Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?


Recommended Posts

நல்ல போராளி என்பது அக்கா.. கொண்ட கொள்கையோடு இருப்பவன்... என்பதாகும். இருக்க முடியல்லையோ.. போராளி என்ற அடைமொழியை தூக்கிப் போட்டிட்டு.. உதவி கேளுங்கோ. முன்னாள் போராளி இன்னால் கூலி என்று தலைப்பு போட்டு போராளிகளை கொச்சைப்படுத்தாதேங்கோ..!

போராளி என்ற அந்த பதத்துக்கு உயிர்பிக்க உயிர் கொடுத்த 30,000 மாவீரர்களை நினைச்சுப் பாருங்கோ..! இவருக்காவது பிள்ளை குட்டி மனிசி என்று ஒரு சாதாரண மனித வாழ்க்கை ஓட்டம் இருக்குது. அது கூட இல்லாமல் இலட்சியத்திற்காக இட்ட கட்டளை ஏற்று உயிர் திறந்த போராளிகள் தான் என்றும் போராளிகள்..!

முன்னாள் போராளிகளாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள்.. காட்டிக்கொடுத்தவர்கள் தான். அவர்களை போராளிகள் என்று மீண்டும் வரையறுப்பது கொஞ்சம் கடினமானது. அதற்காக அவர்களை தண்டிக்கனும் என்றில்லை. போராளி என்ற அடைமொழி அவர்களுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை. :lol:

ஓம் உங்கள் விளக்கத்தை இனி போராளிகள் என்பவர்கள் பின்பற்றும்படி மொழிகிறேன்.

ஆனாலும் விசைப்பலகை வீரம் றெம்பவே வெளிவருகிறது.

தன்னினத்துக்காக போராளியான எவனும் என்றும் போராளியென்ற அடைமொழிக்கு உரித்துடையவன். அதை உங்கள் வார்த்தைகளால் கட்டிப்போடவோ மாற்றவோ முடியாது. 30ஆயிரம் மட்டுமில்லை போராடினது கடைசியில கட்டாயமாக பிடிபட்டுச் செத்ததுகள் காணாமல் போனதுகள் கண்காணாமல் வாழ்ந்த அதுகளும் போராளிகள் மாவீரர்கள் தான்.

மற்றும் உங்கள் கற்பனைக்கேற்ப கருத்து எழுதுவதுபோல இவனது கதையை நான் எழுதவில்லை. அவன் துயரை அவன் உரைத்தபடி எழுதியுள்ளேன். மிகைப்பு நகைப்பு துவைப்பு எதுவும் செய்யாமல் விடயத்தை எழுதியுள்ளேன். எனது விருப்பங்களை திணிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வது உங்கள் பணியானால் அது உங்கள் கற்பனை.

நீட்டி விளாசி ஒரு இனத்திற்காக போராடி அழிந்த சிறைப்பட்டுள்ள ஒருவனின் வலிகளை புரிந்து கொள்ளாத உங்கள் மனிதாபிமானம் அவன் மீதான கூலி காட்டிக்கொடுப்பென்ற பட்டங்கள் யாவும் அருமையாக உள்ளது.

உங்களுக்கு இப்படி வீரம்பேசவே முடியும். எங்களால் அவர்களுக்காக ஒரு நேரக்கஞ்சியைக் கொடுக்கவே பிச்சை கேட்க முடியும்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

திரும்பவும் ... சாத்திரி/சாந்தி .... உங்கள் நேசக்கரத்தின் செயற்பாடுகளில் அதிருப்ப்தி தெரிவித்தோ, அல்லது குற்றம் பிடிக்க வேண்டும் என்றோ இத்திரியில் இத்தனை வசனங்களும்!!!! உங்கள் செயற்பாடுகள் பாராட்டுதல்களுக்குரியவை, அவைகளை கொச்சைப்படுத்த வரவில்லை!!! ஆனால் இத்திரியில் நீங்கள் வைத்த கோரிக்கை/வேண்டுதல் இதுவரை உங்கள் வேண்டுதல்களுக்கு முற்றிலும் வித்த்யாசமானது!! சட்டம் சம்பந்தமானது!! இலங்கையின் சிங்கள சட்டத்தை தெரிந்தவர்கள் இவ்வழக்கு சம்பந்தமாக என்ன கூறுவார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்!!!

இப்போராளி தியாகங்கள் புரிந்தவனாக இருக்கலாம்!! ஆனால் அத்தியாகங்கள் புரிந்தவை இந்த 25லட்சம் காப்பாற்ற மாட்டாது என்பதுதான், ... வாதம்!!! மாறாக இந்த 25லட்சத்தை 25 பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வில சில மாற்றங்களையாவது ஏற்படுத்தலாம்!!!

மீண்டும் கூறுவது ... சிங்களவன் பார்வையில் ... புலம்பெயர் எம்மவர்கள் அவனுக்கு பொன் முட்டையிடும் வாத்துக்கள்!!! .... உணர்ச்சிகளுக்கு அப்பால விவேக செயற்பாடும் தேவை!!!!!

Link to comment
Share on other sites

2008..

விநாயமூர்த்தி முரளீதரன்.. புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். வன்னி மக்களின் இழப்புக்களை இட்டு அதனை செய்ய முடியாது இருக்க முடியாது.

டக்கிளஸ் தேவானந்தா.. புலிகள் அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தீவில் அமைதி நிலைக்கும்.

2009..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னிக்கு போய் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுகிறார். மாவீரர்களின் அடையாளங்கள் இன ஐக்கியத்திற்கு பெரும் இடையூறு.

டக்கிளஸ் தேவானந்தா.. அரசு உடனடியாக வடக்கில் தேர்தலைகளை நடத்த வேண்டும்.

2010..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னி மக்களின் மீட்பர்.

டக்கிளஸ் தேவானந்தா.. வடக்கின் வசந்தத்தின் அதிபதி.

வன்னி மக்களின் மீட்பர்கள் வந்துவிட்டார்கள்.. எனி யாரும் அவர்களுக்கு உதவி செய்யத் தேவையில்லை..! இதனை இத்தாழ் அறிவிக்கின்றோம்.

நாடு கடந்த அரசு.. புலம்பெயர் மக்களின் போராட்டத்தை முடக்கியதே செய்த சாதனை..!

சிறீலங்கா அரசு.. நவம்பர் 2010.. ஒபாமாவின் இந்திய வருகைக்கு முதல் நாள்.. அமெரிக்க அரசு நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை தடுக்காமல் விட்டது சிறீலங்காவிற்கு விசனமளிக்கிறது.

இவற்றில் இருந்து நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.. யாழ் கள கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை..!

வன்னியின் வறிய மக்களை பலியிட்டு தமிழீழம் பெற்றுவிடத்துடித்த மையவாதக் கருத்தியலுக்கு எந்தவித அடிப்படைக் கொள்கைகளும் கிடையாது. அதற்கான தகுதியும் கிடையாது. இன்று வன்னியின் வாழ்வைப் பறித்த மையவாத குறுந்தேசியமே நா கா அரசுவாகவோ அவைகள் செயற் புடுங்கிகளாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கு வறிய மக்கள் இனியும் பலியாக முடியாது. இன்றய காலத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத்தமிழர்கள் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்த ஒரு புதிய அரசியல் மார்க்கமே தேவை தவிர பழய மையவாத அரசியல் சிந்தனை முறையில்லை. இனிவரும் அரசியலும் தலமைகளும் யாழ் மையவாதக் கருவில் இருந்து உருவாகவும் முடியாது அதற்கு மக்கள் என்னுமொரு முறை பலியாகவும் முடியாது. வன்னியை கருவறுத்ததில் கருணா டக்ளசை விட அப்பனான துரோகிகளும் துரோகச் சிந்தனை முறையும் நிறையவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

தன்னினத்துக்காக போராளியான எவனும் என்றும் போராளியென்ற அடைமொழிக்கு உரித்துடையவன். அதை உங்கள் வார்த்தைகளால் கட்டிப்போடவோ மாற்றவோ முடியாது. 30ஆயிரம் மட்டுமில்லை போராடினது கடைசியில கட்டாயமாக பிடிபட்டுச் செத்ததுகள் காணாமல் போனதுகள் கண்காணாமல் வாழ்ந்த அதுகளும் போராளிகள் மாவீரர்கள் தான்.

Link to comment
Share on other sites

இரண்டு கடகம்.. நாலு கதிரை.. மூன்று கோழிக்குஞ்சு.. ஒரு மாடு.. ஒரு தையல் இயந்திரம்.. இதை வைச்சு மக்கள் முன்னேற முடியும் என்று 1960ம் ஆண்டுகள் கால நிலையை தான் நீங்கள் சிலர் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதில திருப்திப்படுறீங்க போல.

இந்த நிலையில்.. வெறும் சில பத்தாயிரங்களையும் கோழிக்குஞ்சுகளையும் தையல் இயந்திரங்களையும் வைத்து எப்படி பிழைப்பை ஓட்டுவது.

அதோ ஆகாயத்தை அறுத்து அலரிமாளிகையை அடித்து நொருக்கிக் கொண்டு விண்கலங்கள் வந்து கொண்டிருக்கின்றன....கோழிக்குஞ்சுகளையும் தையல் மெசின்களையும் ஆட்லறிகளால் அடித்து நொருக்குங்கள் அன்பான மக்களே நாங்கள் உங்களுக்கு வெளிச்சம் தாறமெண்டு மிஞ்சிய உங்கள் கோவணத்தையும் உருவீட்டு உலகில் சனநாயகம் பேசிச்சாகடிக்கிறதைவிட்டால் வேறு வேலையெமக்கு இல்லை. :lol::):D:blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் உங்கள் விளக்கத்தை இனி போராளிகள் என்பவர்கள் பின்பற்றும்படி மொழிகிறேன்.

ஆனாலும் விசைப்பலகை வீரம் றெம்பவே வெளிவருகிறது.

தன்னினத்துக்காக போராளியான எவனும் என்றும் போராளியென்ற அடைமொழிக்கு உரித்துடையவன். அதை உங்கள் வார்த்தைகளால் கட்டிப்போடவோ மாற்றவோ முடியாது. 30ஆயிரம் மட்டுமில்லை போராடினது கடைசியில கட்டாயமாக பிடிபட்டுச் செத்ததுகள் காணாமல் போனதுகள் கண்காணாமல் வாழ்ந்த அதுகளும் போராளிகள் மாவீரர்கள் தான்.

மற்றும் உங்கள் கற்பனைக்கேற்ப கருத்து எழுதுவதுபோல இவனது கதையை நான் எழுதவில்லை. அவன் துயரை அவன் உரைத்தபடி எழுதியுள்ளேன். மிகைப்பு நகைப்பு துவைப்பு எதுவும் செய்யாமல் விடயத்தை எழுதியுள்ளேன். எனது விருப்பங்களை திணிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வது உங்கள் பணியானால் அது உங்கள் கற்பனை.

நீட்டி விளாசி ஒரு இனத்திற்காக போராடி அழிந்த சிறைப்பட்டுள்ள ஒருவனின் வலிகளை புரிந்து கொள்ளாத உங்கள் மனிதாபிமானம் அவன் மீதான கூலி காட்டிக்கொடுப்பென்ற பட்டங்கள் யாவும் அருமையாக உள்ளது.

உங்களுக்கு இப்படி வீரம்பேசவே முடியும். எங்களால் அவர்களுக்காக ஒரு நேரக்கஞ்சியைக் கொடுக்கவே பிச்சை கேட்க முடியும்.

நன்றி வணக்கம்.

புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு தலைவருக்கு போரை ஆரம்பியுங்கோ என்று கடிதம் எழுதினவையை முதலில கூட்டிக் கொண்டு வாங்கோ.

ஏன்.. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் வீரம் கொப்பளிக்க நீங்கள் எழுதிய கவிதைகள்.. பாடிய கவிதைகளை கொஞ்சம் வாசிச்சுப் பாருங்கோக்கா.

உசுப்பேத்தி அனுப்பினது நீங்க.. போரை எதிர்கொள்ள வைச்சது நீங்க.. கடைசியில.. பிடிச்சுக் கொண்டு போனது.. பறிச்சுக் கொண்டு போனது.. காசு கொடுத்து காணி கொடுத்து கூட்டிக் கொண்டு போனது.. ஏன் பிரபாகரன் தான் வாழவோ.. அந்தாளே மாவீரனாகி.. மண்ணோடு மண்ணாகி போய் விட்டதாக சொல்லி இரங்கலும் பாடிப்போட்டு.. இப்ப வசை பாடல்கள் வேற.

உவை கொஞ்சைப் பேர் முன்னாள் போராளிகள் என்ற பதத்தை வைச்சு தங்கட குடும்ப வாழ்க்கையை ஓட்ட நினைக்கிறது என்ற பார்வையிலும் நாங்க உதுகளை உங்களுக்கு திருப்பி மாத்திப் போட்டு வசை பாடலாம். ஆனால் உண்மை அதுவல்லாமல் கூட இருக்கலாம்.

போராளி என்ற பதத்தை போர் களத்துக்கு வெளியில்.. போராட்ட களத்துக்கு வெளியில் தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை. சிங்கள அரசு பயங்கரவாதிகள் என்ற பதத்தை எப்படி பயன்படுத்துகிறதோ அதேபோல் தான் நீங்கள் போராளிகள் என்ற பதத்தை இன்று பயன்படுத்துகிறீர்கள்.

அந்தப் பதத்திற்கான உண்மையான அடையாளம் கூட இல்லாதவர்கள் எல்லாம் இன்று போராளிகளாக காட்டப்படும் நிலையும் மிகுந்து கிடக்கும் சூழலில்.. செவ்விகள்.. கதைகள்.. உண்மையில் போராளிகளை தான் பிரதிநிதிப்படுத்துகின்றனவா என்ற கேள்வி தங்களின் மேற்படி பதிலை அடுத்து எழுகிறது அக்கா..??!

ஏன் இந்தப் பச்சோந்தித்தனம் உங்களுக்குள்ள..???! ஏன் இந்த குழப்பம்...???! 2003/4/5/6/7/8 களில் எழுதிய சாந்தியா இது என்று கேட்கத் தோன்றுகிறது...???! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் வறிய மக்களை பலியிட்டு தமிழீழம் பெற்றுவிடத்துடித்த மையவாதக் கருத்தியலுக்கு எந்தவித அடிப்படைக் கொள்கைகளும் கிடையாது. அதற்கான தகுதியும் கிடையாது. இன்று வன்னியின் வாழ்வைப் பறித்த மையவாத குறுந்தேசியமே நா கா அரசுவாகவோ அவைகள் செயற் புடுங்கிகளாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கு வறிய மக்கள் இனியும் பலியாக முடியாது. இன்றய காலத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத்தமிழர்கள் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்த ஒரு புதிய அரசியல் மார்க்கமே தேவை தவிர பழய மையவாத அரசியல் சிந்தனை முறையில்லை. இனிவரும் அரசியலும் தலமைகளும் யாழ் மையவாதக் கருவில் இருந்து உருவாகவும் முடியாது அதற்கு மக்கள் என்னுமொரு முறை பலியாகவும் முடியாது. வன்னியை கருவறுத்ததில் கருணா டக்ளசை விட அப்பனான துரோகிகளும் துரோகச் சிந்தனை முறையும் நிறையவே இருக்கின்றது.

வன்னியின் குடித்தொகையில் வறிய மக்கள் என்போர் 50,000 க்கும் குறைவு. 2009ல் வன்னியின் குடித்தொகை 3,00,000. அதிலும் யாழ்ப்பாணம்.. மற்றும் கிழக்கில் இருந்து புலம்பெயர்ந்த மக்களே அதிகம். வன்னி மக்கள் அடிப்படையில் கல்வி அறிவில் பிந்தங்கி இருந்தாலும் விவசாயப் பொருண்மியத்தில் உறுதியாக வாழ்ந்தவர்கள்.

மாவீரர் பட்டியலின் படி.. வன்னிக் களத்தில் வீரமரணம் அடைந்தவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம்.. மட்டக்களப்பு திருமலையை சேர்ந்தவர்கள். வன்னியை சேர்ந்தவர்கள் ஒப்பிட்டளவில் குறைவு.

உங்கள் கருத்தின் அடிப்படை வாதம் தான் எங்கிருந்து கருக்கொள்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை மகிந்த சிந்தனையின் அடிப்படையில் டக்கிளஸ் தேவானந்தாவின் சூளை மேட்டு கொள்கைகளை உள்வாங்கி எழுந்திருக்குமோ..??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதோ ஆகாயத்தை அறுத்து அலரிமாளிகையை அடித்து நொருக்கிக் கொண்டு விண்கலங்கள் வந்து கொண்டிருக்கின்றன....கோழிக்குஞ்சுகளையும் தையல் மெசின்களையும் ஆட்லறிகளால் அடித்து நொருக்குங்கள் அன்பான மக்களே நாங்கள் உங்களுக்கு வெளிச்சம் தாறமெண்டு மிஞ்சிய உங்கள் கோவணத்தையும் உருவீட்டு உலகில் சனநாயகம் பேசிச்சாகடிக்கிறதைவிட்டால் வேறு வேலையெமக்கு இல்லை. :D:blink::huh: :huh: :o

இதோ எங்கள் சூரியன் வருகிறார்... அவர் தமிழீழம் அமைப்பார்.. எங்கள் பிள்ளைகள் ஜேர்மனியில் பூங்காவில்.. குதூகலிக்குங்கள்.. வன்னியில் பிள்ளைகள் பயிற்சி எடுத்து சண்டைக்குப் போங்கள்.. இப்படியும் வீரம் வளர்த்தது தாங்கள் தானே அக்கோய். அதுகளையும் கொஞ்சம் மீட்டுப்பார்த்திட்டு கவுண்டு கிடந்து கொண்டு.. வெளவால் போல.. வாயால கக்குங்கோ அக்கா. :lol:

எங்களுக்கு கடைக்கும் போகவும் கார் வேணும்.. வன்னி மக்களுக்கு கோழிக்குஞ்சும் ஜமுனா பாறியும் போதும். அப்பதான் கொலிடே போகேக்க வேண்டிக் கொண்டு போற லிடில் சாமான்களுக்கு கிராக்கி இருக்கும்..! :):o

Link to comment
Share on other sites

அந்தப் பதத்திற்கான உண்மையான அடையாளம் கூட இல்லாதவர்கள் எல்லாம் இன்று போராளிகளாக காட்டப்படும் நிலையும் மிகுந்து கிடக்கும் சூழலில்.. செவ்விகள்.. கதைகள்.. உண்மையில் போராளிகளை தான் பிரதிநிதிப்படுத்துகின்றனவா என்ற கேள்வி தங்களின் மேற்படி பதிலை அடுத்து எழுகிறது அக்கா..??!

ஏன் இந்தப் பச்சோந்தித்தனம் உங்களுக்குள்ள..???! ஏன் இந்த குழப்பம்...???! 2003/4/5/6/7/8 களில் எழுதிய சாந்தியா இது என்று கேட்கத் தோன்றுகிறது...???! :lol:

உண்மையான போராளி பொய்யான போராளியென்று எந்தப் பேதத்தையும் தலைவர் பிரபாகரன் பிரிச்சுக்காட்டீ ஒருவரையும் வளர்க்கவில்லை. தனது இலட்சியத்தை நிறைவேற்ற துரோகிக வாழ்ந்து செத்துப்போன ஆயிரமாயிரம் ஆத்மாக்களும் பிரபாகரன் என்ற மனிதனால் வளர்த்து அனுப்பப்பட்டவர்கள் தான். ஆக போராளிகள் என்றும் போராளிகள் தான்.

இது பச்சோந்தித்தனமென்று நீங்கள் புரிந்தால் அதில் எந்தவித மாற்றுமில்லை. இங்கு குழப்பமில்லை என்னிடம் தெளிவாகவே இருக்கிறேன் இயங்குகிறேன். 2003 - 2008வரை எழுதிய அதே சாந்தியென்ற மனிசிதான் நான். அன்று நாங்கள் கனவுகள் கண்டோம் அப்போது அவர்கள் தமிழர் என்ற இனத்துக்காக அவர்களின் விடிவுக்காக கனவுகண்டார்கள். அவர்களது வெற்றிகளையும் வீரங்களையுமே காட்டினார்கள். இன்று (2009இன்பின்) தங்கள் வேதனைகளை இயலாமைகளை நெஞ்சில் ஆணியேற்றுவது போல் இடைவிடாமல் தெரிவிக்கிறார்கள்.

இப்போ கனவு கலைந்து நிசத்தைக் காண்பதால் இனிமேல் போராளிகள் போரால் பாதிக்கப்பட்டோர் பாழாய்ப்போவதை இப்படித்தான் சொல்லமுடியும். சொல்லிக் கொண்டிருப்பேன். இன்னும் கனவுகாட்டி அவர்களை புதைகுழிக்கு அனுப்புவதை அனுமதிக்கமாட்டேன். நானும் தமிழ் இனத்தில் பிறந்த உரிமைகளுடன்....

இத்தோடு நெடுக்கு பார்த்த படம் நிறைவுபெறுகிறது. இன்று உங்களுடன் கருத்தாடியதில் செய்ய வேண்டிய வேலைகள் யாவும் கிடப்பில் கிடக்கிறது. ஆக திரும்பத்திரும்ப யதார்த்தம் புரியாது கனவு காணும் காட்டும் உங்களுக்கு கருத்தெழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் நான் எழுத நினைப்பதை என்னால் சொல்லப்பட வேண்டியதை இப்போதைய சாந்தியாக சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

அப்ப இனி நன்றி வணக்கம் சொல்லுவம். :)

அதோ ஆகாயத்தை அறுத்து அலரிமாளிகையை அடித்து நொருக்கிக் கொண்டு விண்கலங்கள் வந்து கொண்டிருக்கின்றன....கோழிக்குஞ்சுகளையும் தையல் மெசின்களையும் ஆட்லறிகளால் அடித்து நொருக்குங்கள் அன்பான மக்களே நாங்கள் உங்களுக்கு வெளிச்சம் தாறமெண்டு மிஞ்சிய உங்கள் கோவணத்தையும் உருவீட்டு உலகில் சனநாயகம் பேசிச்சாகடிக்கிறதைவிட்டால் வேறு வேலையெமக்கு இல்லை. :D:blink::huh: :huh: :o
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போராளி பொய்யான போராளியென்று எந்தப் பேதத்தையும் தலைவர் பிரபாகரன் பிரிச்சுக்காட்டீ ஒருவரையும் வளர்க்கவில்லை. தனது இலட்சியத்தை நிறைவேற்ற துரோகிக வாழ்ந்து செத்துப்போன ஆயிரமாயிரம் ஆத்மாக்களும் பிரபாகரன் என்ற மனிதனால் வளர்த்து அனுப்பப்பட்டவர்கள் தான். ஆக போராளிகள் என்றும் போராளிகள் தான்.

இது பச்சோந்தித்தனமென்று நீங்கள் புரிந்தால் அதில் எந்தவித மாற்றுமில்லை. இங்கு குழப்பமில்லை என்னிடம் தெளிவாகவே இருக்கிறேன் இயங்குகிறேன். 2003 - 2008வரை எழுதிய அதே சாந்தியென்ற மனிசிதான் நான். அன்று நாங்கள் கனவுகள் கண்டோம் அப்போது அவர்கள் தமிழர் என்ற இனத்துக்காக அவர்களின் விடிவுக்காக கனவுகண்டார்கள். அவர்களது வெற்றிகளையும் வீரங்களையுமே காட்டினார்கள். இன்று (2009இன்பின்) தங்கள் வேதனைகளை இயலாமைகளை நெஞ்சில் ஆணியேற்றுவது போல் இடைவிடாமல் தெரிவிக்கிறார்கள்.

இப்போ கனவு கலைந்து நிசத்தைக் காண்பதால் இனிமேல் போராளிகள் போரால் பாதிக்கப்பட்டோர் பாழாய்ப்போவதை இப்படித்தான் சொல்லமுடியும். சொல்லிக் கொண்டிருப்பேன். இன்னும் கனவுகாட்டி அவர்களை புதைகுழிக்கு அனுப்புவதை அனுமதிக்கமாட்டேன். நானும் தமிழ் இனத்தில் பிறந்த உரிமைகளுடன்....

இத்தோடு நெடுக்கு பார்த்த படம் நிறைவுபெறுகிறது. இன்று உங்களுடன் கருத்தாடியதில் செய்ய வேண்டிய வேலைகள் யாவும் கிடப்பில் கிடக்கிறது. ஆக திரும்பத்திரும்ப யதார்த்தம் புரியாது கனவு காணும் காட்டும் உங்களுக்கு கருத்தெழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் நான் எழுத நினைப்பதை என்னால் சொல்லப்பட வேண்டியதை இப்போதைய சாந்தியாக சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

அப்ப இனி நன்றி வணக்கம் சொல்லுவம். :lol:

அக்கோய் தோல்விக்கு முன்னர் ஒன்றும் தோல்விக்கு பின்னர் இன்னொன்றும் என்றிருந்தால்.. எத்தனையோ போராட்டங்களை கைவிட்டுவிட்டு தலைவர் எப்பவோ சரணடைந்து தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போயிருக்கலாம். நீங்களும் ஜேர்மனியில் வாழ முடியாமல் போயிருக்கலாம். வன்னியில் மாடு மேய்த்துக் கொண்டும் இருந்திருக்கலாம்.

ஆனால் விடுதலை என்பது உங்கள் போன்றோரின் பசிக்கு போடும் உணவு போன்றதல்ல. இழப்புக்கள் நீண்ட போராட்டங்கள் இன்றி விடுதலை என்பது சாத்தியமில்லை. அதற்காக எனியும் ஆயுதத்தால் அழிவுகளை தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல அர்த்தம். ஆனால்.. தோல்விகளுக்காக விடுதலை என்ற மாவீரர்களின் மக்களின் இலட்சியக்கனவுகளை ஒரு நொடியில் புதைத்து விடும் துரோகத்தை செய்யவும்.. அதை வைச்சு எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவும் நாம் அனுமதிக்கமாட்டோம்.

நிச்சயம்.. மாவீரர்களின் கனவு வெல்லும் வரை அவர்களின் பெயரை போராட்ட இலட்சியத்தை பாதையை பயணிப்பை காட்டி மற்றவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை என்ற இழி நிலை ஓட்டத்தை ஓட்ட அனுமதிக்க முடியாது. அவர் முன்னாள் போராளியாக இருக்கலாம் விடலாம். இன்னாளில் அவர் போராளி அல்ல. இலட்சியத்தை கைவிட்டவர் போராளியாக இருக்க முடியாது. அதை எதிரியிடம் சொல்லி பொதுமன்னிப்பு பெற்றுக் கொண்டு வாழட்டும். அது பிரச்சனை அல்ல. ஆனால் உண்மைப் போராளிகளின் மாவீரர்களின் இலட்சியத்தை குறை பேசவும் அதை வைச்சு சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவும் எவருக்கும் அருகதை கிடையாது. அதற்கு நாங்களும் கருத்தியல் ரீதியில் கூட அனுமதிக்க மாட்டோம். :)

Link to comment
Share on other sites

வன்னியின் குடித்தொகையில் வறிய மக்கள் என்போர் 50,000 க்கும் குறைவு. 2009ல் வன்னியின் குடித்தொகை 3,00,000. அதிலும் யாழ்ப்பாணம்.. மற்றும் கிழக்கில் இருந்து புலம்பெயர்ந்த மக்களே அதிகம். வன்னி மக்கள் அடிப்படையில் கல்வி அறிவில் பிந்தங்கி இருந்தாலும் விவசாயப் பொருண்மியத்தில் உறுதியாக வாழ்ந்தவர்கள்.

மாவீரர் பட்டியலின் படி.. வன்னிக் களத்தில் வீரமரணம் அடைந்தவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம்.. மட்டக்களப்பு திருமலையை சேர்ந்தவர்கள். வன்னியை சேர்ந்தவர்கள் ஒப்பிட்டளவில் குறைவு.

உங்கள் கருத்தின் அடிப்படை வாதம் தான் எங்கிருந்து கருக்கொள்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை மகிந்த சிந்தனையின் அடிப்படையில் டக்கிளஸ் தேவானந்தாவின் சூளை மேட்டு கொள்கைகளை உள்வாங்கி எழுந்திருக்குமோ..??!

இடம்பெயர்ந்தவர்கள் எல்லாம் திரும்ப சிங்கள இராணுவத்தையே அனுசரித்து வாழலாம் என்று திரும்பிபோன மனநிலை வன்னியில் சனம் சாக தேரிழுத்து திருவிழாக்கொண்டாடிய மனநிலை வன்னிச் சனம் இராணுவத்திடம் சரணடையாமல் சாவதே மானம் என்று வெளிநாட்டிலும் இராணுவக்கட்டுப்பாட்டிலும் இருந்து சிந்தித்த மனநிலை எதிர்த்தவன் கேள்வி கேட்டவன் எல்லாரையும் போட்டுத் தள்ளலாம் என்ற மனநிலை தமிழரை மதவாரிய பிரித்த மனநிலை வன்னி மக்களை நிர்ப்பந்தித்து இறுதியில் ஆயிரக்கணக்கில் சுட்டுத்தள்ளுமளவுக்கு வந்த மனநிலை தமழீழம் என்றால் நல்லூரடி என்கிற பன்னாடை மனநிலை இவைகளை எங்கிருந்து வருகின்றதோ அதற்கு எதிர்ப்புறம் இருந்து தான் இந்த மனநிலை வருகின்றது. மேலும் மையவாதச் சிந்தனை முறையை விட மகிந்த சிந்தனை ஒன்றும் மோசமானதில்லை.

ஏதோ டக்ளஸ் மட்டும் தான் பிழைவிட்டான் என்ற நினைப்பு. டக்ளஸ் ஒரு தமிழன் வாழ்வைப் பறிக்கக் காரணம் என்றால் ஓராயிரம் தமிழனின் வாழ்வழித்தவர்களும் இருக்கின்றார்கள். டக்களஸ் முதலில் கையை தூக்கிக்கொண்டு சிங்களவனிடம் போனான் கருணா பிறகு போனான் கடசியில் எல்லாரும் தான் கையை தூக்கிச்சினம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளாக இருப்பதற்கு காரணம் என்னவென்பது வெளிப்படையானது. சிங்களவனை அல்லது எவனையும் விட மோசமான மனநிலை எமக்கிருக்கின்றது அங்கிருந்துதான் உங்கள் மனநிலையும் சரி எனதும் சரி வருகின்றது. இந்த மனநிலையை வைத்து ஒரு பத்திரிகை வானொலிச்சேவையை கூட இனத்துக்காக ஒன்றுபட்டு நடத்த முடியாது. அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும் நாலுபேர் ஒன்றுபட்டு இரண்டு பாதிக்கப்பட்ட சனத்துக்கு கூட உதவமுடியாது. இந்தக் கேவலத்தில நாடுகடந்த அரசு ஒரு கேடு? இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணா அம்மான் டக்ளஸ் அம்மான் கே பி போன்றவர்கள் மீது அவதுறு பேச என்ன யோக்கியததை இருக்கின்றது? நீங்கள் இங்கிருந்து சிறையில் இருக்கும் மக்களை விடுவிப்பதற்கும் புனர்வாழ்வுக்கும் முன்னுரிமை கொடுத்தீர்கள்? பிறகென்ன யோக்கியதை?

Link to comment
Share on other sites

ஏதோ டக்ளஸ் மட்டும் தான் பிழைவிட்டான் என்ற நினைப்பு. டக்ளஸ் ஒரு தமிழன் வாழ்வைப் பறிக்கக் காரணம் என்றால் ஓராயிரம் தமிழனின் வாழ்வழித்தவர்களும் இருக்கின்றார்கள். டக்களஸ் முதலில் கையை தூக்கிக்கொண்டு சிங்களவனிடம் போனான் கருணா பிறகு போனான் கடசியில் எல்லாரும் தான் கையை தூக்கிச்சினம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளாக இருப்பதற்கு காரணம் என்னவென்பது வெளிப்படையானது. சிங்களவனை அல்லது எவனையும் விட மோசமான மனநிலை எமக்கிருக்கின்றது அங்கிருந்துதான் உங்கள் மனநிலையும் சரி எனதும் சரி வருகின்றது. இந்த மனநிலையை வைத்து ஒரு பத்திரிகை வானொலிச்சேவையை கூட இனத்துக்காக ஒன்றுபட்டு நடத்த முடியாது. அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும் நாலுபேர் ஒன்றுபட்டு இரண்டு பாதிக்கப்பட்ட சனத்துக்கு கூட உதவமுடியாது. இந்தக் கேவலத்தில நாடுகடந்த அரசு ஒரு கேடு? இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணா அம்மான் டக்ளஸ் அம்மான் கே பி போன்றவர்கள் மீது அவதுறு பேச என்ன யோக்கியததை இருக்கின்றது? நீங்கள் இங்கிருந்து சிறையில் இருக்கும் மக்களை விடுவிப்பதற்கும் புனர்வாழ்வுக்கும் முன்னுரிமை கொடுத்தீர்கள்? பிறகென்ன யோக்கியதை?

அய்யய்யோ ... புல்லரிக்குது அண்ணை, உங்கடை வசனங்கள்!!! .... சரி நீங்கள் எல்லோரும் சேர்த்து புலியலை அழித்துப் போட்டியள் .... இன்று என்ன?? அம்மக்களுக்கு சரியான வாழ்வு கொடுத்தனீங்களோ??? இல்லை அம்மக்களையாவது இன்று வாழ வைத்து இருக்கிறீங்களோ????? ... நீங்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க திரியும் சாக்கடைகள்!!! புலி அழைப்பிற்கே ஒட்டியிருக்கிறம் எண்டனீங்கள், இப்ப புலி முடிந்துது ஒட்டை கழட்டுறீங்கள் இல்லை!!! உங்கை இன்னொரு அவிட்டு விட்டான்களில் ஒரு சிங்களத்துடன் ஒட்டியிருந்து தற்போது, சிங்களம் ஒன்றுமே தரப்போவதில்லை என்று கழண்டு வந்த ஒரு இஸ்லாமியர் எழுதுகிறார், அதையாவது பார்த்து உங்கள் பெருந்தலைகளை கழரச்சொல்லுங்கள்!! கழருவதென்ன நீங்களே கழர விட மாட்டீங்கள்!! ... இப்ப சாந்தி/சாத்திரிக்கு வக்காலத்து வாங்குவது என்ற பெயரில் உங்கள் வசனங்களை அள்ளி எறியாதீர்கள் ... உந்த டக்கிலசு/சித்தார்த்தன்/வரதராசு/கருணா கொள்கைக்குன்றங்களைப்பற்றி ... பற்றி வேறொரு திரியில் வேறொரு திரியில் ... இங்கு வேண்டாம்!!!

Link to comment
Share on other sites

சிங்களவனை அல்லது எவனையும் விட மோசமான மனநிலை எமக்கிருக்கின்றது அங்கிருந்துதான் உங்கள் மனநிலையும் சரி எனதும் சரி வருகின்றது. இந்த மனநிலையை வைத்து ஒரு பத்திரிகை வானொலிச்சேவையை கூட இனத்துக்காக ஒன்றுபட்டு நடத்த முடியாது. அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்

அடடாஆஆஆஆ...... அப்பு உந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாம் கட்டிப்பிடித்து ஒன்றாக படுக்குமளவிற்கு ஒற்றுமையானவர்கள்!! ... விட்டால் அதுக்குள்ளையும் ... ஒற்றுமை என எழுதுவீர்கள்!! .... உந்த சாக்கடைகள் எல்லாம் சேர்ந்து தானே எம்மினத்தின் விடிவிற்கு எல்லாம் செய்கிறார்கள்???????? சும்மா வசனங்களை அள்ளி எறிகிறதென்றால் ... விளங்காமல் இருக்க ... பன்னாடைக்கூட்டங்கள் என்று நினைத்து விடாதீர்கள்!!!

. இந்தக் கேவலத்தில நாடுகடந்த அரசு ஒரு கேடு? ..... நீங்கள் இங்கிருந்து சிறையில் இருக்கும் மக்களை விடுவிப்பதற்கும் புனர்வாழ்வுக்கும் முன்னுரிமை கொடுத்தீர்கள்? பிறகென்ன யோக்கியதை?

மாற்றுக்கருத்து மாணிக்கம், ..... அங்கு ஒட்டி இருக்கும் ... டக்கிலசு/சித்தார்த்தன்/வரதராசு/ .... போன்றவர்களிடம் முதலில் இக்கேள்வியை கேளுங்கள்!!!!! அந்த பரதேசிகளினால் ஒட்டியிருந்து செய்ய முடியாததை நாம் இங்கிருந்து செய்ய சிங்களவன் விட்டுடுவன்???????????? அங்கு செய்கிரதென்ன ... ஏதாவது உந்த பரதேசிகளினால் கதைக்க கூட முடிகிறதோ?????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ டக்ளஸ் மட்டும் தான் பிழைவிட்டான் என்ற நினைப்பு. டக்ளஸ் ஒரு தமிழன் வாழ்வைப் பறிக்கக் காரணம் என்றால் ஓராயிரம் தமிழனின் வாழ்வழித்தவர்களும் இருக்கின்றார்கள். டக்களஸ் முதலில் கையை தூக்கிக்கொண்டு சிங்களவனிடம் போனான் கருணா பிறகு போனான் கடசியில் எல்லாரும் தான் கையை தூக்கிச்சினம்.

நன்றி நன்றி நன்றி

பிரபாகரனும் இதைத்தான் செய்திருக்கணும் என்று சொன்னதிற்கு...............

இடையில் காட்டிக்கொடுத்து எல்லாவற்றையும் கெடுத்தவனையும்

கடைசிவரை தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடி தலைமையின் வேண்டுகோளில் சரணடைந்தவனையும் ஒன்றாக கணித்ததற்கு......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறுதியாகவும் உறுதியாகவும் ஒரு விடயத்தின முன்வைக்க விரும்புகின்றேன் இது எமது புலமையை கட்டுகின்ற இடமாகவோ எமது வாதத் திறமைகைளை காட்டுகின்ற இடமாகவோ அல்லமு எமது முக குறிகளை போட்டு எமது நகைப்பினை காட்டுகின்ற இடமாகவோ நான் கருதவில்லை யாழ்களத்தில் நீண்ட காலத்தின் பின்னர் நான் நீண்ட நேரம் கருத்து எழுதிய பகுதி இதுவாகத்தனிருக்கும்..அதற்கு காரணம் யாரோ ஒரு முகம் தெரியாத ஒரு உறவின் கதறல் அவனி;ன் ஆதங்கம்.அதனை கேட்டதிலிருந்து அவனிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கிற ஒரு மன உழைச்சல் அதுதான் எனனை இத்தனை துரம் எழுதத்துண்டியது. அவனது கரலை வேண்டுமானாலும்; இங்கு கொண்டு வருகின்றேன்..ஆனால் இங்கு அனைவரிடமும் கேட்பது நான் உங்களிற்க விரோதியானால் என்னிடம் ஏதாவது தனிப்பட்ட கேபங்கள் இருக்குமானால் உங்கள் எச்சிலை என்மீது காறி உமிழுங்கள் அது எனக்கானதாக ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் அந்த உறவிற்காக ஏதாவது செய்யுங்கள். அதுதான் எனது இறுதி வேண்டுகோள்..அதையும் தவிர்த்து எனக்கு இரண்டு அடி அடித்தால்தான் உங்கள் கோபம் ஆத்திரம்.தீரந்து உங்கள் ஆண்மை வெளிப்படுமானால் அதற்கும் நான் தயார் உங்கள் விலாசத்தை கூறுங்கள் வந்து அடிவாங்கிவிட்டு போகிறேன்நேரடியாக அழைப்பவர்களிற்கு எனது தொ.பே இலக்கம்.0033611149470 நன்றி வணக்கம்.

அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் உங்கள் தொலைபேசிக்கு அடித்தால் எடுப்பீங்களோ இல்லா விட்டால் Answering machine க்குப் போகுமோ?

Link to comment
Share on other sites

மாற்றுக்கருத்து மாணிக்கம், ..... அங்கு ஒட்டி இருக்கும் ... டக்கிலசு/சித்தார்த்தன்/வரதராசு/ .... போன்றவர்களிடம் முதலில் இக்கேள்வியை கேளுங்கள்!!!!! அந்த பரதேசிகளினால் ஒட்டியிருந்து செய்ய முடியாததை நாம் இங்கிருந்து செய்ய சிங்களவன் விட்டுடுவன்???????????? அங்கு செய்கிரதென்ன ... ஏதாவது உந்த பரதேசிகளினால் கதைக்க கூட முடிகிறதோ?????????????

முதலில் மேன்மைதங்கிய அமைச்சர்களை பரதேசிகள் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பரதேசிகள் என்பது புலம்பெயர்ந்த எமக்கே பொருத்தமானது என்பதை அனைவரும் அறிவார். அந்தவகையில் நா க அரசு அவைகள் செயற்குழுக்களே பரதேசிகள் அமைப்புக்கள் என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. மேலும் அமைச்சர்கள் இன்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள். அது பற்றிய எந்தவித சிந்தனையும் இன்றி ஆகாயக் கோட்டைபோல் நா க அரசு அவை குழுக்கள் எல்லாம் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன மக்களுடனான தொடர்பு அவசியம் இல்லை என்றெண்ணி நிலமும் மக்களும் இல்லாமல் அரசு அமைத்து அடயாளப்போட்டி நடத்துவதற்கு விசிலடிப்பது முக்கியமா இல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுபவர்களை ஆதரிப்பது முக்கியமா?

சும்மா கொள்கை கோட்பாடு இப்படி எல்லாததையும் பற்றி போசாதீர்கள். உதெல்லாம் எமக்கு சரிவராது. ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருடனும் சேர்ந்து இலங்கையர்களாக வாழ்வது ஒன்றுதான் தாயகத்தில் வாழும் மக்களுக்கு ஏதுவானது. பிரிவினைவாதம் தனிநாடு தனி அரசு என்று மக்களை காடாத்தியது போதும் திரும்ப கெள்கை கோமணம் என்று இங்கிருந்து உசுப்பேத்தி அங்கிருப்பவனை காவுகொடுக்கமுடியாது. அதற்கு அவர்களும் தயாராக இல்லை. கொள்கையும் கோட்பாடும் ஒற்றுமை உள்ள இனங்களுக்கே அதன் வளர்ச்சிக்கு உதவும் எம்மைப்போன்ற கிலிசைகெட்ட இனத்துக்கு அழிவாகவே முடியும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். உங்கட இனக்கொள்கைகளை முதலில் சாதி மதம் பிரதேசவாதம் அனைத்தையும் களைந்து இனமாக ஐக்கியப்பட்டு அதிலிருந்து உருவாக்குங்கள். கொள்கை கோட்பாட்டை உருவாக்கும் தகுதியை முதலில் உருவாக்குங்கள் அதன்பிறகு அதைப்பற்றி பேசலாம்.

Link to comment
Share on other sites

நன்றி நன்றி நன்றி

பிரபாகரனும் இதைத்தான் செய்திருக்கணும் என்று சொன்னதிற்கு...............

இடையில் காட்டிக்கொடுத்து எல்லாவற்றையும் கெடுத்தவனையும்

கடைசிவரை தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடி தலைமையின் வேண்டுகோளில் சரணடைந்தவனையும் ஒன்றாக கணித்ததற்கு......................

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. இந்த இனத்துக்குள் தியாகத்தையும் துரோகத்தையும் பிரித்து இனம்காணமுடியாது. நேற்று கருணா தலமையில் சிங்கள இராணுவத்திற்கெதிரான போரில் சண்டைபிடித்து தமது உயிரை அர்பணித்த போராளிகள் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றார்கள் ஆனால் கருணா இன்று துரோகி அதைப்போல் கடசியில் கைய தூக்கிய வழிநடத்துனர்கள் பலரும் இருக்கின்றார்கள். நான் பலமுறை முன்பு குறிப்பிட்டது தான் புலப்பெயர்வுகூட ஒரு துரோகம்தான். இந்த இனத்தில் துரோகம் இயல்பானது. துரோகம் அற்தமற்றது. டக்ளஸ் கருணாவுக்கு போராட்ட அமைப்புகள் சம்மந்தப்பட்டு பின் அரசுடன் இணைந்ததால் அதை துரோகம் என்கின்றோம். ஆனால் அரச உத்தியோகங்களை அனுசரித்து அரசுடன் ஒட்டியவர்களே இந்த சமூகத்தை வழிநடத்திய பெரும்பான்மை புத்திஜீவிகள். தியாகி துரோகி என்பதைக் கடந்து மதவாதம் பிரதேசவாதம் என்பதைக் கடந்து நாமெல்லாம் தமிழர்கள் என்ற நிலையை நோக்கியே நகரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கோய் தோல்விக்கு முன்னர் ஒன்றும் தோல்விக்கு பின்னர் இன்னொன்றும் என்றிருந்தால்.. எத்தனையோ போராட்டங்களை கைவிட்டுவிட்டு தலைவர் எப்பவோ சரணடைந்து தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போயிருக்கலாம். நீங்களும் ஜேர்மனியில் வாழ முடியாமல் போயிருக்கலாம். வன்னியில் மாடு மேய்த்துக் கொண்டும் இருந்திருக்கலாம்.

ஆனால் விடுதலை என்பது உங்கள் போன்றோரின் பசிக்கு போடும் உணவு போன்றதல்ல. இழப்புக்கள் நீண்ட போராட்டங்கள் இன்றி விடுதலை என்பது சாத்தியமில்லை. அதற்காக எனியும் ஆயுதத்தால் அழிவுகளை தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல அர்த்தம். ஆனால்.. தோல்விகளுக்காக விடுதலை என்ற மாவீரர்களின் மக்களின் இலட்சியக்கனவுகளை ஒரு நொடியில் புதைத்து விடும் துரோகத்தை செய்யவும்.. அதை வைச்சு எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவும் நாம் அனுமதிக்கமாட்டோம்.

நிச்சயம்.. மாவீரர்களின் கனவு வெல்லும் வரை அவர்களின் பெயரை போராட்ட இலட்சியத்தை பாதையை பயணிப்பை காட்டி மற்றவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை என்ற இழி நிலை ஓட்டத்தை ஓட்ட அனுமதிக்க முடியாது. அவர் முன்னாள் போராளியாக இருக்கலாம் விடலாம். இன்னாளில் அவர் போராளி அல்ல. இலட்சியத்தை கைவிட்டவர் போராளியாக இருக்க முடியாது. அதை எதிரியிடம் சொல்லி பொதுமன்னிப்பு பெற்றுக் கொண்டு வாழட்டும். அது பிரச்சனை அல்ல. ஆனால் உண்மைப் போராளிகளின் மாவீரர்களின் இலட்சியத்தை குறை பேசவும் அதை வைச்சு சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவும் எவருக்கும் அருகதை கிடையாது. அதற்கு நாங்களும் கருத்தியல் ரீதியில் கூட அனுமதிக்க மாட்டோம். :lol:

தம்மை வளர்த்துக்கொள்ள போராட்டம் எல்லாருக்கும் தேள்வையாக இருக்கிறது, போராட்டத்தை காட்டி வயிறு வளர்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேணும். இறுதியில் எரிந்து போக்காகூடிய வயிறை வளர்க்க ஆயிரம் ஆயிரம் போராளிகளை காரணம்காட்டுவது கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்மை வளர்த்துக்கொள்ள போராட்டம் எல்லாருக்கும் தேள்வையாக இருக்கிறது, போராட்டத்தை காட்டி வயிறு வளர்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேணும். இறுதியில் எரிந்து போக்காகூடிய வயிறை வளர்க்க ஆயிரம் ஆயிரம் போராளிகளை காரணம்காட்டுவது கேவலமானது.

சந்தடி சாக்கல் சவுக்கெடுத்து விளாசுகின்றீர்கள்.

அதுசரி இப்பவும் போராட்டம் இருக்கின்றதா. போராட்டம் என்ற சொல்லைக் கேட்டுப் "போர்" அடித்துவிட்டது. ஏதாவது வேறு சொல்லைக் கண்டுபிடித்தால் நல்லது.

Link to comment
Share on other sites

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?
:lol:

ம்ம் இப்படி ஏதும் தலைப்பு போட்டால் தான் நாமும் சேர்ந்து நாறுவம் என்று போட்டிங்களோ?

Link to comment
Share on other sites

மேலும் அமைச்சர்கள் இன்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள். அது பற்றிய எந்தவித சிந்தனையும் இன்றி ஆகாயக் கோட்டைபோல் நா க அரசு அவை குழுக்கள் எல்லாம் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன மக்களுடனான தொடர்பு அவசியம் இல்லை என்றெண்ணி நிலமும் மக்களும் இல்லாமல் அரசு அமைத்து அடயாளப்போட்டி நடத்துவதற்கு விசிலடிப்பது முக்கியமா இல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுபவர்களை ஆதரிப்பது முக்கியமா?

அச்சச்சோ ... முடியல ... அவயல் அங்கை மக்களை சேர்ந்து கட்டிப் பிடித்து அரவணைக்கினமாம்???? முடிந்த உதவிகளை செய்கினமாம்?????? ......... அண்ணை உந்த செய்யினமோ/இல்லையோ, அவையளுக்கு சொல்லுங்கோ, ... மத்தியில் கூட்டாட்சி/மாநிலத்தில் சுயாட்சியோ???? இன்னும் கொஞ்சப்பேர் அங்கை தனிநாடும் பிரகடனப்படுத்தினவையள்???? இன்னும் கொஞ்சம் சமஸ்டியாம்???? ... அதுகளை செய்ய/கேட்க சொல்லுங்கோ!!!!! உந்த இண்டையான் இந்த கட்டிப்பிடித்து அரவணைப்புகள் தற்காலிகமானவை!!! நாளை சிங்களவன் உதை பிடுங்கி எறிய நாளிகைகள் செல்லாது!!!! அப்போ உந்த கட்டிப்பிடுத்து அரவணைக்கிறவைகளால் அதுகளை நிற்பாட்டச் சொல்ல முடியுமோ????? இல்லை தடுக்க முடியுமோ???? ... சில தினங்களுக்கு முன்னுக்கும் யாழில் டக்கிலசு அட்காசமாக படத்துக்கு போஸ் கொடுத்து நடத்தப்பட்ட மீள் குடியேற்றம் ஒன்று திரும்ப அடித்து துரத்தப்பட்டு விட்ட செய்தி பார்க்கேலையோ?????

... உந்த கட்டிப்பிடிக்கிறவைகளைப் பற்றி இன்னொரு கதை ... லண்டன் கேபியின் பிரமுகர் பாண்டர் சொன்னது ... உவங்கள் டக்கிலசுகளும், பிள்ளையான்களும் என்னத்தைச் செய்தாலும், அதிலை நல்லதுகள் இருந்தாலும், சனம்ங்கள் அவங்களை நாய்க்கு கூட மதிக்குதுகளில்லை .... அண்ணை, உது உண்மையான வசனம்!!! ஏன்????????? ...... உவர்கள் செய்தவைகளை மறங்குங்களா?????????

Link to comment
Share on other sites

சும்மா கொள்கை கோட்பாடு இப்படி எல்லாததையும் பற்றி போசாதீர்கள். உதெல்லாம் எமக்கு சரிவராது. ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருடனும் சேர்ந்து இலங்கையர்களாக வாழ்வது ஒன்றுதான் தாயகத்தில் வாழும் மக்களுக்கு ஏதுவானது. பிரிவினைவாதம் தனிநாடு தனி அரசு என்று மக்களை காடாத்தியது போதும் திரும்ப கெள்கை கோமணம் என்று இங்கிருந்து உசுப்பேத்தி அங்கிருப்பவனை காவுகொடுக்கமுடியாது. அதற்கு அவர்களும் தயாராக இல்லை. கொள்கையும் கோட்பாடும் ஒற்றுமை உள்ள இனங்களுக்கே அதன் வளர்ச்சிக்கு உதவும் எம்மைப்போன்ற கிலிசைகெட்ட இனத்துக்கு அழிவாகவே முடியும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். உங்கட இனக்கொள்கைகளை முதலில் சாதி மதம் பிரதேசவாதம் அனைத்தையும் களைந்து இனமாக ஐக்கியப்பட்டு அதிலிருந்து உருவாக்குங்கள். கொள்கை கோட்பாட்டை உருவாக்கும் தகுதியை முதலில் உருவாக்குங்கள் அதன்பிறகு அதைப்பற்றி பேசலாம்.

அண்ணை, நீங்கள் என்ன மேலேயிருந்து திடீரென பூமியிலை சஞ்சரித்திருக்கிறீங்கள் போல கிடக்குது??????? ... சேர்ந்து வாழப்போகிறீர்க|ளோ???? ... வாழ விடுவான், கட்டிப்பாக?????? அண்ணை அப்படி உங்களுக்கு ஏதும் தந்து மரியாதையாக வாழ விட்டால் நானும் வருகிறேன், இங்கைத்தையான் வாழ்க்கைக்கு மூட்டை கட்டி விட்டு!!!!!! ... ஆனால் உங்கடை கோவணத்தையும் கழட்டி உரிந்தெடுத்துப் போட்டுத்தான் சிங்களவன் நிற்பான்!!!

... அண்ணா, உங்கட உசுப்பேத்துகிறது!!! விளங்கவில்லையண்ணா???? ... நாங்கள் 48இலிருந்து தொடங்கி 78க்கு பிந்தானன்னா, உந்த ஆயுத போராட்டம் எண்டதை கண்டனாங்கள்!! அதுக்கு முன்னுக்கு உந்த உசுப்பேத்தலுகளை தொடங்கியது தளபதி அமிரும், ஆனந்தசங்கரிகளும் தானன்னா!! ... பின்னுக்கு ஆயுதப்போராட்டம் தொடங்கினாப்பிரகும் எல்லோரும் நல்லாக, இங்கிருந்தல்ல அங்கிருந்து ஏற்றியவர்கள்!! அது பின் இயக்க அழிப்புகளில் முடிய .. அதுவும் எல்லோரும் எல்லாரையும் அழிக்க முற்பட்டவைகள்தான், அதுக்கு மேலுக்கு உள்ளுகளுக்கே ஆயிரக்கணக்கில் போட்டுத்தள்ளினார்கள், ... ஆனால் புலி முந்தீட்டுது!!! இப்ப புலியை மட்டும் உசுப்ப்த்துகிறதென்று முடித்துப் போட்டீங்கள்???!!!

முதலில் எமக்கிடையே எப்போ மதப்பிரிவினைகள், பிரதேச பிரிவினைகள் தோன்றியதென்பதை அறிந்து விட்டு எழுதுங்கோண்ணா!!!!!

Link to comment
Share on other sites

அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் உங்கள் தொலைபேசிக்கு அடித்தால் எடுப்பீங்களோ இல்லா விட்டால் Answering machine க்குப் போகுமோ?

சின்னப்புள்ளைத்தனமான கேள்வியாய் உள்ளது. ஒருக்கால் இந்த இலக்கத்திற்கு அடித்து அதை தெரிந்து கொள்வது..! :rolleyes: நான் பல தடவைகள் இந்த இலக்கத்தில் தொடர்புகொண்டு சாத்திரி அண்ணாவுடன் கதைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

தம்மை வளர்த்துக்கொள்ள போராட்டம் எல்லாருக்கும் தேள்வையாக இருக்கிறது, போராட்டத்தை காட்டி வயிறு வளர்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேணும். இறுதியில் எரிந்து போக்காகூடிய வயிறை வளர்க்க ஆயிரம் ஆயிரம் போராளிகளை காரணம்காட்டுவது கேவலமானது.

அதெண்டா மெத்தச்சரி. போராட்டம் ??????? ஒரு புனிதமான வார்த்தையை நம்பி அழிஞ்ச ஒருதனுக்கு கொடுக்கும் கவுரவம் நன்றாயேயுள்ளது.

இறுதியில் எரிந்து போற வயிற்றுக்கு நீங்கள் சாப்பிடாமல்தானே இருக்கிறியள். இல்லது எரிஞ்சு போற வயிற்றுக்காக நீங்கள் வேளை தப்பாமல் எல்லாம் குடுக்க வேணும். ஆனால் தன்னையே இிழந்து தாயகத்தை நேசித்தவனெல்லாம் எரியிற வயிற்றுக்காக வாழவேகூடாது. வாழ்க உங்கள் போராட்டமும் கொள்கையும்.

சொந்தச் சகோதரர்கள் துனப்பத்தில் சாதல் கண்டு சிந்தையிரங்காரடி கிளியே....எனப்பாடிய மீசைக்கவிஞா எல்லாம் தெரிஞ்சுதானோ எழுதிவைத்தாய் இப்படி??!!!!

சந்தடி சாக்கல் சவுக்கெடுத்து விளாசுகின்றீர்கள்.

அதுசரி இப்பவும் போராட்டம் இருக்கின்றதா. போராட்டம் என்ற சொல்லைக் கேட்டுப் "போர்" அடித்துவிட்டது. ஏதாவது வேறு சொல்லைக் கண்டுபிடித்தால் நல்லது.

இதென்ன கதை போர் ஆடிக் களைத்துப் போயுள்ளோம் நீங்கள் இதுக்கை எங்கடை போராட்டம் பற்றி கொமன்ற் அடிக்கிறியள்.

Link to comment
Share on other sites

அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் உங்கள் தொலைபேசிக்கு அடித்தால் எடுப்பீங்களோ இல்லா விட்டால் Answering machine க்குப் போகுமோ?

14 வருசமாய் இதுதான் என்னுடைய இலக்கம் தாராளமாய் அடிக்கலாம்..சிலநேரம் தகவல் பெட்டிக்கு போனாலும் உங்கள் பெயர் மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கத்தினை பதிவு செய்தால் நான் மீண்டும் தொடர்பு கொள்வேன்.. எதற்கும் முதலில் ஒரு தடைவை அழைத்துப்பார்த்துவிட்டு இங்கு வந்து இந்தக் கேள்வியை கேட்டிருக்கலாம்.காரணம் நான் ஒழித்திருந்து கருத்து எழுதுபவன் அல்ல. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.