Jump to content

களமாடிய பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடுத்த அம்மா


Recommended Posts

அம்மாவும் அம்மாவின் குடும்பமும் நாட்டுக்காகச் செய்த தியாகங்கள் அளப்பரியயவை. காலநேரமின்றி களமாடிய பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்துக் காவலிருந்து தனது கடமைகளைச் செய்த அம்மாவின் பிள்ளைகள் களங்களுக்குப் போனபோது அவர்களுக்காயும் அம்மா சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். போராளிகளுடன் வாழ்ந்த அம்மாவின் பிள்ளைகளின் துணைகளும் போராளிகளாக குடும்பமே கொள்கைக்காக தங்கள் சக்திக்கு மேற்பட்டு எல்லாவற்றையும் கொடுத்தார்கள். 2005 அம்மாவின் மகள் ஆயுதக்குழுவொன்றினால் கிழக்குமாகாணத்தில் கடத்தப்பட்டாள். அந்த மகளின் துணைவனைக் கொண்டுவரும்படி அம்மா வயர்களால் தாக்கப்பட்டாள். வலிமை மிக்க அம்மாவின் உறுதி மருமகனைக் காப்பாற்றியது. வன்னியில் களமுனையில் நின்ற மருமகனை யாரும் கொள்ளையிடாமல் அம்மா கொள்கைக்காக கடத்தப்பட்ட மகளைக்கூட தேடவில்லை. சில காலங்களில் சில முயற்சிகளால் காப்பாற்றப்பட் மகளை வன்னிக்கு மருமகனிடம் அனுப்பி வைத்தார். நிலமைகள் இறுகி போக்குவரத்துகள் தடைப்பட்டு அம்மாவின் பிள்ளைகளை அம்மா காணமுடியாது போயிற்று. பிள்ளைகள் பற்றி எதுவும் தெரியாத அம்மாவை நம்பிய 2பிள்ளைகளுக்காக அம்மா தனக்கொரு சொந்தத்தொழிலை விரும்பும் அம்மாவின் துயர்களிலிருந்து அம்மாவின் குரலில்….

ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்தவும்.

Link to comment
Share on other sites

இந்தத்தாய் ஒரு உணவகத்தை நடத்த விரும்புகிறார். உணவகத்தை ஆரம்பித்து அதற்கான பொருட்களை போட்டு தொடங்க இலங்கைரூபா 40000ரூபாவை கேட்டுள்ளார். இவ்வுதவியைக் கடனுதவியாகவே கேட்டுள்ளார். மாதாந்தம் தனது வருவாயிலிருந்து பகுதிபகுதியாய் பிரித்துக் கட்டி முடிப்பதாய் உறுதியளித்துள்ளார். தனது பேரப்பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் தன் மிஞ்சிய பிள்ளைகளுக்கு வாழ்வு அமைக்க வேண்டுமென்ற கனவோடு உதவியை எதிர்பார்க்கிறார்.

கருணையுள்ளம் படைத்தோரிடம் கையேந்திக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் அம்மாக்கள் எமக்காக எத்தனை துயர்பட்டார்களோ அத்தனை துயர்களையும் சுமக்கும் இந்த அம்மாவுக்கு ஒரு ஓய்வு கொடுப்பேமா உறவுகளே !!!!

Link to comment
Share on other sites

இந்த அம்மாவுக்கு கள உறவு அகூதா அவர்கள் 20000ரூபாவை பங்களிக்க முன்வந்துள்ளார். மிகுதியை வேறு யாராவது உறவுகள் பொறுப்பேற்றால் உதவியாக இருக்கும்.

அகூதாவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் செய்வதுபோல் தெரியவில்லை

மீதியை நான் தருகின்றேன்

அந்த அம்மாவின் திட்டத்தை நிறைவு செய்யுங்கள்

சாத்திரி அவர்களை தொடர்பு கொள்ளச்செய்யுங்கள்

Link to comment
Share on other sites

ஒருத்தரும் செய்வதுபோல் தெரியவில்லை

மீதியை நான் தருகின்றேன்

அந்த அம்மாவின் திட்டத்தை நிறைவு செய்யுங்கள்

சாத்திரி அவர்களை தொடர்பு கொள்ளச்செய்யுங்கள்

விசுகு, என் மச்சான் ஒருவன் தான் இப்படியானவர்களுக்கு உதவ விரும்புவதாக அண்மையில் கூறினான்... அவனிடம் இதைப் பற்றி கதைத்து பார்கின்றேன்... அவனது பதிலை பார்த்த பின் முடிவு எடுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாத இறுதிமட்டும் பொறுக்க முடியுமாயின் 100 ஈரோக்களை என்னால் தரமுடியும்.

Link to comment
Share on other sites

விசுகு அவர்கள் தொடரச்சியாய் பல உதவிகளை நேசக்கரம் ஊடாக தாயகத்து உறவுகளிற்கு உதவியிருக்கிறீர்கள் அதே நேரம் குமாரசாமி உங்கள் தனிப்பட்ட சுமைகளும் எனக்கு தெரியும்..எனவே சிறிது நாட்கள் பொறுத்திருங்கள் வேறு உதவிகள் யாரிடமிருந்தாவது கிடைக்கப்பெறாவிட்டால் உங்களுடன் தொடர்பு கௌ;கிறேன்;..உங்கள் உடனடியான ஆதரவு கரங்களை என் கண்களில் ஒற்றிக்கெண்டபடி நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

விசுகு, என் மச்சான் ஒருவன் தான் இப்படியானவர்களுக்கு உதவ விரும்புவதாக அண்மையில் கூறினான்... அவனிடம் இதைப் பற்றி கதைத்து பார்கின்றேன்... அவனது பதிலை பார்த்த பின் முடிவு எடுங்க

அகூதா அவர்கள் நேற்றைய தினம் உடனடியான தனது பங்களிப்பான 20000ரூபாவை அனுப்பிவிட்டார் அம்மாவின் கணக்கிற்கு. மற்றும் கள உறவு தமிழன் அவர்கள் இன்று 100கனடிய டொலர்களை அனுப்பியுள்ளார். மொத்தம் இதுவரை 30000ரூபா கிடைக்கும். மீதி 10000ரூபாவை நிழலி முயற்சி செய்யுங்கள். உங்கள் மச்சானின் முடிவைப் பார்த்து மீதி தொகையை ஒழுங்கு செய்வோம்.

ஒருத்தரும் செய்வதுபோல் தெரியவில்லை

மீதியை நான் தருகின்றேன்

அந்த அம்மாவின் திட்டத்தை நிறைவு செய்யுங்கள்

சாத்திரி அவர்களை தொடர்பு கொள்ளச்செய்யுங்கள்

பெரிய திட்டமொன்றை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளோம். அதையும் தாங்கி இதிலும் பங்களிக்க அழைப்பது மனசுக்கு கஸ்ரமாக இருக்கு விசுகு. கட்டாயம் யாராவது மீதி 10000கட்டாயம் செய்வார்கள். சற்று பொறுத்திருப்போம்.

இந்த மாத இறுதிமட்டும் பொறுக்க முடியுமாயின் 100 ஈரோக்களை என்னால் தரமுடியும்.

உங்கள் தனிப்பட்ட சுமைகளுக்கு நடுவில் சிரமப்படுவது தெரியும். ஆகவே இதில் பங்கெடுக்க முடியவில்லையென யோசிக்க வேண்டாம் குமாரசாமி. அடுத்தடுத்த திட்டங்களில் உங்கள் உதவியை செய்யுங்கள்.

சில நாள் பொறுத்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் நான் செய்வதற்கு என்னைத்தயார் நிலையில் வைத்திருக்கின்றேன்

ஆனால் அந்த அம்மாவின் திட்டத்தை விரைவில் முடிப்போம்

அதுதான் முக்கியம்

நன்றி நிழலி மற்றும் குமாரசாமியண்ணை தங்களது புரிதலுக்கும் முயற்சிக்கும்...

Link to comment
Share on other sites

நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் நான் செய்வதற்கு என்னைத்தயார் நிலையில் வைத்திருக்கின்றேன்

ஆனால் அந்த அம்மாவின் திட்டத்தை விரைவில் முடிப்போம்

அதுதான் முக்கியம்

நன்றி நிழலி மற்றும் குமாரசாமியண்ணை தங்களது புரிதலுக்கும் முயற்சிக்கும்...

மச்சானிடம் கேட்டேன், தான் அடுத்த மாதம் ஊருக்கு போவதால் நேரடியா சென்று உதவ விருப்பமாம் என்று சமாளிகின்றான்..}(இவன் போராட்ட காலங்களில் நிறைய உதவி செய்து பிறகு அவர்கள் தன்னிடம் காசு வாங்கியவர்கள் அதனை தாமே வைத்திருந்து ஏமாத்தி விட்டனர் என்று வெறுப்பில் இருப்பவன்)

சாந்தி / சாத்திரி, இந்த மாதக் கடைசி வரைக்கும் பொறுக்கலாம் என்றால், நான் மிகுதி 10000 இனைத் தருகின்றேன்

Link to comment
Share on other sites

சாந்தி / சாத்திரி, இந்த மாதக் கடைசி வரைக்கும் பொறுக்கலாம் என்றால், நான் மிகுதி 10000 இனைத் தருகின்றேன்

நிழலி ,

இணையவன் 50,66€ இன்று அனுப்பியுள்ளார்.

தமிழன் கனடா - 100கனடியடொலர்கள்.

அகூதா - 20000இலங்கை ரூபா

இணையவன் - 50,66€

இவர்கள் 3பேரின் உதவியும் இந்த இணைப்பில் உள்ள அம்மாவுக்கு சுயதொழிலுக்கான ஊக்குவிப்பாக வழங்குகிறோம்.

அடுத்த திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் நிழலி. உங்கள் முயற்சிக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் கனடா - 100கனடியடொலர்கள்.

அகூதா - 20000இலங்கை ரூபா

இணையவன் - 50, 66€

தங்கள் மூவருக்கும் எமது நன்றிகளும் ஆசீர்வாதங்களும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.