Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]துரோகம்[/size]

சுழியன்

sword1.jpeg

இந்த கூர்வாள் நண்பர்களுக்கானது.

துரோகத்தால் முதுகில் கிழிக்க

பிரத்யேகமாய் வடிவமைத்தோம்

நாங்கள் சேர்ந்து, சேர்ந்து விளையாடினோம்

துரோகத்தின் ஒவ்வொரு பாடத்தையும்

செயல்முறை விளக்கமாய்

செய்து, செய்து பார்த்தோம்

ஒவ்வொரு முதுகாய் தேடித் தேடி குத்தினோம்

உதிரம் தெறிக்க கொலையாகுபவர்கள்

பதறிச் சரிவதை நிதானமாய் ரசித்தோம்

"ஒருநாள் எங்களுக்குள்ளான

பரஸ்பர நம்பிக்கை

பொய்க்கும் போது

எங்களை நாங்களே

குத்திக் கொல்வோம்"

....

...

...

...

என ஆவலாய் காத்திருக்கும்

உங்கள் முதுகு தான்

எங்களின் அடுத்த இலக்கு !

http://suzhiyam.blog.../blog-post.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]யாதுமாகி …[/size]

[size=4]ஷம்மி முத்துவேல்[/size]

[size=5]
நாற்புறச்சட்டகத்தின் பின் இருப்பது தெரியாமல்

பேசிக்கொள்கிறார்கள் ..

நிறமிகளின் பின்னே நரை மறைத்து நிரந்தரமாகவே

அவை சென்று விட்டதாகவே

நினைத்து கொள்கிறார்கள் …

கண்ணோரச் சுருக்கங்களையும்

மோவாயின் தளர்ந்த தசைகளையும்

நீவி இழந்தவைகளை கண நொடிகளில்

பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்

குழந்தையிடமும் சிறியவர்களிடமும் மட்டுமே

தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து

இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில்

சமைத்து பரிமாறுகிறார்கள் ..

தோல்விகளை திரையிட்டு மறைத்து

வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் ..

புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக

பறைசாட்டுவர் …

சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும்

இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் …

“தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை

சுழலவிடுவர் …

சற்றே அயரும் நேரத்தில்

நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர்

சிலவரிகளில் நீங்கள் வாசிக்கும் பொருட்டு

அவர்கள் உங்கள் அருகிலோ,

அல்லது நீங்களாகவோ

அல்லது நானாகவோ இருக்கக்கூடும் ..
[/size]

http://puthu.thinnai.com/?p=11669

Link to comment
Share on other sites

நல்ல கவிதைகள். நானும் இத்திரியுடன் இணைந்திருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]முலைகளின் ஆல்பம்[/size]

[size=4]
சுகுணா திவாகர்
[/size]

boobs2.jpg

[size=5]பேருந்து படிக்கட்டு விளிம்பில்

நின்றுகொண்டிருந்த நான்

சடாரென்று கோணம் மாற்றினேன்

எனக்கும் மேலே

கைதூக்கி நின்ற பெண்களின்

மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே

மணமாகித் தாய்வீடு வந்திருந்த

எதிர்வீட்டுப்பெண்ணின்

மார்பு ரசித்தேன்

மாசமாயிருப்பாளோ என்னும்

உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட

கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய

கொழுத்த முலைகள்

இன்றைய இரவை

ஈரப்படுத்தக்கூடும்.

திரைகளெங்கும் நாயகிகள்

முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்

சரிசெய்துகொள்வது வேறு

நம் கனவுகளின் பரப்பை

அகலப்படுத்துகின்றன.

மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.[/size]

(நன்றி : கருப்பு 2002)

http://midakkumveli..../blog-post.html

  • Like 1
Link to comment
Share on other sites

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

  • Like 2
Link to comment
Share on other sites

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

இது உங்களுக்கு ஆபாசமாக தெரியவில்லையா? :unsure:

இங்கு நல்ல மாதிரி எழுதும் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் நம்பவில்லை. :lol: ஆனால் ஒரு இணைய தளத்தில் எழுதும் போது கொஞ்சம் அடக்கி எழுத வேண்டும். இல்லை அனைத்தையும் எழுத முடியும் என்றால் ஒரு பெண்ணை முழுக்க முழுக்க விபரிச்சு எழுதுவினம். அந்த அளவுக்கு அவர்களின் மன ஓட்டம் இருக்கும். :wub:

இன்று யாழ்களத்தில் பல திரிகளில் பலர் படு கேவலமாக கருத்து எழுதுகிறார்கள். இதையெல்லாம் இன்று அனுமதித்தால் நாளைக்கு இவற்றை வாசிப்பதற்கே இளைஞர் கூட்டம் யாழுக்கு படையெடுக்கும். :D அந்த பெயர் யாழுக்கு தேவையா? :wub:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை இணைக்கும் திரிக்கு பெயர் மனதை கவர்ந்த கவிதைகள்..அந்த அடிப்படையில் அது எப்படிப் பட்ட கவிதையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை..தங்கள் மனங்களை கவர்ந்தால் அதை மற்றவர்களும் பார்க்கட்டுமே என்று இணைக்கிறார்களோ தெரிய இல்லை.எல்லாம் எல்லார் மனதையும் கவரும் என்று யாரும் நினைத்து விட முடியாது..ஆபசமான கதை,கவிதைகளை வாசிக்கலாம் விரும்பியவற்றைப் பார்க்கலாம்..ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது..இப்படியான எழுத்துகளினாலயே ஆண்கள் முன்னாடி பெண்களுக்கு போக தயக்கமாக இருக்கிறது..யாரு,யாரை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள் என்று யோசிக்க முடியாது இருக்கிறது.யாழை,யாழாக இருக்க விடுங்கள்..குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றி விடாதீர்கள்..இந்தளத்துக்கு உரிய அண்ணா சொல்லி,சொல்லி களைச்சு போய் மேளனமாகியே விட்டார்.யாரும் சண்டைக்கு வராதீர்கள்..மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது இன்னொருவருக்குக் கலை அம்சமாகத் தெரியலாம். எல்லாம் பார்வையைப் பொறுத்தது. வெளிவேஷதாரிகளைவிட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை!

மேலும் யாழ் களத்தின் விதியை மீறி இருந்தால் தாராளமாக Report பட்டனை அழுத்தி உங்கள் உள்ளக்குமைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்!

கவிதைகளை இணைக்கும் திரிக்கு பெயர் மனதை கவர்ந்த கவிதைகள்..அந்த அடிப்படையில் அது எப்படிப் பட்ட கவிதையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை..தங்கள் மனங்களை கவர்ந்தால் அதை மற்றவர்களும் பார்க்கட்டுமே என்று இணைக்கிறார்களோ தெரிய இல்லை.எல்லாம் எல்லார் மனதையும் கவரும் என்று யாரும் நினைத்து விட முடியாது..ஆபசமான கதை,கவிதைகளை வாசிக்கலாம் விரும்பியவற்றைப் பார்க்கலாம்..ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது..இப்படியான எழுத்துகளினாலயே ஆண்கள் முன்னாடி பெண்களுக்கு போக தயக்கமாக இருக்கிறது..யாரு,யாரை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள் என்று யோசிக்க முடியாது இருக்கிறது.யாழை,யாழாக இருக்க விடுங்கள்..குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றி விடாதீர்கள்..இந்தளத்துக்கு உரிய அண்ணா சொல்லி,சொல்லி களைச்சு போய் மேளனமாகியே விட்டார்.யாரும் சண்டைக்கு வராதீர்கள்..மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கள்.

நான் இங்கு எதையும் திணிக்கவில்லை. தலைப்பில் உள்ளதுபோன்று மனதைக் கவர்ந்து இருந்ததால் இணைத்தேன். உங்களுக்குக் குப்பையாகத் தெரிவதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் எல்லோருக்கும் குப்பையாகத் தெரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது!

Link to comment
Share on other sites

முலைகளின் ஆல்பம்

சுகுணா திவாகர்

boobs2.jpg

பேருந்து படிக்கட்டு விளிம்பில்

நின்றுகொண்டிருந்த நான்

சடாரென்று கோணம் மாற்றினேன்

எனக்கும் மேலே

கைதூக்கி நின்ற பெண்களின்

மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே

மணமாகித் தாய்வீடு வந்திருந்த

எதிர்வீட்டுப்பெண்ணின்

மார்பு ரசித்தேன்

மாசமாயிருப்பாளோ என்னும்

உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட

கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய

கொழுத்த முலைகள்

இன்றைய இரவை

ஈரப்படுத்தக்கூடும்.

திரைகளெங்கும் நாயகிகள்

முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்

சரிசெய்துகொள்வது வேறு

நம் கனவுகளின் பரப்பை

அகலப்படுத்துகின்றன.

மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.

(நன்றி : கருப்பு 2002)

http://midakkumveli..../blog-post.html

நல்லதொரு கவிதை. பகிர்வுக்கு நன்றி கிருபன் !!

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

நல்ல கருத்து !!

Link to comment
Share on other sites

[size=5]மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size]

[size=5]எனக்கு இந்த வரிகள் மிக உண்மையாக தெரிகின்றன [/size].மனம் விட்டு எதுவித சஞ்சலமுமின்றி கதைக்கும் பெண்களிடமும் கூட, சிலவேளைகளில் அன்று அவர்கள் அணிந்திருக்கும் உடை என்னை சற்று தள்ளி வைத்துவிடும் .பிழை என்னில் என்றுதான் நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது இன்னொருவருக்குக் கலை அம்சமாகத் தெரியலாம். எல்லாம் பார்வையைப் பொறுத்தது. வெளிவேஷதாரிகளைவிட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை!

மேலும் யாழ் களத்தின் விதியை மீறி இருந்தால் தாராளமாக Report பட்டனை அழுத்தி உங்கள் உள்ளக்குமைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்!

நன்றி உங்கள் பதிலுக்கு. வெளிவேசதாரிகளை விட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை தான்.

அதற்காக இணையதளத்திலும் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றால் ஆபாசத்தை தூண்டும் படங்களை இணைக்க வேண்டாமென்று ஒரு கள விதியை ஏன் கொண்டு வந்தார்கள் என்று தான் தெரியவில்லை. அதையும் வெளிப்படையாக இணைக்க விட்டிருக்கலாமே? அப்படி விடாதது ஏன் என்று உங்களாலும் ஊகிக்க முடியவில்லை.

சபை நாகரீகம் கருதி ஒருவருடன் வாடா போடா என்று கதைக்காமல் விடுவது போல் இணைய தள நாகரீகம் கருதி சில விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது என் கருத்து....

நிர்வாகத்திடம் ஒரு திரியில் கூறியிருக்கிறேன். நிர்வாகத்தின் பதில் வந்த பின் அவர்களுக்கு பதிலளிக்கிறேன்.

நான் இங்கு எதையும் திணிக்கவில்லை. தலைப்பில் உள்ளதுபோன்று மனதைக் கவர்ந்து இருந்ததால் இணைத்தேன். உங்களுக்குக் குப்பையாகத் தெரிவதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் எல்லோருக்கும் குப்பையாகத் தெரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது!

நீங்களே மறைமுகமாக சொல்கிறீர்கள் இது ஆண்களுக்கான இணையதளம் என்று. ஆண்கள் உங்கள் கவிதையை ரசிப்பார்கள் தானே?

ரதி அக்கா பெண் தானே என்று என்னை கேட்க வேண்டாம். அவர் ஆணா பெண்ணா என்று எனக்கு தெரியாது. ஆனால் யாழுக்கு பல பெண் வாசகர்கள் உள்ளனர்.

நன்றி உங்கள் கருத்துக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

அப்படியா? மிக்க நல்லது ரதி... உங்களது மார்புகளை ரசிக்கலாமா? உங்களின் படங்கள் தரமுடியுமா? நான் ஓரினச் செயர்க்கயாளன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டி உள்ளது. மார்பு ரசிக்கலாம் என்ற பிறகு என்ன சொந்தங்களில் ஏற்றத் தாழ்வு... எல்லோரையும் ரசியுங்கள்...இந்தக் கவிதையை இரசிப்பவர்களின் உறவுக்காரப் பெண்கள் அனைவரினதும் மாரப்பினையும் ரசிக்க ஆசைப்படுகின்றேன்...

Edited by தூயவன்
  • Like 1
Link to comment
Share on other sites

(நன்றி : கருப்பு 2002)

நன்றி கரும்பு 2002 என மேலோட்டமாக பார்த்தபோது தென்பட்டது. எனது இதயம் திக் என்று அடித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? மிக்க நல்லது ரதி... உங்களது மார்புகளை ரசிக்கலாமா? உங்களின் படங்கள் தரமுடியுமா? நான் ஓரினச் செயர்க்கயாளன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டி உள்ளது. மார்பு ரசிக்கலாம் என்ற பிறகு என்ன சொந்தங்களில் ஏற்றத் தாழ்வு... எல்லோரையும் ரசியுங்கள்...இந்தக் கவிதையை இரசிப்பவர்களின் உறவுக்காரப் பெண்கள் அனைவரினதும் மாரப்பினையும் ரசிக்க ஆசைப்படுகின்றேன்...

நான் மேலே எங்கேயாவது ஆண்களை பெண்களது மார்புகளை ர‌சிக்க சொல்லிக் கேட்டேனா? அல்லது ரசியுங்கள் என்றாவது சொன்னேனா?...உங்கள் மன சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கோ இது வரை எந்த பெண்ணையும் தப்பான கோணத்தில் உங்கள் கண் பார்க்கவில்லை?...உங்களை அறியாமலே உங்கள் கண் தப்பான எண்ணத்தில் எந்தப் பெண்ணையும் நோக்கவில்லை?...சில ஆண்கள் வேண்டுமென்றே தெரிந்தே இந்த தப்பை செய்கிறார்கள் பல ஆண்கள் தங்களை அறியாமல் இந்த தப்பை செய்கிறார்கள்...அவர்களது வளர்ப்பு,தங்கள் குடும்ப கெளர‌வம் அதை விட முக்கியமான மனக் கட்டுப்பாடு போன்ற கார‌ணங்களால் பல ஆண்கள் அட‌க்கி வாசிக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச கொஞ்சப் பேர் ஆண்களுக்குத் தான் தப்பான கண்ணோட்டம் என்று காட்ட நிற்கினம். பெண்களுக்கும் ஆணைக் கண்டால்.. தப்பான கண்ணோட்டம் ஏற்பட்டு.. தொடை நனையிறது எல்லாம் நடக்காம். அதுகளையும் கவிஞர்கள் எழுத்தில வடிக்கலாமே. வேணுன்னா அதுக்குப் பின்னால உள்ள biology ஐ நாங்க விலாவாரியா சொல்லுறம்.

பெண்ணின் இயல்பு ஆணைக் கவர்வது இயல்பு. அது தப்பு அல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. அதேபோல்.. ஆணின் இயல்பு பெண்ணைக் கவர்வது இயல்பு. அது தப்பல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. இவை எல்லாமே இயற்கை. கவருது என்பதற்காக.. கண் வைக்கிறது போல.. கை வைக்க ஏலாது. அங்க தான் சட்டம்... நடத்தை.. பழக்க வழக்கம்.. பண்பாடு.. தனிமனித ஒழுக்கம்.. சமூகம்.. வந்து நிற்குது.

அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! :D:lol:

வேணுன்னா சொல்லுங்க.. ஒளிப்பு மறைப்பு இன்றி இப்படியான தலைப்புகளையும் போட்டு விவாதிப்பம். ஆங்கிலக் களங்களில் விவாதிக்கிறாங்க. உண்மையில் அதில தப்பில்ல. மாறாக உயிர்.. உணர்ச்சி.. தூண்டல்.. உடலமைப்பு.. பற்றிய அறிவு தான் வளரும். ஆனால்.. யாழ் அனுமதிக்குமா.. யாழில உள்ள முலையை மட்டும் ரசிக்க விடுற.. படிதாண்டாப் பத்தினிகள் அனுமதிப்பினமா..???!

கலவன் பள்ளியில் உள்ள பிரச்சனை ஒன்று........ கேள்வியாக..............

Can a girl get wet in school when looking at a hot guy? :lol:

இங்க சில பேருட நினைப்பு என்னென்னா.. முலை.. மார்பு.. பற்றி கவிதை எழுதிட்டா அது புரட்சி.. வெளிப்படை என்றது. அதை விட மேல.. கீழ போறாங்களே இல்ல. காலம் காலமா கொப்பற்ற கொல்லைக்க தான் சுத்துறாங்க...! அதைவிட நிறைய இருக்குது.. அந்தரங்க அறைகளுக்குள் நடக்கும் தில்லானாக்கள்..! அந்தப் பக்கம் புரட்சி செய்ய வேணுன்னா... சொல்லுங்க.. நாங்களே அந்த மிச்சப் புரட்சியை செய்ய ஆரம்பிக்கிறம்...! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

[size=5]மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size]

[size=5]எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.[/size]

ஒரு படைப்பாளிக்கு படைப்பு நேர்மை இருக்க வேண்டும் . என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கவிதையைப் படைத்தவரின் படைப்பு நேர்மையை பாராட்டுகின்றேன் . ஒருவரின் மன அழுக்கையுஞ் சொல்லி அதன் இறுதி வரியில் பார்பவரின் கண்களை மார்பகத்தின் காம்புகளை உருவகித்துள்ளார் . மேலும் ஆபாசத்திற்கு வரைவிலக்கணம் சொல்வது கடினம் . அத்துடன் கவிதைக்கு மொழியில்லை . எம்மால் ஆபாசமாகப் பார்கப்பட்ட காமசூத்திரமும் , கொக்கோசமும் மேலைநாடுகளில் கலைப்பொக்கிசமாகவே பார்க்கப்பட்டது . அத்துடன் இந்தப் பதிவில் யாழ் ஆண்களுக்கானதா பெண்களுக்கானதா என்பது அர்த்தமற்ற கருத்தாடலாகவே எண்ணுகின்றேன் . இந்த எனது கருத்துக்களுக்காக எல்லோரும் என்னை ஆதரிக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டிய கவிதை

சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிழையாகவும் இருக்கிறது.

எனக்கும் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை.

இதை இணைத்திருப்பது கிருபன்

அவர் மேல் தனி மரியயாதையுண்டு.

எனவே பிழையானதை அவரும் இங்கு இணைக்கமாட்டார் என்ற அபிப்பிராயம் என்றும் உண்டு.

துளசி

இத்திரியிலிருந்து தள்ளியிருங்கள். (சுட்டிக்காட்டி விட்டீர்கள். இனி..)

மற்ற கருத்தாளர்களையும் புரிந்து கொள்ளுங்கள். அதிலும் நீண்டட கால உறுப்பினர்களின் நீண்ட கால எழுத்துக்குறித்த ஒரு புரிதல் அவசியம் தங்களுக்கு.

நாம் நினைப்பவை மட்டுமே யாழில் வரணும் என்பதும் யாழ் விடுதலைக்கானது மட்டுமே என்பதும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் வேலைதான்.

அதை யாழ் செய்வதை யாழின் வளர்ச்சி கருதி நானும் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் களன்காண் படலம் 5-வது பாட்டு

[/size]

[size=3]

நல்குவதென் இனி நங்கை கொங்கையைப்

புல்குவ பூணும் அக் கொங்கை போன்றன;

அல்குலின் அணிகளும் அங்குலாயின ;

பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே.

[/size]

[size=3]

மேலேயுள்ள பாடல், கம்பராமாயணத்தில் வருகின்றது!

[/size]

[size=3]

இதைவிடக் கேவலமாகவா இருக்கிறது,, கிருபன் இணைத்த கவிதை?

[/size]

[size=3]

கருத்துச் சுதந்திரம், மிகவும் முக்கியமானது!

[/size]

[size=3]

அதில் தலையிடுவது, யாழ் களத்தின் கருத்துச் சுதந்திரத்தை, மறுப்பது போலாகும்!

[/size]

[size=3]

கவிதை, ஆபாசமாக எனக்குத் தெரியவில்லை!

[/size]

Link to comment
Share on other sites

முன்பு வாசித்த பொழுது பிடித்த ஒரு கவிதை. முழுக்க ஆணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

இதே போல மார்பகங்களின் மீது படியும் ஆண்களின் பார்வைக்கெதிரான பெண்ணின் மன உணர்வுகளை கூறிய நல்லதொரு கவிதை முன்பு வாசித்தேன். சரியாக ஞாபகம் வரவில்லை.

Link to comment
Share on other sites

அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! :D:lol:

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட்டதே இங்கு பிரச்சனைக்குக்காரணம்போல் தெரிகின்றது.

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி/அறிவியல் எனும் பெயரில் பலவிடயங்களினுள் புகுந்துவிளையாடுவதுபோல் இலக்கியரசனை எனும்பெயரில் இதை அணுகமுடியாதோ? விஞ்ஞானத்துடன் இலக்கியத்துக்கும்தானே நோபல் பரிசு கொடுக்கின்றார்கள்?

Edited by கரும்பு
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட்டதே இங்கு பிரச்சனைக்குக்காரணம்போல் தெரிகின்றது.

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி/அறிவியல் எனும் பெயரில் பலவிடயங்களினுள் புகுந்துவிளையாடுவதுபோல் இலக்கியரசனை எனும்பெயரில் இதை அணுகமுடியாதோ? விஞ்ஞானத்துடன் இலக்கியத்துக்கும்தானே நோபல் பரிசு கொடுக்கின்றார்கள்?

தாங்கள் இன்னொரு தடவை எங்கள் கருத்தை சரியாக உள்வாங்கவில்லை.

நாங்கள் அந்தக் கவிதையை கண்டிக்கவில்லை. ஏதோ முலை பார்த்து... முலைக்காம்பளந்து..ஆண்கள் மட்டும் தான் ஈரக்காய்ச்சல் அடைவது போலவும்.. ஆண்கள் சதா முலை பார்க்கிறதையே கடமையா செய்துக்கிட்டு இருப்பது போலவும் சொல்லப்படும் கருத்தையே மறுதலிக்கிறம்.

ஆண்களைப் போல.. பெண்களுக்கும்.. ஆண்களின் பலதையும் பார்த்து.. ஈரக்காய்ச்சல் வருகின்றன.. கையை.. விரலை..காலை.. இன்னும் இன்னும் பொருட்களை விட்டு குடையுறாங்க.. அதுகளையும் எழுதுங்க சாமியோவ்... என்று தான் சொல்கிறம்.

அதுபோக.. இலக்கியமோ.. புதுக்கவிதையோ.. கலவியலில் காணும் புதுமையை.. நிர்வாண கோலத்திலும் நாங்க காட்டலாம். அதற்கான வழியையும் யாழில திறக்கனும் என்று தான் சொல்லுறம்.

அதுகளை ஆபாசம்.. பாலுணர்வைத் தூண்டுபவை என்று வரையறுக்கிற நாங்கள்.. இந்த வகையான.. கவிதைகளைப் படிச்சு ஜட்டிகள்.... ஜங்கிகள்.. வீக்கமடைவது.. ஈரலிப்படைவது.. பாலியல் தூண்டல் இல்லையோ...! இல்லக் கேட்கிறன்.... நியாயத்தை நியாமமாச் சொல்லனும்..???! ஏதோ திறந்த மனசோட எழுதினம் என்று பாராட்டுறவை.. இதுகளையும் திறந்த மனசோட பகிர்ந்து கொள்ள வேணும்..???! அது தானே தர்மம்..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பெண்களின் மார்புகளை இரசிக்கவிடின், அவன் தன்னினச் செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்றோ, அல்லது பச்சைப் பொய் சொல்லுவனாகத் தான் இருப்பான் என்ற கருத்தினையும், உங்களின் எழுமாந்தமான முடிவுக்காகத் தான் அந்தப் பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டது. அப்படி ஒரு முடிவினை எடுக்க நீங்கள் யார்?? அது ஒரு வகையில் ஆண்கள் பெண்களின் அங்கங்களை ரசிக்கச் சொல்லிச் செய்கின்ற தூண்டுதலே....

அப்படி ரசிப்பது தப்பில்லை எனில், உங்களின் குடும்பத்தினரை முதலில் நினைத்துக் கொண்டு கதையங்கள்

நான் சுத்தமானவனாகக் காட்டவரவில்லை. ஆனால் அந்த உணர்வினைப் பொது இடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை. கலவி எல்லோரும் தான் கொள்கின்றார்கள் . அதற்காக அதை இங்கே வெளிப்படுத்த முடியுமா? அதற்கென்று தளங்கள் இருக்கின்றன. அவ்வகையான தளங்களில் யாழும் இணைந்து கொள்ளுமாயின், வெளிப்படுத்துங்கள்.

பெண்களின் உடலில் உள்ள அங்கங்களையோ, அல்லது ஆணின் உடலில் உள்ள அங்கங்களையோ பாலியல்ரீதியாக வர்ணிப்பது, கதைப்பது எல்லாம் சரியாகத் தோன்றவில்லை.

உங்களுக்கு ஏதாவது பாலியல் பிரச்சனை என்றால் தகுந்த வைத்தியரை நாடுங்கள்... அதை விட்டு விட்டு, ஆண்கள் இப்படி, அப்படி என வரையறை எங்களுக்குத் தரத் தேவையில்லை

  • Like 1
Link to comment
Share on other sites

கவுதைப்பக்கம் எனக்கு சுத்த சூனியம் போன்றது...............சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல்.........

இன்றுதான் இந்த திரிக்குள் நோட்டமிட்டேன்.......அப்பாடா கவிதை என்றால் இதுதானா .....என்பதைப்புரிந்து கொண்டேன் ..............முடிவும் எடுத்துள்ளேன் ............இந்தப்பக்கம் வரக்கூடாதடா சுப்பா................

தமிழ்சிறி இணைக்கும் வண்ணத்திரை காட்சிகள் போதும் .......................... :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

துளசி,

நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும்.

இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்றால் , இக் கவிதையில் சொல்லப்பட்டது எதுவுமே ஆபாசம் அல்ல.

இதில் எது ஆபாசம் என்பதை யார் தீர்மானிக்க முடியும்? முன்னர் நான் டிசே எழுதிய ஒரு கவிதையை இணைத்த போது நிகழந்த்த வாதப் பிரதிவாதங்கள் நாபகம் வருகிறது.அந்தக் கவிதையும் பஸ்ஸில் பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பவர்கள் பற்றி எழுதப்பட்டதாக இருந்தது.

ஆனால் அதில் காரசாரமாக எழுதியவர்கள் தற்போது , தங்கள் கருத்துக்களில் முதிர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் நீங்களும் முதிர்ச்சி பெறுவீர்கள். கருத்துக் களம் அதற்காகத் தானே இருக்கிறது.பலர் வருவார்கள்,போவார்கள்.அவற்றில் எமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.