Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?


Recommended Posts

:wub:... ஒன்று புரியவில்லை, .... ஐந்து வழக்குகள்.... அதுவும் தென் இலங்கை தாக்குதல்கள் சம்பந்தமானவை .... பிணை??????!!!!!! புரியவில்லை!!!!!?????

முதலில் இப்படியானவர்களை பிணையில் விடுவார்களா????????? சரி பிணையில் எடுத்தாலும் ... என்ன நிகழப்போகிறது???? தப்பலாமா???? அல்லது வெளியில் வர, சிங்களவன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பானா????? ... ????? பல கேள்விகளுக்கு ... பதில் வெற்றிடமாகவே உள்ளது!!

புரியாத புதிராகப் போகவே போயழிந்தவனின் வாழ்வு பற்றியே இங்கு பேசப்படுகிறது.

பிணை ....???? இதுவும் புரியாத புதிர்தான். ஆனால் வாத்துகள் முட்டையிட்டால் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதுதான் அந்தரிக்கிறோம்.

சிங்களவன் வெளியில விட்டாலும் வெளியிலை நீ வரப்படாதெண்ட முடிவோடிருக்கிற மகாபெரியோர்கள் நிறைந்த அவையில் எப்படித்தான் வாழ முடியும் ?????

ஏன் பணத்தால் பிணையில் வந்தது மட்டுமில்லாமல் பெரும் வசதிகளோடு வாழும் முன்னாள் பெரியவர்கள் அங்கையில்லையோ ?

அண்ணாந்து பாக்க என்ன அணிலோ ஓடுகிறது ? :lol:

கேள்விகளுக்கான பதில்களை இங்கே எழுத முடியவில்லை மன்னிக்கவும். பதில் வெற்றிடமாக உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் இயற்கை வெற்றிடங்களை விட்டுவைப்பதில்லை.

மன்னிக்கவும் நெல்லையன் உங்கள் கேள்விகளிலிருந்து நான் புரிந்து கொள்வது இந்தக்கைதி பற்றி ஒருவரியும் விடாத விளக்கம் தேவைப்படுகிறது. அதை விவரித்தால் இத்திரி நீளுமே தவிர எந்தவித உதவிகளையும் அவனுக்காக இங்கு செய்யப்போவதுமில்லை நாங்கள்.

ஆக நான் நன்றி வணக்கம் சொல்லுகிறேன். :D

இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன்.

நெல்லையன் நீங்கள் சிவப்பு அடையாளமிட்ட வரிகள் இவை. எப்படி இச்செய்தி அவனுக்கு போனது என்பது பற்றிய உங்கள் ஆய்வுக்கான பதில். அவனுடன் தொடர்பில் உள்ள அவன்மீது அக்கறையுள்ள அவனுக்கா எதையாவது செய்ய வேணுமெண்டு ஒரு நண்பன்தான் இதுபற்றி தெரிவித்தான். இதற்குள் சதியுமில்லை வேறெந்த சங்கதியுமில்லை.

சாந்தி ... உங்கள் பதிலுக்கு ... ஆயிரம் கேள்விகள் முன்னெழுகின்றது!!!! ... சந்தேகங்களால் குட்டையை குழப்ப முயலவில்லை!!! ... விடுவோம்!

... உணர்ச்சிகள்/உணர்வுகளுக்கு அப்பால் ... சிங்களத்தின் சூழ்ச்சி வலையில் நாம் அகப்படாமல் புத்தியுடன் செயலாற்றுவோம் ...

சந்தேகங்கள் சந்தேகங்கள் என்று பலரது வாழ்வை அறுத்து அழித்து இரத்தச் சேற்றுக்குள் போட்டாயிற்றே. இனி குழப்ப ஒன்றுமில்லை. சரி விடுவோம்.

திரும்ப திரும்ப விமர்சிப்பதாக எண்ண வேண்டாம் நெல்லையன். நாங்கள் காணுகிற கனவு உலகில் அவர்கள் இல்லை. வாழ விரும்புகிறார்கள். அதற்காகத்தான் இங்கு எழுதுகிறேன். வேறெந்த உள் நோக்கமுமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :wub:

முன்பெல்லாம் பல கேள்விகள் .. மே18 உடன் ... நீங்களோ அல்லது நானோ கேட்கவில்லையா??? இல்லை எழுதித்தள்ளவில்லையா??? :lol:

அப்போதெல்லாம் நாம் மற்றவரை கோபப்படக்கூடாது!! ... என்ற அறிவுரைகளுடன் .. பதிலை தாருங்கள் என்றோம்!!!

எம்மை மட்டும் மற்றவர்கள் கேட்க ஏன் கோபம் வருகிறது???????? :lol:

... எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!! அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!!

அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :D

இதே கேள்விகள் என் மனதிலும் எழுந்தன.

ஆனால் நாம் ஏதாவது செய்யப்போகின்றோம் என்றால்தான் இவற்றுக்கான பதிலை கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.

வெறும் கையுடன் எதைக்கேட்டு என்ன பலன்...?

Link to comment
Share on other sites

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :wub:

முன்பெல்லாம் பல கேள்விகள் .. மே18 உடன் ... நீங்களோ அல்லது நானோ கேட்கவில்லையா??? இல்லை எழுதித்தள்ளவில்லையா??? :lol:

அப்போதெல்லாம் நாம் மற்றவரை கோபப்படக்கூடாது!! ... என்ற அறிவுரைகளுடன் .. பதிலை தாருங்கள் என்றோம்!!!

எம்மை மட்டும் மற்றவர்கள் கேட்க ஏன் கோபம் வருகிறது???????? :lol:

... எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!! அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :D

நெல்லையன் இலங்கையில் சிறைச்சாலையில் உள்ளவர்கள் அனைவரிடமும் கைத்தொலைபேசி இருப்பதென்பது சர்வசாதரமானவொரு விடயம்.. பணம் விழையாடும்.அடிக்கடி நீங்களே செய்திகளில் படித்திருப்பீர்கள்.கைதிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள் பறிமுதல் என்கிற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் செவ்விகளை தொலைபேசிமுலம் எடுத்து யாழிலும் இணைத்திருக்கிறோம். இதற்கு முன்னரும் பல வருடங்கள் அதே நேரம் சம்பந்தப் பட்டவரின் குரலை பதிவு செய்து இங்கு இணைக்க நினைத்திருந்தோம். ஆனால் அதனை தவிர்த்துள்ளோம்.நீங்கள் விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடியதான இலக்கத்தை தரலாம்.மற்றும்படி தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி 5 வழக்குகள் அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது என்றுதான் தெளிவாக எழுதியிருக்கிறேன்.மீண்டும் படித்துப்பாருங்கள்.அவன் அத்தனை சம்பவங்களுடனும் சம்பந்தப்பட்டவன் என்று நான் தீர்ப்பு கூறவோ அல்லது அதனை நானே முடிவெடுத்தோ எழுதவில்லை..அந்த வழக்குகளிற்கான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்காக அவன் இன்னமும் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டபடிதான் இருக்கிறான்..பணப் பிணையும் அவன் கொழும்பில் தங்கியிருந்து வழக்கை எதிர்கொள்வான் என்கிற உறுதியுடன் சரீரப் பிணையும் கொடுத்தால். அவனை பிணையில் எடுக்கலாம்..அதன் பின்னர் அவன் வெளியிலிருந்தபடி அவனது காதல் மனைவியுன் கதைத்தும் குழந்தையுடன் கைகளை பிடித்தபடியும் வழக்கை எதிர்கொளலாமல்லவா??

அதே நேரம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக்கொண்டிருக்கும்வரைதான் பிணை மனு கோரலாம். நீதிபதி தீர்ப்பு கூறிய வழக்கிற்கு பிணை மனு கோரமுடியாது.அந்த வழக்கை மேன்முறையீடுதான் செய்யலாம்..எனவே நான் முதலில் எழுதியிருந்தது பிணைமனு கோரலாம் என்பதே..எனவே இங்கு அண்ணாந்து பார்த்தால் அணில்தான் ஒடவேண்டும் என்றில்லை.சிறையில் படுத்திருப்பவனால் அவன் அண்ணாந்து பார்க்கும் பொழுது அழகான நட்சத்திரங்களை பார்க்கவும் இரசிக்கவும் ஆசைப்படுவானல்லவா???

Link to comment
Share on other sites

தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை தொலைபேசியூடாக நானும் சாந்தி அவர்களும் உரையாடிய பெழுது பதியப்பட்ட இரண்டு பதிவுகளை இங்கு இகை;கிறேன் கேழுங்கள்.அதில் ஒரு பதிவிற்கு நெல்லியான் நீங்களே பின்னூட்டமும் பதிந்திருக்கிறீர்கள் நன்றி வணக்கம்.

சிறையிலிருந்து ஒரு குரல்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67025&st=0&p=556432&hl=%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D...&fromsearch=1&#entry556432

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66262&st=0&p=552336&hl=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D&fromsearch=1&#entry552336

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகு இலகு இலவச ஆலோசனை வழங்குதல்....அதனிலும் இலகு வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒருகுறையுமில்லாமல் இருக்க மல்லாந்து பஞ்சு மெத்தையில் புரண்டு கனவுகாணுவது......

இரண்டு கடகம்.. நாலு கதிரை.. மூன்று கோழிக்குஞ்சு.. ஒரு மாடு.. ஒரு தையல் இயந்திரம்.. இதை வைச்சு மக்கள் முன்னேற முடியும் என்று 1960ம் ஆண்டுகள் கால நிலையை தான் நீங்கள் சிலர் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதில திருப்திப்படுறீங்க போல.

உண்மையில் பிரச்சனை இவற்றையும் கடந்து உள்ளன.

முன்னாள் போராளி என்ற காரணத்திற்காக ஒரு குடும்பப் பெண்ணாக வாழ்ந்தவள் இராணுவக் குழுவினரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். இதனை உங்களால் ஏன் தடுக்க முடியவில்லை..???!

வன்னியில் சிங்கள காடையர்களைக் கொண்ட குடியேற்றங்கள் தாறுமாறாக முளைக்கின்றன. இவர்களில் அநேகர் சிங்கள புலனாய்வுத்துறையோடு வேலை செய்பவர்கள்.

ஒரு பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற நிலையில் எப்படி மீளக்கட்டமைப்பு பணிகள் புலம்பெயர் மக்களால் அல்லது அவர்களின் பணத்தால் செய்விக்கப்பட முடியும்..???!

சிறீலங்கா அரச படைகளை தமிழர்களின் வாழ்விடங்களுக்குள் வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அனுமதித்துக் கொண்டு மீளக் கட்டி எழுப்பல் என்பது வெறும் கதை மட்டுமே..!

கிளிநொச்சியை சேர்ந்த பல மக்கள் இன்னும் ஊருக்குப் போக தயங்குகின்றனர். வவுனியாவில் வாழ்ந்து கொண்டு கிளிநொச்சிக்கு போய் வியாபாரம் செய்துவிட்டு உடனே திரும்பும் நிலையிலும் உள்ளன பல குடும்பங்கள்.

இவர்களின் பாதுகாப்புக்கு நீங்கள் நேசக்கரமூடாக என்னத்தை செய்ய முடியும்..???!

பாதுகாப்பாற்ற சூழலில் எப்படி ஒரு போராளிக் குடும்பத்தை நிமிர்ந்து நிற்க சொல்ல முடியும். எத்தனை நாளைக்கு புலம்பெயர்ந்தவர்களின் கைகளில் அவர்களை தங்க வைத்திருக்கப் போகிறீர்கள்..???! இதனால் அவர்களின் வாழ்க்கையை நீங்கள் எப்படி மீட்சிப்படுத்தப் போகிறீர்கள்.

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் அவன் தனது பாதுகாப்பை உணர்தலும் அவசியமாகிறது. அந்த உணர்வற்று தினமும் பயம் நிறைந்த சூழலில்.. அவர்களுக்கு காசு கொடுத்து கோழிக்குஞ்சு கொடுத்து சிங்கள இராணுவத்திற்கு இரையாக்கிக் கொண்டிருப்பதும் இப்போ தேசிய மீட்பாக ஏன் மனித நேயப்பணியாகவே நோக்கப்படுகிறது.

சிங்களம் யுத்தம் செய்தது. சிங்களம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்தும் பயங்கரவாதம் வெல்லப்பட்டும் 150000 சிங்களப் படைகள் தமிழர்களின் நிலமெங்கும் நிறைந்து நிற்கிறது. தினமும் சந்தேக நபர்கள் கண்காணிக்கப்படுவதும்.. கைதாவதும்.. தொடர்கிறது.

இந்த நிலையில்.. வெறும் சில பத்தாயிரங்களையும் கோழிக்குஞ்சுகளையும் தையல் இயந்திரங்களையும் வைத்து எப்படி பிழைப்பை ஓட்டுவது.

அண்மையில் பார்த்தேன் வன்னியில் குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. வன்னியில் வாழவே மக்கள் வழி இன்றி உள்ள நிலையில் யாருக்கு தைச்சு யாருக்கு அதை விக்கிறது. எல்லோருக்கும் தையல் இயந்திரத்தை கொடுப்பதால் எப்படி அதை வைச்சு வருவாய் பெறப்பட முடியும்..??!

ஒரு திட்டமும் கிடையாது. ஒரு சமூகக்கட்டமைப்பில் எப்படி பொருண்மியத்தை அடிப்படையில் இருந்து கட்டி எழுப்பிறது என்ற எண்ணக்கருவும் கிடையாது.. சும்மா காசு கொடு கொடு நாங்க நாலு பொட்டலம் கட்டி போட்டு எடுத்துப் போடுறம் என்றால்.. அதன் மூலம் மக்களுக்கு எப்படி நிரந்தர நிம்மதி கிட்டும் என்ற கேள்வியும் எழுகிறது..??!

மக்கள் தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கினம். அவைக் கூடாக மக்களின் அடிப்படை தேவைகளை பாதுகாப்பை வெளிநாட்டு தூதரங்களின் உதவியோடு.. சிறீலங்கா அரசு உட்பட வெளிநாட்டு அரசுகளின் பங்களிப்போடு பூர்த்தி செய்வதோடு வன்னி உட்பட போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கை அங்கு வாழும் தமிழர்கள் தான் கட்டி எழுப்ப முடியும்.

புலம்பெயர்ந்த மக்கள் ஒரு எல்லைக்கு மேல் உதவுவார்கள் அல்லது உதவ முடியும் என்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட அவர்களின் உறவுகளுக்கு அவர்கள் உதவக்கூடும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனநிலையை புலம்பெயர்ந்தவர்கள் விரைவாக இழந்து வரும் நிலையில்.. அது சாத்தியமில்லை.

எனவே மாற்று வழிமுறைகளூடு தேவைகளின் சரியான அளவீட்டோடு இந்த மக்கள் அணுகப்பட வேண்டுமே ஒழிய இன்னும் நாலு துணிப்பார்ச்சல்.. நாலு பிளாஸ்ரிக் பாத்திரத்தோடு அந்த மக்களின் வாழ்க்கையை மீள் கட்டுமானப்படுத்த முடியும் என்று நம்ப வைத்துக் கொண்டிருப்பது முட்டாள் தனம். அந்த மக்களின் வாழ்க்கையை நிரந்தரமாக்க அவர்களுக்கு தொடர்ச்சியான வருவாய்க்கு ஏற்ப கட்டுமானங்கள் நிர்மாணங்கள் முதலீடுகள் அவசியம். அவற்றை வெளிநாட்டு அரசுகள் தான் வழங்க முடியும். புலம்பெயர்ந்தவர்கள் அதில் ஒரு வீதத்தை தான் வழங்கலாம். இந்த யதார்த்தங்களை உள்வாங்காமல் வெறுமனவே எங்களை நாங்களே திட்டிக்கொண்டு ஆத்திரப்பட்டுக் கொண்டும் திரிவதில் எந்தப் பயனும் இல்லை.

போர் முடிந்து 18 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதோடு மக்களை புலம்பெயர்ந்தவர்களின் கையில் தங்கி இருக்க வைத்துக் கொள்வதும் நல்லதல்ல. அந்த மக்களுக்கு போரில் ஈடுபட்ட அரசுகள் நிரந்தர வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர்ந்தவர்கள் எனிச் செயற்பட வேண்டுமே தவிர.. தொடர்ந்து அவர்களுக்கு சில ஆயிரங்களைக் காட்டிக் கொண்டு குடிசைகளில் வாழ வைத்துக் கொள்வது ஏற்புடையதாக அமையாது. அது அந்த மக்களின் வாழ்க்கையை சகஜ நிலைக்கு கொண்டு வரவும் உதவாது.

Link to comment
Share on other sites

இங்கு சில கருத்துக்களைப் படித்ததும்தான் எனக்கும் புத்தி வந்தது எனவே சாந்தி அவர்களிற்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் முதலில் நீங்கள். செய்யவேண்டியவை

1. வடக்கு கிழக்கில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துங்கள்

2..அங்கு வாழும் அனைத்து தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள்.

3..பெண்கள் வல்லுறவிற்குடுத்தப்படுவதை ஓடிப்போய் தடுத்து நிறுத்துங்கள்.

4..இன்னமும் முகாம்களில் இருக்கும் மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களிற்கு அழைத்துச்செல்லுங்கள்

5.அழைத்துச்சென்றவர்களிற்கு வசதிவாய்ந்த வீடுகளை கட்டிக்கொடுங்கள்

6..வீடு கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது அவைகளிற்கான மின்சார வசதிகள். தொலைபேசி வசதி முடிந்தால் கேபிள் ரி வி வசதிகள் இவற்றை ஏற்படுத்திக்கொடுங்கள்

7.வடக்கு கிழக்கு எங்கும் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவது மட்டுமல்ல அங்குள்ள இராணுவத்தினரையும் உடனடியாக வெளியேற்றுங்கள்.

8அங்குள்ள மக்கள் தொடரச்சியாக வசதியாக வாழ்வதற்கான தொழிற்சாலைகளையும்.மாணவர்களின் எதிரகால தேவைகளிற்கு ஏற்றால் போல் பல்கலைக்கழகங்கள் ஆராச்சி கூடங்கள் என்பனவற்றை கட்டுங்கள்.மன்னாரிலும் நந்திக்கடல் பகுதியிலும் எண்ணெய் வளம் உள்ளதாம் அதனை ஆராய்ச்சி செய்து எண்ணெய் கிணறுகளை நிறுவுங்கள்.

9. இவற்றை நீங்கள் நிறைவேற்றி முடிக்கும் வரை அங்குள்ள மக்களின் பசியை போக்குவதற்காக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் சத்துக்கள் நிறைந்த குளிசைகளை வாங்கி (அதுவும் வருக்கணக்கில் சாப்பிடாமல் இருக்கக்கூடயதான குளிசைகள் என்றால் இன்னமும் நல்லது) உடனடியாக கப்பலில் அனுப்பிவையுங்கள்

அதன்பின்னர் இங்கு உதவி கேட்டு வாருங்கள் யோசிச்சு செய்யலாம்.

இப்போதைக்கு இவைமட்டும்தான் எனக்கு தோன்றிய ஆலோசனைகள்..அப்பப்ப ஏதாவது மீண்டும் ஆலோசனைகள் ஊற்றெடுத்தால் அப்படியே இங்கு கொண்டு வந்து ஊற்றுகிறேன் அள்ளிப்பருகுங்கள் நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை, முடியலை.. எப்படி உங்களால்.. இப்படியெல்லாம் முடிகின்றது? சரக்கு அடித்துவிட்டு எழுதுகின்றீர்களோ.. அல்லது சரக்கு அடிக்காமல் இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போதே தன்பாட்டில் கிக்கு ஏறுகின்றதோ? :lol:

உங்கள் பட்டியலில் முள்ளிவாய்க்காலில் கை, கால், உடல் உறுப்புக்கள் துண்டாடப்படாமல் முழுமையான உடலுடன் உயிர்தப்பியவர்களையும், அத்துடன் யாழ்ப்பாணத்தில், வன்னியில், மன்னாரில், மட்டக்களப்பில் ஆடிப்பாடி தற்போது மகிழ்ச்சியாக உள்ள இளைஞர், யுவதிகளையும் அடுத்த கட்ட ஆயுத போராட்டத்திற்கு தயார் படுத்துவதையும் இணைக்கலாமோ?

இங்கு சில கருத்துக்களைப் படித்ததும்தான் எனக்கும் புத்தி வந்தது எனவே சாந்தி அவர்களிற்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் முதலில் நீங்கள். செய்யவேண்டியவை

1. வடக்கு கிழக்கில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துங்கள்

2..அங்கு வாழும் அனைத்து தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள்.

3..பெண்கள் வல்லுறவிற்குடுத்தப்படுவதை ஓடிப்போய் தடுத்து நிறுத்துங்கள்.

4..இன்னமும் முகாம்களில் இருக்கும் மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களிற்கு அழைத்துச்செல்லுங்கள்

5.அழைத்துச்சென்றவர்களிற்கு வசதிவாய்ந்த வீடுகளை கட்டிக்கொடுங்கள்

6..வீடு கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது அவைகளிற்கான மின்சார வசதிகள். தொலைபேசி வசதி முடிந்தால் கேபிள் ரி வி வசதிகள் இவற்றை ஏற்படுத்திக்கொடுங்கள்

7.வடக்கு கிழக்கு எங்கும் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவது மட்டுமல்ல அங்குள்ள இராணுவத்தினரையும் உடனடியாக வெளியேற்றுங்கள்.

8அங்குள்ள மக்கள் தொடரச்சியாக வசதியாக வாழ்வதற்கான தொழிற்சாலைகளையும்.மாணவர்களின் எதிரகால தேவைகளிற்கு ஏற்றால் போல் பல்கலைக்கழகங்கள் ஆராச்சி கூடங்கள் என்பனவற்றை கட்டுங்கள்.மன்னாரிலும் நந்திக்கடல் பகுதியிலும் எண்ணெய் வளம் உள்ளதாம் அதனை ஆராய்ச்சி செய்து எண்ணெய் கிணறுகளை நிறுவுங்கள்.

9. இவற்றை நீங்கள் நிறைவேற்றி முடிக்கும் வரை அங்குள்ள மக்களின் பசியை போக்குவதற்காக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் சத்துக்கள் நிறைந்த குளிசைகளை வாங்கி (அதுவும் வருக்கணக்கில் சாப்பிடாமல் இருக்கக்கூடயதான குளிசைகள் என்றால் இன்னமும் நல்லது) உடனடியாக கப்பலில் அனுப்பிவையுங்கள்

அதன்பின்னர் இங்கு உதவி கேட்டு வாருங்கள் யோசிச்சு செய்யலாம்.

இப்போதைக்கு இவைமட்டும்தான் எனக்கு தோன்றிய ஆலோசனைகள்..அப்பப்ப ஏதாவது மீண்டும் ஆலோசனைகள் ஊற்றெடுத்தால் அப்படியே இங்கு கொண்டு வந்து ஊற்றுகிறேன் அள்ளிப்பருகுங்கள் நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை, முடியலை.. எப்படி உங்களால்.. இப்படியெல்லாம் முடிகின்றது? சரக்கு அடித்துவிட்டு எழுதுகின்றீர்களோ.. அல்லது சரக்கு அடிக்காமல் இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போதே தன்பாட்டில் கிக்கு ஏறுகின்றதோ? :lol:

உங்கள் பட்டியலில் முள்ளிவாய்க்காலில் கை, கால், உடல் உறுப்புக்கள் துண்டாடப்படாமல் முழுமையான உடலுடன் உயிர்தப்பியவர்களையும், அத்துடன் யாழ்ப்பாணத்தில், வன்னியில், மன்னாரில், மட்டக்களப்பில் ஆடிப்பாடி தற்போது மகிழ்ச்சியாக உள்ள இளைஞர், யுவதிகளையும் அடுத்த கட்ட ஆயுத போராட்டத்திற்கு தயார் படுத்துவதையும் இணைக்கலாமோ?

கரும்பு இங்கு சிலரின் கருத்துக்களை படித்தலே தலை கிறுகிறுக்கிறது இதுக்குமேலை சரக்கு வேறை அடிக்கவேணுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணோய் நக்கல் அடிச்சது காணும்..

1987 இல் ஒப்பரேசன் லிபரேசனின் போதும் நீங்கள் தானே ஓடிவந்து புலம்பெயர் நாட்டில இருந்து காசு வாங்கி கன்றுக்குட்டி வாங்கிக் கொடுத்து சனத்தை காப்பாற்றினீங்க..

1987 ஒக்ரோபரில் இந்திய படைகளின் பவான்.. பூமாலைகளிலும் நீங்க தானே பாமொயில் வழங்கி மக்களை காப்பாற்றினனீங்க...

1990 இல் சிங்களம் பொருளாதார தடை போட்டு சனம் பனங்கட்டியோட வாழேக்கையும் நீங்க தானே நேசக்கரம் அமைச்சு வெள்ளைச் சீனியும் மண்ணெண்ணையும் தந்து எங்களை காப்பாத்தினீங்க..

1995 சூரியக் கதிர்களின் போதும் நீங்க தானே தண்ணீர் பந்தல் அமைச்சு.. வன்னிக்கு சனத்தை களைப்பில்லாமல் கொண்டு வந்தனீங்க..

2009 இல் மட்டும்.. கோழிக்குஞ்சு கொடுத்து போராளிகளை வாழ வைக்கிறீங்க..

இத்தனைக்குள்ளும்.. சிங்களவன் கொல்ல நினைச்சதை கொன்றிட்டான்.. விட வேண்டியதுகளை விட்டிட்டான். அங்க காசு தான் பேசுதே தவிர.. கோழிக்குஞ்சும்.. பிளாஸ்ரிக் குடமும்... பாய் தலையணியும் அல்ல.. இது உலகுக்கே தெரியும்.

நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி வரேக்க உங்க பிள்ளைகளுக்கு பூங்கா கட்டி வைச்சிட்டோ ஓடி வந்தனீங்க.. இல்லைத் தானே. யாரேன் கட்டினதைத் தானே அனுபவிக்கிறீங்க. அதேன் வன்னிச் சனத்துக்கு மட்டும் இன்னும்.. கோழிக்குஞ்சும்.. குடிசை வீடும்...???! அதுகளுக்கு ஒரு நிரந்தர நிம்மதி வந்திட்டா நாங்க எங்க போறது.. விலாசம் காட்ட..! அதுவும் சரி தான் சாத்திரியண்ண..!

புலம்பெயர் தேசமெங்கும்.. காசு திரட்டி கோழிக்குஞ்சு வாங்கி வன்னி மக்களை மீட்டெடுக்கும் வரை நாம் ஓயமாட்டோம்..! சாத்திரியண்ண.. உங்க கோசம் வெல்ல வாழ்த்துக்கள். வெல்லவிட்டு சொல்லுங்கோ.. நாங்க எங்க திட்டத்தை ஒரு ஓரமா இருந்து செயற்படுத்த முடியுமோ என்று யோசிச்சு சொல்லுறம்..! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

மற்றும் சாத்திரி

தயவு செய்து மாறி மாறி எழுதி எமது மக்களின் வாழ்வில் ஒரு சிறு பாதிப்பாவது வருவது போல் நடந்து கொள்ளவேண்டாம்

நன்றி

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணோய் நக்கல் அடிச்சது காணும்..

1987 இல் ஒப்பரேசன் லிபரேசனின் போதும் நீங்கள் தானே ஓடிவந்து புலம்பெயர் நாட்டில இருந்து காசு வாங்கி கன்றுக்குட்டி வாங்கிக் கொடுத்து சனத்தை காப்பாற்றினீங்க..

1987 ஒக்ரோபரில் இந்திய படைகளின் பவான்.. பூமாலைகளிலும் நீங்க தானே பாமொயில் வழங்கி மக்களை காப்பாற்றினனீங்க...

1990 இல் சிங்களம் பொருளாதார தடை போட்டு சனம் பனங்கட்டியோட வாழேக்கையும் நீங்க தானே நேசக்கரம் அமைச்சு வெள்ளைச் சீனியும் மண்ணெண்ணையும் தந்து எங்களை காப்பாத்தினீங்க..

1995 சூரியக் கதிர்களின் போதும் நீங்க தானே தண்ணீர் பந்தல் அமைச்சு.. வன்னிக்கு சனத்தை களைப்பில்லாமல் கொண்டு வந்தனீங்க..

2009 இல் மட்டும்.. கோழிக்குஞ்சு கொடுத்து போராளிகளை வாழ வைக்கிறீங்க..

இத்தனைக்குள்ளும்.. சிங்களவன் கொல்ல நினைச்சதை கொன்றிட்டான்.. விட வேண்டியதுகளை விட்டிட்டான். அங்க காசு தான் பேசுதே தவிர.. கோழிக்குஞ்சும்.. பிளாஸ்ரிக் குடமும்... பாய் தலையணியும் அல்ல.. இது உலகுக்கே தெரியும்.

நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி வரேக்க உங்க பிள்ளைகளுக்கு பூங்கா கட்டி வைச்சிட்டோ ஓடி வந்தனீங்க.. இல்லைத் தானே. யாரேன் கட்டினதைத் தானே அனுபவிக்கிறீங்க. அதேன் வன்னிச் சனத்துக்கு மட்டும் இன்னும்.. கோழிக்குஞ்சும்.. குடிசை வீடும்...???! அதுகளுக்கு ஒரு நிரந்தர நிம்மதி வந்திட்டா நாங்க எங்க போறது.. விலாசம் காட்ட..! அதுவும் சரி தான் சாத்திரியண்ண..!

புலம்பெயர் தேசமெங்கும்.. காசு திரட்டி கோழிக்குஞ்சு வாங்கி வன்னி மக்களை மீட்டெடுக்கும் வரை நாம் ஓயமாட்டோம்..! சாத்திரியண்ண.. உங்க கோசம் வெல்ல வாழ்த்துக்கள். வெல்லவிட்டு சொல்லுங்கோ.. நாங்க எங்க திட்டத்தை ஒரு ஓரமா இருந்து செயற்படுத்த முடியுமோ என்று யோசிச்சு சொல்லுறம்..! :lol::)

இத்தனை கேள்விகளையும் நீங்கள் மெனிக்பாமிலையோ அல்லது வன்னி மீள்குடியேற்றகிராமத்திலையோ..அல்லது எங்காவது சிறீலங்கா சிறையிலிருந்தோ கேட்டிருந்தால் அதற்கான சரியான பதில்களை தாராளமாக அள்ளி வழங்குவேன்.. இங்கு ஒரு சின்னத் திருத்தம்..நான் கடைசியாய் இலங்கையை விட்டு ஓடிவந்தது 1996ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை கேள்விகளையும் நீங்கள் மெனிக்பாமிலையோ அல்லது வன்னி மீள்குடியேற்றகிராமத்திலையோ..அல்லது எங்காவது சிறீலங்கா சிறையிலிருந்தோ கேட்டிருந்தால் அதற்கான சரியான பதில்களை தாராளமாக அள்ளி வழங்குவேன்.. இங்கு ஒரு சின்னத் திருத்தம்..நான் கடைசியாய் இலங்கையை விட்டு ஓடிவந்தது 1996ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்..

மேலே பட்டியலிட்டுள்ள நிகழ்வுகளில் 2009 நிகழ்வைத் தவிர மிச்ச எல்லா நிகழ்வுகளாலும் நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எமக்காக கோழிக்குஞ்சு கொண்டு யாரும் ஓடி வந்ததா தெரியல்லை.. சாத்திரியண்ண.

நல்ல ஞாபகம் இருக்கு.. ரொட்டிக்கும் பருப்புக்கும் ஆகாயத்தை.. கடலை.. பார்த்துக் கொண்டு வயிறு காய்திருந்த வேளைகளை...!

நீங்கள் சிறைகளில் இருப்பவர்கள் குறித்து கருணை காட்டுவது வாஸ்வம் தான். அதேன் இந்தக் கருணை 1983 இல் இருந்து சிறையே வாழ்க்கை என்று வாழும் மற்றவர்கள் மீது இதுகாள் வரை வரவில்லை... என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கொழும்புக்கு தென்னிலங்கைக்கு பல்வேறு நோக்கங்களோடு பல்வேறு காலங்களில் வந்து எத்தனையோ போராளிகள் சிங்களப் படைகளிடம் சிக்கி இன்னும் சிறைகளில் சித்திரவதைப்படுகின்றனர். அவர்களைப் பற்றி முள்ளிவாய்க்காலுக்கு முன் யாரும் கவலைப்பட்டதாக நான் இங்கு அத்துணை விசேசமாகக் காணவில்லை.

ஒருவேளை முள்ளிவாய்க்கால் அந்த கைதிகளின் பாலும் கவனம் செலுத்த வைத்திருந்தால் அதற்காகவாவது முள்ளிவாய்க்காலுக்கு நன்றி கூற வேண்டியதாகிறது.. வலியிலும் ஒரு திருப்தி.

அண்மையில் ஒரு கிறீஸ்தவ மதத்தவர் சொன்னார்.. முள்ளிவாய்க்காலில் பலியானவர்கள் பாவிகளாம்.. இறைவனின் அருளால் மிகுதிப் பேர் தப்பிட்டார்களாம்.. அதற்கு தங்கள் பிரார்த்தனை தான் காரணம் என்று. அதேபோல்.. சாத்திரி அண்ணை சொல்லுறார்.. சிறைகளில் இதுகாள் வரை இருந்தவர்கள் பற்றி எனக்குத் தெரியாது.. எனி இருப்பவர்களுக்கு குறிப்பாக மெனிக்பாம் நடைமுறைக்கு பின் சிறைகளில் இருப்பவர்களுக்கு.. நாம் வாழ் வளிக்க வேண்டும்.. அது நேசக்கரத்தின் கடமை என்று. இப்பவாவது அந்தக் கடமை உணர்ச்சி வந்திச்சே சந்தோசம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

அவர்கள் சொல்லோடு மட்டுமல்லாது செயலிலும் காட்டுபவர்கள்

தங்களால் முடிந்தவரை அங்குள்ளவர்களுக்கு செய்கிறார்கள்

தயவுசெய்து நேசக்கரத்தை இதற்குள் இழுத்து எழுதவேண்டாம்

Link to comment
Share on other sites

நீங்கள் சிறைகளில் இருப்பவர்கள் குறித்து கருணை காட்டுவது வாஸ்வம் தான். அதேன் இந்தக் கருணை 1983 இல் இருந்து சிறையே வாழ்க்கை என்று வாழும் மற்றவர்கள் மீது இதுகாள் வரை வரவில்லை... என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கொழும்புக்கு தென்னிலங்கைக்கு பல்வேறு நோக்கங்களோடு பல்வேறு காலங்களில் வந்து எத்தனையோ போராளிகள் சிங்களப் படைகளிடம் சிக்கி இன்னும் சிறைகளில் சித்திரவதைப்படுகின்றனர். அவர்களைப் பற்றி முள்ளிவாய்க்காலுக்கு முன் யாரும் கவலைப்பட்டதாக நான் இங்கு அத்துணை விசேசமாகக் காணவில்லை.

ஒருவேளை முள்ளிவாய்க்கால் அந்த கைதிகளின் பாலும் கவனம் செலுத்த வைத்திருந்தால் அதற்காகவாவது முள்ளிவாய்க்காலுக்கு நன்றி கூற வேண்டியதாகிறது.. வலியிலும் ஒரு திருப்தி.

அண்மையில் ஒரு கிறீஸ்தவ மதத்தவர் சொன்னார்.. முள்ளிவாய்க்காலில் பலியானவர்கள் பாவிகளாம்.. இறைவனின் அருளால் மிகுதிப் பேர் தப்பிட்டார்களாம்.. அதற்கு தங்கள் பிரார்த்தனை தான் காரணம் என்று. அதேபோல்.. சாத்திரி அண்ணை சொல்லுறார்.. சிறைகளில் இதுகாள் வரை இருந்தவர்கள் பற்றி எனக்குத் தெரியாது.. எனி இருப்பவர்களுக்கு நாம் வாழ் வழிக்க வேண்டும்.. அது நேசக்கரத்தின் கடமை என்று. இப்பவாவது அந்தக் கடமை உணர்ச்சி வந்திச்சே சந்தோசம். :lol:

முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் இவர்போன்றவர்களை காப்பாற்றவும் அவர்களிற்கான வழக்குகளை கவனிக்கவும்.அவர்கள் குடும்பங்களிற்கான உதவிகள் வசதிகளை செய்து கொடுக்கவும் அதற்கென்று தனியான ஒரு நிருவாக அலகே இருந்தது. சம்பத்தப்பட்ட கைதியே கதைக்கும்பொழுது சொல்லியிருந்தார்.வன்னியில் அப்படியொரு நிருவாகம் இப்பொழுதும் இருந்தால் நான் கண்டவன் நிண்டவனிடம் கெஞ்சிக்கொண்டிக்கமாடேன். அவர்கள் என்னை வெளியில் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை எங்களிற்கொரு நிருவாகம் இருக்கின்றது என்கிறை நினைத்தபடியே காலம் முழுதையும் சிறையில் கழித்திருப்பேன் என்றார்..நானும் அது போன்றதொரு நிலையில் (சிறையில்) இருந்து அதே போல ஒரு நிருவாகத்தால் காப்பற்றப்பட்டுத்தான் இன்று வெளி நாட்டில் உயிருடன் இருக்கிறேன். இன்று அப்படியொரு நிருவாகம் முள்ளிவாய்க்காலுடன் இல்லாது போனபடியால்தான் இப்படி ஒவ்வொருத்தராய் கெஞ்சவேண்டியுள்ளது...நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :lol:

எம்மை மட்டும் மற்றவர்கள் கேட்க ஏன் கோபம் வருகிறது???????? :)

கேள்வி கேட்பதற்கும் விடுப்பு அறிவதற்கும் வித்தியாசம் இருக்கு நெல்லையன். நீங்கள் விடுப்பு பாக்கவே விரும்பிய கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் எழுதியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் இவர்போன்றவர்களை காப்பாற்றவும் அவர்களிற்கான வழக்குகளை கவனிக்கவும்.அவர்கள் குடும்பங்களிற்கான உதவிகள் வசதிகளை செய்து கொடுக்கவும் அதற்கென்று தனியான ஒரு நிருவாக அலகே இருந்தது.

..நானும் அது போன்றதொரு நிலையில் (சிறையில்) இருந்து அதே போல ஒரு நிருவாகத்தால் காப்பற்றப்பட்டுத்தான் இன்று வெளி நாட்டில் உயிருடன் இருக்கிறேன்

. இன்று அப்படியொரு நிருவாகம் முள்ளிவாய்க்காலுடன் இல்லாது போனபடியால்தான் இப்படி ஒவ்வொருத்தராய் கெஞ்சவேண்டியுள்ளது...நன்றி வணக்கம்.

எவ்வளவு பெரிய உண்மை

ஆதாரம்

ஆதங்கம்

இடைவைளி.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

அவர்கள் சொல்லோடு மட்டுமல்லாது செயலிலும் காட்டுபவர்கள்

தங்களால் முடிந்தவரை அங்குள்ளவர்களுக்கு செய்கிறார்கள்

தயவுசெய்து நேசக்கரத்தை இதற்குள் இழுத்து எழுதவேண்டாம்

விசுகு அண்ணா நேசக்கரம் என்ற அந்த பதத்தை அறிமுகப்படுத்தியதே யாழ் களம் தான். அதை இங்கே உருவாக்கி உருக்கொடுத்து அதற்கு ஒரு செயல்வடிவத்தை காட்டியதும் யாழின் கள உறவுகள் தான். அதற்கு அன்று பல வழிகளிலும் ஒத்துழைத்தவர்களில் சாந்தி சாத்திரி முக்கியமானவர்கள். அவர்களோடு டன் போன்ற உறவுகளும் முக்கியமானவர்கள். அது நேற்றைய மறக்கப்பட்ட கதை. இன்று கதை வேறு..!

நேசக்கரம் தொடங்கியதில் இருந்து.. இன்று வரை.. மக்களின் அன்றாட அல்லது தற்காலிக தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்ய உதவுகிறது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதற்கு மேல் அது எதுவும் செய்ய முடியாது.

எனது கருத்து என்பது.. நேசக்கரத்தை செயற்படுத்துவதனால் மட்டும் நாம் மக்களுக்கு போராளிகளுக்கு மீட்சியளிக்கிறோம் என்று காட்ட முனைவதையும் மற்றவர்களை அதை வைச்சு திட்டி கதை வரைவதையும் இட்டுத்தான் அமைகிறதே அன்றி நேசக்கரத்தின் பணிகள் தொடர்பில் அதன் நோக்கம் தொடர்பில் அல்ல.

நாம் நாடு கடந்த அரசையும் இன்னும் பல கட்டமைப்புக்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அவர்களை நோக்கி நாம் சொல்ல வேண்டியதை சரியான வடிவில் அணுகிச் சொல்கிறோமா என்றால் அது கிடையாது. ஒரு கதை.. அல்லது ஒரு செவ்வி.. அதை வைச்சு உதவி கேட்டு திட்டு.. இதைத்தான் இப்போ நேசக்கரத்தின் பெயரால் செய்கிறோம் அதிகம்..!

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :)

... எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!! அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :lol:

இந்த கேள்விகுறிகளுக்கும் ஆச்சரியக்குறிகளுக்கும் அர்த்தம் உணர்ச்சிவசப்படாமையா நெல்லையன் ?

அதி உயர் அதுவும் ...பங்கரவாதி.....அவனுக்குத் தொலைபேசி ....? உங்கள் அருமையான விவாதத்துக்கு ஒரு கைதட்டு.

உங்கள் கருத்துக்களை ஒருக்கா ஆரம்பத்திலிருந்து திருப்பி வாசியுங்கோ...காலத்துக்கு ஏற்ப உங்கள் கொள்கை விளக்கங்கள் மாறிமாறித்தான் வருகிறது. எல்லா வசதிகளோடும் வாழும் நீங்களே காலத்துக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றுகிற போது கடைசிவரையும் உங்கள் கனவுக்காகவும் எனது கனவுக்காகவும் தன்னை இழந்தவன் இன்ற தன் கொள்கைகளை மறந்துவிட்டு வாழவிரும்பக்கூடாதுதானே!!!!!

அந்த லூசுப்பயல் பேசாமல் உ(எ)ங்களைமாதிரி காலத்துக்கு ஏற்ப கொள்கைகள் தியாகமெண்டு கதையளக்காமல் போனது தவறுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பெரிய உண்மை

ஆதாரம்

ஆதங்கம்

இடைவைளி.....................................

அவர் சொல்லுறது.. மகேஸ் அன்ரியையும் டக்கிளஸ் அங்கிளையும் என்று நினைக்கிறேன். டக்கிளஸ் அங்கிள் பிடிச்சுக் கொடுக்க.. மகேஸ்வரி அன்ரி எடுத்து விட்டதை சொல்லுறார் போல. இவருக்கு தெரியாது போல.. அவையின்ற நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இன்னும் இன்னும் ஒட்டுக்குழுக்களின் அரச பினாமிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் பிற.. இருக்கிறது தெரியாம.. எத்தனையோ பேர் சிறைகளில் வருடக்கணக்கா இருக்கினம் என்றது.

முள்ளிவாய்க்கால் உலகமே அறிய நடந்த சங்கதி. உலகின் உத்தரவாதங்கள் சில அளிக்கப்பட்ட சங்கதி. ஆனால் முன்னைய சிறைகள் அப்படியல்ல. உலகம் அறிய நடந்ததற்கே இத்தனை சித்திரவதை என்றால்.. உலகம் அறியாமல் நடந்த கைதுகளால் பாதிப்புக்கள் எவ்வளவு இருந்திருக்கும்..!

இவை குறித்தும் சொல்ல வேண்டும் சாத்திரியண்ண தான்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

சாந்தியக்கா

சாத்திரி

இருவரும் இது பற்றியும் கவனத்திலெடுங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நேசக்கரம் என்ற அந்த பதத்தை அறிமுகப்படுத்தியதே யாழ் களம் தான். அதை இங்கே உருவாக்கி உருக்கொடுத்து அதற்கு ஒரு செயல்வடிவத்தை காட்டியதும் யாழின் கள உறவுகள் தான். அதற்கு அன்று பல வழிகளிலும் ஒத்துழைத்தவர்களில் சாந்தி சாத்திரி முக்கியமானவர்கள். அவர்களோடு டன் போன்ற உறவுகளும் முக்கியமானவர்கள். அது நேற்றைய மறக்கப்பட்ட கதை. இன்று கதை வேறு..!

நேசக்கரம் தொடங்கியதில் இருந்து.. இன்று வரை.. மக்களின் அன்றாட அல்லது தற்காலிக தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்ய உதவுகிறது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதற்கு மேல் அது எதுவும் செய்ய முடியாது.

எனது கருத்து என்பது.. நேசக்கரத்தை செயற்படுத்துவதனால் மட்டும் நாம் மக்களுக்கு போராளிகளுக்கு மீட்சியளிக்கிறோம் என்று காட்ட முனைவதையும் மற்றவர்களை அதை வைச்சு திட்டி கதை வரைவதையும் இட்டுத்தான் அமைகிறதே அன்றி நேசக்கரத்தின் பணிகள் தொடர்பில் அதன் நோக்கம் தொடர்பில் அல்ல.

நாம் நாடு கடந்த அரசையும் இன்னும் பல கட்டமைப்புக்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அவர்களை நோக்கி நாம் சொல்ல வேண்டியதை சரியான வடிவில் அணுகிச் சொல்கிறோமா என்றால் அது கிடையாது. ஒரு கதை.. அல்லது ஒரு செவ்வி.. அதை வைச்சு உதவி கேட்டு திட்டு.. இதைத்தான் இப்போ நேசக்கரத்தின் பெயரால் செய்கிறோம் அதிகம்..!

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

இங்கு மீண்டும் ஒருதடைவை நீங்கள் சாந்தி எழுதியதை படிப்பது நன்று காரணம்.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…? இது கதையில்லை ஒருவனின் வாழ்வு

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

இதுதான் அந்த இரண்டு அமைப்புக்களை பற்றியும் சாந்தி எழுதியது இதில் எங்கு அந்த அமைப்புக்களை விமரிசனம் செய்திருக்கிறார் அல்லது திட்டியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினால் நாங்களும் தமிழ் மொழி படிக்க வசதியாய் இருக்கும்.

அதுமட்டுமல்லாது முக்கிய விடயம் நாடு கடந்த அரசு ஆனாலும் சரி பேரவை ஆனாலும் சரி அங்கு பலரும் எனக்கு நண்பர்கள்தான் ஆனால் உதவி என்று கேட்டால் மழுப்புபவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த விடயத்தில் நாடுகடந்த அரசு உருத்திரா ஆகட்டும் அதன் அடுத்த செயற்பாட்டாதளர் சிறீஅண்ணா(சுவீடன்)ஆகட்டும் லண்டன் வசந்தகுமார் ; ஆகட்டும் நான் உதவி கேட்கவில்லை என்பதை மறுக்கமுடியாது இப்போதைக்கு முடியாது நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் என்கிற வசனம் மட்டுமே பதில்களாய் வந்தது அதனை நீங்கள் நேரடியாகவே அவர்களிடம்.கேட்கலாம். பேரவை பற்றி இங்கு சொல்லவே வேண்டாம்.

Link to comment
Share on other sites

View Postnedukkalapoovan, on 05 November 2010 - 09:15 PM, said:

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

சாந்தியக்கா

சாத்திரி

இருவரும் இது பற்றியும் கவனத்திலெடுங்கள்

நன்றி

ஒரு சிலரை திருப்திபடுத்துவதென்பது யாரை தெளிவாக எழுதினால் புரிந்து கொள்ளலாம்..அந்த ஒரு சிலர்யார்??மகிந்தாவா??கோத்தபாயாவா??கருணாவா??டக்லசா??ஆனந்தசங்கரியா??சித்தார்த்தனா?? பிள்ளையானா??கே.பியா??நெடியவனா??அல்லது வேறு சிலரா?? இவர்கள் தவிர்த்து அந்த வேறு சிலர் யாரோ யுத்தத்தால் பாதிக்கபட்ட ஒரு சிலர் சிறையில் வாடும் ஒருசிலர்..கல்வியை இழந்த ஒருசிலர்..தாய் தந்தையரை இழந்த ஒருசிலர்..உடன் அவயவங்களை இழந்த ஒருசிலர்..இவர்களை திருப்திப் படுத்துவதுதான் எமது நோக்கம் என சிலர் குற்றம் சாட்டினால் எம்மால் முடிந்தது அவ்வளவுதான் அந்தக் குற்றத்தை மட்டும்தான் எம்மால் மீண்டும் மீண்டும் செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மீண்டும் ஒருதடைவை நீங்கள் சாந்தி எழுதியதை படிப்பது நன்று காரணம்.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…? இது கதையில்லை ஒருவனின் வாழ்வு

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

இதுதான் அந்த இரண்டு அமைப்புக்களை பற்றியும் சாந்தி எழுதியது இதில் எங்கு அந்த அமைப்புக்களை விமரிசனம் செய்திருக்கிறார் அல்லது திட்டியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினால் நாங்களும் தமிழ் மொழி படிக்க வசதியாய் இருக்கும்.

அதுமட்டுமல்லாது முக்கிய விடயம் நாடு கடந்த அரசு ஆனாலும் சரி பேரவை ஆனாலும் சரி அங்கு பலரும் எனக்கு நண்பர்கள்தான் ஆனால் உதவி என்று கேட்டால் மழுப்புபவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த விடயத்தில் நாடுகடந்த அரசு உருத்திரா ஆகட்டும் அதன் அடுத்த செயற்பாட்டாதளர் சிறீஅண்ணா(சுவீடன்)ஆகட்டும் லண்டன் வசந்தகுமார் ; ஆகட்டும் நான் உதவி கேட்கவில்லை என்பதை மறுக்கமுடியாது இப்போதைக்கு முடியாது நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் என்கிற வசனம் மட்டுமே பதில்களாய் வந்தது அதனை நீங்கள் நேரடியாகவே அவர்களிடம்.கேட்கலாம். பேரவை பற்றி இங்கு சொல்லவே வேண்டாம்.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

சாத்திரி, சாந்தி அக்கா இந்தக் கதையில் சிலவற்றை தானே தனக்கு ஏற்ற வகையில் புகுத்தி இருக்கிறாரா.. அல்லது உண்மையில் அந்தப் போராளி இப்படி சிந்தித்தானா...??!

அன்று.. அவனின் முன்னாள் அவன் அறிய போய் களத்தோடு மாண்டவர்களை எல்லாம் கண்டவன்.. தன் வாழ்க்கைக்காக இப்படி ஒரு இரங்கலை செய்வானா.. சூழ்நிலையை விளங்கிக் கொள்ளாதவனாக இருப்பானா..??!

இன்று இப்படி பேசுபவன்.. அன்று தன் முன்னாள் போய் மாண்டவர்களை ஏன் தடுக்காது விட்டான்.. அதையும் செய்திருக்கலாமே...???!

சாந்தி அக்காவின் தனிப்பட்ட ஆதங்கங்கள்.. அல்லது தனிப்பட்ட கருத்துக்கள்.. போராளிகளின் கருத்துக்களாக நுழைக்கப்பட்டிருக்கின்ற சில ஆக்கங்களை நான் அவதானித்து வந்திருக்கிறேன். அதுவும் நேசக்கரத்தின் உதவி கோரிய நிலைகளோடு...???!

ஒரு போராளி தான் கரும்புலியாகப் போகும் போது கூட மற்றவர்கள் வாழ வேண்டும் என்று போனததைத்தான் நான் கண்டிருக்கிறேன். மற்றவர்களுக்காக தான் சாகிறேனே என்று வருந்தினதை காணேல்ல. அப்படியான இடத்தில் இருந்து பல தியாகங்களை கண்டு வந்த ஒருவன்.. இப்படி இருந்திருப்பானா.. என்பது எனது கேள்வி.

போராளிகளின் பாதுகாப்பு விடுதலை இவற்றில் அக்கறை இருப்பது அவசியம். அது தவறல்ல. அதற்காக ஒரு இலட்சிய பயணத்தில் பயணித்து மாண்டு போன மறவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக அல்லது அதை மற்றவர்களின் பிழைப்புக்கான ஒரு விளம்பரமாக வரைவதில் எனக்கு உடன்பாடில்லை.

நாடு கடந்த அரசு.. மற்றும் அமைப்புக்கள் குறித்து சாந்தி அக்காவிற்கு வேண்டும் என்றால் உடன்பாடுகள்.. முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு உண்மையான போராளி தனது சுய நலனிலும் பார்க்க.. தனது இலட்சியத்தின் பால் அதன் நடவடிக்கைகளின் பால் அதிகம்.. அக்கறை காட்டுவான்... என்பதுதான் நிஜம்.

எத்தனையோ போராளிகள் காட்டிக் கொடுத்தால் விடுதலை என்ற போது காட்டிக் கொடுக்காது தமது வாழ்க்கை இழந்து.. அல்லது சிறையில் கழித்திருக்கின்றனர். அப்படியான எடுத்துக்காட்டுக்களும் உள்ளன.

ஒரு போராளியை சராசரி மனிதனாக காட்ட மறவர்களின் புகழை சொல்வதை இழிவு படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. உண்மையில் அவனொரு போராளியாக இருந்தால் நிச்சயம் இப்படியான ஒரு இழி பிழைப்பை விரும்பமாட்டான். தன் முன்னாள் மாண்டவர்களின் புகழை இழித்து தான் வாழ விரும்பி இருக்க மாட்டான். அப்படியும் போராளிகள் எம் மத்தியில் வாழ்ந்து போயுள்ளனர் என்பதையும் சாத்திரி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலரை திருப்திபடுத்துவதென்பது யாரை தெளிவாக எழுதினால் புரிந்து கொள்ளலாம்..அந்த ஒரு சிலர்யார்??மகிந்தாவா??கோத்தபாயாவா??கருணாவா??டக்லசா??ஆனந்தசங்கரியா??சித்தார்த்தனா?? பிள்ளையானா??கே.பியா??நெடியவனா??அல்லது வேறு சிலரா?? இவர்கள் தவிர்த்து அந்த வேறு சிலர் யாரோ யுத்தத்தால் பாதிக்கபட்ட ஒரு சிலர் சிறையில் வாடும் ஒருசிலர்..கல்வியை இழந்த ஒருசிலர்..தாய் தந்தையரை இழந்த ஒருசிலர்..உடன் அவயவங்களை இழந்த ஒருசிலர்..இவர்களை திருப்திப் படுத்துவதுதான் எமது நோக்கம் என சிலர் குற்றம் சாட்டினால் எம்மால் முடிந்தது அவ்வளவுதான் அந்தக் குற்றத்தை மட்டும்தான் எம்மால் மீண்டும் மீண்டும் செய்ய முடியும்.

வன்னியைப் பொறுத்த வரை.. ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போராளிகள் மாவீரர் குடும்பங்கள் என்று பாதிப்புக்கள் பல வகைகளில் பல வழிகளில் உள்ளன.

ஒரு சிலரின் கருத்துக்கள் உங்களை எட்டுவது போல.. பல நூறு பேரின் கருத்துக்கள் உங்களை எட்டாமலும் இருக்கின்றன. அவர்களின் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு ஆளுக்கு ஒரு தீர்வு தேடிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் மொத்த மக்களுக்குமான தீர்வாக பெற்றுக் கொடுப்பதும்.. பொதுமன்னிப்புக்கு வழி கோலுவதுமே அதிகம் சிறந்தது என்பது எனது நிலைப்பாடு.

போராளிகளின் சரணடைதல் என்பது சர்வதேசத்தின் உத்தரவாதங்களுக்கு உட்பட்டு நடந்ததாகவே தெரிகிறது. ஆனாலும் சிறீலங்கா அரசு உத்தரவாதங்களை மீறியுள்ளது. அப்படியான நிலையில் ஆளாளாய் விடுவித்துக் கொண்டிருப்பதிலும் போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய தூண்ட வேண்டியதுதான் உண்மையான கடமை. தனியாள் விடுதலையை காட்டிலும் இது வலிமையானதாக இருக்கும்.

அதுதான் எம்மை அடையாத குரல்களின் விடுதலைக்கும் வழிகோலும். சிறைகளில் பல்லாண்டுகளாக அரசியல் கைதிகளாக வாடும் உறவுகளின் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் உதவும்.

இதனை நாடு கடந்த அரசு செய்ய முனைவதிலும் புலம்பெயர் மக்கள் தங்கள் ஒற்றுமையால் செய்யலாம். அதை நேசக்கரம் வலியுறுத்தலாமே...???! இப்படி ஆளை ஆள் பார்த்து திட்டுவதிலும்..???! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.