Jump to content

பொக்கிசம்


Recommended Posts

என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன்.

குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என்னை அறியாமலே சிரிப்பு வரும். வருடங்கள் பல கடந்து விட்டாலும், நினைவுகள் என்னமும் பசுமையாகவே இருக்கிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பு.

உன் அக்கா கோயில் அடியால் போகும் போது உன் பெயரை உரக்க கத்தி அவரை வெறுப்பேத்த எண்ணிய நாட்கள். அந்த சைக்கிள். ஒரே காற் சட்டை. ஒரே சேட். அம்மா அது இரண்டையும் எடுத்து ஒழித்து வைத்த நாட்கள். எல்லாவற்றையும் தொலைத்தது போல ஒரு ஏக்கம்.

காலப் பரபரப்பு. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆணித்தரம், ஊர்ப்பிரச்சனை, எங்களை எல்லாம் கண்டத்துக்கு கண்டம் அலைய விட்டு விட்டது. உன் வீடு வந்த நாள், இன்னமும் நல்ல ஞாபகமாய் இருக்கிறது. தரையில் இருந்து எமது பழைய நாட்களை அசை போட்டது ஒரு இனிய அனுபவம். அப்படியான ஒரு நாள் இனி எப்ப வரும் என்ற ஏக்கமும் இருக்கிறது. நீ கொழும்பு வந்த போழுது உன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஒரு குற்ற உணர்வு இன்னமும் இருக்கிறது. அன்றைய சூழ் நிலை.அதற்காக நீ என்னை மன்னித்து இருப்பாய் என்று நம்புகிறேன்.

நன்றி, உனது 25 வருட கால நட்புக்கு. என்னை செதுக்கிய உளிகளில் நீயும் ஒருத்தி!

பிரியமுடன் பொன்னி.

Link to comment
Share on other sites

பொன்ஸ்,

ஆரம்பத்தில் வாசிக்கும்போது நகைச்சுவையாக காணப்பட்டது. ஆனால்.. நடுப்பகுதி தொடக்கம் முள்ளாக குத்துகின்றது. யதார்த்தமான வரிகள்: கதைக்காக எழுதப்பட்டதோ.. அல்லது நிஜமோ.. உங்கள் உணர்வுகளை கிரகித்துக்கொள்ள முடிகின்றது.

Link to comment
Share on other sites

சேரனின் பொக்கிசம் அவரது மற்றைய படங்கள் அளவுக்கு எனக்கு பிடிக்காவிட்டாலும் கடிதம் எழுதுதல் என்றகோணத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.

சுய புராணமோ தெரியவில்லை.76 களில் லண்டன் போன எனது அண்ணர் நான் நாட்டைவிட்டு வெளிக்கிடமட்டும்(81) அந்த 5 வருடங்களில் எழுதிய கடிதங்கள் ஒரு 5 ஆக இருக்கலாம்.ஜேர்மன் போன எனது தம்பி(80) அந்த ஒரு வருடத்தில் ஒரு 6 கடிதம் போட்டிருக்கலாம் அதுவும் மிக சுருக்கமாக.

நான் 81 போய் 84 வரை ஒவ்வொரு கிழமையும் பெற்றோருக்கு ஒருகடிதம் எப்படியும் போட்டுவிடுவேன்.காலை சாப்பிட்ட கோர்ன் பிளக்ஸ் இல் இருந்து பஸ்,டுயுப் பயணம் தொட்டு பின்னர் சாப்பிடும் மக்டொனட்ல்ஸ் அல்லது கென்டக்கி பற்றி பின்னர் இரவு வீடு வந்து சாப்பிடும் சோறு கறி முதல் சந்தித்த நபர்கள்,காலநிலை,பார்த்தபடங்கள் (மூன்றாம் பிறை பார்த்து சிறிதேவிக்கு தேசியவிருது என எழுதினேன் ஆனால் கமலுக்கு கிடைத்தது)வேலையில் பாடசாலையில் சந்திக்கும் நபர்கள் என எனது கடிதம் ஒரு குமுதம் போல் வீட்டிற்கு ஒழுங்காக போகும்.

பின் இந்தியா போக எழுதுவது கொஞ்சம் குறைந்தாலும் பிரான்ஸ் இல் இருக்கும் எனது நண்பனுக்கு சகலதையும் எழுதிவந்தேன்.

பின்னர் திரும்ப லண்டன் வந்து காதலி,மனைவி ஆகப் போகின்றவருக்கு வீட்டிற்கு என்ன மாதிரி கடிதம் போட்டேனே அதே மாதிரி ஒவ்வொரு கிழமையும் அனைத்தும் எழுதுவேன்.மனைவியின் அத்தான் கேட்பாராம் மனைவியிடம் இன்று ஏது புத்தகம் வந்ததா நான் டொய்லெட்டில் இருந்து வாசிப்பதற்கு என்று.

நேரம் இல்லை என சிலர் புலுடா விடும் போது எனக்குள் நான் சிரித்துக்கொள்வேன்.

பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதுவது போல் சந்தோசம் வேறெதிலும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது பொன்னியின் பொக்கிஷம்!

எங்கே காண நாளைக் காணவில்லை, நலமா! உங்களுடைய "காகம்" அவதார் என் மனதில் பொக்கிசமாய்.... ^_^:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.