Jump to content

என்றுவரும் வசந்தம் என் வாழ்வில் மீண்டும்...


Recommended Posts

post-6046-001911900 1288284175_thumb.jpg

என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ

தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால்

உயிர்விட்டுப் போவதுபோல் வலியொன்று உணர்கின்றேன்

என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு

என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து

ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை

மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில்

உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அழகான காலையிலே அவசரமாய் உணவு தேடி

பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள்

பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து

கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள்

பழுத்து மணம் வீசும் பக்கத்து பலா மரங்கள்

மனதுக்கு மகிழ்வு தரும் தோட்டத்து பூஞ்செடிகள்

வேலியோரமானாலும் நட்டுவைத்த பனைமரங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

காற்றுக்கு கதை சொல்லும் உயர்ந்த தென்னை மரம்

உச்சி வெயில் என்றாலும் குளிர்ச்சி தரும் வேப்ப மரம்

ஒல்லிக்குச்சி கிளையின் மீதே ஊஞ்சலாட புளிய மரம்

எக் காலம் என்றாலும் வற்றாத வாழை மரம்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

மாளிகை இல்லைதான் ஆனாலும் மனசுக்குள்

ஆர்ப்பரிக்க வைக்கின்ற அன்பால் நிறைந்த வீடு

நிலத்தில் பாய் விரித்து நீண்டதொரு கதை சொல்லி

நிம்மதியாய் உறங்குகின்ற நிஜமான வாழ்க்கை

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அடுத்த வீட்டில் போய் ஆசையாய் கதைத்து வர

மூடிவைத்த வேலியிலே விரித்து வைத்த சிறுபொட்டு

அள்ள அள்ள ஊற்றெடுக்கும் அகலமான கிணற்றுக்குள்ளே

பளிங்கு போல் ஜொலித்திடும் சுவையான தண்ணீர்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கச்சிதமாய் வரப்பு வெட்டி மொத்தமாய் விரித்துவிட்ட

பச்சை வண்ண கம்பளங்கள் பச்சைபசும் வயல் வெளிகள்

செடி நட்டு நீரூற்றி வெருளி கட்டி காவல் வைத்து

பக்குவமாய் பராமரித்த காய்கறி தோட்டங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

பாதையோரம் படர்ந்து பல வகை பூ பூத்து

விழி விரிய வைக்கும் அழகான பூங்கொடிகள்

ஆளில்லா வளவுக்குள் அதிசயமாய் வளர்ந்து

எச்சில் ஊற வைக்கும் இனிய கனி மரங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வரப்பு மேல் வழுக்காமல் வரிசையாய் வந்தமர்ந்து

வெட்டிக்கதை பல பேசி பறக்கவிட்ட பட்டங்கள்

நூலறுந்து போனதென்று வயலுக்குள் விழுந்தோடி

வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்பி வந்த பொழுதுகள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

விளையாட்டாய் நினைத்து வித்தைகள் பல காட்டி

சுறுசுறுப்பாய் பாய்ந்து வரும் சுட்டி நாய்க்குட்டி

காலைச்சுற்றி வந்து தலை தூக்கி முகம் பார்த்து

கொஞ்சி விளையாடும் கொள்ளை கொள்ளும் பூனைக்குட்டி

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வளமான வாழ்க்கையை தொலைத்து விட்டோம் நாங்கள்

பரதேசி போலவே அலைகின்றோம் தேசமெல்லாம்

என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ

தெரியவில்லை எனக்கு ஆனாலும் ஒருநாள் நிச்சயமாய் வருவேன்

அன்று தான் என் வாழ்வில் மீண்டும் வரும் வசந்தம்.

Link to comment
Share on other sites

மிகவும் பிடித்த வரிகள்:

"மாளிகை இல்லைதான் ஆனாலும் மனசுக்குள்

ஆர்ப்பரிக்க வைக்கின்ற அன்பால் நிறைந்த வீடு"

"அடுத்த வீட்டில் போய் ஆசையாய் கதைத்து வர

மூடிவைத்த வேலியிலே விரித்து வைத்த சிறுபொட்டு"

இவை புலம் பெயர் நாடுகளில் இல்லாதவை!

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகாய் இருக்கிறது வாழ்வில் வசந்தம் வர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இவை புலம் பெயர் நாடுகளில் இல்லாதவை!

எங்கள் மண்ணுக்கே உரிய தனித்துவங்கள் அவை..

உங்கள் கவிதை அழகாய் இருக்கிறது வாழ்வில் வசந்தம் வர வாழ்த்துக்கள்.

நன்றி அக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தோழர் தமிழ்பிரியன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

நல்ல கவிதை தோழர் தமிழ்பிரியன் :lol:

நன்றி தமிழ்தேசியன்..

உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துகள்

நன்றி ரதி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையால் நம்மை ஈழத்திற்கு அழைத்துச் சென்ற தமிழ்பிரியனுக்கு வாழ்த்துகள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பனித்தன

நன்றி ஐயா

நிச்சயம் வழி பிறக்கும்

வேலிக்குள் பொட்டு வைத்து

சுகம் வினாவிடும் காலம் வரும்

அதுவரை.....

Link to comment
Share on other sites

கவிதையால் நம்மை ஈழத்திற்கு அழைத்துச் சென்ற தமிழ்பிரியனுக்கு வாழ்த்துகள்

நன்றி ஐயா..

ஏக்கத்தைத் தேக்கு, தாக்கத்தின் ஊக்கத்தில் தன்னாலே வழி திறக்கும் தமிழ்பிரியன்

அது வாஸ்தவம்தான்..

வினாவிடும் காலம் வரும், அதுவரை.....

காத்திருக்கத்தான் வேண்டும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.