Jump to content

கந்த சஷ்டி விரதம்பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன்


Recommended Posts

கந்த சஷ்டி விரதம்(உபவாசம்) பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வித மாக கூறுகிறார்கள்

தொடர்ந்து 18 வருடம் பிடிக்கணும் என்கிறார்கள் ஆறு ஆறு ஆக பிரித்து, ஆறு வருடம் ஒருநேரம் சோறு கறி மற்ற ஆறு வருடம்,சர்க்கரை பொங்கல்)ஆறு வருடம் உபவாசம்

உபவாசம் இருப்பவர்கள் பாலும் பழமும் தானே ஒரு நேரம் எடுத்து கொள்ளனும்..?

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஸ்டி 6 வருடங்கள் பிடித்து விட்டு தொடர்ந்து பிடிப்பது என்டால் குறைந்த பட்சம் 1 வருடம் விட்டுப் பிடிக்கலாம்...உங்களுக்கு உபவாசம் இருக்க விருப்பம் என்டால் பாலும்,பழமும் சாப்பிடலாம் அல்லது ஒரு நேர சாப்பாடு[சோறு],பலகாரம்[புட்டு,பொங்கல் போன்றன]சாப்பிடலாம்...முதல் 6 வருடம் உபவாசம் இருந்தால் அடுத்த 6 வருடம் சோறு அல்லது பலகாரம் சாப்பிட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டி விரதம்பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன்

எனக்கு தெரியாதுங்கோ.

Link to comment
Share on other sites

கந்த சஷ்டி பிடிப்பது எதற்காக? என்ன காரனத்திற்காக இந்த விரதம் அனுட்டிக்கப்பட தொடங்கியது? புராணங்களில் இதற்கான காரணம் சொல்லப்பட்டு இருக்கா? நான் பார்த்த வரை பலர் ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டும் என்ற அவாவினால் தம்மை வருத்தி விரதம் இருப்பார். கந்த சஷ்டியும் அப்படியான ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டி பிடிப்பது எதற்காக? என்ன காரனத்திற்காக இந்த விரதம் அனுட்டிக்கப்பட தொடங்கியது? புராணங்களில் இதற்கான காரணம் சொல்லப்பட்டு இருக்கா? நான் பார்த்த வரை பலர் ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டும் என்ற அவாவினால் தம்மை வருத்தி விரதம் இருப்பார். கந்த சஷ்டியும் அப்படியான ஒன்றா?

நான் நினைக்கிறேன் கந்தசஸ்டி விரதம் உண்மையாக குழந்தைகள் இல்லாதவர்கள் தான் பிடிப்பார்கள்...சஸ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்டொரு பழமொழி இருக்குது என நினைக்கிறேன்...ஆனால் எல்லோரும் இந்த விரதத்தை ஒவ்வொரு நேர்த்திக் கடன் வைத்துப் பிடிக்கிறார்கள்...1)மற்றக் கடவுளீலும் பார்க்க முருகன் கேட்ட உடனே கொடுப்பாராம்...2)6 நாள் தான் விரதம்[மற்ற விரதங்கள் கூட நாள் பிடிக்க வேண்டும்...3)6 வருடம் விரதம் முடிவதற்கு இடையில் அவர்கள் எதைக் கேட்டு நேர்ந்தார்களோ அது கட்டாயம் கிடைக்குமாம்...மற்ற விரதங்களீலும் பார்க்க இந்த விரதம் மிகவும் கடுமையானது...மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். (இந்த வருடம் 6.11.2010 முதல் 11.11.2010 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (11.11.2010) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.

பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர். அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில் படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.

சரவணபவ தத்துவம்

சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

மு - முகுந்தன் என்கிற விஷ்ணு

ரு - ருத்ரன் என்கிற சிவன்

க - கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:

அருவமும் உருவமாகி

அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்

பிரம்மமாய் நின்ற ஜோதிப்

பிழம்பதோர் மேனியாகிக்

கருணைகூர் முகங்கள் ஆறும்

கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒரு திருமுருகன் வந்து ஆங்கு

உதித்தனன் உ<லகம் உய்ய!

இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.

தலம் பழனி (3-ஆம் படை வீடு) - கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். (தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு). குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.

கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை. இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம். தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - (முதல் படைவீடு) - (திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.) வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில் (5-ம் படைவீடு), வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன. சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில் (6-ஆம் படைவீடு).

ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,

இரு முகம் - அக்னிக்கு,

மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,

நான்முகம் - பிரம்மனுக்கு,

ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு

ஆறு முகம் - கந்தனுக்கு.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,

2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,

3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,

4. உபதேசம் புரிய ஒரு முகம்,

5. தீயோரை அழிக்க ஒரு முகம்,

6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:

(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)

சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்

முக்தி அளிக்க ஒரு முகம்

ஞானம் அருள ஒரு முகம்

அக்ஞானம் அழிக்க ஒரு முகம்

சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்

பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.

உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே

ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்

ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே

ஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.

ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.

ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.

ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?

ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்

ர - ஸரஸ்வதி கடாக்ஷம்

வ - போகம் - மோக்ஷம்

ண - சத்ருஜயம்

ப - ம்ருத்யுஜயம்

வ - நோயற்ற வாழ்வு

ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.

ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).

ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).

வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்

பழனி - மணிபூரகம்

சுவாமிமலை - அனாஹதம்

திருத்தணிகை - விசுத்தி

பழமுதிர்சோலை - ஆக்ஞை.

ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=640

Link to comment
Share on other sites

கந்த சஷ்டி பிடிப்பது எதற்காக? என்ன காரனத்திற்காக இந்த விரதம் அனுட்டிக்கப்பட தொடங்கியது? புராணங்களில் இதற்கான காரணம் சொல்லப்பட்டு இருக்கா? நான் பார்த்த வரை பலர் ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டும் என்ற அவாவினால் தம்மை வருத்தி விரதம் இருப்பார். கந்த சஷ்டியும் அப்படியான ஒன்றா?

எனக்கு ஏன் பிடிக்கிறது என்று தெரியாது ஆனால் நான் கேட்டது எனக்கு கிடைத்தது ..அந்த நன்றி கடனுக்காக பிடிக்கிறன்... நான் கேட்டது எனக்காக இல்லை...என் அப்பாவுக்காக..(அப்பாவின் உடல் நிலை )

நன்றி ரதி அக்கா நுணா அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டி விரதம் எப்ப ஆரம்பிக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்து அதாவது, வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சஷ்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வழிபட்டு நோக்கும் விரதம் கந்த சஷ்டி ஆகும். :D

வாத்தியார்

***********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்து அதாவது, வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சஷ்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வழிபட்டு நோக்கும் விரதம் கந்த சஷ்டி ஆகும். :D

வாத்தியார்

***********

நன்றி வாத்தியார். நாளை மறு தினம் கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்குது.

எங்களது மாமி ஒருவர் கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது.... மாலையில் பாலில் சில மிளகுகள் போட்டுக் குடித்துத்தான் ஆறு நாளும் விரதம் இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி விரதம் பிடிக்கத் தொடங்கினால் 6 அல்லது 12 அல்லது 18 என்ற எண்ணிக்கையில் பிடிக்க வேண்டும் என்பார்கள். முன்பெல்லாம் இவ் விரதத்தை சிறுவர்கள் பிடிப்பதில்லை. பிடிக்க பெரியவர்கள் அனுமதிப்பதும் இல்லை. அப்போது பெரும்பாலும் பிள்ளைகள் இல்லாமல் அடுத்தவர்களின் கேலிக்கு ஆளானவர்கள் , தீரா நோயுடையவர்கள், வழக்குகளில் மாட்டுப்பட்டு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வரை சென்றவர்கள் மிகுந்த வைராக்கியத்துடன் அருகிலிருக்கும் கோவில்களிலேயே பகல் முழுதும் வேறு சிந்தனையின்றி பழி கிடந்தது இவ்விரதம் அனுஷ்டிப்பார்கள்.

எனக்கு இப்படியான பிரச்சனைகள் இல்லாத போதிலும் எதோ என் பாக்கியம் தொடர்ந்து 12 வருடங்கள் பிடித்திருந்தேன். நான் பிடித்த முறை இப்படித்தான் ஈழத்தில் ஏராளமானவர்கள் பிடிக்கின்றனர்:

எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து நீராடி சுவாமிப் படத்துக்கு பூ வைத்துக் கும்பிட்டுவிட்டு கந்தசஷ்டி கவசம் படித்து எதுவித உணவுமின்றி நீர்கூட அருந்தாமல் பகல் முழுதும் இருந்து மாலையில் ஒரு பேணி தேநீர் மட்டும் குடிப்பது ( இளநீர் , பால், கோப்பி, பால்தேநீர், பால்கோப்பி எதுவாயினும் ஒரு வருடத்துக்கு ஒன்றை மட்டும் தேர்த் தெடுக்கவும்) இது 1 -தொடக்கம் 5 வது நாள்வரை. 6 ம் நாள் மாலை தேநீருக்குப் பதிலாக மேற்கூறிய பானங்களில் ஏதோ ஒன்று ஒரு பேணி மட்டும் மாற்றிக் குடிக்கவேண்டும். பின் அன்றிரவு நித்திரை முழித்து அதிகாலையில் சமைத்து (பாரணை என்று சொல்வார்கள்) இறைவனுக்குப் படைத்துவிட்டு கவசம் படித்து விட்டு அயலவர்களையும் கூப்பிட்டு உணவிட்டு சாப்பிடலாம். அன்று பகல் உறங்கக் கூடாது.

இப்படியாக இவ் பவித்திரமான விரதத்தை அடியேன் ஊரிலே தொடக்கி பின் சில வருடம் சவூதியிலும் , மற்றும் லிபியாவிலும் தொடர்ந்து கடைசியாக பிரான்சில் சில வருடங்களில் 12 வது வருடத்தை முடித்தேன். இதை இங்கு சொல்லக் காரணம் வெள்ளிக் கிழமைகளில் ஸ்பெசலாக மாமிசம் சாப்பிடும் மத்திய கிழக்கு நாடுகளில் கூட இறையருளால் எவ்வித இடையூறுமின்றி இவ் விரதத்தை என்னால் அனுஷ்டிக்க முடிந்தது. ஆகவே சிரத்தையுடன் மனோபலத்துடன் இவ் விரதத்தைப் பிடிக்கவும். முருகக் கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்.

தமிழ்சிறி சொல்வதுபோல் 3 மிளகும் கடித்து சப்பி தேநீரைக் குடிக்கலாம். மிளகு குளிர்ச்சி உடல் உஸ்ணத்தை தணிவிக்கும். முதல் எழுத மறந்து விட்டேன்.

Link to comment
Share on other sites

கந்தசஷ்டி விரதம் பிடிக்கத் தொடங்கினால் 6 அல்லது 12 அல்லது 18 என்ற எண்ணிக்கையில் பிடிக்க வேண்டும் என்பார்கள். முன்பெல்லாம் இவ் விரதத்தை சிறுவர்கள் பிடிப்பதில்லை. பிடிக்க பெரியவர்கள் அனுமதிப்பதும் இல்லை. அப்போது பெரும்பாலும் பிள்ளைகள் இல்லாமல் அடுத்தவர்களின் கேலிக்கு ஆளானவர்கள் , தீரா நோயுடையவர்கள், வழக்குகளில் மாட்டுப்பட்டு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வரை சென்றவர்கள் மிகுந்த வைராக்கியத்துடன் அருகிலிருக்கும் கோவில்களிலேயே பகல் முழுதும் வேறு சிந்தனையின்றி பழி கிடந்தது இவ்விரதம் அனுஷ்டிப்பார்கள்.

எனக்கு இப்படியான பிரச்சனைகள் இல்லாத போதிலும் எதோ என் பாக்கியம் தொடர்ந்து 12 வருடங்கள் பிடித்திருந்தேன். நான் பிடித்த முறை இப்படித்தான் ஈழத்தில் ஏராளமானவர்கள் பிடிக்கின்றனர்:

எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து நீராடி சுவாமிப் படத்துக்கு பூ வைத்துக் கும்பிட்டுவிட்டு கந்தசஷ்டி கவசம் படித்து எதுவித உணவுமின்றி நீர்கூட அருந்தாமல் பகல் முழுதும் இருந்து மாலையில் ஒரு பேணி தேநீர் மட்டும் குடிப்பது ( இளநீர் , பால், கோப்பி, பால்தேநீர், பால்கோப்பி எதுவாயினும் ஒரு வருடத்துக்கு ஒன்றை மட்டும் தேர்த் தெடுக்கவும்) இது 1 -தொடக்கம் 5 வது நாள்வரை. 6 ம் நாள் மாலை தேநீருக்குப் பதிலாக மேற்கூறிய பானங்களில் ஏதோ ஒன்று ஒரு பேணி மட்டும் மாற்றிக் குடிக்கவேண்டும். பின் அன்றிரவு நித்திரை முழித்து அதிகாலையில் சமைத்து (பாரணை என்று சொல்வார்கள்) இறைவனுக்குப் படைத்துவிட்டு கவசம் படித்து விட்டு அயலவர்களையும் கூப்பிட்டு உணவிட்டு சாப்பிடலாம். அன்று பகல் உறங்கக் கூடாது.

இப்படியாக இவ் பவித்திரமான விரதத்தை அடியேன் ஊரிலே தொடக்கி பின் சில வருடம் சவூதியிலும் , மற்றும் லிபியாவிலும் தொடர்ந்து கடைசியாக பிரான்சில் சில வருடங்களில் 12 வது வருடத்தை முடித்தேன். இதை இங்கு சொல்லக் காரணம் வெள்ளிக் கிழமைகளில் ஸ்பெசலாக மாமிசம் சாப்பிடும் மத்திய கிழக்கு நாடுகளில் கூட இறையருளால் எவ்வித இடையூறுமின்றி இவ் விரதத்தை என்னால் அனுஷ்டிக்க முடிந்தது. ஆகவே சிரத்தையுடன் மனோபலத்துடன் இவ் விரதத்தைப் பிடிக்கவும். முருகக் கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்.

தமிழ்சிறி சொல்வதுபோல் 3 மிளகும் கடித்து சப்பி தேநீரைக் குடிக்கலாம். மிளகு குளிர்ச்சி உடல் உஸ்ணத்தை தணிவிக்கும். முதல் எழுத மறந்து விட்டேன்.

நன்றி அண்ணா.... :D

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் கந்தசஸ்டி விரதம் உண்மையாக குழந்தைகள் இல்லாதவர்கள் தான் பிடிப்பார்கள்...சஸ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்டொரு பழமொழி இருக்குது என நினைக்கிறேன்...ஆனால் எல்லோரும் இந்த விரதத்தை ஒவ்வொரு நேர்த்திக் கடன் வைத்துப் பிடிக்கிறார்கள்...1)மற்றக் கடவுளீலும் பார்க்க முருகன் கேட்ட உடனே கொடுப்பாராம்...2)6 நாள் தான் விரதம்[மற்ற விரதங்கள் கூட நாள் பிடிக்க வேண்டும்...3)6 வருடம் விரதம் முடிவதற்கு இடையில் அவர்கள் எதைக் கேட்டு நேர்ந்தார்களோ அது கட்டாயம் கிடைக்குமாம்...மற்ற விரதங்களீலும் பார்க்க இந்த விரதம் மிகவும் கடுமையானது...மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று தான் நான் கேள்விப் பட்டனான்... :D

இது புது பழமொழியா ரதி? அல்லது வேறையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் செல்வச்சன்நிதியில் அதுவும் அடியார்மடத்தில் உபவாசவிரதமிருந்தவன்.என்னுடன் அம்மாவும் உபவாசமிருந்தார்.

சுருக்கமாக சொல்லப்போனால் எனக்காக அம்மாவும் அம்மாவுக்காக நானும் உபவாசமிருந்தோம்.

எல்லாம் அவன் செயல்.

விதிமுறைகள் எனக்கு ஞாபகமில்லை. suvy அவர்கள் என்னைவிட அனுபவம் உள்ளவர் போல் தெரிகிறது உண்மையும் அதுதான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஷ்டி பிடிக்கிற ஆக்கள் -அம்மா/ அப்பா பிடித்துதான் நாங்கள் படிச்சது அது வேற கதை :D, ஒருநாளைக்கு குறைந்தது 1500 கலோரி வரக்கூடியளவு சாப்பிடுங்கோ..அது காலமை என்றால் என்ன மத்தியானம் என்றால் என்ன..

யாழில் பஞ்சாத்திரம் சார் இடம் இங்கிலீஷ் படித்தாக்களுக்கு ஞாபகம் இருக்கும் அவருடைய ஜோக் ஒன்று, சொல்லுகிறது கந்த சட்டி உபவாசம் என்று ஆனால் சாப்பிடுகிறது " ஒரு போத்தல் பாலும் , ஒரு கிலோ இதரை வாழைப்பழமும்" அப்படி பிடிக்காட்டி சரி..

கிட்டடியில் எங்கட( வேலை செய்கிற இடத்தில் உள்ள ) கபேயில் காலமை ஓடர் பண்ணேக்க பக்கத்தில நின்றவன் சொன்னால் ( நான் எல்லாத்தையும் ஓடர் பண்ணினது ஒரு நேர சாப்பாடோடு அலுவலை முடிப்பம் என்று- முட்டை, பேகன், sausage எல்லாம் ஒரு கலந்த கலவையாய் எடுத்தன், ) உது இப்ப 2000 கலோரிக்கு மேலே போகப்போகுது என்று..என்ன நாசமோ தெரியாது பின்னேரம் மட்டும் வயிறு பும் எண்டு இருந்தது..

பார்த்து சாப்பிட்டு விரதம் இருந்து வரம் பெற வேண்டுகிறேன்..இதை சொன்ன என்னையும் கொஞ்சம் நினைத்து பிடித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

மற்றது கந்த சட்டி கவசம் நல்லது..நான் O / L சோதினைக்கு போக முன்பு படித்திட்டுதான் போனான்..ஆரும் அதன் இணைப்பிருந்தால் இணைக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கு ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

---------

இப்படியாக இவ் பவித்திரமான விரதத்தை அடியேன் ஊரிலே தொடக்கி பின் சில வருடம் சவூதியிலும் , மற்றும் லிபியாவிலும் தொடர்ந்து கடைசியாக பிரான்சில் சில வருடங்களில் 12 வது வருடத்தை முடித்தேன். இதை இங்கு சொல்லக் காரணம் வெள்ளிக் கிழமைகளில் ஸ்பெசலாக மாமிசம் சாப்பிடும் மத்திய கிழக்கு நாடுகளில் கூட இறையருளால் எவ்வித இடையூறுமின்றி இவ் விரதத்தை என்னால் அனுஷ்டிக்க முடிந்தது. ஆகவே சிரத்தையுடன் மனோபலத்துடன் இவ் விரதத்தைப் பிடிக்கவும். முருகக் கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்.

---------

சுவி, நீங்கள் வெப்பம் மிகுந்த நாடுகளிலும் கந்த சஷ்டி விரதத்தை முறையாக பிடித்த வைராக்கியம் பெருமையாக உள்ளது.

அண்மையில் நான் வெப்பம் நிறைந்த முஸ்லீம் நாடு ஒன்றுக்கு, அவர்களின் ரமழான் நோன்பு நேரம் போயிருந்த போது.....

பலர் பகலில் நீர் அருந்துவதை கண்டேன். அவர்களில் சிலரிடம் விசாரித்த போது.....

இங்கு வெக்கை என்பதால்.... உடலிருந்து நீரிழப்பு அதிகமாக இருக்கும், ஆதலால் நீர் அருந்துகின்றோம் என்றனர்.

அவர்களின் நோன்பின் போது.... பகலில் ஒன்றும் அருந்தாமல், சூரிய அஸ்தமனத்தின் பின் எவ்வளவென்றாலும் சாப்பிடலாம்.

கந்த சஷ்டி விரதம் அப்படிப்பட்டதல்ல, 6 நாள் உண்ணாமல் இருக்க வேண்டும். கடினமானது.

ஆனால், இதனை ஒழுங்காக பிடிப்பவர்களுக்கு முருக பகவானின் அருட் கடாட்சம் நிச்சயம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

Saturday, 06 November 2010 01:58

murun"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட

தீரவேல் செல்வேல் திருக்கைவேல்வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

துளைத்தவேல் உண்டே துணை..'

என்னும் சிறப்புகளை உடையது சகலலோக அன்னை பராசக்தி திருக்குமரனுக்கு வழங்கிய திருக்கைவேல். வேலே இத்தகு சிறப்புடையதெனில் அதனைத் தாங்கிய சிங்கார வடிவேலனின் சிறப்பும் பெருமையும் அளவிடதற்கரியது. இம்மாதம் 6 ஆம் திகதி முருகனுக்கே உரியதானதும் வாழ்வில் எல்லா நலன்களையும் வாரி வழங்கும் கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகி 11 ஆம் திகதி சூரசம்ஹாரமும் மறுநாள் பாரணையும் அமையப்பெறுகிறது.

ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையான ஆறு தினங்களும் கந்தசஷ்டி விரதம் நோற்கப்படுகின்றது. இவ்விரதம் முருகப்பெருமானது தோற்றத்துடன் நெருக்கமான தொடர்புடையது. தாரகன்,சிங்கமுகன்,சூரபன்மன் ஆகிய மூன்று அசுரர்களும் அசமுகி என்பாளும் பிரமதேவரது புதல்வரான காசிப முனிவருக்கும் மாயை என்ற அசுரகுலப் பெண்ணுக்கும் பிறந்தவர்களாவர். இச்சகோதரர்கள் பிறப்பினால் இயல்பாகவே அமையப்பெற்ற அசுரத் தன்மையினால் 108 யுகங்கள் உயிர் வாழவும் 1008 அண்டங்களையும் அரசாளுகின்ற வாதத்தைப் பெற்றனர். மேலும், போருக்குச் செல்வதற்கு இந்திரஞாலம் என்ற தேரையும் சிவபிரானை நோக்கித் தவமிருந்து பெற்றனர். இத்தால் கர்வம் கொண்டு தேவர்களை வருத்திட தேவர்கள் தமக்கு அருள் பாலித்துக் காத்தருளும்படி முழுமுதற்கடவுளான பரமேஸ்வரனைப் பணிந்தனர்.

கருணையே உருவான திருநீலகண்டர் தமது ஈசானம்,அகோரம்,தத்புருஷம்,வாமதேவம்,சத்தியோஜாதம் ஆகிய ஐந்து முகங்களினதும் அவரது ஆறாவது முகமான அதோமுகத்தினதும் நெற்றிக்கண்களினின்று புறப்பட்ட தீப்பொறிகள் தண்டாமரைகள் நிறைந்த சரவணப்பொய்கையில் சூரியனையே தன் நாயகனாய் எண்ணி மணம் பரப்பி நின்ற ஆறு தாமரைப் பூக்களில் வீழ்ந்தன. பல்லாயிரம் கோடிச் சூரியப் பிரகாசத்துடன் ஆறு குழந்தைகள் தோன்றிட கார்த்திகைப் பெண்களும் அங்கு தோன்றி அந்த ஆறு குழந்தைகளையும் சீராட்டிப் பாலூட்டி வளர்த்து வந்தனர். தன் குழந்தைகளைப் பார்க்கும் ஆவலுடன் பராசக்தி அன்னையும் அங்கு எழுந்தருளினாள். தாய்மையே உருவான உமையவள் தன் ஆறு குழந்தைகளையும் அன்புடன் கட்டியணைத்திட இவ்வுலகமுய்ய ஒரு திருமுருகனாக மால்மருகன் சரவணபவன் தோன்றினான்.

பன்னிரு திருக்கரங்களுடனும் பிரகாசமான ஆறு திருமுகங்களுடனும் அழகின் அழகாக தேவசேனாதிபதியாக தேவரும் முனிவரும் வாழ்த்திட அகிலலோக அன்னை மலைமகள் பார்வதி தந்த தனிப்பெரும் சக்தி வேலுடன் சூரபன்மனைச் சம்ஹாரம் செய்திடப் புறப்பட்டார். தாரகனையும் அவனுக்குத் துணையாய் நின்ற கிளெஞ்சத்தினையும் பிளந்து சிங்கமுகாசுரனையும் வதம் செய்து பின் சூரனின் படைகளையும் அழித்ததுடன்,அவனுக்கு முருகன் தன் திருப்பெருவடிவமாக எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என்றிடும் பரமேஸ்வர வடிவம் காட்டி சிவனும் அவன் மகனும் மணியும் ஒளியும் போன்று ஒருவரே என்றுணர்த்தினர். ஆயினும் தன் பிறவிக்குணம் மாறாத சூரபன்மன் நடுக்கடலில் மாமரமாகத் தோன்றிட சூரபன்மனை இருகூறாகத் தன் ஞான சக்தியான திருநெடுவேலினால் பிளந்து தன்னுடைய ஆணவ மலத்தின் வலியிழந்து ஒரு பகுதி மயிலாகி வாகனமாகிட மற்றைய கூறு சேவலாகி சேவற்கொடியாய் முருகனின் திருக்கரங்களில் அமையப்பெற்றது. இறையருளால் ஆணவம் வலியிழந்து ஆன்மா பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தஷஷ்டி விரதம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதற்கேற்ப கந்தசஷ்டியை முறையாகக் கைக்கொள்ளுவதால் அகம் என்னும் பையினுள் நல்லெண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பது மறைபொருளாகும். கந்தசஷ்டி விரதம் எனும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத்திகழ்கின்றன. அவற்றுள் சில வருமாறு:

அமாவாசையில் ஒருவேளை உணவுண்ணல்.

ஆரம்ப நாளில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து காப்புக்கட்டலும் சங்கற்பம் செய்தலும்

ஆறு தினமும் முருகன் ஆலயத்தில் இறை வழிபாடு, புராண படனம் போன்றவற்றில் ஈடுபடல்.

இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பித்தல்.

7 ஆம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப்பூசை முடிந்ததும் மகேசுர பூசை செய்து விரதத்தை நிறைவு செய்தல்.

இவ்விரதத்தைக் கடுமையாய் கடைப்பிடிப்போர் ஆறு நாளும் உபவாசம் இருப்பர். சிலர் ஐந்து தினம் ஒரு வேளை உண்டு ஆறாம் நாள் உபவாசமிருப்பர்.

முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் வேலின் மகிமை மிகப்பெரிது. முருகனுக்கே உரிய படையாகிய அதனை படை அரசு என்று பாம்பன் சுவாமிகளும் சக்தி படைத் தெய்வம் என்று தண்டபாணி சுவாமிகளும் போற்றினார்கள். வேலின் பெருமையை அருணகிருநாதர், சிதம்பர சுவாமிகள், ஆதிசங்கரரும் போற்றியுள்ளனர். ஆகவே வேலுண்டு வினையில்லை என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து வேல் வேல் வெற்றி வேல் என்றும் வேல் முருகனுக்கும் அரோகரா என்றும் போற்றுகின்றோம்.

"தோகை மேல் உலவும் கந்தன் கரத்திருக்கும் வெற்றி வாகையை சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை' என்று மகாகவி பாரதி பாடியுள்ளார். அத்துடன் வேலைப் போன்று மயிலுக்கும் பெருமையுண்டு. மயில்வாகனன் என்னும் பெயர் மயிலை வாகனமாக உடையவன் என்றும் வேலாயுதன் என்னும் பெயர் வேலாயுதத்தைத் திருக்கரத்தில் தாங்கிய பெருமான் என்றும் பொருள் தரும். மயில் எம்பெருமானுக்கு வாகனமாக இருந்து பக்தர்களால் பெருமையுடன் வணங்கப்படுகின்றது. மயிலுண்டு பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. யானை, ஆடு, மயில் ஆகிய மூன்று முருகனுக்கு வாகனமாக விளங்கிய போதிலும் மயிலே மிகவும் சிறப்புப் பெறுகின்றது. வேதங்கள் கூறும் மகாமந்திரமே மயிலாக இயங்குகின்றது.

மேலும் கந்தசஷ்டி விரதகாலத்தில் முருகனின் சிறப்புகளை எடும்தியம்பும் பாலதேவராய சுவாமிகள் அருளிய கந்தசஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முககவசம், கந்தபுராணம் போன்ற நூல்களைப் பாராயணம் செய்தல் சிறப்பு. கவசம் எனும் போது அது போரிற்குச் செல்லும் வீரனைப் பாதுகாக்க உதவும் அங்கியாகும். அதே போன்று முருகனின் அடியார்களை பிற துன்பங்களினின்று பாதுகாக்கும் கவசமாக இச் ஷண்முக கவசமும் கந்தசஷ்டி கவசமும் அமைகின்றன. பாவங்களும் தீமைகளும் நிறைந்த இந்த கலியுகத்தில் இவற்றினின்று எம்மைப் பாதுகாக்க விரத அனுட்டானங்களும் வழிபாடுகளுமே துணை புரிகின்றன. அவ்வகையில் கலியுகவரதனாக அருளும் முருக வழிபாடு எமக்கு மிகவும் அவசியம்.

கந்தசஷ்டி விரத ஆறாவது நாள் ஆலயங்களில் காலையில் பட்டாபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். முருகனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் மாறிலா வள்ளிநாயகியும் தெய்வானை அம்மையும் திகழ்கின்றனர். அவர்களது திருவருளையும் பெறுவதற்கு கந்தசஷ்டி விரதகாலமே சிறப்பானது. இவ்வாறான சிறப்புகளையுடைய கந்தசஷ்டி விரதகாலத்தில் அடியார்கள் யாவரும் ஆசாரசீலராய் ஆலயம் சென்று கஜவல்லி, மகாவள்ளி சமேதரான ஷண்முகப் பெருமானது திருவருளைப் பெற்று வாழ்வில் குறைகளின்றி வாழ்வோமாக.

thinakkural

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று தான் நான் கேள்விப் பட்டனான்... :lol:

இது புது பழமொழியா ரதி? அல்லது வேறையா?

சஸ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது காலப் போக்கில் மருகி சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் மாறி விட்டது[எங்கள் ஆட்கள் சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்த அயலவர் ஒருவரின் முறை.

கந்த சஸ்டிக்கு முதல் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் புத்தூர், நீர்வேலிப் பகுதிக்குப் போய் இரண்டு கிடாய் ஆடுகள் வாங்கி வந்து வீட்டின் கொல்லையில் கட்டிவிடுவார். கிடாய்கள் தமது வழக்கமான "சேட்டைகளை" விடாமல் இருக்க கயிற்றினால் "பூட்டுக்கால்" கட்டிவைத்திருப்பார்.

கந்த சஸ்டி ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பகல்பொழுது முழுவதும் விரதம் இருந்து, பின்னேரம் ஐந்து மணிக்கு முழுகிக் குளித்து, கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி, வீடு வந்து பாலும் பழமும் மட்டும் புசிப்பார். அதேவேளை தவறாமல் கொல்லையில் நிற்கும் கிடாய்களுக்கு நல்ல தவிடு, புண்ணாக்கு, முருக்கமிலைகள் எல்லாம் கொடுத்து அவைகள வயிறு உப்பவைப்பார். கிடாய்களும் எல்லாம் கிடைத்த திருப்தியில் பொழுதுபோவதற்காகச் தங்களுக்குள் தலையால்/கொம்பால் மோதிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்.

ஆறுநாள் உபவாசம் முடிந்து அடுத்த நாள் "பாறணை"யும் முடிந்தபின்னர், ஒருநாள் இடைவெளி விட்டு, வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், தவிர்த்து நல்ல நாளாய்ப் பார்த்து நல்லெண்ணெய் முழுக்குடன் கிடாய் வெட்டுதல் நடக்கும். ஆறு நாள் உபவாசத்தால் மெலிந்த உடலைப் பழையபடி கொண்டுவர, இரத்தவறையும், இரண்டுகிடாயும், போத்தல்களும் தேவைதானே.

விரதம் இருப்பவர்கள் மன்னிக்க :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. இதுதான் விரதமா? :):lol:

Link to comment
Share on other sites

எங்கள் ஊரிலும் இப்படி நடப்பதுண்டு. அவை திருவிழாவிற்கு முன் திருவிழாவிற்குப் பின் என இருக்கும். முக்கியமாகத் திருவிழாவிற்கு முன் பெரிய விருந்தாகவே இருக்கும். :rolleyes::wub::wub::lol::lol:

Link to comment
Share on other sites

கந்த சஸ்டிக்கு முதல் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் புத்தூர், நீர்வேலிப் பகுதிக்குப் போய் இரண்டு கிடாய் ஆடுகள் வாங்கி வந்து வீட்டின் கொல்லையில் கட்டிவிடுவார். கிடாய்கள் தமது வழக்கமான "சேட்டைகளை" விடாமல் இருக்க கயிற்றினால் "பூட்டுக்கால்" கட்டிவைத்திருப்பார்.

கந்த சஸ்டி ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பகல்பொழுது முழுவதும் விரதம் இருந்து, பின்னேரம் ஐந்து மணிக்கு முழுகிக் குளித்து, கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி, வீடு வந்து பாலும் பழமும் மட்டும் புசிப்பார். அதேவேளை தவறாமல் கொல்லையில் நிற்கும் கிடாய்களுக்கு நல்ல தவிடு, புண்ணாக்கு, முருக்கமிலைகள் எல்லாம் கொடுத்து அவைகள வயிறு உப்பவைப்பார். கிடாய்களும் எல்லாம் கிடைத்த திருப்தியில் பொழுதுபோவதற்காகச் தங்களுக்குள் தலையால்/கொம்பால் மோதிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்.

ஆறுநாள் உபவாசம் முடிந்து அடுத்த நாள் "பாறணை"யும் முடிந்தபின்னர், ஒருநாள் இடைவெளி விட்டு, வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், தவிர்த்து நல்ல நாளாய்ப் பார்த்து நல்லெண்ணெய் முழுக்குடன் கிடாய் வெட்டுதல் நடக்கும். ஆறு நாள் உபவாசத்தால் மெலிந்த உடலைப் பழையபடி கொண்டுவர, இரத்தவறையும், இரண்டுகிடாயும், போத்தல்களும் தேவைதானே.

விரதம் இருப்பவர்கள் மன்னிக்க :rolleyes:

இதைத்தான் "கொன்றால் பாவம் தின்றால் போச்சு, இது தான் என் கட்சி" என்பார்கள்.

விரதம் இருப்பவர்கள் மன்னிக்க :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்த அயலவர் ஒருவரின் முறை.

கந்த சஸ்டிக்கு முதல் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் புத்தூர், நீர்வேலிப் பகுதிக்குப் போய் இரண்டு கிடாய் ஆடுகள் வாங்கி வந்து வீட்டின் கொல்லையில் கட்டிவிடுவார். கிடாய்கள் தமது வழக்கமான "சேட்டைகளை" விடாமல் இருக்க கயிற்றினால் "பூட்டுக்கால்" கட்டிவைத்திருப்பார்.

கந்த சஸ்டி ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பகல்பொழுது முழுவதும் விரதம் இருந்து, பின்னேரம் ஐந்து மணிக்கு முழுகிக் குளித்து, கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி, வீடு வந்து பாலும் பழமும் மட்டும் புசிப்பார். அதேவேளை தவறாமல் கொல்லையில் நிற்கும் கிடாய்களுக்கு நல்ல தவிடு, புண்ணாக்கு, முருக்கமிலைகள் எல்லாம் கொடுத்து அவைகள வயிறு உப்பவைப்பார். கிடாய்களும் எல்லாம் கிடைத்த திருப்தியில் பொழுதுபோவதற்காகச் தங்களுக்குள் தலையால்/கொம்பால் மோதிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்.

ஆறுநாள் உபவாசம் முடிந்து அடுத்த நாள் "பாறணை"யும் முடிந்தபின்னர், ஒருநாள் இடைவெளி விட்டு, வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், தவிர்த்து நல்ல நாளாய்ப் பார்த்து நல்லெண்ணெய் முழுக்குடன் கிடாய் வெட்டுதல் நடக்கும். ஆறு நாள் உபவாசத்தால் மெலிந்த உடலைப் பழையபடி கொண்டுவர, இரத்தவறையும், இரண்டுகிடாயும், போத்தல்களும் தேவைதானே.

விரதம் இருப்பவர்கள் மன்னிக்க :huh:

நான் இரண்டு ஆட்டுத்துடை வாங்கி வைச்சிருக்கிறன்.. பாறணை முடிய ஒரே அட்டகாசம்தான் :huh:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.