Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

 


  • நாட்டை நீ மீட்க நினைத்தால்

     

    எல்லாத்தையும் மாற்றிப்போடு
    ****************************************
    மாவுமில்லை பாலுமில்லை
    எப்படித்தான் வாழ்வேனோ
    பாணுமில்லை மீனுமில்லை
    பசியில் தான் தவிப்பேனோ
    வெளிச்சமில்லை எண்ணையில்லை
    இருட்டில் தான் விழுவேனோ
    காசுமில்லை கசுமில்லை
    என்னென்று தான் சமைப்பேனோ
    விறகு வெட்ட காட்டுக்கு போனேன்
    சட்டம் தண்டித்து வீட்டுக்கு வந்தேன்
    உணவுக்காக வேட்டைக்குப் போனேன்
    சட்டத்தின் கோரத்தால் பசியில் தவிக்கிறேன்
    இறக்குமதி ஏதுமில்லை
    விளைச்சலும் போதவில்லை
    வீங்கிப் போகும் பணத்தின் எல்லை
    நீண்டு செல்லும் மக்கள் வரிசை
    உணவை கனவில் தான் காண்பேனோ
    சொர்க்கம் எங்கள் பூமியென்று
    சொன்னவர்கள் கோடியுண்டு
    சோறில்லா தேசமிங்கு
    வெட்கத்தில் நாங்கள் இங்கு
    பசியில் ஒருவன் இருப்பானென்றால்
    நரகம் தானே எங்க ஊரு
    நாட்டை நீ மீட்க நினைத்தால்
    எல்லாத்தையும் மாற்றிப்போடு
     
    வட்டக்கச்சி
    வினோத்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

 

<div class="paragraphs"><p>நா. முத்துக்குமார்</p></div>

நா. முத்துக்குமார்

 

திகட்ட,திகட்ட காதலி

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை

முட்டாளாய் பிறப்பெடு

கடிகாரம் உடை

காத்திருந்து காண்

நாய்க்குட்டி கொஞ்சு

நண்பனாலும் நகர்ந்து செல்

கடிதமெழுத கற்றுக்கொள்

வித,விதமாய் பொய் சொல்

விழி ஆற்றில் விழு

பூப்பறித்து கொடு

மேகமென கலை

மோகம் வளர்த்து மித

மதி கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு

கால்கொலுசில் இசை உணர்

தாடி வளர்த்து தவி

எடை குறைந்து சிதை

உளறல் வரும் குடி

ஊர் எதிர்த்தால் உதய்

ஆராய்ந்து அழிந்து போ

மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட,திகட்ட காதலி

- நா முத்துக்குமார்

NewsSense

Link to comment
Share on other sites

  • 2 months later...

 

283543036_3213087142262973_7957999414449

🔴எங்கள் அப்பா!
அப்பா..!!
எல்லா அப்பாக்களையும்
போல் நீயும் இருந்திருந்தால்
என் தாத்தாவும், பாட்டியும்
இந்நேரம் முசிறியில் அங்கே
மூச்சோடு
இருந்திருப்பார்கள்..
அப்பா..!!
எல்லா அப்பாக்களையும்
போல் நீயும் இருந்திருந்தால்
என் அக்கா
அமெரிக்காவிலும்,
என் அண்ணன் கனடாவிலும்
நான் இலண்டனிலும்
சொகுசாகப் படித்துக்
கொண்டிருப்போம்..! 😭
என் அப்பாவா நீ.?
இல்லையப்பா..??
நீ..நீ..நீ எங்கள் அப்பா..!
எங்கள் என்பது அக்கா,
அண்ணன், நான் மட்டும் இல்லை..!!
எங்கள் என்பது...
செஞ்சோலை, காந்தரூபன்,
செல்லங்கள் மட்டும்
இல்லை..!
எங்கள் என்பது...
உலகெங்கிலும் உள்ள
என் வயதுக்கு நெருங்கிய
என் அண்ணன்கள்,
என் அக்காள்கள்,
என் தங்கைகள்,
என் தம்பிகள்
அனைவருக்குமானது..!
ஆம்... அப்பா.! நீ
எங்கள் அனைவருக்குமான
ஆண் தாய்!
அப்பா..!
அதனால்தான்
சொல்கிறேன்...
நான் மாணவனாக
இருந்திருந்தால்
என் மார்பில்
மதிப்பெண்களுக்கான
பதக்கங்கள்
பார்த்திருப்பாய்..!
நான் மானமுள்ள
மகனாய் இருந்ததால்தானே அப்பா என் மார்பில் இத்தனை விழுப்புண்கள்
பார்க்கிறாய்..!
சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின் வயிற்றில்
வளர்ந்த கருவுக்கும்கூட
கருணை காட்டிய
அப்பா..!
உன் பிள்ளை உலக
அறமன்றத்துக்கு
முன் ஒரேஒரு கேள்வி
கேட்கிறேன்..!
பன்னிரெண்டு வயது
பாலகன் துப்பாக்கி தூக்கினால்
அது போர்க் குற்றம்..!
பன்னிரெண்டு வயது
பாலகன் மீது
துப்பாக்கியால் சுட்டால்,
இது யார் குற்றம்..??
என்னைச் சுட்ட துப்பாக்கியில் எவர்
எவர் கைரேகைகள்..!
உலக அறமன்றமே.!
உன் மனசாட்சியின்
கதவுகளைத் தட்டித்
திறக்க உலகெங்கிலுமுள்ள
பாலச்சந்திரர்கள்
அதோ பதாகைகளோடு
வருகிறார்கள்..!
பதில் சொல்லுங்கள்..!!
- - கவிஞர் அறிவுமதி.
  • Like 1
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

உயரவாகு 

unnamed-1.jpg?resize=600%2C400&ssl=1

 

” நிலைக்கதவுப் பிள்ளையாருக்கு
இந்தக் கண்ணியை
வைத்து விடு “
சாமந்தியை நீட்டுகிறாள் அம்மா

“லா.சா. ரா
தி.ஜா
கி.ரா வை
வாசித்து நாளாகிவிட்டதாம்”
பரணிலிருக்கும்
புத்தகத்தை
கீழிறக்கச் சொல்கிறார் அப்பா

மாதமொரு முறை
முகப்புக் காற்றாடித் துடைத்தெடுக்க

பழுதடைந்த மின்பல்புகளை
ஏணியின்றி
எளிதில் பொருத்த

அழுக்குப்பாசியடைந்த
மொட்டைமாடி
நீர்த்தொட்டியினுள்
வெளுப்புக் காரமிட்டு
தேய்த்துக் கழுவிவிடவும்
தேடப்படுகிறேன்

ஆயத்த உடை
அளவு பொருந்தாமை
பாதணிகளின் நீட்டுப் பத்தாமை
முழங்கால் இடிக்கும்
முன்னிருக்கையென
ஒன்றிரெண்டு இம்சைகள் எனக்கு மட்டும்தான்

உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்
என் உயரவாகு
எத்தனை தோதாயிருக்கிறது
பிறருக்கு.

 

https://solvanam.com/2022/12/11/உயரவாகு/

 

கவிதையில் பயன்படுத்திய படத்தில் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பக்கத்தில் நிற்கும் உயரமான போராளி யார்?

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

கவிதையில் பயன்படுத்திய படத்தில் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பக்கத்தில் நிற்கும் உயரமான போராளி யார்?

இவர் 7 அடி உயரமாக இருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பனிக்கால இரவில் 
வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும் வேறாக இருந்தாலும்
எப்போதும் அது வெறுமையைத் தந்ததில்லை
அன்பிருந்தாலும் நீங்கினாலும்
உடன் இருந்தவர்கள் திடும்மென சாம்பலாகியிருந்தாலும்
அரசாங்கங்கள் மாறியிருந்தாலும்
நகரமே தீப்பற்றியெரிந்தாலும்
இந்த நிலவுக்குப் பொருட்டே இல்லை
வளர்வதும் தேய்வதும் மறைவதும் தோன்றுவதுமாய்
இரவோடும் வானோடும்
ஒரு விளையாட்டைப் போல 
தன் இருப்பை
அதன் போக்கில் ஆடித் தீர்க்கிறது
என் உடலில் உறைந்திருக்கும் 
ரத்தக் குளங்களை உருக்கி
அதன் பிரதிமைகளை சேகரிக்கிறேன்
வாழ்க்கை ஸ்தம்பிக்கும்போதெல்லாம்
நிலாக்களைத் தளும்ப விட்டுக்கொள்வேன்

- லீனா மணிமேகலை

https://kanali.in/kathadi-kavithigal/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இணைப்புக்கு நன்றி கிருபன்...........!  👏

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யானை பார்த்த குருடர்கள்!
- வ.ந.கிரிதரன் -

யானை பார்த்துப் பெருமிதமுறும்
குருடரிவர்.
காலைப் பார்த்துரலென்பார்..
காதைப் பார்த்துச்சுளகென்பார்.
முழுவுரு அறிதற்கு
முயலார். ஆயின்
முற்றுந் தெரிந்ததாய்
முரசறைவார்.

சொல்லின் பொருளறியார்.
ஆயின் சொல்லழகில்
சொக்கி நிற்பார்.
'இஸம்' பல பகர்வாராயின்
'இஸம்' புரியார்.
குழுச் சேர்த்துக்
குளிர் காய்வார்.

இருப்போ தற்செயல்.
தற்செயலுக்குள்
இவர்தம்
தற்செயற் தந்திரம் தான்
என்னே!
நிலையற்றதனுள்
நிலைப்பதற்காயிவர்
போடும் ஆட்டம் தான்
என்னே!

புரிந்து கொள்ளப்
படிக்கார்.
அறிந்து கொள்ளப்
படிக்கார்.
புலமை பகிர்வதற்கன்றிப்
பகர்வதற்காய்ப்
படிப்பார்.

ஆனை பார்க்கும் அந்தகரே!
தனியறிவை
இணைத்தறிய என்றுதான்
முயல்வீர்?

 

https://mail.vaarppu.com/poem/573

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.