல கையேந்தி கடிதமெழுதுவது மட்டும் இனிக்கிறது. இதிலேயே முன்னுக்குப்பின் முரண்படுகின்றீர்களே?? வைகோவோ, நெடுமாறனோ முன்பே நீதிமன்றம் சென்று பயணத்தடை சட்டபடி நீக்கிவிட்டு, சிகிச்சைக்காக பார்வதியம்மாவை அழைத்ததிருந்தால் இவ்வளவும் நடந்திருக்குமா?? அல்லது இப்படிக் கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?? முன்பும் ஒருமுறை வைகோ தமிழகம் சென்ற கூட்டடைமப்பினரை, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காமல் தடுத்து, தானே பிரதமர் மன்மோகன்சிங்குடன் சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்து டெல்லி அழைத்துச் சென்றார். ஆனால் மூக்குடைபட்டது தான் மிச்சம். மூக்குடைபட்ட கூட்டமைப்பினர் பின்பு தமிழக முதலமைச்சர் மூலமாகவே மன்மோகன்சிங்கை சந்திக்க முடிந்தது. இன்று பார்வதியம்மாவிற்கும் நடந்தது இதுதான். பார்வதியம்மாவிற்குத் தேவை எதுவோ அதைவிடுத்து அனைத்தையும் செய்து அரசியலாக்குகின்றார்கள் சிலர். இது நடக்கும்வரை இந்த அவலமும் தொடரும்.

:)அதைத் தானே கடிதம் சுட்டி நிற்கின்றது. இதைப் புரிந்து கொள்ள தங்களுக்கு 2 பக்கக் கருத்துகள் தேவைப்பட்டுள்ளது. :):lol:

ஏதோ செய்திகளை நீங்கள் மட்டும் தான் பார்ப்பது போல் கதையளக்கின்றீர்கள். பார்வதியம்மா விடயமாக கருப்பன் என்ற வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு முதலிலேயே தமிழ்நாடு சட்டசபையில் இவ்விவ்காரம் எழுப்பப்பட்டு அப்போதே முதல்வர் கருணாநிதி பார்வதியம்மா விரும்பினால் தமிழஇநாடு வந்து சிகிச்சை பெற வேண்டிய நடவடிக்கைகளை தான் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு செய்யத் தயார் என்று அறிவித்து விட்டார். எனவே வைகோ போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் முதல்வரை வாய் திறக்க வைத்தது என்பன போன்றன தங்களின் அபத்தமான கற்பனை. அதுபோல் நீதிமன்றம் பார்வதியம்மா விடயமாக மத்திய மாநில அரசுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு மட்டுமே பணித்திருந்தது. எந்த இடத்திலும் பார்வதியம்மாவை தமிழக அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடிதம் ஏழுதுமாறு தங்கள் கற்பனை போல் கூறவில்லை.

அதுபோல் பார்வதியம்மா தமிழகம் வருவதற்கு சில தினங்கள் முன்பு தான் உரிய கடவுச்சீட்டு (அதுவும் விஐபி கடவுச்சீட்டு) விசா போன்றன இருந்தும் சிவாஜிலிங்கம் விமானநிலையித்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டார். பார்வதியம்மாவிற்கு இந்தியா வர தடையிருப்பது வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா அழைத்துச் சென்று முயற்சித்தார். ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய போது அவருடனேயே வைகோ கூட்ட வைத்திருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தான் வைகோ மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்திருந்தார். அதுபோல் திருமாவளவன் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை விட்டதாகவும் கதையளந்துள்ளீர்கள். திருமாவளவனும் . ஜெயலலிதாவையும் மத்திய அரசையும் கண்டித்தே அறிக்கை விட்டிருந்தார். அது தங்கள் கண்ணுக்கு தமிழக அரசைக் கண்டித்ததாக தெரிகின்றது போலும்.

அதுபோல் முதலவர் கருணாநிதி எந்த இடத்திலும் பார்வதியம்மா தமிழகம் வர தன்னிடம் அனுமதி பெறிவல்லையெனக் கூறவுமில்லை. எல்லா இடத்திலும் தங்கள் கற்பனை நன்றாகத் தான் புகுந்து விளையாடுகின்றது. வைகோ நெடுமாறன் போன்றவர்களின் நடவடிக்கைகளை சுபவீரபாண்டியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் கூடக் கண்டித்திருந்தது தங்கள் கண்ணிற்கு படவில்லைப் போலும். பார்வதியம்மாவின் வருகையை ஏனையவர்களுக்கும் தெரிவித்திருந்தால் எத்தனையோ விடயங்கள் நடைபெறாது தடுத்திருக்க முடியும். ஆனால் வைகோவும் நெடுமாறனும் ஏதோ இலங்கைத் தமிழரின் விடயங்களை தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்தது போல் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இதிலிருந்தே தெரியவில்லையா இங்கு பார்வதியம்மாவை வைத்து யார் அரசியல் செய்கின்றார்களென்று?? அதனால் தன் பங்கிற்கு முதல்வர் கருணாநிதியும் அரசியல் காய் நகர்த்துகின்றார். இதற்கு உதாரணமாகத் தான் முன்பு வைகோ கூட்டமைப்பையும் மூக்குடைபட வைத்த சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றித் தாங்களும் வசதியாக வாயே திறக்கவில்லை.

முதல்வர் கருணாநிதியுடன் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவுமேயில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட இவர் பறுவாயில்லை என்பதே எனது நிலை. அதற்கு தாங்கள் வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக கற்பனையில் கதையளப்பது போல் நான் செய்யவில்லையே??

அது என்ன வசதியாக முக்கியமானவற்றை மறைத்துவிட்டு கதையளக்கின்றீர்கள். ஏற்கனவே சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா சென்று முயற்சித்தனர். இது கூட தவறான முயற்சி என்பது தங்களுக்கு தெரியாதா?? இவ்விடயம் கூட வைகோவிற்கோ, நெடுமாறனுககோ தெரியாதென்று கதையளக்க வேண்டாம். முதலில் வைகோ ஜெயலலிதாவோடு 2003இல் கூட்டில்லையென்று கதையளந்தீர்கள். இப்போ வைகோ தமிழக ஆட்சியில் இருந்தவரில்லையென அடுத்த கதையளப்பு. அவரின் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று இருந்தது தங்களுக்கு இலகுவாக மறந்து விட்டது போலும். தமிழக அரசு ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதென்றால் அதனைச் சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் எடுத்தபின் தான் அதனை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்தத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதிக்கும் போது மதிமுக உறுப்பினர்கள் ஒருவேளை தூக்கத்தில் இருந்தினமோ?? இன்றுவரை இந்த விடயம் தமக்குத் தெரியாதென்று வைகோவோ,நெடுமாறனோ புலம்பவில்லை. ஆனால் தாங்கள் தான் தங்கள் பங்கிற்கு புகுந்து விளையாடுகின்றீர்கள்.

நான் ஆரம்பத்திலேயே இதுதான் விடயமென போட்டுடைத்து விட்டேன். ஆனால் 2 பக்கங்களை தாண்டியும், தங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லையென்பது இப்போது புரிகின்றது.

ஒரு நீதிமன்றம் தனது தீர்ப்பில் இரண்டு விதமாக தீர்ப்பு வழங்கியது இது தான் உலகிலேயே முதல் முறை. ஒரு நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்ய முடியுமே தவிர அதனைச் செய் என்று ஆணையிட முடியாது. அது என்னவோ தங்களைப் போல் நக்கீரனும் கதையளப்பில் கில்லாடி தான். தாங்கள் இணைத்ததை தாங்களே ஒருமுறை படித்துப் பார்ப்பது உத்தமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அதிர்ச்சியான செய்தி.

முகம் தெரியாத போதும் கருத்தால் உறவாடிய ஒரு அன்பான கருத்தாளனை இழந்திருப்பது மிக மிக வேதனைக்குரியதாக இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் கருத்தால் வேறுபட்டு நின்றாலும் கூட பண்பை இழக்காத ஒரு உயர்ந்த உள்ளம் வசம்பண்ணனிடம் இருந்தது. அது இந்தக் களத்துக்கு மட்டுமன்றி எல்லா மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று. அதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அழுதிட்டன் வசம்பண்ணா.. கண்ணீர் விட்டு அழுதிட்டன்..! இதை விட என்ன செய்ய..! :icon_idea::):D

Link to comment
Share on other sites

யாழ் இணையக் கருத்தாளர் வசம்பு அண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! அவரின் பிரிவினால் அதிர்ச்சியிலும் , ஆழ்ந்த துயரத்திலும் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் இந்த நேரத்தில் மனவலிமையைக் கொடுக்கவும் பிராத்திக்கிறேன். (May his soul rest in peace!!)

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.