Jump to content

இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்

இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்வுகள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் பேசிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதில், முகாம்களில் உள்ள தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளை கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் கடத்தி விற்றதாகவும், இலங்கை ராணுவத்திற்கு இறையாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை கடத்திக் கொன்றுள்ளனர் என்றும்

தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தது இவர்கள் தான் என்றும், கருணா மற்றும் டக்ளசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டாம் என ராணுவத்தினருக்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆணையிட்டதாகவும் விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது

color="#0000FF"]நன்றி நக்கீரன்

Link to comment
Share on other sites

இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.....

இதில் பரபரப்படையவேண்டிய விடயமில்லை ஏனெனில் அப்போதே வெளிவந்த செய்தியாச்சே!!!

Link to comment
Share on other sites

இதில் என்ன பரபரப்பு. இவன்கள் மாமா வேலைபார்த்திருக்கிறான்கள். ஒழுங்கான அப்பாவிற்குப் பிறக்காதவன்கள்.

Link to comment
Share on other sites

விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் தவறானது - அமைச்சர் டக்ளஸ் மற்றும் கருணா மறுப்பு

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட் டங்களில் உள்ள தமிழ் வர்த்தகர்களை கடத்தி கப்பம் பெற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும்,பிரதி அமைச்சர் முரளிதரனுக்கும் பாதுகாப்பு அமைச்சு ஆதரவு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட தகவலை இருவரும் மறுத்துள்ளனர்.இது தொடர்பாக தமது மறுப்பை பி.பி.சி. தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இவ்வாறான தகவலில் உண்மை எதுவும் இல்லை.ஏனெனில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடக் கூறினார். நாங்கள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டிருந்தோமானால் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்க மாட்டோம் என்றார்.

இதேவேளை ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக் கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் குறித்து கரு த்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறி னார். இவர்கள் குறித்து விக்கிலீக்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளதாவது,

வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கருணா குழுவினர் மற்றும் ஈ.பி.டி.பியினர் கப்பம் பெற்றதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ பக்­வின் உத்தரவுக்கு அமையவே வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து இவர்கள் கப்பம் பெற்றதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தி னால் 2007ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியிடப்பட்டு அமெரிக்க இராஜங்கத் திணைக் களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றுமுன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இத் தகவல்களின் பிரகாரம், வடக்கில் இயங்குகின்ற தமிழ் துணைக் குழுக்களின் செயற்பாடுகளில் படையினரைத் தலையிட வேண்டாம் என கோத்தபாய ராஜபக்­ உத் தரவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தற்போது பிரதி அமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த ஆவ ணம் அனுப்பப்பட்ட காலப் பகுதியில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன் பல்வேறுகுற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது.

படைத் தரப்பினரின் பாலியல் தேவைகளுக்காக வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களை கருணா வலுக் கட்டாயமாக பயன்படுத்தியதாகவும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. அத்துடன், டக்ளஸ்தேவானந்தா தலைமை யிலான குழு படைத்தரப்பினருடன் இணைந்து கொலைகளிலும் ஈடுபட்டதாக விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13434

Link to comment
Share on other sites

ஏன் இதை தெளிவுபடுத்துமாறு திருவாளர், மாண்புமிகு Then US diplomat incharge, HON Robert O Blake இடம் கேட்கக் கூடாது?

"ஓட்டப்பம் வீட்டைச் சுட்டது" என்று புதுக் கதை சொல்வார்!

Million thanks to wikileaks founder.

Link to comment
Share on other sites

கடத்தல், கப்பம், கொலை பயற்சியை கருணா மிக விரைவில் டக்ளசிடமிருந்து பயின்றுள்ளார்.

டக்லஸ் வடக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன்.

கருணா கிழக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன்.

தற்போது பொய்களை தொடர்ச்சியாக அவிட்டுவிடுவதிலும் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.