Jump to content

வெளிநாட்டுக் கணவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டை முடிச்சும்

முட்டுவலியும்

மூச்சிப்பிடிப்புடன்

வீடு வந்து சேர்ந்தேன்

வளைகுடாவிலிருந்து

விடுதலையாகி வந்தேன்!

மணக்கும் மனைவியின்

முகமோ சுருக்கம் கண்டு;

சுறுக்கமாய் முதுமைக் கொண்டு!

முன்னாடி நிற்கும் எனைத்தெரிய

கண்ணாடு போடும்

திரை மறைத்த விழி!

நரைக்கொண்டு

கரைப்படிந்து;

உழைத்தக் காசை

செலவுச் செய்ய

வியாதியுடன் வந்திருக்கிறேன்

வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்!

இளமைக்கு வேட்டு வைத்து

கடமைக்கு ஓட்டுப் போட்டு

கடனுக்கு ஒட்டுப்போட்டு;

பாலையிலேப் பலக்காலம்!

செழிப்பான வாலிபத்தை

மாதச் சம்பளத்திற்கு

விற்றுவிட்டு;

நமக்கென்று துணைவேண்டி

ஓடிவரமுடியாமல்

ஊன்றி வருகிறேன்

குச்சினை!

எட்டி உதைக்கும்

பிள்ளை வேண்டி

ஏங்கி நிற்கும் வயதான

வெளிநாட்டுக் கணவன்

உள்நாட்டில் உன்னோடு

படித்துச் சுவைத்தவை .........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரீச்சர்

அடிக்கடி என்னை பயமுறுத்துகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி நிலாமதி, டிவோர்ஸ் பண்ணிப்போட்டும் கனக்க பேர் குச்சியோட அலையினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இங்கையும் பலரின் நிலைமைகள்.பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நிலாமதி, டிவோர்ஸ் பண்ணிப்போட்டும் கனக்க பேர் குச்சியோட அலையினம்.

குளவி ........படித்ததை பகிர்ந்தேன். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி நிலாமதி, டிவோர்ஸ் பண்ணிப்போட்டும் கனக்க பேர் குச்சியோட அலையினம்.

குச்சி mean walking sticks? <_<:D

Link to comment
Share on other sites

பணம்! பணம்! என்று அலைந்து பலபேர் தங்களுடைய இளமைக்காலங்களை வீணடித்துவிடுகின்றார்கள்!

எதுக்காக அதனை சம்பாதிக்கின்றோம் ????? என்பதனை பலபேர் உணர்வதில்லை.

உணர்ந்தால் ..... சந்தோசம் உள்ளூரிலேயே தாராளமாய்க் கிடைக்கும்!

பகிர்வுக்கு நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்துச் சுவைத்ததை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவான செல்வம் வழமான வாழ்க்கை

இணைப்பிற்கு நன்றி நிலாமதி அக்கா

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

" எட்டி உதைக்கும் பிள்ளை வேண்டி

ஏங்கி நிற்கும் வயதான வெளிநாட்டுக் கணவன்" :D

செல்வங்களில் பெரிய செல்வம் - பிள்ளை செல்வம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.