Jump to content

நினைவில் நின்றவை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகளில் அவள் அண்டங்காக்கா

பாடல்களில் அவள் ஒப்பாரி

ஓஓஓஓஓஓ......

பறவைகளில் அவள் அண்டங்காக்கா

பாடல்களில் அவள் ஒப்பாரி

கனிகளிளே அவள் ஞானக்கனி

காற்றினிலே அவள் சுறாவளி

_________________

பொன்ஸ்சிட்ட வாங்கிறது இதுக்குத்தானோ..?? :wink: :P

எனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே?? ஏன்.? :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 205
  • Created
  • Last Reply

பொன்ஸ்சிட்ட வாங்கிறது இதுக்குத்தானோ..?? :wink: :P

எனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே?? ஏன்.? :wink: :P

ஏன் நீங்களும் கவிஞர் தானே ,ஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களை வருணிக்க என்ன கிடக்கு. வசமாய் திட்டித்ததீர்க்கத்தான் நிறையக்கிடக்கு. அதையே முழுசாய் செய்து முடிக்கேல்லை.

ஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே?
Link to comment
Share on other sites

ஆண்களை வருணிக்க என்ன கிடக்கு. வசமாய் திட்டித்ததீர்க்கத்தான் நிறையக்கிடக்கு. அதையே முழுசாய் செய்து முடிக்கேல்லை.

அப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்?

பிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு?

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே?? ஏன்.?

இதுக்கு பதில் சொன்னா கட்டாயம் முகத்தானுக்கு கிழிதான் விழும் பராவாயில்லை உண்மையைச் சொல்லத்தானே வேணும் பெண்களுக்கு ஆண்களின் பாத்தாலே பொறாமை என்ன ஜாலியா திரியிறாங்கள் எண்டு இதை புகழ்ந்து வேறை வர்ணிக்க வேணுமா? ? அதோடை ஆண் கவிஞர்கள் எல்லாம் நல்லா பொய் பேசத் தெரிந்தவர்கள் (இதுக்காண்டி பெண்கள் உண்மை பேசுவது எண்டில்லை)

Link to comment
Share on other sites

ஆக மொத்தத்தில் ஆண்கள் ஜாலியாக திரியிறியள், பெண்கண் திரியவில்லை..அது தானே முகம்ஸ். இப்ப தான் ஒரு நல்ல விடயத்தை சொல்லி இருக்கியள்.

என்டாலும் பொன்ஸ் ஒரு பெரிய பொறுமைசாலி தான் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்?

பிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு?

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

ஆண்களில் கோவம் வேறை பிரச்சனை. இப்ப ஆண்களைச்சரி பெண்களைச்சரி வருணிக்கச்சொல்லி அழேல்ல. கண்ணே மணியே. தேனே மானே என்று நாட்டுக்கட்ட உருட்டுக்கட்ட என்று. வெறும் சடப்பொருள்களுக்கும். அழுகுப்பொருட்களுக்கும் பெண்ணை உமிச்சு. அவளை அழகுப்பதுமையாகவும் பேதையாகவும் கவிதைகளில் வைச்சிருக்காங்க. பெண்ணே என்று விழிச்சு எழுதிறவங்க குறைவு. இப்படித்தான் நிலா வண்ணம் மயில் என்று எதையாவது சொல்லிப்புருடா விடுறார்கள் அது தான் ஆதங்கம். பெண்களை வருணிச்சு அழகுப்பதுமைகள் ஆக்கிறதே உடன்பாடில்லை இதில நாங்கள் ஆண்களை வருணிக்கவா.?? :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு பதில் சொன்னா கட்டாயம் முகத்தானுக்கு கிழிதான் விழும் பராவாயில்லை உண்மையைச் சொல்லத்தானே வேணும் பெண்களுக்கு ஆண்களின் பாத்தாலே பொறாமை என்ன ஜாலியா திரியிறாங்கள் எண்டு இதை புகழ்ந்து வேறை வர்ணிக்க வேணுமா? ? அதோடை ஆண் கவிஞர்கள் எல்லாம் நல்லா பொய் பேசத் தெரிந்தவர்கள் (இதுக்காண்டி பெண்கள் உண்மை பேசுவது எண்டில்லை)

முகம்ஸ் இது தானே வேணாங்கிறது உங்கட வீட்டை தலைகீழா எல்லோ நடக்கு. அது இருக்கட்டும் உங்கட கவிஞரைவை ஏன் பொய் பொய்யாப்பேசினம். எப்ப உண்மையைப்பேசி உண்மைக்காய் உண்மையாய் வாழப்போயினம். மானே தேனே என்றால் மயங்கிறது அந்தக்காலம் இப்ப இப்படி மானே என்றால் உசாராவிடுவினம் பெண்கள் தேனே என்றால் படு உசார். தெரியுமோ..?? உண்மையான அன்பிற்கு இடையில இப்படியான போலிகள் எதுக்கு பொய்கள் எதுக்கு.. :wink: :P

Link to comment
Share on other sites

அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. பாடல்களை தந்த அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

பிள்ளை நீங்கள் என்ன சொன்னாலும் போலிகளை விரும்பிற பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் அதுதான் புதுபுது கவிஞர்கள் திரையுலகில் உண்டாவதற்குக்காரணம் அதுசரி உண்மையான அன்புக்கிடையில் பொய் தேவையில்லை எண்கிறீங்கள் நான் அறிஞ்சமட்டிலை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேணுமெண்டால் 50 வீதம் தன்னும் மனுசிட்டை பொய் சொல்லவேணுமாம் (உதாரணத்துக்கு சாப்பாட்டில் கறி பச்சை தண்ணியா இருந்தாலும் சூப்பர் எண்டு சொல்லனும் தப்பித்தவறி உண்மையைச் சொன்னா என்ன நடக்குதெண்டு வீட்டை ஒருக்கா வந்து பாருங்கோ தெரியும்......)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளை நீங்கள் என்ன சொன்னாலும் போலிகளை விரும்பிற பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் அதுதான் புதுபுது கவிஞர்கள் திரையுலகில் உண்டாவதற்குக்காரணம் அதுசரி உண்மையான அன்புக்கிடையில் பொய் தேவையில்லை எண்கிறீங்கள் நான் அறிஞ்சமட்டிலை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேணுமெண்டால் 50 வீதம் தன்னும் மனுசிட்டை பொய் சொல்லவேணுமாம் (உதாரணத்துக்கு சாப்பாட்டில் கறி பச்சை தண்ணியா இருந்தாலும் சூப்பர் எண்டு சொல்லனும் தப்பித்தவறி உண்மையைச் சொன்னா என்ன நடக்குதெண்டு வீட்டை ஒருக்கா வந்து பாருங்கோ தெரியும்......)

முகம்ஸ் இப்படி யார் சொன்னாங்க..?? ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார். அதே மாதிரித்தான் கணவனும். கறி பச்சைத்தண்ணியா இருந்தா அதை நீங்கள் சுட்டிக்காட்டினா அவங்க ஏற்றுப்பாங்க அது எப்ப தெரியுமோ..?? நீங்களும் அடுப்படியில அவாவைப்போல நின்று சமைச்சு சரிசமனாய் நீங்களும் வீட்டு வேலையைச்செய்தா ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டுவிட்டு நீங்க முதலாளி அவங்க தொழிலாளி என்ட மாதிரி அவங்க வீட்டு வேலைகளைச்செய்ய நீங்க காலாட்டீட்டிருந்தா இது தான் நிலை..?? நீங்கள் ஆகா ஓகோ சூப்பர் என்று பாராட்டின கறியை அவங்க சாப்பிடத்தானே போறாங்க பிறகென்ன..?? சோ சின்னச்சின்ன விசயங்களுக்கு கூட அன்பு உள்ளவங்கிட்ட அன்பானவங்கிட்ட பொய்வார்த்தைகள் தேவையில்லை. குறைகளை சுட்டிக்காட்டிற அதேவேளை நிறைகளையும் பாராட்டுங்க அப்ப அவங்களுக்கு சந்தோசம் தானே. அதைவிட்டுவிட்டு கறி எவ்வளவு நல்லாய் இருந்தாலும் கம்முண்ணு மூக்குப்படிக்க சாப்பிட்டுவிட்டு நல்லாய் இல்லாட்டா முணுமுணுத்தா கஸ்டப்படுவினம் தானே?? :wink: :P

Link to comment
Share on other sites

முகத்தார் நீங்க சொல்கின்றது சரிதான். உண்மையில் ஆண்களைப் பொய் பேச வைக்கின்றதே பெண்கள் தான். பொதுவாக ஆண்கள் உந்த வர்ணிப்புகளுக்கு மயங்குவதில்லை. ஆனால் பெண்கள் உடனேயே கவிந்துடுவாங்க. முகத்தார் உங்க ஆத்துக்காரியோடை எனிமெல் சண்டை வந்தால் கோபத்திலேயும் நீர் அழகாகத்தான் இருக்கின்றீர் என்று சொல்லிப் பாருங்க. அப்புறம் ஹி ஹி ஹி ...........................வெட்கமாகவிருக்கு

Link to comment
Share on other sites

முகம்ஸ் இப்படி யார் சொன்னாங்க..?? ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார்.

ஆரா........இதெல்லாம் பிள்ளை அனுபவத்திலை வாறது ஆட்களின்ரை கதையை கேட்டு வாறேலை சரி உண்மைதான் துணைவி விரும்பிறா எண்டு வைச்சுக் கொள்ளுவம் இப்ப பொண்ணம்மக்கா வெளிக்கிட்டு வரேக்கை எப்பிடி சொல்லிறது சா.. யானைகுட்டி மாதிரி இருக்கிறாய் எண்டு பிறகு மனுசர் வீட்டிலை இருக்கிறேலையோ இதுக்காண்டிதான் தேவைக்கு ஏத்தமாதிரி சில சில விசயங்களை சொல்லவேணும் இப்ப விளங்குதா குடும்ப வாழ்க்கேலை எங்கெங்கை அள்ளி விடவேணும் எண்டு இதை விட்டு உண்மையைச் சொல்லித்தான்; அதை திருத்த முடியுமோ ? சரி இனி உங்கடை இளைய தலைமுறை பெடியள் யோசிச்சு நடக்கிறாங்களோ பாப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ் பொன்ஸ் உண்மையில் யானை போல இருந்தா அவாக்கு தெரியும் தன் உருவம் அதனால அவங்க நீங்க யானைக்குட்டி போல இருக்கிறீங்க என்றால் கோவிக்க மாட்டா (உண்மை அது தானே) ஆனா நீங்க. 1 ப்பாத்து 2 என்றாக்கள். பூனைக்குட்டியைப்பாத்தா யானைக்குட்டி என்பியள் பின்ன அடிபோடாமல் என்ன செய்வாங்க..?? :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது பாஞ்சாலங்குறிச்சி படத்திலிருந்து சின்னச் சின்ன பனித்துளி சிந்திவரும் சோலைக்குள்ளே பாடலை இணைக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

அந்த பாடலை நான் கேட்டதே இல்லையே. இருவர்பாடியதா??

Link to comment
Share on other sites

பாஞ்சாலங்குறிச்சி படத்தில் உன் உதட்டோர என்று வரும் பாடலை மட்டும் தான் இணையத்தில் பார்க்க முடிந்தது வியாசன் :lol:

Link to comment
Share on other sites

எமக்கெல்லாம் பாடல்கள் தேவையென்றால் நாம் வியாசனை நாடலாம். ஆனால் வியாசனுக்கே பாடல் தேவையென்றால் :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

வசம்பண்ணா நீங்கள் சொன்னது போல ஒரு வசனம் ஏதோ ஒரு படத்தில் வருமே ;) மிகவும் பிரபலமான வசனம் ;)

சரி சரி அடுத்த பாட்டு நீங்கள் தான் எழுதவேண்டும்...

Link to comment
Share on other sites

சரி தூயா தங்கள் விருப்பப்படி

படம் : காத்திருந்த கண்கள்

பாடியவர் : பி.வி.சிறீநிவாஸ்

பி.கு : வியாசன் பாடலை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள்.

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளியொன்று

பேச மறந்ததேன் இன்று .....

வெள்ளி வடிவ முகமொன்று

வெட்கம் கொண்டதேன் இன்று

வேலில் வடித்த விழியொன்று

மூடிக் கொண்டதேன் இன்று .....

அல்லி புூத்த முகத்தினிலே

முல்லை புூத்த நகை எங்கே?...

சொல்லி வைத்து வந்தது போல்

சொக்க வைக்கும் மொழி எங்கே?

ஆசை நெஞ்சில் இருந்தாலும்

அமைதி கொள்ளும் குணம் ஏனோ?

அன்னை தந்த சீதனமோ

என்னை வெல்லும் நாடகமோ?....

Link to comment
Share on other sites

வரிகள் வாசிக்க நல்லா இருக்கு. ஆனால் நான் இந்த பாடலை கேட்டதே இல்லை வசம்பண்ணா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் வசம்பு களத்துக்கு அதிகம் வரமுடியவில்லை அதனால் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றமுடியவில்லை. இதோ நீங்கள் கேட்ட துள்ளித்திரிந்த பாடல். தாமதத்திற்கு என்னை மனனித்துவிடுங்கள்.

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

Link to comment
Share on other sites

நன்றி வியாசன்

ஆமாம் உங்களை நீண்ட நாட்களாக களத்திலும் காணக் கிடைக்கவில்லை. வந்ததும் பாடலை இணைத்ததற்கு மிக்க நன்றிகள்.

என்ன தூயா பாடலைக் கேட்டீர்களா?? பிடித்திருக்கிறதா??

Link to comment
Share on other sites

கேட்டேன் வசம்பண்ணா, நல்ல பாடல் :lol: சும்ம சொல்ல கூடாது உங்களுக்கு நல்ல ரசனை தான் ..

அதுத்த பாடல் யார்?

யாரிடமாவது "ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே " என்ற பாடல் இருக்கா?

Link to comment
Share on other sites

ம் இது நல்ல பாடல் தான் யாரிடமாவது இருந்தால் தாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.