Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறகின் கதை

-நிலாரசிகன்-

மலைச்சரிவில் பூத்திருக்கும்

பூக்களின் நடுவில் வீழ்ந்து கிடக்கிறது

ஓர் இறகு.

வெளிமான்கள் மேயும் அம்மலையில்

மார்கச்சை அற்ற யுவதி ஒருத்தி

மலையேறுகிறாள்.

பூக்கள் நடுவில் கிடக்கும் இறகை

பேரன்புடன் கைகளில் அள்ளிக்கொள்கிறாள்.

தன் தளிர் விரல்களால் இறகை

வருடிக்கொடுக்கிறாள்.

சிலிர்த்த மலை ஒரு மாயக்கம்பளமாக

உருப்பெறுகிறது.

யுவதியும் இறகும் வெகு தூரம்

பயணித்து

சிற்றோடைகள் நிறைந்த வனத்தில்

இறங்கி நடக்கிறார்கள்.

ஒளிக்கண்களுடன் அவளை நெருங்குகிறான்

வனத்தின் இளவரசன்.

தன் செல்லப்பறவையின் இறகை

திரும்பக்கேட்கிறான்.

இறகை கொடுத்தவுடன் தன்னுடலில்

சிறகுகள் வளர்வதை உணர்கிறாள்.

வனத்தின் இளவரசனை தன்

விழிப்பூக்களில் அமர்த்திக்கொள்கிறாள்.

பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்

அவர்கள் பேரானந்தமாய் பறக்கிறார்கள்

ஓர் இறகின் வடிவில்.

உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன..

-நிலாரசிகன்-

1.

ஓர் உன்னதமான நிகழ்வின்

முடிவில் அறையெங்கும் மணம்

நிரப்பியபடி படுத்திருந்தாய்.

கனவில் தோன்றும் கவிதைவரியின்

பூரிப்புடன் கண்கள் மூடி

அமர்ந்திருந்தேன்.

காலமடியில் இசை

வழிந்துகொண்டிருந்தது.

செவி வழி உயிருக்குள்

ஊடுருவியது உனதன்பின்

அணுக்கள்.

மார்பு தாங்கும் வனப்பூக்களுடன்

அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய்.

இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள்

நுழைய துவங்கினேன்

நான்.

2.

தவிர்த்தலையும் ரசனையுடன்

என்னில் தெளிக்கிறாய்.

உன் விலகல் ஒரு நட்சத்திரம்

போல் மிளிர்கிறது.

வெறுமை நிறைந்த சொற்களை

உதிர்த்தபடி செல்கிறதுன்

இதழ்கள்.

எவ்வித உணர்வுகளுமின்றி

புன்னகைக்க கற்றுக்கொண்டாய்.

மழை சத்தமின்றி பெய்து

ஓய்கிறது.

கண்ணீர் உடைந்த

நிலாத்துளிகளாய் உருள்கிறது.

என்றேனும்

ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்

நீ

லயித்திருக்கும் தருணத்தில்

காற்றில் மிதந்து வரக்கூடும்

சிறகறுந்த கனவொன்றின்

குருதி தோய்ந்த இறகுகள் சில.

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

செயல் தொடங்கு வளம் தானே வரும்

.............................................................................

செயல் தொடங்கு வளம் தானே வரும்

வளமி;ல்லை என்று ஏங்காதே

இருப்பதை கொண்டு

இயன்றவரை செய் (முடிவில்லை)bird_6.jpg

செயலை தொடங்கு

வளம் தேடிவரும்

எதையும் நுட்பமாய் பாவி

இருப்பதே போதும்

இன்னும் பெருகும்

இம்மாம் பெரிய கோலியாத்தே

வீழ்ந்தது தாவீதின் சிறுதுண்டு

கல்லால்தான்

உன் செயலில் வேகம் இருந்தால்

வலி தெரியாது – வெல்வாய்

வளம் எல்லாம் பெறுவாய்

...............................................................

Link to comment
Share on other sites

நீ நினை அதற்கான பலம் தானாகவே வரும்

......................................................................................................

நீ கேட்காதவரை

உனக்கு உதவி கிடைக்காது.... நீ

தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இதுபிரான் சொன்னமொழி

நீ நகர்த்தாமல் எதுவும் நகராது

நண்டிருப்பவை கூட

நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது

இது பௌதிகம் சொல்லும் மொழி

நீ முயலாமல் கனவுகள் மலரா

முயற்சியை சுவாசி... உன்

மூச்சுக்காற்று தென்றலாம்

கனவு மொட்டுக்கள் சட்டென்றே

பூவாகும்

எது நிகழவேண்டுமோ... அது

நிகநீ கேட்காதவரை

உனக்கு உதவி கிடைக்காது.... நீ

தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இது219684194_3b39c467ca.jpg

இயேசுபிரான் சொன்னமொழி

நீ நகர்த்தாமல் எதுவும் நகராது

நகர்ந்து கொண்டிருப்பவை கூட

நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது

இது பௌதிகம் சொல்லும் மொழி

நீ முயலாமல் கனவுகள் மலரா

முயற்சியை சுவாசி... உன்

மூச்சுக்காற்று தென்றலாம்

கனவு மொட்டுக்கள் சட்டென்றே

பூவாகும்

எது நிகழவேண்டுமோ... அது

நிகழும் நீ நினைத்தால் மட்டும்

============================================

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்.

- சுவாமி விவேகானந்தர்ழும் நீ நினைத்தால் மட்டும்

============================================

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்.

- சுவாமி விவேகானந்தர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனங்கொத்திப் பறவை

ரவி (சுவிஸ்)

----------------------------------------

இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்

எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்

மீள்வரவில்

நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.

நான் எதையும்

விசாரணை செய்வதாயில்லை.

ஏன் பறந்தாய்

ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்

என்பதெல்லாம்

எனக்கு பொருட்டல்ல இப்போ.

என் பிரிய மனங்கொத்தியே

நீ சொல்லாமலே பறந்து சென்ற

காலங்கள் நீண்டபோது

என் மனதில் உன் இருப்பிடம்

பொந்துகளாய்

காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை

அறிவாயா நீ.

நீ அறிந்திருப்பாய்

நீ இரக்கமுற்றும் இருப்பாய்.

மீண்டும் உன் கொத்தலில்

இதமுற்றிருக்கிறேன் நான்

கொத்து

கோதிவிடு என் மனதை

இதுவரையான உன் பிரிவின் காலங்களில்

என் மனம் கொத்திச் சென்ற

பறவைகளில் பலவும் என்

நம்பிக்கைகளின் மீது

தம் கூரலகால்

குருதிவடிய

எழுதிச்சென்ற வரிகளெல்லாம்

வலிகள் ஊர்கின்றன.

மறக்க முனைந்து மறக்க முனைந்து

தோற்றுப்போகிறேன் நான்.

நான் நானாகவே இருப்பதற்காய்

காலமெலாம்

வலிகளினூடு பயணிக்கிறேன்.

சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு

உன் மீள்வரவும்

மீள்பறப்பாய் போய்விடும்தான்.

என்றபோதும் இன்று நான்

இதமுற்றிருக்கிறேன் - நீ

கோதிய பொந்துள்

சிறகை அகல விரித்ததனால்!

http://www.vaarppu.com/view/2533/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசலோடாயினும்...

Winged%20Termites.jpg

1.ஒரு மழைநாளிரவில்

பிறந்த

ஈசல் ஒன்று

சற்றே எம்பிப் பறந்தது

வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த

பறவையைப் பார்த்து

நானும் ஒரு பறவையென்று

பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே

ஆயுள் தீர்ந்து

விழுந்திறந்தது

2.விழுந்த ஈசல்

இறக்கும் முன்பு நினைத்தது

ஒரு நாள் வாழ்க்கைக்கு

எதற்கிந்த சிறகு?

http://ezhuththuppiz...og-post_30.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசலோடாயினும்...

Winged%20Termites.jpg

1.ஒரு மழைநாளிரவில்

பிறந்த

ஈசல் ஒன்று

சற்றே எம்பிப் பறந்தது

வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த

பறவையைப் பார்த்து

நானும் ஒரு பறவையென்று

பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே

ஆயுள் தீர்ந்து

விழுந்திறந்தது

2.விழுந்த ஈசல்

இறக்கும் முன்பு நினைத்தது

ஒரு நாள் வாழ்க்கைக்கு

எதற்கிந்த சிறகு?

http://ezhuththuppiz...og-post_30.html

கிருபன் நல்ல கவிதை, ஒவ்வொரு படைப்புகளும் விசித்திரமானவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகரங்கள்

தேவ அபிரா

இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில்

இந்த நகரத்தை வந்தடைந்தேன்.

நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி.

கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன.

முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில்

மென் பொன் மதுக்குவளையை இருத்தி

நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள்.

பங்குச்சந்தை காய்கிறது.

வங்கிகள் சரிகின்றன.

ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில்

இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது.

மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்.

நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத்

தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.

இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன?

நான்கு தசாப்தங்களின் முன்பு

இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.

விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.

நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது

"இது எமது நகரம்"

என் வாழ்வின் நினைவுத் தடத்தில்

உறங்கிக்கிடந்தவென் நகரங்கள் விழித்தன...

உறையாதே நடந்து போவென்றன..

காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத் தேடி

குறுகலான சந்துகளினூடே நடந்தேன்.

நூற்றாண்டுகள் கடந்தும்

கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்

இன்னும் சிதறிக்கிடந்தன.

தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்

கண்கள் படாமலும் காமம் சுடாமலும்

பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.

என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி

ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்

இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

நினைவுகளின் தகிப்புத்தாளாது

நிமிர்ந்து நின்ற நினைவுசின்னத்தின் அடியில் அமர்ந்தேன்.

அதன் வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தவென்றறியேன்.

ஆனாலும் அதன் மடியில் இருந்தது ஒரு கவிதை:

"இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை

ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது

நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".*

ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும்

எனது நகரங்களில் என்றாவது ஓர் நாள்

நானும் நினவுச்சின்னமொன்றை எழுப்புவேன்.

ஏனேனில் யுகங்களைக்கடந்து செல்ல விரும்பும்

அற்ப மனிதன் நான்.

மனிதர்களற்ற வெளியில் நுழையும்;

சூரியன் விழுந்து சிவப்பாகும் இரவு நதிப்படுக்கையில்

நான் சரிந்தபோது,

என் காதருகில் கேட்கிறது

என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம்.

http://thevaabira.blogspot.com/2011/10/blog-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகரங்கள்

தேவ அபிரா

நூற்றாண்டுகள் கடந்தும்

கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்

இன்னும் சிதறிக்கிடந்தன.

தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்

கண்கள் படாமலும் காமம் சுடாமலும்

பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.

என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி

ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்

இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

http://thevaabira.bl...og-post_03.html

இந்த நகரத்தை எனக்கு நன்கு தெரியும்!

எவ்வளவு அழகாக தேவ அபிரா, அதன் சரித்திரத்தையே சில வரிகளுக்குள் வடித்து விட்டார்!

நன்றிகள், கிருபன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கவிதை! நன்றி கிருபன் தேடித் தந்ததிற்க்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு தசாப்தங்களின் முன்பு

இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.

விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன

.நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன

அந்தக்காலத்தின்கல்லறையில்

ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது

"இது எமது நகரம்"...............................................

..மிகவும் அருமையாக் எழுதியுள்ளார் . பகிர்வுக்குனன்றி

Link to comment
Share on other sites

TreeMan.jpg

ஊர் வீதியை அலங்கரித்து

வழி பிரிக்கும் முச்சந்தியில்

ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம்

பிரச்சனை கூடும் பஞ்சாயத்து

மனிதர்களின் சொல்லடி பட்டு

மௌனமாக நிற்கும் மரம்

தன் நிழல் மடியில்

இளைப்பாறும் வழிபோக்கர்கள்

கிளைகாளால் விசுறும் மரம்

தொங்கி விளையாடும் சிறுவர்கள்

வளைந்து கொடுக்கும் கிளைகள்

அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம்

வெட்டி நியாயம் அடுக்கியபடி

ஊர்க்கதை பேசும் பெருசுகள்

வேடிக்கை பார்க்கும் மரம்

தாய்ப் பறவைகள் இரைதேடி

கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள்

காற்றே மெல்லமாய் வீசு

என்குழந்தைகளை நசுக்காதீர்கள்

மௌனமாக வினவும் மரம்

காலடியில் உதிர்ந்த சருகுகள்

தளிரும் கிளைகளை களையுங்கள்

என் தலையை வெட்டி

பாவம் சுமக்காதீர்கள்

மரத்தில் பேய் இருக்கு

யாரோ சொன்ன பொய்

முறைத்துக் கொண்டு ஊர்மக்கள்

மனிதர்களின் இல்லாப் பழிசுமந்து

வார்த்தைகள் இன்றி அழுகிறது

பேச இயலாத மரம்

வளர்த்து விட்ட ஊர்மக்கள்

உறவாட மறுக்கையில்

ரணமாகிறது மரத்தின் தனிமை

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னை முன்வைத்து .

சமீபமாக காணமல்

போய்விட்டான் .

மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை

தேடி எடுப்பது போல சுலபமானது

என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்

அது அப்படி இருக்கவில்லை.

தெரிந்தவர்களிடம்

சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த

கோடை நாளில்

இரயில் நிலையத்தில்

என்னைக் கண்ட

காக்கை

மரணம் நிகழாத

பகுதி ஒன்றில்

பிணம் தின்னும் பறவைகளுக்கு

இரையாக கிடப்பதாகச்

சொன்னது

தொலைக்கப்படுவதும்

மீட்டெடுப்பதுவும்

எப்போதும்

அத்தனை எளிமையானதாக இல்லை .

நன்றி - உயிரோசை

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தனிமை என்னும் மதுபானம்…

கவிதா

நான் அவளது

இறுதி வேர்.

என்னிடம் இருக்கிறது,

அவள் விட்டுச் சென்ற

தனிமையின்

எச்சங்கள்.

அவளை புசித்து பெருகிய

அவளது தனிமைகள்

என்னிடம் தமது

ரகசியங்களை

வெளியிட்டுக் கொண்டன.

புராதான சுவை கொண்ட

அந்த தனிமைகளை

சிறு மதுக் குவளைகளில்

ஊற்றி

உங்களுக்கு

பருகத்

தருகிறேன்.

உங்கள் போதையின் பிறழ்வுகளுக்காக

காத்துக் கொண்டிருக்கிறாள்

தனிமை தின்ற மீதமாய்

அலைந்து கொண்டிருக்கும்

அவள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபங்கள் முடிவில்

ராசை நேத்திரன்

சம்பளத்தை நோக்கிய

மாத மாத வாழ்க்கை பயணம்

எளிதாய் மனித வாழக்கையின்

நாட்களை நொடிப்பொழுதில்

தின்று விடுகிறது

தேவைகளை பூர்த்தி செய்து

கொள்ளவே வாழ்க்கை பயணம்

என்று மாறிவிடுவதில் சாதிக்க

பிறந்த மனிதன் எங்கே யோசிக்க

சாதனையின் படிக்கட்டுக்களை

திடும் என திரும்பி பார்க்கிறேன்

பள்ளிப்பருவம் மறக்க தொடங்கி

அனிச்சையாய் ஓடிக்கொண்டு

இருக்கிறேன் .....

இது போலவே இன்னும் சிறிது

நாட்களில் கல்லூரி காலம்,

உயிர் நண்பனின் நட்பு,

உறவின் பாலம்

கொஞ்சம் கொஞ்சமாய்

தேயத்தொடங்கிவிடுகிறது

நாட்காட்டியை போலவே

ஞாபங்களும்.......

http://www.vaarppu.com/view/2571/

  • Like 2
Link to comment
Share on other sites

என்னை முன்வைத்து .

சமீபமாக காணமல்

போய்விட்டான் .

மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை

தேடி எடுப்பது போல சுலபமானது

என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்

அது அப்படி இருக்கவில்லை.

தெரிந்தவர்களிடம்

சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த

கோடை நாளில்

இரயில் நிலையத்தில்

என்னைக் கண்ட

காக்கை

மரணம் நிகழாத

பகுதி ஒன்றில்

பிணம் தின்னும் பறவைகளுக்கு

இரையாக கிடப்பதாகச்

சொன்னது

தொலைக்கப்படுவதும்

மீட்டெடுப்பதுவும்

எப்போதும்

அத்தனை எளிமையானதாக இல்லை .

நன்றி - உயிரோசை

இதை எழுதியது யார்....நல்லதொரு கவிதை

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முகமூடிகள்

ராமலக்ஷ்மி

ஒன்றல்ல இரண்டல்ல

ஒருநூறு முகமூடிகள்

அணிந்தது அறியாதபடி

தோலோடு சங்கமமாகி

சதையோடும் எலும்போடும் ஊடுருவி

பளபளத்த முகமூடிகளுக்கே

எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள்

அத்தனையும் ரசித்தபடி

இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி

உயிரோடு ஒன்றிப்போய்

உலகுக்கான அடையாளமாகி

ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில்

விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம்

கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத்

தன்னிச்சையாக

ஒவ்வொன்றாக அன்றி

ஒட்டு மொத்தமாக

சுற்றம் மறந்து நிதானம் இழந்து

மதி மழுங்கி மற்றவர் வருத்தி

மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில்

எதிரே இருந்த கண்ணாடியை

எதேச்சையாய் ஏறிட

பேதலித்து அலறுகிறது சுயமுகம்

தன்கோரம் தானே காணச் சகியாமல்.

***

உடைந்து போன பொம்மையைக்

கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த

குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும்

விளையாட்டுச் சாமான்களைப் போலக்

கலைந்து கிடந்தது வீடு

கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்

கலங்கி நின்ற மனதை

ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்

தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின

ஆத்திரத்துடன் தத்தமது முகமூடிகளை

குவிந்த முகமூடிகளுக்குள்

அமுங்கி மூச்சுத் திணறி

மீட்கக் கோரி வெளி நீண்ட கையை

ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட

மகானுபாவர்,

”வருத்தம் விடு!

மனிதருக்காகவே

படைக்கப்பட்டவைதாம் இவை.

சேர்ந்து கிடப்பதில்

இன்னும் சிறப்பானதாய்த்

தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள

கிடைத்த வாய்ப்பாகப் பார்”

உபதேசித்தார்

நழுவத் தொடங்கிய தன் முகமூடியை

கெட்டியாகப் பிடித்தபடி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருங்குழி சேரும் பேச்சொலி

ப்ரவின்துள்சி

முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்

அது ஒரு கோழியிறகின் மேல்

காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது !

பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…

அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை

மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !

பிறகு என்னைப் பற்றி பேசினோம்…

அவை ஒரு சாம்பல் நிற பூமியின்

புதினமென நம்பினாய் !

அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…

ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்

பத்திரமாக கொண்டு சேர்த்தாய் !

தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…

பின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய

பேச்சுகள் தவிற்க முடியாததாகின !

எதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்

மௌனம் நம் மத்தியில்

நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டது !

பின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…

அவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்

வேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடைந்தோம் !

பிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…

இதுவரை பேசியவை எல்லாம்

சட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்தது !

பின் நாட்களில்…

யாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்

நாம் முன்பு எப்போதையும்விட

மிகவும் கவனத்துடன் இருந்தோம்

..!

Edited by சுபேஸ்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சறைப்பெட்டி

சின்னப்பயல்

அஞ்சறைப்பெட்டியில்

அம்மா போட்டு வைத்த

மீதக்காசில்

சீரகத்தின் மணமும்

கடுகின் வாசமும்

வெந்தயத்தின் நெடியும்

மஞ்சள்பொடியின் கமறலும்

மிளகின் காரமுமாக

அடித்த வாசம்

இன்னும் என் மனதினுள்

வட்டமடிக்கிறது

அந்தக்காசில்

வாங்கித்தின்ற

மிட்டாயின் மணம்

ஏனோ நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் நீக்கமற

எம்.ராஜா

துடைத்துக் கவிழ்த்த தேநீர்க் கோப்பையில்

இன்னமும் தேங்கியிருக்கிறது

இறந்த காலத்தின் சுவை ஒன்று

காலியான தண்ணீர்க் குடுவையிலும்

ஒட்டிக்கொண்டு இருக்கின்றன

சில ஈரத் துளிகள்....

ஒரு வெற்றுத் தாளில் வாசிக்கப்படுகிறது

அடர்மௌனத்தின் நீள்வாக்கியம்

யாருமற்ற வீட்டை சுற்றி வருகின்றன

அமானுஷ்யங்களின் நிழல்கள்

நிஜத்தில்

எந்த வெற்றிடமும் காலியாக இருப்பதில்லை...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முகங்கள்

ப.பார்த்தசாரதி

ஒவ்வொருநாளும் பல முகங்களைக்

கையிலேந்தி அலைகிறேன்

யாருக்கும் தெரியாமல்

அவற்றை மறைத்து வைத்து

மீண்டும் அணிந்துகொள்கிறேன்.

ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு

முகம் மாட்டி அலைகிறேன்.

எந்த முகம் என்முகம்

என்பது யாருக்கும் தெரியாமல்

சமமாக பாவித்து வருகிறேன்

ஒருவருக்குத் தெரிந்த

முகம் மற்றவர்களுக்குத்

தெரிய வாய்ப்பு கொடுக்காமல்

கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன்

சில துளி வினாடிகளில்

நல்லவன் கெட்டவன்

வஞ்சகன் சாது

அப்பாவி வெகுளி

என ஒவ்வொருமுகங்களுக்கும்

பெயர் வைத்து தினமும்

அதற்கு உணவூட்டி

வளர்த்து வருகிறேன்

ஒரு நாள் அகக்கண்ணாடியில்

என் சொந்த முகம் பார்க்கையில்

அது வெளிறிப் பழுதடைந்து

அழுகி அகோரமாய்

என்னைப் பார்த்து சப்தமாய் சிரித்தபடியே

இறந்துகொண்டிருந்தது

ஒவ்வொருநாளும் பல முகங்களைக்

கையிலேந்தி அலைகிறேன்

யாருக்கும் தெரியாமல்

அவற்றை மறைத்து வைத்து

மீண்டும் அணிந்துகொள்கிறேன்.

http://www.uyirmmai....s.aspx?cid=5448

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பச்சை முடிஞ்சு போச்சு பிறகு வந்து குத்திறன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதைகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் பரிசுகள்

ஆர்.அபிலாஷ்

திருமணநாள் பரிசுகள்

குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன.

வருடங்கள் முன் பின் சென்று

தூசு படிந்து

நிறம் மங்கி வரும்

ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட

விளையாட்டுப் பொருட்களைப் போல்

இன்று மாலை

பழைய பரிசுகளுடன்

அமர்ந்திருக்கிறேன்.

மஞ்சளான மாலை

அழுகும் இலைகளின் சலசலப்புடன்

இரவில் வெடிக்கும் பூக்களின்

வாசனையையும்

கொண்டு வருகிறது.

மாடி ஜன்னலுக்கு வெளியே

நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால்

ஒரு சோர்வுற்ற சூரியன்

இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும்

தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல்

எதையாவது பற்றிக் கொள்ள

விழைகிறான்.

எதிர்பாராது

மழை பெய்யத் துவங்குகிறது

தயாரற்ற மனிதர்கள்

கூரைகள் தேடி சிதறுகிறார்கள்.

கால் இடறி தடுமாறுகிறேன்

உனது பரிசுப் பொருட்கள்

கலந்து விடுகின்றன

எனதுடன்.

மீண்டும் மீண்டும்

அவற்றை

இரு பகுதியாய் பிரிக்க முயன்று

தோல்வியடைகிறேன்

பின் காலவரிசைப்படி

கலைத்துக் கலைத்து

அடுக்குகிறேன்.

மழை நிற்க வெகுநேரமாகிறது

வெப்பம் கிளம்பி

பின்

பனி பொழியும் போது

திகைத்துப் போய்

பரிசுப் பொருட்கள் மத்தியில்

தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல

அமர்ந்திருக்கிறேன்.

வாசலில்

மெல்ல தும்மியபடி

நுழைகிறாய்.

உன்னிடமிருந்து

பரிசுப் பொருளை வாங்கி

அருகில் வைத்து

உனக்கான புதுப் பரிசைக்

குவியலில் தேடி

தோற்று

வேறுவழியின்றி

கண்களில் மன்னிப்பை வைத்தபடி

அங்கு

ஆகப் பழசான பரிசு ஒன்றைப்

பொறுக்கி

நீட்டுகிறேன்

அதில் மிகச்சரியாய்

குறிக்கப்பட்டுள்ளது

இன்றைய தேதி...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.