Jump to content

பனங்காயின் முடிவு,


Recommended Posts

பனங்காயின் முடிவு,

சமீப காலமாக நான் எழுதும் ஒட்டுக்குழு/ இந்தியாவுக்கெதிரான பதிவுகள் நீக்கப்படுவதால், எதை வெட்டுவது எதை விடுவது எண்டு வரைமுறையில்லமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல் படுவதாலும் நான் யாழ் நிர்வாகத்தை துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு நான் இந்தக்களத்தை விட்டு வெளியேருகிறேன்.

பெயர்; பனக்காய்

பாஸ்வார்டு; watchyarl

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி பனங்காய். ஆனால் உங்களின் கடவுசச்சொல்லை மீண்டும் ஒரு தடவை தரமுடியுமா?? வேலை செய்யவே இல்லை... வேறு யாராவது ஆட்டையைப் போட முன், என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் என்ன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு அதி உன்னதமான பதவியை கொடுத்த பனங்காயை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நீங்கள் மாற்றத்துக்கு உண்டு பண்ணுங்கள்

எமக்கும் வெட்டுவிழுந்துள்ளது

ஆனால் தங்களது எழுத்துக்களில் எந்தவித ஒழுங்குகளையும் இதுவரை நான் கண்டதில்லை.

எனவே கைவிரலை நீட்டும்முன்பு 4 விரல்கதைக்கான மாற்றத்தினை நீங்கள் ஏற்படுத்துவதே சிறந்தது.

மற்றும்படி தங்களின் வெளியேற்றத்தை நான் ஆதரிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தனிப்பட்ட முறையில் உங்களின் இந்த முடிவை ஆதரிக்கவில்லை.

இங்கு எழுதும் பலரினதும்.. கருத்துக்கள்.. பல வித சூழ்நிலைகளில் நிர்வாகத்தால் அகற்றப்பட்டே வந்துள்ளன. உங்களுக்கு மட்டும் இந்த நிலை என்றில்லை.

யாழ் நிர்வாகம் அரசியல் ரீதியில் இப்போது ஒரு தளர்வான போக்கையே கடைப்பிடிக்கிறது. அதேவேளை அவதூறான.. புலிக்காய்ச்சல்... ஆக்கங்கள்.. எழுத்துக்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பதற்கு இது நேரமல்ல.

புலியோ.. எலியோ பாதிக்கப்பட்டது அனைவரும் தமிழர்கள். சிங்களவர்கள் கட்சி பிரதேச வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்து தமிழ் மக்களை அழிக்கும் அதேவேளை தமிழர்களோ கட்சி மாற்றுக்கருத்து.. ஜனநாயகம்... பிரதேசவாதம்.. புலம்பெயர்... வன்னி.. யாழ்ப்பாணம்.. திருமலை... மட்டக்களப்பு என்று பிரிந்து நின்று சிங்களம் வேட்டையாட உதவி செய்து வருகின்றனர்.

அடிப்படையில் அடிவாங்கும் இனம் ஒன்றிணைவதே வழமை. ஆனால் அவன் நல்லவண்டா என்று சொல்லி அடிக்கிறான் என்று அடிவாங்கும் நிலையில் தமிழர்களை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் கருத்துக்களை நிதானமாகவும்.. இனத்துக்கு உபயோகமாகவும் முன் வைப்பது ஒவ்வொருவரினதும் கடமை.

ஒரு சிலரை மாற்ற முடியாது எனும் போது அவர்களை விட்டுவிட்டு உண்மைகளை உணர்ந்து உணர்வுகளால் இணைந்து மாறக் கூடியவர்கள் எனியும் தமிழர்களின் எதிரிகளுக்கு மறந்தும் உதவும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

அந்த வகையில் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து உருப்படியான விடயங்களை பேசி யாழோடு சக கள உறவாக இணைந்திருக்க வேண்டுகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

எமது கருத்துக்களை அகற்றியதால் நாம் விலகுவதா? இல்லை, விலகக்கூடாது.

மாறாக எமது கருத்தை எவ்வாறு நீக்கமுடியாத மாதிரி பதிய வேண்டும் என பார்த்து பதிய வேண்டும்.

Link to comment
Share on other sites

யாழுக்கு துரோகி பட்டம் கட்டுவதற்கு பதிலாக அதனை மாற்ற ஆக்கபூர்வமாக ஏதாவது எழுதலாமே?

யாழில் பலரது கருத்தும் வெட்டப்பட்டுள்ளது (என்னுடையதும் தான்).மீண்டும் அதே கருத்தை சொல்லாமல் விட்டிருக்கிறோமா?

பனங்காய், பட்டம் கொடுப்பதை விடுத்து மீண்டும் யாழில் வந்து எழுதவும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காயின் முடிவை நான் வரவேற்கிறேன்...பனங்காய் போய் தேங்காயாய் வர வாழ்த்துகிறேன் :icon_idea::icon_idea::lol:

Link to comment
Share on other sites

அட என்ன இது சின்னபுள்ளையாட்டம்... பனங்காய் போகாதீங்க

பனங்காயின் முடிவை நான் வரவேற்கிறேன்...பனங்காய் போய் தேங்காயாய் வர வாழ்த்துகிறேன் :icon_idea::icon_idea::lol:

பனங்காய் பனம்பழம் ஆகத்தானே ஆக முடியும், எப்படி தேங்காய் ஆகலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முடிவை மீளாய்வு செய் வது நன்று ......

Link to comment
Share on other sites

சக கருத்தாளர்களை மண்டையில் போடுவேன் என்று கூறி ரவுடித்தனமாக எழுதுகின்ற பனங்காய் யாழ் கருத்துக்களத்தில் நின்று மினக்கடுவதைவிட வன்னிக்கு நேரில் சென்று தனது திறமைகளை காட்டுவதே சிறந்தது. :icon_idea: ரவுடீசம் செய்வதற்கு கருத்துக்களம் தேவையில்லை. கருத்துக்களத்தில் ஆரோக்கியமான வகையில் கருத்துக்களை, சிந்தனைகளை மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

பனங்காய் “உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதும்போது பதில் கருத்தாக “அதற்குமுன் உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதுவதற்கு அதிகநேரம் எடுக்காது. சக கருத்தாளர்களினாலும் ரவுடித்தனமாக எழுதமுடியும் என்பது பனங்காயிற்கு விளங்கவில்லை.

வெற்று உணர்வுகள் பயன் தரப்போவதில்லை. வெற்று உணர்வுகள் மூலம் தாயக மக்களிற்கு எதுவித பயனும் ஏற்படப்போவது இல்லை. வெட்டுவேன், கொத்துவேன், குத்துவேன், கிழிப்பேன் என்று புலம்புவதற்கு பனங்காய் யாழ் கருத்துக்களத்திற்கு வந்து மினக்கடவேண்டுமா? :icon_idea:

Resistant for Change என்பது வியாபார உலகில் முக்கியமாக கவனம் கொடுத்து ஆலோசிக்கப்படுகின்ற விடயம். நேற்றுப்போல் இன்று காணப்படாது, இன்று போல் நாளை காணப்படாது. இது உலக நியதி. எமது வாழ்க்கையே தொடர்ச்சியாக மாற்றங்கள் நிகழ்கின்ற ஓர் செயன்முறை.

தனது கையெழுத்தில் இவ்வாறு கூறுகின்ற பனங்காய் மூலம் தாயக மக்களிற்கு அல்லது தமிழ்ச்சமூகத்திற்கு ஆக்கபூர்வமான வகையில் எவ்வாறு உதவமுடியும்? கீழே இவ்வாறு கூறுகின்ற பனங்காயிற்கு மற்றவனை துரோகி என்று கூறுவதற்கு என்ன அருகதை உள்ளது?

நான் புலத்திற்க்கு வந்தபோது கிடைத்த முதலாவது அட்வைஸ்..... தமிழ்ச்சனியன்களுடன் சேராதே எண்டு........

நான் கேக்கவில்லை...

16 வருசத்துக்கு பிறகு உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது..... தமிழரை கண்டால் தூர விலகுங்கள்..

வாழ்வு நிம்மதியாய் இருக்கும்.......

நேற்று பனங்காய் ஊர்ப்புதினத்தில் இணைத்த செய்தியில் வெளிநாடுகளில் சட்டவிரோதமான செய்கைகளை ஊக்கப்படுத்தும்வகையில் கருத்து காணப்பட்டது.

நாளை யாழ் இணையத்திற்கு சட்டரீதியாக ஏதாவது சிக்கல் வந்தால் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் கூறுவதற்கு பனங்காய் தயாராக உள்ளாரா?

இது வலைத்தளம்தானே என்னவும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று பனங்காய் நினைக்கின்றாரா? காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து சட்டரீதியாக கடுமையான பிரச்சனைகள் வரும்போது கருத்துக்களத்தில் குறிப்பிட்ட ஒரு கருத்தின் ஐபி முகவரியை கண்டறிந்து, பின்னர் குறிப்பிட்ட நபரை கண்டறிவதற்கு யாழ் நிருவாகத்தின் அனுமதிகூட காவல்துறைக்கு தேவைப்படாது. யாழ் இணையத்தின் சேவை வழங்கியுடன் காவல்துறை நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும்போது குறிப்பிட்ட சேவை வழங்குனரே தேவையான தகவல்களை வழங்குவார்.

உங்கள் சண்டித்தனங்களை காட்டுவதற்கு யாழ் இணையம் பொருத்தமான ஓர் இடம் இல்லை. யாழ் இணையம் மூலம் தமிழிற்கு, தமிழ் மக்களிற்கு, பல்வேறு பிரச்சனைகளுடன் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு, தாயகத்தில் உள்ள மக்களிற்கு பயனுள்ள வகையில் பலவகையில் சேவையை வழங்கமுடியும்.

Link to comment
Share on other sites

வீக்கிலீக்க்ஸ் அதிபர் கைதுக்கு பிறகு மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயமாக போய்ட்டுதய்யா இந்த பனங்காய் விவகாரம்.

பனங்காய் களத்தைவிட்டு வெளியேறுறன் என்டு சொன்னதும் '' நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்'' அப்புறம் என்ன எப்படி வெட்டினாலும் தாங்கிக்கிறான்டா உவன் ரொம்ப நல்லவன்டா என்டு என்னை நானே தேத்திக்கிட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்! சும்மாய் விழல்கதை கதைக்காமல் பேசாமல் இரும் ஐசே

நாங்கள் ஒண்டுக்கொண்டாய் ஒண்டாய் இருப்பம்

Link to comment
Share on other sites

சக கருத்தாளர்களை மண்டையில் போடுவேன் என்று கூறி ரவுடித்தனமாக எழுதுகின்ற பனங்காய் யாழ் கருத்துக்களத்தில் நின்று மினக்கடுவதைவிட வன்னிக்கு நேரில் சென்று தனது திறமைகளை காட்டுவதே சிறந்தது. :icon_idea: ரவுடீசம் செய்வதற்கு கருத்துக்களம் தேவையில்லை. கருத்துக்களத்தில் ஆரோக்கியமான வகையில் கருத்துக்களை, சிந்தனைகளை மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

பனங்காய் “உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதும்போது பதில் கருத்தாக “அதற்குமுன் உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதுவதற்கு அதிகநேரம் எடுக்காது. சக கருத்தாளர்களினாலும் ரவுடித்தனமாக எழுதமுடியும் என்பது பனங்காயிற்கு விளங்கவில்லை.

வெற்று உணர்வுகள் பயன் தரப்போவதில்லை. வெற்று உணர்வுகள் மூலம் தாயக மக்களிற்கு எதுவித பயனும் ஏற்படப்போவது இல்லை. வெட்டுவேன், கொத்துவேன், குத்துவேன், கிழிப்பேன் என்று புலம்புவதற்கு பனங்காய் யாழ் கருத்துக்களத்திற்கு வந்து மினக்கடவேண்டுமா? :icon_idea:

Resistant for Change என்பது வியாபார உலகில் முக்கியமாக கவனம் கொடுத்து ஆலோசிக்கப்படுகின்ற விடயம். நேற்றுப்போல் இன்று காணப்படாது, இன்று போல் நாளை காணப்படாது. இது உலக நியதி. எமது வாழ்க்கையே தொடர்ச்சியாக மாற்றங்கள் நிகழ்கின்ற ஓர் செயன்முறை.

தனது கையெழுத்தில் இவ்வாறு கூறுகின்ற பனங்காய் மூலம் தாயக மக்களிற்கு அல்லது தமிழ்ச்சமூகத்திற்கு ஆக்கபூர்வமான வகையில் எவ்வாறு உதவமுடியும்? கீழே இவ்வாறு கூறுகின்ற பனங்காயிற்கு மற்றவனை துரோகி என்று கூறுவதற்கு என்ன அருகதை உள்ளது?

நேற்று பனங்காய் ஊர்ப்புதினத்தில் இணைத்த செய்தியில் வெளிநாடுகளில் சட்டவிரோதமான செய்கைகளை ஊக்கப்படுத்தும்வகையில் கருத்து காணப்பட்டது.

நாளை யாழ் இணையத்திற்கு சட்டரீதியாக ஏதாவது சிக்கல் வந்தால் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் கூறுவதற்கு பனங்காய் தயாராக உள்ளாரா?

இது வலைத்தளம்தானே என்னவும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று பனங்காய் நினைக்கின்றாரா? காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து சட்டரீதியாக கடுமையான பிரச்சனைகள் வரும்போது கருத்துக்களத்தில் குறிப்பிட்ட ஒரு கருத்தின் ஐபி முகவரியை கண்டறிந்து, பின்னர் குறிப்பிட்ட நபரை கண்டறிவதற்கு யாழ் நிருவாகத்தின் அனுமதிகூட காவல்துறைக்கு தேவைப்படாது. யாழ் இணையத்தின் சேவை வழங்கியுடன் காவல்துறை நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும்போது குறிப்பிட்ட சேவை வழங்குனரே தேவையான தகவல்களை வழங்குவார்.

உங்கள் சண்டித்தனங்களை காட்டுவதற்கு யாழ் இணையம் பொருத்தமான ஓர் இடம் இல்லை. யாழ் இணையம் மூலம் தமிழிற்கு, தமிழ் மக்களிற்கு, பல்வேறு பிரச்சனைகளுடன் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு, தாயகத்தில் உள்ள மக்களிற்கு பயனுள்ள வகையில் பலவகையில் சேவையை வழங்கமுடியும்.

உங்கள் கருத்துக்கள் இந்த களத்தை விட்டு இந்த உறவை "கலைக்கவேண்டும்" என்ற தொனியுடன் எழுதப்பட்டுள்ளது வருந்தக்கதக்கது. ஏனெனில், அவரும் எமது உறவு, அவரை நாம் பிழை விடும்போது சொல்லித்திருத்தி எம்முடன் இணைத்து செல்வது தான் அழகு, பண்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

பனங்காய், உங்கடை கருத்துக்கு வெட்டு விழுகுதெண்டால்.... பெருமைப் பட வேண்டும். :icon_idea:

காய்கிற மரத்துக்குத்தான் கல்லெறி விழும். இதுக்கெல்லாம் பயந்து, மரம் காய்க்காமல் விடுகிறதில்லை.others-209.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை யாழ் இணையத்திற்கு சட்டரீதியாக ஏதாவது சிக்கல் வந்தால் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் கூறுவதற்கு பனங்காய் தயாராக உள்ளாரா?

இது வலைத்தளம்தானே என்னவும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று பனங்காய் நினைக்கின்றாரா? காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து சட்டரீதியாக கடுமையான பிரச்சனைகள் வரும்போது கருத்துக்களத்தில் குறிப்பிட்ட ஒரு கருத்தின் ஐபி முகவரியை கண்டறிந்து, பின்னர் குறிப்பிட்ட நபரை கண்டறிவதற்கு யாழ் நிருவாகத்தின் அனுமதிகூட காவல்துறைக்கு தேவைப்படாது. யாழ் இணையத்தின் சேவை வழங்கியுடன் காவல்துறை நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும்போது குறிப்பிட்ட சேவை வழங்குனரே தேவையான தகவல்களை வழங்குவார்.

உங்கள் சண்டித்தனங்களை காட்டுவதற்கு யாழ் இணையம் பொருத்தமான ஓர் இடம் இல்லை. யாழ் இணையம் மூலம் தமிழிற்கு, தமிழ் மக்களிற்கு, பல்வேறு பிரச்சனைகளுடன் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு, தாயகத்தில் உள்ள மக்களிற்கு பயனுள்ள வகையில் பலவகையில் சேவையை வழங்கமுடியும்.

onionroutingfig7.png

Tor - The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் 'இலவச மென்பொருள்' என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது .

Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torprojec...ownload.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் 'Relay' என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய, குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் அவர்கட்கு நான் நினைக்கிறன் யாழ் களத்தில், தனிப்பட்ட நபர்களை தாக்குதல் செய்தவர் எனும் எச்சரிக்கையுடன்கூடிய அங்கத்தவராக நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வண்அன்ஒண்லி (one & only) அங்கத்தவர் நானாகத்தானிருக்கும் அதுக்காக கோவிச்சுக்கொண்டு போகேல்லை. விமர்சனங்கள் எடுத்தெறிதல்கள் இவைகளதான் ஒருத்தரை சுயமாக நெறிப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இன்று உங்கள் இடுகைகளை ஏற்காத யாழ் இணையம் நாளை உங்கள் கருத்துக்காகக் காத்துநிற்கும் காலத்தை தாங்கள் உருவாக்கலாம். இதுக்குமேல் ஒங்கட விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடமும் போக்க வேண்டான் இங்கையே இருங்கோ.. நமக்குள்ள கருத்து சண்டை வாரது அதை நிர்வாகம் வெட்டுரது எல்லாம் சகஜம் தானே

இதுக்குப் போய் குழந்தை பிள்ளை மாரி யாழை விட்டு போக்க போறேன் என்று சொல்லுறது அழகல்ல :rolleyes:,

Link to comment
Share on other sites

வெற என்னதையும் வெட்டியிருந்தால் ஒண்டும் செய்யேலாது விட்டுட்டு போகலாம்,எழுதினதை வெட்டினா திருப்பி எழுதலாம் தானே.

Link to comment
Share on other sites

'வெரி ஸ்பெஷல் மெம்பர்' ஆக இருந்து கொண்டு என்ன இது சிறுபிள்ளைத் தனமான முடிவு?????

பல கள உறவுகள் அவர்களின் கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்துள்ளார்கள், ஒரு சிலரை மட்டும் ஏன் கணக்கில் எடுத்து கவலைப்பட்டு கருத்துக் களத்தை விட்டு போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

இன்றைக்கும் நான் எழுதிய ஒரு கருத்து வெட்டப்பட்டுள்ளது. இதுக்கெல்லாம் போய் உணர்ச்சிவசப்பட்டு ........ பீலிங் விட்டிட்டு.....

ஒவ்வொருவரின் கருத்துக்களும் முக்கியம் அதே வேளை யாழ் இணையத்திற்கும் பொறுப்புகள் உண்டு.

பனங்காய் நீங்கள் விலகிப்போவதில் இஷ்டமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களை சினம் தவிர்த்து மென்மையாய் கூறுங்கள். விலகும் என்னத்தை விலக்கி விடுங்கள் பனங்காய்!!

Link to comment
Share on other sites

விக்கிலீக் அதிபர் பற்றி நான் எழுதினதும்தான் வெட்டுப்பட்டிட்டுது..! :rolleyes: அதுக்காக கோவிச்சுக்கொண்டு போக முடியுமே? :)

Link to comment
Share on other sites

நான் இது வரைக்கும் எழுதினது 10482 கருத்தாம்.... ஆனால் Active Posts: 9,076 எண்டு காட்டுது.... அப்படி எண்டால் பாருங்கோவன்... :rolleyes::lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக் அதிபர் பற்றி நான் எழுதினதும்தான் வெட்டுப்பட்டிட்டுது..! :rolleyes: அதுக்காக கோவிச்சுக்கொண்டு போக முடியுமே? :lol:

நான் எழுதினதையும் வெட்டி.... தலைப்பையும் மூடிப் போட்டினம். இதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாது.

மனம் தளராத விக்கிரமாதித்தனாய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.