Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]துரோகம்[/size]

சுழியன்

sword1.jpeg

இந்த கூர்வாள் நண்பர்களுக்கானது.

துரோகத்தால் முதுகில் கிழிக்க

பிரத்யேகமாய் வடிவமைத்தோம்

நாங்கள் சேர்ந்து, சேர்ந்து விளையாடினோம்

துரோகத்தின் ஒவ்வொரு பாடத்தையும்

செயல்முறை விளக்கமாய்

செய்து, செய்து பார்த்தோம்

ஒவ்வொரு முதுகாய் தேடித் தேடி குத்தினோம்

உதிரம் தெறிக்க கொலையாகுபவர்கள்

பதறிச் சரிவதை நிதானமாய் ரசித்தோம்

"ஒருநாள் எங்களுக்குள்ளான

பரஸ்பர நம்பிக்கை

பொய்க்கும் போது

எங்களை நாங்களே

குத்திக் கொல்வோம்"

....

...

...

...

என ஆவலாய் காத்திருக்கும்

உங்கள் முதுகு தான்

எங்களின் அடுத்த இலக்கு !

http://suzhiyam.blog.../blog-post.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]யாதுமாகி …[/size]

[size=4]ஷம்மி முத்துவேல்[/size]

[size=5]
நாற்புறச்சட்டகத்தின் பின் இருப்பது தெரியாமல்

பேசிக்கொள்கிறார்கள் ..

நிறமிகளின் பின்னே நரை மறைத்து நிரந்தரமாகவே

அவை சென்று விட்டதாகவே

நினைத்து கொள்கிறார்கள் …

கண்ணோரச் சுருக்கங்களையும்

மோவாயின் தளர்ந்த தசைகளையும்

நீவி இழந்தவைகளை கண நொடிகளில்

பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்

குழந்தையிடமும் சிறியவர்களிடமும் மட்டுமே

தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து

இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில்

சமைத்து பரிமாறுகிறார்கள் ..

தோல்விகளை திரையிட்டு மறைத்து

வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் ..

புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக

பறைசாட்டுவர் …

சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும்

இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் …

“தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை

சுழலவிடுவர் …

சற்றே அயரும் நேரத்தில்

நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர்

சிலவரிகளில் நீங்கள் வாசிக்கும் பொருட்டு

அவர்கள் உங்கள் அருகிலோ,

அல்லது நீங்களாகவோ

அல்லது நானாகவோ இருக்கக்கூடும் ..
[/size]

http://puthu.thinnai.com/?p=11669

Link to comment
Share on other sites

நல்ல கவிதைகள். நானும் இத்திரியுடன் இணைந்திருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]முலைகளின் ஆல்பம்[/size]

[size=4]
சுகுணா திவாகர்
[/size]

boobs2.jpg

[size=5]பேருந்து படிக்கட்டு விளிம்பில்

நின்றுகொண்டிருந்த நான்

சடாரென்று கோணம் மாற்றினேன்

எனக்கும் மேலே

கைதூக்கி நின்ற பெண்களின்

மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே

மணமாகித் தாய்வீடு வந்திருந்த

எதிர்வீட்டுப்பெண்ணின்

மார்பு ரசித்தேன்

மாசமாயிருப்பாளோ என்னும்

உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட

கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய

கொழுத்த முலைகள்

இன்றைய இரவை

ஈரப்படுத்தக்கூடும்.

திரைகளெங்கும் நாயகிகள்

முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்

சரிசெய்துகொள்வது வேறு

நம் கனவுகளின் பரப்பை

அகலப்படுத்துகின்றன.

மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.[/size]

(நன்றி : கருப்பு 2002)

http://midakkumveli..../blog-post.html

  • Like 1
Link to comment
Share on other sites

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

  • Like 2
Link to comment
Share on other sites

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

இது உங்களுக்கு ஆபாசமாக தெரியவில்லையா? :unsure:

இங்கு நல்ல மாதிரி எழுதும் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் நம்பவில்லை. :lol: ஆனால் ஒரு இணைய தளத்தில் எழுதும் போது கொஞ்சம் அடக்கி எழுத வேண்டும். இல்லை அனைத்தையும் எழுத முடியும் என்றால் ஒரு பெண்ணை முழுக்க முழுக்க விபரிச்சு எழுதுவினம். அந்த அளவுக்கு அவர்களின் மன ஓட்டம் இருக்கும். :wub:

இன்று யாழ்களத்தில் பல திரிகளில் பலர் படு கேவலமாக கருத்து எழுதுகிறார்கள். இதையெல்லாம் இன்று அனுமதித்தால் நாளைக்கு இவற்றை வாசிப்பதற்கே இளைஞர் கூட்டம் யாழுக்கு படையெடுக்கும். :D அந்த பெயர் யாழுக்கு தேவையா? :wub:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை இணைக்கும் திரிக்கு பெயர் மனதை கவர்ந்த கவிதைகள்..அந்த அடிப்படையில் அது எப்படிப் பட்ட கவிதையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை..தங்கள் மனங்களை கவர்ந்தால் அதை மற்றவர்களும் பார்க்கட்டுமே என்று இணைக்கிறார்களோ தெரிய இல்லை.எல்லாம் எல்லார் மனதையும் கவரும் என்று யாரும் நினைத்து விட முடியாது..ஆபசமான கதை,கவிதைகளை வாசிக்கலாம் விரும்பியவற்றைப் பார்க்கலாம்..ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது..இப்படியான எழுத்துகளினாலயே ஆண்கள் முன்னாடி பெண்களுக்கு போக தயக்கமாக இருக்கிறது..யாரு,யாரை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள் என்று யோசிக்க முடியாது இருக்கிறது.யாழை,யாழாக இருக்க விடுங்கள்..குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றி விடாதீர்கள்..இந்தளத்துக்கு உரிய அண்ணா சொல்லி,சொல்லி களைச்சு போய் மேளனமாகியே விட்டார்.யாரும் சண்டைக்கு வராதீர்கள்..மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது இன்னொருவருக்குக் கலை அம்சமாகத் தெரியலாம். எல்லாம் பார்வையைப் பொறுத்தது. வெளிவேஷதாரிகளைவிட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை!

மேலும் யாழ் களத்தின் விதியை மீறி இருந்தால் தாராளமாக Report பட்டனை அழுத்தி உங்கள் உள்ளக்குமைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்!

கவிதைகளை இணைக்கும் திரிக்கு பெயர் மனதை கவர்ந்த கவிதைகள்..அந்த அடிப்படையில் அது எப்படிப் பட்ட கவிதையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை..தங்கள் மனங்களை கவர்ந்தால் அதை மற்றவர்களும் பார்க்கட்டுமே என்று இணைக்கிறார்களோ தெரிய இல்லை.எல்லாம் எல்லார் மனதையும் கவரும் என்று யாரும் நினைத்து விட முடியாது..ஆபசமான கதை,கவிதைகளை வாசிக்கலாம் விரும்பியவற்றைப் பார்க்கலாம்..ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது..இப்படியான எழுத்துகளினாலயே ஆண்கள் முன்னாடி பெண்களுக்கு போக தயக்கமாக இருக்கிறது..யாரு,யாரை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள் என்று யோசிக்க முடியாது இருக்கிறது.யாழை,யாழாக இருக்க விடுங்கள்..குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றி விடாதீர்கள்..இந்தளத்துக்கு உரிய அண்ணா சொல்லி,சொல்லி களைச்சு போய் மேளனமாகியே விட்டார்.யாரும் சண்டைக்கு வராதீர்கள்..மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கள்.

நான் இங்கு எதையும் திணிக்கவில்லை. தலைப்பில் உள்ளதுபோன்று மனதைக் கவர்ந்து இருந்ததால் இணைத்தேன். உங்களுக்குக் குப்பையாகத் தெரிவதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் எல்லோருக்கும் குப்பையாகத் தெரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது!

Link to comment
Share on other sites

முலைகளின் ஆல்பம்

சுகுணா திவாகர்

boobs2.jpg

பேருந்து படிக்கட்டு விளிம்பில்

நின்றுகொண்டிருந்த நான்

சடாரென்று கோணம் மாற்றினேன்

எனக்கும் மேலே

கைதூக்கி நின்ற பெண்களின்

மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே

மணமாகித் தாய்வீடு வந்திருந்த

எதிர்வீட்டுப்பெண்ணின்

மார்பு ரசித்தேன்

மாசமாயிருப்பாளோ என்னும்

உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட

கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய

கொழுத்த முலைகள்

இன்றைய இரவை

ஈரப்படுத்தக்கூடும்.

திரைகளெங்கும் நாயகிகள்

முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்

சரிசெய்துகொள்வது வேறு

நம் கனவுகளின் பரப்பை

அகலப்படுத்துகின்றன.

மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.

(நன்றி : கருப்பு 2002)

http://midakkumveli..../blog-post.html

நல்லதொரு கவிதை. பகிர்வுக்கு நன்றி கிருபன் !!

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

நல்ல கருத்து !!

Link to comment
Share on other sites

[size=5]மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size]

[size=5]எனக்கு இந்த வரிகள் மிக உண்மையாக தெரிகின்றன [/size].மனம் விட்டு எதுவித சஞ்சலமுமின்றி கதைக்கும் பெண்களிடமும் கூட, சிலவேளைகளில் அன்று அவர்கள் அணிந்திருக்கும் உடை என்னை சற்று தள்ளி வைத்துவிடும் .பிழை என்னில் என்றுதான் நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது இன்னொருவருக்குக் கலை அம்சமாகத் தெரியலாம். எல்லாம் பார்வையைப் பொறுத்தது. வெளிவேஷதாரிகளைவிட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை!

மேலும் யாழ் களத்தின் விதியை மீறி இருந்தால் தாராளமாக Report பட்டனை அழுத்தி உங்கள் உள்ளக்குமைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்!

நன்றி உங்கள் பதிலுக்கு. வெளிவேசதாரிகளை விட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை தான்.

அதற்காக இணையதளத்திலும் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றால் ஆபாசத்தை தூண்டும் படங்களை இணைக்க வேண்டாமென்று ஒரு கள விதியை ஏன் கொண்டு வந்தார்கள் என்று தான் தெரியவில்லை. அதையும் வெளிப்படையாக இணைக்க விட்டிருக்கலாமே? அப்படி விடாதது ஏன் என்று உங்களாலும் ஊகிக்க முடியவில்லை.

சபை நாகரீகம் கருதி ஒருவருடன் வாடா போடா என்று கதைக்காமல் விடுவது போல் இணைய தள நாகரீகம் கருதி சில விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது என் கருத்து....

நிர்வாகத்திடம் ஒரு திரியில் கூறியிருக்கிறேன். நிர்வாகத்தின் பதில் வந்த பின் அவர்களுக்கு பதிலளிக்கிறேன்.

நான் இங்கு எதையும் திணிக்கவில்லை. தலைப்பில் உள்ளதுபோன்று மனதைக் கவர்ந்து இருந்ததால் இணைத்தேன். உங்களுக்குக் குப்பையாகத் தெரிவதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் எல்லோருக்கும் குப்பையாகத் தெரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது!

நீங்களே மறைமுகமாக சொல்கிறீர்கள் இது ஆண்களுக்கான இணையதளம் என்று. ஆண்கள் உங்கள் கவிதையை ரசிப்பார்கள் தானே?

ரதி அக்கா பெண் தானே என்று என்னை கேட்க வேண்டாம். அவர் ஆணா பெண்ணா என்று எனக்கு தெரியாது. ஆனால் யாழுக்கு பல பெண் வாசகர்கள் உள்ளனர்.

நன்றி உங்கள் கருத்துக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

அப்படியா? மிக்க நல்லது ரதி... உங்களது மார்புகளை ரசிக்கலாமா? உங்களின் படங்கள் தரமுடியுமா? நான் ஓரினச் செயர்க்கயாளன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டி உள்ளது. மார்பு ரசிக்கலாம் என்ற பிறகு என்ன சொந்தங்களில் ஏற்றத் தாழ்வு... எல்லோரையும் ரசியுங்கள்...இந்தக் கவிதையை இரசிப்பவர்களின் உறவுக்காரப் பெண்கள் அனைவரினதும் மாரப்பினையும் ரசிக்க ஆசைப்படுகின்றேன்...

Edited by தூயவன்
  • Like 1
Link to comment
Share on other sites

(நன்றி : கருப்பு 2002)

நன்றி கரும்பு 2002 என மேலோட்டமாக பார்த்தபோது தென்பட்டது. எனது இதயம் திக் என்று அடித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? மிக்க நல்லது ரதி... உங்களது மார்புகளை ரசிக்கலாமா? உங்களின் படங்கள் தரமுடியுமா? நான் ஓரினச் செயர்க்கயாளன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டி உள்ளது. மார்பு ரசிக்கலாம் என்ற பிறகு என்ன சொந்தங்களில் ஏற்றத் தாழ்வு... எல்லோரையும் ரசியுங்கள்...இந்தக் கவிதையை இரசிப்பவர்களின் உறவுக்காரப் பெண்கள் அனைவரினதும் மாரப்பினையும் ரசிக்க ஆசைப்படுகின்றேன்...

நான் மேலே எங்கேயாவது ஆண்களை பெண்களது மார்புகளை ர‌சிக்க சொல்லிக் கேட்டேனா? அல்லது ரசியுங்கள் என்றாவது சொன்னேனா?...உங்கள் மன சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கோ இது வரை எந்த பெண்ணையும் தப்பான கோணத்தில் உங்கள் கண் பார்க்கவில்லை?...உங்களை அறியாமலே உங்கள் கண் தப்பான எண்ணத்தில் எந்தப் பெண்ணையும் நோக்கவில்லை?...சில ஆண்கள் வேண்டுமென்றே தெரிந்தே இந்த தப்பை செய்கிறார்கள் பல ஆண்கள் தங்களை அறியாமல் இந்த தப்பை செய்கிறார்கள்...அவர்களது வளர்ப்பு,தங்கள் குடும்ப கெளர‌வம் அதை விட முக்கியமான மனக் கட்டுப்பாடு போன்ற கார‌ணங்களால் பல ஆண்கள் அட‌க்கி வாசிக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச கொஞ்சப் பேர் ஆண்களுக்குத் தான் தப்பான கண்ணோட்டம் என்று காட்ட நிற்கினம். பெண்களுக்கும் ஆணைக் கண்டால்.. தப்பான கண்ணோட்டம் ஏற்பட்டு.. தொடை நனையிறது எல்லாம் நடக்காம். அதுகளையும் கவிஞர்கள் எழுத்தில வடிக்கலாமே. வேணுன்னா அதுக்குப் பின்னால உள்ள biology ஐ நாங்க விலாவாரியா சொல்லுறம்.

பெண்ணின் இயல்பு ஆணைக் கவர்வது இயல்பு. அது தப்பு அல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. அதேபோல்.. ஆணின் இயல்பு பெண்ணைக் கவர்வது இயல்பு. அது தப்பல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. இவை எல்லாமே இயற்கை. கவருது என்பதற்காக.. கண் வைக்கிறது போல.. கை வைக்க ஏலாது. அங்க தான் சட்டம்... நடத்தை.. பழக்க வழக்கம்.. பண்பாடு.. தனிமனித ஒழுக்கம்.. சமூகம்.. வந்து நிற்குது.

அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! :D:lol:

வேணுன்னா சொல்லுங்க.. ஒளிப்பு மறைப்பு இன்றி இப்படியான தலைப்புகளையும் போட்டு விவாதிப்பம். ஆங்கிலக் களங்களில் விவாதிக்கிறாங்க. உண்மையில் அதில தப்பில்ல. மாறாக உயிர்.. உணர்ச்சி.. தூண்டல்.. உடலமைப்பு.. பற்றிய அறிவு தான் வளரும். ஆனால்.. யாழ் அனுமதிக்குமா.. யாழில உள்ள முலையை மட்டும் ரசிக்க விடுற.. படிதாண்டாப் பத்தினிகள் அனுமதிப்பினமா..???!

கலவன் பள்ளியில் உள்ள பிரச்சனை ஒன்று........ கேள்வியாக..............

Can a girl get wet in school when looking at a hot guy? :lol:

இங்க சில பேருட நினைப்பு என்னென்னா.. முலை.. மார்பு.. பற்றி கவிதை எழுதிட்டா அது புரட்சி.. வெளிப்படை என்றது. அதை விட மேல.. கீழ போறாங்களே இல்ல. காலம் காலமா கொப்பற்ற கொல்லைக்க தான் சுத்துறாங்க...! அதைவிட நிறைய இருக்குது.. அந்தரங்க அறைகளுக்குள் நடக்கும் தில்லானாக்கள்..! அந்தப் பக்கம் புரட்சி செய்ய வேணுன்னா... சொல்லுங்க.. நாங்களே அந்த மிச்சப் புரட்சியை செய்ய ஆரம்பிக்கிறம்...! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

[size=5]மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size]

[size=5]எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.[/size]

ஒரு படைப்பாளிக்கு படைப்பு நேர்மை இருக்க வேண்டும் . என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கவிதையைப் படைத்தவரின் படைப்பு நேர்மையை பாராட்டுகின்றேன் . ஒருவரின் மன அழுக்கையுஞ் சொல்லி அதன் இறுதி வரியில் பார்பவரின் கண்களை மார்பகத்தின் காம்புகளை உருவகித்துள்ளார் . மேலும் ஆபாசத்திற்கு வரைவிலக்கணம் சொல்வது கடினம் . அத்துடன் கவிதைக்கு மொழியில்லை . எம்மால் ஆபாசமாகப் பார்கப்பட்ட காமசூத்திரமும் , கொக்கோசமும் மேலைநாடுகளில் கலைப்பொக்கிசமாகவே பார்க்கப்பட்டது . அத்துடன் இந்தப் பதிவில் யாழ் ஆண்களுக்கானதா பெண்களுக்கானதா என்பது அர்த்தமற்ற கருத்தாடலாகவே எண்ணுகின்றேன் . இந்த எனது கருத்துக்களுக்காக எல்லோரும் என்னை ஆதரிக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டிய கவிதை

சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிழையாகவும் இருக்கிறது.

எனக்கும் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை.

இதை இணைத்திருப்பது கிருபன்

அவர் மேல் தனி மரியயாதையுண்டு.

எனவே பிழையானதை அவரும் இங்கு இணைக்கமாட்டார் என்ற அபிப்பிராயம் என்றும் உண்டு.

துளசி

இத்திரியிலிருந்து தள்ளியிருங்கள். (சுட்டிக்காட்டி விட்டீர்கள். இனி..)

மற்ற கருத்தாளர்களையும் புரிந்து கொள்ளுங்கள். அதிலும் நீண்டட கால உறுப்பினர்களின் நீண்ட கால எழுத்துக்குறித்த ஒரு புரிதல் அவசியம் தங்களுக்கு.

நாம் நினைப்பவை மட்டுமே யாழில் வரணும் என்பதும் யாழ் விடுதலைக்கானது மட்டுமே என்பதும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் வேலைதான்.

அதை யாழ் செய்வதை யாழின் வளர்ச்சி கருதி நானும் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் களன்காண் படலம் 5-வது பாட்டு

[/size]

[size=3]

நல்குவதென் இனி நங்கை கொங்கையைப்

புல்குவ பூணும் அக் கொங்கை போன்றன;

அல்குலின் அணிகளும் அங்குலாயின ;

பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே.

[/size]

[size=3]

மேலேயுள்ள பாடல், கம்பராமாயணத்தில் வருகின்றது!

[/size]

[size=3]

இதைவிடக் கேவலமாகவா இருக்கிறது,, கிருபன் இணைத்த கவிதை?

[/size]

[size=3]

கருத்துச் சுதந்திரம், மிகவும் முக்கியமானது!

[/size]

[size=3]

அதில் தலையிடுவது, யாழ் களத்தின் கருத்துச் சுதந்திரத்தை, மறுப்பது போலாகும்!

[/size]

[size=3]

கவிதை, ஆபாசமாக எனக்குத் தெரியவில்லை!

[/size]

Link to comment
Share on other sites

முன்பு வாசித்த பொழுது பிடித்த ஒரு கவிதை. முழுக்க ஆணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

இதே போல மார்பகங்களின் மீது படியும் ஆண்களின் பார்வைக்கெதிரான பெண்ணின் மன உணர்வுகளை கூறிய நல்லதொரு கவிதை முன்பு வாசித்தேன். சரியாக ஞாபகம் வரவில்லை.

Link to comment
Share on other sites

அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! :D:lol:

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட்டதே இங்கு பிரச்சனைக்குக்காரணம்போல் தெரிகின்றது.

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி/அறிவியல் எனும் பெயரில் பலவிடயங்களினுள் புகுந்துவிளையாடுவதுபோல் இலக்கியரசனை எனும்பெயரில் இதை அணுகமுடியாதோ? விஞ்ஞானத்துடன் இலக்கியத்துக்கும்தானே நோபல் பரிசு கொடுக்கின்றார்கள்?

Edited by கரும்பு
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட்டதே இங்கு பிரச்சனைக்குக்காரணம்போல் தெரிகின்றது.

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி/அறிவியல் எனும் பெயரில் பலவிடயங்களினுள் புகுந்துவிளையாடுவதுபோல் இலக்கியரசனை எனும்பெயரில் இதை அணுகமுடியாதோ? விஞ்ஞானத்துடன் இலக்கியத்துக்கும்தானே நோபல் பரிசு கொடுக்கின்றார்கள்?

தாங்கள் இன்னொரு தடவை எங்கள் கருத்தை சரியாக உள்வாங்கவில்லை.

நாங்கள் அந்தக் கவிதையை கண்டிக்கவில்லை. ஏதோ முலை பார்த்து... முலைக்காம்பளந்து..ஆண்கள் மட்டும் தான் ஈரக்காய்ச்சல் அடைவது போலவும்.. ஆண்கள் சதா முலை பார்க்கிறதையே கடமையா செய்துக்கிட்டு இருப்பது போலவும் சொல்லப்படும் கருத்தையே மறுதலிக்கிறம்.

ஆண்களைப் போல.. பெண்களுக்கும்.. ஆண்களின் பலதையும் பார்த்து.. ஈரக்காய்ச்சல் வருகின்றன.. கையை.. விரலை..காலை.. இன்னும் இன்னும் பொருட்களை விட்டு குடையுறாங்க.. அதுகளையும் எழுதுங்க சாமியோவ்... என்று தான் சொல்கிறம்.

அதுபோக.. இலக்கியமோ.. புதுக்கவிதையோ.. கலவியலில் காணும் புதுமையை.. நிர்வாண கோலத்திலும் நாங்க காட்டலாம். அதற்கான வழியையும் யாழில திறக்கனும் என்று தான் சொல்லுறம்.

அதுகளை ஆபாசம்.. பாலுணர்வைத் தூண்டுபவை என்று வரையறுக்கிற நாங்கள்.. இந்த வகையான.. கவிதைகளைப் படிச்சு ஜட்டிகள்.... ஜங்கிகள்.. வீக்கமடைவது.. ஈரலிப்படைவது.. பாலியல் தூண்டல் இல்லையோ...! இல்லக் கேட்கிறன்.... நியாயத்தை நியாமமாச் சொல்லனும்..???! ஏதோ திறந்த மனசோட எழுதினம் என்று பாராட்டுறவை.. இதுகளையும் திறந்த மனசோட பகிர்ந்து கொள்ள வேணும்..???! அது தானே தர்மம்..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பெண்களின் மார்புகளை இரசிக்கவிடின், அவன் தன்னினச் செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்றோ, அல்லது பச்சைப் பொய் சொல்லுவனாகத் தான் இருப்பான் என்ற கருத்தினையும், உங்களின் எழுமாந்தமான முடிவுக்காகத் தான் அந்தப் பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டது. அப்படி ஒரு முடிவினை எடுக்க நீங்கள் யார்?? அது ஒரு வகையில் ஆண்கள் பெண்களின் அங்கங்களை ரசிக்கச் சொல்லிச் செய்கின்ற தூண்டுதலே....

அப்படி ரசிப்பது தப்பில்லை எனில், உங்களின் குடும்பத்தினரை முதலில் நினைத்துக் கொண்டு கதையங்கள்

நான் சுத்தமானவனாகக் காட்டவரவில்லை. ஆனால் அந்த உணர்வினைப் பொது இடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை. கலவி எல்லோரும் தான் கொள்கின்றார்கள் . அதற்காக அதை இங்கே வெளிப்படுத்த முடியுமா? அதற்கென்று தளங்கள் இருக்கின்றன. அவ்வகையான தளங்களில் யாழும் இணைந்து கொள்ளுமாயின், வெளிப்படுத்துங்கள்.

பெண்களின் உடலில் உள்ள அங்கங்களையோ, அல்லது ஆணின் உடலில் உள்ள அங்கங்களையோ பாலியல்ரீதியாக வர்ணிப்பது, கதைப்பது எல்லாம் சரியாகத் தோன்றவில்லை.

உங்களுக்கு ஏதாவது பாலியல் பிரச்சனை என்றால் தகுந்த வைத்தியரை நாடுங்கள்... அதை விட்டு விட்டு, ஆண்கள் இப்படி, அப்படி என வரையறை எங்களுக்குத் தரத் தேவையில்லை

  • Like 1
Link to comment
Share on other sites

கவுதைப்பக்கம் எனக்கு சுத்த சூனியம் போன்றது...............சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல்.........

இன்றுதான் இந்த திரிக்குள் நோட்டமிட்டேன்.......அப்பாடா கவிதை என்றால் இதுதானா .....என்பதைப்புரிந்து கொண்டேன் ..............முடிவும் எடுத்துள்ளேன் ............இந்தப்பக்கம் வரக்கூடாதடா சுப்பா................

தமிழ்சிறி இணைக்கும் வண்ணத்திரை காட்சிகள் போதும் .......................... :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

துளசி,

நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும்.

இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்றால் , இக் கவிதையில் சொல்லப்பட்டது எதுவுமே ஆபாசம் அல்ல.

இதில் எது ஆபாசம் என்பதை யார் தீர்மானிக்க முடியும்? முன்னர் நான் டிசே எழுதிய ஒரு கவிதையை இணைத்த போது நிகழந்த்த வாதப் பிரதிவாதங்கள் நாபகம் வருகிறது.அந்தக் கவிதையும் பஸ்ஸில் பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பவர்கள் பற்றி எழுதப்பட்டதாக இருந்தது.

ஆனால் அதில் காரசாரமாக எழுதியவர்கள் தற்போது , தங்கள் கருத்துக்களில் முதிர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் நீங்களும் முதிர்ச்சி பெறுவீர்கள். கருத்துக் களம் அதற்காகத் தானே இருக்கிறது.பலர் வருவார்கள்,போவார்கள்.அவற்றில் எமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.