Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறகின் கதை

-நிலாரசிகன்-

மலைச்சரிவில் பூத்திருக்கும்

பூக்களின் நடுவில் வீழ்ந்து கிடக்கிறது

ஓர் இறகு.

வெளிமான்கள் மேயும் அம்மலையில்

மார்கச்சை அற்ற யுவதி ஒருத்தி

மலையேறுகிறாள்.

பூக்கள் நடுவில் கிடக்கும் இறகை

பேரன்புடன் கைகளில் அள்ளிக்கொள்கிறாள்.

தன் தளிர் விரல்களால் இறகை

வருடிக்கொடுக்கிறாள்.

சிலிர்த்த மலை ஒரு மாயக்கம்பளமாக

உருப்பெறுகிறது.

யுவதியும் இறகும் வெகு தூரம்

பயணித்து

சிற்றோடைகள் நிறைந்த வனத்தில்

இறங்கி நடக்கிறார்கள்.

ஒளிக்கண்களுடன் அவளை நெருங்குகிறான்

வனத்தின் இளவரசன்.

தன் செல்லப்பறவையின் இறகை

திரும்பக்கேட்கிறான்.

இறகை கொடுத்தவுடன் தன்னுடலில்

சிறகுகள் வளர்வதை உணர்கிறாள்.

வனத்தின் இளவரசனை தன்

விழிப்பூக்களில் அமர்த்திக்கொள்கிறாள்.

பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்

அவர்கள் பேரானந்தமாய் பறக்கிறார்கள்

ஓர் இறகின் வடிவில்.

உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன..

-நிலாரசிகன்-

1.

ஓர் உன்னதமான நிகழ்வின்

முடிவில் அறையெங்கும் மணம்

நிரப்பியபடி படுத்திருந்தாய்.

கனவில் தோன்றும் கவிதைவரியின்

பூரிப்புடன் கண்கள் மூடி

அமர்ந்திருந்தேன்.

காலமடியில் இசை

வழிந்துகொண்டிருந்தது.

செவி வழி உயிருக்குள்

ஊடுருவியது உனதன்பின்

அணுக்கள்.

மார்பு தாங்கும் வனப்பூக்களுடன்

அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய்.

இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள்

நுழைய துவங்கினேன்

நான்.

2.

தவிர்த்தலையும் ரசனையுடன்

என்னில் தெளிக்கிறாய்.

உன் விலகல் ஒரு நட்சத்திரம்

போல் மிளிர்கிறது.

வெறுமை நிறைந்த சொற்களை

உதிர்த்தபடி செல்கிறதுன்

இதழ்கள்.

எவ்வித உணர்வுகளுமின்றி

புன்னகைக்க கற்றுக்கொண்டாய்.

மழை சத்தமின்றி பெய்து

ஓய்கிறது.

கண்ணீர் உடைந்த

நிலாத்துளிகளாய் உருள்கிறது.

என்றேனும்

ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்

நீ

லயித்திருக்கும் தருணத்தில்

காற்றில் மிதந்து வரக்கூடும்

சிறகறுந்த கனவொன்றின்

குருதி தோய்ந்த இறகுகள் சில.

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

செயல் தொடங்கு வளம் தானே வரும்

.............................................................................

செயல் தொடங்கு வளம் தானே வரும்

வளமி;ல்லை என்று ஏங்காதே

இருப்பதை கொண்டு

இயன்றவரை செய் (முடிவில்லை)bird_6.jpg

செயலை தொடங்கு

வளம் தேடிவரும்

எதையும் நுட்பமாய் பாவி

இருப்பதே போதும்

இன்னும் பெருகும்

இம்மாம் பெரிய கோலியாத்தே

வீழ்ந்தது தாவீதின் சிறுதுண்டு

கல்லால்தான்

உன் செயலில் வேகம் இருந்தால்

வலி தெரியாது – வெல்வாய்

வளம் எல்லாம் பெறுவாய்

...............................................................

Link to comment
Share on other sites

நீ நினை அதற்கான பலம் தானாகவே வரும்

......................................................................................................

நீ கேட்காதவரை

உனக்கு உதவி கிடைக்காது.... நீ

தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இதுபிரான் சொன்னமொழி

நீ நகர்த்தாமல் எதுவும் நகராது

நண்டிருப்பவை கூட

நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது

இது பௌதிகம் சொல்லும் மொழி

நீ முயலாமல் கனவுகள் மலரா

முயற்சியை சுவாசி... உன்

மூச்சுக்காற்று தென்றலாம்

கனவு மொட்டுக்கள் சட்டென்றே

பூவாகும்

எது நிகழவேண்டுமோ... அது

நிகநீ கேட்காதவரை

உனக்கு உதவி கிடைக்காது.... நீ

தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இது219684194_3b39c467ca.jpg

இயேசுபிரான் சொன்னமொழி

நீ நகர்த்தாமல் எதுவும் நகராது

நகர்ந்து கொண்டிருப்பவை கூட

நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது

இது பௌதிகம் சொல்லும் மொழி

நீ முயலாமல் கனவுகள் மலரா

முயற்சியை சுவாசி... உன்

மூச்சுக்காற்று தென்றலாம்

கனவு மொட்டுக்கள் சட்டென்றே

பூவாகும்

எது நிகழவேண்டுமோ... அது

நிகழும் நீ நினைத்தால் மட்டும்

============================================

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்.

- சுவாமி விவேகானந்தர்ழும் நீ நினைத்தால் மட்டும்

============================================

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்.

- சுவாமி விவேகானந்தர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனங்கொத்திப் பறவை

ரவி (சுவிஸ்)

----------------------------------------

இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்

எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்

மீள்வரவில்

நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.

நான் எதையும்

விசாரணை செய்வதாயில்லை.

ஏன் பறந்தாய்

ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்

என்பதெல்லாம்

எனக்கு பொருட்டல்ல இப்போ.

என் பிரிய மனங்கொத்தியே

நீ சொல்லாமலே பறந்து சென்ற

காலங்கள் நீண்டபோது

என் மனதில் உன் இருப்பிடம்

பொந்துகளாய்

காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை

அறிவாயா நீ.

நீ அறிந்திருப்பாய்

நீ இரக்கமுற்றும் இருப்பாய்.

மீண்டும் உன் கொத்தலில்

இதமுற்றிருக்கிறேன் நான்

கொத்து

கோதிவிடு என் மனதை

இதுவரையான உன் பிரிவின் காலங்களில்

என் மனம் கொத்திச் சென்ற

பறவைகளில் பலவும் என்

நம்பிக்கைகளின் மீது

தம் கூரலகால்

குருதிவடிய

எழுதிச்சென்ற வரிகளெல்லாம்

வலிகள் ஊர்கின்றன.

மறக்க முனைந்து மறக்க முனைந்து

தோற்றுப்போகிறேன் நான்.

நான் நானாகவே இருப்பதற்காய்

காலமெலாம்

வலிகளினூடு பயணிக்கிறேன்.

சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு

உன் மீள்வரவும்

மீள்பறப்பாய் போய்விடும்தான்.

என்றபோதும் இன்று நான்

இதமுற்றிருக்கிறேன் - நீ

கோதிய பொந்துள்

சிறகை அகல விரித்ததனால்!

http://www.vaarppu.com/view/2533/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசலோடாயினும்...

Winged%20Termites.jpg

1.ஒரு மழைநாளிரவில்

பிறந்த

ஈசல் ஒன்று

சற்றே எம்பிப் பறந்தது

வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த

பறவையைப் பார்த்து

நானும் ஒரு பறவையென்று

பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே

ஆயுள் தீர்ந்து

விழுந்திறந்தது

2.விழுந்த ஈசல்

இறக்கும் முன்பு நினைத்தது

ஒரு நாள் வாழ்க்கைக்கு

எதற்கிந்த சிறகு?

http://ezhuththuppiz...og-post_30.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசலோடாயினும்...

Winged%20Termites.jpg

1.ஒரு மழைநாளிரவில்

பிறந்த

ஈசல் ஒன்று

சற்றே எம்பிப் பறந்தது

வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த

பறவையைப் பார்த்து

நானும் ஒரு பறவையென்று

பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே

ஆயுள் தீர்ந்து

விழுந்திறந்தது

2.விழுந்த ஈசல்

இறக்கும் முன்பு நினைத்தது

ஒரு நாள் வாழ்க்கைக்கு

எதற்கிந்த சிறகு?

http://ezhuththuppiz...og-post_30.html

கிருபன் நல்ல கவிதை, ஒவ்வொரு படைப்புகளும் விசித்திரமானவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகரங்கள்

தேவ அபிரா

இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில்

இந்த நகரத்தை வந்தடைந்தேன்.

நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி.

கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன.

முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில்

மென் பொன் மதுக்குவளையை இருத்தி

நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள்.

பங்குச்சந்தை காய்கிறது.

வங்கிகள் சரிகின்றன.

ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில்

இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது.

மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்.

நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத்

தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.

இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன?

நான்கு தசாப்தங்களின் முன்பு

இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.

விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.

நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது

"இது எமது நகரம்"

என் வாழ்வின் நினைவுத் தடத்தில்

உறங்கிக்கிடந்தவென் நகரங்கள் விழித்தன...

உறையாதே நடந்து போவென்றன..

காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத் தேடி

குறுகலான சந்துகளினூடே நடந்தேன்.

நூற்றாண்டுகள் கடந்தும்

கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்

இன்னும் சிதறிக்கிடந்தன.

தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்

கண்கள் படாமலும் காமம் சுடாமலும்

பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.

என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி

ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்

இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

நினைவுகளின் தகிப்புத்தாளாது

நிமிர்ந்து நின்ற நினைவுசின்னத்தின் அடியில் அமர்ந்தேன்.

அதன் வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தவென்றறியேன்.

ஆனாலும் அதன் மடியில் இருந்தது ஒரு கவிதை:

"இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை

ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது

நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".*

ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும்

எனது நகரங்களில் என்றாவது ஓர் நாள்

நானும் நினவுச்சின்னமொன்றை எழுப்புவேன்.

ஏனேனில் யுகங்களைக்கடந்து செல்ல விரும்பும்

அற்ப மனிதன் நான்.

மனிதர்களற்ற வெளியில் நுழையும்;

சூரியன் விழுந்து சிவப்பாகும் இரவு நதிப்படுக்கையில்

நான் சரிந்தபோது,

என் காதருகில் கேட்கிறது

என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம்.

http://thevaabira.blogspot.com/2011/10/blog-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகரங்கள்

தேவ அபிரா

நூற்றாண்டுகள் கடந்தும்

கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்

இன்னும் சிதறிக்கிடந்தன.

தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்

கண்கள் படாமலும் காமம் சுடாமலும்

பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.

என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி

ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்

இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

http://thevaabira.bl...og-post_03.html

இந்த நகரத்தை எனக்கு நன்கு தெரியும்!

எவ்வளவு அழகாக தேவ அபிரா, அதன் சரித்திரத்தையே சில வரிகளுக்குள் வடித்து விட்டார்!

நன்றிகள், கிருபன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கவிதை! நன்றி கிருபன் தேடித் தந்ததிற்க்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு தசாப்தங்களின் முன்பு

இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.

விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன

.நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன

அந்தக்காலத்தின்கல்லறையில்

ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது

"இது எமது நகரம்"...............................................

..மிகவும் அருமையாக் எழுதியுள்ளார் . பகிர்வுக்குனன்றி

Link to comment
Share on other sites

TreeMan.jpg

ஊர் வீதியை அலங்கரித்து

வழி பிரிக்கும் முச்சந்தியில்

ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம்

பிரச்சனை கூடும் பஞ்சாயத்து

மனிதர்களின் சொல்லடி பட்டு

மௌனமாக நிற்கும் மரம்

தன் நிழல் மடியில்

இளைப்பாறும் வழிபோக்கர்கள்

கிளைகாளால் விசுறும் மரம்

தொங்கி விளையாடும் சிறுவர்கள்

வளைந்து கொடுக்கும் கிளைகள்

அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம்

வெட்டி நியாயம் அடுக்கியபடி

ஊர்க்கதை பேசும் பெருசுகள்

வேடிக்கை பார்க்கும் மரம்

தாய்ப் பறவைகள் இரைதேடி

கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள்

காற்றே மெல்லமாய் வீசு

என்குழந்தைகளை நசுக்காதீர்கள்

மௌனமாக வினவும் மரம்

காலடியில் உதிர்ந்த சருகுகள்

தளிரும் கிளைகளை களையுங்கள்

என் தலையை வெட்டி

பாவம் சுமக்காதீர்கள்

மரத்தில் பேய் இருக்கு

யாரோ சொன்ன பொய்

முறைத்துக் கொண்டு ஊர்மக்கள்

மனிதர்களின் இல்லாப் பழிசுமந்து

வார்த்தைகள் இன்றி அழுகிறது

பேச இயலாத மரம்

வளர்த்து விட்ட ஊர்மக்கள்

உறவாட மறுக்கையில்

ரணமாகிறது மரத்தின் தனிமை

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னை முன்வைத்து .

சமீபமாக காணமல்

போய்விட்டான் .

மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை

தேடி எடுப்பது போல சுலபமானது

என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்

அது அப்படி இருக்கவில்லை.

தெரிந்தவர்களிடம்

சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த

கோடை நாளில்

இரயில் நிலையத்தில்

என்னைக் கண்ட

காக்கை

மரணம் நிகழாத

பகுதி ஒன்றில்

பிணம் தின்னும் பறவைகளுக்கு

இரையாக கிடப்பதாகச்

சொன்னது

தொலைக்கப்படுவதும்

மீட்டெடுப்பதுவும்

எப்போதும்

அத்தனை எளிமையானதாக இல்லை .

நன்றி - உயிரோசை

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தனிமை என்னும் மதுபானம்…

கவிதா

நான் அவளது

இறுதி வேர்.

என்னிடம் இருக்கிறது,

அவள் விட்டுச் சென்ற

தனிமையின்

எச்சங்கள்.

அவளை புசித்து பெருகிய

அவளது தனிமைகள்

என்னிடம் தமது

ரகசியங்களை

வெளியிட்டுக் கொண்டன.

புராதான சுவை கொண்ட

அந்த தனிமைகளை

சிறு மதுக் குவளைகளில்

ஊற்றி

உங்களுக்கு

பருகத்

தருகிறேன்.

உங்கள் போதையின் பிறழ்வுகளுக்காக

காத்துக் கொண்டிருக்கிறாள்

தனிமை தின்ற மீதமாய்

அலைந்து கொண்டிருக்கும்

அவள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபங்கள் முடிவில்

ராசை நேத்திரன்

சம்பளத்தை நோக்கிய

மாத மாத வாழ்க்கை பயணம்

எளிதாய் மனித வாழக்கையின்

நாட்களை நொடிப்பொழுதில்

தின்று விடுகிறது

தேவைகளை பூர்த்தி செய்து

கொள்ளவே வாழ்க்கை பயணம்

என்று மாறிவிடுவதில் சாதிக்க

பிறந்த மனிதன் எங்கே யோசிக்க

சாதனையின் படிக்கட்டுக்களை

திடும் என திரும்பி பார்க்கிறேன்

பள்ளிப்பருவம் மறக்க தொடங்கி

அனிச்சையாய் ஓடிக்கொண்டு

இருக்கிறேன் .....

இது போலவே இன்னும் சிறிது

நாட்களில் கல்லூரி காலம்,

உயிர் நண்பனின் நட்பு,

உறவின் பாலம்

கொஞ்சம் கொஞ்சமாய்

தேயத்தொடங்கிவிடுகிறது

நாட்காட்டியை போலவே

ஞாபங்களும்.......

http://www.vaarppu.com/view/2571/

  • Like 2
Link to comment
Share on other sites

என்னை முன்வைத்து .

சமீபமாக காணமல்

போய்விட்டான் .

மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை

தேடி எடுப்பது போல சுலபமானது

என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்

அது அப்படி இருக்கவில்லை.

தெரிந்தவர்களிடம்

சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த

கோடை நாளில்

இரயில் நிலையத்தில்

என்னைக் கண்ட

காக்கை

மரணம் நிகழாத

பகுதி ஒன்றில்

பிணம் தின்னும் பறவைகளுக்கு

இரையாக கிடப்பதாகச்

சொன்னது

தொலைக்கப்படுவதும்

மீட்டெடுப்பதுவும்

எப்போதும்

அத்தனை எளிமையானதாக இல்லை .

நன்றி - உயிரோசை

இதை எழுதியது யார்....நல்லதொரு கவிதை

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முகமூடிகள்

ராமலக்ஷ்மி

ஒன்றல்ல இரண்டல்ல

ஒருநூறு முகமூடிகள்

அணிந்தது அறியாதபடி

தோலோடு சங்கமமாகி

சதையோடும் எலும்போடும் ஊடுருவி

பளபளத்த முகமூடிகளுக்கே

எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள்

அத்தனையும் ரசித்தபடி

இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி

உயிரோடு ஒன்றிப்போய்

உலகுக்கான அடையாளமாகி

ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில்

விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம்

கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத்

தன்னிச்சையாக

ஒவ்வொன்றாக அன்றி

ஒட்டு மொத்தமாக

சுற்றம் மறந்து நிதானம் இழந்து

மதி மழுங்கி மற்றவர் வருத்தி

மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில்

எதிரே இருந்த கண்ணாடியை

எதேச்சையாய் ஏறிட

பேதலித்து அலறுகிறது சுயமுகம்

தன்கோரம் தானே காணச் சகியாமல்.

***

உடைந்து போன பொம்மையைக்

கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த

குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும்

விளையாட்டுச் சாமான்களைப் போலக்

கலைந்து கிடந்தது வீடு

கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்

கலங்கி நின்ற மனதை

ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்

தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின

ஆத்திரத்துடன் தத்தமது முகமூடிகளை

குவிந்த முகமூடிகளுக்குள்

அமுங்கி மூச்சுத் திணறி

மீட்கக் கோரி வெளி நீண்ட கையை

ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட

மகானுபாவர்,

”வருத்தம் விடு!

மனிதருக்காகவே

படைக்கப்பட்டவைதாம் இவை.

சேர்ந்து கிடப்பதில்

இன்னும் சிறப்பானதாய்த்

தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள

கிடைத்த வாய்ப்பாகப் பார்”

உபதேசித்தார்

நழுவத் தொடங்கிய தன் முகமூடியை

கெட்டியாகப் பிடித்தபடி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருங்குழி சேரும் பேச்சொலி

ப்ரவின்துள்சி

முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்

அது ஒரு கோழியிறகின் மேல்

காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது !

பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…

அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை

மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !

பிறகு என்னைப் பற்றி பேசினோம்…

அவை ஒரு சாம்பல் நிற பூமியின்

புதினமென நம்பினாய் !

அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…

ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்

பத்திரமாக கொண்டு சேர்த்தாய் !

தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…

பின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய

பேச்சுகள் தவிற்க முடியாததாகின !

எதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்

மௌனம் நம் மத்தியில்

நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டது !

பின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…

அவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்

வேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடைந்தோம் !

பிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…

இதுவரை பேசியவை எல்லாம்

சட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்தது !

பின் நாட்களில்…

யாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்

நாம் முன்பு எப்போதையும்விட

மிகவும் கவனத்துடன் இருந்தோம்

..!

Edited by சுபேஸ்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சறைப்பெட்டி

சின்னப்பயல்

அஞ்சறைப்பெட்டியில்

அம்மா போட்டு வைத்த

மீதக்காசில்

சீரகத்தின் மணமும்

கடுகின் வாசமும்

வெந்தயத்தின் நெடியும்

மஞ்சள்பொடியின் கமறலும்

மிளகின் காரமுமாக

அடித்த வாசம்

இன்னும் என் மனதினுள்

வட்டமடிக்கிறது

அந்தக்காசில்

வாங்கித்தின்ற

மிட்டாயின் மணம்

ஏனோ நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் நீக்கமற

எம்.ராஜா

துடைத்துக் கவிழ்த்த தேநீர்க் கோப்பையில்

இன்னமும் தேங்கியிருக்கிறது

இறந்த காலத்தின் சுவை ஒன்று

காலியான தண்ணீர்க் குடுவையிலும்

ஒட்டிக்கொண்டு இருக்கின்றன

சில ஈரத் துளிகள்....

ஒரு வெற்றுத் தாளில் வாசிக்கப்படுகிறது

அடர்மௌனத்தின் நீள்வாக்கியம்

யாருமற்ற வீட்டை சுற்றி வருகின்றன

அமானுஷ்யங்களின் நிழல்கள்

நிஜத்தில்

எந்த வெற்றிடமும் காலியாக இருப்பதில்லை...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முகங்கள்

ப.பார்த்தசாரதி

ஒவ்வொருநாளும் பல முகங்களைக்

கையிலேந்தி அலைகிறேன்

யாருக்கும் தெரியாமல்

அவற்றை மறைத்து வைத்து

மீண்டும் அணிந்துகொள்கிறேன்.

ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு

முகம் மாட்டி அலைகிறேன்.

எந்த முகம் என்முகம்

என்பது யாருக்கும் தெரியாமல்

சமமாக பாவித்து வருகிறேன்

ஒருவருக்குத் தெரிந்த

முகம் மற்றவர்களுக்குத்

தெரிய வாய்ப்பு கொடுக்காமல்

கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன்

சில துளி வினாடிகளில்

நல்லவன் கெட்டவன்

வஞ்சகன் சாது

அப்பாவி வெகுளி

என ஒவ்வொருமுகங்களுக்கும்

பெயர் வைத்து தினமும்

அதற்கு உணவூட்டி

வளர்த்து வருகிறேன்

ஒரு நாள் அகக்கண்ணாடியில்

என் சொந்த முகம் பார்க்கையில்

அது வெளிறிப் பழுதடைந்து

அழுகி அகோரமாய்

என்னைப் பார்த்து சப்தமாய் சிரித்தபடியே

இறந்துகொண்டிருந்தது

ஒவ்வொருநாளும் பல முகங்களைக்

கையிலேந்தி அலைகிறேன்

யாருக்கும் தெரியாமல்

அவற்றை மறைத்து வைத்து

மீண்டும் அணிந்துகொள்கிறேன்.

http://www.uyirmmai....s.aspx?cid=5448

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பச்சை முடிஞ்சு போச்சு பிறகு வந்து குத்திறன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதைகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் பரிசுகள்

ஆர்.அபிலாஷ்

திருமணநாள் பரிசுகள்

குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன.

வருடங்கள் முன் பின் சென்று

தூசு படிந்து

நிறம் மங்கி வரும்

ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட

விளையாட்டுப் பொருட்களைப் போல்

இன்று மாலை

பழைய பரிசுகளுடன்

அமர்ந்திருக்கிறேன்.

மஞ்சளான மாலை

அழுகும் இலைகளின் சலசலப்புடன்

இரவில் வெடிக்கும் பூக்களின்

வாசனையையும்

கொண்டு வருகிறது.

மாடி ஜன்னலுக்கு வெளியே

நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால்

ஒரு சோர்வுற்ற சூரியன்

இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும்

தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல்

எதையாவது பற்றிக் கொள்ள

விழைகிறான்.

எதிர்பாராது

மழை பெய்யத் துவங்குகிறது

தயாரற்ற மனிதர்கள்

கூரைகள் தேடி சிதறுகிறார்கள்.

கால் இடறி தடுமாறுகிறேன்

உனது பரிசுப் பொருட்கள்

கலந்து விடுகின்றன

எனதுடன்.

மீண்டும் மீண்டும்

அவற்றை

இரு பகுதியாய் பிரிக்க முயன்று

தோல்வியடைகிறேன்

பின் காலவரிசைப்படி

கலைத்துக் கலைத்து

அடுக்குகிறேன்.

மழை நிற்க வெகுநேரமாகிறது

வெப்பம் கிளம்பி

பின்

பனி பொழியும் போது

திகைத்துப் போய்

பரிசுப் பொருட்கள் மத்தியில்

தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல

அமர்ந்திருக்கிறேன்.

வாசலில்

மெல்ல தும்மியபடி

நுழைகிறாய்.

உன்னிடமிருந்து

பரிசுப் பொருளை வாங்கி

அருகில் வைத்து

உனக்கான புதுப் பரிசைக்

குவியலில் தேடி

தோற்று

வேறுவழியின்றி

கண்களில் மன்னிப்பை வைத்தபடி

அங்கு

ஆகப் பழசான பரிசு ஒன்றைப்

பொறுக்கி

நீட்டுகிறேன்

அதில் மிகச்சரியாய்

குறிக்கப்பட்டுள்ளது

இன்றைய தேதி...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.