Jump to content

12வயதில் கட்டாயமாக பிடிக்கப்பட்டவள் முள்ளிவாய்க்காலிலிருந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து…


Recommended Posts

இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. துயரங்களை மறைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தைச் செலுத்திய அதேவேளை களத்தயார்படுத்தலிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டாள். கடைசியில் களம் அவசரமாய் அழைத்து ஆயுதங்களோடு காவலிருந்தாள். 2009 தைமாதம் முதுகுப்பகுதியில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயக்கம் அறுந்து ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து ஒடுங்கிப்போனாள். 2009மே பலிகளின் நடுவே உயிரோடு மீண்டவர்களுடன் இவளும் உயிர் மீண்டாள். இன்று 2010 முடியும் காலம் படுக்கைப்புண்ணோடு எப்போதாவது வந்து பார்க்கும் அம்மா வரும்வரை காத்திருந்து அழுதுவிட்டுப் படுக்கைப்புண்ணோடு அவலப்படுகிறாள். வாழும் வயதில் கல்வி கற்கும் வயதில் கனவுகள் பறிக்கப்பட்டு இன்று முடமாய்ப்போன ஒரு மகளின் குரல் இது.

இந்த ஒலிப்பதிவை கேட்க இணைப்பின் மேல் அழுத்தவும்.

Link to comment
Share on other sites

இந்த 18 வயதுப்பெண்ணுக்கு ஒரு உதவிக்கரம் வேண்டும். படுக்கைப்புண்ணின் தாக்கம் சிலவேளை உடலிலிருந்து அங்கங்களையும் எடுக்கும் நிலமையில் இருக்கிறாள். மாதாந்த உதவியொன்று இலங்கைரூபா ஆயிரம் யாராவது கொடுக்க முடிந்தால் அவள் வாழும் மீதி நாட்களில் அது பேருதவியாக இருக்கும்.

இது ஈரமுள்ள இவர்களும் ஒரு காலத்துப் போராளிகள் என்பதை மறக்காத அன்பர்களின் பார்வைக்காகவும் உதவிக்காகவும் இங்கு பதவிடுகிறேன்.

விசைப்பலகை வீரங்கள் இவளையும் துரோகியாக்கலாம் இல்லை துரோகிதானே....இதைக் கொண்டு வந்தமைக்காக என்மீது கோபித்து திட்டவிரும்புகின்றவர்களும் தாராளமாக திட்டலாம் பட்டங்களும் தரலாம். ஆனால் வாழும் வரை இவள் சாப்பிட உதவி கிடைக்குமாயின் அதற்காக சாகும்வரை துரோகியாக வாழ்ந்துவிடுகிறேன்.

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

உதவ அல்லது திட்ட இல்லது துரோகிப்பட்டம் தர தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Link to comment
Share on other sites

நான் மாதாந்தம் பணம் தர பொறுப்பெடுக்கின்றேன் சாந்தி... விவரங்களை தனிமடலில் நாளை போடுகின்றேன்

Link to comment
Share on other sites

உங்கள் பணி தொடர இந்த அரசியல் களத்தில் குதிக்க வேண்டாமென பணிவாக கேட்டுக்கொள்கின்றேன்.

எமது அரசியல் உங்களை விரக்திக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.நாங்கள் இப்படி ஒரு அமைப்புகள் ஒன்றிலுமில்லாதவர்கள் அடிபட்டாலும் பரவாயில்லை.

நிழலிக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நான் மாதாந்தம் பணம் தர பொறுப்பெடுக்கின்றேன் சாந்தி... விவரங்களை தனிமடலில் நாளை போடுகின்றேன்

நன்றிகள் நிழலி. ஏற்கனவே நீங்கள் உதவியதில் இவளுக்கும் இன்னொருவருக்கும் பிரித்து கொடுத்துள்ளோம். இனி அதை நிரந்தரமாய் இந்தப்பிள்ளைக்கே கொடுப்போம்.

உங்கள் பணி தொடர இந்த அரசியல் களத்தில் குதிக்க வேண்டாமென பணிவாக கேட்டுக்கொள்கின்றேன்.

எமது அரசியல் உங்களை விரக்திக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.நாங்கள் இப்படி ஒரு அமைப்புகள் ஒன்றிலுமில்லாதவர்கள் அடிபட்டாலும் பரவாயில்லை.

நிழலிக்கும் நன்றிகள்.

இது எனது மின்னஞ்சல் - rameshsanthi@gmail.com உங்கள் மின்னஞ்சல் முகவரியை போட்டுவிடவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.