Jump to content

கிளிநொச்சி குருகுலம் ... கரம் கொடுப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெல்லையன் இதைப் பற்றி தான் நானும் ஊர் புதினத்தில் முன்பு குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • 6 months later...

... உதவ வேண்டியவர்களுக்கு, உதவும் கரங்களோடு உதவுவோம் ... ஓர் பிள்ளையை பொறுப்பெடுங்கள் ...

Link to comment
Share on other sites

கனடாவிலையும் கன கோயில் கொம்பனிகள் இருக்குது...... அவை மூண்டு அர்ச்சனை ரிக்கெற் வாங்கினால் ஒண்டு இலவசம் எண்டு கூவி வித்து சொத்துச் சேக்கத் தான் இருக்குது.... என்ன செய்யிறது :(

Link to comment
Share on other sites

கனடாவிலையும் ...

வேறு நாடுகளிலிருந்தும், இங்குள்ள ஆலயங்கள் மூலம் பலர் உதவி வருகிறார்கள், என் நண்பர் ஒருவர் இங்குள்ள ஆலயமொன்றின் இது சம்பந்தமான விடயங்களை கவணிக்க தொடங்கி இருக்கிறார், விசாரித்து விட்டு இங்கு பதிகிறேன் ... எவ்வாறு பிற நாடுகளிலிருப்பவர்கள் உதவலாம் என்று!!

... அடுத்தது, இப்படியான திட்டமிடப்பட்ட தொண்டு நிறுவனங்கள்/ஆலயங்கள் மூலம் உதவுவது நல்லது, ... நாளுக்கொரு ரொட்டி துண்டை கொடுத்தும்,. கைக்கொரு தோலை மாட்டியும் விட்டு படம் எடுத்து போடுவதால் அவர்களின் வாழ்வு வளம்பெறாது!! ... மற்றும் ஒப்பாரிகளை ஒலிப்பதிவு செய்து போடப்படுவதெல்லாம் உண்மைகளுமில்லை, அதற்கு மேல் யாரென்று அறியாதவர்கள் மூலம் நடாத்தப்படும் மனிதாபிமான அமைப்புகள் சில நூறுகளை சேர்த்து விட்டு, அது அவர்களின் நிர்வாகச்செலவிற்கும் உண்மையில் அது போதாது! ... உண்மையில் இப்படியான சிறிய அமைப்புகளின் நடவடிக்கைகளில் விளிப்பாக இருப்பது நல்லது! ...

Link to comment
Share on other sites

வணக்கம் நெல்லியான் இந்த குருகுலம் பற்றிய மற்றும் அன்பு இல்லம் விடயத்தினை நானும் இங்கு இணைக்கலாமென முதலில் நினைத்திருந்தேன். ஆனால் நான் இங்கு எதை எழுதினாலும் உடைனேயே கே.பி என்கிறதும் துரோகி என்பதையுமே மாறி மாறி எழுதித் தள்கிறார்களே தவிர நேர்டோ அமைப்பு தாயகத்தில் என்னென்ன உதவித் திட்டங்களை நிறைவேற்றுகிறது என்பதனை பற்றி யாரும் கதைப்பதில்லை. குருகுலம் பொறுப்பாளர் ராசநாயகம் அவர்களும் கே.பி அவர்களும் இணைந்தே பலதிட்டங்களை முன்னெடுக்கின்றனர். குருகுலம் இல்லத்திற்கு நேர்டோவும் பலஉதவிகளை செய்துள்ளது. இராசநாயகம் அவர்களிடம் கேட்டாலே கூறுவார். நான் ஊரில் நின்ற சமயம் குருகுலத்திற்கும் போயிருந்தேன்.. அவர் தொடங்க இருப்பதாக கூறி என்னிடம் ஒரு திட்டவரைபையும் கொடுத்திருந்தார் அதனையும் இங்கு இணைக்கிறேன்.

இராசநாயகம் அவர்களால் புதிதாகஆரம்பிக்கப்படவிருக்கும் பால் பண்ணைத்திட்டம் பற்றிய புறொஜெக்ற்

post-7069-0-06038800-1310050283_thumb.jp

post-7069-0-18438800-1310050291_thumb.jp

post-7069-0-57238800-1310050297_thumb.jp

post-7069-0-10038800-1310050304_thumb.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருகுலம் பொறுப்பாளர் ராசநாயகம் அவர்களும் கே.பி அவர்களும் இணைந்தே பலதிட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

நெல்லையன் நீங்களுமா???????????

இந்த திட்டமும் அம்போ...........??? :(:(:(

Link to comment
Share on other sites

நெல்லையன் நீங்களுமா???????????

இந்த திட்டமும் அம்போ...........??? :(:(:(

... தற்போதுதான் வீடு வந்தவுடன் ... இதனை பார்த்தேன் ... உடனடியாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய பரிபாலனசபை தலைவருடன் இது பற்றி கதைத்தேன் ...இங்கிருந்து காசுகள் இராசநாயகத்துக்கு போவதாகவும், அவர் மூலம் இது செயற்படுத்தப்படுவதாகவும் சொன்னார், மேலும் உடனடியாக இத்தகவல் குறித்த உண்மையை அறிந்து தெரிவிப்பதாகவும், அப்படி உண்மையாயின் மேல் என்ன நடவடிக்கை எடுப்பது உடன் தாங்கள் கூடி தீர்மானிப்பதாகவும் சொன்னார் ... சிலநாட்கள் பொறுத்திருப்போம்!!

... பல காலமாக இங்குள்ள சிறிலங்கன் தூதரகமோ, ஒட்டுக்குழுக்களோ இவ்வாலயங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று தோற்றது.

... மற்றும் இப்படியான திட்டங்களை பலவந்தமாக கையகப்படுத்தி, கேபி தலைமையிலான ஆயுததாரிகள் செயற்படுகிறார்களா??? ... சுமங்களாவின் செய்தியும் அதையே கூறுகிறது!!

Link to comment
Share on other sites

சுமங்களா! ... உங்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் ... இங்கு யாழிலும் வேறு சில முகமூடிகளாக ஓநாய் அழுகைகளுடன் .... கொடுத்துக்கொண்டிருப்பவர்களையும் நிறுத்தச் சொல்கிறது!!! ... இப்போதெல்லாம் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்க தோன்றுகிறது??? ... கொடுக்கும் இவைகளை நிறுத்தி சேமித்தாலும், வருடத்துக்கு ஒரு நல்ல ஹொலிடே போகலாம் ...

இங்கு பாருங்கள், உங்கள் கும்பல்கள் இங்கிருந்து அங்கு சென்ற காட்சிகளை ...

pandar.png

... உங்கள் குமப்ல்கள், பகிரங்கமாக தீபம் தொலைக்காட்சியில் சொல்கிறார்கள் ... அங்கு நாம் மாதம் ஒருதடவை செல்வதாக!!!! ... சொல்லுங்கள் பார்க்கலாம் .... இந்த மாதா மாத பயணத்துக்கு உங்கள் பணத்தையா செலவளிக்கிறீர்கள் என்று!!! .... சோழியன் குடுமி சும்மா ஆடுமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன்

நான் இங்கு சில கேள்விக்குறிகளைப்போட்டதற்கு காரணம் இந்த திட்டத்தை கேள்விக்குறியாக்குவதற்காக அல்ல.

மாறாக கே.பி அவர்களுடன் தொடர்புடையது என்றால் இங்கு அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வரும் அதனால் அந்த திட்டம் நடைபெறாது என தெரிந்து கொண்டு அதை முடக்கவேண்டும் என்பதற்காகவே சுமங்களா கே.பி யை இங்கு தொடர்பு படுத்தினார்.

புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

நெல்லையன் நீங்களுமா???????????

இந்த திட்டமும் அம்போ...........??? :(:(:(

உண்மையும் அதுதான் விசுகு அவர்களே. வேண்டுமானால் இராசநாயகம் அவர்களை கேட்டுப்பார்த்துவிட்டு இங்கு வந்து எழுதுங்கள். அதே நேரம் இங்கு எமக்காகவும் எமது நேர்டோ அமைப்பிற்காகவும் தொடர்ந்து படங்கள் வீடியோ இணைப்புக்கள் என விளம்பரம் செய்யும் நெல்லியானிற்கு நன்றிகள் தெரிவிப்பதோடு எமது அடுத்த கூட்டுத்திட்டமான பால்பண்ணைத் திட்டத்திற்கும் தொடர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டம் பற்றி மேலதிக விபரங்களை ஈலிங் அம்மன் நிறுவாகத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.