Jump to content

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.


Recommended Posts

கற்றது கையளவு, உள்ளது கடலளவு என்பது அன்றும் இன்றும் என்றும் உண்மையான வாசகம்.

Link to comment
Share on other sites

  • Replies 271
  • Created
  • Last Reply

எங்கட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு சிறிய ஊரில் உயர்வகுப்பு படிக்க நல்ல கல்லூரி கிடைக்க இல்லை... அவர்கள் யாழ்ப்பாணம் நகரிலை படிச்சினம்... பிறகு படிச்ச படிப்புக்கு வேலை வேணும் எண்டு கொழும்பை நோக்கி போனார்கள்...

எங்கட ஊரிலை அவர்களுக்கு தேவையான வேலையோ படிப்போ இல்லை எண்டு அடுத்த ஊருக்கு போய் பெற்றுக்கொள்ளுறதை பஞ்சம் பிழைக்கிறது எண்டு தமிழிலை சொல்லுவினம்... பஞ்சம் பிழப்பவர்களுக்கு தமிழிலை பரதேசிகள் எண்டு பெயர்... :D

ஆகவே என் அம்மாவும் அப்பாவும் ஊரை விட்டு பொருளாதாரம் முதல் வேறுவகையான பஞ்சத்தால் இடம் பெயந்தவை தான்...

அரசியல் காரணத்தால் நான் நாடு விட்டு நாடு வந்ததால் "அரசியல் அகதி"... அவர்கள் "பொருளாதார அகதிகள்" ..

அம்பிட்டுதான் வித்தியாசம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பை வைச்சு அந்தஸ்து பாப்பவனுக்கும் ? படிப்பறிவில்லாமல் சாதி பாப்பவனுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிப்பை வைச்சு அந்தஸ்து பாப்பவனுக்கும் ? படிப்பறிவில்லாமல் சாதி பாப்பவனுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு வித்தியாசமும் இல்லை.

எவ்வளவு தூரம் இது மற்றையவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் தான் அந்த இடத்தில் அவரது நிலை அல்லது கருத்து கணிக்கப்படும். இது பற்றி எழுத முன்பு ஒரு தலையங்கத்தில் எழுதினனான் "ஏற்ருக்கொள்ளபட்கூடிய பிரிவுகள் எவை என்று?" நேரமின்மையில்லையாலும் அதைபற்றி அதிகம் தெரியாதாலும் தொடர்ந்து எழுதவில்லை. இங்கே நெ எல்லோரும் குறை சொல்லுகிறோம் ஆனால் அவர் சேருகிற, அல்லது அவரைபோன்ற "படித்த குழாத்தில் " இதுகள் எல்லாம் சகசம். அங்கெ பெரியளவில் சாதி இல்லை, ஒன்றாக சேருவார்கள் தங்கள் இன்ப துன்பங்களை பரிந்து கொள்ளுவார்கள். கலியாணம் போன்றவற்றிருக்கு கூட உதவுவார்கள், அங்கே படிப்பும் அந்தஸ்தும் தான் முக்கியம். மற்ற பக்கத்தில், இந்த நாடுகளில் கூட படிக்கமால், அதற்கேற்ற வேலைகிடிடைகாமல், சாதியை மட்டும் ஒரு அடிப்படையாக/தகுதியாக கொண்டு கூட்டம் சேருகிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இதில் யாரிலும் பிழை இல்லை என்றுதான் நான் நினைக்கிறன். படிச்சவன், தன்னை சாதியை மட்டும் கட்டிப்பித்துகொண்டிருந்தால் வாழ்க்கை நரகமாகி விடும். இந்தனுடைய இன்னுமொரு பக்கம்தான் பலரும் வேறு மொழி, இன பெண்களை, ஆக்களை கலியாணம் கட்டுவது. இது சமூகத்தில் மட்டும் தான் அல்ல, பல்கலையிலும் உண்டு, வேலைத்தலத்திலும் உண்டு, அந்த பாகுபாடு/பிரிவு சூழ உள்ளவர்களால் ஏற்ருக்கொலப்ப்படுமால் அது சரிதான். தமிழன் சிங்களத்தியை கட்டினால் வேலை செய்கிற இடத்தில் பிரச்சனை இல்லை, ஆனால் பிரச்சனை வீட்டிலேயே தான்..அங்குதான் அது ஒரு தேவையற்ற விடயம், அம்மாவுக்கு தன்னுடைய சம்பத்தி ஒரே குட்டையில் உறின மட்டை என்றால் சந்தோசம் அதிகம் அதைத்தான் அவ விரும்புவா, ஆனால் பெடியன் விரும்புவது தன்னோட உறின மட்டை என்றால் தனக்கு சுகம் என்று.

அடிப்படையில் எதோ ஒருவகையில் பிரிவுகள் இருக்கத்தான் போகுது, அது அகக்கொரைன்தது அவர்கள் வாழும் சமூகத்தால் ஆவது ஏற்றுக்கொண்டால் அந்த பிரிவு ஏற்றுக்கொள்ளப்படும்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணாவின் வாதத் திறமைக்கு ஒரு பச்சை. நான் கூட ஊரிலிருந்து அவுசுக்கு உயர் கல்விக்காகத் தான் வந்தேன். எனக்கு ஸ்கோல் எதுவும் கிடைக்கவில்லை. நானே மூன்வு வேலை செய்து மிச்சம் பிடிச்சுத் தான் என்ட யுனி பீஸ் கட்டினனான். இப்போது முறைப்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்து அதுவும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார்கள். அசைலம் அடிச்ச ஆக்களை குறை சொல்லவில்லை, ஆனால் அவர்களில் சிலர் நடந்து கொள்ளும் விதம் தான் எனக்கு அறவே பிடிப்பதில்லை. இவர்கள் மாணவர் விசாவில் வந்தவர்களை இளக்காரமாக நோக்குவதுடன் அவர்களுடன் ஒப்பிட்டு வேற பேசுவது. இவர்களின் பிள்ளைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தாங்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டை குத்தகைக்கு எடுத்திருப்பது போலவும் நாங்கள் எல்லாரும் பஞ்சத்தில அடிபட்ட பரதேசிகள் போலவும் தான் அவயளிண்ட கதை காரியங்கள் இருக்கும். கனபேர் புலம் புலம் பெயர்ந்ததால மல்ழலின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்னவோ உண்மை தான் ஆனால் நெடுக்கர் குறிப்பிட்டது போல எங்களின் வீழ்ச்சிக்கும் அதுதான் முக்கிய காரணி என்பது மறுக்க முடியாத உண்மை. வெளியில வந்த எல்லாரும் ஊரில ஆயுதம் எடுத்து அடிபட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது (நான் உட்பட). எனவே வெளியில வந்தம், அசைலம் அடிச்சம் காச அனுப்பினம், ஆயுதம் வாங்கினம், கோடி பிடிச்சம், போராட்டத்த வளர்த்தம் எண்டு கதைக்க புலம் பெயர்ந்த ஒருத்தருக்கும் உரிமையில்லை. உம்னைகள் கசக்கும் அதுக்காக அதை எல்லோரும் ஏற்றுக்கொள்லோனும் எண்டு இல்லை.

Link to comment
Share on other sites

நெடுக்கர், நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ தெரியாது. நான் அறிய அகதித் தமிழர்கள் நன்றாக படித்து உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். நான் வசிக்கும் பகுதியிலேயே நிறைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், முதலீட்டு வங்கிகளில் வேலைசெய்பவர்கள், சட்டத்தரணிகள், உயர் சிவில் பதவிகளில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். படிக்க முடியாதவர்கள் வியாபாரம் செய்து கொண்டு நல்ல வசதியாக வாழ்கிறார்கள். அதுவும் முடியாதவர்கள் தங்களால் இயன்ற வேலைகளை செய்து கொண்டு கவுரவமாக வாழ்கிறார்கள். நான் சிட்டிக்குள் வேலை செய்வதால் உயர் பதவிகளில் உள்ள பலரைத் தெரியும். இரண்டாம் தலைமுறை (இங்கு பிறந்த அகதிகளின் பிள்ளைகள்) நன்றாகப் படித்து 5 இலக்க சம்பளத்தில் உயர் பதவிகளில் வேலை செய்கிறார்கள். லண்டனுக்கு தமிழர்கள் அகதியாக வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள்தான் ஆகின்றன. யூதர்களும் இந்தியர்களும் எப்போவோ வந்து விட்டார்கள். மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழர்கள் பிரித்தானியாவிற்கு இடம்பெயர முக்கிய காரணம் கல்வியும் வேலையுமேயாகும். சிறிய கூட்டத்தினர் அரச பணத்தில் வாழ்ந்து கொண்டோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக எல்லா அகதித் தமிழர்களையும் மொள்ளமாறிகள் முடிச்சவிக்கிகள் என்று கூற முடியாது.

நீங்கள் கூறுவது மாதிரி மாணவ விசாவில் வந்தவர்களுக்கு சிரமங்கள் அதிகம். வேலை செய்து கொண்டு படிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தவன். மாணவ விசாவிவில் வந்து கஷ்டம் தாங்காமல் அகதியாக மாறியவர்கள் பலரைத் தெரியும்.

மற்றும்படி இங்கு குடிவரவுத் திணைக்களத்தில் புலிகள் மீது எத்தனை பேர் குற்றம் சாட்டினார்களோ தெரியாது. புலிகளுக்கு எதிரானவர்களும் புலிகள் மீது குற்றம் சாட்டியிருக்கலாம்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவின் வாதத் திறமைக்கு ஒரு பச்சை. நான் கூட ஊரிலிருந்து அவுசுக்கு உயர் கல்விக்காகத் தான் வந்தேன். எனக்கு ஸ்கோல் எதுவும் கிடைக்கவில்லை. நானே மூன்வு வேலை செய்து மிச்சம் பிடிச்சுத் தான் என்ட யுனி பீஸ் கட்டினனான். இப்போது முறைப்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்து அதுவும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார்கள். அசைலம் அடிச்ச ஆக்களை குறை சொல்லவில்லை, ஆனால் அவர்களில் சிலர் நடந்து கொள்ளும் விதம் தான் எனக்கு அறவே பிடிப்பதில்லை. இவர்கள் மாணவர் விசாவில் வந்தவர்களை இளக்காரமாக நோக்குவதுடன் அவர்களுடன் ஒப்பிட்டு வேற பேசுவது. இவர்களின் பிள்ளைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தாங்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டை குத்தகைக்கு எடுத்திருப்பது போலவும் நாங்கள் எல்லாரும் பஞ்சத்தில அடிபட்ட பரதேசிகள் போலவும் தான் அவயளிண்ட கதை காரியங்கள் இருக்கும். கனபேர் புலம் புலம் பெயர்ந்ததால மல்ழலின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்னவோ உண்மை தான் ஆனால் நெடுக்கர் குறிப்பிட்டது போல எங்களின் வீழ்ச்சிக்கும் அதுதான் முக்கிய காரணி என்பது மறுக்க முடியாத உண்மை. வெளியில வந்த எல்லாரும் ஊரில ஆயுதம் எடுத்து அடிபட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது (நான் உட்பட). எனவே வெளியில வந்தம், அசைலம் அடிச்சம் காச அனுப்பினம், ஆயுதம் வாங்கினம், கோடி பிடிச்சம், போராட்டத்த வளர்த்தம் எண்டு கதைக்க புலம் பெயர்ந்த ஒருத்தருக்கும் உரிமையில்லை. உம்னைகள் கசக்கும் அதுக்காக அதை எல்லோரும் ஏற்றுக்கொள்லோனும் எண்டு இல்லை.

வசதி இல்லாதவர்களை வசதியுள்ளவர்கள் இளக்காரமாகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. அத்தோடு வசதி, வாய்ப்புக்கள் வந்தால் பழமரத்தை நோக்கிவரும் வெளவால்களைப் போன்று வந்து ஒட்டுவார்கள்..

கல்விகற்கும் தமிழர்களில் பலவகையினர் உள்ளனர்.



  • ஸ்கொலசிப்பில் வருபவர்களுக்குக் கிடைக்கும் உதவிப் பணத்தைச் சிக்கனமாகப் பாவித்து, பகுதிநேர வேலைகூடச் செய்யாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவோர்.
  • மாணவ விசாவில் வந்து வெளிநாட்டு மாணவர்களுக்கான மிக அதிகமான கட்டணத்தைச் செலுத்த இரவிரவாக வேலை செய்து, பகலில் படித்துக் கஷ்டப்படுவோர் (சிலர் வசதியானவர்களாக இருந்தால் ஊரில் இருந்தே செலவுக்குப் பணம் பெற்றுக் கொள்வார்கள்)
  • அகதியாக வந்து உள்நாட்டுக் கட்டணத்தைக் கட்டிப் படிப்பில் ஈடுபடுவோர். இவர்களுக்கு குடும்ப பாரத்தையும் சுமக்கவேண்டியிருந்தால், கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்யவேண்டும்.
  • அகதியாக வந்து இங்கு தமது உயர்தரத்தை சிறப்பாக முடித்து "மாணவ நிதிய" உதவி பெற்று கல்வி கற்போர்.
  • இங்கு பிறந்து வளர்ந்து (பெற்றோர் எப்படியும் வந்திருக்கலாம்), பெற்றோரின் உதவியுடன் கல்விகற்போர்.

இவர்கள் எல்லோரும் படித்து முன்னுக்கு வரத்தான் கல்வி கற்கின்றார்கள்.

அதே நேரத்தில் தாயகத்தில் மிகத் திறமையான மாணவர்களாக இருந்தும், குடும்பசுமை காரணமாக படிக்க நேரமின்றி உழைப்பில் மட்டும் கவனம் செலுத்தி, தமது சொந்தத் திறமையால் பலரும் தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள். இப்படியானவர்களுக்குப் பட்டம்/கல்விச் சான்றிதழ் இல்லையென்பதால், அறிவு குறைந்தவர்கள் என்று எண்ணக்கூடாது..

விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எனினும் மனித்தன்மையை வளர்த்துப் பிறரை சகமனிதர்களாக மதித்து வாழவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்னாலேயும் ஆதாரத்தோடு நிருபீக்க முடியும் புலியை சொல்லி அசேலம் அடித்தவர்கள் ஒப்பிட்டளவில் அரசையும் ஆமியையும் சொல்லி அசேலம் அடித்தவர்களை விட குறைவு.ஆனால் அப்படி நான் நிருபிற்க முதல் நீங்கள் உங்கள் ஆதாரத்தை காட்டுங்கள்.

அதை விட மாணவர் விசாவில் வந்து விட்டு நாட்டுக்கு திரும்பி போகாமல் அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என நான் சொல்லவில்லை [ஆனால் உங்களைப் போன்ற சிலர் நான் மாணவ விசாவில் தான் வந்திருக்கிறேன் திரும்பிப் போய் விடுவேன் என்பவர்கள் கட்டாயம் போகத் தான் வேண்டும்.]இங்கே அசேலம் அடிப்பார்கள் தொழில் விசா பெறுவார்கள் அல்லது விசா உள்ள ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து இங்கே குடியேறி விடுவார்கள்...மொத்தத்தில் படிக்க வந்து விட்டு திரும்பி செல்பவர்கள் சரியான குறைவு.

ஒருதரும் புலம் பெயர்ந்து போகக் கூடாது என புலிகள் தடுத்திருந்தால் எல்லோரையும் தான் தடுத்திருக்க வேண்டும் உங்களைப் போன்ற படிக்க வெளிக்கிட்டவர்களையும் சேர்த்து...அப்படி போராட்டத்திற்கு தேவையான அறிவைப் பெறுவதற்கு புலியில் சேர்ந்து புலியில் பயிற்சி பெற்றவர்களை மட்டும் தான் அனுப்பி இருக்க வேண்டும்.

உங்களை விட படிப்பில் சிறந்தவர்கள் இயக்கத்திற்கு போய் சாக நீங்கள் மட்டும் வசதி இருந்த காரணத்தால் படிக்க வந்தது எந்த ஊர் நியாயம்?

இங்கு அசேலம் அடித்தவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவர்களின் சொந்தக்காரர் குறைந்த பட்சம் ஒருவராவது இயக்கத்திற்குப் போய் செத்து இருப்பார்கள்.

எப்ப தலைப்பு எந்த தலைப்பு எடுத்தாலும் பெண்களை இழுத்து கேவலப்படுத்தாமல் இருக்க மாட்டீர்களா?...உங்களைப் பெத்த அம்மாவும் ஒரு பெண் தான்...ஒரு சில பெண்கள் தப்பாக நடக்கிறார்கள் என்பதற்காக முழுப் பெண்களையும் கேவலமாய் கதைக்க வேண்டாம்.

பிரபாகரன் இங்கு வந்து உழைத்து ஆயுதம் வாங்கி அதன் பின் போராட முடியாது என்பதால் தான் பொது மக்களை புலம் பெயர்ந்து போக அனுமதித்தார்கள் அகதி மக்கள் முடிந்தளவு தங்கள் கடமையை செய்தார்கள்ஸ...70இ80 களில் படிக்க வந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறியுள்ளார்கள்...இன்று வரை புலியை விமர்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஒரு சிலரைத் தவிர.

அகதி அந்தஸ்து காரணமாய் தான் போராட்ட பற்று இல்லாமல் போய் விட்டது என எழுதியுள்ளீர்கள் நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.இதை முதலே கேட்டேன் நீங்கள் பதில் சொல்லவில்லை மாணவ விசாவில் வந்தவர்கள் அனைவருமே தாயகத்தின் மீது பற்று கொண்டு படிப்பு முடிந்ததும் திரும்பிப் போய் விடுவார்களா?

எமது போராட்டம் அழிந்ததிற்கு காரணம் எமக்குள் ஒற்றுமை இல்லை,பல வகையில் வேறுபாடு பார்த்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன்.

அகதியாய் வந்த மக்கள் தம்மால் இயன்றளவு கடைசிப் போரை நிறுத்தப் பாடுபட்டார்கள் ஆனால் உங்களைப் போன்ற மாணவ விசாவில் வந்தவர்கள் புலியை விமர்சித்துக் கொண்டு கணணியை தட்டிக் கொண்டு இருந்திருப்பீர்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்னாலேயும் ஆதாரத்தோடு நிருபீக்க முடியும் புலியை சொல்லி அசேலம் அடித்தவர்கள் ஒப்பிட்டளவில் அரசையும் ஆமியையும் சொல்லி அசேலம் அடித்தவர்களை விட குறைவு.ஆனால் அப்படி நான் நிருபிற்க முதல் நீங்கள் உங்கள் ஆதாரத்தை காட்டுங்கள்.

அதை விட மாணவர் விசாவில் வந்து விட்டு நாட்டுக்கு திரும்பி போகாமல் அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என நான் சொல்லவில்லை [ஆனால் உங்களைப் போன்ற சிலர் நான் மாணவ விசாவில் தான் வந்திருக்கிறேன் திரும்பிப் போய் விடுவேன் என்பவர்கள் கட்டாயம் போகத் தான் வேண்டும்.]இங்கே அசேலம் அடிப்பார்கள் தொழில் விசா பெறுவார்கள் அல்லது விசா உள்ள ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து இங்கே குடியேறி விடுவார்கள்...மொத்தத்தில் படிக்க வந்து விட்டு திரும்பி செல்பவர்கள் சரியான குறைவு.

ஒருதரும் புலம் பெயர்ந்து போகக் கூடாது என புலிகள் தடுத்திருந்தால் எல்லோரையும் தான் தடுத்திருக்க வேண்டும் உங்களைப் போன்ற படிக்க வெளிக்கிட்டவர்களையும் சேர்த்து...அப்படி போராட்டத்திற்கு தேவையான அறிவைப் பெறுவதற்கு புலியில் சேர்ந்து புலியில் பயிற்சி பெற்றவர்களை மட்டும் தான் அனுப்பி இருக்க வேண்டும்.

உங்களை விட படிப்பில் சிறந்தவர்கள் இயக்கத்திற்கு போய் சாக நீங்கள் மட்டும் வசதி இருந்த காரணத்தால் படிக்க வந்தது எந்த ஊர் நியாயம்?

இங்கு அசேலம் அடித்தவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவர்களின் சொந்தக்காரர் குறைந்த பட்சம் ஒருவராவது இயக்கத்திற்குப் போய் செத்து இருப்பார்கள்.

எப்ப தலைப்பு எந்த தலைப்பு எடுத்தாலும் பெண்களை இழுத்து கேவலப்படுத்தாமல் இருக்க மாட்டீர்களா?...உங்களைப் பெத்த அம்மாவும் ஒரு பெண் தான்...ஒரு சில பெண்கள் தப்பாக நடக்கிறார்கள் என்பதற்காக முழுப் பெண்களையும் கேவலமாய் கதைக்க வேண்டாம்.

பிரபாகரன் இங்கு வந்து உழைத்து ஆயுதம் வாங்கி அதன் பின் போராட முடியாது என்பதால் தான் பொது மக்களை புலம் பெயர்ந்து போக அனுமதித்தார்கள் அகதி மக்கள் முடிந்தளவு தங்கள் கடமையை செய்தார்கள்ஸ...70இ80 களில் படிக்க வந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறியுள்ளார்கள்...இன்று வரை புலியை விமர்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஒரு சிலரைத் தவிர.

அகதி அந்தஸ்து காரணமாய் தான் போராட்ட பற்று இல்லாமல் போய் விட்டது என எழுதியுள்ளீர்கள் நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.இதை முதலே கேட்டேன் நீங்கள் பதில் சொல்லவில்லை மாணவ விசாவில் வந்தவர்கள் அனைவருமே தாயகத்தின் மீது பற்று கொண்டு படிப்பு முடிந்ததும் திரும்பிப் போய் விடுவார்களா?

எமது போராட்டம் அழிந்ததிற்கு காரணம் எமக்குள் ஒற்றுமை இல்லை,பல வகையில் வேறுபாடு பார்த்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன்.

அகதியாய் வந்த மக்கள் தம்மால் இயன்றளவு கடைசிப் போரை நிறுத்தப் பாடுபட்டார்கள் ஆனால் உங்களைப் போன்ற மாணவ விசாவில் வந்தவர்கள் புலியை விமர்சித்துக் கொண்டு கணணியை தட்டிக் கொண்டு இருந்திருப்பீர்கள் :huh:

உங்களின் கருத்துக்கள் அனைத்தும் எழுந்தமானமானவை.

குறிப்பாக அசைலம் அடித்த கூட்டத்தில் இருந்து ஒருவராவது இயத்தில் இருந்து மாவீரத்துவம் எய்தி இருப்பதாக நீங்கள் கூறுவது மிக அபந்தமான பொய்.

நான் அறிய பல குடும்பங்கள் எந்த போராட்டப் பங்களிப்பும் இன்றி ஏன் இலங்கையில் எந்த நிலையான சொத்துக்களையும் வைத்திருக்காத போதும்.. கடன் வாங்கி அசைல வாழ்வை மையமாக வைத்து பிழைப்பு நடத்த வெளிநாட்டுக்கு ஓடி வந்ததை கண்டிருக்கிறேன். இந்த நிலை மோசமடைவதைக் கண்டுதான் விடுதலைப்புலிகள் பாஸ் நடைமுறையைக் கொண்டு வந்தனர். இப்படி அப்பட்டமான உண்மைகளையே மூடி மறைக்கும் உங்களோடு சட்ட ஆவணங்களில் உள்ளவற்றை எவ்வாறு எந்த நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்வது.

சில ஆதாரங்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது. காரணம்.. அவை குறிப்பிட்ட நிறுவனங்களால் பாதுகாக்கப்பட்டுள்ள ஆவணங்கள். அவர்களின் எழுத்து மூல அனுமதி இன்றி அவற்றில் உள்ள விபரங்களை பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள முடியாது.

நான் குறித்த நிறுவனத்தில் சட்ட ஆசோசனை மையத்தில் ஊதியமற்ற சேவை வழங்குனராக பணியாற்றிய காலத்தில் அறிந்து கொண்ட உண்மைகளை சட்ட காப்புக்கு உட்பட்ட வகையில் தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். உங்களுக்கு அவசியம் என்றால் நீங்கள் எழுத்து மூல உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை தருகிறேன். நீங்களே அங்கு சென்று காரணங்களைச் சொல்லி ஆவணங்களை பார்வையிடலாம். அவசியம் என்றால் சொல்லுங்கள். எழுத்து மூல உத்தரவாதத்தில் தகவல் காப்பு அவசியம் என்பதும் ஆவணங்களில் உள்ள தனிப்பட்ட விபரங்கள் எவையும் பொது இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டமாட்டாது என்றும் நீங்கள் உத்தரவாதம் அளிக்கவும் சட்ட ஆற்றுகைக்குள் உங்களை இட்டுக் கொள்ளவும் முன் வர வேண்டும்.

உங்களுக்கு மாணவ விசா பற்றியோ மாணவர்கள் பற்றியோ தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். சும்மா மாணவரா வந்தவை எல்லாம் இங்க நிக்கினம் என்ற கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். மாணவ விசாவில் வந்து கலியாணம் முடிச்ச பெண்கள் பலர். மாணவ விசாவில் வந்து அசைலம் அடித்தவர்கள் பலர். உண்மையில் அவர்களின் வரவின் நோக்கம்.. படிப்பதல்ல. இந்த நாட்டில் வந்து குடியேறுவது. எமது நோக்கம் அதுவல்ல. நாங்கள் பல்கலைகழகங்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். சும்மா கொலசிப் தந்து போய் உட்காரு என்று அனுப்பி வைப்பதில்லை. தயவுசெய்து விபரங்களை அறியாவிட்டால் அதைப் பற்றி கருத்துப் பகிர்வதை நிறுத்துவது நல்லது. தெரிந்த விடயங்களை வைத்து கருத்தாடுங்கள். சும்மா சப்பை கட்டு கட்டாமல்.

ஒரு பிள்ளையை போராட்டத்தில் சாகடித்திட்டு மிச்சாக்கள் அசைலம் அடிச்சு வெளிநாட்டில வாழ போராட்டம் என்ன பிணங்களின் முதலீட்டுக் களமா. இப்படியான ஒரு கேவலமான வாழ்க்கை தமிழர்களுக்கு வெளிநாட்டில் அவசியமா. யாரோ ஒருவன் இலட்சியப் பற்றோடு மண் பற்றோடு அந்த மண்ணின் விடுதலைக் கனவோடு மடிய.. அவனின் சாவை வைத்து நீங்கள் அசைலம் அடித்து அவனின் சாவை முதலீடாக்கி.. வாழ்வது தானா நீங்கள் போராடும் இலட்சனம்..????! :D:):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ தெரியாது. நான் அறிய அகதித் தமிழர்கள் நன்றாக படித்து உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். நான் வசிக்கும் பகுதியிலேயே நிறைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், முதலீட்டு வங்கிகளில் வேலைசெய்பவர்கள், சட்டத்தரணிகள், உயர் சிவில் பதவிகளில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். படிக்க முடியாதவர்கள் வியாபாரம் செய்து கொண்டு நல்ல வசதியாக வாழ்கிறார்கள். அதுவும் முடியாதவர்கள் தங்களால் இயன்ற வேலைகளை செய்து கொண்டு கவுரவமாக வாழ்கிறார்கள். நான் சிட்டிக்குள் வேலை செய்வதால் உயர் பதவிகளில் உள்ள பலரைத் தெரியும். இரண்டாம் தலைமுறை (இங்கு பிறந்த அகதிகளின் பிள்ளைகள்) நன்றாகப் படித்து 5 இலக்க சம்பளத்தில் உயர் பதவிகளில் வேலை செய்கிறார்கள். லண்டனுக்கு தமிழர்கள் அகதியாக வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள்தான் ஆகின்றன. யூதர்களும் இந்தியர்களும் எப்போவோ வந்து விட்டார்கள். மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழர்கள் பிரித்தானியாவிற்கு இடம்பெயர முக்கிய காரணம் கல்வியும் வேலையுமேயாகும். சிறிய கூட்டத்தினர் அரச பணத்தில் வாழ்ந்து கொண்டோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக எல்லா அகதித் தமிழர்களையும் மொள்ளமாறிகள் முடிச்சவிக்கிகள் என்று கூற முடியாது.

நீங்கள் கூறுவது மாதிரி மாணவ விசாவில் வந்தவர்களுக்கு சிரமங்கள் அதிகம். வேலை செய்து கொண்டு படிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தவன். மாணவ விசாவிவில் வந்து கஷ்டம் தாங்காமல் அகதியாக மாறியவர்கள் பலரைத் தெரியும்.

மற்றும்படி இங்கு குடிவரவுத் திணைக்களத்தில் புலிகள் மீது எத்தனை பேர் குற்றம் சாட்டினார்களோ தெரியாது. புலிகளுக்கு எதிரானவர்களும் புலிகள் மீது குற்றம் சாட்டியிருக்கலாம்தானே.

மருத்துவர்கள் கணக்காளர்கள் பொறியலாளர்கள் மாணவர்கள் பலருக்கு அகதி அந்தஸ்து என்று பொய் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுத்து வர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் பலவேறு விசா அடிப்படையில் இங்கு வரலாம். அது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அப்படி வருவது இன்று நேற்றல்ல பல காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. அவை பிரித்தானிய குடியேற்றத்துறைக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படுபவை. அப்படி வந்த தமிழர்களை நாம் இங்கு கொண்டு வரவில்லை. அதேபோல் உண்மையான அரசியல் காரணங்களோடு அச்சுறுத்தல்களோடு அகதியாக வந்தவர்களையும் நாம் இங்கு கொண்டு வரவில்லை.

ஆனால் அகதி அந்தஸ்துக்கு எந்தத் தகுதியும் இன்றி.. பொய் சொல்லி புலிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பொருளாதார ரீதியான காரணங்களை முன் வைத்து அகதியாக வந்துவிட்டு புலி அவதூறு சொல்லி அசைலம் அடித்த தமிழர்களே எமது போராட்டத்தினை அதிகம் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி உள்ளனர். தமிழ் அகதிகளில் அவர்களே அதிகம். அவர்கள் தான் எம் பார்வையில் எமது போராட்ட அழிவுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மற்றும்படி சட்ட ரீதியாக வந்தவர்கள்.. தேசத்தை காட்டிக் கொடுத்து அதன் துயரை காட்டி பிழைப்பு நடத்தாது வந்தவர்களால் போராட்டத்திற்கு ஆபத்து வரவில்லை..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அகதி அந்தஸ்துக்கு எந்தத் தகுதியும் இன்றி.. பொய் சொல்லி புலிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பொருளாதார ரீதியான காரணங்களை முன் வைத்து அகதியாக வந்துவிட்டு புலி அவதூறு சொல்லி அசைலம் அடித்த தமிழர்களே எமது போராட்டத்தினை அதிகம் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி உள்ளனர். தமிழ் அகதிகளில் அவர்களே அதிகம். அவர்கள் தான் எம் பார்வையில் எமது போராட்ட அழிவுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பிரித்தானியாவில் அண்ணளவாக மூன்று லட்சம் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எடுத்துக்கொண்டால், மேற்குறித்தவர்கள் எத்தனை வீதத்தினர் என்பதை உங்கள் புள்ளிவிபரவியல் தரவுகளின் அடிப்படையில் கூறமுடியுமா?

என்னைப் பொறுத்தவரை இப்படியானவர்கள், மிகச் சிறுபான்மையினரே.. ஆனால் ஆதாரங்களை காட்ட தரவுகள் என்னிடம் இல்லை!

Link to comment
Share on other sites

நானும் இப்பதான் நிலா அக்காவின்ர பதிவைப் படிச்சனான்..! சுவாரசியமா இருந்தது..! :huh:

பி.கு.: இச்சமயத்தில் நான் இந்தத் திரியில் இட்ட முதல் பதிவை நினைவு கூருகிறேன்..! :D:)

எனக்கு சுடாது..! ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..! விசா. விசா..! :lol:

Link to comment
Share on other sites

மருத்துவர்கள் கணக்காளர்கள் பொறியலாளர்கள் மாணவர்கள் பலருக்கு அகதி அந்தஸ்து என்று பொய் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுத்து வர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் பலவேறு விசா அடிப்படையில் இங்கு வரலாம். அது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அப்படி வருவது இன்று நேற்றல்ல பல காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. அவை பிரித்தானிய குடியேற்றத்துறைக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படுபவை. அப்படி வந்த தமிழர்களை நாம் இங்கு கொண்டு வரவில்லை.

நெடுக்ஸ்

நான் கூறியவர்கள் இங்கு அகதியாக வந்து படித்து உயர் பதவியில் இருப்பவர்களை. எனது முன்னைய பதிவில் தெளிவாக எழுதவில்லை என நினைக்கிறேன்.

மற்றும்படி இங்கு அகதியாக வந்த எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் சிங்கள இராணுவத்தின் கொடுமையினாலேயே தாங்கள் நாட்டை விட்டு ஒடிவரவேண்டி வந்ததென்றே கூறினார்கள். புலிகள் மீது பழி போட்டவர்களைப் பற்றி எனக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிடைத்த முதல் பெற்றோல் ஸ்டேசன் மனேஜர் பெருமை பிடித்த மனிதர் அவருக்குதான் எல்லாம் தெரியும். அவரைவிட்டால் வேறு ஆட்கள் இல்லை என்று நினைக்கும் தமிழ் மனிதர். எனக்கு தெரிந்த எதனையும் அவருக்கு சொல்ல முடியாது அவருக்குதான் அதனைவிட எல்லாம் தெரியும் என்று சொல்வார். அங்கு வேலைக்கு போன கொஞ்சநாளில் இதனை தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு அவரோடு பெரிசாக கதைப்பதற்கு நான் போவதில்லை.எனக்கு தெரியும் யாருடன் எப்படி பழக வேண்டும் என்பது. உண்மையில் அது ஒரு கலைதான். அது இந்த உலகத்தில் மிக முக்கியம். அவர் தன்னை பெரியவராக காட்டி கொண்டால்தான் சந்தோசப்படுவார். அது அவரின் குணம்

இங்கு யாழ் களத்தின் நிலையும் இப்படித்தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் அண்ணளவாக மூன்று லட்சம் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எடுத்துக்கொண்டால், மேற்குறித்தவர்கள் எத்தனை வீதத்தினர் என்பதை உங்கள் புள்ளிவிபரவியல் தரவுகளின் அடிப்படையில் கூறமுடியுமா?

என்னைப் பொறுத்தவரை இப்படியானவர்கள், மிகச் சிறுபான்மையினரே.. ஆனால் ஆதாரங்களை காட்ட தரவுகள் என்னிடம் இல்லை!

என்னிடம் இருக்கிறது. அகதி அந்தஸ்து வாங்க என்று தமிழ் சட்ட ஆட்களால்.. புனையப்பட்ட புனைகதைகளோடு எம்மவர்கள்.. புலிகளை வசைபாடிக் கொண்டு குடிவரவத்துறைக்கு அளித்த எழுத்துமூல.. மற்றும் வாய் மொழி மூல ஆவணங்களை நான் போதிய அளவு கண்டிருக்கிறேன். அவற்றோடு வேலையும் செய்திருக்கிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவர்கள் கணக்காளர்கள் பொறியலாளர்கள் மாணவர்கள் பலருக்கு அகதி அந்தஸ்து என்று பொய் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுத்து வர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் பலவேறு விசா அடிப்படையில் இங்கு வரலாம். அது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அப்படி வருவது இன்று நேற்றல்ல பல காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. அவை பிரித்தானிய குடியேற்றத்துறைக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படுபவை. அப்படி வந்த தமிழர்களை நாம் இங்கு கொண்டு வரவில்லை. அதேபோல் உண்மையான அரசியல் காரணங்களோடு அச்சுறுத்தல்களோடு அகதியாக வந்தவர்களையும் நாம் இங்கு கொண்டு வரவில்லை.

ஆனால் அகதி அந்தஸ்துக்கு எந்தத் தகுதியும் இன்றி.. பொய் சொல்லி புலிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பொருளாதார ரீதியான காரணங்களை முன் வைத்து அகதியாக வந்துவிட்டு புலி அவதூறு சொல்லி அசைலம் அடித்த தமிழர்களே எமது போராட்டத்தினை அதிகம் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி உள்ளனர். தமிழ் அகதிகளில் அவர்களே அதிகம். அவர்கள் தான் எம் பார்வையில் எமது போராட்ட அழிவுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மற்றும்படி சட்ட ரீதியாக வந்தவர்கள்.. தேசத்தை காட்டிக் கொடுத்து அதன் துயரை காட்டி பிழைப்பு நடத்தாது வந்தவர்களால் போராட்டத்திற்கு ஆபத்து வரவில்லை..! :icon_idea:

இப்படிபட்ட கேடு கெட்டவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு புலம்பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களை இனி மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் இவர்கள் ஏன் ஒதுக்கபட்டார்கள் என்ற தெளிவு சமூதாயத்துக்கு ஏற்படும், ஆனால் இந்த படித்த மனிதர்கள் தெருவில் இறங்க முன்வருவார்களா?

Link to comment
Share on other sites

உங்களுக்கு மாணவ விசா பற்றியோ மாணவர்கள் பற்றியோ தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். சும்மா மாணவரா வந்தவை எல்லாம் இங்க நிக்கினம் என்ற கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். மாணவ விசாவில் வந்து கலியாணம் முடிச்ச பெண்கள் பலர். மாணவ விசாவில் வந்து அசைலம் அடித்தவர்கள் பலர். உண்மையில் அவர்களின் வரவின் நோக்கம்.. படிப்பதல்ல. இந்த நாட்டில் வந்து குடியேறுவது. எமது நோக்கம் அதுவல்ல. நாங்கள் பல்கலைகழகங்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். சும்மா கொலசிப் தந்து போய் உட்காரு என்று அனுப்பி வைப்பதில்லை. தயவுசெய்து விபரங்களை அறியாவிட்டால் அதைப் பற்றி கருத்துப் பகிர்வதை நிறுத்துவது நல்லது. தெரிந்த விடயங்களை வைத்து கருத்தாடுங்கள். சும்மா சப்பை கட்டு கட்டாமல்.

நெடுக்காலேபோவான்,

மேலே நீங்கள் குறிப்பிட்ட கருத்து தொடர்பாக நான் விவாதிக்கலாம் என்று இருக்கிறேன். இங்கே உங்கள் கருத்துக்கு எதிர்வாதம் வைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், படிக்காதவர்கள், அகதியாக வந்தவர்கள், சொகலர்ஷிப் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நினைப்பது எனக்கு சரியாக புரிகிறது.

அவர்கள் சார்பாக, உங்கள் கூட வாதாடலாம் என்று நினைக்கிறன். அதற்கான தகுதியும் உரிமையும் எனக்கு இருக்கு என்று உங்களுக்கு ஆணியடிச்ச மாதிரி சொல்லி கொள்ள விரும்புகிறேன். தேவை ஏற்படின் நிரூபிக்கவும் தயார்.

உங்கள் கருத்துப்படி கொழும்பில் உள்ள ஒரு பல்கலைகழகம் (சிங்கள பேராசிரியர்களை கொண்டது) உங்களை மூன்று வேறு படிப்புகளை படித்துவிட்டு வர அனுப்பியது. (அது மட்டும் அல்ல..உங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் படி என்று சொல்லி அனுப்பியது). யாருக்கு காதிலே பூ சுத்துறீங்கள்..

நேயர்களே உங்களுக்கான இந்த வார நெடுக்கின் நகைச்சுவை

நான் இலங்கையில் யாழ்மாவட்ட மாணவனாக தேர்வெழுதி.. உயர் புள்ளி அடிப்படையில் கொழும்புக்கு தெரிவாகி.. விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற்று தென்னிலங்கைக்கு வந்து... அங்கு படித்துப் பட்டம் பெற்று அங்குள்ள பல்கலைக்கழகம் ஊடாகவே அவர்கள் தெரிவு செய்து அனுப்பியே இங்கு வந்தேன். என்னை இவ்வளவு படிச்சிட்டு திரும்பி வா என்று அனுப்பி வைச்ச பல்கலைக்கழமே கேட்கவில்லை. ஆனால் நீங்க சொல்லுறீங்க.. திரும்பிப் போ என்று. வந்த அலுவல் முடிக்காமல் உங்களின் கோரிக்கைக்காக நான் எப்படி போக முடியும்.

உன்னால் இயன்றளவும் படி என்று தான் சொல்லித் தான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் (குறிப்பாக சிங்களவர்கள்) அனுப்பி வைத்தார்கள். ஆனால் தமிழர்கள் நீங்களோ உங்களின் சுயநலத்தை வெளில சொல்லிடுறம் என்று எங்களை விரட்டி அடிக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கும் சிங்களவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) பல்கலைக்கழகமூடாக புலமைபரிசிலில் அனுப்பும் மாணவனுக்கான விடுமுறை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் பேசுறீங்கள். கேட்க யாரும் இல்லை அல்லது கேட்பதுக்கு யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தீர்களோ.?

உங்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் எந்த பிணையும் இல்லாமல் போய் படிச்சிட்டு வா என்று இதனை வருசங்களாக விட்டது என்று நீங்கள் யாருக்கும் உழுந்து அரைக்கலாம். என்னிடம் ரொம்ப கஷ்டம் நெடுக்கு அவர்களே.

வேண்டும் என்றால் வாருங்கள். உங்கள் பலகலைகழக பதவிநிலையை கொடுத்து மானியங்கள் குழுவில் விசாரிப்போம். விடுமுறை தாண்டியும் வெளிநாட்டில் நிற்பவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் நிச்சயமாக இருக்கும்.

அல்லது கட்டாயவிடுப்பில் உங்கள் பெயர் உங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கபட்டிருக்கும்.

இப்போவே தெரிந்திருக்கும் நான் யார் என்று. வீண் விவாதத்துக்கு வந்து மூகுடைபடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். :icon_idea::D

என் இனிய ஏனைய கருத்தாளர்களே உங்கள் பார்வைக்கான தகவல் மூலம்

http://www.ugc.ac.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o

நெடுக்காலேபோவான்,

மேலே நீங்கள் குறிப்பிட்ட கருத்து தொடர்பாக நான் விவாதிக்கலாம் என்று இருக்கிறேன். இங்கே உங்கள் கருத்துக்கு எதிர்வாதம் வைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், படிக்காதவர்கள், அகதியாக வந்தவர்கள், சொகலர்ஷிப் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நினைப்பது எனக்கு சரியாக புரிகிறது.

அவர்கள் சார்பாக, உங்கள் கூட வாதாடலாம் என்று நினைக்கிறன். அதற்கான தகுதியும் உரிமையும் எனக்கு இருக்கு என்று உங்களுக்கு ஆணியடிச்ச மாதிரி சொல்லி கொள்ள விரும்புகிறேன். தேவை ஏற்படின் நிரூபிக்கவும் தயார்.

உங்கள் கருத்துப்படி கொழும்பில் உள்ள ஒரு பல்கலைகழகம் (சிங்கள பேராசிரியர்களை கொண்டது) உங்களை மூன்று வேறு படிப்புகளை படித்துவிட்டு வர அனுப்பியது. (அது மட்டும் அல்ல..உங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் படி என்று சொல்லி அனுப்பியது). யாருக்கு காதிலே பூ சுத்துறீங்கள்..

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) பல்கலைக்கழகமூடாக புலமைபரிசிலில் அனுப்பும் மாணவனுக்கான விடுமுறை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் பேசுறீங்கள். கேட்க யாரும் இல்லை அல்லது கேட்பதுக்கு யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தீர்களோ.?

உங்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் எந்த பிணையும் இல்லாமல் போய் படிச்சிட்டு வா என்று இதனை வருசங்களாக விட்டது என்று நீங்கள் யாருக்கும் உழுந்து அரைக்கலாம். என்னிடம் ரொம்ப கஷ்டம் நெடுக்கு அவர்களே.

வேண்டும் என்றால் வாருங்கள். உங்கள் பலகலைகழக பதவிநிலையை கொடுத்து மானியங்கள் குழுவில் விசாரிப்போம். விடுமுறை தாண்டியும் வெளிநாட்டில் நிற்பவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் நிச்சயமாக இருக்கும்.

அல்லது கட்டாயவிடுப்பில் உங்கள் பெயர் உங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கபட்டிருக்கும்.

இப்போவே தெரிந்திருக்கும் நான் யார் என்று. வீண் விவாதத்துக்கு வந்து மூகுடைபடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். :icon_idea::D

என் இனிய ஏனைய கருத்தாளர்களே உங்கள் பார்வைக்கான தகவல் மூலம்

http://www.ugc.ac.lk/en/policy/commission-circulars/17-circulars-published-in-2002/346-commission-circular- 09.html

:o:D no :lol: -8 :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இருந்த குறித்த பிரித்தானிய அரச ஆதரவு சட்ட ஆலோசணை நிறுவனத்தின் 2007 அறிக்கையின் படி.. அமையும் சில வாசகங்களை உங்களின் முன் சமர்ப்பிக்கிறேன். அதில் பல வழக்கு விபரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு தகவல் காப்பு விதிக்கமைய பிரசுரிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

அந்த வகையில் புலிகளோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவர்கள் கூட புலிகளின் பெயரை உச்சரித்து.. இறுதியில் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் புலிகளுடன் நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தமை அப்பட்டமாக சொல்லப்படுகிறது நோக்குங்கள்.

உண்மையில் பிரித்தானியாவில் உள்ள 300,000 தமிழர்களும் புலிகளல் பங்கெடுத்திருந்தார்களோ.. இதை நீங்க சொன்னா நாங்க நம்பனுமாக்கும்..??!

ஆனால் இதே தமிழர்கள் வெளியில் போடும் கோசமோ...???! வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். புலிகள் எங்கள் தலைவர்கள்..! அசைலம் அடிக்க ஒரு கொள்கை. அடிச்ச பிறகு இன்னொரு கொள்கை. யாரை ஏமாற்றுகிறீர்கள்..???!

case1t.jpg

Link to comment
Share on other sites

என்னிடம் இருந்த குறித்த பிரித்தானிய அரச சட்ட ஆலோசணை நிறுவனத்தின் 2007 அறிக்கையின் படி.. அமையும் சில வாசகங்களை உங்களின் முன் சமர்ப்பிக்கிறேன். அந்த வகையில் புலிகளோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவர்கள் கூட புலிகளின் பெயரை உச்சரித்து.. வடக்குக் கிழக்கில் தமிழர்கள் புலிகளுடன் நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தமை அப்பட்டமாக சொல்லப்படுகிறது நோக்குங்கள்.

ஆனால் இதே தமிழர்கள் வெளியில் போடும் கோசமோ...???!

case1t.jpg

நெடுக்காலேபோவான்,

இவ்வளவு படிச்ச உங்களுக்கு many இற்கும் majority இற்கும் வித்தியாசம் நல்லா தெரிஞ்சிருக்கும் தானே. இங்கு உங்கள் வாதம் எல்லா அகதிகளும் அல்லது பெரும்பான்மையான அகதிகள் புலிகளை சொல்லி தான் புகலிட வதியுரிமை பெற்றவர்கள் என்று.

ஆனால் நீங்கள் இணைத்த கட்டுரைப்படி பல (many ) தமிழர்கள் என்றால் அவர்கள் ஓட்டுகுழுக்களாகவோ, உண்மையிலேயே புலிகளால் பாதிக்கபட்டவர்களாகவோ, அல்லது அந்த சந்தப்பத்தில் வேறு வழி இல்லாமலோ சொல்லி இருக்கலாம். அதற்காக பெரும்பான்மையான (majority ) ஏதிலிகள் அப்படி தான் என்ற உங்க வாதம் தவறானது. (இது நீங்கள் இணைத்த கட்டுரைப்படி) :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலேபோவான்,

மேலே நீங்கள் குறிப்பிட்ட கருத்து தொடர்பாக நான் விவாதிக்கலாம் என்று இருக்கிறேன். இங்கே உங்கள் கருத்துக்கு எதிர்வாதம் வைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், படிக்காதவர்கள், அகதியாக வந்தவர்கள், சொகலர்ஷிப் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நினைப்பது எனக்கு சரியாக புரிகிறது.

அவர்கள் சார்பாக, உங்கள் கூட வாதாடலாம் என்று நினைக்கிறன். அதற்கான தகுதியும் உரிமையும் எனக்கு இருக்கு என்று உங்களுக்கு ஆணியடிச்ச மாதிரி சொல்லி கொள்ள விரும்புகிறேன். தேவை ஏற்படின் நிரூபிக்கவும் தயார்.

உங்கள் கருத்துப்படி கொழும்பில் உள்ள ஒரு பல்கலைகழகம் (சிங்கள பேராசிரியர்களை கொண்டது) உங்களை மூன்று வேறு படிப்புகளை படித்துவிட்டு வர அனுப்பியது. (அது மட்டும் அல்ல..உங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் படி என்று சொல்லி அனுப்பியது). யாருக்கு காதிலே பூ சுத்துறீங்கள்..

நேயர்களே உங்களுக்கான இந்த வார நெடுக்கின் நகைச்சுவை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) பல்கலைக்கழகமூடாக புலமைபரிசிலில் அனுப்பும் மாணவனுக்கான விடுமுறை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் பேசுறீங்கள். கேட்க யாரும் இல்லை அல்லது கேட்பதுக்கு யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தீர்களோ.?

உங்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் எந்த பிணையும் இல்லாமல் போய் படிச்சிட்டு வா என்று இதனை வருசங்களாக விட்டது என்று நீங்கள் யாருக்கும் உழுந்து அரைக்கலாம். என்னிடம் ரொம்ப கஷ்டம் நெடுக்கு அவர்களே.

வேண்டும் என்றால் வாருங்கள். உங்கள் பலகலைகழக பதவிநிலையை கொடுத்து மானியங்கள் குழுவில் விசாரிப்போம். விடுமுறை தாண்டியும் வெளிநாட்டில் நிற்பவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் நிச்சயமாக இருக்கும்.

அல்லது கட்டாயவிடுப்பில் உங்கள் பெயர் உங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கபட்டிருக்கும்.

இப்போவே தெரிந்திருக்கும் நான் யார் என்று. வீண் விவாதத்துக்கு வந்து மூகுடைபடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். :icon_idea::lol:

என் இனிய ஏனைய கருத்தாளர்களே உங்கள் பார்வைக்கான தகவல் மூலம்

http://www.ugc.ac.lk/

நல்ல அறிவுக் கொழுந்து.

பல்கலைக்கழக ஸ்கொலசிப் முறைகள் கூட சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அலட்டுவதில் பயனில்லை.

முதலில் அதை போய் சரியா தெரிந்து கொண்டு வரவும்.

பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களின் திறமை அடிப்படையில் ஸ்கொலசிப் பெற்றுக் கொடுக்க பிரேரிக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்கள் அதற்கு உதவும்.

அந்த வகையில் பெற்றதே நமது. சிறீலங்கா அரச கல்வி தொகையில் வருபவர்களுக்குத்தான் bonding இருக்கும். அப்படி வந்தவர்கள் தமிழர்கள் பலரும் கூட அரச பணத்தை கொள்ளை அடித்துவிட்டு வெளிநாடுகளில் தங்கிவிட்டனர். இன்னும் சிலர் அரசு பொண்டை முறிக்க அரசுக்கு பெருந்தொகை பணத்தை செலுத்தியும் உள்ளனர். எமது ஸ்கொலசிப் பல்கலைக்கழகங்கள் சார்ந்தது. திறமை அடிப்படையில் மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படுவது.

அப்படியே போய் ஒரு கொம்பிளையினையும் கொடுங்கோ. வந்திட்டார்ய்யா... நமக்கே வகுப்பெடுக்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பிரித்தானியாவில் உள்ள 300,000 தமிழர்களும் புலிகளல் பங்கெடுத்திருந்தார்களோ.. இதை நீங்க சொன்னா நாங்க நம்பனுமாக்கும்..??!

ஆனால் இதே தமிழர்கள் வெளியில் போடும் கோசமோ...???! வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். புலிகள் எங்கள் தலைவர்கள்..! அசைலம் அடிக்க ஒரு கொள்கை. அடிச்ச பிறகு இன்னொரு கொள்கை. யாரை ஏமாற்றுகிறீர்கள்..???!

பிரித்தானியாவில் வசிப்பது அண்ணளவாக 3 லட்சம் தமிழர்கள் என்றுதான் எழுதியிருந்தேன். அவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள், அல்லது ஏதாவது புலிகள் சம்பந்தமான நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தார்கள் என்று எழுதவில்லை! எனவே நீங்கள் நம்பவேண்டிய அவசியமில்லை!!!

மீண்டும் கேட்பது... உங்கள் தரவுகளின்படி பிரித்தானியாவில் வசிக்கும் மொத்தத் தமிழர்களில் எத்தனை வீதமானோர் புலிகளினால் ஆபத்து என்று அகதியானார்கள்? 0 இல் இருந்து 100 வரை உள்ள ஒரு எண்ணை நீங்கள் தந்தால் நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலேபோவான்,

இவ்வளவு படிச்ச உங்களுக்கு many இற்கும் majority இற்கும் வித்தியாசம் நல்லா தெரிஞ்சிருக்கும் தானே. இங்கு உங்கள் வாதம் எல்லா அகதிகளும் அல்லது பெரும்பான்மையான அகதிகள் புலிகளை சொல்லி தான் புகலிட வதியுரிமை பெற்றவர்கள் என்று.

ஆனால் நீங்கள் இணைத்த கட்டுரைப்படி பல (many ) தமிழர்கள் என்றால் அவர்கள் ஓட்டுகுழுக்களாகவோ, உண்மையிலேயே புலிகளால் பாதிக்கபட்டவர்களாகவோ, அல்லது அந்த சந்தப்பத்தில் வேறு வழி இல்லாமலோ சொல்லி இருக்கலாம். அதற்காக பெரும்பான்மையான (majority ) ஏதிலிகள் அப்படி தான் என்ற உங்க வாதம் தவறானது. (இது நீங்கள் இணைத்த கட்டுரைப்படி) :icon_idea:

இதைத்தான் சொல்லுறது சப்பைக் கட்டு என்று. அங்கு வேலை செய்த எனக்கே இப்படி அவிக்கிற நீங்கள்.. ஊருக்கு உலகத்துக்கு எப்படி எல்லாம் அவிப்ப்பியள்..! :lol: :lol: :D

பிரித்தானியாவில் வசிப்பது அண்ணளவாக 3 லட்சம் தமிழர்கள் என்றுதான் எழுதியிருந்தேன். அவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள், அல்லது ஏதாவது புலிகள் சம்பந்தமான நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தார்கள் என்று எழுதவில்லை! எனவே நீங்கள் நம்பவேண்டிய அவசியமில்லை!!!

மீண்டும் கேட்பது... உங்கள் தரவுகளின்படி பிரித்தானியாவில் வசிக்கும் மொத்தத் தமிழர்களில் எத்தனை வீதமானோர் புலிகளினால் ஆபத்து என்று அகதியானார்கள்? 0 இல் இருந்து 100 வரை உள்ள ஒரு எண்ணை நீங்கள் தந்தால் நல்லது!

கனடிய அரச பிரதிநிதி சொல்லியது போல 70% அங்கு என்றால் இங்கு அது 80% இருக்கும். எல்லா விபரங்களையும் திரட்டி ஒரு சரியான கணிப்பீட்டை செய்யாமல் இதை சொல்ல முடியாது. ஆனால் சட்ட நிறுவனங்களின் உதவியை நாடி அசைலம் அடித்தவர்களின்வழக்குகளின் அடிப்படையில் இதை இப்படிச் சொல்லலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக ஸ்கொலசிப் முறைகள் கூட சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அலட்டுவதில் பயனில்லை.

முதலில் அதை போய் சரியா தெரிந்து கொண்டு வரவும்.

பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களின் திறமை அடிப்படையில் ஸ்கொலசிப் பெற்றுக் கொடுக்க பிரேரிக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்கள் அதற்கு உதவும்.

அந்த வகையில் பெற்றதே நமது. சிறீலங்கா அரச கல்வி தொகையில் வருபவர்களுக்குத்தான் bonding இருக்கும்.

தேடியதில் கிடைத்தது. பொதுநலவாய நாடுகள் நிதிய ஸ்கொலசிப் பற்றியது (நெடுக்ஸ் இந்த ஸ்கொலசிப் எடுத்திருக்கவில்லை என்று தெரிகின்றது!)

MINISTRY OF HIGHER EDUCATION

COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS TENABLE IN THE

UNITED KINGDOM – 2011

Applications are entertained from eligible persons for the award of Postgraduate Scholarships offered under the Commonwealth and Fellowships Plan. These awards are tenable at Institutions of Higher Learning in the United Kingdom for the academic year commencing in September/ October 2011. Prospects can also be accessed from Commonwealth Selection Committee website, at www.cscuk.org.uk.

01. Field of Study : Awards remain open to all disciplines, but preference will be given to areas relevant to national development.

02. Tenure : (a) one year taught masters courses or equivalent degrees.

(b) six months of clinical training in medicine or dentistry.

© doctoral degrees, of up to three years duration.

(d) one year research on a split- site basis, towards a PhD registered at a Sri Lankan University.

03. Termination : Any scholarship may at the discretion of the appropriate authority be terminated at any time owing to misconduct, irregularity of attendance, absence from classes or hostel without prior approval of the authority concerned and the unsatisfactory progress in studies or failure at examinations of the holder of such scholarship. If any scholarship is terminated the scholar may be required to return to Sri Lanka at his/her own expenses.

04. General Eligibility Requirements:

Each candidate should

(a) Be a citizen of Sri Lanka.

(b) Be less than 40 years of age on 03.09.2010

© Possess a First or a Second Class (Upper Division) Honours Degree from a recognized University.

(d) Be employed in the public sector, University or a state Corporation. – Note (ii) and (iii)

(e) Possess high proficiency in English. To prove this the candidate must have sat either IELTS or TOEFL and obtained high marks.

(f) In the fields of medicine and dentistry, the candidate must have qualified as a Doctor or a Dentist between 1 October 2001 and 30 September 2006.

In addition a graduate in medicine should have obtained a distinction in the appropriate subject. – Note (i)

Notes : (i) The requirements at 04 © should have been completed by candidates irrespective of their other postgraduate qualifications.

(ii) No application will be entertained from a person holding a temporary or probationary appointment or from person who is unemployed.

(iii) An employee on probation may apply provided however that his/her confirmation is conditional upon acquiring a specified postgraduate qualification, in such a case a statement to that effect should be included in cage 17 of the application.

05. Special Eligibility Requirements :

Candidates,

1. For Business Administration and/or Management and other related fields must have taken the Graduate Management Test (GMAT)

2. For Economics or related subjects must have taken the Princeton Graduate Record Examination(GRE)

3. For medicine and dentistry should possess qualifications registerable with the General Medical Council or the General Dental Council of the United Kingdom

4. Those who are successful at the interview will be further required to pass IELTS examination conducted by the British Council and should obtain an overall score of not less than 6.5

5. For Arts and Music should submit appropriate specimen work (slides, cassettes etc.) with their applications.

6. Applications :

(a) Every application should conform to the specimen form provided.

Link to comment
Share on other sites

இதைத்தான் சொல்லுறது சப்பைக் கட்டு என்று. அங்கு வேலை செய்த எனக்கே இப்படி அவிக்கிற நீங்கள்.. ஊருக்கு உலகத்துக்கு எப்படி எல்லாம் அவிப்ப்பியள்..! :lol::o:icon_idea:

உங்கட புலம்பலை விடுவிட்டு, கருத்துக்கு கருத்தெழுத பாருங்கள். அந்த கட்டுரையில் இருக்கிறதை தான் சொன்னேன். நீங்கள் அங்கு கக்கூஸ் கழுவினதா இல்லையா என்று யார் கேட்டாங்கள்.. :lol: :lol:

உங்கள் கருத்துகளில் உங்கள் சுயபுராணங்களை தவிருங்கள் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.