Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?


Recommended Posts

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.......

மேலும் விபரங்களுடன் வாசிக்க உதவ கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77207

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

சாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்!!

இப்போராளிக்கு மட்டுமல்ல எல்லாப் போராளிகள், சிங்களத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி, மீள முற்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு புலத்தமிழனின் தலையிலும்! இதை நாம் செய்யாது முடிப்பின், சிங்களம் எதை சாதிக்க விரும்பி, இம்மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியதோ, அதற்கு நாமே பலியாகி விடுவோம்!!

அதற்காக ஏன் நாம் நாடுகடந்த அரசையும், மற்றைய புலத்தில் உள்ள தமிழ் அவைகளியும் நோகின்றோமோ, புரியவில்லை??? அந்த அமைப்புகளிடையே கருத்தொற்றுமை/சீரான குறிக்கோள்/.. போன்ற பல பிரட்சனைகள் உள்ளன, மறைப்பதற்கில்லை!! அதற்காக இந்த புலம் பெயர் அமைப்புகள்தான், அவர்களது கடமைகளை(செய்ய வேண்டியவைகளை) விடுத்து, இப்போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்ய முற்பட்டால் சிங்களம் அனுமதி தருமா?? இல்லை அதனை ஏற்கப்போகிறதா?? இல்லை அனுமதி கிடைத்தாலும், அவர்களால் பயனடையும் மக்களை சிங்களம் வாழவா விடப்போகிறது???

சில காலங்களுக்கு முன்னுக்கு, யாழில் மீள்குடியேறிய ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சிங்களத்தினால் துரத்தப்பட்டுள்ளனர்! என்னத்தை செய்ய முடிந்தது எம்மால்???

சில நாட்களுக்கு முன்னுக்கு சாந்தி திண்ணையில் ... யாழ்கள ஜீவாவின் உதவியினால் பலனடைந்த ஒருவர், இனம் புரியாதோரினால் கடத்தப்பட்டார் ... நாம் செய்தோம், வாழ வைக்க முடிந்ததா? தடுக்க முடிந்ததா???

அங்குள்ள மக்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு நிலையான அரசியல் தீர்வு ஏற்படும் வரை, சிங்களம், நாம் எவ்வளவற்றையும் அம்மக்களுக்கு செய்தாலும், அவர்களை வாழ விடப்போவதில்லை!!!!

இங்குள்ள புலம் பெயர் அமைப்புகள், தமிழ் மக்களுக்கு சிங்களம் கடந்த 60 ஆண்டுகாலமாக செய்த அட்டூளியங்களுக்கு நீதி கிடைக்க பாடுபட நாம் உந்துதல் கொடுக்க வேன்டும்! இறுதி யுத்தத்தில் ஓரிரு நாட்களில் 40000 மக்கள் கேட்டு கேள்வியில்லாமல் சிங்களத்தினால் அழித்தொழிக்கப்பட்டதற்கு நீதி கிடைக்க போராட நாம் உந்துதல் கொடுக்க வேண்டும்! யுத்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உந்துதல் கொடுக்க வேண்டும்!! ... அவர்கள் இவ்வேலைகளை பார்க்கட்டும்!! இவற்றையாவது சரியாக செய்யட்டும்!! அதனை தட்டிக் கேட்போம்! எல்லாவற்ரையும் அவர்களின் தலையில் போடு தப்பிக்க எண்ணுகிறோம்!

அடுத்து இன்று சிங்களம் எமக்கு ஓர் பேரளிவை தந்து விட்டு ... எம்மை சரணாகதி அடையச்சொல்லி வற்புறுத்துகிறது!! நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம்!! இல்லை எம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது எனும் எண்ணத்தில் அவனது வலையில் வீழ்கிறோம்.

வன்னி யுத்ததில் ஏறக்குறைய 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் அதற்கு முன் 200000 வரையிலான பொதுமக்கள் சிங்களத்தினால் கொல்லப்பட்டனர், அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். யாழில் கூட பாதுகாப்பு வலயமெனும் போர்வையில், மிக செழிப்பான இடங்கள், யாழில் ஏறக்குரைய மூன்றில் ஒரு பங்கிற்கு கூடிய பிரதேசத்தில் இருந்து விரட்டப்பட்டனர். இன்று 20 வருடங்களுக்கு மேலாகியும், மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை!! இன்று 40000 அழிவுகளுக்கு பின் நாம் சரணாகதி அடைவது சரியென்றால், நாம் அதனை முன்பே செய்திருக்கலாம்!

இல்லை, இறுதி யுத்ததில் சிங்களம் ஏற்படுத்திய அழிவுதானே, எமக்கு சிங்களம் தந்த இறுதி அழிவு??? இல்லவே இல்லை!! இது தொடர்கிறது ... நிற்கப்போவதில்லை, நாம் சரணாகதி அடைந்தாலும்!!!

எமக்கு இன்றிருக்கும் பலம் புலம்பெயர் சமூகமே! இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்! அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும்!! இல்லையேல் அங்குள்ள மக்களுக்கு நாம் எல்லாவற்றையும் செய்தாலும், அவர்களின் வாழ்வு சுபீட்சமடைய சிங்களம் விடப்போவதில்லை!

அங்குள்ள போராளிகள், பொதுமக்களுக்கான தேவைகளை புலம்பெயர் சமூகம் செய்யத்தான் வேண்டும், அதேவேளை அவர்களை பணயக்கைதிகளாக்கி, இப்புலம்பெயர் சமூகத்தின் அரசியர் செயற்பாடுகளை முடக்கும் சிங்களத்தின் எண்ணங்களுக்கு அடிபணியாது இருப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்!!

அதற்காக ஏன் நாம் நாடுகடந்த அரசையும், மற்றைய புலத்தில் உள்ள தமிழ் அவைகளியும் நோகின்றோமோ, புரியவில்லை???

ஆமென்

Link to comment
Share on other sites

மேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கும் அவன் அரசுக்கும் தமிழ் மக்கள் அனைவருமே பொன் முட்டை இடும் வாத்துக்கள்.

Link to comment
Share on other sites

கடந்தவார இறுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன்.தேடகம் ஒழுங்குபணியிருந்தது.முதன் முதல் மாற்றுக்கருத்துளோர்களும் நாடு கடந்த அரசு பிரதிநிதிகளும் கூடியிருந்தார்கள்.இலங்கையில் இருந்து கம்னியூஸ்ட் கட்சிசார்பாக செந்திவேலும்,வியூகம் சார்பில் ஜான் மாஸ்டரும் நாடுகடந்த அரசு சார்பில் பொன்.பாலராஜனும் தமது கருத்துகளை முன்வைத்தார்கள்.பின்னர் வந்திருந்தோரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.

ஏதொ ஒரு ஜனநாயகத்திற்கான தொடக்கம் என்றும் விரும்பினால் கொள்ளலாம்.

தாங்கள் ஒரு போத்தலுக்குள் அடைக்கப்பட்ட மனநினையிலேயே இருப்பதாகவும் வருங்காலங்களில் எல்லோரும் பங்கு பற்றும் ஒரு நிலைக்கு நாடு கடந்த அரசு வளரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.புலிகளின் பணம் பற்றி தமக்கு ஒன்றுமே தெரியாது என கைவிரித்தார்.

பிரான்ஸில் ஈ.பீ.ஆர்.எல்.எப் கூட்டமும் ஜேர்மனியில் புளொட் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன.நாட்டிலும் தமிழரங்கத்தில் தமிழர் தேசியக் கூட்டைமைப்பு பங்கு பற்றியிருக்கின்றது.ஏதோ ஜனநாயக வழியில் எமக்குள் அடிபடாமல் ஒன்றுபட்டேமேயானல் ஏதாவது விடிவு கிடைக்கும்.

மீண்டும் புலிகளை இங்கு இழுப்பதாக நினைக்க வேண்டாம்.நாங்கள் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கலாம் ஆனால் உலகம் அவர்களை வைத்திருக்கும் கணிப்பு முற்றிலும் வேறானது. இன்று டொரொன்டோ ஸ்டாரில் ஒரு செய்தி லசந்தாவின் கொலை பற்றி வந்திருக்கின்றது.அதில் அவர்கள் லசந்தா புலிகளை பற்றி எழுதிய வசனம் ஒன்றையும் போட்டிருக்கின்றார்கள்.இதே போல் எவராவது எமது நாட்டு பிரச்சனை பற்றி கதைக்க தொடங்கும் போது புலிகளை பற்றி அவர்கள் கொடுக்கும் வரைவிலக்கணம் மிக கீழ்த்தரமானது.இவைகளெல்லாவற்றையும் கருத்திலெடுத்தே நாம் அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

சாந்தியக்கா முடிந்தால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.என்னாலான உதவிகளை செய்கின்றேன்.எனக்கு நீங்கள் போட்ட தனிமடலுக்கு பதில் போட்டென் பின்னர் ஒன்றயும் காணவில்லை விட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

சாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்!!

இப்போராளிக்கு மட்டுமல்ல எல்லாப் போராளிகள், சிங்களத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி, மீள முற்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு புலத்தமிழனின் தலையிலும்! இதை நாம் செய்யாது முடிப்பின், சிங்களம் எதை சாதிக்க விரும்பி, இம்மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியதோ, அதற்கு நாமே பலியாகி விடுவோம்!!

சில காலங்களுக்கு முன்னுக்கு, யாழில் மீள்குடியேறிய ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சிங்களத்தினால் துரத்தப்பட்டுள்ளனர்! என்னத்தை செய்ய முடிந்தது எம்மால்???

சில நாட்களுக்கு முன்னுக்கு சாந்தி திண்ணையில் ... யாழ்கள ஜீவாவின் உதவியினால் பலனடைந்த ஒருவர், இனம் புரியாதோரினால் கடத்தப்பட்டார் ... நாம் செய்தோம், வாழ வைக்க முடிந்ததா? தடுக்க முடிந்ததா???

அங்குள்ள மக்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு நிலையான அரசியல் தீர்வு ஏற்படும் வரை, சிங்களம், நாம் எவ்வளவற்றையும் அம்மக்களுக்கு செய்தாலும், அவர்களை வாழ விடப்போவதில்லை!!!!

அடுத்து இன்று சிங்களம் எமக்கு ஓர் பேரளிவை தந்து விட்டு ... எம்மை சரணாகதி அடையச்சொல்லி வற்புறுத்துகிறது!! நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம்!! இல்லை எம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது எனும் எண்ணத்தில் அவனது வலையில் வீழ்கிறோம்.

இல்லை, இறுதி யுத்ததில் சிங்களம் ஏற்படுத்திய அழிவுதானே, எமக்கு சிங்களம் தந்த இறுதி அழிவு??? இல்லவே இல்லை!! இது தொடர்கிறது ... நிற்கப்போவதில்லை, நாம் சரணாகதி அடைந்தாலும்!!!

எமக்கு இன்றிருக்கும் பலம் புலம்பெயர் சமூகமே! இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்! அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும்!! இல்லையேல் அங்குள்ள மக்களுக்கு நாம் எல்லாவற்றையும் செய்தாலும், அவர்களின் வாழ்வு சுபீட்சமடைய சிங்களம் விடப்போவதில்லை!

அங்குள்ள போராளிகள், பொதுமக்களுக்கான தேவைகளை புலம்பெயர் சமூகம் செய்யத்தான் வேண்டும், அதேவேளை அவர்களை பணயக்கைதிகளாக்கி, இப்புலம்பெயர் சமூகத்தின் அரசியர் செயற்பாடுகளை முடக்கும் சிங்களத்தின் எண்ணங்களுக்கு அடிபணியாது இருப்போம்!

நெல்லையன் உங்கள் அனைத்து ஆதங்கங்களுக்கும் இதுவே எனது பதில்.

புற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..!

வாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.

முடியும் வரை முயற்சிப்போம். அவனுக்காக ஏதுமறியாத அவனது மனைவியும் குழந்தையும் சிறையில் அவலப்படுகிறார்கள். அவர்களுக்காவது ஒரு ஒளி தெரியுமானால் அதுவே அவனுக்கு மகிழ்ச்சிதான்.

இதே ஒரு முக்கிய புள்ளியாக கையில் பலத்துடன் இருப்போரின் அன்புக்கு அல்லது உரிமைக்கு உரியவரானால் எத்தனைகோடியானும் கொட்டிக்கொடுத்துவிடுவோம். இவனோ பயித்தியக்காரன் கையில் கோடிகோடியாக இருந்த கடைசிநிமிடம் வரை இலட்சியமென்றே வாழ்ந்து தொலைந்ததே இவனுக்கு வினையாகிப் போயிருக்கிறது.

எல்லாம் நாம் 3ம் நபர்களாக நின்று எழுதவும் சொல்லவும் இலகுவாயிருக்கும். ஆனால் நடைமுறையில் அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும் துயரமும். நாங்கள் 3வதும் அல்லது பல்லாயிரம் தொலைவிலிருந்து தத்துவம் பேசுகிறோம்.

ஏட்டுச்சுரைக்காய் எதற்குத்தான் உதவும். :D

நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா முடிந்தால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.என்னாலான உதவிகளை செய்கின்றேன்.எனக்கு நீங்கள் போட்ட தனிமடலுக்கு பதில் போட்டென் பின்னர் ஒன்றயும் காணவில்லை விட்டுவிட்டேன்.

தனிமடல் இட்டுள்ளேன் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே போட்ட மடல் எதுவும் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

எதுக்கென்றாலும் குறிப்பிட்ட ஒரு மக்கள் தொகுதியினர் தான் சிலுவை சுமக்கனும் என்று என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம் 10 வருடத்திற்கு மேலாக போராட்டகளம்..3-4 வருடம்கள் சிறை வாழ்க்கை..இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள் இவரிடமிருந்து.. ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பைபிளை மூடிவைச்சிட்டு வாங்கோ. :D

சாந்தியக்கா

நேரம் கிடைக்காத வேளையில் அவசர பதில் எழுதமுடியாதபோது

நான் நினைப்பதை வேறு ஒருவர் எழுதியிருந்தால்

அதுவே என் கருத்தும் என்பதற்காகவே ஆமென் என்ற வார்த்தையை நான் பாவிக்கின்றேன்

மதம் இதற்குள் அடங்காது பைபிளை நான் படித்ததில்லை.

இதற்குள் அதை எழுதி இந்த திரியை திசைதிருப்ப விரும்பவில்லை.

அவரவர் அவரவரது வேலையை செய்யட்டும் என்பதே என் கருத்து.

அத்துடன் தங்களது முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு.

அவர்களிடமும் நாம் கேட்கலாமே தவிர

இதை செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற சுட்டுவிரல்நீட்டுதல்கள் சரியா என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா

நேரம் கிடைக்காத வேளையில் அவசர பதில் எழுதமுடியாதபோது

நான் நினைப்பதை வேறு ஒருவர் எழுதியிருந்தால்

அதுவே என் கருத்தும் என்பதற்காகவே ஆமென் என்ற வார்த்தையை நான் பாவிக்கின்றேன்

மதம் இதற்குள் அடங்காது பைபிளை நான் படித்ததில்லை.

இதற்குள் அதை எழுதி இந்த திரியை திசைதிருப்ப விரும்பவில்லை.

அவரவர் அவரவரது வேலையை செய்யட்டும் என்பதே என் கருத்து.

அத்துடன் தங்களது முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு.

அவர்களிடமும் நாம் கேட்கலாமே தவிர

இதை செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற சுட்டுவிரல்நீட்டுதல்கள் சரியா என்பது தெரியவில்லை.

ஓ அப்படியா ! நீங்கள் ஆமென் என எழுதும் போது அது ஏதோ அசெளகரியம் போலிருக்கிறது. அதுதான் எழுதினேன். மற்றும்படி மதத்தை குறைகூறும் எண்ணமில்லை.

அவரவர் அவரவர் வேலையை செய்ய வேண்டுமென்பதே எனது விருப்பமும். மேலுள்ள விபரத்துக்னகு உரியவனுக்காக பலரிடம் கையேந்தியதில் நாட்டுக்காக போனவருக்கு ஏனாம் விடுதலையென்ற விமர்சனங்கள் பலதரப்பிலிருந்து வந்தது. அது நான் குறிப்பிட்ட அரசு அவைகளிலிருந்தும்தான். அவைகளில் அவன் படைத்த வெற்றிகளுக்கு சொக்லேட் அனுப்பியவர்களும் அடங்குகின்றனர். இன்று தேடுவாரற்று இருக்கிறான். வெற்றியில் பங்குபோட்டவர்கள் அவன் வேதனையில் இருக்கும் போது ஒற்றை ஆறுதல் வார்த்தையைக்கூட சொல்ல அஞ்சி ஒளித்திருக்கிறார்கள். அந்த ஆதங்கமே இன்று இதை எழுத நேர்ந்தது.

இதையெல்லலாம் செய்ய அவர்களில்லை ஆனால் இவனுக்காக இவர்கள் எல்லோரும் செய்ய வேண்டிய கைமாறு நிறையவே இருக்கிறது. மன்னிக்கவும் இது சுட்டுவிரல் நீட்டி குற்றம் பிடிக்கும் நோக்கமில்லை. அவன் வெளியில் வரவேணும்.

மாறாத புற்றுநோயளரை உயிர்கொல்லும் நோய்தானே மருந்தெதற்கு என விட்டுவிடாதது போல இவனுக்கான விடுதலையில் அக்கறையை தொடர அதற்கான வளங்கள் எதுவுமில்லாமல் என்னாலும் கனவுதான் காணமுடிகிறது.

நாங்கள் அவனது நிலையில் இருந்து பார்க்காமல் எங்களது உச்சங்களிலிருந்து பார்ப்பது வேதனையாக இருக்கிறது.

மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறாத புற்றுநோயளரை உயிர்கொல்லும் நோய்தானே மருந்தெதற்கு என விட்டுவிடாதது போல இவனுக்கான விடுதலையில் அக்கறையை தொடர அதற்கான வளங்கள் எதுவுமில்லாமல் என்னாலும் கனவுதான் காணமுடிகிறது .

என் நிலையும் அதுதானக்கா

நேற்று இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது

பல மணித்தியாலங்கள் அதே நினைவு. நெஞ்சு பொறுக்குதில்லை. ஆனால் ஒரு கை மட்டும்தட்டி...........

Link to comment
Share on other sites

மேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா?????

இங்கு சாந்தி/சாத்திரியின் முயற்சிகளை ஒருவரும் குறைகூற வரவில்லை ... மாறாக .... இத்தலைப்பிற்கே சில பதில்கள்!! மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை! ஆனால் அவை சரியா? பிழையா? என்பதே பிரட்சனை!!

மே18 முடிய, பல போராளிகள்/பொதுமக்கள் கைது செய்யப்பட்டும்/சரணடைந்தும் முகாங்களில் கிடக்க ... சிங்களம் குறுகிய காலத்தில் இவர்களை விற்பனைப் பொருளாக்கியது!! இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மாமாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள்! பின்பு இந்த பிஸ்னஸ் டக்லஸ்/சித்தார்த்தன் கும்பலிடமிருந்து கே.பிக்களிடம் போனது வேறு கதை!

இவ்வவிடைத்தரக மாமாக்களினால் சில போராளிகள்/பொதுமக்கள் வெளியில் எடுக்கப்பட்டார்கள்தான்!! ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர்! இப்படி இந்த பல லட்சங்களை கொடுத்தும், கிடைக்காதவர்கள் பலர்!!

இங்கு மேலுள்ள போராளிக்கு சிங்களம் நிர்ணயித்த விலை 25லட்சம் ரூபா! சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

இன்று சிங்களத்தின் பார்வையில் ... நாம்,/புலம்பெயர்ந்தவர்கள் என்பது ஒரு பணம் காய்க்கும்/பறிக்கும் விருட்சம்! அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள்! எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான்! அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் மூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான்! நாமும் அதற்கு பலியாக வேண்டுமா???

சிங்களவனுக்கும் அவன் அரசுக்கும் தமிழ் மக்கள் அனைவருமே பொன் முட்டை இடும் வாத்துக்கள்.

Link to comment
Share on other sites

இங்கு சாந்தி/சாத்திரியின் முயற்சிகளை ஒருவரும் குறைகூற வரவில்லை ... மாறாக .... இத்தலைப்பிற்கே சில பதில்கள்!! மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை! ஆனால் அவை சரியா? பிழையா? என்பதே பிரட்சனை!!

மே18 முடிய, பல போராளிகள்/பொதுமக்கள் கைது செய்யப்பட்டும்/சரணடைந்தும் முகாங்களில் கிடக்க ... சிங்களம் குறுகிய காலத்தில் இவர்களை விற்பனைப் பொருளாக்கியது!! இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மாமாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள்! பின்பு இந்த பிஸ்னஸ் டக்லஸ்/சித்தார்த்தன் கும்பலிடமிருந்து கே.பிக்களிடம் போனது வேறு கதை!

இவ்வவிடைத்தரக மாமாக்களினால் சில போராளிகள்/பொதுமக்கள் வெளியில் எடுக்கப்பட்டார்கள்தான்!! ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர்! இப்படி இந்த பல லட்சங்களை கொடுத்தும், கிடைக்காதவர்கள் பலர்!!

இங்கு மேலுள்ள போராளிக்கு சிங்களம் நிர்ணயித்த விலை 25லட்சம் ரூபா! சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

இன்று சிங்களத்தின் பார்வையில் ... நாம்,/புலம்பெயர்ந்தவர்கள் என்பது ஒரு பணம் காய்க்கும்/பறிக்கும் விருட்சம்! அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள்! எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான்! அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் மூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான்! நாமும் அதற்கு பலியாக வேண்டுமா???

புற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..!

வாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.

இங்கு நீங்கள்கூட இந்த விடயத்திற்குள் கே.பி என்ற பெயரை இழுக்கிறீர்கள். இதுபோலத்தான் அவன் உரைத்த நாடுகடந்த பேரவை மக்களவை செயற்குழுக்களும். இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன். அவனுக்கு நீங்கள் எழுதியவற்றை வாசித்துக் காட்டினேன். அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் இன்று ஏன் இருக்கிறேன் என்ற அர்த்தமே தெரியாமல் இருப்பதாக வேதனையுடன் கூறினான்.

இந்தக்கதையை அவனுக்கு இனிப்புகள் அனுப்பிய அல்லது அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பார்த்தால் ஏதாவது விடிவுவருமென்று இன்னும் நம்புகிறான். உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம்.

மீண்டும் நாங்கள் 3ம் நபர்களாக அவனைப் பார்க்கிறோம். அதுதான் இன்னொருவரின் தலையில் நீங்களும் சிலுவையை இறக்கிவிட்டு நீண்ட கதை சொல்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

நெல்லியான் நீங்கள் கூறுவது போல பலர் மீண்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர் சிலர் தப்பியும் வந்துள்ளனர்..அதற்காக முயற்சி என்பதே செய்யாமல் இருக்க முடியாது தானே .நாம் முடிந்தவரை பலவழிகளிலும் முயற்சிக்கிறோம்..சிலநேரம் அந்த உறவு வெளியில் வந்தால் மகிழ்ச்சியே நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

எதுக்கென்றாலும் குறிப்பிட்ட ஒரு மக்கள் தொகுதியினர் தான் சிலுவை சுமக்கனும் என்று என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம் 10 வருடத்திற்கு மேலாக போராட்டகளம்..3-4 வருடம்கள் சிறை வாழ்க்கை..இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள் இவரிடமிருந்து.. ..

எதுக்கென்றாலும் உவைதானே லூசுகள் மாதிரி இலட்சியமெண்டு போனவை அப்ப அவைதானே சிலுவையில்லை சிகரத்தையும் சுமக்க வேணும்.

என்னத்தை வீணா எதிர்பார்கிறம். இவனைப்போன்றவை தப்பக்கூடாது சாகவேணும் அப்பதான் எங்கடை லட்சியம் வெல்லும். :wub::lol: :lol: :lol:^_^:):D :D

என் நிலையும் அதுதானக்கா

நேற்று இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது

பல மணித்தியாலங்கள் அதே நினைவு. நெஞ்சு பொறுக்குதில்லை. ஆனால் ஒரு கை மட்டும்தட்டி...........

பலகைகள் இருந்தும் பயனில்லையே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் பிடிக்கிறதென்றால் தேசிய தலைவரில் இருந்து அரசாங்கத்தோட இணைந்து வேலை செய்து கொண்டிருக்கும் டக்கிளஸ் தேவானந்தா வரைக்கும் இதில குற்றம் பிடிக்கலாம்.

பிரச்சனை குற்றம் காண்பதல்ல. பிரச்சனைக்கு தீர்வு என்ன.. இவர்களின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் என்ன..??! சிறு சிறு உதவிகள் பரிசுத் தொகைகள்.. உண்மையில் இவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மீட்குமா என்பதும் கேள்விக்குறியே...??!

இந்த மக்களின் இன்றைய தேவை.. போராளி என்ற நிலைகளுக்கு அப்பால்.. இன்று அவர்கள் சாதாரண மக்கள்...

1. பாதுகாப்பு உத்தரவாதம்.

2. அரச மற்றும் இராணுவத்தின் தொல்லைகளின் இருந்து முற்றாக நீங்கி இருத்தல்.. நிம்மதியாக சுதந்திரமாக செயற்படுதல்.

3. அடிப்படை சமூகக் கட்டமைப்போடு ஒருங்கிணைதல்.

4. அடிப்படை கட்டுமானத் தேவைகள். வீடு.. நிலம்.. போன்றவை.

5. நிரந்தர வருவாய்க்கான வழிமுறைகள்.

6. வருவாயை பெறுவதற்கான தொடர்சியான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும். முதலீட்டு தோல்விகளில் இருந்து மீட்சிக்கு உதவுதல்.

7. ஊனமுற்றவர்களுக்கு விசேட வசதிகள்.

8. அன்றாட பணிகளை பூர்த்தி செய்யக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு.

இவற்றை எல்லாம் சிறு பண உதவிகள் பூர்த்தி செய்ய முடியாது. அவை இவர்களின் குறுகிய கால தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்யப் பயன்பட்டாலும்.. பிரச்சனை அதையே நம்பி இவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க முயற்சிப்பதும் தான்.

உண்மையில்..

நாடு கடந்தவையை மற்றவையை திட்டும் நேரத்துக்கு போரை முன்னெடுத்த அரசுகளிடம் போய் இவர்களின் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் உதவி கேட்கலாம். இந்தியப் பேரரசு.. பாகிஸ்தான் அரசு.. சீன அரசு.. ஜப்பான் அரசு.. ரஸ்சிய அரசு.. பிரித்தானிய அரசு.. அமெரிக்க அரசு.. இவை எல்லாம் முன்னின்றுதான் போரை முன்னெடுத்தன. நோர்வே கூட பங்களித்தது. படகுகளை கையளித்து கண்காட்சி வைத்தது.

வெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட நாட்டு தூதரகங்களின் முன்னாள் தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களை செய்து இந்த மக்களின் பிரச்சனைகளை போரின் விளைவுகளால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பொருண்மிய சமூகக் கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட்டுள்ளத்தை இனங்காட்டி தீர்வுகளைக் கோரி நிற்கலாம். அது பயங்கரவாதத்திற்கு உதவுவதாக சொல்லப்பட முடியாதது. ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டம். எங்களை நாங்களே திட்டிக்கொண்டு திரிவம்.

வெளிநாடுகள்.. அவர்கள் விரும்பிய படிக்கு போரை முடித்து விட்டார்கள். ஆனால் மக்களின் மறுவாழ்வு.. போராளிகளின் உயிர் உத்திரவாதம் எதுவுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி எவரும் மூச்சும் விடுவதில்லை.

நாடு கடந்த அரசோ.. புலம்பெயர் மக்களோ எதனையும் நிரந்தரமாக செய்ய முடியாது. இன்று பணப்பிரச்சனை என்றால் நாளைக்கு காணிப்பிரச்சனை வரும். நாளண்டைக்கு சிங்களக் குடியேற்றத்தால் பிரச்சனை வரும்.

எல்லாத்துக்கும் ஒவ்வொரு கதை எழுதிக் கொண்டு நம்மை நாமே திட்டிக்கொண்டு திரிவதால்.. பிரச்சனைகளின் தோற்றுவாய்கள் தீரப்போவதில்லை.

போரை தீவிரமாக முன்னெடுத்த முக்கியமான சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே இவர்களுக்கு உருப்படியான நிரந்தர தீர்வுகளை எட்டிக்கொடுக்க முடியும்.

நாடு கடந்த அரசு என்பது வெற்றிடத்தில் துளிர்விட்டிருக்கும் ஒரு முளை. அதனிடம் பெரிய எதிர்பார்ப்புக்களை முன்வைத்து நிற்பதை விட்டு.. ரடார்களும் ஆயுதங்களும் அள்ளி வழங்கி யுத்தத்தை முன்னெடுத்த அரசுகளிடம் போய் உதவி கேட்டு நில்லுங்கோ.. அழுத்தங்களை பிரயோகித்து நில்லுங்கோ.. ஆர்ப்பாட்டங்களைச் செய்து நில்லுங்கோ.. அதுதான் நியாயமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்

தங்களது நேரத்துக்கு..

Link to comment
Share on other sites

இலகு இலகு இலவச ஆலோசனை வழங்குதல் இலகு....அதனிலும் இலகு வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒருகுறையுமில்லாமல் இருக்க மல்லாந்து பஞ்சு மெத்தையில் புரண்டு கனவுகாணுவது......

Link to comment
Share on other sites

அண்மையில் சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று சொல்லி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியும் உண்மையில் அவர் அத்துடன் தொடர்பு ஏதும் அற்றவர்.. இதுவரை 12 வருடம்கள் சிறையில் களித்துள்ளார்.அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் 30 வருடம்கள் இன்னும் 30 வருடம்கள் சிறையில் கழிக்க வேண்டும் .17 வயதில் சிறைக்கு சென்றவர் வெளியே வரும் போது ஏறக்குறைய 50 ,60 வயது...

இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்த பட்டுள்ளன என்று சாத்திரி அண்ணா கூறினார். அப்பிடியாயின் இவரின் வழக்குகள் நீதி மன்றுக்கு போகுமாயின் இவருக்கான தண்டனை காலம் மிக நீண்டதாக இருக்கும்..

இங்கு கருத்துகள் வழங்கும் யாரவது இவர் உங்களின் சகோதரர் அல்லது உறவாக இருப்பின் உங்களின் கருத்து இங்கு எழுதுவது போல தான் இருக்குமா...?

Link to comment
Share on other sites

அண்மையில் சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று சொல்லி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியும் உண்மையில் அவர் அத்துடன் தொடர்பு ஏதும் அற்றவர்.. இதுவரை 12 வருடம்கள் சிறையில் களித்துள்ளார்.அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் 30 வருடம்கள் இன்னும் 30 வருடம்கள் சிறையில் கழிக்க வேண்டும் .17 வயதில் சிறைக்கு சென்றவர் வெளியே வரும் போது ஏறக்குறைய 50 ,60 வயது...

தொடர்பேயில்லாத ஒருவனுக்கான தண்டனைக்காலம் 30வருடமாகியுள்ளது. அவன் வாழ்க்கையே சிறையில்தானென முடிவாகிவிட்டது. இதெல்லாம் எங்களுக்கு பிரச்சனையில்லை. எங்கடை வாய்வீரம் தான் எங்களுக்குப் பெரிசு. மிகவும் இலகு வரலாற்றுக்கதை சொல்வதும் வீரம் பற்றி விவாதிப்பதும்.

Link to comment
Share on other sites

மேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா?????

:D... ஒன்று புரியவில்லை, .... ஐந்து வழக்குகள்.... அதுவும் தென் இலங்கை தாக்குதல்கள் சம்பந்தமானவை .... பிணை??????!!!!!! புரியவில்லை!!!!!?????

முதலில் இப்படியானவர்களை பிணையில் விடுவார்களா????????? சரி பிணையில் எடுத்தாலும் ... என்ன நிகழப்போகிறது???? தப்பலாமா???? அல்லது வெளியில் வர, சிங்களவன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பானா????? ... ????? பல கேள்விகளுக்கு ... பதில் வெற்றிடமாகவே உள்ளது!!

Link to comment
Share on other sites

இங்கு கருத்துகள் வழங்கும் யாரவது இவர் உங்களின் சகோதரர் அல்லது உறவாக இருப்பின் உங்களின் கருத்து இங்கு எழுதுவது போல தான் இருக்குமா...?

எங்கள் சகோதரங்களையெண்டால் பாதுகாப்பா எங்கையும் அனுப்பீடுவம். இது யாரோ ஒரு தாயின் பிள்ளைதானே என்ன கவலை இந்த மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே இன்னும் வரலாறு சொல்லி வீரம் பேச முடியும்.

வீணா இப்போது நாங்கள் அம்மணமாய் நிற்கிறோம் ஆனால் அடிபணியமாட்டோமென ஆவேசமாகப் பேசுவதை அரசியல் என்கிறோம்.

முடிந்தால் யாராவது உதவினால் அவனுக்கு விடிவு உண்டு. இல்லை இந்தச்சாதியை நம்பி இவர்களுக்காக போனதற்கான தண்டனையாக அவன் வாழ்வு அந்தக்கம்பிகளோடு போவதுதான் வெற்றியென்றால் நாங்கள் என்ன செய்வோம். :wub::D

Link to comment
Share on other sites

புற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..!

வாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.

இங்கு நீங்கள்கூட இந்த விடயத்திற்குள் கே.பி என்ற பெயரை இழுக்கிறீர்கள். இதுபோலத்தான் அவன் உரைத்த நாடுகடந்த பேரவை மக்களவை செயற்குழுக்களும். இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன். அவனுக்கு நீங்கள் எழுதியவற்றை வாசித்துக் காட்டினேன். அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் இன்று ஏன் இருக்கிறேன் என்ற அர்த்தமே தெரியாமல் இருப்பதாக வேதனையுடன் கூறினான்.

இந்தக்கதையை அவனுக்கு இனிப்புகள் அனுப்பிய அல்லது அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பார்த்தால் ஏதாவது விடிவுவருமென்று இன்னும் நம்புகிறான். உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம்.

மீண்டும் நாங்கள் 3ம் நபர்களாக அவனைப் பார்க்கிறோம். அதுதான் இன்னொருவரின் தலையில் நீங்களும் சிலுவையை இறக்கிவிட்டு நீண்ட கதை சொல்கிறீர்கள்.

சாந்தி ... உங்கள் பதிலுக்கு ... ஆயிரம் கேள்விகள் முன்னெழுகின்றது!!!! ... சந்தேகங்களால் குட்டையை குழப்ப முயலவில்லை!!! ... விடுவோம்!

என்னைப் பொறுத்தவரை அங்கு பாதிப்புற்ற பொதுமக்கள், மாவீரர் குடும்பங்கள், போராளிகளின் குடும்பங்கள் என எம்முதவிகள் தற்போது இருந்தால் போதுமானவை!! ... சிங்கள சட்டத்திற்குள் அகப்பட்டவர்களுக்கு ... அவர்கள் குற்றவாளிகள்/சுற்றவாளிகள் என்பதற்கு அப்பால் என்ன நடைபெறும் என்பவை எம் கடந்த கால வரலாறுகளில் இருந்து தெரியும்!!!

... இங்கு முன்பொருவர் குறிப்பிட்டது போல் .... நாம், புலம்பெயர்ந்தவர்கள், சிங்களவனுக்கு பொன் முட்டைகளிடும் வாத்துக்கள் .... முன்பு தமிழ்த்தேசியம் என்று கேட்டுக்கேள்வியற்று எமது வங்கி காசோலைகளை அழித்தோமோ ... அதனையே இன்று இப்போராளிகள் விடயத்தில் சிங்களம் பிரயோகிக்கப் பார்க்கிறது ... அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது!!!

மே18இற்குப்பின்னம் வவுனியா முகாமில் இருந்த பொதுமக்களை சிங்களம் கிடைக்கப்பெற்ர சர்வதேச உதவிகளை தென்பகுதிகளுக்கு திசை திருப்பி விட்டு, எவ்வாறு ... புலத்தில் உள்ள மக்களிடம்/உறவுகளிடம்/நண்பர்களிடம் ... பணம் பறித்தது என்பது நினைவிருக்கும்!

... உணர்ச்சிகள்/உணர்வுகளுக்கு அப்பால் ... சிங்களத்தின் சூழ்ச்சி வலையில் நாம் அகப்படாமல் புத்தியுடன் செயலாற்றுவோம் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.