Jump to content

எனது மகள் வவுனீத்தா பாடிய பாடலில் ஒன்று


Recommended Posts

இளம் பாடகனான கனடாவைச் சேர்ந்த Justin Bieber வின் புதிய பாடலொன்றை எனது மகள் பாடிப்பதிவு செய்துள்ளாள். அந்த இணைப்பை இங்கே இணைக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=FApIETu-OOQ&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் பாடல் ஒன்றை ஜேர்மன் நாட்டில் பிறந்த பிள்ளை பாடுவது இலகுவானதல்ல. எனினும் நன்றாகப் பாடிய வவுனீத்தாவுக்கு பாராட்டுக்கள். மாயா அருட்பிரகாசம் போல வர வாழ்த்து(க்)கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்கள் பலர் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் சூடுவதில்லை. சைவம், இந்து மதத்தைப் பின்பற்றுவர்கள் வட மொழிப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். கிறிஸ்தவ மத்தைப் பின்பற்றுபவர்கள் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். எனினும் சில தமிழர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தூய தமிழில் பெயரைச் சூட்டி வருகிறார்கள். வவுனீத்தாவின் பெற்றோர்கள் ஈழத்து மண்ணின் உள்ள பெயர்களில் ஒன்றான வவுனியாவை தனது மகளுக்கு சூட்டியுள்ளார்கள். பெற்றோர்களுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.gif

ஜேர்மன் மொழியில் கல்வி கற்றுக் கொண்டு, ஆங்கிலப் பாடலை பாடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும்.

வளரும் பயிரை முளையில் தெரியும் என்பார்கள். அதனை வவுனீத்தாவில் காணக்கூடியதாக உள்ளது. பாராட்டுக்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ் சிறு கிளியே வவுனீத்தா செல்வக் களஞ்சியமே ! நீடூழி வாழ வாழ்த்துக்கள்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி அக்கா,

குரல்வளம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றாக பாடி உள்ளார்

வவுனீத்தா மேன் மேலும் பல சிறப்புகள் பெற்று நீடூழி வாழவும்,அவரின் திறமைகள் எம் தாயகத்திற்கும் பலனுள்ள வகையில் பயன்படவும் வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

நல்ல குரல்வளம். தொடர்ந்து பாட ஊக்கப்படுத்தவும்.பெற்றோருக்கும் ,வவுனித்தாவுக்கும் வாழ்த்துக்கள்.thumbsupo.gif

Link to comment
Share on other sites

நன்றாக பாடுகிறார். வவுனீத்தாவுக்கு நல்ல எதிகாலம் அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா உங்கள் மகளுக்கு அருமையான குர‌ல் வளம்...அவவை மெம் மேலும் அவ விரும்பிய துறையில் ஊக்கிவியுங்கள்.

Link to comment
Share on other sites

கருத்திட்ட கரும்பு , குமாரசாமி, இன்னுமொருவன் , கந்தப்பு ,தமிழ்சிறி , சுவி,ஜீவா , நுணாவிலான், தப்பிலி, கறுப்பி ,ரதி அனைவருக்கும்ம் நெஞ்சு நிறைந்த நன்றிகள். உங்கள் அனைவரின் ஊக்குவிப்பும் கட்டாயம் வவுனீத்தாவை அவளது கனவை நிறைவேற்றுமென நம்புகிறேன். தினமும் ஒரு மணித்தியாலம் தனது அறையில் இசைக்கருவிகளை அதிர வைத்துப் பாடிக்கொண்டிருப்பாள். இசையில் தானொரு சாதனை படைப்பேன் என அடிக்கடி சொல்வாள். காலம் சிதறாமல் தனது விருப்பமான இசையை கற்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பமும்.

தமிழ் 7ம் வகுப்புவரை கற்றிருக்கிறாள். வாசிக்க எழுத முடியும் ஆகையால் உங்கள் கருத்துக்களை வாசித்தாள். அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவிக்கச் சொல்லியிருக்கிறாள். தனது கையெழுத்தில் ஒரு கடிதம் எழுதித் தந்திருக்கிறாள் ஸ்கான் பண்ணீட்டு இணைக்கிறேன்.

மீண்டும் அனைவருக்கும் நன்றிகள். சின்னச் சின்ன ஊக்குவிப்புகள் குழந்தைகளை மென்மேலும் வளரச்செய்யும் இதனை உணர்ந்து வவுனீத்தாவை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள்.

வவுனீத்தாவின் பெற்றோர்கள் ஈழத்து மண்ணின் உள்ள பெயர்களில் ஒன்றான வவுனியாவை தனது மகளுக்கு சூட்டியுள்ளார்கள். பெற்றோர்களுக்கும் நன்றிகள்.

வவுனியன் தனது ஊரின் பெயர் சேர்ந்து பெயர் வைக்க வேணுமென்ற விருப்பத்தில் இப்பெயரை வைத்தோம். வெள்ளையர்களுக்கு உச்சரிப்பதில் சிரமப்படும் போது தனது பெயரை தமிழில் நாம் உச்சரிப்பது போல சொல்லச் சொல்வாள்.

நன்றிகள் கந்தப்பு.

1.gif

ஜேர்மன் மொழியில் கல்வி கற்றுக் கொண்டு, ஆங்கிலப் பாடலை பாடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும்.

வளரும் பயிரை முளையில் தெரியும் என்பார்கள். அதனை வவுனீத்தாவில் காணக்கூடியதாக உள்ளது. பாராட்டுக்கள்.

.

நன்றிகள் சிறி.

சின்னஞ் சிறு கிளியே வவுனீத்தா செல்வக் களஞ்சியமே ! நீடூழி வாழ வாழ்த்துக்கள்!! :rolleyes:

பாரதியின் பாடலால் பாராட்டியிருக்கிறீர்கள். நன்றிகள் சுவி.

நல்ல குரல்வளம். தொடர்ந்து பாட ஊக்கப்படுத்தவும்.பெற்றோருக்கும் ,வவுனித்தாவுக்கும் வாழ்த்துக்கள்.thumbsupo.gif

நன்றிகள் நுணாவிலான். எங்கள் காலம்போலில்லாது எங்கள் பிள்ளைகள் தாங்கள் விரும்பும் துறையை நிச்சயம் நாம் ஊக்கப்படுத்துவோம்.

சாந்தி அக்கா உங்கள் மகளுக்கு அருமையான குர‌ல் வளம்...அவவை மெம் மேலும் அவ விரும்பிய துறையில் ஊக்கிவியுங்கள்.

அவளுக்கு பிடித்ததுறை இசைதான். யேர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களில் இசையில் பெயர் பெற்ற சிலவற்றை எடுத்து வைத்திருக்கிறாள். 12ம் வகுப்பு முடித்து அங்கேதான் போகப்போவதாக. பார்ப்போம் அவளது விருப்பம் எங்களது கனவு கைகூடவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.