Jump to content

பரப்புரை செய்யிறார் சின்னத்துரை: பெட்ரோல் ஸ்டேஷன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறிஸ்மஸ் நேரம் எண்ட படியால் கூட வேலை. பதினான்கு மணி நேரம் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டம் எடுக்க காரில் ஏறினால், பெட்ரோல் குறைவு என்று டிங்கு டிங்கு எண்டு சத்தம் போட்டு காரும் வெறுப்பேத்தியது.

பெற்றோலை போட்டுவிட்டு மட்டையை பாவிக்காமல் காசுடன் உள்ளுக்கு சென்றார் சின்னதுரை, ஒரு போலிஷ் கார வயோதிபர் கவுண்டரின் பின்னால் நின்றார். சின்னதுரையை பார்த்தவுடன், ஏன் கவலையாய் இருக்கிறாய் என்று கேட்டார்?

சின்னதுரைக்குள் ஒரு பரப்புரை பொறி தட்டியது.

சின்ன: எனது ஊரில எண்ட சொந்த காரரை ஸ்ரீ லங்கா இராணுவம் கடத்தி போட்டான்.

போலிஷ்: என்னது? உனது நாட்டு இராணுவமே மக்களை கடத்துகிறதா?

சின்ன: இராணுவம் மட்டுமில்லை. எங்கட அமைச்சர், ஜனாதிபதி எல்லாம் ஆக்கள் கடத்துவினம். போட்டு தள்ளுவினம்.

போலிஷ்: இது போலாந்தில் எனக்கு கம்யூனிச கட்டுப்பாட்டில் இருந்த ஞாபகத்தை கொண்டுவருது. தமிழ் மக்களிண்ட விஷயத்தை நான் செய்தியில படிச்சு வாறன். உங்களுக்கு ஜேசு நாதர் விடிவு தருவார்.

சின்ன: ஐயா, ஆங்க ஜேசு நாதரின் சீடரையே போட்டு தள்ளுகிறார்கள். ஸ்ரீ லங்கா புத்த தீவிரவாதிகள் கிறிஸ்தவரையும், இந்துக்களையும் குறிவைத்து தாக்குகிறார்கள்.

போலிஷ் காரரின் முகம் சுருங்குகிறது.

சின்ன: நீங்கள் வேண்டுமெண்டால் போய் கூகிள் பண்ணி பாருங்கோ. ஸ்ரீ லங்கா புத்த தீவிரவாதிகள் யாராவது கிறித்தவர் மதம் மாறினால் ஏழு வருடம் சிறையில் போட்டு துன்புறுத்த சட்டம் வைத்திருக்கிறார்கள்.

போலிஷ்: நான் இதை பற்றி என்னுடைய சர்ச்சில் சொல்லி, ஸ்ரீ லங்காவிற்கு எதிராக போப்பாண்டவருக்கு கடிதம் எழுத போறன்.

சின்ன: தாரளமாக செய்யுங்கோ. உங்கட நோர்விச் எம்பிக்கும் ஒரு கடிதம் போடுங்கோ.

போலிஷ்: இந்தா ஒரு இலவச கோப்பி. ஸ்ரீ லங்கா காரரின் அநியாயத்திற்கு தலை குனியாதே.

சின்ன: நன்றி.

சின்னத்துரை காரில் முதல் முறையாக பதினான்கு மணித்தியாலத்தில் உருப்படியாக ஒருவிடயம் செய்த பெருமிதத்துடன் வீட்டுக்கு சீறிக்கிளம்பினார்.

Link to comment
Share on other sites

சின்னதுரை அவர்கள் செய்த விடயம் பல கடத்தல்களை, ஏன் கொலைகளை கூட தடுத்திருக்கலாம்.

நாம் ஒவ்வொருவரும் எம்மால் எவ்வளவை எளினமாகவும் பயனுள்ளதாகவும் செய்யலாம் என்பதை எளிதாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சகோதரம் அகூதா. இதை ஒரு வார தொடராக கொண்டு செல்ல திட்டம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. இதை ஒரு வார தொடராக கொண்டு செல்ல திட்டம். :rolleyes:

தொடரட்டும் உங்கள் வாரத்தொடர் முயற்சி.....

Link to comment
Share on other sites

நன்றிகள் குளவி..! :rolleyes:

Link to comment
Share on other sites

நல்லது. இது ஒரு நல்ல தேவையான விடயம்.

ஒரு மாதிரி தொடர்ச்சியும் ( continuity), திட்டமும் (plan) வைத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம் அன்றாட வாழ்வில் கிடைக்கும், சில நிமிடங்களையும் நல்ல முறையில் பயன் படுத்தலாம் என்று உங்கள் கதை மூலம் கூறியுள்ளீர்கள். நன்றி குழவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி

உங்கள் பரப்புரை தொடர வாழ்த்துகள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விஷயம் இப்படியே தொடர்ந்து கொட்டுங்கள் குளவி!! :rolleyes:

Link to comment
Share on other sites

நம் அன்றாட வாழ்வில் கிடைக்கும், சில நிமிடங்களையும் நல்ல முறையில் பயன் படுத்தலாம் என்று உங்கள் கதை மூலம் கூறியுள்ளீர்கள். நன்றி குழவி.

அதேதான். பரப்புரை என்பது நாம் எல்லோருமே அன்றாடம் செய்யக்கூடியது.

Link to comment
Share on other sites

நன்றி குளவி. சிறு துளி பெருவெள்ளம். ஊடகங்களில் சொல்வதை விட பல உண்மைகளை அந்தந்த நாட்டு மக்களிடம் அறியலாம். இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல. சாதாரணமக்களுக்கு அவர்களின் பிரச்சனையை கேட்பதன் முலம் எமது பிரச்சனைகளையும் (இலங்கை அரசின் அராஜகங்கள்)இலகுவாக சொல்லிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரட்டும் உங்கள் வாரத்தொடர் முயற்சி.....

நன்றி சகோதரம் புத்தன்.

நன்றிகள் குளவி..! :lol:

கதையை படித்தற்கு நன்றி இசைக்கலைஞன்.

நல்லது. இது ஒரு நல்ல தேவையான விடயம்.

ஒரு மாதிரி தொடர்ச்சியும் ( continuity), திட்டமும் (plan) வைத்திருங்கள்.

சகோதரம் அகூதா, சின்னத்துரையர் வேலைக்காக பல நாடுகள் சுத்துபவர். அவருக்கு பல நாட்டு நண்பர்கள் இருப்பதால் உலக லோக்கல் பொலிடிக்கும் கொஞ்சம் அவருக்கு தெரியும். மற்றும், அவருக்கு தமிழ் ஈழ மக்கள் பட்ட கஷ்டத்தை அவர்களோடு வாழ்ந்து அனுபவித்ததால் ஸ்ரீ லங்கா ஜெனோசைட் பரப்புரை போபியா என்ற வருத்தமும் இருக்கிறது! :wub: கொஞ்ச காலம் கதைக்கு கரு பிடிக்கலாம் என்ற நம்பிக்கை தான்.

நம் அன்றாட வாழ்வில் கிடைக்கும், சில நிமிடங்களையும் நல்ல முறையில் பயன் படுத்தலாம் என்று உங்கள் கதை மூலம் கூறியுள்ளீர்கள். நன்றி குழவி.

நன்றி அண்ணா

நல்ல விஷயம் இப்படியே தொடர்ந்து கொட்டுங்கள் குளவி!! :D

நன்றி சகோதரம் சுவி. நீங்கள் எல்லோரும் உசுப்பி கதை, கவிதை எல்லாம் எழுத வைக்கிறீர்கள். உற்சாகத்திற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குளவி. சிறு துளி பெருவெள்ளம். ஊடகங்களில் சொல்வதை விட பல உண்மைகளை அந்தந்த நாட்டு மக்களிடம் அறியலாம். இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல. சாதாரணமக்களுக்கு அவர்களின் பிரச்சனையை கேட்பதன் முலம் எமது பிரச்சனைகளையும் (இலங்கை அரசின் அராஜகங்கள்)இலகுவாக சொல்லிவிடலாம்.

மிகவும் சரியாக கூறினீர்கள் நுனாவிலான். நான் எனது வேலையில் ஒரு கங்கேரி பெண்மணியுடன் கதைக்கும்போது, தனது தாயார் உலகப்போரின் போது பிளேனில் இருந்து துண்டு போட்டு அவர் சர்ச்சுக்க்கு ஓடிப்போய் தஞ்சம் புகுந்ததாக கூறினார். நானும் எமது ஸ்ரீ லங்கா இராணுவ "அனுபவங்களை" கூறினேன். அவர் இப்போது ஒரு ஸ்ரீ லங்கா எதிர்ப்பாளி. வேலையில் ஸ்ரீ லங்கா தேயிலை இருக்க கூடாது என்று கொள்கை வைத்திருக்கிறார். :lol:

எனது முதல் தமிழ் கதைக்கே ஐந்து பச்சை புள்ளி. ஆத்தா நா பாசாகிட்டேன்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.